Jump to content

மனித குல வரலாற்றில் மிகப் பெரிய துரோகி யார் ?


Recommended Posts

3 hours ago, tulpen said:

ஒன்றரை  லட்சம் மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்புணர்வு அன்றைய நிலையில் யுத்தம், சமாதானம் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுத்த புலிகளின் அரசியல் தலைமைக்கே இல்லாதபோது பக்கத்து நாட்டு மாநில முதலமைச்ருக்கு அந்த பொறுப்பு வேண்டும்  என்று எதிர்பார்க முடியுமா? 

நாடு நாடாக பேச்சுவார்தைக்கு புலிகள் போனது இலகுவில் தமிழ் மக்களால் மறக்கப்பட அல்ல.

Link to comment
Share on other sites

  • Replies 78
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nunavilan said:

நாடு நாடாக பேச்சுவார்தைக்கு புலிகள் போனது இலகுவில் தமிழ் மக்களால் மறக்கப்பட அல்ல.

அவருக்கு சேறு பூசுணும் 

மற்றும் படி வரலாறு எம் கண் முன்னே எம்மோடு சேர்ந்து நடந்த எதுவும் தெரியாது

 

Link to comment
Share on other sites

1 minute ago, nunavilan said:

நாடு நாடாக பேச்சுவார்தைக்கு புலிகள் போனது இலகுவில் தமிழ் மக்களால் மறக்கப்பட அல்ல.

புலிகளின் வரலாறு மறக்கப்பட வேண்டியது என்று நான் எந்த சந்திர்பத்திலும் கூறவில்லை அதே வேளை வரலாறு என்பது நேர்மறை, எதிர்மறை அம்சங்களை கொண்டது.  புலிகளின் இராணுவ வெற்றிகள் குறித்து பெருமிதம் கொள்ளும் நாம் அவர்களின் அரசியல் ராஜதந்திர தோல்விகளையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

அவமானம், விரக்தி, குற்றமனப்பான்மையால்  அடுத்தவர் மீது முழுப்பழியையும் போட முனைவது  தமிழ் தேசியத்திற்கு மேலும் தோல்வியையே பெற்றுத்தரும். 

 

Link to comment
Share on other sites

1 minute ago, tulpen said:

புலிகளின் வரலாறு மறக்கப்பட வேண்டியது என்று நான் எந்த சந்திர்பத்திலும் கூறவில்லை அதே வேளை வரலாறு என்பது நேர்மறை, எதிர்மறை அம்சங்களை கொண்டது.  புலிகளின் இராணுவ வெற்றிகள் குறித்து பெருமிதம் கொள்ளும் நாம் அவர்களின் அரசியல் ராஜதந்திர தோல்விகளையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

அவமானம், விரக்தி, குற்றமனப்பான்மையால்  அடுத்தவர் மீது முழுப்பழியையும் போட முனைவது  தமிழ் தேசியத்திற்கு மேலும் தோல்வியையே பெற்றுத்தரும். 

 

தெருவில் போபவர்களின் பழிகளுக்கு புலிகள் பொறுப்பல்ல. அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் தோல்விக்கும் வெற்றிக்கும் உள்ள பொறுப்பை ஏற்றுக்கொள்வார்கள்.

 

Link to comment
Share on other sites

8 minutes ago, nunavilan said:

தெருவில் போபவர்களின் பழிகளுக்கு புலிகள் பொறுப்பல்ல. அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் தோல்விக்கும் வெற்றிக்கும் உள்ள பொறுப்பை ஏற்றுக்கொள்வார்கள்.

