Jump to content

கனடா தமிழ் இருக்கைக்கு கரம் கொடுத்த தமிழர்கள்! - கடைசிநேரத்தில் உதவிய தி.மு.க


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • ஆ.விஜயானந்த்
  • பிபிசி தமிழுக்காக

60 லட்சம் டாலர்கள்

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைப்பது தொடர்பாக ஹவாய் தீவில் வாழ்ந்து வரும் வைதேகி அம்மையார் என்பவர் தொடர்ந்து பேசி வந்தார்.

இவர் சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். இவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சியில் அமெரிக்காவில் உள்ள `தமிழ் இருக்கை அறக்கட்டளை' என்ற அமைப்பு களமிறங்கியது.

இதற்காக 42 கோடி ரூபாய் வரை தேவைப்படவே, மூன்றாண்டுகளாக இதற்கான முயற்சியில் உலக தமிழர்கள் இறங்கினர். இதனை அறிந்து தமிழக அரசும் 10 கோடி ரூபாயை ஒதுக்கியது. தி.மு.கவும் தனது பங்களிப்பாக ஒரு கோடி ரூபாயை கொடுத்தது. இதன் காரணமாக, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கான முயற்சிகள் வேகமெடுத்தன. 42 கோடி ரூபாய் மதிப்பிலான 60 லட்சம் டாலர்கள் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட்டது.

தி.மு.க செய்த உதவி

M.K.Stalin on Twitter: "உலகப் பல்கலைக்கழகங்களில் அன்னைத் தமிழ்மொழிக்கு இருக்கைகள் அமைத்திடும் முயற்சிகளுக்கு திமுக உதவி வருகிறது. @ctconline-ன் நிறைவேற்று இயக்குநர் திரு. டன்ரன் துரைராஜா அவர்களின் கோரிக்கையின்படி, @UofT-ல் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது. https://t.co/rbJbYyNrqE" / Twitter

 

இதனைத் தொடர்ந்து கனடாவின் டொரோன்டோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கையை அமைப்பதற்கான முயற்சிகளில் தமிழ் இருக்கை அறக்கட்டளை, கனடா தமிழ்க்கழகம் ஆகிய இரண்டும் களமிறங்கின.

இது தொடர்பான பணிகளில் முத்துலிங்கம், சிவன் இளங்கோ, மருத்துவர் ரகுராமன் ஆகியோர் தீவிரமாகச் செயல்பட்டு வந்துள்ளனர். தமிழக அரசு இதற்கென ஒரு கோடி ரூபாய் நிதி அளித்தது. இது தொடர்பாக தான் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்ததாக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு 20 லட்சம் நிதி அளித்தவருமான கமல்ஹாசன் தெரிவித்தார்.

தற்போது டோரோன்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு தி.மு.க சார்பாக 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், `தமிழ் இருக்கை உருவாக வேண்டுமென்ற ஆர்வத்தோடு கனடா வாழ் தமிழர்களும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களும் முயற்சி செய்து வருவதாகவும் தி.மு.க சார்பில் நிதியுதவி தர வேண்டும் எனவும் கனடியத் தமிழர் பேரவையின் நிறைவேற்று இயக்குநர் டன்ரன் துரைராஜா கோரிக்கை வைத்திருந்தார். அதனையேற்று 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது' என குறிப்பிட்டிருந்தார்.

``இந்த நன்கொடைகளால் தேவையான நிதி சேர்ந்து விட்டதால் டொரோன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவது உறுதியாகிவிட்டது. இன்னும் சில நாள்களில் இது குறித்த அறிக்கையினை டொரன்டோ பல்கலைக்கழகம் வெளியிட உள்ளது" என்கிறார் தமிழ் இருக்கைகளின் குழு ஆலோசகரும் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியுமான கோ.பாலச்சந்திரன். இவர் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கும் டொரோன்டோ தமிழ் இருக்கைக்கும் 43 லட்ச ரூபாய் நிதி வழங்கியவர்.

டெரோன்டோ தமிழ் இருக்கை குறித்து பிபிசி தமிழிடம் மேலும் சில விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

``ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படுவதற்கு வைப்பு நிதி கொடுத்து ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டன. தற்போது அங்கு பேராசிரியர்களை நியமிப்பதற்காக ஹார்வர்டு பல்கலைக்கழகம் தேடுதல் குழுவை (Search committee) அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து கனடாவில் உள்ள டோரோன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு 18 கோடி ரூபாய் தேவைப்பட்டது. அண்மையில், வடஅமெரிக்க தமிழ்ச்சங்கத்தின் தலைவர் கால்டுவெல் வேள்நம்பியின் முன்னெடுப்பில் இசை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டு 1,20,000 டாலர்கள் நன்கொடையாகத் திரட்டப்பட்டன. இந்தப் பணம், டொரோன்டோ பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கும் அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் அமைய உள்ள தமிழ் இருக்கைக்கும் வழங்கப்பட உள்ளன.

