Jump to content

தடுப்பூசியின் முதல் அளவை பெற்றவர்களுக்கு... கொவிட்-19 பரவல் அபாயம் குறைகிறது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

ஃபைசர் ஊசியையும் குளிசையையும் மாத்தி எடுத்தினமோ ?  😃

img_1348_2.jpg

வீட்டிலயும் இடவசதி இல்ல, அதுதான் யோசிக்க.😁

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

இண்டைக்கு மத்தியானம் என்ரை வீட்டு டாக்குத்தர் ரெலிபோன் அடிச்சார்.  கொரோன ஊசி  வந்துட்டுது ஓடிவாரும் உடனை போடுவம் எண்டார். நானும் குளிச்சு முழுகி  ஆட்டு இறைச்சியு ம் பசுமதியையும் சேர்த்து ஒரு புடி புடிச்சிட்டு போனன்.வாசல்லை ஒரு பார்சிட்டமோல் போடச்சொல்லி தந்திச்சினம். போனவுடனை கையெழுத்து ஒண்டு வாங்கீட்டு ஃபைசர் பயோன்டெக் ஊசி போட்டு விட்டார். ஒரு அரைமணித்தியாலம் வெளியிலை இருந்து பாத்திட்டு ஒண்டுமில்லையெண்டால் வீட்டை போகச்சொன்னார். ஆறு மணித்தியாலத்தாலை இன்னொரு பரசிட்டமோல் போடட்டாம்.

இப்ப விவேக் நினைவிலை வந்து போறார். 😁

எனக்கு முதலாவதுஊசிநாலு கிழமைக்கு முதல் போட்டது அஸ்ரா செனிக்கா தான். இரண்டுநாள் காய்ச்சலும் தடிமனும் இருந்தது. பிறகு ஒண்டுமே இல்லை. ஆனால் உந்த பரசிட்டமோல் எல்லாம் போடத் தரேலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

நான் இரண்டாவது ஊசி போட்டு 2 மாதமாச்சு.

இப்பவும் சாரைப்பாம்பு மாதிரி அரைஞ்சு கொண்டு தான் திரியிறன்.

இப்ப என்ன்? குதிரை மாதிரி துள்ளிக்குதிக்க வேணும் அவ்வளவுதானே? 😎

இப்ப வேலைக்கு போறன்.....வேலையாலை வந்து பதில் சொல்லுறன்.👨🏽‍🌾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, இணையவன் said:

ஃபைசர் ஊசியையும் குளிசையையும் மாத்தி எடுத்தினமோ ?  😃

img_1348_2.jpg

 

இந்தக் குளிசையை... என்னத்துக்கு பாவிக்கிறதெண்டு,  ஊர்க்கிழவி  கேக்குது. 🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

விசுகு... நீங்கள் போட்ட, ஊசியின் பெயர் என்ன?

சிலருக்கு.... ஊசி போட்ட பின், காய்ச்சல் வர சந்தர்ப்பங்கள் உள்ளது என்கிறார்கள்.

நான் போட்டது அஸ்ராசெனிகா 

பிராஞ்சில் 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு அஸ்ராசெனிகா தான் போடுகிறார்கள். அரசால் பாதுகாப்பான என சிபாரிசு செய்யப்பட்டது.

Link to comment
Share on other sites

On 5/5/2021 at 15:59, குமாரசாமி said:

இப்ப விவேக் நினைவிலை வந்து போறார். 😁

இப்ப விவேக் நினைவு வரேல்ல தானே 😀

3 hours ago, குமாரசாமி said:

இப்ப என்ன்? குதிரை மாதிரி துள்ளிக்குதிக்க வேணும் அவ்வளவுதானே? 😎

இப்ப வேலைக்கு போறன்.....வேலையாலை வந்து பதில் சொல்லுறன்.👨🏽‍🌾

வேலை முடிச்சு வரேக்க குதிரை மாதிரி வாறதுக்கும் ஒரு வேலை கிடைச்சா நல்லது தான் 🤭

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

நான் போட்டது அஸ்ராசெனிகா 

பிராஞ்சில் 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு அஸ்ராசெனிகா தான் போடுகிறார்கள். அரசால் பாதுகாப்பான என சிபாரிசு செய்யப்பட்டது.

