Jump to content

3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி! - நாம் தமிழர் சாதித்தது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

234 தொகுதிகளிலும் தனியாகக் களம் கண்ட நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. அதேவேளை, 6.5 சதவிகித வாக்குகளைப் பெற்று தி.மு.க, அ.தி.முகவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாகப் பரிணமித்திருக்கிறது.

தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தலில், மாற்றத்தை முன்வைத்து தேர்தலில் பங்கேற்ற அணிகளில், ''உண்மையான மாற்று நாங்கள்தான்'' என சொல்லி அடித்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது நாம் தமிழர் கட்சி.

தமிழகத்தில் நேற்று முன்தினம் வெளியான தேர்தல் முடிவுகள் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கூட்டணிக்குமே ஓரளவுக்கு சாதகமாகத்தான் வந்திருக்கின்றன. பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக் கட்டிலில் அமரப்போகிறது தி.மு.க. கடந்தமுறை சட்டமன்ற வாய்ப்பை தவறவிட்ட கம்யூனிஸ்ட்கள் இந்தமுறை வெற்றி பெற்றிருக்கின்றனர். போட்டியிட்ட 25 தொகுதிகளில் 18 தொகுதிகளை வென்றிருக்கிறது காங்கிரஸ். அதேபோல, ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றத்துக்குள் நுழைகின்றனர்.

சீமான், கமல், தினகரன்
 
சீமான், கமல், தினகரன்

மறுபுறம் அ.தி.மு.க அணியில் எடுத்துக்கொண்டாலும், அதிகபட்சம் 50 தொகுதிகளில் வெல்வதே கடினம் என எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க யாரும் எதிர்பாராத வகையில் 66 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஒரு தொகுதியில் கூட மலர்வது கடினம் என சொல்லப்பட்டு வந்த நிலையில் நான்கு தொகுதிகளில் தாமரை மலர்ந்திருக்கிறது. கடந்த தேர்தலில், தனித்து நின்று படுதோல்வியைச் சந்தித்த பா.ம.கவும் இந்தமுறை ஐந்து தொகுதிகளில் வெற்றிக்கனியைச் சுவைத்திருக்கிறது. தவிர, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, புரட்சிபாரதம் உள்ளிட்ட பல கட்சிக்கு இந்தத் தேர்தலில் ஏறுமுகம்தான்.

 

ஆனால், மாற்று அணிகளாகப் போட்டியிட்ட, அ.ம.மு.க, தே.மு.தி.க, எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளை உள்ளிட்ட டி.டி.வி தினகரன் தலைமையிலான அணியோ, மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக் கட்சி உள்ளிட கட்சிகளை உள்ளடக்கிய கமல்ஹாசன் தலைமையிலான அணியோ, 234 தொகுதிகளிலும் தனியாகக் களம் கண்ட நாம் தமிழர் கட்சியோ ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. அதேவேளை, 6.5 சதவிகித வாக்குகளைப் பெற்று தி.மு.க, அ.தி.முகவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாகப் பரிணமித்திருக்கிறது நாம் தமிழர் கட்சி.

நாம் தமிழர் கட்சி
 
நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி கடந்து வந்த பாதை!

2009-ம் ஆண்டு இயக்கமாகத் தொடங்கப்பட்ட அமைப்பு அடுத்த ஓராண்டில் தேர்தலில் போட்டியிடும் கட்சியாக மாற்றப்பட்டது. ஆனால், 2011 சட்டமன்றத் தேர்தல், 2014 மக்களைவைத் தேர்தல் ஆகியவற்றில் நாம் தமிழர் கட்சி போட்டியிடவில்லை. முதன்முறையாக 2016 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிட்டு, 4,58,104 வாக்குகளைப் பெற்றது. வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை 1.07 சதவிகிம் பெற்று கட்சிகளின் பட்டியலில் ஒன்பதாமிடத்தைப் பெற்றது. அந்தத் தேர்தலில், பொதுத்தொகுதியில், பட்டியலின வேட்பாளர்கள்; பெண்களுக்கு அதிக இடங்களில் வாய்ப்பு; அரசியல் ரீதியாக மிகவும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்குப் போட்டியிட வாய்ப்பு; தொகுதியில் பெரும்பான்மை சமூகமாக இல்லாதவர்களுக்கு வாய்ப்பு; திருநங்கையை வேட்பாளராக்கியது என பல பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டார் சீமான்.

