Jump to content

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 - முடிவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வாத்தியார் said:

மக்கள் நாங்கள் தமிழர்கள் என உணர்ந்து செயற்பட தொடங்கியுள்ளார்கள்.
திராவிடர்கள் நாங்கள்.... எங்கள் கொள்கை திராவிடக் கொள்கை...    எனக்கூறி... தமிழர்கள் மேலே சவாரி செய்யும் அரசியல் பல வருடங்களாக தொடர்ந்த நிலைமையில்....

சீமான்
தமிழர் நாம் எங்கள் தேசம் தமிழ்த் தேசம் என்ற கொள்கையுடன் வந்ததால் ஒரு தமிழ்த் தேசிய உணர்வு தமிழ் நாட்டில் வேரூன்ற ஆரம்பித்துள்ள நிலையில் இப்படியான மாற்றங்கள் வரும் ஐயா.

அந்த மாற்றம் நிலையெடுக்க பல அழுத்தங்கள் வருவதால்  கால அவகாசம் தேவை
ஆனால் சீமான் மாறாமல் இருக்க வேண்டுமல்லவா

 

7 minutes ago, விசுகு said:

கேள்விக்கு நன்றி அண்ணா

இங்கே சிங்களத்தையே அவர்கள் நல்லவர்கள் தான் தமிழர்கள் தான் தேவையற்று சண்டைக்கு போய் அவர்களின் உறவை தடை செய்கிறார்கள் என்பவர்கள், நம்புபவர்கள் இருக்கிறார்கள்

அவர்களிடம் நான் சொல்லும் கருத்து எடுபடுமா? அதை நம்புகிறீர்களா?

ஆனாலும் நீங்கள் கேட்டதால் சொல்கிறேன்.

பட்டறிவு தான் காரணம். ஈழத்து அனுபவம் (தலை வைக்க ஒட்டகத்துக்கு இடம் கொடுத்தது போல்)

தமிழகத்தின் சொந்த அனுபவம் (கன்னடம், பர்மா, பம்பாய் மற்றும் தமிழகத்தின் அனைத்து எல்லைகளிலும் அடி வாங்கியது. மாற்றாந்தாய் பிள்ளையாக நடாத்தப்பட்டது பழிவாங்கப்பட்டது)

இறுதியாக இருக்கும் இந்த ஒரேயொரு மண்ணையும் தமிழையும்    இழந்து விடக்கூடாது என்ற தீர்க்கமான முடிவு தான் காரணம்.

 

Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழகன் said:

தினசரி வாழ்வில் தமிழ் பேசாதவர்கள் உள்ளார்ந்த தமிழ் தேசியவாதிகளாக இருக்க வாய்ப்பில்லை. 

நீங்கள் சொன்னது உண்மை தான். அவர்கள் தமிழ்தேசியம் பேசுவது ஏமாற்றுவதற்காக.  வெளிநாட்டில் இருந்து சென்று ஈழதமிழர்களுக்கு தலைமை தாங்கும் ஆசையும் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, குமாரசாமி said:

 

 

https://photos.app.goo.gl/1BhThPtX7WwmrmP37

https://photos.app.goo.gl/eFumCo2Tgk9Kgg5k7

விஜயகாந்தின் கட்சி எடுத்த வாக்குகள் 0 ,45 வீதமாம் 

விடுதலை சிறுத்தைகள் கட்சி எடுத்த வாக்குகள் 1,06 வீதம் 

கமல்ஹாசன் கட்சி எடுத்த வாக்குகள் 2,45 வீதம் 

பாட்டாளி மக்கள் கட்சி எடுத்த வாக்குகள் 4,04 வீதம்

இனி இவர்கள் சீமானைத்தேடி வருவர். 

