Jump to content

யாழ் இணையத்தில் பெண்களின் நிலமை...


யாழ் இணையத்தில் பெண்களின் நிலமை!  

65 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

  • Replies 120
  • Created
  • Last Reply

பெண்களுக்கு பிரச்சினைகள் இருந்தால் நேரடியாகவோ இல்லை தனிமடல் மூலமாகவோ சம்பந்தபட்டவருக்கு அறியப்படுத்துங்கள். அதற்க்கும் அவர் மறுக்கும் பட்சத்தில் தனி திரி திறந்து அல்லது மட்டுறுத்தினர்களிடம் தெரிவியுங்கள். இங்கே ஆண் பெண் பால் ரீதியாக பிரச்சினைகள் இருப்பதாக தெரிவதில்லை. தற்போது எந்த விதமான தனிமனித தாக்குதல் கருத்துக்களை கூட நிர்வாக விட்டு வைப்பத்தில்லை. உடனேயே தூக்கிவிடுகிறது. அதற்க்கு முன்னர் ஒன்று புரிந்து கொள்ளவேண்டும். ஒன்று சேர்ந்தால்தான் பலம். பெண்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு திரி ஆரம்பியுங்கள். அங்கே எல்லோரும் முதலில் ஒற்றுமையாக கருத்தாடுங்கள். சிலவேளைகளில் நான் கூட நக்கல்கள் பண்ணுவதுண்டு. பெண்கள் என்ற ரீதியில் நக்கல் பண்ணுவதில்லை. நட்பு என்ற ரீதியிலேதான் நக்கல்கள் பண்ணுவதுண்டு. அதுவும் பிடிக்கவில்லை என்றால் செய்வதில்லை. நட்பாக சீண்டல்கள் பண்ணுவதையும் வேணுமென்றே பண்ணுவதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஆணுக்கு பெண் சளைத்தவல் இல்லை. யாராவது நக்கல் பண்ணி சீண்டும் போது நீங்களும் பதிலடி கொடுங்கள். தயவு செய்து ஆண் பெண் என்று பிரித்து பார்க்காதீர்கள் எல்லோரும் ஒரே போல் யாழ் உறவுகளே

Link to comment
Share on other sites

ஏன் தாயகப் பறவைகளில் கூடப் பல இடங்களில் ஆண்கள் பெண்களை அடிமையாக்குகின்றார்கள் என்றும், ஆணாதிக்க சமுதாயம் என்றும் எதற்கு எடுத்தாலும் ஒரு திட்டுச் செய்து எழுதுவதைப் பார்த்திருக்கின்றேன்..

ம்ம்ம் தூயவன் அண்ணா,

அது அங்க நடப்பது.!விருப்பனாவை அங்க போய் பேசுங்கோ.. திட்டுங்கோ..அதை இங்க சொல்லி இங்க எழுதும் பெண்களை ஏன் வீணாச் சீண்டுவான் ?

நாங்கள் எந்தத் தலைப்பிலாவது அதை தொடர்பு படுத்தி எழுதுறமா ?

Link to comment
Share on other sites

கேள்வி : பெண்களுக்கு யாழில் சமஉரிமை இருக்கிறதா

பதில் : ஆம். இருக்கிறது...

சமஉரிமைக்கு எங்கே களங்கம் வந்தது யாரால்.. ஆணாலா பெண்ணாலா.. ஆணால் என்றால்..

எங்கே எப்போது..எவ்வகையில்.. யாரால்.. தயவு செய்து பட்டியலிடுங்கள்.. அதில் அடங்கியவர்கள்

பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்..(பட்டியலிட யாராவது தயாரா)

Link to comment
Share on other sites

அனைவருக்கும் மீண்டும் வணக்கம்!

இதுவே இந்த தலைப்பில் இங்கு நான் எழுதுகின்ற கடைசிக் கருத்து. ஏனெனில், சொல்லவேண்டிய செய்திகளை ஏற்கனவே சொல்லிவிட்டேன் என நினைக்கின்றேன். தொடர்ந்தும் நான் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை பதில் எழுதினால் அது பிழையான விளைவுகளையே இங்கு ஏற்படுத்தும்.

நான் கூறிய கருத்துக்களில் ஏதாவது பிழைகள் இருந்தால் கள உறவுகள் அதை மன்னித்துக்கொள்ளவும்.

இது முக்கியமாக பெண்களின் பிரச்சனை, களத்தில் உள்ள பெண்கள் இந்த தலைப்புபற்றி உங்கள் விவாதங்களை, எண்ணங்களை தொடர்ந்து முன்வைக்கவும்.

அனைத்து கள உறவுகளும் கூறும் அபிப்பிராயங்களின் அடிப்படையில் ஆராய்ந்து நிருவாகம் தேவையான நடவடிக்கைகளை (அவ்வாறு ஏதாவது இருந்தால்) எடுக்கவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

கருத்துக்கள் கூறிய, மற்றும் கூறப்போகும் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றிகள்!

'எப்பொருள் எத்தன்மை தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப அறிவு!

நன்றி! வணக்கம்! <_<

Link to comment
Share on other sites

எல்லோருக்கும் வணக்கம் வணக்கம்...................

நாம தான் வந்துட்டொமல..........

சரி மாப்பி நீங்க சொல்வது மாதிரி நீதி,நியாயம் என்று யாழில நீங்கள் வைத்திருக்கும் பாசத்தை போல தான் 3நாட்களுக்கு வரை நானும் அறியாமல் வைத்திருந்தேன் என்றூ சொல்ல முடியாது அடிட் ஆகீ போயிருந்தேன் என்று சொல்லலாம்................இறுதியாக நடந்த விவாதத்தில் நாரதர் அங்கிள் சொன்னார் இதை விட நமக்கு வெளியில் ஒரு வாழ்கை இருக்கு............அதில் போய் நியாயம்.நீதி என்று போரடினால் நல்லாதிருக்கும் என்பது என் கருத்து.............ஆனாலும் நீங்க தொடங்கியதை பிழை என்று சொல்லமாட்டேன்.........இங்கே உள்ள பலர் பேச பயபிட்டு தனியாக சொல்லுவார்கள் என்பது எனக்கு தெறியும் அந்த வகையில் தான் நீங்க செய்திருப்பீர்கள் என்று நினைகிறேன்.....................

நீங்கள் குறிபிட்டு இருந்தீர்கள் வாழ்கை என்பது சீரியஸ் என்று இந்த கருத்தை நான் ஏற்று கொள்ளமாட்டேன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை நாம எப்பவும் ஜாலியா தான் எடுப்போம் அதை மாதிரி தான் யாழிலையும்.........அதற்காக நான் செய்வது பிழை என்றும் நீங்கள் செய்வது பிழை என்று நானோ,நீங்களோ குறிபிடவில்லை..........