 

அதனைத் தொடர்ந்து நடந்த, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள நாற்பது தொகுதிகளில் இருபது தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களையும் இருபது தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும் களமிறக்கியது நாம் தமிழர் கட்சி. ஒட்டுமொத்தமாக 16,45,185 வாக்குகளைப் பெற்று ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது. அந்தக் கட்சியின் வாக்கு சதவிகிதம் 1.1-ல் இருந்து 3.87 ஆக அதிகரித்தது. அப்போதே நாம் தமிழர் கட்சியின் மீது அனைவரின் கவனமும் லேசாகத் திரும்பியது. ஆனால் இந்தமுறை, 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட அந்தக் கட்சி யாருமே எதிர்பாராத வகையில், 30,41,974 (6.6%) வாக்குகள் பெற்று தி.மு.க, அ.தி.மு.கவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

வேட்பு மனுத் தாக்கல் செய்ய கரும்புடன் மாட்டு வண்டியில் வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
 
வேட்பு மனுத் தாக்கல் செய்ய கரும்புடன் மாட்டு வண்டியில் வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

வாக்கு எண்ணிக்கையில் வளர்ச்சி!

நாம் தமிழர் கட்சியின் அரசியல் வளர்ச்சி என்பது படிப்படியாக நிகழ்ந்து வருகிறது. இந்தத் தேர்தலில், மாற்று அணிகளில் மற்ற இரு அணிகளின் மீதிருந்த அளவுக்கு எதிர்பார்ப்போ, மீடியா வெளிச்சமோ நாம் தமிழர் கட்சியின் மீது இல்லை. ஆனாலும், 30 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்துக்கு வந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் போட்டியிட்ட 234 தொகுதிகளில் கிட்டத்தட்ட 183 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்தான் மூன்றாமிடம். தவிர, நாற்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை ஒரு தொகுதியிலும் முப்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை முன்று தொகுதியிலும் இருபதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை 19 தொகுதிகளிலும் பதினைந்தாயிரத்துக்கும் அதிகமாக 36 தொகுதிகளிலும் பத்தாயிரத்துக்கும் அதிகமாக 103 தொகுதிகளிலும் 6 -9 ஆயிரம் வாக்குகளை 68 தொகுதிகளிலும் பெற்றிருக்கிறது. ஐந்தாயிரத்துக்கு குறைவான வாக்குகளை வெறும் நான்கு தொகுதிகளில் மட்டுமே பெற்றிருக்கிறது.

 

கடந்த 2016 தேர்தலில், ஒவ்வொரு தொகுதியிலும் ஐந்தாயிரத்துக்கும் அதிகமாக வாக்குகளைப் பெறுவதே அந்தக் கட்சிக்கு பெரிய விஷயமாக இருந்தது. அதேபோல, அந்தத் தேர்தலில் பல தொகுதிகளில் மூன்றிலக்க வாக்குகளையே அந்தக் கட்சி பெற்றது. சீமான் பெற்ற 12,497 வாக்குகளே அந்தக் கட்சி பெற்ற அதிகமான வாக்காக இருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் அது அப்படியே மாறியிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது அந்தக் கட்சிக்கு இது அபார வளர்ச்சியே. கட்சி மட்டுமல்ல, சீமான் மீதான மக்களின் கவனமும் அதிகரித்திருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், கடலூரில் தொகுதியில் போட்டியிட்டு, வெறும், 12,497 வாக்குகளைப் பெற்று ஐந்தாவது இடத்துக்குத்தான் சீமானால் வரமுடிந்தது. ஆனால், இந்தமுறை கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்துக்கு வந்திருக்கிறார். பெண்களை ஒப்புக்காக வேட்பாளர்களாக நிறுத்துகிறார்கள் என்கிற விமர்சனமும் சரிபாதி பெண் வேட்பாளர்களை நிறுத்தியபோது எழுந்தது. ஆனால், தற்போது அந்தக் கட்சி பெற்றுள்ள 30 லட்சம் வாக்குகளில் 16 லட்சம் வாக்குகள் பெண் வேட்பாளர்கள் வாங்கியதுதான் என பெருமிதமாகச் சொல்கிறார்கள் அந்தக் கட்சி நிர்வாகிகள்.

உதவிகள் வழங்கும் நாம் தமிழர் கட்சியினர்
 
உதவிகள் வழங்கும் நாம் தமிழர் கட்சியினர் நா.ராஜமுருகன்

சாதித்தது எப்படி?

தேர்தல் காலங்களிலும் மற்ற நேரங்களிலும் சரி எப்போதும் களத்தில் மக்களோடு மக்களாக நிற்கின்றனர் நாம் தமிழர் கட்சியினர். உறுப்பினர் சேர்க்கையில் ஆரம்பித்து ஏரி, குளங்குளைத் தூர் வாருவது, நிலவேம்புக் கசாயம் கொடுப்பது, பன விதைகளை நடுவது, இரத்த தான முகாம் நடத்துவது, பகுதிப் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுப்பது என எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கிறார்கள். அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக இருப்பது அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய பலம். தமிழகத்தில் தற்போது ஊருக்கு நான்கு பேர் இருந்தாலும், அந்தக் கட்சிக்கு கிளை இல்லாத ஊர்களே இல்லை என்றளவுக்கு ஆகிவிட்டது.

