Jump to content

தடுப்பூசியின் முதல் அளவை பெற்றவர்களுக்கு... கொவிட்-19 பரவல் அபாயம் குறைகிறது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தடுப்பூசி ஏற்றுமதியில் கடுமையான கட்டுப்பாடுகளை முன்வைக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்

தடுப்பூசியின் முதல் அளவை பெற்றவர்களுக்கு... கொவிட்-19 பரவல் அபாயம் குறைகிறது!

அஸ்ட்ராஸெனா மற்றும் ஃபைஸர்- பயோன்டெக் ஆகிய தடுப்பூசிகளின் முதல் அளவை பெற்றவர்களுக்கு கொரோனா பரவல் அபாயம் 38 முதல் 49 சதவீதம் குறைவதாக இங்கிலாந்து பொது சுகாதார துறை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதேபோல, தடுப்பூசி செலுத்திய 14 நாட்களுக்கு பிறகு கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு கிடைக்கிறது. அதில் வயது வித்தியாசமில்லை என்பதும் ஆய்வில் தெரியவந்திருக்கின்றன.

தடுப்பூசி ஒரு அளவு போட்டாலே வீடுகளில் 50 சதவீதம் தொற்று பரவல் குறைவது உறுதியாகி இருக்கிறது.

தடுப்பூசிதான் நம்மையும், நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் காக்கிறது என்பதற்கு இது சான்றாகிறது என இந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, தேசிய சுகாதார சேவையால் தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு விடுக்கப்படும்போது மக்கள் உடனடியாக போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய கண்டுபிடிப்பு, ஊக்கமளிப்பதாக இருந்தாலும், தொற்றைத் தவிர்க்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளான கை சுகாதாரத்தைப் பேணுதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்றவற்றை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

https://athavannews.com/2021/1213339

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு மத்தியானம் என்ரை வீட்டு டாக்குத்தர் ரெலிபோன் அடிச்சார்.  கொரோன ஊசி  வந்துட்டுது ஓடிவாரும் உடனை போடுவம் எண்டார். நானும் குளிச்சு முழுகி  ஆட்டு இறைச்சியு ம் பசுமதியையும் சேர்த்து ஒரு புடி புடிச்சிட்டு போனன்.வாசல்லை ஒரு பார்சிட்டமோல் போடச்சொல்லி தந்திச்சினம். போனவுடனை கையெழுத்து ஒண்டு வாங்கீட்டு ஃபைசர் பயோன்டெக் ஊசி போட்டு விட்டார். ஒரு அரைமணித்தியாலம் வெளியிலை இருந்து பாத்திட்டு ஒண்டுமில்லையெண்டால் வீட்டை போகச்சொன்னார். ஆறு மணித்தியாலத்தாலை இன்னொரு பரசிட்டமோல் போடட்டாம்.

இப்ப விவேக் நினைவிலை வந்து போறார். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இண்டைக்கு மத்தியானம் என்ரை வீட்டு டாக்குத்தர் ரெலிபோன் அடிச்சார்.  கொரோன ஊசி  வந்துட்டுது ஓடிவாரும் உடனை போடுவம் எண்டார். நானும் குளிச்சு முழுகி  ஆட்டு இறைச்சியு ம் பசுமதியையும் சேர்த்து ஒரு புடி புடிச்சிட்டு போனன்.வாசல்லை ஒரு பார்சிட்டமோல் போடச்சொல்லி தந்திச்சினம். போனவுடனை கையெழுத்து ஒண்டு வாங்கீட்டு ஃபைசர் பயோன்டெக் ஊசி போட்டு விட்டார். ஒரு அரைமணித்தியாலம் வெளியிலை இருந்து பாத்திட்டு ஒண்டுமில்லையெண்டால் வீட்டை போகச்சொன்னார். ஆறு மணித்தியாலத்தாலை இன்னொரு பரசிட்டமோல் போடட்டாம்.

இப்ப விவேக் நினைவிலை வந்து போறார். 😁

குமாரசாமி அண்ணை.... நீங்கள் நல்ல முடிவு எடுத்து, தடுப்பு ஊசி போட்டுள்ளீர்கள். 👍
ஜேர்மனியில்... ஊசி போட்டு, பிரச்சினை  வந்ததை... நான் கேள்விப் படவில்லை.
ஊசி போட ஆரம்பித்து, மூன்று மாதங்கள் கடந்து விட்டது என நினைக்கின்றேன்.
பெரும்பாலானவர்கள் ஆர்வத்துடனே ஊசி போடுகிறார்கள்.