அடுத்து ஹ்யூஸ்டன் தமிழ் இருக்கை

இதனைத் தொடர்ந்து, தமிழ் இருக்கை அறக்கட்டளையின் உறுப்பினர்களான மருத்துவர் ஜானகிராமன், மருத்துவர் திருஞான சம்பந்தம், பால்பாண்டியன், பாலா சுவாமிநாதன் ஆகிய நால்வரும் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவர் கால்டுவெல் வேள்நம்பியும் தலா 10,000 டாலர்களையும் டொரோன்டா, ஹ்யூஸ்டன் தமிழ் இருக்கைகளுக்காக கொடுத்துள்ளனர்.

இதன்மூலம், 1,70,000 டாலர்கள் நிதி சேர்ந்துள்ளன. டொரோன்டோ பல்கலைக்கழகத்துக்குத் தேவையான வைப்பு நிதி வந்துவிட்டதால் ஹ்யூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான பணிகளை சாம் கண்ணப்பன் என்பவர் தலைவராக உள்ள அறக்கட்டளை முன்னெடுத்து வருகிறது" என்கிறார்.

ஆய்வுகளால் என்ன பலன்?

`தமிழ் இருக்கைகள் அமைவதனால் என்ன பலன்?' என கேட்டோம்.

``தமிழ் மொழி மற்றும் தமிழரின் வாழ்வின் பண்பாட்டுப் பழைமையைக் காட்டுவதற்கு மூன்று ஆதாரங்கள் உள்ளன. ஒன்று பழந்தமிழ் இலக்கியம். அடுத்து தமிழர்கள் கடலோடிகளாக வாழ்ந்த வணிகத் திறமை, மூன்றாவது தமிழ் இசை ஆகியவை. இதில், ஹார்வர்டு தமிழ் இருக்கையானது, சங்கத் தமிழ் இலக்கியங்களை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்டது. ஹ்யூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கையின் நோக்கங்களில் ஒன்றாக தமிழர்கள் 2,500 ஆண்டுகளுக்கு முன்னால் தலைசிறந்த வணிகக் குழுக்களாகத் திகழ்ந்ததற்கான காரணிகளை ஆராய்வதற்காக ஏற்படுத்தப்பட உள்ளது.

அதில், தற்போதுள்ள சூழலில் உலக வணிகத்தின் ஒரு பகுதியை ஆள்பவர்களாக மீண்டும் தமிழர்கள் வர முடியுமா எனவும் ஆராய்வது முக்கிய இலக்காக வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பாரசீகர்கள், சீனர்கள் ஆகியோருக்கு மத்தியில் எப்படி தமிழர்களால் இந்துமகா சமுத்திரத்தை வணிக ஆட்சி நடத்திய மூன்று இனங்களில் ஒன்றாக மிளிர முடிந்தது என்பதை இந்த இருக்கை ஆராயும். அடுத்து, டொரோன்டோ தமிழ் இருக்கையானது, தமிழ் இசையின் பழைமை மற்றும் அதன் சிறப்பு ஆகியவவை குறித்த ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டுமென பல்கலைக்கழகத்துக்குத் தெரிவிக்க இருக்கிறோம்.

இதன்மூலம் பழைமைத் தமிழர் வாழ்வாங்கு வாழ்ந்த பண்பாட்டுச் செழுமை தெரிய வரும். இன்றைய தமிழருக்கு அவர்களைப் போல் உயரும் ஊக்கத்தினை அளிக்கும். அதனால் தொடர்ந்து எதிர்காலத்திலும் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை முறையை வாழ்வதற்குத் தமிழர்கள் முயல்வார்கள் என்பது என்னுடைய எண்ணம்" என்கிறார் பாலச்சந்திரன்.

கனடா தமிழ் இருக்கைக்கு கரம் கொடுத்த தமிழர்கள்! - கடைசிநேரத்தில் உதவிய தி.மு.க - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதவிக்கு வருமுன்பே திமுகா 10 லட்சம் கொடுத்துவிட்டு பின்கதவால் ஹிந்திக்கு சலோ சலோ சொல்லுது .

No photo description available.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.