Jump to content

40 வயதுக்காரருக்கு ஆக்சிஜன் படுக்கையை விட்டுக்கொடுத்து உயிரை விட்ட முதியவர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

40 வயதுக்காரருக்கு ஆக்சிஜன் படுக்கையை விட்டுக்கொடுத்து உயிரை விட்ட முதியவர்

40 வயதுக்காரருக்கு ஆக்சிஜன் படுக்கையை விட்டுக்கொடுத்து உயிரை விட்ட முதியவர்

 

நாக்பூர்:

காடு வா வா என்று அழைக்கும் வயதிலும் எதையும் விட்டுக்கொடுக்க பெரும்பாலானவர்களுக்கு மனம் வராது.

 


ஆனால் தான் உயிருக்கு போராடிய நிலையில் தன்னை விட வயதில் மிகவும் சிறியவரான ஒருவருக்காக தனது உயிரையே தியாகம் செய்துள்ளார் 85 வயது முதியவர்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நாக்பூரில் நடந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

வட மாநிலங்களில் கொரோனா கோரதாண் டவம் ஆடுகிறது. வீட்டுக்கு வீடு புகுந்து தாக்கும் கொரோனாவால் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன. உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கும் ஆஸ்பத்திரிகளில் இடம் கிடைப்பதில்லை.

இந்த நிலையில், நாக்பூரை சேர்ந்த நாராயண் தபால்கர் (85). ஓய்வு பெற்ற மகாராஷ்டிர அரசு ஊழியரான இவர் தீவிர ஆர்.எஸ்.எஸ். தொண்டரும் ஆவார். கடந்த 16-ந் தேதி இவரது வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார்கள்.

அப்போது நாராயண் தபால்கர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தபால்கரை தவிர மற்றவர்களுக்கு லேசான தொற்று இருந்ததால் அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
 

ஆனால் தபால்கர் நோய் தொற்று கடுமையானதால் மூச்சு விட முடியாமல் திணறி இருக்கிறார். உடனே அருகில் உள்ள நகராட்சி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று உள்ளார்கள்.
 
கொரோனா வார்டு


அங்கு கொரோனா வார்டில் ஏற்கனவே நோயாளிகள் நிரம்பி இருந்ததால் தபால்கருக்கு படுக்கை கிடைக்கவில்லை. இதனால் 2 நாட்களாக அவசர வெளிநோயாளிகள் பிரிவில் படுக்கைக்காக தபால்கரும், அவரது உறவினர்களும் காத்துக்கிடந்தனர்.

அப்போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க கொரோனா நோயாளி ஒருவர் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கும் நோய் தொற்று கடுமையாக இருந்துள்ளது. அவருக்கும் படுக்கை கிடைக்காமல் அவரது மனைவி போராடி இருக்கிறார்.

டாக்டர்கள், ஊழியர்கள் ஒவ்வொருவரிடமும் சென்று ஒரு படுக்கை ஒதுக்கித் தாருங்கள். எப்படியாவது என் கணவரை காப்பாற்றுங்கள் என்று கெஞ்சி இருக்கிறார். ஆனால் வார்டில் படுக்கை காலியில்லாமல் நாங்கள் என்ன செய்ய முடியும் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்.

இந்த சூழ்நிலையில், தபால்கருக்கு படுக்கை கிடைத்திருப்பதாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். அதைக்கேட்டதும் தனது அருகில் இருந்த மகளிடம் ‘நான் நன்றாக வாழ்ந்து விட்டேன். அதோபார் சின்ன வயது பையன் உயிருக்குப் போராடுகிறான். நான் இறந்து போவதால் எந்த பாதிப்பும் இல்லை. என்னை வீட்டுக்கு அழைத்துச்சென்று விடுங்கள். கடைசி நேரத்தை உங்களோடு கழித்துவிட்டு செல்கிறேன். நான் இங்கிருந்து சென்றுவிட்டால் எனக்காக ஒதுக்கப்பட்ட படுக்கை இந்த இளம்வயது நோயாளியை பாதுகாக்கும்’ என்றார்.

ஆனால் தபால்கரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவரை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. அப்படி இருந்தும் விடாப்பிடியாக வற்புறுத்தி டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார்.

