Jump to content

ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக விலகும் அமெரிக்கத் துருப்புகள்: அங்கே அவர்கள் கொடுத்த விலை என்ன? – தமிழில் ஜெயந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக விலகும் அமெரிக்கத் துருப்புகள்: அங்கே அவர்கள் கொடுத்த விலை என்ன? – தமிழில் ஜெயந்திரன்

us-troops-afghanistan-ge_hpMain_20210413
 6 Views

அமெரிக்காவில் நடத்தப்பட்ட செப்ரெம்பர் 11 தாக்குதலின் 20வது நினைவு தினத்தில் ஆப்கானிஸ்தானில் பணிபுரிகின்ற அமெரிக்க இராணுவத்தினர் அனைவரும் நாடுதிரும்பியிருப்பார்கள் என அமெரிக்க அதிபர் பைடன் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருக்கிறார். ஆப்கானிஸ்தானில் பணிபுரிகின்ற கிட்டத்தட்ட 2500 இராணுவத்தினரின் தற்போதைய நிலை தொடர்பாகவும் அவர்களின் கடந்த இருபது வருடப்பணி தொடர்பாகவும் இக்கட்டுரை ஆராய்கிறது.

ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்கத் துருப்புகள்

ஆப்கான் நாட்டின் பாதுகாப்புப்படையினருக்குத் துணையாக இருந்து, அவர்களுக்கு அறிவுரை கூறி உதவும் பணியில், கிட்டத்தட்ட 2500 அமெரிக்க இராணுவத்தினர் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என்று பென்ரகன் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்திருக்கிறது. பயிற்சியளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுள் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடும் படையினரின் எண்ணிக்கை உள்ளடக்கப்படாததால் அங்குள்ள மொத்த இராணுவத்தினரின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஆப்கான் படையினருக்குப் பயிற்சியளிக்கும் பிறிதொரு பணியில் நேற்றோ (NATO) அமைப்பைச் சேர்ந்த 7000 மேலதிக துருப்புகளும் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருக்கிறார்கள். அமெரிக்கத் துருப்புகள் அனைவருமே மீள அழைக்கப்படவிருக்கும் இத்தருணத்தில் இப்படையினரைத் தொடர்ந்தும் ஆப்கானிஸ்தானில் தங்க வைப்பது தொடர்பாக நேற்றோ அமைப்பு முடிவு செய்ய வேண்டியிருக்கும்.

கிழக்கு ஆப்கானிஸ்தானில் 2020 பெப்ரவரி 8 இல் இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்ட பின்னர் அங்கே வேறு எந்த அமெரிக்க இராணுவமும் கொல்லப்படவில்லை.

அந்த இராணுவத்தினர் கொல்லப்பட்ட சில வாரங்களில், ட்ரம்பின் நிர்வாகம் தலிபான் போராளிகளுடன் ஒரு அமைதி ஒப்பந்தத்தை மேற்கொண்டிருந்தது. அமெரிக்கப் படையினரைத் தாக்குவதை தலிபான்கள் நிறுத்தும் பட்சத்தில், இவ்வருடம் மே மாதம் 1ம் திகதிக்குள் அனைத்து அமெரிக்கப் படையினரும் விலக்கப்படுவார்கள் என்று அந்த ஒப்பந்தம் குறிப்பிட்டிருந்தது.

அந்நேரத்திலிருந்து அமெரிக்கத் துருப்புகள் மேல் தாக்குதலைத் தொடுப்பதை தலிபான்கள் நிறுத்தியிருந்தார்கள். ஆனால் அதே வேளையில் ஆப்கான் படையினருக்கும் அப்பாவிப் பொதுமக்களுக்கும் எதிரான தாக்குதல்களை தலிபான்கள் அதிகரித்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் செப்ரெம்பர் 11இல் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பழிவாங்குவதற்காக அல்குவைதா இலக்குகளின் மீது மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குதல்களுடன் 2001, ஒக்ரோபர் 7 இல், ஆப்கானில் அமெரிக்க யுத்தம் தொடங்கப்பட்டது. தமது பயங்கரவாதத் தாக்குதல்களை அல்குவைதா முன்னெடுக்கக்கூடிய வகையில் ஒரு பாதுகாப்புத் தளத்தை தலிபான் அரசு ஆப்கானிஸ்தானில் அவர்களுக்கு வழங்கியிருந்தது.

ஒரு சிறிய எண்ணிக்கையைக் கொண்ட விசேட தாக்குதல் படைகள் (special operations forces) வடக்குக் கூட்டணிக்கு உதவ, அவர்கள் வெற்றிகரமாக தலிபான் அரசை ஆட்சியிலிருந்து அகற்றினார்கள்.

