Jump to content

கள உறவுகளை அழைக்கின்றோம்


Recommended Posts

கள உறவுகள் அனைவருக்கும் வணக்கம்,

நலமறிய ஆவல். இந்த பதிவை ஒரு சகோதர நலம் விசாரித்து, வேற்றுமைகளை மறந்து, நாம் நாமாக இருக்கும் பதிவாக பாவியுங்கள்.

ஈழத்தை விட்டு தூர இருக்கும் நேரத்தில், எங்களை இணைத்த பெருமை யாழுக்கே. என்னை போல பலருக்கு தமிழ் கற்பித்து எழுத வைத்ததும் யாழே.

குடும்பத்தை விட்டு வந்து தனியே இருக்கும் பல சகோதரர்களுக்கு, அக்கா, தங்கை, நண்பர்கள் என நல்ல உள்ளங்களை அறிமுகப்படுத்தியதும் யாழ் தான்.

யாழில் அப்போ அப்போ சிறிய பிரச்சனைகள் வருவது சகஜம் தானே. எங்களில் யார் தான் இதில் சிக்கவில்லை?! தனி மனித தாக்குதல் சில நேரங்களில் நடப்பது தானே! முடிந்தால் பதில் சொல்லுங்கள், நிர்வாகத்திற்கு தெரிவுபடுத்துங்கள். அல்லது அப்படியே விட்டுவுடுங்கள். பதில் சொன்னால் தானே பிரச்சனை அதிகமாகும்.

ஒருவர் பேசுவது பிடிக்கவில்லை எனில், தனிமடலில் தெரிவியுங்கள். எழுதியவர் உடனே திருத்திவிடுவார் தானே!

இப்படி சின்ன பிரச்சனைகளால் நம்மிடையே இடைவெளி வருவதை என்னால் தாங்கிகொள்ள முடியவில்லை.

வாருங்கள்..... கை கோருங்கள்.... நாமெல்லாம் ஈழத்தாயின் பிள்ளைகள். ஒற்றுமையே பலம்.

கள உறுப்பினர்கள் அனைவரையும் இங்கு பதில் தந்து கை கோர்க்க அழைக்கின்றேன்.

அன்புடன்

தூயா

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் தூய்ஸ்

இதை்த தான் நானும் சொல்கின்றேன். தனிப்பட்ட பிரச்சனைகள் தனிப்பட்ட விதத்தில் தீர்க்கப்பட வேண்டியவை. அதை ஆண்பெண் பிரச்சனையாக மாற்றுவது எவ்வகையில் சரியானது?

உண்மையில் அதில் ஆண் என்ற வகையில் எனக்கும் ஏற்பட்ட பாதிப்பாகவே நம்புகின்றேன். யாராவது களச் சகோதரிகள், உங்களை நான் பெண் என்ற வேறுபாட்டை வைத்து தாக்கிப் பேசியிருப்பதாக நம்பினால் பகிரங்கமாகவே தெரிவியுங்கள்.

நன்றி.

Link to comment
Share on other sites

தூயிஸ் எங்கே இருந்து சடினா அப்பியர் வாங்கோ நாம நலம், :P

நானும் எனது ஆயுதங்களை ஒப்படைக்காம ஒன்றிணைய தயார்........ B) தூயிஸ் எனக்கு ஒரு சந்தேகம் எப்படி கை கோர்கிறது கணணியில என்னவோ சொல்லுறீங்க சரி சரி நான் கை கோக்க தயார் என்ன நானும் நீங்களும் தூயவன் அண்ணாவுமோ கை கோர்கிறது ஆனா தூயவன் அண்னா என்னோட கை கோப்பாரோ தெறியாது............. <_<

வரட்டா Cool

:D

Link to comment
Share on other sites

முரண்பாடுகள் மனிதர்களுக்குள் சகஜமானது.... அதை தீர்க்க முடியும், ஆனால் மரியாதை என்பது அப்படி அல்ல...! அதை வேண்டியவர் சம்பாதிக்க வேண்டும்...!!