பின்னர் அவரை வீட்டுக்கு அழைத்துச்சென்று விட்டனர். வீட்டுக்சென்ற சில மணி நேரங்களிலேயே மூச்சுத்திணறல் அதிகமாகி உயிரும் பிரிந்தது.

அதே நேரம் அவர் விட்டுக்கொடுத்த படுக்கையில் இளம் வயது நோயாளி ஒருவரை காப்பாற்றும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

தபால்கரின் இந்த மனிதாபிமான உதவி அனைவரையும் நெகிழ வைத்தது.

இதுபற்றி அவரது மகள் கூறும்போது, ‘என் தந்தை எப்போதுமே அடுத்தவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று தான் சொல்வார். இப்போதும் அதேபோல் இந்த உதவியை செய்து சென்றுள்ளார். அவரை நினைத்தாலே பெருமையாக உள்ளது.

வீட்டுக்கு அழைத்து வந்ததால் சிகிச்சை கிடைக்காமல் அவரது கடைசி நேரம் மிகவும் கடினமாக இருந்தது. கால் மற்றும் கைகளில் உள்ள விரல் நகங்கள் கருத்துப்போனது. உடல் முழுவதும் மரத்து போன நிலையில் தான் உயிர் பிரிந்தது’ என்றார்.

 

https://www.maalaimalar.com/news/topnews/2021/04/29105332/2579595/Tamil-News-85-year-old-Covid-19-patient-dies-at-home.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

இது பிஜேபி கூட்டத்தின் புனைவு செய்தி என்கிறார்கள் .

உண்மையாக கூட இருக்கலாம் ஆனால் மீடியா காரர் "இவர் தீவிர ஆர்.எஸ்.எஸ். தொண்டரும் ஆவார்" இதை செருகி விட்டதால், அந்த முதியவரின் பெருந்தன்மை கேள்விக்கு உள்ளாகி விட்டது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sabesh said:

உண்மையாக கூட இருக்கலாம்

மனிதாபிமான உதவிகள் செய்பவர்கள் எந்த கட்சியிலும் இருப்பார்கள். ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் எல்லாம் உதவி செய்ய கூடியவர்கள் மற்றகட்சியினர் எல்லோரும் உதவும் மனப்பான்மை இல்லாதவர்கள் என்று இல்லை பத்திரிக்கை உதவியவரின் கட்சி பெயரை போடுவது தவறு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விளங்க நினைப்பவன் said:

மனிதாபிமான உதவிகள் செய்பவர்கள் எந்த கட்சியிலும் இருப்பார்கள். ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் எல்லாம் உதவி செய்ய கூடியவர்கள் மற்றகட்சியினர் எல்லோரும் உதவும் மனப்பான்மை இல்லாதவர்கள் என்று இல்லை பத்திரிக்கை உதவியவரின் கட்சி பெயரை போடுவது தவறு இல்லை.

அதுக்காக விளம்பரம் எங்கே என்று இல்லையா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
    • ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார். https://thinakkural.lk/article/299459
    • இது ஒட்டு மொத்த‌ இந்திய‌ அள‌வில் தேர்த‌ல் ஆணைய‌த்தை கைக்குள் வைத்து பிஜேப்பி செய்யும் தேர்த‌ல் மோச‌டி இப்ப‌டி குள‌று ப‌டி செய்து தேர்த‌லில் வெல்வ‌தெல்லாம் ஒரு வெற்றியா......................இது ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌க்கும் தேர்த‌ல் கிடையாது................இந்திய‌ அள‌வில் தாங்க‌ள் 400 இட‌ங்க‌ளின் வென்று ஆட்சி அமைப்போம் என்று சொன்னார்க‌ளே / ஆனால் இப்ப‌டி குள‌று ப‌டி செய்து அமைப்போம் என்று ஆர‌ம்ப‌த்தில் சொல்ல‌ வில்லை இப்ப‌ பிடிப‌ட்டான் மோடி என்ற க‌ள்ள‌ன்......................தேர்த‌ல் ஆணைய‌த்தையும் ஈவிம் மிசினையும் ந‌ம்பி தான் த‌மிழ் நாட்டு பிஜேப்பி அண்ணாம‌லை அதிக‌மாய் பொங்கி எழுகிறார்....................இதெல்லாம் ஒரு தேர்த‌ல்.............................த‌மிழ் நாட்டில் வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சிக‌ளை நினைக்க‌ ப‌ரிதாவ‌மாய் இருக்கு....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.