கொரோனா காலத்திலும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வந்தனர் நாம் தமிழர் கட்சியினர். கொரோனா மீட்புப் பணிகளைக் கருத்தில்கொண்டு, பேரிடர் மீட்புப் பாசறை என தனி அமைப்பையே உருவாக்கினார்கள். ``கிருமிநாசினி தெளிக்கும் பணி முதல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது வரை மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து தன்னார்வலர்களாகச் செயல்பட்டனர். மக்களுக்கு சாப்பாடு சமைத்துக் கொடுக்கும் வேலையில் மட்டும், தொகுதிக்கு 40 பேர் இருந்தனர். தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் களத்தில் இறங்கிப் பணியாற்றினர். தவிர தேர்தலுக்கு மூன்று, நான்கு மாதங்களுக்கு முன்பே வேட்பாளர்கள் களத்தில் இறங்கி பிரசாரம் செய்ய ஆரம்பித்ததுதான் தற்போது அவர்களுக்குக் கைகொடுத்திருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அவர்களால் மேம்படும் கட்சிக் கட்டமைப்பு அந்தக் கட்சியின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. தவிர, அரசியல் விமர்சகர்களால் அந்தக் கட்சிக்கு மைனஸாகப் பார்க்கப்படும்,'' தனித்துப் போட்டி என்கிற விஷயம்தான் எங்களை நோக்கி இளைஞர்கள் வருவதற்கும் மக்களின் கவனம் எங்கள் மீது திரும்புவதற்குக் காரணம். அதுவே எங்கள் பலம்' என்கிறார்கள் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள்.

3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி! - நாம் தமிழர் சாதித்தது எப்படி?
 

நாம் தமிழர் கட்சியின்மீது அனைவரும் முதன்மையாக வைக்கக்கூடிய விமர்சனம் அவர்கள் சமூக வலைத்தளங்களில் மட்டுமே ஆக்டிவ்வாக இருக்கிறார்கள் என்பதுதான். சோஷியல் மீடியாவில் தேர்தல் வைத்தால் சீமான்தான் முதலமைச்சர் ஆவார் என மாற்றுக் கட்சியினரால் அவர்கள் கேலி செய்யப்படுவதும் உண்டு. ஆனால், அது போன்ற விமர்சனங்களை எல்லாம் தவிடுபொடியாக்கி இருக்கிறது இந்தத் தேர்தல் முடிவுகள். அதேபோல கிராமப்புறங்களில் மட்டும்தான் செல்வாக்கு இருக்கிறது. படித்தவர்கள் அதிகம் உள்ள மாநகரங்களில் நாம் தமிழர் கட்சிக்கு செல்வாக்கு இல்லை என்கிற கருத்துகளும் முன்வைக்கப்படுவதுண்டு. ஆனால், அதுவும் இல்லை என இந்தத் தேர்தலில் நிரூபணமாகியிருக்கிறது.

தமிழகத்தில், வட தமிழகத்தில் மட்டும் செல்வாக்குப் பெற்ற கட்சி, தென் மாவட்டங்களில் மட்டும் செல்வாக்கு உள்ள கட்சி, மாநகரங்களில் மட்டும் செல்வாக்கு பெற்றுள்ள கட்சி என எந்தவித சட்டகத்துக்குள்ளும் அகப்படாமல் தமிழகம் முழுவதும் பரந்து விரிந்திருக்கிறது நாம் தமிழரின் ராஜ்ஜியம். அது வெற்றி பெறும் அளவுக்கு இல்லாவிட்டாலும் தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் வேருன்றியிருக்கிறது நாம் தமிழர் கட்சி. எதிர்காலத்தில் இதைவிட அதிகமான களப்பணி, புதிதான் அரசியல் வியூகங்களை வகுத்தால் நிச்சயமாக கணிசமான இடங்களில் வெற்றியைக் கூட பெற அந்தக் கட்சியால் முடியும் என்பதே கள எதார்த்தமாக இருக்கிறது!

3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி! - நாம் தமிழர் சாதித்தது எப்படி? | The third largest party in Tamil Nadu - Nam tamilar party's success story! - Vikatan

Link to comment
Share on other sites

  • Replies 115
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது இடத்தில் சீமான்: நாம் தமிழருக்கு விழுந்த வாக்குகள் சொல்வது என்ன?

  • எம்.மணிகண்டன்
  • பிபிசி தமிழ்

நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலில் ஓர் இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.

ஆனாலும் 170-க்கும் அதிகமான இடங்களில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு அடுத்த இடத்தைப் பிடித்திருக்கிறது நாம் தமிழர் கட்சி.

இது எப்படி சாத்தியமாயிற்று. அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கூறுவதைப் போல திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்து வருகிறதா?

நாம் தமிழர் கட்சி 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 1.1 சதவிகித வாக்குகளைப் பெற்றது. ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை.2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தது. அதில் 3.9 சதவிகித வாக்குகளைப் பெற்றது. அந்தத் தேர்தலில் முதன் முறையாகக் களமிறங்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 5.5 சதவிகித வாக்குகளையும், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் 3.7 சதவிகித வாக்குகளையும் பெற்றன.

