Jump to content

மரவள்ளி கிழங்க இப்பிடி ஒருக்கா செய்யுங்க, சட்டில மிஞ்சாது


Recommended Posts

 

வாங்க இண்டைக்கு நாம மரவள்ளிக்கிழகையும் இறாலையும் வச்சு ஒரு உறைப்பான கறி செய்வம் . இதமரவள்ளி கூழ் எண்டும் சொல்லுவாங்க ஏன் ஏன்டா இத தனியாவே சாப்பிட்டுவாங்க அப்பிடி நல்லா இருக்கும். நீங்களும் செய்து சாப்பிட்டு பாருங்க. சாப்பிட்டு எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாய் இருக்கும் போலதான் கிடக்கு....கூழாயும் குடிக்கலாம் எண்டால் பேந்தென்ன 😄

Link to comment
Share on other sites

24 minutes ago, குமாரசாமி said:

நல்லாய் இருக்கும் போலதான் கிடக்கு....கூழாயும் குடிக்கலாம் எண்டால் பேந்தென்ன 😄

எனக்கு பிடிச்ச உணவில ஒண்டு, ஒருக்கா செய்து பாருங்க, பாத்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க. கொஞ்சம் கூடவா பச்சைமிளகாய் போட்டுங்க, சுள்ளிட நல்லா இருக்கும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரவள்ளிக் கிழங்குக்குள் இறால் போட்டு செய்யும் போது சுவை அதிகமா இருக்கும் என நினைக்கின்றேன்.

ஒருக்கா... செய்து பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஒருக்கா... செய்து பார்க்க வேண்டும்.

இப்படித்தால் எல்லா திரிகளிலும் ஓடுவதாக ஈழப்பிரியண் அண்ண சொன்ன நியாபகம்  அந்த கறி செய்யுற சட்டியவாவது காட்டுங்க சிறியர் மனசு ஆறுதல் அடையட்டும் 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்சட்டியில் சமைப்பது மிகவும் ருசியாக இருக்கும்.......அதுவும் மரவள்ளி கிழங்கை எப்படி ஆக்கியும் சாப்பிடலாம்.......பகிர்வுக்கு நன்றி சிவரதன்......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இப்படித்தால் எல்லா திரிகளிலும் ஓடுவதாக ஈழப்பிரியண் அண்ண சொன்ன நியாபகம்  அந்த கறி செய்யுற சட்டியவாவது காட்டுங்க சிறியர் மனசு ஆறுதல் அடையட்டும் 😄

முனிவர் ஜீ.... மரவள்ளிக் கிழங்கும், இறாலும்... ஒன்று சேர கிடைத்தவுடன்,
சமைத்து விட்டு... கறி சட்டியை காட்டுகின்றேன். :grin:

என்ன பிரச்சினை  என்றால்...
கடையில்...  இறால் இருந்தால், மரவள்ளிக் கிழங்கு இராது.
மரவள்ளிக் கிழங்கு இருந்தால்... இறால் இருக்காது.
இரண்டும் கடையில் இருந்தால், அந்தக் கிழமை கடைக்கு நான் போயிருக்க மாட்டன்.    
அதுதான்... பெரிய சிக்கலாக இருக்குது. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரவள்ளிக் கூழ் பிரமாதம். கொஞ்சம் இறுக்கமாக காய்ச்சினால் சோற்றுடன் உண்ணலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

முனிவர் ஜீ.... மரவள்ளிக் கிழங்கும், இறாலும்... ஒன்று சேர கிடைத்தவுடன்,
சமைத்து விட்டு... கறி சட்டியை காட்டுகின்றேன். :grin:

என்ன பிரச்சினை  என்றால்...
கடையில்...  இறால் இருந்தால், மரவள்ளிக் கிழங்கு இராது.
மரவள்ளிக் கிழங்கு இருந்தால்... இறால் இருக்காது.
இரண்டும் கடையில் இருந்தால், அந்தக் கிழமை கடைக்கு நான் போயிருக்க மாட்டன்.    
அதுதான்... பெரிய சிக்கலாக இருக்குது. 😂

எனக்கும் உதே பிரச்சனைதான்.
உந்த ஆபிரிக்கன் மரவள்ளிக்கிழங்கு ஒரு சதத்துக்கும் உதவாது. பாப்பம் எங்கையாலும் கரவெட்டி/துன்னாலை மரவள்ளிக்கிழங்கு வந்துதெண்டால் உடனை வாங்கி சமைக்கத்தான் இருக்கு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

எனக்கும் உதே பிரச்சனைதான்.
உந்த ஆபிரிக்கன் மரவள்ளிக்கிழங்கு ஒரு சதத்துக்கும் உதவாது. பாப்பம் எங்கையாலும் கரவெட்டி/துன்னாலை மரவள்ளிக்கிழங்கு வந்துதெண்டால் உடனை வாங்கி சமைக்கத்தான் இருக்கு....

ஆபிரிக்க மரவள்ளிக் கிழங்கு வாங்கும்போது...ஆபிரிக்காவின் எந்தப் பகுதியிலிருந்து வருகின்றது என்று அறிய முடியுமா என்று பாருங்கள்..!
மேற்கு ஆபிரிக்கா எனின் கிழங்கு ..உரும்பிராய்க் கிழங்கு மாதிரியே இருக்கும்..!
அதே மாதிரி....றால்களும் சவூதி அரேபியாப் பக்கமிருந்து வருகின்றதா என்று கேட்டு வாங்குங்கள்!
அவுஸ்திரேலியாவில்...எங்கெங்கு இருந்து...இந்த உணவுப்பொருட்கள் என்று லேபல்களில் குறிப்பிடப் பட வேண்டும் என்று சட்டம் உள்ளது என்று நினைக்கிறேன்..! 
வியட்னாம், கம்போடியா போன்ற இடங்களிலிருந்து வருகின்ற..மீன்களை நான் வாங்குவதில்லை!