இவர்கள் ஒன்று சேர்ந்தால் 30 வீத மக்கள் ஒன்றிணைவர்

கூட்டி கழித்து பாருங்கள் கணக்கு சரியாக வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழகன் said:

இது எனது நிலைப்பாடு அல்ல. ஆனால் அதிமுக+பிஜேபி+அமமுக+பாமக கூட்டணியில் சேரும் நிலையை அண்ணன் எடுத்தால் அது ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டை பாதிக்குமா? பாதிக்க கூடாது என்பதே என் வேண்டுதல்.

உங்கள் அண்ணர் எடுக்கும் நிலைபாட்டை வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழர்கள் தலையால் நின்று உறுதியான ஆதரவு தருவார்கள் கவலை வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விளங்க நினைப்பவன் said:

உங்கள் அண்ணர் எடுக்கும் நிலைபாட்டை வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழர்கள் தலையால் நின்று உறுதியான ஆதரவு தருவார்கள் கவலை வேண்டாம்.

நீங்கள் எந்த கொள்கை சார்பாக நின்று கதைக்கின்றீர்கள்?

Link to comment
Share on other sites

12 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் எந்த கொள்கை சார்பாக நின்று கதைக்கின்றீர்கள்?

யாரும் தமிழ் தான் எங்கள் மொழி  அது எங்கள் உயிர் என்று சொன்னால் அவர்களை ஒரு கை பார்ப்பது தான் கொள்கை.. (முக்கியமாக அடிமையாக வாழ்வது) 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இது எமது இனத்தின் சாபக்கேடு

ஒருவர் கள்ளனாக இருக்கலாம்

அதை பரம்பரை பரம்பரையாக தொடரலாம். அவர் வீட்டு நாய்க்குட்டிக்கு கூட வாக்கு கேட்கலாம் வெல்லலாம்.

ஆனால் தேசியத்தை விரும்புபவராக இருந்தால் மட்டும் நீங்கள் மட்டுமல்ல உங்கள் குடும்பம் மட்டும் அல்ல உங்கள் குழந்தைகள் பேரப் பிள்ளைகளும் தூயவர்களாக இனத்துக்காக உயிரைக் கூட கொடுக்கக்கூடிய தியாகம் உள்ளவராக வாழ்ந்தால் கூட போதாது நிரூபித்து காட்டணும்

தேசியம் என்றவுடன் பலருக்கு "தூய" என்கின்ற நினைவிற்கு வந்து தொலைத்தால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும். 

அவர்கள் எப்போதுமே கலப்பு, அMழ்ந்து போதல், கரைந்து போதல், நிறமிழத்தல் என்பவற்றில் அடிபட்டு பலவீனமாக இருப்பார்கள். 

பலவீனர்களுக்கு எரிச்சல் இலகுவாக வருமல்லவா..😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, விளங்க நினைப்பவன் said:

1) நீங்கள் சொன்னது உண்மை தான். அவர்கள் தமிழ்தேசியம் பேசுவது ஏமாற்றுவதற்காக. 

2) வெளிநாட்டில் இருந்து சென்று ஈழதமிழர்களுக்கு தலைமை தாங்கும் ஆசையும் உள்ளது.

1) கரைந்து அமிழ்ந்து சுயம் இழந்தவர்களுக்கு எல்லாமே மாயப் பெருவெளியாகத் தெரிவதில் வியப்பில்லை.

2) நினைக்க மட்டுமே தெரிந்தவருக்கு சமகால உலக நடப்புகள் தெரியாமல் இருப்பதில் வியப்பேதும் இல்லை. 

நிற்க,

உங்களுக்கு பிள்ளைகளிருந்து, அவர்கள் நேர்த்தியாக வளர்க்கப்பட்டு, அவர்கள் ஈழத்துடன் தொடர்பிலிருந்து,  அவர்கள் தங்கள் அடையாளத்தை இழக்க விரும்பாமல், தனது தாய்நாட்டிற்கு சமூக, அரசியல், பொருளாதார சேவை செய்ய  விரும்பினால் உங்களால் என்ன செய்ய முடியும்...🤥

இப்படியான ஒன்றை உங்களால் கற்பனை செய்யத்தானும் முடியுமா..?