 

நன்றி நுணாவிலான். இந்த கருத்தை நான் முழுமையாக, முழு மனதுடன்  ஏற்றுக்கொளுகிறேன். 👍

தமது தவறுகளுக்கு அடுத்தவர் மீது புலிகள் என்றுமே பழி சுமத்தவில்லை. இவ்வாறு அடுத்தவர்  மீது பழிபோடும் மனநோய்  புலிகளின் அழிவிற்குப் பின்னர் தான் புலம் பெயர் தமிழ் தேசியவாதிகளால்  பரப்பப்பட்டது என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்ளுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, tulpen said:

நன்றி நுணாவிலான். இந்த கருத்தை நான் முழுமையாக, முழு மனதுடன்  ஏற்றுக்கொளுகிறேன். 👍

தமது தவறுகளுக்கு அடுத்தவர் மீது புலிகள் என்றுமே பழி சுமத்தவில்லை. இவ்வாறு அடுத்தவர்  மீது பழிபோடும் மனநோய்  புலிகளின் அழிவிற்குப் பின்னர் தான் புலம் பெயர் தமிழ் தேசியவாதிகளால்  பரப்பப்பட்டது என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்ளுகிறேன். 

ஆனால் நீங்கள் இங்கே கொட்டும் 99வீதமானவை அவர்கள் இருந்தபோது நடந்தவை ஏற்றுக் கொள்ள பட்டவை. மன்னிக்க பட்டவை மன்னிப்பு கேட்க பட்டவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

. அதுவும் 2009 ல் தமிழக ஆட்சி காங்கிரஸ் தயவலேயே சிறுபான்மை அரசாக இருந்தது. இந்த பாலபாடத்தை புரியாமல் கருணாநிதி காப்பாறுவார் என்ன று நம்பி 

கேக்கிறவன் கேணையனென்றால் எருமைமாடும் ஏரோபிளேன் ஓட்டும் எண்டிறமாதிரி அடிச்சுவிடுறியள், 2009 இல் திமுக ஆட்சியிலிருக்கும்போது அவர்களின் கூட்டணி 163 ஆசனங்களை பெற்றிருந்தது. அதில் 34தான் இந்திரா காங்கிரஸுக்கானது. ஆட்சி அமைக்க தேவையான ஆசனங்கள் 118. கூட்டல், கழித்தல் தெரியும்தானே?

2009 லோக்சபா எலெக்சனில 262 (out  of 543) ஆசனங்களை எடுத்து DMK யில காங்கிரஸ்(UPA) தான் தொங்கிக்கொண்டிருந்தது.

Link to comment
Share on other sites

2 hours ago, Eppothum Thamizhan said:

கேக்கிறவன் கேணையனென்றால் எருமைமாடும் ஏரோபிளேன் ஓட்டும் எண்டிறமாதிரி அடிச்சுவிடுறியள், 2009 இல் திமுக ஆட்சியிலிருக்கும்போது அவர்களின் கூட்டணி 163 ஆசனங்களை பெற்றிருந்தது. அதில் 34தான் இந்திரா காங்கிரஸுக்கானது. ஆட்சி அமைக்க தேவையான ஆசனங்கள் 118. கூட்டல், கழித்தல் தெரியும்தானே?

2009 லோக்சபா எலெக்சனில 262 (out  of 543) ஆசனங்களை எடுத்து DMK யில காங்கிரஸ்(UPA) தான் தொங்கிக்கொண்டிருந்தது.

2006 தேர்தலில் திமுக 96 இடங்களில் வென்று காங்கிரஸின் 34 உறுப்பினர்களின் ஆதரவில் தான்  தங்கியிருந்தது. அதனால் தான் அக்காலப்பகுதி முழுவதும்  திமுக அரசை “மைனாறிட்டி” அரசு என்று கேலியுடன் அழைப்பதை ஜெயலலிதா வழமையாக கொண்டிருந்தார். அப்படியே பெரும்பான்மை அரசாக இருந்திருந்தாலும் மத்திய அரசின் சவுத்புளொக்கின்  முடிவுகளில் ஒரு ஆணியை கூட புடுங்கியிருக்க முடியாது. உதாரணம் 1987ல் புலிகளின் எதிர்பபை அலட்சியம் செய்து, பிரபாகரனை டெல்லி அசோகா ஹொட்டலில் காவலில் வைத்துவிட்டு ராஜிவகாந்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை  எம்ஜியாரால் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஒப்பந்த கைச்சாத்து முடிவில் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பகிரங்கமாக ராஜீவின் கையைத் தூக்கி இலங்ஒகை இந்திய ஒப்ந்தத்திற்கு  தனது ஆதரவை எம்ஜிஆர் தெரிவித்தார். புலிகளுக்கும் இந்திய அரசுக்கும் நேரடியான மோதல் போக்கு இல்லாத அக்காலத்திலேயே அந்த நிலை என்றால் 1991 ராஜிவ் கொலையின் பின்னர் எப்படியான நிலை இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். 