ஆளை விடுங்கய்யா....மரவள்ளியும் வேண்டாம், றாலும் வேண்டாம் எண்ட மன நிலை வந்திருக்க வேண்டுமே?😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

ஆபிரிக்க மரவள்ளிக் கிழங்கு வாங்கும்போது...ஆபிரிக்காவின் எந்தப் பகுதியிலிருந்து வருகின்றது என்று அறிய முடியுமா என்று பாருங்கள்..!
மேற்கு ஆபிரிக்கா எனின் கிழங்கு ..உரும்பிராய்க் கிழங்கு மாதிரியே இருக்கும்..!
அதே மாதிரி....றால்களும் சவூதி அரேபியாப் பக்கமிருந்து வருகின்றதா என்று கேட்டு வாங்குங்கள்!
அவுஸ்திரேலியாவில்...எங்கெங்கு இருந்து...இந்த உணவுப்பொருட்கள் என்று லேபல்களில் குறிப்பிடப் பட வேண்டும் என்று சட்டம் உள்ளது என்று நினைக்கிறேன்..! 
வியட்னாம், கம்போடியா போன்ற இடங்களிலிருந்து வருகின்ற..மீன்களை நான் வாங்குவதில்லை!

ஆளை விடுங்கய்யா....மரவள்ளியும் வேண்டாம், றாலும் வேண்டாம் எண்ட மன நிலை வந்திருக்க வேண்டுமே?😀

ஊரிலை எல்லாம் மாரிகாலங்களிலை மரவள்ளிக்கிழங்கு முக்கிய சாப்பாடாய் இருக்கும். அதிலையும் பால் அவியல், சும்மா அவியலோடை சம்பல் எண்டு தூள் கிளப்பும். மரவள்ளிக்கிழங்கு கறிக்கு கூனி றால் போட்டு சமைப்பினம். சொல்லி வேலை இல்லை.😁

நிற்க...

புங்கையர்! யூ நோ  மரவள்ளிக்கிழங்கு எண்டால் இந்த சிங்கனை இருந்த இடத்தை விட்டு அசைக்க மாட்டியள். ஒரு கை பாத்திட்டுத்தான் போவன்.  அது சிம்ரன் வந்தாலும் சரி திரிசா காட்சி தந்தாலும் சரி :cool:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்முறை பகிர்விற்கு நன்றிகள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/5/2021 at 21:44, தமிழ் சிறி said:

முனிவர் ஜீ.... மரவள்ளிக் கிழங்கும், இறாலும்... ஒன்று சேர கிடைத்தவுடன்,
சமைத்து விட்டு... கறி சட்டியை காட்டுகின்றேன். :grin:

என்ன பிரச்சினை  என்றால்...
கடையில்...  இறால் இருந்தால், மரவள்ளிக் கிழங்கு இராது.
மரவள்ளிக் கிழங்கு இருந்தால்... இறால் இருக்காது.
இரண்டும் கடையில் இருந்தால், அந்தக் கிழமை கடைக்கு நான் போயிருக்க மாட்டன்.    
அதுதான்... பெரிய சிக்கலாக இருக்குது. 😂

இங்கு மரவள்ளி மிக மலிவு அண்ண 3 கிலோ 120 ரூபாய் ( ஒரு தூக்கு) இறாலும் கிடைக்கும்  ஆனால் என்ன மரவள்ளி கிழங்கு கெதியா அடிபிடிக்கும் ( இத சொன்னா வீட்டில சமையல் வேலை நடக்குதோ என கேட்பார்கள் ) கிளறிக்கொண்டே இருக்கவேண்டும் நாங்கள் சில வேளைகளில் இறாலுக்கு பதிலாக கருவாடு கறிமாதிரி சமைத்து எடுப்போம் வாசனை வேற லெவலாக இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்முறைக்கு பாராட்டுக்கள்.
உங்கள் யாழ் காணொளி நிறைய தடவைகள் பார்த்திருக்கிறேன்.
கோழி கூவுது.
காகம் கரையுது.
நாய் குரைக்குது.
எல்லாவற்றையும் இழந்து விட்டோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இங்கு மரவள்ளி மிக மலிவு அண்ண 3 கிலோ 120 ரூபாய் ( ஒரு தூக்கு) இறாலும் கிடைக்கும்  ஆனால் என்ன மரவள்ளி கிழங்கு கெதியா அடிபிடிக்கும் ( இத சொன்னா வீட்டில சமையல் வேலை நடக்குதோ என கேட்பார்கள் ) கிளறிக்கொண்டே இருக்கவேண்டும் நாங்கள் சில வேளைகளில் இறாலுக்கு பதிலாக கருவாடு கறிமாதிரி சமைத்து எடுப்போம் வாசனை வேற லெவலாக இருக்கும் 

முனிவர் ஜீ...   இங்கு வரும் மரவள்ளிக் கிழங்கு, தென்னாபிரிக்கா, அல்லது தென் அமெரிக்காவில் இருந்து வருபவை. அருமையாகத்தான் ... நன்றாக அவியக் கூடிய கிழங்குகள் வரும்.  பெரும்பாலான நேரங்களில்... சரியான கடினமான கிழங்குகளாக இருக்கும். அதனால் பயத்தில், வாங்குவது குறைவு. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.