முடியாதே..🤥

ஏனென்றால் நீங்கள் நினைக்க விரும்புபவர். நினைப்பவரல்லவே...

🤦🏼‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

https://photos.app.goo.gl/1BhThPtX7WwmrmP37

https://photos.app.goo.gl/eFumCo2Tgk9Kgg5k7

விஜயகாந்தின் கட்சி எடுத்த வாக்குகள் 0 ,45 வீதமாம் 

விடுதலை சிறுத்தைகள் கட்சி எடுத்த வாக்குகள் 1,06 வீதம் 

கமல்ஹாசன் கட்சி எடுத்த வாக்குகள் 2,45 வீதம் 

பாட்டாளி மக்கள் கட்சி எடுத்த வாக்குகள் 4,04 வீதம்

இனி இவர்கள் சீமானைத்தேடி வருவர். 

இவர்கள் ஒன்று சேர்ந்தால் 30 வீத மக்கள் ஒன்றிணைவர்

கூட்டி கழித்து பாருங்கள் கணக்கு சரியாக வரும்

உங்கள் ஆதரவுக்கு நன்றி.

ஆனால் இந்த கணக்கு இப்படியான இலகுவான கணக்கும் அல்ல என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

விசிக 6 சீட்டில் 1%
நாம் 245 சீட்டில் 7%
ஆனால் நாம் தனியே, அவர்களோ பெரும் கூட்டணியில் ஆகவே இதை இப்படி ஓப்பிடல் சரிதானா?

அடுத்து விசிகவோ, பாமகவோ நம் தலைமை ஏற்று வரப்போவதில்லை. மக்கள் நல கூட்டணி பாடம் போதும்.

ஆகவே மீண்டும் தனித்து அல்லது அதிமுக+பிஜேபி+பாமக கூட்டணி என்பதுதான் அண்ணனின் தெரிவுகள்.

Link to comment
Share on other sites

தமிழக அரசியலில் வளர்ச்சி கண்டுள்ள நாம் தமிழருக்கு வாழ்த்துகள்..! 👏

Link to comment
Share on other sites

தமிழ் மக்களை மீட்க வந்தவர்களை ஒதுக்கிவிட்டு இலங்கைத் தமிழர் நாம் ஒப்பாரி வைக்கிறோம். அதுபோல் தமிழ் மக்களை மீட்க வந்தவர்களை ஒதுக்கிவிட்டு இந்தியத் தமிழரும் ஒப்பாரி வைக்காவிட்டால்.... எங்களிடையே உள்ள  சொந்தம், பந்தம், அன்பு, பாசம், தொப்புழ்கொடி உறவெல்லாம் என்னாவது...🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிவுகள் வந்திட்டுதா யாராம் வெற்றி.😜

Link to comment
Share on other sites

தமிழக மிகவும் சிறப்பாக தமது தீர்பபை வழங்கியுள்ளார்கள். கடந்த 2016 தேர்தலிலும் இதேபோன்ற தீர்பபையே வழங்கினர். அறுதி பெரும்பான்மையுடனான அரசையும் அதே வேளை பலமான எதிர்க்கட்சியையும் 2016 ம் ஆண்டும் தேர்தெடுத்தனர். இப்போதும் அதேபோல தெளிவாக   தேர்ந்தெடுத்துள்ளனர். ஜனநாயகம் சிறப்பாக செயற்பட ஒரு பலமான எதிர்க்கட்சி தேவை.  அதிமுக கட்சியும் கணிசமான பலத்துடன் உள்ளது நல்லதே. மக்கள் ஆதரவுடன் இருக்கும் அதிமுக இனியும் மதவாத பிஜேபியன் அழுத்தங்களுக்கு அடிபணியாது தனது கட்சிக்கு உள்ள பலத்தை மேலும் உறுதியாக்குவதன் மூலம் 2026  தேர்தலில் வெற்றி பெறமுடியும்.