சவுத்புளொக்கின் சில முடிவுகளில் மத்தியில் ஆளும் கட்சிகூட செல்வாக்கு செலுத்த முடியாது என்பதை மத்திய ஆட்சி மாற்றத்தின் பின்னரும் இலங்கை அரசுடன் எப்படி நட்புடன் உள்ளார்கள் என்பதையும் போர்ககுற்ற விடயத்தில்  நடந்து கொள்ளுவதையும் வைத்து புரிந்து கொள்ள முடியவில்லையா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

2006 தேர்தலில் திமுக 96 இடங்களில் வென்று காங்கிரஸின் 34 உறுப்பினர்களின் ஆதரவில் தான்  தங்கியிருந்தது. அதனால் தான் அக்காலப்பகுதி முழுவதும்  திமுக அரசை “மைனாறிட்டி” அரசு என்று கேலியுடன் அழைப்பதை ஜெயலலிதா வழமையாக கொண்டிருந்தார். அப்படியே பெரும்பான்மை அரசாக இருந்திருந்தாலும் மத்திய அரசின் சவுத்புளொக்கின்  முடிவுகளில் ஒரு ஆணியை கூட புடுங்கியிருக்க முடியாது. உதாரணம் 1987ல் புலிகளின் எதிர்பபை அலட்சியம் செய்து, பிரபாகரனை டெல்லி அசோகா ஹொட்டலில் காவலில் வைத்துவிட்டு ராஜிவகாந்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை  எம்ஜியாரால் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஒப்பந்த கைச்சாத்து முடிவில் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பகிரங்கமாக ராஜீவின் கையைத் தூக்கி இலங்ஒகை இந்திய ஒப்ந்தத்திற்கு  தனது ஆதரவை எம்ஜிஆர் தெரிவித்தார். புலிகளுக்கும் இந்திய அரசுக்கும் நேரடியான மோதல் போக்கு இல்லாத அக்காலத்திலேயே அந்த நிலை என்றால் 1991 ராஜிவ் கொலையின் பின்னர் எப்படியான நிலை இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். 

சவுத்புளொக்கின் சில முடிவுகளில் மத்தியில் ஆளும் கட்சிகூட செல்வாக்கு செலுத்த முடியாது என்பதை மத்திய ஆட்சி மாற்றத்தின் பின்னரும் இலங்கை அரசுடன் எப்படி நட்புடன் உள்ளார்கள் என்பதையும் போர்ககுற்ற விடயத்தில்  நடந்து கொள்ளுவதையும் வைத்து புரிந்து கொள்ள முடியவில்லையா? 

கருணாநிதியால ஒரு ஆணியும் புடுங்கேலாதென்று  எனக்கில்லை எல்லோருக்கும் தெரியும்.ஏனென்றால் அவர்களின் குழுமம் செய்த ஊழல்கள் அப்படி. நான் தந்த தரவு காங்கிரசின் 34 ஆசனங்கள் இல்லாவிட்டாலும் திமுக கூட்டணி ஆட்சியமைத்திருக்கும் என்பதற்காகவே.

Link to comment
Share on other sites

1 hour ago, Eppothum Thamizhan said:

கருணாநிதியால ஒரு ஆணியும் புடுங்கேலாதென்று  எனக்கில்லை எல்லோருக்கும் தெரியும்.ஏனென்றால் அவர்களின் குழுமம் செய்த ஊழல்கள் அப்படி. நான் தந்த தரவு காங்கிரசின் 34 ஆசனங்கள் இல்லாவிட்டாலும் திமுக கூட்டணி ஆட்சியமைத்திருக்கும் என்பதற்காகவே.