தெற்கு ஆப்கானிஸ்தானின் கந்தகார் நகரில் அமைந்துள்ள ஒரு தளத்துக்கு தாக்குதல் படையணியைச் சேர்ந்த இராணுவத்தினர் வந்துசேர்ந்ததைத் தொடர்ந்து 2001ம் ஆண்டின் இறுதியில் அமெரிக்க இராணுவத்தினரின் எண்ணிக்கை 2300க்கு உயர்ந்தது.

வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது, 2009ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க இராணுவத்தினரின் எண்ணிக்கை 15000 தொடக்கம் 25000 வரை இருந்தது. 2009ம் ஆண்டில் ஆப்கானில் வன்முறைகள் அதிகரித்த போது அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கையும் அவ்வருடம் அதிகரித்தது. அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் தலிபான்களின் வெற்றிகரத் தாக்குதல்களை முறியடிப்பதற்காக அதிபர் பரக் ஒபாமா, மேலதிகமாக 33000 படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பினார்.

முதற்தடவையாக, 2010 ஆகஸ்டில் அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கை 100,000 ஐத் தாண்டியது. அடுத்த வருடமும் இராணுவத்தினரின் எண்ணிக்கை இதே அளவாகவே இருந்தது.

போருக்குக் கொடுக்கப்பட்ட விலை

மொத்தமாக 2312 அமெரிக்க இராணுவத்தினர் 2001ம் ஆண்டிலிருந்து ஆப்கானிஸ்தானில் இறந்திருக்கிறார்கள். சுதந்திரத்துக்கான தாக்குதல் (Operation Enduring Freedom) என்ற பெயருடன் முதன்முதலில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் 2218 இராணுவத்தினர் இறந்தார்கள் என்பதோடு சுதந்திரத்தைக் காக்கும் தாக்குதல் (Operation Freedom’s Sentinel) என்ற பெயரில் 2014ம் ஆண்டின் இறுதியில் உருவாக்கப்பட்ட, பயிற்சியளிக்கும் படையணியைச் சேர்ந்த 94 இராணுவத்தினரும் இதுவரை இறந்திருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் 2009இல் அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து கொல்லப்படும் அமெரிக்க இராணுவத்தினரின் எண்ணிக்கையும் கணிசமான அளவு அதிகரித்தது. அமெரிக்காவைச் சேர்ந்த 1534 இராணுவத்தினர் 2009க்கும் 2014க்கும் இடையில் ஆப்கானில் இறந்தார்கள். ஆப்கானிஸ்தானில் காயப்பட்ட அமெரிக்க இராணுவத்தினரின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது, 20,066 இராணுவத்தினர் 2001ம் ஆண்டிலிருந்து இன்று வரை காயங்களுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

ஆப்கான் போரில் கிட்டத்தட்ட 35000 இலிருந்து 40000 வரை அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. பிரவுண் பல்கலைக்கழகத்தால் (Brown University) முன்னெடுக்கப்பட்ட கணிப்பீட்டின்படி 43000 பொதுமக்கள் போரில் கொல்லப்பட்டதாகவும் அதே வேளையில், அமெரிக்க – தலிபான் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட பின்னர் வன்முறைகள் அதிகரித்த போது  2001 இலிருந்து 2019 வரை, 35,518 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் ஐக்கிய நாடுகளின் அறிக்கை கணிப்பிட்டது.

பென்ரகன் தெரிவித்துள்ள தகவல்களின்படி, கடந்த வருடத்தின் இறுதி வரை 824.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க இராணுவச் செயற்பாடுகளுக்காக மொத்தமாகச் செலவிடப்பட்டுள்ளது. இத்தொகையில், 578.5 பில்லியன் டொலர்கள் சுதந்திரத்துக்கான தாக்குதலுக்கும், 264.4 பில்லியன் டொலர்கள் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் தாக்குதலுக்காகவும் செலவிடப் பட்டிருக்கின்றது.

ஒரு மாதத்துக்கு சராசரியாக 3 பில்லியன் அமெரிக்க டொலர்களைச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் செயற்பாடுகளுக்காக அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் செலவு செய்திருக்கின்றது.

உயர்மட்டப் பயங்கரத் தாக்குதல்கள்

us-troops-afghanistan-file-gty-jef-21041

தலிபான்களின் தாக்குதல்கள், உலங்கு வானூர்தி விபத்துகள், தமக்குப் பயிற்சியளித்த அமெரிக்கப் படையினருக்கு எதிராக ஆப்கான் இராணுவத்தின் உள்ளேயிருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் எனப் பல உயர்மட்டத் தாக்குதல் நிகழ்வுகள் ஆப்கானிஸ்தானில் நடந்தேறியிருக்கின்றன.