நடந்து முடிந்திருக்கும் 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சுமார் 7 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இது கடந்த சட்டப் பேரவைத் தேர்தலைவிட ஆறரை மடங்கு. மக்களவைத் தேர்தலில் பெற்றதை விட ஏறத்தாழ இரண்டு மடங்கு. ஒரு தொகுதியில்கூட வெற்றபெற முடியவில்லை என்றாலும், ஆட்சியைப் பிடித்திருக்கும் திமுக, எதிர்க்கட்சி வரிசையில் அமரப்போகும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளைப் பெற்ற கட்சியாக நாம் தமிழர் இருக்கிறது.

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 48 ஆயிரத்துக்கும் சற்று அதிகம். வாக்கு சதவிகிதம் 24.3%. மற்ற தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்கு சதவிகிதம் இந்த அளவுக்கு இல்லையென்றாலும், 170-க்கும் அதிகமான தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

இந்தத் தரவுகள் தமிழர் கட்சியின் படிப்படியான முன்னேற்றத்தைக் காட்டுகிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் கணபதி.

"சிந்தாந்த ரீதியாக தொடர்ந்து உறுதியுடன் இருக்கும் அரசியல் இயக்கங்கள் தேர்தல் அரசியலில் வெற்றி பெறுவதை வரலாற்றில் பார்த்திருக்கிறோம். திமுகவும் இப்படி வளர்ந்த இயக்கம்தான். அந்த வகையில் கடந்த 3 தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி படிப்படியாக வளர்ந்திருக்கிறது " என்கிறார் அவர்.

நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான இடும்பாவனம் கார்த்திக்குக்கு தேர்தல் முடிவுகளில் திருப்தியில்லை. "தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கவில்லை" என்றார் அவர். இருப்பினும் தங்களுக்குக் கிடைத்திருக்கும் சுமார் 30 லட்சம் வாக்குகளையும் 7% வாக்கு விகிதத்தையும் மாற்றத்துக்கான விதைகளாகவே கருதுவதாக அவர் கூறுகிறார்.

"வரலாற்றில் நாம் தமிழர் கட்சியைப் போல தேர்தல் சமரசம் செய்து கொள்ளாத கட்சி எதுவுமில்லை. திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளும் அவ்வப்போது சமரசம் செய்துகொள்கின்றன" என்கிறார் இடும்பாவனம் கார்த்திக்.

நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்திருக்கும் வாக்குகள் தொடக்கத்தில் இருந்தே பலரையும் கவனிக்க வைத்திருக்கின்றன. காங்கிரஸ் எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் இதை "ஏற்கெனவே நிறுவப்பட்டிருக்கும் அரசியல் கட்டமைப்பை எதிர்க்கும் வாக்கு" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்கு வாக்களிப்போரைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.

இதேபோன்றதொரு கருத்தைப் பதிவு செய்திருக்கும் இயக்குநர் சேரன், வேட்பாளர்கள் தோல்வி கண்டாலும் கட்சி வளர்ச்சியைக் கண்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

 

நாம் தமிழர் கட்சி வாக்கு விகிதங்களில் வளர்ந்து வந்தாலும் அந்தக் கட்சிக்கு பலவிதமான சவால்களும் நெருக்கடிகளும் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் கணபதி கூறுகிறார்.

"சீமானின் பேச்சுக்கு இளைஞர்களை ஈர்க்கும் ஆற்றல் இருக்கிறது. அவரை நம்பி ஏராளமான இளைஞர்கள் வருகிறார்கள். அவர்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். கட்சியில் இருந்து முக்கியத் தலைவர்கள் தொடர்ந்து விலகினால் தொண்டர்கள் நம்பிக்கை இழக்க நேரிடும். அதேபோல கூடிய விரைவில் அரசியல் பதவிகளைப் பிடிக்க வேண்டும்." என்கிறார் கணபதி.

Seeman

பட மூலாதாரம்,NAAM THAMILAR

"தற்கால அரசியல் சூழலில் கொள்கை மட்டுமே அரசியலில் வெற்றிபெறப் போதுமானது இல்லை. காலத்துக்குத் தக்கபடி நவீன உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும். பிற கட்சிகளில் இருந்து பெரிய தலைவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு வந்தால் கட்சி அரசியல் ரீதியான ஆற்றல் கிடைக்கும். அதிமுக, தேமுதிக போன்ற கட்சிகளின் தொடக்க காலம் இப்படிக் கட்டமைக்கப் பட்டதுதான்." என்று குறிப்பிடுகிறார் கணபதி.