கருணாதிதியால் மட்டுமல்ல சீமான் முதலமைச்சராக இருந்தலும் ஒரு ஆணியும் புடுங்கேலாது என்று இந்திய அரசியல் சட்டம் தொடர் பான அடிப்படை புரிதல் இருப்பவர்களுக்கு தெரிந்த விடயம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரஞ்சித் said:

பிரச்சினை என்னவென்றால், தமிழினத்தின் தலைவர் என்று தன்னைத்தானே கூறிக்கொண்டவர், ஈழத்தமிழனுக்காக தான் இருக்கிறேன் என்று தனது அரசியல் காலத்தின் பெரும்பகுதிவரை காட்டிக்கொண்டிருந்தவர், தம்மைக் காக்கக்கூடியவர் என்று ஈழத்தமிழர்களை நம்பவைத்திருந்தவர்.

அப்படியானவர் இறுதியில் சோனியாவோடு சேர்ந்து எம்மை அழிக்கத் துணைபோனார் என்றால் துரோகம் இல்லையா? 

துரோகி பட்டம் கொடுப்பதில் நீங்கள் ஒரு specialist . இலங்கையை சேர்ந்தவர்களுக்கு கொடுங்கோ வேறு நாட்டை சேர்ந்தவருக்கு கொடுப்பது நியாயம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

கருணாதிதியால் மட்டுமல்ல சீமான் முதலமைச்சராக இருந்தலும் ஒரு ஆணியும் புடுங்கேலாது என்று இந்திய அரசியல் சட்டம் தொடர் பான அடிப்படை புரிதல் இருப்பவர்களுக்கு தெரிந்த விடயம்.  

கருணாநிதியாலும் எம் ஜி ஆர் மற்றும்   ஜெ ஜெ யாலும் பிடுங்க முடியாத எதையும் வேறு ஒருவராலும்   பிடுங்க முடியாது என்பது
தர்க்கம்
ஆனாலும் பிடுங்குவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளது
பொறுத்தார் பூமியாள்வார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

கருணாநிதியால ஒரு ஆணியும் புடுங்கேலாதென்று  எனக்கில்லை எல்லோருக்கும் தெரியும்.ஏனென்றால் அவர்களின் குழுமம் செய்த ஊழல்கள் அப்படி.

இந்த ஜென்மத்துக்கு அவர்களால் ஊழல் குட்டையிலிருந்து வெளியேற முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

அக்காலப்பகுதி முழுவதும்  திமுக அரசை “மைனாறிட்டி” அரசு என்று கேலியுடன் அழைப்பதை ஜெயலலிதா வழமையாக கொண்டிருந்தார். அப்படியே பெரும்பான்மை அரசாக இருந்திருந்தாலும் மத்திய அரசின் சவுத்புளொக்கின்  முடிவுகளில் ஒரு ஆணியை கூட புடுங்கியிருக்க முடியாது.

100 % உண்மை. அப்படியிருக்க எதற்காக கருணாநிதி மேல் பழியை போட்டு திருப்தி அடைய வேண்டும்.

4 hours ago, tulpen said:

1987ல் புலிகளின் எதிர்பபை அலட்சியம் செய்து, பிரபாகரனை டெல்லி அசோகா ஹொட்டலில் காவலில் வைத்துவிட்டு ராஜிவகாந்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை  எம்ஜியாரால் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஒப்பந்த கைச்சாத்து முடிவில் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பகிரங்கமாக ராஜீவின் கையைத் தூக்கி இலங்ஒகை இந்திய ஒப்ந்தத்திற்கு  தனது ஆதரவை எம்ஜிஆர் தெரிவித்தார்.

அந்த எம்ஜிஆர் இப்போ வாழ்ந்த கொண்டிருந்தால் அவர் தான் பெரிய துரோகியாக அழைக்கபடுவார் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விளங்க நினைப்பவன் said:

துரோகி பட்டம் கொடுப்பதில் நீங்கள் ஒரு specialist . இலங்கையை சேர்ந்தவர்களுக்கு கொடுங்கோ வேறு நாட்டை சேர்ந்தவருக்கு கொடுப்பது நியாயம் இல்லை.