சீல் கடற்படையினரை (NAVY SEALs) ஏற்றிக்கொண்டு கிழக்கு ஆப்கானிஸ்தானுக்கு மேலாகப் பறந்துகொண்டிருந்த, CH-47 ஷினூக் உலங்கு வானூர்தி (Chinook helicopter) ரொக்கெட்டினால் ஏவப்பட்ட கைக்குண்டின் மூலம், 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் திகதி சுட்டுவீழ்த்தப்பட்ட நிகழ்வே, அமெரிக்க இராணுவத்தினருக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான தாக்குதலாகக் கருதப்படுகிறது. இருபத்தியிரண்டு (22) சீல் கடற்படையினர் உட்பட 30 அமெரிக்கர்கள் அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார்கள்.

விசேட தாக்குதல் படையணியைச் சேர்ந்த 19 இராணுவ வீரர்கள், சிவப்பு சிறகுகள் தாக்குதல் (Operation Red Wings) எனப்பெயரிடப்பட்டு 2005ம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது கொல்லப்பட்டார்கள். பதுங்கியிருந்து மேற்கொள்ளப்பட்ட ஒரு தாக்குதலில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், மேற்குறிப்பிட்ட நிகழ்வில் அமெரிக்க இராணுவத்தினருக்கு உதவும் முயற்சியில் ஈடுபட்ட ஒரு உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் அதில் பயணஞ் செய்த மேலும் 16 படையினர் கொல்லப்பட்டார்கள்.

வனத் சண்டை (Battle of Wanat) என அழைக்கப்படுகின்ற அமெரிக்க அவதான நிலை ஒன்றின் மீது 2008 ஜூலை 13 இல் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது, ஒன்பது அமெரிக்கர்களும் வேறு 27 பேரும் காயங்களுக்கு உள்ளாகியிருந்தார்கள்.

கிழக்கு ஆப்கானிஸ்தானின் நூறிஸ்தான் மாகாணத்தின் காம்டேஷ் நகரில் ஒரு மலையடிவாரத்தில் பாகிஸ்தானிலிருந்து உள்நுழையும் தலிபான்களுக்கு எதிராகப் போரிடுவதற்காக சண்டைக்கான கீற்றிங் தொலைநிலை (Combat Outpost Keating) என அழைக்கப்பட்ட ஒரு விசேட இராணுவ முகாமை அமெரிக்க இராணுவத்தினர் நிறுவியிருந்தார்கள். இந்தத் தளத்தின் மீது 2009 ஓக்ரோபர் 3இல், கிட்டத்தட்ட 200 தலிபான்கள் திடீரெனத் தொடுத்த தாக்குதலில், எட்டு அமெரிக்க இராணுவத்தினரும் நான்கு ஆப்கான் படையினரும் கொல்லப்பட்டார்கள்.

afghanistan-us-troops-ge_hpEmbed_2021041

ஜோர்தான் நாட்டைச் சேர்ந்த இரட்டை உளவாளியான (double agent) அல்-பாலாவியால் சப்மான் முன்னணி இயங்குதளத்தில் (Forward Operating Base Chapman) நிலைகொண்டிருந்த அமெரிக்க சிஐஏ படையினரை ஏமாற்றி, அவர்கள் நடுவில் 2009 டிசம்பர் 30ம் திகதி மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலின் காரணமாக ஏழு சிஐஏ பணியாட்கள் கொல்லப்பட்டார்கள்.

கறுப்புப் பருந்து உலங்கு வானூர்தி (Black Hawk helicopter) ஒன்று 2010ம் ஆண்டு செப்ரம்பர் 21ம் திகதி காலாட் என்னும் இடத்தில் விபத்துக்குள்ளாகிய போது 101வது விமானப்படைப்பிரிவைச் சேர்ந்த ஐந்து வீரர்களும் சீல் கடற்படையினர் மூவரும் கடற்படையினருக்கு உதவி வழங்கும் விசேட தொழில்நுட்பவல்லுநர் ஒருவரும் கொல்லப்பட்டார்கள்.