அடுத்ததாக நீங்கள் குறிபிட்டு இருந்தது வாச்கர்கள் வாற அரட்டை பகுதியில் நாங்கள் நாகரீகமாக கதைக்க வேண்டும் என்று...............கேட்கிறேன் நாங்கள் இடத்தில் நாகரீகமற்ற முறையில் கதைத்து கொண்டோம் என்பதை சொல்லுங்கோ.........அத்தோடு நான் சொல்வது என்னவென்றா வாசகர்கள் அந்த பகுதியை பார்வையிடமுடியாது ஒன்லி கருத்துகள உறுப்பினர் பகுதி அரட்டைகளம் என்பது உங்களுக்கு தெறிந்திருக்கும்...........

அடுத்ததாக அரட்டைகளத்தில் கருத்து எழுதுற ஆட்களுக்கு எச்சரிக்கை வழங்கி இருந்தீங்கள் ஆண்கள் பெண் பெயரில் எழுதுகிறார்கள் கவனம் என்று............மாப்பி அங்கே அரட்டை அடிக்கிறவர்கள் எல்லாருக்கும் யார் என்ன என்று தெறியும் நல்ல சகோதரத்துவத்துடனும்,நட்புடன

Link to comment
Share on other sites

ம்ம்ம் தூயவன் அண்ணா,

அது அங்க நடப்பது.!விருப்பனாவை அங்க போய் பேசுங்கோ.. திட்டுங்கோ..அதை இங்க சொல்லி இங்க எழுதும் பெண்களை ஏன் வீணாச் சீண்டுவான் ?

நாங்கள் எந்தத் தலைப்பிலாவது அதை தொடர்பு படுத்தி எழுதுறமா ?

நல்ல கேள்வி...!! எங்க தூயவன்...??? ஆகா..... எழுதின கருத்தையும் அழிச்சிட்டு, ஆள் ஓடி ஒளிஞ்சிட்டார்.... :P :P :P

Link to comment
Share on other sites

வாக்கெடுப்பிற்கான கேள்வி தெளிவாக இல்லை. யாழ் களம் ஆண்கள் பெண்கள் என்று பாகுபாடுடன் நடந்து கொள்வது இல்லை. இங்கே இருக்கும் சில உறுப்பினர்கள் அப்படி நடந்து கொள்ளக்கூடும்.

இந்தத் தலைப்பில் கருத்து எழுதியவர்களில் இதுவரை யாரும் பெண்களை தாக்கியோ, தரக்குறைவாகவோ, கிண்டலாகவோ கருத்து எழுதவில்லை, ஒருவரைத் தவிர.

அந்த ஒருவர் இந்தத் தலைப்பை ஆரம்பித்த கலைஞன்

கலைஞன் இப்படி எழுதுகிறார்

"மகளிரை என்பக்கம் இழுப்பதற்காகவோ அல்லது அவர்களை ஐஸ் வைப்பதற்காகவோ நான் இந்த கருத்தாடலை தொடங்கவில்லை. ஐஸ் வைப்பது எனது நோக்கமாக இருந்திருந்தால் கவிதைப் பூங்காட்டில் காதலைப்பற்றி தேனொழுக கவிதைகள் எழுதி ஒட்டி இருப்பேன்."

இதன் மூலம் பெண்களின் சிந்தனை ஒரு வட்டத்திற்குள் நிற்கிறார்கள் என்றும், காதல் கவிதை போன்ற விடயங்களில் மயங்கிவிடுகிறார்கள் என்றும் கலைஞன் குறிப்பிடுகிறார்.

(பெண்கள் பற்றிய இந்தக் குற்றச்சாட்டு உண்மை என்று நானும் நம்புகிறேன்) ஆனால் பெண்களின் பரிதாபநிலை பற்றி தலைப்பை ஆரம்பித்த கலைஞன் இப்படி பெண்களைப் பற்றி கிண்டலாக எழுதியது ஆச்சரியமாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

இது தொடர்பான என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை எழுதுகிறேன்.

தலைப்பை யாழ்களத்தின் பரிதாப நிலமை என்று மாற்றியிருக்கலாம் என்று தோன்றுகிறது. காரணம் இங்கே பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் மட்டுமல்ல. ஆண்களும் தான்.

ஆனால் அதற்காக பெண்கள் மீத தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என்று நான் கூற வரவில்லை. ஆனால் அந்தத் தாக்குதல்கள் பெண்கள் என்பதற்கானதா என்று சொல்லவும் முடியவில்லை.

இந்த இடத்திலே பெண்களால் தனிப்பட்ட முறையிலே பாதிக்கப்பட்டதாலோ என்னவோ பெண்களை எள்ளி நகையாடும் ஒருவர் அல்லது இருவர் இருப்பதும் உண்மையே. (பெயர்களைக் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் உங்களில் பலருக்கு சட்டென்று அவருடைய புதிய முகம் ஞாபகத்திற்கு வந்திருக்கும்.)

உண்மையிலே கள உறவுகள் செய்ய வேண்டியது என்னவென்றால் அந்த நபர்களை இனங்கண்டு அவர்களது பதிவுகளை முற்றாகப் புறக்கணித்து அது தொடர்பான கருத்துக்களைப் பதியாமல் விடுவதே. காரணம் இவர் போன்றவர்கள் பக்கம் பக்கமாக எழுதுவது மற்றவர்களைச் சீண்டித் தாங்கள் களத்தில் பேசப்படும் நபராகத் திகழ்வதற்கே.

அடுத்ததாக இது போன்றவர்கள் தனியே பெண்கள் தொடர்பான தவறான கருத்துக்களை முன்வைக்கின்றனர் என்றும் சொல்ல முடியாது.

தேசியம், சமயம் என்று அந்த விடயமானாலும் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் தொடர்புபடுத்துவது போன்று சில விடயங்களைப் புகுத்தி கருத்தின் போக்கையே திசைதிருப்பி அலட்டிக் கொண்டிருக்கின்றனர். இங்கே சங்கடத்துடன் என்றாலும் ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். இது போன்றவர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு நேரமின்னையாலோ அல்லது வேறு காரணத்தாலோ நிர்வாகவும் தவறி வருகிறது.

இது போன்ற தவறான கருத்துக்களை உடனடியாக நீக்கி உறவுகள் மனம் நோவதை தவிர்க்கலாம்.

அத்துடன் களத்தின் பல விடயதானம் கொண்ட பகுதிகளுக்குள்; நடக்கும் அரட்டைகளும் (கருத்துடன் சம்பந்தப்படாத) களத்தில் ஒரு தொய்வு நிலை ஏற்படுவதற்குக் காரணமாய் இருக்கிறது என்பதும் என்னுடைய கருத்து.