"அரசியல் அதிகாரத்தை நோக்கிய பாய்ச்சல்" என்று தங்களது தேர்தல் உத்தியைப் பற்றிக் குறிப்பிடும் இடும்பாவனம் கார்த்திக், நாம் தமிழர் கட்சியின் இலக்கு அதுதான் என்கிறார். திமுக , அதிமுக ஆகிய இரு கட்சிகளில் இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யும் மக்களின் எதிர்ப்பு வாக்கு மனநிலையே தங்களது வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

ஆயினும் தற்போது அமையும் திமுகவின் ஆட்சியால் இரு திராவிடக் கட்சிகளின் மீதும் மக்கள் நம்பிக்கை இழப்பார்கள் என்றும் அவற்றுக்கு மாற்றாக நாம் தமிழருக்கு வாக்களிப்பார்கள் என்றும் இடும்பாவனம் கார்த்திக் நம்புகிறார்.

"2024 மக்களவைத் தேர்தலிலும், 2026 சட்டப் பேரவைத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும்" என்கிறார் அவர்.

மூன்றாவது இடத்தில் சீமான்: நாம் தமிழருக்கு விழுந்த வாக்குகள் சொல்வது என்ன? - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பெருமாள் said:

1 நபர் மற்றும் , ’SUN NEWS தேர்தல் செய்திகள் நாம் தமிழருக்கு விழுந்த வாக்குகளை நினைத்து கவலைகொள்கிறேன் -ப.சிதம்பரம் 1:17 நாம் தமிழருக்கு விழுந்த வாக்குகளை நினைத்து கவலைகொள்கிறேன் ப.சிதம்பரம்... Sun News 9.5K views 54 minutes ago’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

இந்த நரி  வாலை  கிளப்புது .

இவர் மேலும் மேலும்/நிரந்தரமாக கவலை கொள்ள அந்த இயற்கையை வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனது வாக்கு வங்கியை உயர்த்திக் கொண்ட நாம் தமிழர் கட்சி!

நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் சேர்த்து 7% சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. பெரிய கட்சிகள் எதுவும் தனித்துப் போட்டியிடாத நிலையில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி சுமார் 30 லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளது.
நாம் தமிழர் கட்சி 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 1.1 சதவிகித வாக்குகளைப் பெற்றது. ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை.2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தது. அதில் 3.9 சதவிகித வாக்குகளைப் பெற்றது. 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சுமார் 7 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இது கடந்த சட்டப் பேரவைத் தேர்தலை அதிகம்.

ஒவ்வொரு தொகுதியிலும் மூன்றாயிரம் முதல் பதினைந்தாயிரம் வரை வாக்குகளைப் பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி முதல் தலைமுறை வாக்காளர்களைக் கவர்ந்துள்ளது எனலாம். சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 48 ஆயிரம். திருவொற்றியூரில் பதிவான வாக்குகளில் 24.3 சதவிகித வாக்குகளை சீமான் பெற்றுள்ளார்.
3 தேர்தலகளை எதிர்கொண்டுள்ள நாம் தமிழர் கட்சி படிப்படியாக வளர்ந்து வருவதை இந்த தேர்தல் டேட்டாக்கள் நமக்கு உணர்த்தும். 

ஆனால் இதை அடுத்தடுத்த தேர்தல்களில் தக்க வைத்துக் கொள்ளலாம் என்றாலும் இதே நிலையில் கூடுதலாக சில சதவிகிதங்கள் கூடுமே தவிற ஒரு தொகுதியில் கூட வெல்லும் நிலை ஏற்படாது. காரணம் திமுக, அதிமுக என்ற இரு பெறும் கட்சிகளும் சராசரியாக 30 முதல் 37 சதவிகிதம் வரையிலான வாக்கு வங்கியை கடந்த 30 ஆண்டுகளாக வைத்துள்ளன. தேமுதிக வந்த போதும், கமல் வந்த போதும் சீமான் வந்த போதும் இந்த வாக்கு வங்கியில் சேதங்களை உருவாக்க முடியவில்லை.எஞ்சியிருக்கும் 30 சதவிகித வாக்குகளில் அதிக பட்சம் 15% வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற முடியும். ஏதாவது ஒரு பெரிய கட்சியோடு மறைமுக கூட்டணி வைத்துக் கொண்டு இன்னொரு கட்சியின் வெற்றியை நான் பறித்து விடுவேன் என்றுதான் நாம் தமிழர் பயணிக்க முடியும்.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி பொது எதிரியாக திமுகவை அறிவித்தது. நேரடியாகவே அதிமுகவை ஆதரித்தது. திமுக,திராவிட இயக்க எதிர்ப்பு என்ற அடிப்படை கோட்பாட்டோடு பயணிக்கும் சீமான் தனக்கு கிடைக்க இருக்கும் அதிக பட்சமான 10 முதல் 15 சதவிகித வாக்கு வங்கியை வைத்து அதற்குரிய விலையை பேரங்கள் மூலம் பெற்றுக் கொண்டு தமிழக அரசியலில் இருக்கலாம். ஆனால் திராவிட இயக்கம் தேசிய இயக்கங்களை வீழ்த்திய அரியணை ஏறியது போல ஒரு போதும் ஒரு பரந்து பட்ட மக்கள் இயக்கமாக மாற வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.


https://inioru.com/தனது-வாக்கு-வங்கியை-உயர்/

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓடமும் ஓர் நாள்??