எனது தாயகத்தை கேவலப்படுத்தியவர்கள், அதுக்காக ஊயிரை கொடை ஆக்குபவார்கள் பளித்தவர்கள் இங்கை இல்லை எண்டு சொல்ல முடியவில்லை, அதே மாதிரி என்னை பன்னாடை எண்டவர்கள் எல்லாரும் எனக்கு ஒரே மாதிரித்தான் தெரிவதால்... அவர்களோடை என்னால் எப்போது ஒன்றி நடக்க முடியாது....! மன்னிக்கவும்...!

தூயாவின் அழைப்பை ஏற்க்க முடியாததால் வருந்துகிறேன்... ( என்னை நீங்கள் அழைக்க வில்லை எண்று சொன்னால் மகிழ்ச்சி) <_<

Link to comment
Share on other sites

தேவையில்லாத பிரச்சினை இன்று யாழ் சந்தித்தது .இப்படிபட்ட யாழில் குழப்பத்தை ஏற்படுத்தும் தலைப்புகள் தேவையற்றது அத்துடன் மட்டுறுத்துணர்கள் கருத்துகளை பக்கசார்பாக அகற்றியதும் கவலை அளிகின்றது

Link to comment
Share on other sites

அப்படி கை கோர்க்கவே முடியாதென்பவர்கள்...முடிந்தவ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது தாயகத்தை கேவலப்படுத்தியவர்கள், அதுக்காக ஊயிரை கொடை ஆக்குபவார்கள் பளித்தவர்கள் இங்கை இல்லை எண்டு சொல்ல முடியவில்லை, அதே மாதிரி என்னை பன்னாடை எண்டவர்கள் எல்லாரும் எனக்கு ஒரே மாதிரித்தான் தெரிவதால்... அவர்களோடை என்னால் எப்போது ஒன்றி நடக்க முடியாது....! மன்னிக்கவும்...!

எங்களின் தளபதிக்குள் இத்தனை சோகமா.....

கண்ணீர் வருதுப்பா... அதிலும் உங்களைப் பன்னாடை என்று இனம் கண்டவர்கள் யார்? ( கோவிக்காதீர்கள். நம்மையும் கண்டு பிடிச்சிருக்கின்றார்களாம். <_<)

Link to comment
Share on other sites

தூயா, இந்த தலைப்பை ஆரம்பித்தமைக்கும் முதலில் நன்றி!

கருத்தாடல் செய்வதற்குத்தானே கருத்துக்களம் இருக்கின்றது? ஆனால், கருத்தாடலின் கடைசியில் நாம் டென்சன் ஆகி அவருடன் கதைக்க மாட்டேன், இவருடன் கதைக்க மாட்டேன் என்று கோபம் போடுவது சிறு பிள்ளைத்தனமாக இருக்கின்றது.

என்னுடன் இப்படிதான் ஒரு நண்பன் மூன்றாம் வகுப்பில் கோபம் போட்டார். பிறகு சுமார் 15 வருடங்களின் பின் மீண்டும் அவரை தெருவில் எங்கோ கண்டுவிட்டு, இருவருமாகவே ஆளையாள் பார்த்து சிரித்துவிட்டு பழையபடி நண்பர்களானோம். இன்னொருவருடன் நான்காம் வகுப்பில் கோபம் போட்டது. இன்றுவரை கதைப்பதில்லை. காரணம் வெட்கம், நான் அவரை வழிதெருவில் கண்டால் வெட்கப்படுவேன். அவர் என்னைப் பார்த்து வெட்கப்படுவார். யார் முதலில் திரும்பவும் கதைப்பது என்ற பிரச்சனை.

நீங்கள் யாராவது என்னுடன் கோபம் போட்டாலும் நான் உங்கள் எவருடனாவது கோபம் போடும் நிலமையில் தற்போது இல்லை என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்கின்றேன். நான் ஏற்கனவே செல்வன் என்றொரு மெகா சீரியலை தொடங்கியாயிற்று. கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிக, நடிகைகளுடன் கோபித்துவிட்டு பின்பு எப்படி சீரியலை தொடர்ந்து எழுதுவது?