எட்டு அமெரிக்க விமானப்படை வீரர்களும் அமெரிக்க ஒப்பந்தகாரர் ஒருவரும் 2011 ஏப்பிரல் 27ம் திகதி, காபுல் விமானநிலையத்தில் கொல்லப்பட்டார்கள். விமானத் தளத்தின் செயற்பாட்டு அறையில் பணியாற்றிய ஆப்கான் விமானப்படை வீரர் ஒருவர் ஒரு விவாதத்தின் போது கோபப்பட்டு திடீரெனத் தனது துப்பாக்கியை எடுத்துச் சுடத் தொடங்கினார். இந்த சம்பவத்தின் போது காயப்பட்ட குறிப்பிட்ட வீரர் சம்பவத்தின் இறுதியில் சாவடைந்தார்.

ஆப்கானில் நிலைகொண்டிருந்த  அமெரிக்க இராணுவத்தின் மூன்றாவது பெரிய இராணுவத் தளமாக விளங்கிய சலேர்ணோ முகாம் (Camp Salerno) மீது தலிபான்கள் தொடுத்த ஒன்றிணைக்கப்பட்ட தாக்குதல் காரணமாக 2013 நவம்பர் முதலாம் திகதி இரண்டு அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்ட அதே நேரம் பலர் கடுமையான காயங்களுக்கும்  உள்ளானார்கள்.

நன்றி: ஏபிசி செய்திகள்: abcNEWS

 

 

https://www.ilakku.org/?p=48571

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி 2016க‌ளில் இருந்து 2021வ‌ரை ச‌ரியா க‌ணிச்ச‌ நீங்க‌ளா இல்லை தானே ஏன் இடையில் ஏன் தேவை இல்மாத‌ புல‌ம்ப‌ல்...................விஜேப்பி அண்ணாம‌லை சொன்ன‌து போல் 30ச‌த‌வீத‌ம் பெறுவோனம் என்று ஏதும் ராம‌ர் கோயிலுக்கு போய் சாத்திர‌ம் பார்த்து விட்டு சொன்னாறா அல்ல‌து தேர்த‌ல் ஆணைய‌ம் த‌ங்க‌ட‌ க‌ட்டு பாட்டில் இருக்கு பின் க‌த‌வால் போய் ச‌ரி செய்ய‌லாம் என்ற‌ நினைப்பில் சொன்னாறா நோட்டாவுக்கு கீழ‌ நின்ற‌ க‌ட்சி 30ச‌த‌வீத‌ம் வெல்வோம் என்று சொல்லும் போது புரிய‌ வில்லையா இவ‌ர்க‌ள் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ போகின‌ம் என்று த‌லைகீழ‌ நின்றாலும் வீஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு மிக‌ குறைவு........................ஆனால் ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் க‌ருத்து க‌ணிப்பு என்று போலி க‌ருத்து திணிப்பு................... நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஒவ்வொரு தேர்த‌ல்க‌ளிலும் வ‌ள‌ந்து கொண்டு வ‌ருது ஈவிம் மிசினில் இருந்து ஓட்டை திருடினால் விஜேப்பி கார‌ங்க‌ள் சொல்லுவாங்க‌ள் சீமானின் விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போச்சு அத‌னால் தான் ஓட்டும் குறைஞ்சு  போச்சு என்று பொய் குண்டை தூக்கி த‌லையில் போடுவாங்க‌ள் சீமானின் சின்ன‌ம் என்ன‌ என்று ம‌க்க‌ளுக்கு விழிப்புன‌ர்வு காட்ட‌ போன‌ மாச‌ ஆர‌ம்ப‌ ப‌குதியில் த‌மிழ‌க‌ம் எங்கும் நோடிஸ் ஒட்ட‌ ப‌ட்ட‌து மைக் சின்ன‌மும் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு சென்று விட்ட‌து அதுக்கு க‌ட்சி பிள்ளைக‌ள் க‌டின‌மாய் ப‌ணி செய்தவை அதோட‌ விஜேன்ட‌ பாட்டில் கூட‌ மைக் சின்ன‌ம் போஸ்ட் இணைய‌த்த‌ல் க‌ல‌க்கின‌து......................நாம் த‌மிழ‌ருக்கு 7/ 10 ச‌த‌வீத‌ ஓட்டு கிடைக்கும் 10த்தையும் தாண்ட‌ வாய்ப்பு இருக்கு..................யூன் 4 ச‌ந்திப்போம் இந்த‌ துரியில்🙏🥰................................  
    • நான் அறிந்த வரை காளியம்மாள் கிட்டதட்ட வெல்லும் நிலையாம்…. பயந்து போன தீம்கா….ஒரு வாக்குக்கு ஒரு கோடி வரை கொடுத்ததாம்🤣 🤣
    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.   கை காட்டலும் தொடரும்🤣
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.