தியாகியாகுவதற்கு 2009  இல் அவருக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.   

தவற விட்டதால் அவருக்கு கிடைத்தது துரோகிப்பட்டம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

கருணாதிதியால் மட்டுமல்ல சீமான் முதலமைச்சராக இருந்தலும் ஒரு ஆணியும் புடுங்கேலாது என்று இந்திய அரசியல் சட்டம் தொடர் பான அடிப்படை புரிதல் இருப்பவர்களுக்கு தெரிந்த விடயம்.  

ஆணியை புடுங்க ஏலாது எண்டாலும்  உண்ணாவிரத நாடகமாடி துரோகம் செய்யமாட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் ஒன்றும் கருணாநிதி போல் வந்தேறி அல்ல. இனமானம் உள்ள ஆகச்சிறந்த தமிழ் தேசியன். பதினாறடி பாயும் குட்டி.

மேதகுவை விஞ்சுவார். மேலும், மேலும் வெற்றிகளை அடைவார். பார்க்கத்தான் போகிறோம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

கருணாதிதியால் மட்டுமல்ல சீமான் முதலமைச்சராக இருந்தலும் ஒரு ஆணியும் புடுங்கேலாது என்று இந்திய அரசியல் சட்டம் தொடர் பான அடிப்படை புரிதல் இருப்பவர்களுக்கு தெரிந்த விடயம்.  

ஆம். உண்மை ஆனால் கருணநிதி உதவி செய்யவிடினும் உபத்திரம் செய்யாது இருத்திருக்கலாம். 2009 ஆம் ஆண்டளவில் இலங்கையரசுக்கு கொடுக்கப்பட்ட ஆயுதம் தமிழர்களை கொல்லுவதற்க்கு கொடுக்கப்பட்ட ஆயுதமாகும் இது கருணநிதிக்கு நன்கு தெரியும் இதை அவர் தடுத்திருக்க முடியும் இது நான் செய்யவில்லை என்று கருணநிதி கூறமுடியாது எனெனில் அவர் மத்தியரசில் அங்கம் வகித்தார்.எனவே தமிழர் படுகொலையில் கருணநிதிக்கு பங்குண்டு.இவர்போரை நிறுத்தியிருக்கத்தேவையில்லை ஆயுதக்கொடுப்பதை நிறுத்தியிருக்கலாம்  போரைப் புலிகள் ஒரு கை பார்த்திருப்பார்கள்

குறிப்பு...நான் புலி ஆதரவளனில்லை...😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

அவர் மத்தியரசில் அங்கம் வகித்தார்.எனவே தமிழர் படுகொலையில் கருணநிதிக்கு பங்குண்டு.இவர்போரை நிறுத்தியிருக்கத்தேவையில்லை ஆயுதக்கொடுப்பதை நிறுத்தியிருக்கலாம்  போரைப் புலிகள் ஒரு கை பார்த்திருப்பார்கள்

இதைத்தான் அன்றைய மாற்றுக்கருத்தாளர்கள் இன்று சொல்லி வாயை சப்பை கொட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kandiah57 said:

ஆம். உண்மை ஆனால் கருணநிதி உதவி செய்யவிடினும் உபத்திரம் செய்யாது இருத்திருக்கலாம். 2009 ஆம் ஆண்டளவில் இலங்கையரசுக்கு கொடுக்கப்பட்ட ஆயுதம் தமிழர்களை கொல்லுவதற்க்கு கொடுக்கப்பட்ட ஆயுதமாகும் இது கருணநிதிக்கு நன்கு தெரியும் இதை அவர் தடுத்திருக்க முடியும் இது நான் செய்யவில்லை என்று கருணநிதி கூறமுடியாது எனெனில் அவர் மத்தியரசில் அங்கம் வகித்தார்.எனவே தமிழர் படுகொலையில் கருணநிதிக்கு பங்குண்டு.இவர்போரை நிறுத்தியிருக்கத்தேவையில்லை ஆயுதக்கொடுப்பதை நிறுத்தியிருக்கலாம்  போரைப் புலிகள் ஒரு கை பார்த்திருப்பார்கள்

குறிப்பு...நான் புலி ஆதரவளனில்லை...😎

போரில் எப்படியாவது மேதகுவையும், அமைப்பையும் அழித்து விடுங்கள் என மைய அரசை கோரியவரே அவர்தாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழகன் said:

போரில் எப்படியாவது மேதகுவையும், அமைப்பையும் அழித்து விடுங்கள் என மைய அரசை கோரியவரே அவர்தாம்.