பயந்து, பயந்து இருப்பதை விட... 
துணிந்து, ஊசி போடுவதே... நல்லது என்பது என் கருத்து.

நான் நேற்று, எனது குடும்ப வைத்தியரிடம் 
ஊசி போடுவதைப் பற்றி ஆலோசனை கேட்கப் போனனான்.
அவர்   "அஸ்ரா செனெகாவும்" , "ஃபைசர் பயோன்டெக்" ஊசியும் போடுவதாக சொன்னார்.

நான்...   "ஃபைசர் பயோன்டெக்" ஊசியை தெரிவு செய்துள்ளேன்.
நான்கு கிழமை... அளவில், கூப்பிடுவதாக சொன்னார்.

மனைவியின் வைத்தியர்...  "மொடெர்னா" ஊசி போடுவதாக சொல்லி,
அவருக்கு... வருகின்ற செவ்வாய்க் கிழமை ஊசி போட, நாள் கொடுத்து இருக்கின்றார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை.... நீங்கள் நல்ல முடிவு எடுத்து, தடுப்பு ஊசி போட்டுள்ளீர்கள். 👍
ஜேர்மனியில்... ஊசி போட்டு, பிரச்சினை  வந்ததை... நான் கேள்விப் படவில்லை.
ஊசி போட ஆரம்பித்து, மூன்று மாதங்கள் கடந்து விட்டது என நினைக்கின்றேன்.
பெரும்பாலானவர்கள் ஆர்வத்துடனே ஊசி போடுகிறார்கள்.

பயந்து, பயந்து இருப்பதை விட... 
துணிந்து, ஊசி போடுவதே... நல்லது என்பது என் கருத்து.

நான் நேற்று, எனது குடும்ப வைத்தியரிடம் 
ஊசி போடுவதைப் பற்றி ஆலோசனை கேட்கப் போனனான்.
அவர்   "அஸ்ரா செனெகாவும்" , "ஃபைசர் பயோன்டெக்" ஊசியும் போடுவதாக சொன்னார்.

நான்...   "ஃபைசர் பயோன்டெக்" ஊசியை தெரிவு செய்துள்ளேன்.
நான்கு கிழமை... அளவில், கூப்பிடுவதாக சொன்னார்.

மனைவியின் வைத்தியர்...  "மொடெர்னா" ஊசி போடுவதாக சொல்லி,
அவருக்கு... வருகின்ற செவ்வாய்க் கிழமை ஊசி போட, நாள் கொடுத்து இருக்கின்றார்கள். 

ஓம் சிறித்தம்பி இப்பவரைக்கும் பெரிசாய் வித்தியாசம் தெரியேல்லை.
இருந்தாலும் டாக்குத்தர் ஊசி போட்டாப்பிறகு வெளியிலை அரைமணித்தியாலம் இருந்து பாருங்கோ.....உயிரோட இருந்தால் வீட்டை போகலாம் எண்டு சும்மா பகிடிக்கு  சிரிச்சுக்கொண்டே சொன்னார் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது😎

6 hours ago, குமாரசாமி said:

வாசல்லை ஒரு பார்சிட்டமோல் போடச்சொல்லி தந்திச்சினம்.

புதிதாக உள்ளது ஏன் யேர்மனியில் கொரோன தடுப்பு ஊசி போடமுதல் பரசிற்ரமோல் போட தந்தவர்கள் பின்பும் போடசொன்னவர்கள் மற்றநாடுகளில் ஊசிபோட்டவர்கள் அப்படி சொல்லவில்லை :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

நல்லது😎

புதிதாக உள்ளது ஏன் யேர்மனியில் கொரோன தடுப்பு ஊசி போடமுதல் பரசிற்ரமோல் போட தந்தவர்கள் பின்பும் போடசொன்னவர்கள் மற்றநாடுகளில் ஊசிபோட்டவர்கள் அப்படி சொல்லவில்லை :rolleyes:

நானும் ஊசி போட்டு விட்டேன்.

