Jump to content

`கே.வி. ஆனந்த் மரணத்திற்கு தடுப்பூசி காரணமாக இருக்க வாய்ப்பில்லை!' - விளக்கும் மருத்துவர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

20 நாள்களுக்குப் பிறகு தடுப்பூசியினால் ஒவ்வாமை ஏற்பட்டு, அதன் மூலம் இதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு. இன்னும் சொல்லப்போனால் வாய்ப்பே இல்லை எனலாம்.

பிரபல இயக்குநர் கே.வி.ஆனந்த், கோவிட்டுக்கு பலியானது மிகவும் வருந்தத்தக்கது. வயதும் அதிகமில்லை 54-தான். கோலிவுட் முழுவதும் கலங்கி நிற்கிறது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் தொடங்கி இன்று கே.வி.ஆனந்த் வரை எத்தனை பலிகள் திரையுலகிலிருந்து.

இந்நிலையில், அவர் மரணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் உலவுகின்றன. கே.வி.ஆனந்த் 20 நாள்களுக்கு முன் கோவிட் தடுப்பூசி போட்டிருக்கிறார். ஆனாலும், சமீபத்தில் அவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. நெஞ்சுவலி என்று மருத்துவமனை சென்றவர் திரும்பவில்லை. இவருடைய மரணத்துக்கும் தடுப்பூசி ஒவ்வாமை காரணமாக இருக்கும் என்ற கோணத்தில் செய்திகள் வருகின்றன. இதிலிருக்கும் ஒவ்வொரு விஷயத்துக்கும் விளக்கத்தைப் பார்ப்போம்.

corona
 
corona

கோவிட் இரண்டாம் அலையைப் பொறுத்தவரை தொற்று பாதித்த முதல் பத்து நாள்கள் மிகவும் முக்கியமானவை. தொற்றானது நுரையீரல் வரை சென்று பாதிக்கும் நிலையில் சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் மரணத்தைத் தடுக்க முடியும். இந்தத் தொற்றானது நேரடியாக நுரையீரலை பாதிப்பதோடு உடலில் ரத்தத்தில் ரத்த உறைவை ஏற்படுத்திவிடுகிறது.

இந்த ரத்த உறைவானது உடலில் இதயம், மூளை என எங்கு வேண்டுமானாலும் சென்று பாதிக்கக்கூடும். இந்த உறைவு இதயத்தைப் பாதிக்கும்போது நுரையீரலில் ஆக்ஸிஜன் அளவு குறைவதோடு மாரடைப்பு ஏற்படும். மூளையைப் பாதிக்கும்போது பக்கவாதமாகக்கூட சிலருக்கு நோய்த்தொற்று வெளிப்படுகிறது.

 

இணை நோய்களான சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், இதய நோய்கள், சிறுநீரக நோய்கள் ஆகியவை கொரோனாவுக்கு எதிரான நம்முடைய உடலின் போராட்டத்தை மேலும் பலவீனப்படுத்திவிடுகின்றன. அதனால் நோய்த்தொற்று வெகு விரைவில் நுரையீரலை பாதிப்பதுடன் மரணத்தையும் சமீபமாக்கிவிடுகிறது.

தடுப்பூசி எடுத்தும் தொற்று ஏற்பட்டது எப்படி?

இரு தவணை தடுப்பூசிகளும் எடுத்து ஒரு மாதம் நிறைவடைந்த பின்னரே நமக்கு முழுமையான எதிர்ப்பு சக்தி உண்டாகிறது. அதற்குப் பிறகும் கொரோனா நோய்த்தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்பு இருந்தாலும், அது அதிதீவிர தொற்றாக மாறக்கூடிய வாய்ப்பும் உயிரிழப்பு நிகழ்வதும் மிகவும் அரிது. ஒரே ஒரு தடுப்பூசி மட்டுமே எடுத்துக்கொண்டால் நமக்கு 10% மட்டுமே பாதுகாப்பு கிடைக்கும்.

கொரோனா தடுப்பூசி
 
கொரோனா தடுப்பூசி

எனக்குத் தெரிந்த ஒரு நபர் இரண்டு தவணை தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டார். இரண்டாவது தவணை போட்டுக்கொண்ட அன்றிலிருந்து அவருக்குக் காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஆரம்பித்திருக்கின்றன. அவர் இரண்டாவது ஊசியின் பக்க விளைவு என்று நினைத்துக்கொண்டு 10 நாள்கள் வரை மருத்துவமனைக்குச் செல்லவில்லை.

பத்து நாள்கள் கழித்து கோவிட்-19 என்று கண்டுபிடிக்கப்பட்டபோது அவருடைய நுரையீரலில் 60% நோய்த்தொற்று இருந்தது. அவரைக் காப்பாற்றவும் முடியவில்லை என்பதுதான் சோகம். தடுப்பூசி எடுத்துக்கொண்டால் அதன் பக்கவிளைவுகள் அதிகபட்சம் 72 மணி நேரம் மட்டுமே இருக்கும். 72 மணி நேரத்துக்குப் பிறகு காய்ச்சல், உடல்வலி, தலைவலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அது தடுப்பூசியின் எதிர்வினையாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் குறைவு. அது கோவிட் தொற்றின் அறிகுறியாக இருக்கலாம்.

 

தடுப்பூசி ஒவ்வாமையா?

தடுப்பூசி ஒவ்வாமை என்பது தடுப்பூசி எடுத்துக்கொண்ட முதல் 24 மணி நேரத்துக்குள் நம் உடலில் உண்டாகக்கூடிய அலர்ஜி என்ற எதிர்வினை. பெரும்பாலானவர்களுக்கு ஊசி செலுத்தப்பட்ட அரை மணிக்குள் ஒவ்வாமை வெளிப்பட்டுவிடும். அதனால்தான் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களை 30 நிமிடங்கள் வரை மருத்துவமனையிலேயே காத்திருக்குமாறு செய்கிறோம். கே.வி.ஆனந்த் தடுப்பூசி எடுத்து 20 நாள்கள் ஆகிவிட்டன. 20 நாள்களுக்குப் பிறகு தடுப்பூசியினால் ஒவ்வாமை ஏற்பட்டு, அதன் மூலம் இதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு. இன்னும் சொல்லப்போனால் வாய்ப்பே இல்லை எனலாம்.

ஜெயஸ்ரீ ஷர்மா
 

கோவிட்-19 பாதிப்பு அதிதீவிரமாக இருக்கும் இந்த நேரத்தில் நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியமாக இருக்க வேண்டாம். தேவையற்ற வதந்திகளைப் பரப்பாமல் இருப்பதும் பெருந்தொற்றுச் சூழலில் நமக்கான சமுதாயக் கடமையாகும்.

- மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மா2

 

`கே.வி. ஆனந்த் மரணத்திற்கு தடுப்பூசி காரணமாக இருக்க வாய்ப்பில்லை!' - விளக்கும் மருத்துவர் | Vaccines could not be the reason for director KV Anand's death - Vikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.