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே தனித்துவத்துடன் செயற்படுவதன் மூலம் தமிழ்நாட்டில்  மதவெறி இனவெறி தூண்டி பதவி சுகத்தை அனுபவிக்க துடிக்கும்   அரசியல்வாதிகளையும் அதன் கும்பல்களையும்  ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். தமிழ் நாடு மதவெறி, இனவெறி அற்ற பூமி என்பதை நிருபித்த தமிழக மக்களுக்கு நன்றிகள். 

Link to comment
Share on other sites

7 minutes ago, tulpen said:

தமிழக மிகவும் சிறப்பாக தமது தீர்பபை வழங்கியுள்ளார்கள். கடந்த 2016 தேர்தலிலும் இதேபோன்ற தீர்பபையே வழங்கினர். அறுதி பெரும்பான்மையுடனான அரசையும் அதே வேளை பலமான எதிர்க்கட்சியையும் 2016 ம் ஆண்டும் தேர்தெடுத்தனர். இப்போதும் அதேபோல தெளிவாக   தேர்ந்தெடுத்துள்ளனர். ஜனநாயகம் சிறப்பாக செயற்பட ஒரு பலமான எதிர்க்கட்சி தேவை.  அதிமுக கட்சியும் கணிசமான பலத்துடன் உள்ளது நல்லதே. மக்கள் ஆதரவுடன் இருக்கும் அதிமுக இனியும் மதவாத பிஜேபியன் அழுத்தங்களுக்கு அடிபணியாது தனது கட்சிக்கு உள்ள பலத்தை மேலும் உறுதியாக்குவதன் மூலம் 2026  தேர்தலில் வெற்றி பெறமுடியும்.

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே தனித்துவத்துடன் செயற்படுவதன் மூலம் தமிழ்நாட்டில்  மதவெறி இனவெறி தூண்டி பதவி சுகத்தை அனுபவிக்க துடிக்கும்   அரசியல்வாதிகளையும் அதன் கும்பல்களையும்  ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். தமிழ் நாடு மதவெறி, இனவெறி அற்ற பூமி என்பதை நிருபித்த தமிழக மக்களுக்கு நன்றிகள். 

தமிழ் நாடு மதவெறி, இனவெறி அற்ற பூமி என்பதை நிருபித்த தமிழக மக்களுக்கு நன்றிகள். 

விசிக  .பாமக .இவர்கள் எல்லாம் யார் ? 

(என்ன செய்வது  அறிவு   அப்படித்தான் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, appan said:

தமிழ் நாடு மதவெறி, இனவெறி அற்ற பூமி என்பதை நிருபித்த தமிழக மக்களுக்கு நன்றிகள். 

விசிக  .பாமக .இவர்கள் எல்லாம் யார் ? 

(என்ன செய்வது  அறிவு   அப்படித்தான் )

எப்போதும் அதற்காக போராடுபவர்களை விடுத்து அதனை வஞ்சகத்தனமாக தூண்டி விடுபவர்கள் மீது தான் அவர் கண் படும். 

ஏழாவது அறிவு என்று அதற்கு பெயராம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

எப்போதும் அதற்காக போராடுபவர்களை விடுத்து அதனை வஞ்சகத்தனமாக தூண்டி விடுபவர்கள் மீது தான் அவர் கண் படும். 

ஏழாவது அறிவு என்று அதற்கு பெயராம். 

லொறி லொறியாய் காசு கொண்டுவந்து வோட்டு வாங்கின கட்சிக்கு வக்காளத்து வாங்குறதுக்கும் ஒரு வரட்டுத்தைரியும் வேணும்.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

லொறி லொறியாய் காசு கொண்டுவந்து வோட்டு வாங்கின கட்சிக்கு வக்காளத்து வாங்குறதுக்கும் ஒரு வரட்டுத்தைரியும் வேணும்.🤣

குமாரசாமி அண்ணேய்....   இதை வரட்டு தைரியம் என்று சொல்வதை விட....