உந்த ஊடகங்கள் தான் எல்லாத்தையும் குழப்பியடிச்சது. இல்லாட்டில் சனம் தங்கடைபாட்டிலை எந்த ஊசியை எண்டாலும் போட்டுக்கொண்டு பேசாமல் இருந்திருக்குங்கள். 

4 hours ago, shanthy said:

இப்ப விவேக் நினைவு வரேல்ல தானே 😀

மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் எண்ட மாதிரி  முதுகிலை சாடையாய் சொறிஞ்சாலும் விவேக் பக்கெண்டு வாறார்...😎

 

4 hours ago, shanthy said:

வேலை முடிச்சு வரேக்க குதிரை மாதிரி வாறதுக்கும் ஒரு வேலை கிடைச்சா நல்லது தான் 🤭

நானொரு ரியூப் லைட்.....கொஞ்சம் விளக்கமாய் எழுதினால் நல்லாயிருக்கும் 🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

நான் போட்டது அஸ்ராசெனிகா 

பிராஞ்சில் 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு அஸ்ராசெனிகா தான் போடுகிறார்கள். அரசால் பாதுகாப்பான என சிபாரிசு செய்யப்பட்டது.

எங்களுக்கு ஐம்பது வயசு...!
அளவுக்கதிகமா ஓடர் பண்ணிப் போட்டினம்!
இப்ப இரத்தம் உறையுது எண்டதோட சனம் பின்னடிக்குது!

மருந்து மிஞ்சிப் போச்சுது.....!😇

ஈழப்போர் நடந்த காலத்தில...பார்டியளுக்குப் போனால்,  ஊரில் இருப்பவர்களை நினைத்து.....ஒரு குற்ற உணர்வு வருமே? அது தான் இப்போதும் வருகின்றது!😙

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, புங்கையூரன் said:

எங்களுக்கு ஐம்பது வயசு...!
அளவுக்கதிகமா ஓடர் பண்ணிப் போட்டினம்!
இப்ப இரத்தம் உறையுது எண்டதோட சனம் பின்னடிக்குது!

மருந்து மிஞ்சிப் போச்சுது.....!😇

ஈழப்போர் நடந்த காலத்தில...பார்டியளுக்குப் போனால்,  ஊரில் இருப்பவர்களை நினைத்து.....ஒரு குற்ற உணர்வு வருமே? அது தான் இப்போதும் வருகின்றது!😙

அரசு நினைத்தால்.... பின் அடித்தவர்கள் கதை வேறாகவே இருக்கும்.

ஊசி அடிக்காத ஆக்கள், அடுத்தவர்கள் பாதுகாப்புக்காக பொது வாகனங்களில் பிரயாணம் செய்ய முடியாது, விமானம் எற முடியாது. வேலைக்கு போக வர முடியாது. அரச அலுவலங்களுக்கு போக வர முடியாது, வீட்டில் இருக்க வேண்டியதுதான் என்றால், கதை கந்தல்.

7 hours ago, தமிழ் சிறி said:

 

இந்தக் குளிசையை... என்னத்துக்கு பாவிக்கிறதெண்டு,  ஊர்க்கிழவி  கேக்குது. 🤣

 

பாவித்தால், ஊர்க்கிழவி.... ஹீ..ஹீ ... ஊர்க்குமரி ஆவிடுவா எண்டு சொல்லி இருப்பியளே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

அரசு நினைத்தால்.... பின் அடித்தவர்கள் கதை வேறாகவே இருக்கும்.

ஊசி அடிக்காத ஆக்கள், அடுத்தவர்கள் பாதுகாப்புக்காக பொது வாகனங்களில் பிரயாணம் செய்ய முடியாது, விமானம் எற முடியாது. வேலைக்கு போக வர முடியாது. அரச அலுவலங்களுக்கு போக வர முடியாது, வீட்டில் இருக்க வேண்டியதுதான் என்றால், கதை கந்தல்.