Link to comment
Share on other sites

யாழ் களத்தில் பெண்களின் 'பரிதாப நிலை' என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. (பெண்ணாக இருந்த அனுபவம் <_< )

யாழ் களத்தில் ஆக்கற் களத்திலேயே பெரும்பாலான பெண்களின் பதிவுகளைக் காணக்கூடியதாக உள்ளது.

கவிதை, கதை, சமயல்... போன்றவற்றுடன் நின்றுவிடாமல் ஏனைய பகுதிகளிலும் பெண்கள் கருத்தாடலில் கலந்துகொள்ள வேண்டுமென்பது எனது விருப்பம். யாழின் பலமாகக் கருதப்படும் செய்திப் பகுதியிலும் சிந்தனைக்களம், அறிவியற்களம் போன்றாவற்றிலும் பெண்களின் பங்கு மிகக் குறைவு. கறுப்பி அக்கா பெருமளவில் செய்திகளைத் தொகுத்து வழங்கினாலும், அவர் தனது கருத்துக்களைப் பதிவது குறைவு.

ஒருவேளை இதைத்தான் பெண்களின் பரிதாப நிலை எனக் கூறப்பட்டுள்ளதோ ?

Link to comment
Share on other sites

எழுதினால் வாயாடி என்ற முத்திரை தந்துடுவார்கள். இருப்பினும் பின்னர் எழுதுகின்றேன். இப்போதைக்கு விடைபெறுகின்றேன். நானும் ஆமாம் என்றே வாக்கு

போட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கேள்வி...!! எங்க தூயவன்...??? ஆகா..... எழுதின கருத்தையும் அழிச்சிட்டு, ஆள் ஓடி ஒளிஞ்சிட்டார்....

உள்ளேன் ஐயா:D:(:D

கருத்தை எழுதிப்போட்டு, திரும்ப வந்து அழிப்பதற்கிடையில் மேற்கோள் வந்திட்டுது. அவர்களின் கணனி வேகத்தோடு என்னால் போட்டி போட முடியவில்லை. <_<

தாயகப்பறவையைப் பற்றிச் சொன்னால் வாங்கிக் கட்டுவேன் என்று யோசிச்சனான். ஆனாலும் விதி விடல்லையே!... B)

ஆனா ஏன் அதைச் சொன்னே்ன என்றால், ஆண்கள் என்றால் அப்படித் தான் இருப்பார்கள். பெண்கள் என்றால் இப்படித் தான் இருப்பார்கள் என்பதே. தவிர எனக்கும் தாயகப்பறவைகளுக்கும் எவ்வித கோபமும் கிடையாது. அதன் வெற்றியில் பெருமைப்படும் ஆட்களில் ஒருவனாக நானும் இருப்பேன். :D

Link to comment
Share on other sites

வலைஞன் அண்ணா ம்மற்றும் நிர்வாகத்தினர் பக்க சார்பாக நடந்துள்ளனர் இந்த தலைப்பில் பெரும்பாலான கருத்துகள் வெட்டபட்டிருகின்றன.ஒரு மட்டுறுத்துணர் தாறுமாறாக ஒரே பதமுடைய பல கருத்துகளை வெட்டியிருபதானது பரவலான ஊகத்தை வலுபடுத்தி உள்ளது .

இங்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் என பாகுபடுத்தி யாழில் குழப்பத்தை உண்டாக்கும் நோக்கத்துடன் இவ்தலைப்பு போடபட்டிருப்பதாக கருத வேண்டி உள்ளது இந்த தலைப்பை வைத்துகொண்டு ராதாவால் தொடங்கப்பட்ட தலைப்பு முதலில் மூடப்பட்டு அதன் பின் தூக்கப்பட்டதானது நிர்வாகம் இந்த தலைப்பை அங்கீகரிகின்றதோ என எண்ன தோன்றுகின்றது

அனித்தாவும் சகியும் சீண்டல்கள் நடந்ததாக எழுதி இருந்தார்கள் என்னை பொறுத்தவரையில் நான் அனைத்து உறுப்பினர்களுக்கும் நக்கலாக பதில் எழுதி இருகின்றேன்.ஆதிவாசி,சின்னப்ப

Link to comment
Share on other sites

சகியை கேசரி விசயத்தில் கொஞ்க்கிரீட் கிண்டுவதாகவும் அனித்தாவை பாட்டி எனவும் அழைத்திருக்கின்றேன் இவை ஒரு சகோதரனாக பாவித்து எழுதியவை எந்தவித சீண்டலும் உள்நோக்கமும் இல்லாமல் எழுதி இருந்தேன் ஆனால் சகியும் அனித்தாவும் பெண்கள் மீது சீண்டல்கள் நடப்பதாக எழுதி இருந்தார்கள் அப்படி நான் எழுதியவை சீண்டலாக அனித்தாவுக்கும் சகிக்கும் தென்பட்டிருப்பதாக நான் சந்தேகிப்பதால் இனிமேல் அனித்தாவுடனும் சகியுடனும் எந்தவித நட்புரீதியிலான கருத்தை பதிவிடுவதை இத்துடன் நிறுத்தி கொள்கின்றேன்

ஈழவன் சார்,

உங்க கூட........... நான்............ யாழ்ல......... உங்க கருத்துக்கு பதில் எழுதினதா எனக்கு ஞாபகம் இல்லை ....... (உலக நடப்பில் எழுத்யிருக்கம் போல ) ஆனா நீங்க என்னைப் பாட்டி எண்டு சொன்னீங்களா ................. ? எந்த தலைப்பில் ....................?

ஹா ஹா அப்படி சொல்வதால் சீண்டுவது என்று அர்த்தமா................. ? என்ன இது சின்னப்புள்ளை தனமால்ல இருக்கு! நீங்கள் அப்படி அழைப்பதால் எனக்கு எந்த பிரச்சனையுமில்லை ! :P ;)

ஜமுனா & வானவில் கூட அபப்டித்தான் கூப்பிடுவினம். அது சீண்டல் இல்லை ஈழவன் ....... புரிஞ்சுக்கோங்க ! சீண்டலுக்கும் பகுடியா இப்படி அழைப்பதுக்கும் வித்தியாசம் உண்டு ! :P புரிந்து கொள்ளுவீங்க எண்டு நினைக்கிறன்........ !

நன்றி !!!!!

