Jump to content

எங்கள் ஊர் கைத்தறி நெசவு சேலைகள் வாங்க பாக்கலாம்


Recommended Posts

வாங்க இண்டைக்கு நாம யாழ்ப்பாணத்தில அழிந்து வார ஒரு தொழில் பற்றி பாப்பம் வாங்க, ஒரு 20 வருசத்துக்கு முதல் யாழ்ப்பாணத்தில பல வீடுகளில ஒரு குடிசை தொழிலா இருந்த இந்த நெசவு நெய்யறது இப்போ ஒண்டு இரண்டு இடத்தில தான் இருக்கு. வாங்க இந்த காணொளியில எப்பிடி இந்த கைத்தறி நெசவு பயன்படுத்திற எண்டும், இத இன்னும் செய்யிற ஆக்கள் என்ன மாதிரி பிரச்சனைகளை எதிர்கொள்ளுகின்றார்கள் எண்டும் பாப்பம், நீங்க சொல்லுங்க பாப்பம் ஒரு சேலை நெய்யறதுக்கு எவ்வளவு நாள் எடுக்கும் எண்டு.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைத்தறி நெசவை பற்றிய... காணொளிக்கு நன்றி.

ஒரு சேலையை... கைத்தறி நெசவு மூலம் தயாரிக்க, 
மூன்று நாட்கள்,  எடுக்கும் என நினைக்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாவகச்சேரியிலை இரண்டு நெசவு சென்றர் இருந்தது. இளம்பெடியள் ஒரு நாளைக்கு இரண்டு சாறி அடிப்பாங்கள்.

நாலு மிதியெண்டால் மினைக்கெட்ட வேலை

Link to comment
Share on other sites

9 hours ago, தமிழ் சிறி said:

கைத்தறி நெசவை பற்றிய... காணொளிக்கு நன்றி.

ஒரு சேலையை... கைத்தறி நெசவு மூலம் தயாரிக்க, 
மூன்று நாட்கள்,  எடுக்கும் என நினைக்கின்றேன். 

ஓம் பெரிய வேலைப்பாடுகள் இல்லாத சேலை 1 நாளிலும் , வேலைப்பாடுகள் கூடினால் 2-3 நாட்களும் எடுக்கும் என்றார். 

 

7 hours ago, குமாரசாமி said:

சாவகச்சேரியிலை இரண்டு நெசவு சென்றர் இருந்தது. இளம்பெடியள் ஒரு நாளைக்கு இரண்டு சாறி அடிப்பாங்கள்.

நாலு மிதியெண்டால் மினைக்கெட்ட வேலை

ஓம்.. ஓம் 4 மிதி, 6 மிதி , எல்லாம் இருக்காம், 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவயதில் எங்கள் விளையாட்டு பொருட்கள் இவைதான் 
பின்பு எல்லாம் காணாமல் போய்விட்டது 
எங்கு? எப்படி? என்ற கேள்வி கூட இதுவரை எழவில்லை.
எங்கள் வீடுகளில் இருந்த நெசவுகளுக்கு என்ன நடந்தது என்று 
பெரியவர்களிடம் கேட்க வேண்டும்.

இணைப்புக்கு நன்றி ...
புதிய தகவல்கள்  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/4/2021 at 00:50, தமிழ் சிறி said:

கைத்தறி நெசவை பற்றிய... காணொளிக்கு நன்றி.

ஒரு சேலையை... கைத்தறி நெசவு மூலம் தயாரிக்க, 
மூன்று நாட்கள்,  எடுக்கும் என நினைக்கின்றேன். 

 

On 30/4/2021 at 02:35, குமாரசாமி said:

சாவகச்சேரியிலை இரண்டு நெசவு சென்றர் இருந்தது. இளம்பெடியள் ஒரு நாளைக்கு இரண்டு சாறி அடிப்பாங்கள்.

நாலு மிதியெண்டால் மினைக்கெட்ட வேலை

சேலை நெய்தல் பற்றிய தகவல்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் இருவரும் .  

என்ற உள் மனசுக்கு ஏதோ தோணுது சொல்லவா வேண்டாமா இருவரும் சிங்கமாச்சே அடிச்சி கூட கேட் காதீங்க வீட்டீல கழுவினா என நான் கேட் க மாட்டன்  சேலைகளை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/4/2021 at 22:28, sivarathan1 said:

வாங்க இண்டைக்கு நாம யாழ்ப்பாணத்தில அழிந்து வார ஒரு தொழில் பற்றி பாப்பம் வாங்க, ஒரு 20 வருசத்துக்கு முதல் யாழ்ப்பாணத்தில பல வீடுகளில ஒரு குடிசை தொழிலா இருந்த இந்த நெசவு நெய்யறது இப்போ ஒண்டு இரண்டு இடத்தில தான் இருக்கு. வாங்க இந்த காணொளியில எப்பிடி இந்த கைத்தறி நெசவு பயன்படுத்திற எண்டும், இத இன்னும் செய்யிற ஆக்கள் என்ன மாதிரி பிரச்சனைகளை எதிர்கொள்ளுகின்றார்கள் எண்டும் பாப்பம், நீங்க சொல்லுங்க பாப்பம் ஒரு சேலை நெய்யறதுக்கு எவ்வளவு நாள் எடுக்கும் எண்டு.

சிவரதன் உங்கள் இணைப்புகள் தொடரட்டும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் எப்படித்தான் சரளமா பேசிறியளோ தெரியாது நமக்கு மைக் எண்டாலே உதறுதுடாப்பா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

என்ற உள் மனசுக்கு ஏதோ தோணுது சொல்லவா வேண்டாமா இருவரும் சிங்கமாச்சே அடிச்சி கூட கேட் காதீங்க வீட்டீல கழுவினா என நான் கேட் க மாட்டன்  சேலைகளை 

மனிசியின்ரை சீலை தோய்க்கிற கதையைத்தானே கேக்கிறியள்? :cool:

Link to comment
Share on other sites

10 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 

சேலை நெய்தல் பற்றிய தகவல்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் இருவரும் .  

என்ற உள் மனசுக்கு ஏதோ தோணுது சொல்லவா வேண்டாமா இருவரும் சிங்கமாச்சே அடிச்சி கூட கேட் காதீங்க வீட்டீல கழுவினா என நான் கேட் க மாட்டன்  சேலைகளை 

ஹாஹாஹா என்ன எண்டு விளங்குது 😛

 

10 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சிவரதன் உங்கள் இணைப்புகள் தொடரட்டும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் எப்படித்தான் சரளமா பேசிறியளோ தெரியாது நமக்கு மைக் எண்டாலே உதறுதுடாப்பா 

மிக்க நன்றி, நீங்க வேற கதைக்ககேக்க மனசு துடிக்கிறது பக்கத்தில இருக்க ஆளுக்கு கேக்கும், அப்பிடி பயம், என்ன பயம் இல்லாத மாறி நடிக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

மனிசியின்ரை சீலை தோய்க்கிற கதையைத்தானே கேக்கிறியள்? :cool:

சாமியார் சரியான சார்ப்ப் கண்டியளோ 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.