இனிமேல் அதுதான் வரப்போகுது. உங்களுக்கு பாஸ்போட் இருக்கோ இல்லையோ வேறை விசயம். ஆனால் கொரோனாவுக்கு ஊசி போட்ட  அடையாள அட்டை கட்டாயம் வேணும்.

 ஒவ்வொருத்தர்ரை பாஸ்போட்டிலையும் கொரோனாவுக்கு ஊசி போட்ட ஸ்டிக்கர் ஒட்டுற சிஸ்டம் வரப்போகுது எண்டொரு கதையும் உலாவுது.

ஜேர்மனியிலை இரண்டு தடுப்பூசியும் போட்ட ஆக்களுக்கு கன சுதந்திரம் வரப்போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2021 at 02:20, தமிழ் சிறி said:

கனடாவில்.... 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஊசி போட அனுமதித்து விட்டார்கள்.

அமெரிக்கா... இது தொடர்பாக, வருகின்ற மாதம் முடிவெடுக்க உள்ளது.

கனடாவுக்கு அடுத்து, சுவிற்சலாந்திலும்.... 
16´ வயதுக்கு மேற் பட்டவர்களுக்கு,  தடுப்பூசி  போட அனுமதித்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2021 at 00:10, புங்கையூரன் said:

எங்களுக்கு ஐம்பது வயசு...!
அளவுக்கதிகமா ஓடர் பண்ணிப் போட்டினம்!
இப்ப இரத்தம் உறையுது எண்டதோட சனம் பின்னடிக்குது!

மருந்து மிஞ்சிப் போச்சுது.....!😇

நம்ம சிம்ரன் அவர்களும் ஊசி போட்டுவிட்டார். இன்னுமா யோசிக்கின்றீர்கள்..🤣

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நம்ம சிம்ரன் அவர்களும் ஊசி போட்டுவிட்டார். இன்னுமா யோசிக்கின்றீர்கள்..🤣

Bild

மெக்சிக்கோ, தென்னாபிரிக்கா, இந்தியா, ஈரான்,நைஜீரியா, பெரிய பிரித்தானியா போன்ற நாடுகளிலுள்ள எல்லாக் கொரோனாவையும் கொல்லுற மாதிரி ஒரு வக்சீன் வரும் வரையும் பாத்துக் கொண்டிருக்கிறன்!😙

சிம்ரானுக்கு ஏதும் நடந்தால்....உதவிக்கு ஓடி வர ஆயிரம் பேர் வருவினம்!

நமக்கு அப்படியா?  அது தான் யோசிக்கிறன்...!😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் சற்று முன்தான் "பைசர் " தடுப்பூசி முதலாவது போட்டுவிட்டு வந்திருக்கிறேன்.இனி விமானத்தில் பயணம் செய்யலாம் என்று நினைக்கிறன்.......2 வது போடாதபடியால் பாதி வழியில் இறக்கி விடுவார்களோ தெரியாது........!   😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

நானும் சற்று முன்தான் "பைசர் " தடுப்பூசி முதலாவது போட்டுவிட்டு வந்திருக்கிறேன்.இனி விமானத்தில் பயணம் செய்யலாம் என்று நினைக்கிறன்.......2 வது போடாதபடியால் பாதி வழியில் இறக்கி விடுவார்களோ தெரியாது........!   😎

ஒரு ஊசியும் போடாத ஆக்களையும் ஏத்திக்கொண்டு போறாங்களாம்.:cool:
அது சரி கும்பமேளா திருவிழா முடிஞ்சுதெல்லோ......😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, புங்கையூரன் said:

 

சிம்ரானுக்கு ஏதும் நடந்தால்....உதவிக்கு ஓடி வர ஆயிரம் பேர் வருவினம்!

நமக்கு அப்படியா?  அது தான் யோசிக்கிறன்...!😇

சிம்ரன் ஓடி வருவா... சொல்லி விடுறன்... பயப்படாம போடுங்கோ... 😁

On 6/5/2021 at 13:07, நந்தன் said:

வீட்டிலயும் இடவசதி இல்ல, அதுதான் யோசிக்க.😁

இதுலயும் டூப்பிளிகேட் வருதாம் எண்டு சொல்லுகினமே...உண்மையே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2021 at 00:10, புங்கையூரன் said:

எங்களுக்கு ஐம்பது வயசு...!
அளவுக்கதிகமா ஓடர் பண்ணிப் போட்டினம்!
இப்ப இரத்தம் உறையுது எண்டதோட சனம் பின்னடிக்குது!

