Jump to content

ஒரே இரவில் கோடிஸ்வரரான இலங்கையர்


Recommended Posts

ஒரே இரவில் கோடிஸ்வரரான இலங்கையர்

ஒரே இரவில் கோடிஸ்வரரான இலங்கையர்

 

டுபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை துறையில் பணிபுரிந்த முஹம்மத் மிஷ்பாக் (வயது-36) எனும் இலங்கையர் "Abu Dhabi Big Ticket" சீட்டிலுப்பில் 12 மில்லியன் திர்ஹமை பணப்பரிசாக வென்றுள்ளார்.

அவர் வெற்றிபெற்ற தொகை இலங்கை ரூபாவின் அடிப்படையில் 64 கோடி ரூபாவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

குடும்பத்தினருடன் விடுமுறையை கழிக்க இலங்கைக்கு வந்துள்ள அவருக்கு வெற்றி செய்தி தொடர்பான அழைப்பு தன்னுடைய தொலைபேசி ஊடாக வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றிச்சீட்டுக்காக தனது 20 நண்பர்கள் பங்களித்தாகவும் அதில் தனது பங்கு 600,000 திர்ஹம் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய தந்தையை ஒரு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டியுள்ளதால் இந்த சந்தர்ப்பத்தில் இப்பணத்தொகை தனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவருடைய மாதாந்த சம்பளம் 7000 திர்ஹம் என்பதுடன் அவர் கடந்த 10 ஆண்டுகளாக டுபாயில் கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது 20 நண்பர்களுடன் சேர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிக் டிக்கெட்டை வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

வெற்றிபெற்ற பணத்தின் பெரும்பகுதியை தனது குடும்பத்தின் நிதிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், தனது இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவிக்கு ஒரு வீட்டைக் கட்டுவதற்கும் செலவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ உறவு மிஸ்பாக்குக்கு வாழ்த்துகள். பரிசில் ஒரு பகுதியை நற்காரியங்களிலும் செலவிடட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nunavilan said:

வெற்றிபெற்ற பணத்தின் பெரும்பகுதியை தனது குடும்பத்தின் நிதிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், தனது இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவிக்கு ஒரு வீட்டைக் கட்டுவதற்கும் செலவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்னும் இரண்டு சின்ன வீடுகள் கட்ட வாழ்த்துக்கள்.🤩
நானெண்டால் இத்தடிக்கு இரண்டு சின்ன மாடிவீடே வாங்கியிருப்பன். 🥰

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

இன்னும் இரண்டு சின்ன வீடுகள் கட்ட வாழ்த்துக்கள்.🤩
நானெண்டால் இத்தடிக்கு இரண்டு சின்ன மாடிவீடே வாங்கியிருப்பன். 🥰

அவர் சும்மாவே மெல்லுவார்

அவல் கிடைத்தால்????😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீட்டிலுப்பு இஸ்லாமிய சட்டத்துக்கு விரோதமானது....ஆனால் இன்று அது அரேபிய நாட்டில் நடைபெறுகிறது...ஆனால் மதவாதங்கள் ஏனைய நாடுகளில் திணிக்கப்படுகிரது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.