உள்ளேன் ஐயா:D:(:D கருத்தை எழுதிப்போட்டு, திரும்ப வந்து அழிப்பதற்கிடையில் மேற்கோள் வந்திட்டுது. அவர்களின் கணனி வேகத்தோடு என்னால் போட்டி போட முடியவில்லை. <_< தாயகப்பறவையைப் பற்றிச் சொன்னால் வாங்கிக் கட்டுவேன் என்று யோசிச்சனான். ஆனாலும் விதி விடல்லையே!... B) ஆனா ஏன் அதைச் சொன்னே்ன என்றால், ஆண்கள் என்றால் அப்படித் தான் இருப்பார்கள். பெண்கள் என்றால் இப்படித் தான் இருப்பார்கள் என்பதே. தவிர எனக்கும் தாயகப்பறவைகளுக்கும் எவ்வித கோபமும் கிடையாது. அதன் வெற்றியில் பெருமைப்படும் ஆட்களில் ஒருவனாக நானும் இருப்பேன். :D

:P

Link to comment
Share on other sites

அனித்தாவும் சகியும் சீண்டல்கள் நடந்ததாக எழுதி இருந்தார்கள் என்னை பொறுத்தவரையில் நான் அனைத்து உறுப்பினர்களுக்கும் நக்கலாக பதில் எழுதி இருகின்றேன்

வாங்கோ ஈழவன்! வணக்கம்!

நீங்கள் என்னோட கருத்தை வடிவாக தான் வாசித்தீர்களா? இல்லை நான் மறந்து போய் டச்சில் எழுதி விட்டேனா?

மீண்டும் ஒரு முறை உங்கள் பார்வைக்கு......... (நீளமா இருக்கும் தான்..ஆனா என்ன செய்வது)

தலைப்பை விட்டு அவரோட எண்ணம் நல்லதே!

........

இங்கு விளையாட்டாக சீண்டி கதைப்பது வேறு வேணுமென்று நினைத்து வைத்து பழி வாங்க கதைப்பது வேறு. அப்படி கதைத்து தான் பலரை இழந்து விட்டோம்.

நான் இங்கு பெண்கள் அடிமைபடுத்தபடுகிறார்களோ இல்லை சமமாக கருதவில்லை என்றோ சொல்ல வரவில்லை. ஊக்குவிக்கும் அண்ணாக்கள், நண்பர்களும் இருக்கிறார்கள்.

ஆனா சில சமயங்களில்...சிலரால்..சிலரின் கருத்துக்களால் தாக்கபடுகிறார்கள். தொடக்கம் கூட ஆண்களின் கருத்துக்களாகவே இருக்கின்றது. இப்படி ஆண்கள் பெண்களால் தாக்க தொடங்குவது குறைவு..ஏன் இல்லை என்றே சொல்லலாம்..

இதுவே நம் யாழில் உள்ள வித்தியாசம்..என்று நான் நினைக்குறன்.............

.............

இங்கு இந்த தலைபில் பதிவிட்ட உறுபினர்களில் அனித்தாவும் சகியுமே இத்தலைப்பின் கருவுடன் ஒத்துபோயுள்ளனர் அதேவளை பெண் உறுபினர்களான தூயா வெண்ணிலா இத்தலைப்பின் விடயங்களுக்கு எதிராக கருத்து பதிந்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நீங்கள் ஏன் கருத்துக்களை சரியாக வாசிக்காமல் எழுதுகிறீர்கள்?

நாங்கள் சொல்வது எங்கள் தா.பற்வைகள் பற்றியது!

அதை நக்கல் நடித்தவர்களை பற்றியது!

வேறு யாழில் அவர் நக்கல் பண்ணினார்...இவர் கிண்டலடித்தார் எண்டு அழுதோமா? இல்லை சமம் இல்லை அல்லது கீழத்தரமா இருக்கென்று சொன்னோமா? அப்படி சத்யமாக இல்லை!

ஒண்டு தெரியுமா?

இதையே மேலே சொன்னே. திரும்பவும் எழுதுறீங்க. ஒரே விடயத்தை திரும்ப திரும்ப சொல்ல உங்களுக்கு அலுக்குதோ இல்லையோ எனக்கு அலுக்குது.

தயவு செய்து இதற்கு மேலும் வீணாக கதைக்காதீர்கள்.

தூயா சொல்லி இருந்தார்.. " தா.பறவைகள் மீதான கருத்துக்களை கண்டிக்கனும்" எண்டு.

அதையே தான்

அனிதா வெளியாக சொல்லாமல் " பெண்களை பற்றி எழுதி இருக்காங்க தனக்கு எதிர்த்து கதைக்க துணிவில்லை" என்றார்.

அதே...விடயத்தையே நான் உதாரணமாக காட்டி சொன்னேன்.

இதுக்கு மேல் விளக்கமா சொல்ல எனக்கு தெரியவில்லை.

அப்படி நான் எழுதியவை சீண்டலாக அனித்தாவுக்கும் சகிக்கும் தென்பட்டிருப்பதாக நான் சந்தேகிப்பதால் இனிமேல் அனித்தாவுடனும் சகியுடனும் எந்தவித நட்புரீதியிலான கருத்தை பதிவிடுவதை இத்துடன் நிறுத்தி கொள்கின்றேன்

இங்கு பல அண்ணாக்கள் இருக்கினம். ஏன் இப்பவும் இதை பற்றி வாதாடி விட்டு மறுபடியும் நக்கல் அடித்து கதைச்சுக்கிட்டு தான் இருக்கம்.

அப்படி கதைக்காமல் இத்தோடு அதை சேர்த்து கதைக்காமல் விடுவது...அது உங்கள் விருப்பம்! ஆனால் இவை எப்பவோ என்றோ விளையாட்டாக கதைத்து சிரித்த விடயங்கள். கொங்கிரீட் எண்டு சொல்ல நான் என்ன எங்கப்பாவை கூட்டியாந்து உங்களை பேச சொன்னேனா? சின்ன பிள்ளை போல கதைக்கிறீங்களே?

எதற்கு அதை இதுக்குள் இழுக்கிறீர்கள்? அது வேறு. இது வேறு.

அதை புரிந்து கதையுங்கள்!

......................

நான் இனி இத் தலைப்பில்எழுத வேண்டாம் என்று இருந்தேன். ஆனால் இப்படி எல்லாம் எழுத வாசிச்சுட்டு போக முடியல.

இவ்வளவு சொல்கிறீர்கள். தா.பறவைகள் பற்றி நக்கலாக எழுதிய கருத்துக்களை பற்றி சொன்னேன். அதை யாரும் எழுதியது பிழை எண்டீர்களா? இல்லை...எப்பவோ கொங்கிரீட் எண்டதையும், பாட்டி எண்டதையும் இப்போ கொண்டு வந்து கதைக்கிறீர்களே?

........

நானும் நக்கல் அடிச்சிருக்கேன். அண்ணாமார், நண்பர்களை ஆனா அது அனைவருக்கும் தெரிஞ்சதே. அத்தோடு கோவத்தில் சிலரை நான் எழுதி இருக்கேன். அதுவும் தொடக்கம் அவர்களே! ஆனாலும் அப்படி இனி எந்த கருத்துக்களும் என்னால் வைக்கப்படமாட்டாது!

அப்படி வைத்ததற்கு மன்னிக்கவும். அதற்காக தொடர்ந்து வைக்கப்படும் என்றால்... மிச்சம் எனக்கு தெரியாது. <_<

பெண்கள் பொங்கி எழணும் என்பீர்கள்..