எனக்கு ஒருவருடனும் கோபம் இல்லை, என்னுடன் முன்பு போல் சகஜமாகப் பழகுமாறு அனைத்து கள உறவுகளையும் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் தூயா,

நலமே! எம் உறவுகள் யாவரும் நலம்தானே?

இங்கு யாரையும் எனக்கு தனிப்பட்டரீதியில் தெரியாது, முகம் கண்டதில்லை , அவரவர் எழுத்துக்களே அவர்களை அடையாளப்படுத்தும் ஆகவே 'கோவம் கொள்ளாது 'யமுனா"வைப்போல் அனைவரும் இருந்தால் நல்லது! பல இடங்களில் பார்த்திருக்கின்றேன். எதையும் இலகுவாக ஏற்றுக்கொள்ளும் தன்மை அவர்பால் ஓர் அன்புப்பிணைப்பை ஏற்படுத்தியது!. யமுனா, உங்கள் கையைக்கொடுங்கள் முதலில் வாழ்த்துச்சொல்ல அப்புறம் கோர்த்துக்கொள்ள! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தயார்!

ஆனா எதுக்குள்ளால் கையைக் கோர்ப்பது. நானும் என் கணனியைத் சுத்திச் சுத்தி துவாரம் எதுக்குள்ளால் ஆவது கை தெரிகின்றதோ என்று பார்த்துக் கொண்டு நிற்கின்றேன்.

Link to comment
Share on other sites

நானும் இணைகின்றேன். தனிப்பட்ட ரீதியில் கோபமில்லை. ஆனால் கருத்துக்கள் நியாயமற்று போனால் பாரபட்சமின்றி. பதில்கருத்தை முன்வைப்பேன். அதற்காகவே தான் இக்களம்.

Link to comment
Share on other sites

வணக்கம் சகோதரி தூயா!

இது ஒரு நல்ல முயற்சி...இதை நாம் ஒரு கோரிக்கையாக கருதவேனுமே ஒழிய...இந்தத் தலைப்பின் கீழ் அரட்டை வேண்டாம்..எங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்தால் நல்லது.

அடுத்ததாக எனது கருத்து என்னவென்றால் சின்னச் சின்ன விடயத்திற்கெல்லாம் தலைப்புக்களை ஆரம்பிப்பது யாழ்த் தளத்திற்கு அழகல்ல.

பழகுவோம் பண்பாக, இருப்போம் ஒற்றுமையாக.....

இந்த திட்டத்திற்கு எல்லோரும் ஒத்துழைப்போமாக...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல ஒரு உள்ளத்தின் வேண்டுகோளுக்கு இனங்க நான் எழுதியதை அழிக்கிறேன்.

அதுக்காக எழுதியதுக்காக நான் மனம் வருந்தவில்லை நன்றி

Link to comment
Share on other sites

எல்லாருக்கும் முதல் கண் என் வணக்கங்கள்(என்னை ஓவரா பில்டப் காட்டுறான் என்று பார்கிறீங்களோ சும்மா சும்மா )

தூயிஸ் உங்க கையில் இருகிற அண்ணாவின்ட கையை கொடுங்கோ பார்போம்.................கையில் மோதிரம் போட்டு இருந்தா கவனம்................நான் மோதிரம் எல்லாம் போடுறதில்லை பாருங்கோ..............மாப்பி நீங்களும் கையை தர போறீங்களா..............உங்க கையில மோதிரம் இருக்கோ???? இருந்தா என் பக்கம் தாங்கோ!!!!!! :P

தமிழ் தங்கை அக்கா மிக்க நன்றி................கையை தந்துவிட்டேன் வாழ்த்தை நீங்க வந்து ஆறுதலா சொல்லுங்கோ அப்படியே கையையும் தாங்கோ ஒன்றிணைய..............பயப்பிடவேண்டாம

Link to comment
Share on other sites

அச்சாப்பிள்ளை தூயா அயந்தாக்காவயும் பறவைகளையும் கூட்டிக்கொண்டு வாங்கோ ...நான் அவைக்குத்தான் கைகுடுக்க வேணும்.

