Jump to content

27 வருடகால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் பில் - மெலிண்டா கேட்ஸ் ஜோடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

27 வருடகால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் பில் - மெலிண்டா கேட்ஸ் ஜோடி

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் திருமணமான 27 வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகக் திங்களன்று கூறியுள்ளனர்.

CC1mWW0H.jpg

மைக்ரோசாப்டின் பில்லியனர் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் ஒரு எழுத்தாளரும் வணிகப் பெண்ணுமான மெலிண்டா கேட்ஸ், தங்கள் தனிப்பட்ட டுவிட்டர் கணக்குகளில் வெளியிடப்பட்ட ஒரே மாதிரியான அறிக்கையில் விவாகரத்து முடிவை அறிவித்தனர்.

"கடந்த 27 ஆண்டுகளில், நாங்கள் மூன்று குழந்தைகளை வளர்த்துள்ளோம், உலகெங்கிலும் வேலை செய்யும் ஒரு அடித்தளத்தை உருவாக்கியுள்ளோம், இது அனைத்து மக்களையும் ஆரோக்கியமான, உற்பத்தி நிறைந்த வாழ்க்கையை நடத்த உதவுகிறது" என்று அந்த பதிவில் கூறியுள்ளனர்.

"நாங்கள் தொடர்ந்து அந்த நோக்கத்தில் ஒரு நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்கிறோம், எங்கள் தொழில் வாழ்க்கையை இணைந்தே தொடருவோம், ஆனால் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் ஒரு ஜோடிகளாக நாங்கள் ஒன்றாக வாழ முடியும் என்று நாங்கள் இனி நம்பவில்லை." என்றும் தெரிவித்துள்ளனர்.

மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷனின் நிறுவனரான 65 வயதான பில் கேட்ஸ் உலகின் நான்காவது பணக்காரர். 56 வயதான மெலிண்டா கேட்ஸ் முன்னாள் மைக்ரோசாஃப்ட் மேலாளர் ஆவார், அவர்கள் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றனர்.

இவர்கள் இருவரும் 1994 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/104849

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவையளுக்குள்ளை.... என்ன, பிரச்சினையாம்?

சாதகம் பார்த்து... கலியாணம் கட்டாட்டி, இப்பிடியான பிரிவு ஏற்படத்தான் செய்யும். 

Link to comment
Share on other sites

ஏழைகளுக்கு உதவுவதாகக் கூறிக் கொண்டு ஏழை மக்களை அடிமைகளாக்கும் இரு பண முதலைகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, இணையவன் said:

ஏழைகளுக்கு உதவுவதாகக் கூறிக் கொண்டு ஏழை மக்களை அடிமைகளாக்கும் இரு பண முதலைகள்.

இனி

இரண்டு பேரும் ஒவ்வொரு பக்கத்தாலும் பணத்தை நோக்கி

ஏழை மக்களின் முதுகில் ஏறி யார் பெரிய பணக்காரர் என்கின்ற இமயம் நோக்கி ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பிரச்னைதான்....

இங்கே பலர், சேவை செய்ய முன்வந்தார்களே. ஆர், ஆர் ரெடி எண்டு சொல்லுங்கோ. இரண்டு பேருக்கும் லிஸ்டை அனுப்பி வைக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, புங்கையூரன் said:

ம்ம்...வண்டியும் ஒரு நாள்  ஓடத்திலேறும்...!🤭

மெய்யே புங்கையர்! எங்கடை பொடியள் உந்த பில்கேட்சை  கோவிட்டின்ரை ஃபாதர் எண்டு பேஸ்புக்கிலை பகிடி பண்ணிக்கொண்டு திரியுறாங்கள். இருக்கும் எண்டுறியள்? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த ஆள் கலியாணம் கட்ட முன் சிநேகிதமாக இருந்த பெண்பிள்ளை ஒண்டுடன் கலியாணத்தின் பின்னர் ஒவ்வொரு வருடமும் ஒருகிழமை உல்லாசமாக தனியே சென்று வருவார்களாம்.
அடங் கொப்பரான .....
மலரும் நினைவுகளில் இன்னமும் இருப்பவர்களின் கவனத்திற்கு  .........😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சாமானியன் said:

உந்த ஆள் கலியாணம் கட்ட முன் சிநேகிதமாக இருந்த பெண்பிள்ளை ஒண்டுடன் கலியாணத்தின் பின்னர் ஒவ்வொரு வருடமும் ஒருகிழமை உல்லாசமாக தனியே சென்று வருவார்களாம்.
அடங் கொப்பரான .....
மலரும் நினைவுகளில் இன்னமும் இருப்பவர்களின் கவனத்திற்கு  .........😍

சாமானியன்,   சும்மா.... வயித்தெரிச்சலை கிளப்பாதீங்க. 🥸 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, சாமானியன் said:

உந்த ஆள் கலியாணம் கட்ட முன் சிநேகிதமாக இருந்த பெண்பிள்ளை ஒண்டுடன் கலியாணத்தின் பின்னர் ஒவ்வொரு வருடமும் ஒருகிழமை உல்லாசமாக தனியே சென்று வருவார்களாம்.
அடங் கொப்பரான .....
மலரும் நினைவுகளில் இன்னமும் இருப்பவர்களின் கவனத்திற்கு  .........😍

இந்த தாரகையா அந்த உல்லாச சக்களத்தி....? 😊

Bill Gates: Bei der Hochzeit bestand er auf eine skurrile Vereinbarung

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

மெய்யே புங்கையர்! எங்கடை பொடியள் உந்த பில்கேட்சை  கோவிட்டின்ரை ஃபாதர் எண்டு பேஸ்புக்கிலை பகிடி பண்ணிக்கொண்டு திரியுறாங்கள். இருக்கும் எண்டுறியள்? 😎

வணக்கம், குமாரசாமி அண்ணை..!
எதைத் தொட்டாலும்....இவரிலை போய்த் தான் நிக்குது!
இவரும், இவரது மனுசியும் சேர்ந்து தொடங்கிய ர்றஸ்ற் கனக்க வேலையள் செய்திருக்குப் போல கிடக்குது! இந்த அமைப்பு அண்மைக் காலமாக மிகவும் முக்கியமான ஆய்வுகளில் ஈடு பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது! கண்ணுக்குத் தெரியாத வகையில்....மைக்கிரோ சிப்ஸை வடிவமைக்க முடியுமா என்பதற்கான ஆராய்சியே அதுவாகும்! அமெரிகாவிலுள்ள மாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்துக்கு இந்த ஆய்வுக்காக நிறைய நன் கொடைகள் வழங்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது! அத்துடன் இந்த அமைப்பால், ஆபிரிக்க, ஆசிய கண்டக்களுக்கு நிறைய நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன!
மைக்கிறொ சொfற் நிறுவனமானது பைசர் நிறுவனத்தின் மிகப் பெரிய பங்கு தாரராகும்!
இந்தியாவில் கொரோனா ஊசி மருந்துகளைத் தயாரிக்கும் செரம் கொம்பனிக்கு, இவரது நிறுவனம் $500 மில்லியன் அளவில் கடனாகவும், நன் கொடையாகவும் வழங்கியுள்ளது! அது மட்டுமன்றி, சீனாவிலுள்ள வுகான் ஆய்வு கூடத்தைக் கட்டிக் கொடுத்ததில் ஒரு ஜேர்மன் கொம்பனி ஒன்று தொடர்பு பட்டுள்ளதாகவும், அந்தக் கொம்பனியில் இவரது நிறுவனத்துக்கும், டொக்ரர் 'Fauci'' அவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக இப்போது அறியப் படுகின்றது! இதனால் தான், இவர் மீது அதிக சந்தேகம் எற்படுகின்றது! உலக சுகாதார ஸ்தாபனத்தின் முக்கிய நன் கொடையாளராக இவர் இருப்பதால், அந்த   நிறுவனத்துக்கும்...இதில் சம்பந்தமுள்ளதாகக் கூறப்படுகின்றது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2021 at 00:27, புங்கையூரன் said:

வணக்கம், குமாரசாமி அண்ணை..!
எதைத் தொட்டாலும்....இவரிலை போய்த் தான் நிக்குது!
இவரும், இவரது மனுசியும் சேர்ந்து தொடங்கிய ர்றஸ்ற் கனக்க வேலையள் செய்திருக்குப் போல கிடக்குது! இந்த அமைப்பு அண்மைக் காலமாக மிகவும் முக்கியமான ஆய்வுகளில் ஈடு பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது! கண்ணுக்குத் தெரியாத வகையில்....மைக்கிரோ சிப்ஸை வடிவமைக்க முடியுமா என்பதற்கான ஆராய்சியே அதுவாகும்! அமெரிகாவிலுள்ள மாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்துக்கு இந்த ஆய்வுக்காக நிறைய நன் கொடைகள் வழங்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது! அத்துடன் இந்த அமைப்பால், ஆபிரிக்க, ஆசிய கண்டக்களுக்கு நிறைய நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன!
மைக்கிறொ சொfற் நிறுவனமானது பைசர் நிறுவனத்தின் மிகப் பெரிய பங்கு தாரராகும்!
இந்தியாவில் கொரோனா ஊசி மருந்துகளைத் தயாரிக்கும் செரம் கொம்பனிக்கு, இவரது நிறுவனம் $500 மில்லியன் அளவில் கடனாகவும், நன் கொடையாகவும் வழங்கியுள்ளது! அது மட்டுமன்றி, சீனாவிலுள்ள வுகான் ஆய்வு கூடத்தைக் கட்டிக் கொடுத்ததில் ஒரு ஜேர்மன் கொம்பனி ஒன்று தொடர்பு பட்டுள்ளதாகவும், அந்தக் கொம்பனியில் இவரது நிறுவனத்துக்கும், டொக்ரர் 'Fauci'' அவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக இப்போது அறியப் படுகின்றது! இதனால் தான், இவர் மீது அதிக சந்தேகம் எற்படுகின்றது! உலக சுகாதார ஸ்தாபனத்தின் முக்கிய நன் கொடையாளராக இவர் இருப்பதால், அந்த   நிறுவனத்துக்கும்...இதில் சம்பந்தமுள்ளதாகக் கூறப்படுகின்றது!