எழுந்தால் என்ன சும்மா கருத்து சொன்னாலே வாயாடிப்பட்டம் இலவசமா கிடைக்கும்! இதுக்கும் கிடைக்கும். திரும்ப திரும்ப ஒரே பட்டம் பெறுவது நினைக்க எனக்கு சும்மா புல்லரிக்குது... :P

Link to comment
Share on other sites

என்ன சுண்டல பற்றியா கதைக்கிறிங்க..ஓஓஓ சீண்டல பற்றியா? என்ன கொடுமை சார். இது...

Link to comment
Share on other sites

என்ன சுண்டல பற்றியா கதைக்கிறிங்க..ஓஓஓ சீண்டல பற்றியா? என்ன கொடுமை சார். இது...

இவ்வளவு நேரமும் பாஸ்வேர்டை தொலைத்து தேடி போட்டு இப்ப வந்து என்ன கொடுமையாம் நானும் சொல்லுவேன் தானே லக லக லக லக.................. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நடக்குது இங்க? எனக்கென்றால் புரியலை.

தலைப்பு எனக்கு பிடிக்கலை.பரிதாப நிலையில பெண்கள் இல்லை என்று நான் நினைக்கிறன்.

ஒரு கருத்து மட்டும் சொல்லலாம் என்று நினைக்கிறன். தாயக பறவைகள் பத்தி எழுதின கருத்துக்கள் நானும் பார்த்தேன். அதுக்காகதான் யாழ் இல பெண்கள் பரிதாப நிலையில இருக்காங்க என்று சொல்லுறீங்களா? அது ஒருவரோட தனிப்பட்ட கருத்து என்று நான் நினைக்கிறேன். மற்றும் படி நக்கல் அடிக்கிறது, இதெல்லாம் சகஜமா நடக்கிறதுதானே.

Link to comment
Share on other sites

உண்மையை சொல்லோனும் என்றால் தாயகபறவை பதிவை நான் பார்க்கவில்லை என்ன எழுதப்பட்டிருந்தது என எனக்கு தெரியாது சீண்டல் என்னும் போது நான் உங்களோடு பழகிய விதத்தை எடூத்தீர்களோ எனப்பட்டது தவறாயின் என்னை மன்னிக்கவும்

Link to comment
Share on other sites

உண்மையை சொல்லோனும் என்றால் தாயகபறவை பதிவை நான் பார்க்கவில்லை என்ன எழுதப்பட்டிருந்தது என எனக்கு தெரியாது சீண்டல் என்னும் போது நான் உங்களோடு பழகிய விதத்தை எடூத்தீர்களோ எனப்பட்டது தவறாயின் என்னை மன்னிக்கவும்

இது முதலே தெரிஞ்சிருந்தால் இப்படி கை நோக எழுதி இருக்க மாட்டேன் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்கள உறவுகளூக்கு வணக்கம்,

இப்போதுதான் இந்த இழையைப்பார்க்கும் வாய்ப்புக்கிட்டியது. அடியேன் இன்னும் வாக்குப்பதியவில்லை.

ஆண்/பெண் என்ற பேதம் தவிர்த்து கருத்துக்களோடு மட்டும் மோதினால் பல ஆக்கபூர்வமான படைப்புக்களை எதிர்நோக்கக் கூடியதாக இருக்கும். ஆனால் எவரேனும் அதில் அக்கறைகாட்டியதாகத் தெரியவில்லை.

கலைஞன் அவர்களே, உங்களின் சிந்தனை, ஆக்கபூர்வமான படைப்புகள் யாவும் இங்குள்ள எல்லா உறவுகளூம் அறிவோம்.

'பெண்களைத்தாக்கிப்பேசும்போ?ு" யாரோ ஒரு பெண்ணால் ரொம்பவும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்" போலும் என்று அவரைப்பற்றி நினைத்துக்கொள்வேன்.! ஆகவே அவருக்கு அறிவுரை சொல்வதால் என் நேரம் வீண் என்று விட்டுவிடுவேன்.

பெண்கள் தனிப்பட்ட ரீதியில் மிக மோசமாகத் தாக்கப்பட்டிருந்தால் 'நிர்வாகத்திடம்' நேரடியாக முறையிடுவது சாலச் சிறந்தது!.

ஒரு ஒரே ஒரு கணம் எம் தாயகப் போராளிகளை நினைத்தால் ஆணையோ/ பெண்ணையோ மட்டமாக நினைக்க மனசு வராது!. ஆனால் அந்த அந்தத் தலைப்புகள் வந்தால் உணர்ச்சிவசப்படுகின்றோமே தவிர நாம் எம்மை சீர்படுத்திக்கொள்ளவோ, சரிபடுத்திக்கொள்ளவோ முனைவதில்லை சற்றேனும் முயல்வதும் இல்லை என்பது வேதனைக்குரியது!.

இப்படி ஓர் தலைப்பைத் தொடங்கியதற்கே 'கலைஞனுக்கு" இத்தனை அம்புகளா?! யோசிக்க வேண்டிய விடயம்!.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தில் பெண்களிற்கு சம உரிமை இருக்கின்றதா?

ஆம்! [ 32 ] [60.38%]

இல்லை! [ 19 ] [35.85%]

தெரியவில்லை! [ 2 ] [3.77%]

அநேக கள உறவுகள் தெளிவாக உள்ளனர் என்று நினைக்கையில் உவகையாக உள்ளது.

இங்கு பிரச்சனைகள் சில ஆண் பெண் என்ற வேறுபாட்டுக்கு அப்பால் இருந்தன.. இருக்கின்றன..! அவற்றை கள உறவுகள் அனைவரும் அனைவரையும்... தலைப்புக்களில் ஏற்படும் மாறுபட்ட கருத்துக்களுக்கு... அப்பால் நட்புறவோடு அணுகும் போதே அகற்றுவது சாத்தியப்படும். கள உறவுகள் ஒருவரை இன்னொருவர் புறக்கணிக்கனும்.. துரத்தனும்.. விரட்டனும் என்று போதிப்பது கள உறவுகளிடையே பிரச்சனைகளை பேண விரும்புதலாகவே நோக்கப்படனும்.

தமிழர்களுக்குள் ஒருவரை ஒருவர் ஒதுக்க முற்பட்டதால் தான் இன்று பல பிளவுகள்..! பிரிந்திருந்து எதிரிக்கு கூட அரிவருடுகின்றனர். அந்தத் தவறை யாழ் களமும் செய்யக் கூடாது. ஒரு மனிதனுக்குள் ஒரு விடயம் தொடர்பாக எழும் அவனுடைய கருத்தியலுக்கு நாம் மதிப்பளிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அவனுடைய கருத்தியல் எமது நிலைப்பாட்டில் இருந்து மாறுபட்டிருப்பினும். அவனுடைய கருத்தியல் நிலைப்பாட்டின் தவறை உணர வைக்க நாம் அவனின் கருத்தியலை புரிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். அவ்வாறன்றி கருத்தாளர்களை கருத்துக்களின் பெயரால் துரத்தி அடித்தல்.. விரட்ட எத்தனித்தல்.. புறக்கணிக்க அறை கூவுதல்.. நிச்சயம் களத்துக்கு மட்டுமல்ல.. தமிழர்களுக்கும் அவர்களின் ஒற்றுமை பலத்தை பேண உதவாது..!