மருந்து மிஞ்சிப் போச்சுது.....!😇

ஈழப்போர் நடந்த காலத்தில...பார்டியளுக்குப் போனால்,  ஊரில் இருப்பவர்களை நினைத்து.....ஒரு குற்ற உணர்வு வருமே? அது தான் இப்போதும் வருகின்றது!😙

சரி தம்பி 😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

சரி தம்பி 😍

விசுகு அண்ணா,நான் சொன்னது எனக்கு ஐம்பது வயசு என்று இல்லை! ஐம்பது வயசுக்கு மேல போன ( அதாவது வட்டுக்குள்ள வயசு போன ஆட்களுக்கு), அஸ்ரா செனிக்கா மட்டும் தான் போட முடியும்! 😍

Link to comment
Share on other sites

On 6/5/2021 at 23:23, குமாரசாமி said:

 

நானொரு ரியூப் லைட்.....கொஞ்சம் விளக்கமாய் எழுதினால் நல்லாயிருக்கும் 🙃

அதாகப்பட்டது வேலைக்கு செல்லும் போது வேலை செய்யும் போது குதிரை வேகத்தில் வேலை செய்வோம. வீட்டுக்கு வரேக்க குதிரை போல வரமாட்டமெல்லோ. அதை சொன்னமாக்கும்🤭

9 hours ago, புங்கையூரன் said:

விசுகு அண்ணா,நான் சொன்னது எனக்கு ஐம்பது வயசு என்று இல்லை! ஐம்பது வயசுக்கு மேல போன ( அதாவது வட்டுக்குள்ள வயசு போன ஆட்களுக்கு), அஸ்ரா செனிக்கா மட்டும் தான் போட முடியும்! 😍

இது உங்களுக்கே அதிகப்பயா தெரியேல்ல 😀

12 hours ago, Nathamuni said:

சிம்ரன் ஓடி வருவா... சொல்லி விடுறன்... பயப்படாம போடுங்கோ... 😁

உங்க கனபேர் உங்கள் சொல்லை நம்பி போகப்போயினம். பின் விளைவுகளுக்கு நீங்கள் தான் பொறுப்பு 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, shanthy said:

உங்க கனபேர் உங்கள் சொல்லை நம்பி போகப்போயினம். பின் விளைவுகளுக்கு நீங்கள் தான் பொறுப்பு 🤣

சிம்ரன் யாரு எண்டு நினைக்கிறீங்கோ... நம்ம பிரண்டு தான்... மாதாமாதம் மொளகாய் தூள் அரைப்பிச்சு அனுப்பிறா எண்டால் பாருங்கோவன்...

அதாலை தான் சொன்னனான்.... புங்கையருக்கு ஏதும் தேவை எண்டால், ஆளையே அனுப்பி வைக்கலாம்.

Link to comment
Share on other sites

36 minutes ago, Nathamuni said:

சிம்ரன் யாரு எண்டு நினைக்கிறீங்கோ... நம்ம பிரண்டு தான்... மாதாமாதம் மொளகாய் தூள் அரைப்பிச்சு அனுப்பிறா எண்டால் பாருங்கோவன்...

அதாலை தான் சொன்னனான்.... புங்கையருக்கு ஏதும் தேவை எண்டால், ஆளையே அனுப்பி வைக்கலாம்.

புங்கையூரனை அனுப்பத்தான் போறியள் போல🤣

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

சிம்ரன் யாரு எண்டு நினைக்கிறீங்கோ... நம்ம பிரண்டு தான்... மாதாமாதம் மொளகாய் தூள் அரைப்பிச்சு அனுப்பிறா எண்டால் பாருங்கோவன்...

