Jump to content

உலகப் பத்திரிகைச் சுதந்திரத் தினம் 03.05.2021 “பொதுநன்மையைக் குறித்த தகவல்கள்” – இவ்வாண்டுக்கான மையக்கருப்பொருளாக அறிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகப் பத்திரிகைச் சுதந்திரத் தினம் 03.05.2021 “பொதுநன்மையைக் குறித்த தகவல்கள்” – இவ்வாண்டுக்கான மையக்கருப்பொருளாக அறிவிப்பு

 
Capture-1.jpg
 44 Views

நமக்கான சுதந்திரமான தேசியத் தகவல் பரிமாற்றத்தை நாமே உருவாக்கினாலே அது பொது நன்மை குறித்ததாகும்.

ஐக்கியநாடுகள் சபையின் கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) உடைய “உலகப் பத்திரிகைச் சுதந்திர தினம்” இம்முறை 03.05.21(இன்று) இடம் பெறுகிறது. நமீபியாவின் வின்ட்கொக் நகரத்தில் உலகப் பத்திரிகைச் சுதந்திரம் குறித்த பிரகடனம் வெளியிடப்பெற்ற முப்பதாவது ஆண்டுப் பெருநினைவாக இம்முறை நமீபிய அரசாங்கம் உலக மாநாடு ஒன்றையும் ஏப்ரல் 29 முதல் மே 3 வரை நடத்தி, உலகப் பத்திரிகைத் தினத்திற்கு மதிப்பளித்துள்ளது.

இவ்வாண்டு பொது நன்மையைக் குறித்த தகவல்கள் வெளியாவதை உறுதிப்படுத்த மூன்று செயற்திட்டங்களை யுனெஸ்கோ முன்வைத்துள்ளது.

  • செய்தி ஊடகத்தின் பொருளாதார ஆற்றலைப் பேணுதல்.
  • வலைத்தொடர்பு கம்பெனிகள் குறித்த வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தலுக்கான பொறிமுறைகளை வலுப்படுத்துதல்.
  • ஊடகத்தினதும், தகவல் வழி அறிவூட்டலதும் ஆற்றல், மக்களை மதித்தலை விழுமியமாகக் கொண்டு, அவர்களை ஏற்கவைக்கக் கூடிய வகையில், அவர்களுடைய தேவையையும் பாதுகாப்பையும் கொண்டிருந்தாலே, ஊடகத்துறையால் பொதுநன்மை குறித்த தகவல்களை வெளியிட முடியும் என்பதை மலர்ச்சி அடையச் செய்வது.

இவற்றுடன் ஊடகக் கடமையில் உயிர் நீத்தவர்களது நினைவேந்தல்களைப் போற்றி அவர்களுடைய பொதுநன்மையைப் பேணிய பெரும்பணியைப் போற்றுதல் என்பது பழக்கப்படுத்தப்பட்டு, வழக்கப்படுத்தப்படல் வேண்டும் என்ற வேண்டுகோளும் உலகப்பத்திரிகைச் சுதந்திரத்தினத்தின் முக்கிய வேண்டுகோளாக அமைகிறது.

யுனெஸ்கோவின் இந்த நெறிப்படுத்தலின் வழி ஈழத்தமிழர்களுடைய பத்திரிகைச் சுதந்திரத்தை எடுத்து நோக்கின், அவர்களுடைய தேசியத் தலைமையின் கீழ் அவர்களுடைய நடைமுறை அரசு செயற்பட்ட மூன்று தசாப்தங்களிலும் இந்த நோக்குகளை அவர்களுடைய தேசியத் தலைமை கொண்டிருந்ததை ஈழத்தமிழர்கள் நன்கறிவர். இவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து அனைத்து மக்களுக்குமான ஊடகமாக ஈழத்தமிழர்களின் ஊடகத் துறை விளங்க வேண்டும் என்னும் உறுதியிலேயே தேசியத் தலைவர் அவர்கள் பத்திரிகைகள் சென்றடைய இயலாத மக்களுக்கும் அலைவழி தகவல் அறிவூட்டல் வளர்க்கப்பட வேண்டும் என்னும் பெருநோக்கில் வானொலிச் சேவைகளைத் தொடங்கவும், தொலைக்காட்சி சேவைகளையும், சமுகவலைத்தள உறவாடல்களையும் வளர்க்க வலியுறுத்தினார். தாயகத்தில் இவற்றை உறுதியான முறையில் வளர்க்கவும் இயன்றதெல்லாம் செய்தார்.