முட்டுக் குடுக்குறது, செம்பு தூக்குறது... என்று சொல்வார்கள்.  😂  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த 10.5 உடன் பார்க்கையில் இது கொஞ்சம் சுணக்கம்தான் உறவே. அடுத்தடுத்த கட்சியை பலவீனபடுத்திய சில புல்லுருவிகள்தான் காரணம். 

தொடர்ந்தும் இப்படியாகாமல் பார்த்துகொள்ள வேண்டும். தம்பிகள் பாக்கியராசன், கார்த்தி, அண்ணன் தடா போன்றோர் அண்ணனுக்கு அரணாக அமையவேண்டும். 

புலம்பெயர் சொந்தங்கள் தமது ஆடம்பரங்களை குறைத்து அண்ணனின் பொருளாதார அரணை இரெட்டிப்பாக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சுடாலின் சத்தியப்பிரமாணம் எப்படி சொல்றார் என்பதை பார்க்க ஆவலாக உள்ளது😄 இன்றும் அறிவாலயத்தில் அவர் பேசுவதை போடுவார்கள் என்று பார்த்தேன் அநியாயமாய் நேரம்தான் போனது சிலவேளை பின்பு போட்டார்களா தெரியலை .

நாடாள வந்தவர்கள் பாவிகளா இல்லை புண்ணியவான்களா என்று ஆட்சி காட்டிக்கொடுத்துவிடும் .

.நாள் ஒன்றின் கொரனோ  தொற்று விகிதம் 6 ஆயிரம் தாண்டிடுகின்றது .  பாவிகள் நாடு ஆண்டாள் கஷ்டப்படுவது மக்கள் தானே .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பெருமாள் said:

எனக்கு சுடாலின் சத்தியப்பிரமாணம் எப்படி சொல்றார் என்பதை பார்க்க ஆவலாக உள்ளது😄 இன்றும் அறிவாலயத்தில் அவர் பேசுவதை போடுவார்கள் என்று பார்த்தேன் அநியாயமாய் நேரம்தான் போனது சிலவேளை பின்பு போட்டார்களா தெரியலை .

நாடாள வந்தவர்கள் பாவிகளா இல்லை புண்ணியவான்களா என்று ஆட்சி காட்டிக்கொடுத்துவிடும் .

.நாள் ஒன்றின் கொரனோ  தொற்று விகிதம் 6 ஆயிரம் தாண்டிடுகின்றது .  பாவிகள் நாடு ஆண்டாள் கஷ்டப்படுவது மக்கள் தானே .

 

நான் நேற்று சொன்னேனே.

தேப்பன், உயிரோட இருக்கும் போதே, பொறுப்பு கொடுக்கவில்லை, நம்பிக்கை இருக்கவில்லை.

தமிழக மக்கள் இவருக்கு பாராளுமன்ற தேர்தலில் அளித்த 54% வாக்குக்குள், குறைந்து 43% ஆகி உள்ளது.

இவரது, நடவடிக்கைள் மேலே நம்பிக்கை இல்லாத, மனைவி துர்க்கா, மகன் உதயநிதியை துணை முதல்வராக்க நாண்டு கொண்டு நிக்கிறார்.

அநேகமா, இவரது நடவடிக்கை மூலம், சீமான் ஒரு மக்கள் ஆதரவு தலைமைத்துவத்துக்கு நகர்வார்.

அதேவேளை, பதவியில் இல்லாத எடப்பாடி, பன்னீர் தலைமைத்துவத்துக்கு அடிபடுவார்கள். தினகரன் மக்களால் பெரிதாக கண்டுகொள்ளப்படாததால், அவர், அதிமுக தலைமத்துவத்துக்கு வர முடியாது. சசிகலா 70 வயது ஆகிறது. பிள்ளைகள் இல்லாத அவரும், அரசியலில் இருந்து ஒதுங்கியது நிரந்தரமாகும்.

ஆகவே, தமிழகம், தமிழம், திராவிடம் என்ற அரசியலில் விறுவிறுப்பாகும்.