உந்த விசயம் சிம்ரனுக்கு தெரியுமா 🤭😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, shanthy said:

உந்த விசயம் சிம்ரனுக்கு தெரியுமா 🤭😀

எல்லோருக்கும் தெரியும்.... உங்களுக்கு மட்டும் இப்பதான் தெரியுது...

உங்கை படங்கள் எல்லாம் போட்டனே... பார்க்கவில்லையோ? 😜

Link to comment
Share on other sites

2 hours ago, Nathamuni said:

எல்லோருக்கும் தெரியும்.... உங்களுக்கு மட்டும் இப்பதான் தெரியுது...

உங்கை படங்கள் எல்லாம் போட்டனே... பார்க்கவில்லையோ? 😜

நாதமுனியின் முகமே எனக்கு தெரியாது. இந்த லட்சணத்தில நாதமுனி சிம்ரன் கூட்டணி படத்தை பார்த்து எனக்கு விளங்கி.😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, shanthy said:

நாதமுனியின் முகமே எனக்கு தெரியாது. இந்த லட்சணத்தில நாதமுனி சிம்ரன் கூட்டணி படத்தை பார்த்து எனக்கு விளங்கி.😊

சாந்தி,  நாதமுனியின்.... படம், ஒன்று  என்னிடம் உள்ளது. 
ஈ - மெயிலில், அனுப்பி விடவா..... 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுக்கெல்லாம் ஏன் இப்படி வளைஞ்சு முட்டு கொடுக்க வேண்டும். உலகில் எந்த நாட்டில் தான் களவு இல்லை. அதுவும் டூரிஸ்ட் போகும் நாடுகளில் - இலண்டனில் இல்லாத களவா? திப்பு சுல்தானின் வாளை களவெடுத்து, அதை பார்க்க டிக்கெட் போட்டு காசு பார்க்கும் இராஜ குடும்பத்துக்கு வாழ்க்கை பூரா விசுவாசமாய் இருப்பேன் என சத்தியம் செய்து பிராஜா உரிமை பெற்ற நாம், 1000 ரூபா கொத்தை 1900 ரூபாவுக்கு வித்தமைக்கு ஏன் இவ்வளவு கடுப்பாகிறோம்? நடந்தது இலங்கை என்பதால் மட்டும்? 🤣. இலங்கை மேல் உள்ள ஆத்திரத்தில். இது உங்களுக்கு ஒரு மன நிம்மதியை தராலாம் - வேறு எதுவும் ஆகாது. சிறிலங்லாவை, சொறிலங்கா, இந்தியாவை, ஹிந்தியா என அழைப்பது போல் உங்கள் போன்றோரின் நியாயமான கோவத்தின், சிறுபிள்ளைத்தனமான வெளிப்பாடு இது என்பது வாசிப்போர் அனைவருக்கும் தெரியும். ஆனால் சிங்களவன் கெட்டிக்காரன் - அளுத்கடே நானா மீது வழக்கு பாய்ந்து விட்டது. களுத்தற ஆள் காசை திரும்பி கொடுத்தபடியால் தப்ப கூடும். இதை வைத்தே தாம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பில் கவனம் என பலத்த பிராசாரம் ஆரம்பமாகி விட்டது. புறக்கணி சிறிலங்கா என கூவி விட்டு கள்ளமாய் நெக்டோ இறக்கிய வியாபாரிகள் அல்லவா நாம்? சிறுபிள்ளைதனமாக எழுத, கோவிக்க, கைகை பிசைய சக தமிழன் மீது சேறடிக்க மட்டுமே எம்மால் முடியும்.
    • அகவை என்பது ஒரு எண்ணிக்கை  அவ்வளவுதான்!   முக்கியம் வேண்டியது  ஆரோக்கியமும் வலிமையையும்  நல்ல சிந்தனையும் கருத்தாடலும்    அது தான் என் எண்ணம் அது இருக்கும் மட்டும் நீ இளைஞனே    ஆகவே நான் மௌனமாகிறேன் 
    • இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்) இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம்.   நாளை நாடு திரும்புகிறோம்... இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன். நன்றி.
    • மின்னம்பலம்  சர்வே : விழுப்புரம் விஸ்வரூபம் எடுப்பது யார்? Apr 15, 2024 21:54PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விழுப்புரம்(தனி) தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்ரவிகுமார் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் முரளிசங்கர் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் இயக்குநர் மு.களஞ்சியம் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  விழுப்புரம்,  திண்டிவனம்(தனி) ,  விக்கிரவாண்டி,  திருக்கோயிலூர்,  உளுந்தூர்பேட்டை மற்றும் வானூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிகுமார் 42% வாக்குகளைப் பெற்று மீண்டும்இரண்டாவது முறையாக விழுப்புரம் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் 34% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்.  பாமக வேட்பாளர் முரளிசங்கர் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயக்குநர் களஞ்சியம் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விழுப்புரம் தொகுதியில் இந்த முறையும் ரவிகுமார் வெற்றி பெற்று விடுதலை சிறுத்தைகளின்கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-vilupuram-constituency-who-wins-the-race/   மின்னம்பலம் மெகா சர்வே: நாகப்பட்டினம்… வெல்லப் போவது யார்? Apr 16, 2024 08:32AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் நாகப்பட்டினம் (தனி) தொகுதியில்  திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)  சார்பில் வை.