பெண்கள் ஆண்கள் என்ற பிரிவினைக்கு அப்பால் சமூகத்தில் நடக்கும் தவறுகளை அதை எந்த மனிதன் செய்தாலும் சுட்டிக்காட்ட வேண்டும். பெண்களுக்கும் சில பலவீனங்கள் இருக்கும்.. ஆண்களுக்கும் இருக்கும். அதனால் பாதிக்கப்படுவது ஆணாக இருக்கும் போது அதைச் சுட்டிக்காட்டுதல் அல்லது சமூகம் பாதிப்படும் போது அதை சுட்டிக்காட்டுதலை பெண்கள் எதிர்ப்பு என்ற நிலையில் நோக்காது.. பெண்களின் தவறுகளுக்கான காரணங்களையும் தீர்வுகளையும் தேட முற்பட வேண்டும். பெண்கள் ஆண்கள் தொடர்பான அவர்களின் செயற்பாடுகளில் கருத்தாளர்களிடையே பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம். நாம் அனைத்தையும் வெளிக்கொணர சந்தர்ப்பம் அளிக்கும் பட்சத்தில் மட்டுமே சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வை தேட கலந்துரையாட முடியும்..! முன்மொழிவுகளைச் செய்ய முடியும். அப்படியான விவாதங்களில் ஒருவரின் கருத்தின் அடிப்படையில் அதுதான் அவரின் மாறாத நிலைப்பாடு என்று தீர்மானிக்க முடியாது. குறித்த விடயத்தில் குறித்த நேரத்தில் குறித்த அறிவுடன் அதுதான் அவரின் நிலைப்பாடாக இருக்கும். அதில் தவறு இருப்பின் அதைச் சுட்டிக்காட்டி தீர்வுகளை மாற்றங்களைக் காணலாம். இதில் ஆண் பெண் என்ற பாகுபாட்டு ரீதியான மோதல்களைத் தவிர்த்து வளமான கருத்துப் பகிர்வுகளே அவசியம்.

தாயகப்பறவைகள் குறித்த பதிவில்.. தாயகப்பறவைகளை இங்கு விளம்பரப்படுத்துவதில் எமக்கும் உடன்பாடில்லை. நாம் கருத்துக்களை வைத்து கருத்துக்களைப் பிறப்பிக்க இங்கு வந்துள்ளோமே தவிர விளம்பரக் களமாக இதைப் பாவிப்பது தாயகப்பறவைகளுக்கே பலவீனம். எந்த ஒரு தளத்தின் வெற்றியும் அது கொண்டிருக்கும் உள்ளடகத்தில் தான் தங்கி இருக்கிறதே அன்றி விளம்பரத்தில் அல்ல. அந்த வகையில் தாயகப்பறவைகள் மீதான யாழ் களத்தில் வந்த விமர்சனங்களில் தப்பிருப்பதாக நோக்க முடியவில்லை. அவ்விமர்சனங்கள் பெண்களுக்கு எதிரானது என்றுமில்லை. காரணம் தாயகப்பறவைகள் ஆண்களின் ஆக்கங்களையும் அரவணைத்துக் கொண்டு தமிழ் தேசிய தளத்தில் பெண்களின் உணர்வுகளை புகலிடத்தில் இருந்து கொண்டு சமூகத்துக்கு கொண்டு செல்ல முனைகின்றன. பெண்களின் நிர்வாகத் தலைமையில் அதை செய்ய விரும்புகின்றனர் என்பது புலப்படுகிறது.

யாழில் இருக்கும் சோழியான் அண்ணா.. நிதர்சன் போன்றவர்கள் தனித்து தளங்களை நடத்துகின்றனர். அவர்கள் தங்கள் தளங்களின் விளம்பரக் களமாக யாழைப் பாவிப்பதை தவிர்த்துள்ளனர். பரஸ்பர இணைப்புப் பகிர்வுகள் மட்டும் யாழின் முகப்பில் உள்ளது. தமிழமுதமும் வன்னித்தென்றலும் இன்று பலர் பார்வையிடும் அளவுக்கு வளர்ந்துள்ளன. பலர் ஆக்கங்களை இணைத்தும் வருகின்றனர். அந்த நிலையை எட்ட தாயகப்பறவைகள் முயல வேண்டுமே ஒழிய தங்கள் மீதான விமர்சனங்களை பெண்கள் மீதான விமர்சனமாக்கி பரிதாப அனுதாபம் தேட முனையக் கூடாது. அது அவர்களின் தோல்விக்கான அறிகுறியாகவே நோக்கப்படும். அது தாயகப்பறவைகளின் வளர்ச்சிக்கே தடையாகும். தாயகப்பறவைகளின் வளர்ச்சியில் விருப்பமில்லாத சில சக்திகளும் உள்ளனர் என்பதற்கு அங்கு அடாவடித்தனத்தில் ஈடுபடும் சில சக்திகளை காணலாம். அதை வெல்ல வேண்டின்.. தாயகப்பறவைகள் தங்களிடையே ஒத்துழைப்பையும் உழைப்பையும் மேம்படுத்த வேண்டுமே தவிர விமர்சனங்களை தவறான கோணத்தில் கொண்டு சென்று பெண்கள் மீதான பழிப்பாக்கி அனுதாபம் தேட முனையக் கூடாது.

யாழில் பெண்கள் தொடர்பான அவர்கள் செய்யும் சமூகக் குற்றங்களை வெளிக்கொணரும் வகையில் நெடுக்காலபோவன் ஆகிய நாம் பல செய்திகளை தந்துள்ளோம். அது சமூக விழிப்புணர்வு வேண்டியே தவிர பெண்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் அல்ல. அதேபோல் ஆண்கள் தொடர்பான அவர்களின் சமூகக் குற்றங்களை சொல்லவும் பலர் இங்கிருக்கின்றனர். ஆனால் பெண்கள் தொடர்பான பல விடயங்கள் பெண்களால் மறைப்பட்டுவதால் தான் நாம் சமத்துவமான அணுகுமுறைகள் பேணப்படும் வகையில் அவற்றைத் தருகின்றோம். அதை பெண்கள் மீதான இழிவுபடுத்தலாக நோக்கின் அது மிகவும் பிற்போக்கான நிலை என்றே கூறுவோம்.