பரசிற்ரமோல் தரவும் இல்லை அங்கு போட சொல்லவும் இல்லை 

ஊசி போட்டவுடன் ஒரு பதினைந்து நிமிடங்கள் அங்கே காத்திருக்கும்படியும் ஒன்றும் செய்யாது விட்டால் வீட்டுக்கு போகும் படியும் சொன்னார்கள்.

காய்ச்சல் வந்தால் மட்டும்பரசிற்ரமோல் போட சொன்னார்கள் 

எனக்கு 2 நாட்கள் காய்ச்சல் இருந்தது. 6 மணித்தியாலத்திற்கொரு முறை போட்டேன். 

 

2 hours ago, குமாரசாமி said:

ஓம் சிறித்தம்பி இப்பவரைக்கும் பெரிசாய் வித்தியாசம் தெரியேல்லை.
இருந்தாலும் டாக்குத்தர் ஊசி போட்டாப்பிறகு வெளியிலை அரைமணித்தியாலம் இருந்து பாருங்கோ.....உயிரோட இருந்தால் வீட்டை போகலாம் எண்டு சும்மா பகிடிக்கு  சிரிச்சுக்கொண்டே சொன்னார் 😁

 

உடல் சூட்டை அடிக்கடி பரிசோதித்து கொள்ளுங்கள் அண்ணா. 39க்கு மேல் காய்ச்சல் வந்தால் உடனடியாக வைத்தியசாலைக்கோ அல்லது அருகில் உள்ள பார்மசிக்கோ செல்லுங்கள். கவனம் அண்ணா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

நல்லது😎

புதிதாக உள்ளது ஏன் யேர்மனியில் கொரோன தடுப்பு ஊசி போடமுதல் பரசிற்ரமோல் போட தந்தவர்கள் பின்பும் போடசொன்னவர்கள் மற்றநாடுகளில் ஊசிபோட்டவர்கள் அப்படி சொல்லவில்லை :rolleyes:

 இங்கும் எல்லா இடங்களிலும் இல்லை. பல இடங்களில் இருக்கின்றது.

தற்சமயம் காய்ச்சல்,உடல் நோவு,தலைசுற்றல் போன்றவை வருமாயின் முன்னெச்சரிக்கைக்காக பரசிட்டமோல் எடுக்கச்சொன்னார்களோ தெரியாது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

இங்கும் எல்லா இடங்களிலும் இல்லை. பல இடங்களில் இருக்கின்றது.

பரசிற்ரமோல் பாவிக்கும் போது உங்கள்  விருப்பத்துக்குரிய நீர் குடிக்க கூடாது 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பரசிற்ரமோல் பாவிக்கும் போது உங்கள்  விருப்பத்துக்குரிய நீர் குடிக்க கூடாது 😁

பல்லை கடித்துக்கொண்டிருக்கும் என்னை வெறுப்பேற்றுகின்றீர்கள். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

பல்லை கடித்துக்கொண்டிருக்கும் என்னை வெறுப்பேற்றுகின்றீர்கள். 😁

உண்மைதான் சாமி குறைந்தது 20 நாட்களாவது உங்கள் உடம்பு ஊசி போட்டு பிறபொருள் எதிரியை உருவாக்க தேவைப்படும் காலம் 20 நாட்கள் என்கிறார்கள் நெடுக்கர் விளங்கப்படுத்தினால் நல்லது நான் என்றால் நிறைய ஹாம் ஒர்க் செய்யணும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

பல்லை கடித்துக்கொண்டிருக்கும் என்னை வெறுப்பேற்றுகின்றீர்கள். 😁

எங்களுக்கும்...இழுத்துக் கொண்டு போய்ப் போடுவினம் போலத் தான் கிடக்குது!😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

நானும் ஊசி போட்டு விட்டேன்.

பரசிற்ரமோல் தரவும் இல்லை அங்கு போட சொல்லவும் இல்லை 

ஊசி போட்டவுடன் ஒரு பதினைந்து நிமிடங்கள் அங்கே காத்திருக்கும்படியும் ஒன்றும் செய்யாது விட்டால் வீட்டுக்கு போகும் படியும் சொன்னார்கள்.

காய்ச்சல் வந்தால் மட்டும்பரசிற்ரமோல் போட சொன்னார்கள் 

எனக்கு 2 நாட்கள் காய்ச்சல் இருந்தது. 6 மணித்தியாலத்திற்கொரு முறை போட்டேன். 