செல்வராஜ் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கர் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்த்திகா போட்டியிடுகிறார். சிபிஐ, அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில்,  இத்தொகுதி மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நாகப்பட்டினம்  நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருத்துறைப்பூண்டி (தனி),  நாகப்பட்டினம்,  வேதாரண்யம்,  திருவாரூர்,  நன்னிலம் மற்றும் கீழ்வேளூர் (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் 49% வாக்குகளைப் பெற்று நாகப்பட்டினம் தொகுதியில் முன்னிலை பெறுகிறார்.  அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்த்திகா 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, நாகப்பட்டினம் தொகுதியில் இந்த முறை வை.செல்வராஜ் வெற்றி பெற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpi-candidate-vai-selvaraj-will-win-with-49-percent-votes-in-nagapattinam-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: சேலம்… வெற்றிக் கனி பறிப்பது யார்? Apr 16, 2024 10:34AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் செல்வகணபதி களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் விக்னேஷ் போட்டியிடுகிறார். பாமக சார்பில் அண்ணாதுரை போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின்சார்பில் க.மனோஜ்குமார் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சேலம் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சேலம் (மேற்கு),  சேலம் (வடக்கு),  சேலம் (தெற்கு),  எடப்பாடி,  வீரபாண்டி மற்றும் ஓமலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் செல்வகணபதி 45% வாக்குகளைப் பெற்று சேலம் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் அண்ணாதுரை 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.மனோஜ்குமார் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சேலம் தொகுதியில் இந்த முறை செல்வகணபதி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-selvaganapathy-will-win-with-45-percent-votes-in-salem-parliamentary-constituency/   மின்னம்பலம் மெகா சர்வே: தூத்துக்குடி… யார் கப்பலில் வெற்றிக் கொடி? Apr 16, 2024 13:55PM IST  2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? தூத்துக்குடி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ரொவினா ரூத் ஜேன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தூத்துக்குடி, விளாத்திக்குளம், திருச்செந்தூர்,  ஒட்டப்பிடாரம்,  கோவில்பட்டி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் கனிமொழி 50% வாக்குகளைப் பெற்று மீண்டும் தூத்துக்குடி தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தூத்துக்குடி தொகுதியில் இந்த முறை கனிமொழி வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-kanimozhi-won-tuticorin-loksabha-constituency-in-minnambalam-mega-survey/   மின்னம்பலம் மெகா சர்வே : விருதுநகர் Apr 16, 2024 14:46PM IST   2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணிக்கம் தாகூர் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சி.கவுசிக் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்குஎன்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பரங்குன்றம்,  திருமங்கலம்,  சாத்தூர்,  சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் பகுதிகளில் நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 45% வாக்குகளைப் பெற்று மீண்டும் விருதுநகர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சி.கவுசிக் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விருதுநகர் தொகுதியில் இந்த முறையும் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்று மீண்டும் காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-virudhunagar-constituency-result-congress-manickam-thakoor-wins-dmdk-came-second-place/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.