நாம் தமிழர் கட்சியின் செய்திகளை தேடிப்பிடித்து இணைக்கும் காலமும் வரும். வந்து விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விசுகு said:

ஓடமும் ஓர் நாள்??

நாம் தமிழர் கட்சியின் செய்திகளை தேடிப்பிடித்து இணைக்கும் காலமும் வரும். வந்து விட்டது.

பிஜேபியுடன் கூட்டுச் சேராமல் ஸிம்மான் அதிகாரத்தில் பங்காளியாக முடியாது. அதிகம் கல்வியறிவு கொண்ட இடதுசாரி பாரம்பரியத்தில் வளர்ந்த மேற்கு வங்கத்தில் பிஜேபி முக்கிய சக்தியாக வளர்ந்துள்ளது. அதுபோல தமிழகத்திலும் அடுத்த பத்தாண்டுகளில் நடைபெறலாம். அதற்கு ஸிம்மான் உதவி செய்வார். தனித்தே இருக்கவேண்டும் என்று நினைத்தால் தொடர்ந்தும் தங்கமுட்டைகள்தான்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தா சிக்னல் போகுது. சேர்ந்து பயணிப்பமாம். ஏ டீமா? பி டீமா? சி டீமா? 😁

 

ஊழல் செய்ய/ செய்த ஊழலை மறைக்க எதுவும் செய்வார்கள். மகிந்தவை சந்தித்து வாழ்த்து சொன்னது போல்....

Pawan Khera on Twitter: "Year 2010. Kanimozhi and Baalu honouring Mahinda  Rajapaksa. Wasn't he a war criminal in 2010? http://t.co/SE8dvKQPar"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, கிருபன் said:

பிஜேபியுடன் கூட்டுச் சேராமல் ஸிம்மான் அதிகாரத்தில் பங்காளியாக முடியாது. அதிகம் கல்வியறிவு கொண்ட இடதுசாரி பாரம்பரியத்தில் வளர்ந்த மேற்கு வங்கத்தில் பிஜேபி முக்கிய சக்தியாக வளர்ந்துள்ளது. அதுபோல தமிழகத்திலும் அடுத்த பத்தாண்டுகளில் நடைபெறலாம். அதற்கு ஸிம்மான் உதவி செய்வார். தனித்தே இருக்கவேண்டும் என்று நினைத்தால் தொடர்ந்தும் தங்கமுட்டைகள்தான்😁

கருத்துக்கு பஞ்சம் என்றால் ஒதுங்கி செல்லுங்கள்

அதை விடுத்து கேட்ட ஊருக்கு வழி சொல்வதை விடுத்து வேறு சளாப்பல் தேவையற்ற நேரவிரயம் 

முதலில் யாழ் களத்தின் விதிமுறைகளின் படி ஒரு தலைவருக்கு பட்டப்பெயர்கள் வைத்து எழுதுவது தவறு 

செய்தியை இணைப்பவர் என்ற வகையில் உங்களுக்கு அது இன்னும் இறுக்கமாக தெரிந்து இருக்கணும். 

இனி வரும் காலங்களில் உங்களுக்கு அதிக அளவில் தூக்கம் கலையும். தயாராகுங்கள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

இந்தா சிக்னல் போகுது. சேர்ந்து பயணிப்பமாம். ஏ டீமா? பி டீமா? சி டீமா? 😁

 

 

 

இந்த காணொளியில் கனிமொழி அம்மையார் இறுதியில் ஒரு வசனம் கூறுகின்றார்
......தேர்தல் முடிந்து விட்டதால் கடந்த ஆட்சியின்
குறைகளை பற்றித் நான்  கூறவிரும்பவில்லை
ஆனால் மக்கள் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளார்கள்.......

இப்படி ஒரு கருத்தை யாரும் எதிர்பார்த்தார்களா
தெரியவில்லை
சபை நாகரீகம் அவருக்கும் தெரிகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்து ஆண்டுகளின் முன் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று சொன்னார்கள், அடுத்த தேர்தலில் ஒரு ஆசனமாவது கிடைக்கின்றதா பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

பத்து ஆண்டுகளின் முன் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று சொன்னார்கள், அடுத்த தேர்தலில் ஒரு ஆசனமாவது கிடைக்கின்றதா பார்ப்போம்.

கட்டுக்காசு கிடைக்கிறதா என்று பார்ப்போம்

நெட்டோவை விட முன்னுக்கு வந்து காட்டுங்கள் பார்ப்போம் என்பதெல்லாம் போய்  ஆசனம் எடுத்து காட்டுங்கள் பார்ப்போம் என்று வந்து நிற்கிறது.

எழுதி வைத்து கொள்ளுங்கள்

ஆட்சி அமைத்தது காட்டுங்கள் என்று எழுத உங்களுக்கு அடுத்த முறை (2026) சந்தர்ப்பமே வராது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

பத்து ஆண்டுகளின் முன் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று சொன்னார்கள், அடுத்த தேர்தலில் ஒரு ஆசனமாவது கிடைக்கின்றதா பார்ப்போம்.