***

சீமான், தனது சொந்த தொகுதியான நாடார்கள் நிறைந்த காரைக்குடியில் நின்று வென்று இருக்க முடியும்.

தனது சாதி மக்களை நம்பி, அங்கே போட்டி போடுகிறார் என்று சாதிய தலைவர் ஆக்கி விடுவார்கள் என்றே, வடக்கே, சென்னையில் போட்டி இட்டார்.

சாதியத்துக்குள் சிக்காமல், தமிழர் சாதிக்கு தலைமைதுவம் தாங்கும் நோக்கம்.

இதுவே, சிறப்பான தலைமைத்துவமும், நீண்ட நோக்கிலான திட்டமிடலும்.

பிரபாகரனுக்கும் சொன்னார்கள், தனியே போராடாமல், உமாவுடன் இணை, டெலோவுடன் இணை என்று, சரித்திரம் மிகுதியை சொல்கிறது. நீண்ட நோக்கிலான திட்டமிடலுக்கு உதாரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, appan said:

தமிழ் நாடு மதவெறி, இனவெறி அற்ற பூமி என்பதை நிருபித்த தமிழக மக்களுக்கு நன்றிகள். 

விசிக  .பாமக .இவர்கள் எல்லாம் யார் ? 

(என்ன செய்வது  அறிவு   அப்படித்தான் )

நீங்க இப்படிக்கேக்கப் படாது. 🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இவரது, நடவடிக்கைள் மேலே நம்பிக்கை இல்லாத, மனைவி துர்க்கா, மகன் உதயநிதியை துணை முதல்வராக்க நாண்டு கொண்டு நிக்கிறார்.

உதயநிதி பேச்சு இலகுவாக  மக்கள் மனதில் இலகுவாக பதியும் வண்ணம் உள்ளது அதிலும்  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல்லு விளையாட்டு கொஞ்சம் விடயம் இருந்தாலும் இவர் தலையெடுக்கமுதல் கட்சி இரண்டாக உடைந்துவிடும் கட்டுமரம் வாயால் வைத்திருந்த  ஒற்றுமை அந்த பொய்யும் பிரட்டும் இனி அம்பலமேறாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சசிகலா, பன்னீர், எடப்பாடி பத்தித்தானே சொன்னேன். வேற எங்கோ விழவேண்டிய கத்தி, பிழையா விழுந்து விட்டுதோ? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

நான் நேற்று சொன்னேனே.

தேப்பன், உயிரோட இருக்கும் போதே, பொறுப்பு கொடுக்கவில்லை, நம்பிக்கை இருக்கவில்லை.

தமிழக மக்கள் இவருக்கு பாராளுமன்ற தேர்தலில் அளித்த 54% வாக்குக்குள், குறைந்து 43% ஆகி உள்ளது.

இவரது, நடவடிக்கைள் மேலே நம்பிக்கை இல்லாத, மனைவி துர்க்கா, மகன் உதயநிதியை துணை முதல்வராக்க நாண்டு கொண்டு நிக்கிறார்.

அநேகமா, இவரது நடவடிக்கை மூலம், சீமான் ஒரு மக்கள் ஆதரவு தலைமைத்துவத்துக்கு நகர்வார்.

அதேவேளை, பதவியில் இல்லாத எடப்பாடி, பன்னீர் தலைமைத்துவத்துக்கு அடிபடுவார்கள். தினகரன் மக்களால் பெரிதாக கண்டுகொள்ளப்படாததால், அவர், அதிமுக தலைமத்துவத்துக்கு வர முடியாது. சசிகலா 70 வயது ஆகிறது. பிள்ளைகள் இல்லாத அவரும், அரசியலில் இருந்து ஒதுங்கியது நிரந்தரமாகும்.

ஆகவே, தமிழகம், தமிழம், திராவிடம் என்ற அரசியலில் விறுவிறுப்பாகும்.