 

 

உடல் சூட்டை அடிக்கடி பரிசோதித்து கொள்ளுங்கள் அண்ணா. 39க்கு மேல் காய்ச்சல் வந்தால் உடனடியாக வைத்தியசாலைக்கோ அல்லது அருகில் உள்ள பார்மசிக்கோ செல்லுங்கள். கவனம் அண்ணா. 

விசுகு... நீங்கள் போட்ட, ஊசியின் பெயர் என்ன?

சிலருக்கு.... ஊசி போட்ட பின், காய்ச்சல் வர சந்தர்ப்பங்கள் உள்ளது என்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

எங்களுக்கும்...இழுத்துக் கொண்டு போய்ப் போடுவினம் போலத் தான் கிடக்குது!😉

கனடாவில்.... 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஊசி போட அனுமதித்து விட்டார்கள்.

அமெரிக்கா... இது தொடர்பாக, வருகின்ற மாதம் முடிவெடுக்க உள்ளது.

ஊசி போடாமல் இருந்தால்.... விமானப் பயணங்கள் மேற்கொள்ளவும், பொது போக்குவரத்தை பயன் படுத்தவும் புதிய நடைமுறைகள் வர உள்ளதாக தெரிவிக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ரெண்டாவது ஊசி வாற சனிக்கிழமை, ரெண்டு ஊசி போட்ட ஆக்கள் குதிரை மாதிரி துள்ளித்திரியினமாம். உண்மையோ சாமியார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நந்தன் said:

எனக்கு ரெண்டாவது ஊசி வாற சனிக்கிழமை, ரெண்டு ஊசி போட்ட ஆக்கள் குதிரை மாதிரி துள்ளித்திரியினமாம். உண்மையோ சாமியார்

நான் இரண்டாவது ஊசி போட்டு 2 மாதமாச்சு.

இப்பவும் சாரைப்பாம்பு மாதிரி அரைஞ்சு கொண்டு தான் திரியிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

உண்மைதான் சாமி குறைந்தது 20 நாட்களாவது உங்கள் உடம்பு ஊசி போட்டு பிறபொருள் எதிரியை உருவாக்க தேவைப்படும் காலம் 20 நாட்கள் என்கிறார்கள் நெடுக்கர் விளங்கப்படுத்தினால் நல்லது நான் என்றால் நிறைய ஹாம் ஒர்க் செய்யணும் .

அப்ப 20 நாளுக்கு தங்கத்தண்ணி நாக்கிலை படப்படாது எண்டுறியள்? 😮

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

உண்மைதான் சாமி குறைந்தது 20 நாட்களாவது உங்கள் உடம்பு ஊசி போட்டு பிறபொருள் எதிரியை உருவாக்க தேவைப்படும் காலம் 20 நாட்கள் என்கிறார்கள் நெடுக்கர் விளங்கப்படுத்தினால் நல்லது நான் என்றால் நிறைய ஹாம் ஒர்க் செய்யணும் .

 

13 minutes ago, குமாரசாமி said:

அப்ப 20 நாளுக்கு தங்கத்தண்ணி நாக்கிலை படப்படாது எண்டுறியள்? 😮

பெருமாள், பயப்படுத்திப் போட்டார். 😮

ஊசி,  போடவா... விடவா... குமாரசாமி அண்ணை.  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புங்கையூரன் said:

எங்களுக்கும்...இழுத்துக் கொண்டு போய்ப் போடுவினம் போலத் தான் கிடக்குது!😉

ஊரோடை சேர்ந்து ஓட வேண்டியது தான் 😁

Link to comment
Share on other sites

20 hours ago, குமாரசாமி said:

இண்டைக்கு மத்தியானம் என்ரை வீட்டு டாக்குத்தர் ரெலிபோன் அடிச்சார்.  கொரோன ஊசி  வந்துட்டுது ஓடிவாரும் உடனை போடுவம் எண்டார். நானும் குளிச்சு முழுகி  ஆட்டு இறைச்சியு ம் பசுமதியையும் சேர்த்து ஒரு புடி புடிச்சிட்டு போனன்.வாசல்லை ஒரு பார்சிட்டமோல் போடச்சொல்லி தந்திச்சினம். போனவுடனை கையெழுத்து ஒண்டு வாங்கீட்டு ஃபைசர் பயோன்டெக் ஊசி போட்டு விட்டார். ஒரு அரைமணித்தியாலம் வெளியிலை இருந்து பாத்திட்டு ஒண்டுமில்லையெண்டால் வீட்டை போகச்சொன்னார். ஆறு மணித்தியாலத்தாலை இன்னொரு பரசிட்டமோல் போடட்டாம்.