ஆட்சியை கைப்பற்றுவதென்பது இன்றைய நிலைமையில் ஒரு கனவுதான்.
ஆனாலும் தலைமை விடும் பிழைகளை சுட்டிக்காட்டி சரி செய்து
அல்லது தேவையேற்பட்டால் தலைமையைக்  கடந்து அடுத்த தலைமையுடன் கூட அந்தக் கனவு நினைவேறலாம். கால ஓட்டத்தில் பல நிகழ்வுகள் நடக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

இனி வரும் காலங்களில் உங்களுக்கு அதிக அளவில் தூக்கம் கலையும். தயாராகுங்கள். 

கனவில் ஸிம்மான் (சமஸ்கிருதப் பெயர்!) வந்து உறுமி வெருட்டப் போகின்றாருக்கும்😁

எனது கருத்துக்கு பொழிப்புரையை தமிழகன் வந்து வழங்குவார்! அப்பவாவது உங்களுக்கு புரியும் என நினைக்கின்றேன்!

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

எழுதி வைத்து கொள்ளுங்கள்

ஆட்சி அமைத்தது காட்டுங்கள் என்று எழுத உங்களுக்கு அடுத்த முறை (2026) சந்தர்ப்பமே வராது

அது தான் எனது விருப்பமும்.

ஆனாலும் சூழல் இன்னும் சில காலங்கள் அப்படியே தான் இருக்கும்.

எல்லாம் கடந்து செல்லும்வரை சீமான் நிலைதடுமாறாது இருக்க வேண்டுமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, விசுகு said:

கருத்துக்கு பஞ்சம் என்றால் ஒதுங்கி செல்லுங்கள்

அதை விடுத்து கேட்ட ஊருக்கு வழி சொல்வதை விடுத்து வேறு சளாப்பல் தேவையற்ற நேரவிரயம் 

முதலில் யாழ் களத்தின் விதிமுறைகளின் படி ஒரு தலைவருக்கு பட்டப்பெயர்கள் வைத்து எழுதுவது தவறு 

செய்தியை இணைப்பவர் என்ற வகையில் உங்களுக்கு அது இன்னும் இறுக்கமாக தெரிந்து இருக்கணும். 

இனி வரும் காலங்களில் உங்களுக்கு அதிக அளவில் தூக்கம் கலையும். தயாராகுங்கள். 

 

நாம் தமிழர் கட்சிக்கான கேவல துணுக்குகளும்,கேவல பெயர்களும் யாழ்களத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது போல் தெரிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பிஜேபியுடன் கூட்டுச் சேராமல் ஸிம்மான் அதிகாரத்தில் பங்காளியாக முடியாது. அதிகம் கல்வியறிவு கொண்ட இடதுசாரி பாரம்பரியத்தில் வளர்ந்த மேற்கு வங்கத்தில் பிஜேபி முக்கிய சக்தியாக வளர்ந்துள்ளது. அதுபோல தமிழகத்திலும் அடுத்த பத்தாண்டுகளில் நடைபெறலாம். அதற்கு ஸிம்மான் உதவி செய்வார். தனித்தே இருக்கவேண்டும் என்று நினைத்தால் தொடர்ந்தும் தங்கமுட்டைகள்தான்😁

சீமான் எந்தக்கட்சியுடன் கூட்டுச்சேர்கிறாரோ  அந்தக்கட்சி தெலுங்கர் வாக்கை  இழக்கும்  அதாவது20000தொடக்கம் 50000வரை ...(100 சட்டமன்றத்தொகுதிகளில்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

கனவில் ஸிம்மான் (சமஸ்கிருதப் பெயர்!) வந்து உறுமி வெருட்டப் போகின்றாருக்கும்😁

எனது கருத்துக்கு பொழிப்புரையை தமிழகன் வந்து வழங்குவார்! அப்பவாவது உங்களுக்கு புரியும் என நினைக்கின்றேன்!

 

சீமானை  சைமன் என எள்ளி நகையாடி களைத்து விட்டீர்கள். இப்போது ஸிம்மான் என  சமஸ்கிருத ஆதாரத்துடன் புது வேடம் புகுந்துள்ளீர்கள். நீங்களும் உங்களைப்போன்றவர்களும் பாடம் படிக்க அதிக காலம் எடுக்குமென நினைக்கின்றேன்

நன்று.

காலங்கள் மலரும்.அப்போது சந்திக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

நாம் தமிழர் கட்சிக்கான கேவல துணுக்குகளும்,கேவல பெயர்களும் யாழ்களத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது போல் தெரிகின்றது.