உலகத்திலை சனத்தை குறைக்கவும் இந்த ஏற்பாடு எண்டும் ஒரு கதை உலாவுது.இந்த உலகத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளை வைச்சிருக்கவும் ஒரு ஐடியா நடக்குதாம்.... பஞ்சமும் கூடிக்கொண்டு போகுதெல்லே...

உங்கை அவுஸ்ரேலியாவிலை ஒருக்கால்  தண்ணி பஞ்சத்துக்காக  வகைதொகையில்லாமல் ஒட்டகங்களை சுட்டுக்கொண்டவையெல்லோ....ஞாபகம் இருக்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

உலகத்திலை சனத்தை குறைக்கவும் இந்த ஏற்பாடு எண்டும் ஒரு கதை உலாவுது.இந்த உலகத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளை வைச்சிருக்கவும் ஒரு ஐடியா நடக்குதாம்.... பஞ்சமும் கூடிக்கொண்டு போகுதெல்லே...

உங்கை அவுஸ்ரேலியாவிலை ஒருக்கால்  தண்ணி பஞ்சத்துக்காக  வகைதொகையில்லாமல் ஒட்டகங்களை சுட்டுக்கொண்டவையெல்லோ....ஞாபகம் இருக்கோ.

உண்மை தான்...!

அவுஸ்திரேலியாவில் ஒட்டகங்களும், ஆடுகளும் ( செம்மறி விதிவிலக்கு), குதிரைகளும் ( Brumbies) ஒவ்வாதவையாக (Pest) வகைப்படுத்தப் பட்டுள்ளன! இவற்றைக் கொல்வதற்கும், வேட்டையாடுவதற்குமாக, அதற்குப் பொறுப்பான அமைச்சுக்கள் ஒவ்வொரு வருடமும் ஒரு தொகையைக் கொல்ல அனுமதி வழங்குவது வழக்கத்தில் உள்ளது! இவ்வாறு கொல்லப்படும் ஆடுகள் எம்மவரிடமும், மத்திய கிழக்கு நாட்டவரிடமும் நல்ல விலைக்கு விலைப்படும்!

முன்னைய அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு கொறோனா பற்றிய உண்மை ஓரளவுக்குத் தெரிந்திருந்தது போல உள்ளது! அதனாலேயே உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதியை நிறுத்தியதோடு, Dr. Fauci அவர்களையும் தன்னை நெருங்க விடாது கவனமாக இருந்தார்!

ஆபிரிக்காவிலும், இந்தியாவிலும் சில ஊசி மருந்துகளை மனிதர்களிலும், குழந்தைகளிலும் சோதித்துப் பார்ப்பதாக,  பில் கேட்ஸ் , மெலிண்டா இருவர் மேலும் குற்றச் சாட்டுகளும் வைக்கப் படுகின்றன! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" - பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்     "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"   "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"   "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?"   "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"   "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"   "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"   "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"   "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"   "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"   "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"   "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"   "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து     
    • சிறி அண்ணா 50% சரி. ரணில் தன் மினியை பார்க் பண்ணுவது, உதவியாளராக இருக்கும் ஒரு பையனின் வீட்டு கொல்லை புறத்தில்🤣.
    • @goshan_che கேட்ட கேள்விக்கு... நான் பதில் சொல்லி விட்டேன்.  விசுகர், உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 😂
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]     "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!"   "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"   "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"   "ஈடணம் விரும்பா சாதாரண மகனே ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?"   "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"   "ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல் ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"   "எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து எழுதுகோல் எடுத்து உலகை காட்டி எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?"   "ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல் ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?"   "ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"   "ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!"   "ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"   "ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈடணம் - புகழ் ஈடிகை - எழுதுகோல் ஈமத்தாடி - சிவன் உணக்கம் - உலர்ந்ததன்மை ஊறு - இடையூறு ஊனம் - உடல் குறை, இயலாமை எய்யாமை - அறியாமை ஏகாகாரம் - சீரான முறை ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு ஏகாந்தம் - தனிமை ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன் ஓகை - உவகை, மகிழ்ச்சி ஔவியம் - பொறாமை, அழுக்காறு ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன் ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை. ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்   [my own eulogy / A tribute written by myself to my death]        
    • ஏன் ராசா ஏன்??  ஆனால் கேள்விக்கு பதில் சொல்லாமல் போவது நன்றன்று. இல்லை இல்லை இல்லை 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.