Link to comment
Share on other sites

தூயா யாழ்களம் பல நல்ல நண்பர்களை தந்தது என்பதில் மறு பேச்சுக்கு இடம் இல்லை. அதே போல பல நல்ல தகவல்களை பலருக்கும் வழங்கிவந்திருக்கிறது, வழங்கும்.

கருத்து முரண்பாடுகளை பகையாக கொண்டு...... தொடர்ந்து காழ்புணர்வை காவி திரிவதால் எந்த பலனும் இல்லை. அது தான் எனது கருத்து.

அனைவரும் நட்பாக இருப்பதெ நல்லது.

Link to comment
Share on other sites

தூயா..என்ர கையையும் கோருங்கோ..... :D

ஆமா என்னோட கண்ணைகட்டி கோவம் போட்ட வெண்ணிலாக்கா எங்க? வந்து மற்ற கையை கோருங்கோ :unsure:

Link to comment
Share on other sites

ஜமுனா,

கைகோர்க்கும்போது எனக்கு மற்றவர்களிடம் இருந்து பிடுங்கித்தான் பழக்கம், கொடுத்து பழக்கம் இல்லை. மேலும், மோதிரம், மணிக்கூடு என்பன திருட்டு போகும் என்ற காரணத்தால் கைகோர்க்கும் நேரங்களில் அவற்றை போடுவதில்லை...

மற்றையது, உங்கள் எல்லாருடனும் கைகோர்ப்பதில் பிரச்சனை இல்லை, கையில் கிள்ளினாலும் பரவாயில்லை ஆனால் கையை நீட்டும் போது பழைய கோபத்தில் எனது கையில் பிளேடு போடாமல் இருந்தால் சரி.. :unsure:

Link to comment
Share on other sites

நிலாஅக்கா நீங்களும் கையை தாறீங்கள் நிலா(மூண்) சுடுமா எனக்கு தெறியாது தொட்டு பார்கிறேன்...............நீங்க சொல்லுற மாதிரி கருத்தை வையுங்கோ............நாம மட்டும் என்னவாம் பாருங்கோ......................இது தான் சாட்டு என்றூ என்னை திட்டுறதில்லை நான் பாவம்...........
:P :P :P
ஆமா என்னோட கண்ணைகட்டி கோவம் போட்ட வெண்ணிலாக்கா எங்க? வந்து மற்ற கையை கோருங்கோ :unsure:
:P :P நாங்க தனிமடலில் தானே கோவப்பட்டோம். அதுவும் இப்ப நேசம் னு சொல்லி நேசக்கரம் நீட்டிட்டம் ல. அப்புறம் என்ன? :P :P :
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கை கோர்த்துட்டோமல...அது சரி யார் யாரோட கோபம் வேண்டும் என்றா அவுஸ்ரெலிய பிரதிநிதியா வந்து எரிக்சொல்கேய்ம் மாதிரி எரிக் புத்து என்று வரவோ (ஓ நீங்களோ எரிக் சொல்கேயிமோ இங்கே).........கையை கொடுகிறது முக்கியமில்லை கையை கொடுத்து காலை வாராம விட்டா சரி ஜம்மு உமக்கு தான் சொல்லுறேன் பாரும்..........

ஜம்மு அப்ப நானும் வரட்டா :P

handshakeprgt7.jpg

இப்படி தந்தா தான் கை கோர்பேன் பாருங்கோ அவுஸ்ரெலியன் டொலரும் எடுக்கபடும்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலஞ்சமா சீ சீ அன்பளிப்பு..நீங்க பப்பிளிக்காவே தரலாம்

B)

Link to comment
Share on other sites

தலைப்பில் ஒன்றுபடாவிட்டாலும் அரட்டையில் ஒன்று பட்டு விடுகிறோம்...........

Link to comment
Share on other sites

அப்படியென்றால் யாழ் களத்தின் முகப்பு படத்தில் லிசான் எழுதிய பொன்மொழியாகிய

தமிழால் இணைவோம் தாயகத்திற்காய்!

என்பதை மாற்றி

அரட்டையால் இணைவோம் குரட்டைக்காய்!

என்று மாற்றி எழுதச் சொல்வோமா? :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.