இங்கு சுலபமா இப்படி எழுத முடியாது ஆதாரம் வேணும் என்று கொஞ்சம் வந்து அழுவினம் ஆதாரம் நிறைய உள்ளது தேடி எடுத்து போடணும் அது நேரம் எடுக்கும் வேலை  சகோதரம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kandiah57 said:

ஆம். உண்மை ஆனால் கருணநிதி உதவி செய்யவிடினும் உபத்திரம் செய்யாது இருத்திருக்கலாம். 2009 ஆம் ஆண்டளவில் இலங்கையரசுக்கு கொடுக்கப்பட்ட ஆயுதம் தமிழர்களை கொல்லுவதற்க்கு கொடுக்கப்பட்ட ஆயுதமாகும் இது கருணநிதிக்கு நன்கு தெரியும் இதை அவர் தடுத்திருக்க முடியும் இது நான் செய்யவில்லை என்று கருணநிதி கூறமுடியாது எனெனில் அவர் மத்தியரசில் அங்கம் வகித்தார்.எனவே தமிழர் படுகொலையில் கருணநிதிக்கு பங்குண்டு.இவர்போரை நிறுத்தியிருக்கத்தேவையில்லை ஆயுதக்கொடுப்பதை நிறுத்தியிருக்கலாம்  போரைப் புலிகள் ஒரு கை பார்த்திருப்பார்கள்

குறிப்பு...நான் புலி ஆதரவளனில்லை...

நீங்கள் என்னதான் குத்தி முறிந்தாலும் அந்தாள் தான் பிடித்த முயலுக்கு  மூன்று கால் என்றுதான் சொல்லும் அதுவும் வலு கூலாக சொல்லும் யாழில் இதுவரை வந்த மாற்று கருத்தாளர்களில் இவர் வித்தியாசமாணவர் அவதானமாக இருக்கனும் வைப்பது புலி எதிர்ப்பு கருத்து ஆனால் தான் அப்படி வைக்கவில்லை முடிந்தால் நிறுவுங்கள் என்பார் உங்களால் முடியாது திரும்பி போய்  பார்த்தால் அவர் சொன்னமாதிரி கருத்துக்கள் இருக்கும் அது அவரின் வார்த்தை ஜாலம் அதுதான்  அவரின் பலம் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

இங்கு சுலபமா இப்படி எழுத முடியாது ஆதாரம் வேணும் என்று கொஞ்சம் வந்து அழுவினம் ஆதாரம் நிறைய உள்ளது தேடி எடுத்து போடணும் அது நேரம் எடுக்கும் வேலை  சகோதரம் .

நன்றி சகோ,

யுத்த முடிவில் மஹிந்தா ராசபக்சே கையால் பல்லிளித்தபடி விருது பெற்றதே போதுமான ஆதாரம் இல்லியா சகோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழகன் said:

நன்றி சகோ,

யுத்த முடிவில் மஹிந்தா ராசபக்சே கையால் பல்லிளித்தபடி விருது பெற்றதே போதுமான ஆதாரம் இல்லியா சகோ?

ஒவ்வொரு மானத்தமிழனும் சேகரித்து வைக்கவேண்டிய ஆவணம்.

 

13 hours ago, பெருமாள் said:

இங்கு சுலபமா இப்படி எழுத முடியாது ஆதாரம் வேணும் என்று கொஞ்சம் வந்து அழுவினம் ஆதாரம் நிறைய உள்ளது தேடி எடுத்து போடணும் அது நேரம் எடுக்கும் வேலை  சகோதரம் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.