கருத்துக்களத்தில் பெண்கள்.. ஆண்கள் மதிக்கபடல்ல என்பது தவறு. எல்லோருக்கும் கள விதி ஒன்றுதான். அப்படி இருக்க கள விதிக்கு உட்பட்டு எவரும் கருத்துப் பகர முடியும். இதில் பெண்கள் பயந்து ஒழியனும் என்றில்ல. அதுவும் புனை பெயர்களில் எழுத.

உலகில் பல பெண் எழுத்தாளர்கள் புனை பெயரில் பல புரட்சிகரமான கருத்துக்களை எழுதியுள்ளனர் எழுதியும் வருகின்றனர். அப்படி இருக்க ஏன் யாழ் களத்தில் பெண்கள் எழுத முடியாம ஒதுங்கிறாங்க.

அதற்கு காரணம் உண்டு. அதற்கான காரணம் யாழ் களத்தில் மித மிஞ்சிப் போயுள்ள அண்ணா தம்பி அக்கா தங்கை பாசப்பிணைப்புத்தான். கருத்துக்களுக்கு வெளியில் அந்தப் பாசப்பிணைப்பு இருக்கனும். அவசியம். ஆனால் கருத்தாடல் எனும் போது தனிமனித கருத்துப் பகர்வில் ஈடுபடும் போது அண்ணா கோவிப்பார் அக்கா கோவிப்பா தங்கை மனக்கஸ்டப்படுவா ஏதாச்சும் தவறான நினைப்பினம் என்று பார்த்துக் கருத்துப்பகர முற்பட்டால் கருத்துக்களை கண்டு பயந்து ஓடவும் ஒதுங்கி இருந்து நோக்கவும் மட்டுமே இடமிருக்கும்.

எம்மைப் பொறுத்தவரை சீரியஸான கருத்துப் பகிர்வுக்கான சந்தர்ப்பகளின் போது அப்படியான அக்கா தங்கை அண்ணா தம்பி உறவு நிலைகள் ஏன் என்ற வினா இருக்கிறது. கருத்தைக் கருத்தாக நோக்கி கருத்துப் பகர முடியாத அந்த அண்ணா அக்கா தங்கை தம்பி உறவுகளுக்குள் என்ன புரிந்துணர்வு இருக்கும்..??!

கருத்துக்களை கருத்துக்களாக நோக்க முடியாத அந்த உறவுகள் வெறும் வார்த்தையளவினதே..! அதற்குப் பயப்பிட்டு கருத்தாடல் செய்யும் நிலை யாழில் அதிகம்..! அதற்கு எம் எஸ் என் தொடர்புகளும் காரணம்.

இப்படிப் பல பின்னணிகள் பொருந்திய இந்த விடயத்தில்.. பெண்கள் ஒதுக்கப்படுகின்றனர்.. வெறுக்கப்படுகின்றனர்.. விரட்டப்படுகின்றனர் என்ற கருத்துக்களும் பெண்களுக்கு சம உரிமை இல்லை என்பதுவும் பெண்களுக்காக சில சலுகைகளை பெற்றிட நடக்கும் முயற்சியே அன்றி பெண்கள் தங்கள் துணிவை வளர்க்க என்றில்லை. பெண்கள் எல்லாப் பிரச்சனைகளையும் ஆண்கள் போல சந்திக்கவும் வெல்லவும் முயற்சிக்கனும். சலுகைகள் மேலதிக கள விதிகள் மூலம் தங்களை நிலை நிறுத்த முனைவது தவறான சிந்தனையின் வெளிப்பாடு.

கருத்தாளர்களிடம் பெண்கள் கருத்துப் புரிந்துணர்வுக்காக இந்தத் தலைப்பை முன்வைக்க முனைந்திருப்பின்.. அது தவறல்ல. ஆனால் அவர்கள் தமது நிலை பரிதாபம் என்று சொல்லி அனுதாபம் தேடவும் அதற்காக பெண்களுக்கு ஆதரவுக் கருத்து சொல்ல என்று ஏங்கும் ஆண்கள் கூட்டத்தை பெருக்கவும் நினைப்பது தவறானது. தவறான அணுகுமுறை.. பெண்கள் காலம் காலமாக இந்தத் தவறை தங்கள் துணிச்சல் இன்மை என்ற ஆளுமைத் திறமை இன்மை இன்றி செய்ய முற்படுகின்றனர்..! இது தவறு..! சமூகச் சமுத்துவம் கோரும் பெண்கள் தங்கள் தலைவிதியை தாங்களே தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர ஆண்களின் துணை சலுகை சட்டம் விதி வரும் என்று அனுதாபம் தேடிக் காத்திருக்க முனையக் கூடாது..!

உங்களை தனிப்பட தாக்கினால் திருப்பித் தாக்குங்கள். மரியாதை தர மறுப்பவருக்கு அதையே பதிலாக அளியுங்கள். உங்களை விரட்ட நினைப்பவர்களுக்கு அது தவறென்று அவர்கள் வழியில் சென்றே பாடம் புகட்டுங்கள்..! அது அவர்களை திருந்தச் செய்யும். இங்கு கூட சில பெண்கள் அடாவடித்தனம் செய்தனராம். இன்று அவர்கள் களத்தில் இல்லாது போயினர் என்பதற்காக வருத்தப்படுவதிலும்.. அவர்கள் திருந்த களம் பயன்பட்டிருக்கும் என்று எண்ணுவதே சரி.

களத்தை விட்டு யாரையும் யாரும் விரட்ட முடியாது. கருத்துக்களை துணிவாக நியாயத்தோட எதிர்கொள்பவர்கள் ஓடமாட்டார்கள்..! ஓட வேண்டிய அவசியமும் இல்ல. இதில் ஆண் பெண் என்ற வேறுபாட்டுக்கும் இடமில்லை..!

நெடுக்காலபோவன் பெண்களுக்கு எதிரானவர் என்ற இமேஜ் இங்கு வளர்க்கப்பட்டுள்ளதால்.... இந்தத் தலைப்பு எம்மையும் ஏதோ ஒரு வகையில் சாட முனையலாம். அந்த வகையில் எமது நிலைப்பாட்டை விளக்க வேண்டியது எமது கடமை. அதையே இங்கு தந்துள்ளோம். இதில் பலருக்கு பல கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். நியாமான கருத்து வேறுபாடுகள் வெளி வந்தால் ஏற்றுக்கொள்ளவும் நியாயமற்றவற்றை தூக்கி வீசவும் நாம் தயார்..!

நன்றியுடன் நெடுக்ஸ் தாத்தா. :(

Link to comment
Share on other sites

யாழ். பெண்கள் என்று சொல்லப்படுகின்ற கருத்தாளர்களது கருத்து என்னை பொறுத்தவரை ஆடத்தெரியாதவனுக்கு மேடை சரியில்லை எண்ட கதையா இருக்கு.

