Jump to content

உயிர்களை கையில் பிடித்தபடி ஓடிக்கொண்டிருந்த தமிழ் மக்கள் - வலி சுமந்த மாதத்தின் முதல் நாள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்களை கையில் பிடித்தபடி ஓடிக்கொண்டிருந்த தமிழ் மக்கள் - வலி சுமந்த மாதத்தின் முதல் நாள்...

உயிர்களை கையில் பிடித்தபடி ஓடிக்கொண்டிருந்த தமிழ் மக்கள் - முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்  வலி சுமந்த  முதல் நாள்

2009 மே 01  :-
தமிழீழம் 

வட தமிழீழம் :-

முள்ளிவாய்க்காலில்  அடைபட்டுக்கிடந்த பொதுமக்கள் மீது ஆட்லறிகள், மோட்டார்கள், பல்குழல் உந்துகணை செலுத்திகள் கொண்டு  பேரினவாத சிறிலங்கா இராணுவத்தின் ஆயுதப்படைகள் கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டதில்     மே  முதலாம் திகதி முள்ளிவாய்க்கால் தீப்பிடித்து எரிந்தது  

குறித்த  நாள் முழுவதும்  தமிழ் மக்கள் கோரமான தாக்குதல்களிற்கு உட்பட்டனர்.

 

 

zrNcPYNgojSJMmHAOnM0.jpg

 

அன்றைய நாளில் முள்ளிவாய்க்காலில் இயங்கிக்கொண்டிருந்த தற்காலிக மருத்துவமனைகளில் காயம் பட்ட மற்றும் இறந்த பொது மக்களால் நிரம்பி வழிந்தது. மருத்துமனை ஊழியர்களின் எண்ணிக்கையின் படி 110 ற்கு மேற்பட்ட பொது மக்கள் மாலை 4.30 வரை காயமடைந்தவர்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

அதேவேளை அதற்கு முதன் நாளில் 27 பேர் காயமடைந்து குறித்த வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் தெரியவருகிறது. இவ் கொடூர தாக்கல்களில் சிக்கி இறந்த பொதுமக்களின் உடல்கள் சில புதைக்கப்பட்டதுடன் ஏனையவை எரியூட்டப்பட்டன

 

 

FqGvV5VcSQRMLQ8fc5F4.jpg

 

 

முள்ளிவாய்க்கால் கிராமத்திற்கு வடக்கே உக்கிரமான போர் நடைபெற்றுக்கொண்டிருந்ததினால் மக்கள் மிகவும் நெரிசலாக இருந்த தெற்கு பக்கம் நோக்கி   தங்கள் உயிர்களை கையில் பிடித்தபடி ஓடிக் கொண்டிருந்ததை காண முடிந்தது.

 

நாள் முழுவதும்   பதுங்கு குழிக்குள்ளேயே  வாழ வேண்டிய சூழலுக்கு மக்கள் தள்ப்பட்டதுடன் பதுங்கு குழிக்குள் துாங்கும் போதும் பலர் எறிகணைகளால் கொல்லப்பட்டனர்.

 

oMnGboJ7mYvVlfRIkcHU.jpg

 

 

CuNXRF85nmiTiSL2C9Tq.jpg

 

 

vYz3f6lq9z49xu248PyV.jpg

 

 

qNUA0cxTTYGlJaio4T2V.jpg

 

 

 

eS6xrifxaR3xK8AhEzDC.jpg

 

 

ISWktT0WMN9pXd1YRgTS.jpg

 

 

 

6A2CeTaKaAkFQzNL5VEX.jpg

https://www.thaarakam.com/news/d63e558c-37fe-464f-9183-4995b5432af5

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.