கேர்ணல் கிட்டு அவர்களும் இலண்டனில் அவர் வாழ்ந்த காலத்தில் ஈழத்தமிழ் மக்களின் பொதுக் கருத்துக்கோளத்திற்கான கட்டமைப்பாக ஊடகம் உடனடியாக வளர்க்கப்பட வேண்டுமெனக் களத்தில் பத்திரிகையையும் எரிமலை, சுதந்திரப் பறவைகள், போன்ற மாத இதழ்களையும் பருவ இதழ்களையும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களைக் கொண்டு உருவாக்கச் செய்தார். இதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நிதியீட்டம் செய்த புலம்பெயர் ஈழத்தமிழர்களின் அளப்பரிய பங்களிப்புகளே, ஈழத்தமிழ் மக்களுக்கான பலம்பொருந்திய மின்னியல் உலகம் கட்டமைக்கப்பட்டு, ஈழத்தமிழர்களின் பொதுநன்மை குறித்த தகவல்களால் உலகுக்கு ஈழத்தமிழர்கள் குறித்த வெளிப்படைகள் அறிவூட்டப்பட்டதும் அல்லாமல், ஈழத் தமிழர்களின் உலகளாவிய பொதுக்கருத்துக்கோளம் பெருவளர்ச்சி பெறவும் செய்தது.

இதனால் உலகத் தமிழர்களின் தேசிய ஊடகப் பலத்தை உடைப்பதற்கான பலம் பொருந்திய செயற்பாடுகளை சிறீலங்கா அரசு காலத்துக்குக் காலம் செய்து வந்தமையின் உச்சியாகப் பாரிசில் ஊடகப்போராளி கஜன் இனஅழிப்புக்கு உள்ளாக்கப்பட்டது வரலாறு. அத்துடன் ஈழத்தமிழ்த் தேசிய ஊடகத்தினை வர்த்தக ஊடகங்களாக மாற்றும் முயற்சியையும் காலத்துக்குக் காலம் சிறீலங்கா தொடர்ந்து செய்து வந்தது.

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு மூலமாக ஈழத்தமிழ்மக்களின் நடைமுறை அரசை ஆக்கிரமிப்புச் செய்து அவர்களின் தாயகங்களை தனது படைபல ஆட்சிக்குட்படுத்தியுள்ள சிறீலங்கா அதன் பின்னர் தனது ஆயுதமுனையில் மக்களின் அரசியல் பணிவைப் பெறுவதையும் தனது இனஅழிப்பு, இனத்துடைப்பு, பண்பாட்டு இனஅழிப்பு என்னும் மூவகை அனைத்துலகக் குற்றச்செயல்களும் குறித்த தகவல்கள் உலகை வந்தடைவதைத் தாமதப்படுத்தவும் கூடுமானால் தடுக்கவும் ஈழத் தமிழர்களின் தேசிய ஊடகப்பலத்தைச் சிதறடிப்பது என்னும் மனித உரிமை மீறல் செயற்திட்டத்தைத் தனது அரசாங்கத்தின் அரசியற் செயற்திட்டமாகவே முன்னெடுத்து, ஈழமக்களின் பத்திரிகைச் சுதந்திரத்திற்கு மட்டுமல்ல உலகின் பத்திரிகைச் சுதந்திரத்திற்கே மிகப்பெரிய சவால்களை ஏற்படுத்தி வருவதை 2021 ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிய மனித உரிமைகள் கண்காணிப்புக்குழுவின் “சிறீலங்கா : ‘அரசியல் பழிவாங்கல்களை மறுக்கிறது – அரசாங்கம்  இன்றைய சிறீலங்கா அதிபர் உள்ளடங்கலாக குற்றச்செயல்களில் ஈடுபட்ட சகபாடிகளின் குற்ற முழுமைகளை மறைத்து அவர்கள் மேல் நீதியை நிலைநாட்ட வழக்குத் தொடரும் முறைமைகளில் இருந்து காப்பாற்றுகிறது” என்ற  கவனப்படுத்தல் செய்தி கூட உறுதியாக்கி வருகிறது.