தாயக்கப்பறவை களம் பற்றி இங்கே விமர்சனம் செய்தவன் என்ற படியினால் அதையே கிங்க் மேக்கரா எடுத்து புலம்பிக்கொண்டு இருக்கும் சிலருக்கு ஒன்றை கூற ஆசைப்படுகிறேன்.

தாயக்கப்பறவைகள் களத்தைப்பற்றிய ஆக்கம் யாழில் பிரசுரமாகி இருந்த படியால்த்தான் அதனைப்பற்றிய விமர்சனம் என்னால் முன்வைக்கப்பட்டது, நிதர்சன்ம்.கொம் பற்றிய செய்திகள் இங்கே பிரசுரிக்கப்பட்ட பொழுது அதற்கு எதிராக எத்தனை பேர் விமர்சனம் செய்தார்கள்? அதற்கு நிர்வாகம் என்ன செய்தது? அதற்க்கு ஒரு நீதி இதற்கு ஒரு நீதியா? நானும் கருத்தாளன் எண்ட வகையில், யாழில் பதியப்பட்ட ஒரு கருத்துக்கு எனது விமர்சனத்தை முன்வைத்தேன், அவ் விமர்சனம் எனது பார்வைக்கு அப்படி தெரிந்தது. அதனால் அதனை முன்வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

அதைவிட, தாயகப்பறவைகள் பற்றி இங்கே விமர்சனம் செய்யப்பட்டது எப்பொழுது? ஒரு 2,3 கிழமை இருக்குமா? யாழில் பல மூத்த பெண்குடிகள் எப்பொழுது வெளியேறினார்கள்? அவர்கள் கடைசி கருத்தை எப்பொழுது முன்வைத்தார்கள்? இங்கே முன் வைப்பவர்களீன் கருத்தை பார்த்தால் (பெண்களீன்), தாயகப்பறவைகள் தான் அவர்களை ரொம்ப நோகடிச்சுட்டுது எண்ட மாதிரி இருக்கு.

அன்று நான் முன்வைத்த அந்த கருத்துக்கு எதிர்கருத்து முன்வைக்காமல் பதுங்கியவர்கள், இப்பொழுது எதற்காக தூக்கி பிடிக்கிறார்கள் என்று புரியவில்லை, கருத்தை கருத்தாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாதவர்கள், தாயகப்பறவைகள் ஒரு பொதுக்களம், அதனை பற்றி எங்கும் விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமையுண்டு, அதைப்பற்றி தப்பாக விமர்சனம் செய்ய வேண்டாம் என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை, முடிந்தால் அந்த கருத்துப்பக்கத்தில் முடிந்ததை செய்யுங்கள், (உங்களின் + கருத்தை முன் வையுங்கள், அந்த இணையத்துக்கு செல்பவர்களுக்கு புரியும் உண்மை எது பொய் எதெண்டு)

அதைவிட்டுவிட்டு தாயகப்பறவையை கொண்டுபோட்டார், சூப் வைச்சு குடிச்சுட்டார், எண்டு நொண்டி சாக்கு சொல்லி அனுதாபம் தேட முயற்சி செய்யாதீர்கள். :angry: :angry:

Link to comment
Share on other sites

தாயக்கபறவை மாத சஞ்சிகை பற்றிய பகுதிக்குள் நிகழ்ந்த கருத்தாடல்கள் எனக்கு தெரியாதுங்கோ. நான் பொதுவாக சொல்லுறீங்க என்றுதான் இத்தலைப்பின் கீழ் வந்தேன். ஆனால் முந்தி நாரதர் சும்மா பெண்களை சீண்டியவர் தான். அதுவும் ஒரு டீஜே கவிதையைக் கொண்டு வந்து போட்டு. அதில் நானும் பாதிக்கப்பட்டவள் தான். ஏன் சமீபத்தில் தூயா தொடக்கிய தலைப்பான யாழழ குழப்பாதீங்க என்ற பகுதிக்குள்ளும் நியாயத்ததக் கததக்க போய் கோபக்காரி என்ற பட்டம் வாங்கியவளும் நான் தான். ஆனால் தற்போது சாதாரணமாக யாரும் யாரையும் அதாவது பெண்களை கீழ்த்தரமாக நடத்தவில்லை. அப்படி நடத்துகின்றனர் எனில் அதை சுட்டிக்காட்டுங்க. சுட்டிக்காட்டினால் கீழ்த்தரமாக நடத்தியவர்கள் திருந்த இடமுண்டு.

யாழில் ஆண்கள் பெண்கள் தத்தம் கருத்துக்களால் மோதுங்கள் வாதாடுங்கள். இதில் யாருக்கு சம உரிமை கொடுக்கணும். யார் கொடுக்கிறார்கள்? எங்கை கொடுக்கிறார்கள்? எல்லோரும் உங்க உங்க கணணியில் இருந்து தானே எழுதுறீங்க? எல்லோருக்கும் உரிமை இருக்குது தானே யாழில் எழுதுங்கோ. யார் எழுத வேணாம் என்று சொன்னார்கள்.? உங்கள் உங்கள் உரிமையை யாருக்கும் விட்டுக்கொடுக்காதீங்க.

நெடுக் சொன்னது போல கருத்து என வந்தால் உறவுகள் தேவையில்லை, உங்களுக்கேற்ற வகையில் அது பார்வையாளர்களை எவ்வகையில் சென்றடையும் என சிந்தித்து எழுதுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகம் அழுத்தங்களுக்கு உற்படுகின்றது என்பது உண்மை தான். அதனால் தான்மீண்டும் சொல்கின்றேன். இப்படியான தலைப்புக்களைத் தொடர்ந்து அதிகரிப்பது என்பது தொடர்ந்து பிரச்சனைகளை அதிகரிக்கத் தான் வகை செய்யும்.

ஒரே குடும்பத்திற்குள் இத்தனை பிரச்சனைகள் தொடரத் தேவையில்லை. பேசாமல் தலைப்பைத் தூக்கி விடுங்கள்.

தலைப்புப் போடுகின்றவர்கள் குறைந்தபட்சம் புத்திசாலித்தனத்தோடு, தேவையில்லாத பிரச்சனைகளை அதிகரிக்குமா என்று ஊகித்துப் போடுவதே சரி. சும்மா எடுத்தோம், கவிழ்த்தோம் என சிறிய பிரச்சனையை ஆண் பெண் வாதமாக்கி அதனால் பல மனஸ்தாபங்களைத் தூண்டப் பேரிக்றது.

நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள்.

கொஞ்சநாளைக்கு உறவோசையில் திறக்கப்படும் தலைப்பையும் மட்டறுத்தல் செய்து போடுங்கள். பிரச்சனை கிளப்புவர்களால் நிறையப் பிரச்சனைகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.