இப்ப விவேக் நினைவிலை வந்து போறார். 😁

பிரான்சில் ஃபைசர் ஊசியைக் குடும்ப வைத்தியர் போட மாட்டார். -80 பாகை குளிரில் மருந்தை வைத்திருக்க வசதி இல்லை. பெரிய வைத்திய சாலைகளில் மட்டும்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நந்தன் said:

எனக்கு ரெண்டாவது ஊசி வாற சனிக்கிழமை, ரெண்டு ஊசி போட்ட ஆக்கள் குதிரை மாதிரி துள்ளித்திரியினமாம். உண்மையோ சாமியார்

இப்ப நான் நிக்கிற லெவல் இதுதான்..

Cachorro hund tiere GIF - Find on GIFER

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நந்தன் said:

எனக்கு ரெண்டாவது ஊசி வாற சனிக்கிழமை, ரெண்டு ஊசி போட்ட ஆக்கள் குதிரை மாதிரி துள்ளித்திரியினமாம். உண்மையோ சாமியார்

உங்கடை அஷ்டா சினேகாவோ 😄 குளிர்காலத்துக்கு என்று இப்பவே இரண்டு பூஸ்டர் ஓடர் பண்ணியுள்ளார்கள் இங்கிலாந்தில் https://coronavirus.data.gov.uk/ தினமும் கவனிக்கிறேன் லொக்டவுன் எடுத்தபின் இன்னும் குறைந்து கொண்டு போகின்றது பைசருக்கும் பூஸ்டர் வரும் என்கிறார்கள் .

கொரனோ வும் ஊசியுமாகத்தான் எதிர்காலத்தில் திரியபோரம்  போல் உள்ளது 

Link to comment
Share on other sites

9 hours ago, நந்தன் said:

எனக்கு ரெண்டாவது ஊசி வாற சனிக்கிழமை, ரெண்டு ஊசி போட்ட ஆக்கள் குதிரை மாதிரி துள்ளித்திரியினமாம். உண்மையோ சாமியார்

ஃபைசர் ஊசியையும் குளிசையையும் மாத்தி எடுத்தினமோ ?  😃

img_1348_2.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழ் சிறி said:

பெருமாள், பயப்படுத்திப் போட்டார். 😮

ஊசி,  போடவா... விடவா... குமாரசாமி அண்ணை.  

பயப்படுத்தவில்லை  உங்கள் குடும்ப வைத்தியரிடம் நேரே ஆலோசனை கேப்பது நல்லது .

 

நாங்கள் ஆலோசனையென்று ஆளை முடிகிறதுக்கு தான் இலவச ஆலோசனைகள் வரும் .😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, இணையவன் said:

ஃபைசர் ஊசியையும் குளிசையையும் மாத்தி எடுத்தினமோ ?  😃

img_1348_2.jpg

சிரிப்பு.... தாங்க முடியவில்லை. 😁 😂 🤣

3 minutes ago, பெருமாள் said:

பயப்படுத்தவில்லை  உங்கள் குடும்ப வைத்தியரிடம் நேரே ஆலோசனை கேப்பது நல்லது .

 

நாங்கள் ஆலோசனையென்று ஆளை முடிகிறதுக்கு தான் இலவச ஆலோசனைகள் வரும் .😄

ஒருக்கால்... வைத்தியரிடம் இதைப் பற்றி வடிவாக கேட்க வேணும்.

ஏனென்றால்... 20 நாளைக்கு, ஜேர்மன்காரன் “பியர்” குடிக்காமல் இருந்தால்தான்... செத்துப் போவான். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, இணையவன் said:

ஃபைசர் ஊசியையும் குளிசையையும் மாத்தி எடுத்தினமோ ?  😃

img_1348_2.jpg

இத்தால் அறியத்தரப்படுவது என்னவென்றால்

எங்கள் இணையவன் வயசுக்கு வந்து விட்டார் என்பதையும் அவர் எமது கோவணம் கட்டிய குழுவில் இணைக்கப்பட தகுதி பெறுகின்றார் அறியத்தருகின்றோம். 😆😆😆

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.