***

சீமான், தனது சொந்த தொகுதியான நாடார்கள் நிறைந்த காரைக்குடியில் நின்று வென்று இருக்க முடியும்.

தனது சாதி மக்களை நம்பி, அங்கே போட்டி போடுகிறார் என்று சாதிய தலைவர் ஆக்கி விடுவார்கள் என்றே, வடக்கே, சென்னையில் போட்டி இட்டார்.

சாதியத்துக்குள் சிக்காமல், தமிழர் சாதிக்கு தலைமைதுவம் தாங்கும் நோக்கம்.

இதுவே, சிறப்பான தலைமைத்துவமும், நீண்ட நோக்கிலான திட்டமிடலும்.

பிரபாகரனுக்கும் சொன்னார்கள், தனியே போராடாமல், உமாவுடன் இணை, டெலோவுடன் இணை என்று, சரித்திரம் மிகுதியை சொல்கிறது. நீண்ட நோக்கிலான திட்டமிடலுக்கு உதாரணம்.

உண்மை தான் நாதா
ஏற்க‌ன‌வே க‌ரி நாடார் ந‌டிகை விஜ‌ய‌ல‌ச்சுமி அண்ண‌ன் சீமானின் தாயை இழிவு ப‌டுத்தின‌துக்கு கோவ‌ப் ப‌ட்ட‌வ‌ர்

சாதி சாக்க‌டை அர‌சிய‌ல‌ அண்ண‌ன் சீமான் அற‌வே விரும்ப‌ வில்லை 

இந்த‌ தேர்த‌லில் அண்ண‌ன் சீமான் செய்த‌ சிறு த‌வ‌று அக்கா காளிய‌ம்மாள‌ வ‌ட‌ சென்னையில் மீண்டும் வேட்பாள‌ரா நிருத்தி இருக்க‌லாம் 

க‌ளிய‌ம்மாள் சொந்த‌ ஊரில் போட்டியிட்டு 15000 வாக்குக‌ள் தான் பெற்றா , வ‌ட‌ சென்னையில் 56000 வாக்குக‌ள் 2019 பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில்

பிழைக‌ள் ச‌ரிக‌ள் திருத்தி 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ச‌ரியா ப‌ய‌ணிப்பின‌ம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

உண்மை தான் நாதா
ஏற்க‌ன‌வே க‌ரி நாடார் ந‌டிகை விஜ‌ய‌ல‌ச்சுமி அண்ண‌ன் சீமானின் தாயை இழிவு ப‌டுத்தின‌துக்கு கோவ‌ப் ப‌ட்ட‌வ‌ர்

சாதி சாக்க‌டை அர‌சிய‌ல‌ அண்ண‌ன் சீமான் அற‌வே விரும்ப‌ வில்லை 

இந்த‌ தேர்த‌லில் அண்ண‌ன் சீமான் செய்த‌ சிறு த‌வ‌று அக்கா காளிய‌ம்மாள‌ வ‌ட‌ சென்னையில் மீண்டும் வேட்பாள‌ரா நிருத்தி இருக்க‌லாம் 

க‌ளிய‌ம்மாள் சொந்த‌ ஊரில் போட்டியிட்டு 15000 வாக்குக‌ள் தான் பெற்றா , வ‌ட‌ சென்னையில் 56000 வாக்குக‌ள் 2019 பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில்

பிழைக‌ள் ச‌ரிக‌ள் திருத்தி 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ச‌ரியா ப‌ய‌ணிப்பின‌ம் 

இல்லை அது பாராளுமன்றம், பல சட்டசபை தொகுதிகள் சேர்ந்தது. இது ஒரு தொகுதி. கணக்கு சரியாய் வருகிறது. 

இந்த முறை தான் வேலையே செய்ய தொடக்கி இருக்கிறார்கள். அனுபவம் பெறுகிறார்கள்.

திமுக 1948 தொடக்கம், 1967 வரை 19 வருடம் போராடியது. காங்கிரசுக்கும், நீதிகட்சிக்கும் எதிராக.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.