2021 மார்ச் 25ஆம் திகதிய மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் “சிறிலங்கா : நீதியை முன்னெடுப்பதற்கான ஐ.நாவின் முக்கிய தீர்வு முறைமை – கவனத்தில் கொண்டு அரசாங்கம் உரிமைகளுக்காகக் குரல் எழுப்புபவர்களைப் பழிவாங்குகிறது” என்ற கவனப்படுத்தல் செய்தியில், ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் உருவாக்க முயலும் சிறீலங்காவின் யுத்தக்குற்றச் செயல்கள், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள், மனிதஉரிமை வன்முறைகள் என்பன குறித்த தரவுகளையும் தகவல்களையும் மக்கள் அளிப்பதைத் தடுக்கும் வகையில் மக்களைக் கட்டுப்படுத்தும் ஆணைக்குழுவொன்றை உருவாக்கச் சிறீலங்கா சட்டவரைவைத் தயாரித்துள்ளமையைக் கடுமையாகக் கண்டித்து, ஐக்கியநாடுகள் சபை நீதியை மறுத்து அட்டூழியங்கள் செய்பவர்கள் மேல் தகுந்த நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் அச்சப்படுத்தல் மூலமும், மிரட்டல் மூலமும் மனித உரிமைகள் குறித்த உண்மைகளை வெளிவராது தடுக்கும் சிறீலங்காவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளிகளாகிய ஐரோப்பிய ஒன்றியமும் சிறீலங்காவின் வெளிநாட்டு நேரடி முதலீட்டாளரான ஐக்கிய இராச்சிய அரசும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் தீர்மானத்தினை முன்னெடுத்தவர்கள் என்ற வகையில் சிறீலங்காவில் மனித உரிமைகள் சீர்பெற தங்களுடைய அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இத்தகைய சூழலில் ஈழத்தமிழ் மக்களின் பொது நன்மைகள் குறித்த தகவல்களை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டிய தேசிய ஊடகத்தின் தேவையின் அவசியம் உணரப்படுகிறது. எனவே புலம்பதிந்த ஈழத்தமிழர்கள் தங்களுக்கான தேசிய ஊடகத்தை உருவாக்கல், அதற்கான நிதியீட்டங்களைச் செய்தல், மக்களை மதித்து அவர்களுடைய தேவைகளையும், பாதுகாப்பையும் வெளிப்படையாக்கல், ஈழத்தமிழ் பத்திரிகைச் சுதந்திரத்திற்காக உயிரிழந்த ஊடகவியலாளர்கள் நினைவேந்தல் களைப் போற்றுதல் என்னும் யுனெஸ்கோ காட்டிய நெறிமுறைகள் மூலம் தங்களுக்கான தேசிய ஊடகத்தைக் காலதாமதமின்றி கட்யெழுப்புதல் என்பது ஈழத்தில் தமிழ் மக்களின் உரிமைகளை மீட்பதற்கான உடனடித்தேவை என்பதை மனதிருத்திச் செயற்பட வேண்டிய காலமிது.

– ஆசிரியர், ஊடகவியலாளர், ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன் –

 

 

https://www.ilakku.org/?p=48755

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவரும் வரம்பு மீறவில்லை. நானும் மீறவில்லை.  சீமானை எதிர்த்து எழுதுவோர் பயத்தில் எழுதுவதாக எழுதினார் - அதை மறுத்து நான் கருத்து எழுதியுள்ளேன். அதே போல் யாழில் நாம் குத்தி முறிவது வீண் வேலை என்றார் - ஆம் இரு பக்கத்திலும் அது வீண்வேலையே என அவருடன் உடன்பட்டேன். ஏன் எண்டால் நான் திமுக அனுதாபியோ அல்லது கருணாநிதி குடும்ப வக்கீலோ அல்ல. ஆகவே அவர்களை defend பண்ணி மினெக்கெட நான் தயாரில்லை. சீமானை எதிர்ப்பவர் = திமுக ஆதவாளர் என்பது நீங்கள் போட்ட தவறான சமன்பாடு. நான் சீமானை எதிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு, திமுக ஆதரவு அதில் ஒன்றல்ல.
    • ◌தமிழுக்கும் யாழுக்கும் எமக்கும் தேவையான  உறவு வாருங்கள்  கூடுவோம் பேசுவோம்  மகிழ்ந்திருப்போம்..
    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.