இது இண்டைக்கா உங்க‌ளுக்கு தெரிஞ்ச‌து தாத்தா
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

சீமான் எந்தக்கட்சியுடன் கூட்டுச்சேர்கிறாரோ  அந்தக்கட்சி தெலுங்கர் வாக்கை  இழக்கும்  அதாவது20000தொடக்கம் 50000வரை ...(100 சட்டமன்றத்தொகுதிகளில்)

கந்தையா57! தமிழ்நாட்டு அரசு மத்திய அரசை மீறி ஈழத்தமிழருக்கு எதையுமே செய்ய முடியாது என கூறுபவர்கள் ஏன் சீமான் அரசியலை பற்றி இங்கு வெட்டி விளாசுகின்றார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

சீமானை  சைமன் என எள்ளி நகையாடி களைத்து விட்டீர்கள். இப்போது ஸிம்மான் என  சமஸ்கிருத ஆதாரத்துடன் புது வேடம் புகுந்துள்ளீர்கள். நீங்களும் உங்களைப்போன்றவர்களும் பாடம் படிக்க அதிக காலம் எடுக்குமென நினைக்கின்றேன்

நன்று.

காலங்கள் மலரும்.அப்போது சந்திக்கலாம்.

யாழ் க‌ள‌ம் முக‌ நூலை மிஞ்சி விட்ட‌து தாத்தா

இதில் ப‌ன்பான‌ முறையில் க‌ருத்தாட‌னும் என்று விதிமுறையாம்.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

கந்தையா57! தமிழ்நாட்டு அரசு மத்திய அரசை மீறி ஈழத்தமிழருக்கு எதையுமே செய்ய முடியாது என கூறுபவர்கள் ஏன் சீமான் அரசியலை பற்றி இங்கு வெட்டி விளாசுகின்றார்கள்?

ஆம் அது எங்களுக்கு அனுபவம் கற்றுத்தந்தது. அனுபவமென்பது  ஒர்ஆசிரியாரல் கற்றுக் கொடுப்பதில்லை ..பல தோல்விகளால். கற்றுக்கொடுக்கப்படும் ..தமிழ்நாட்டு அரசியல் பேசும்போது கருணநிதி பற்றிப்பேசாதே....எம.ஜி.ஆர். பற்றிப்பேசாதே....என்க்கூறமிடியுமா? சீமான் தமிழ் நாட்டு அரசியலில் இருப்பதாலும் ...மேதகுவின் விம்பமெனப் புலுடா விடுவாதாலும்  ..கதைக்கிறோம்...இப்படி நாங்கள் கதைப்தால் சீமான் வளர இடமுண்டு  புகழ்ச்சியால் ஒருவனும் ஒரபோதும்  வளர்த்ததில்லை மாறாக அவனுடைய சிந்தனை ஆற்றல் முடக்கப்படுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

கந்தையா57! தமிழ்நாட்டு அரசு மத்திய அரசை மீறி ஈழத்தமிழருக்கு எதையுமே செய்ய முடியாது என கூறுபவர்கள் ஏன் சீமான் அரசியலை பற்றி இங்கு வெட்டி விளாசுகின்றார்கள்?

யாழ்க‌ள‌த்தில் வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் என‌க்கு சொன்ன‌ அறிவுரை 
த‌ம்பி நீங்க‌ள் எம் போராட்ட‌ம் ம‌ற்றும் த‌மிழ‌க‌ அர‌சிய‌லை ப‌ற்றி ந‌ல்லாக‌ தெரிந்து வைத்து இருக்கிறீங்க‌ள்..........இந்த‌ த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌துக‌ளை சொல்லி கொடுக்க‌ சொன்னார்..........

அந்த‌ ஜ‌யா வேற‌ யாரும் இல்லை நொச்சி என்ற‌ உற‌வு தான்.........யாழ்க‌ள‌த்தில் ந‌ட‌க்கும் கேலி கூத்துக‌ளை பார்த்து அருவ‌ருப்பில் யாழை விட்டு ஒதிங்கின‌ உற‌வுக‌ள் ப‌ல‌ர்...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kandiah57 said:

ஆம் அது எங்களுக்கு அனுபவம் கற்றுத்தந்தது. அனுபவமென்பது  ஒர்ஆசிரியாரல் கற்றுக் கொடுப்பதில்லை ..பல தோல்விகளால். கற்றுக்கொடுக்கப்படும் ..தமிழ்நாட்டு அரசியல் பேசும்போது கருணநிதி பற்றிப்பேசாதே....எம.ஜி.ஆர். பற்றிப்பேசாதே....என்க்கூறமிடியுமா? சீமான் தமிழ் நாட்டு அரசியலில் இருப்பதாலும் ...மேதகுவின் விம்பமெனப் புலுடா விடுவாதாலும்  ..கதைக்கிறோம்...இப்படி நாங்கள் கதைப்தால் சீமான் வளர இடமுண்டு  புகழ்ச்சியால் ஒருவனும் ஒரபோதும்  வளர்த்ததில்லை மாறாக அவனுடைய சிந்தனை ஆற்றல் முடக்கப்படுகிறது. 

சீமான் தன்னை தலைவர் பிரபாகரனின் பிம்பம் என சொன்னாரா? எங்கே? எப்போது?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.