Jump to content

3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி! - நாம் தமிழர் சாதித்தது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

234 தொகுதிகளிலும் தனியாகக் களம் கண்ட நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. அதேவேளை, 6.5 சதவிகித வாக்குகளைப் பெற்று தி.மு.க, அ.தி.முகவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாகப் பரிணமித்திருக்கிறது.

தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தலில், மாற்றத்தை முன்வைத்து தேர்தலில் பங்கேற்ற அணிகளில், ''உண்மையான மாற்று நாங்கள்தான்'' என சொல்லி அடித்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது நாம் தமிழர் கட்சி.

தமிழகத்தில் நேற்று முன்தினம் வெளியான தேர்தல் முடிவுகள் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கூட்டணிக்குமே ஓரளவுக்கு சாதகமாகத்தான் வந்திருக்கின்றன. பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக் கட்டிலில் அமரப்போகிறது தி.மு.க. கடந்தமுறை சட்டமன்ற வாய்ப்பை தவறவிட்ட கம்யூனிஸ்ட்கள் இந்தமுறை வெற்றி பெற்றிருக்கின்றனர். போட்டியிட்ட 25 தொகுதிகளில் 18 தொகுதிகளை வென்றிருக்கிறது காங்கிரஸ். அதேபோல, ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றத்துக்குள் நுழைகின்றனர்.

சீமான், கமல், தினகரன்
 
சீமான், கமல், தினகரன்

மறுபுறம் அ.தி.மு.க அணியில் எடுத்துக்கொண்டாலும், அதிகபட்சம் 50 தொகுதிகளில் வெல்வதே கடினம் என எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க யாரும் எதிர்பாராத வகையில் 66 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஒரு தொகுதியில் கூட மலர்வது கடினம் என சொல்லப்பட்டு வந்த நிலையில் நான்கு தொகுதிகளில் தாமரை மலர்ந்திருக்கிறது. கடந்த தேர்தலில், தனித்து நின்று படுதோல்வியைச் சந்தித்த பா.ம.கவும் இந்தமுறை ஐந்து தொகுதிகளில் வெற்றிக்கனியைச் சுவைத்திருக்கிறது. தவிர, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, புரட்சிபாரதம் உள்ளிட்ட பல கட்சிக்கு இந்தத் தேர்தலில் ஏறுமுகம்தான்.

 

ஆனால், மாற்று அணிகளாகப் போட்டியிட்ட, அ.ம.மு.க, தே.மு.தி.க, எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளை உள்ளிட்ட டி.டி.வி தினகரன் தலைமையிலான அணியோ, மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக் கட்சி உள்ளிட கட்சிகளை உள்ளடக்கிய கமல்ஹாசன் தலைமையிலான அணியோ, 234 தொகுதிகளிலும் தனியாகக் களம் கண்ட நாம் தமிழர் கட்சியோ ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. அதேவேளை, 6.5 சதவிகித வாக்குகளைப் பெற்று தி.மு.க, அ.தி.முகவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாகப் பரிணமித்திருக்கிறது நாம் தமிழர் கட்சி.

நாம் தமிழர் கட்சி
 
நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி கடந்து வந்த பாதை!

2009-ம் ஆண்டு இயக்கமாகத் தொடங்கப்பட்ட அமைப்பு அடுத்த ஓராண்டில் தேர்தலில் போட்டியிடும் கட்சியாக மாற்றப்பட்டது. ஆனால், 2011 சட்டமன்றத் தேர்தல், 2014 மக்களைவைத் தேர்தல் ஆகியவற்றில் நாம் தமிழர் கட்சி போட்டியிடவில்லை. முதன்முறையாக 2016 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிட்டு, 4,58,104 வாக்குகளைப் பெற்றது. வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை 1.07 சதவிகிம் பெற்று கட்சிகளின் பட்டியலில் ஒன்பதாமிடத்தைப் பெற்றது. அந்தத் தேர்தலில், பொதுத்தொகுதியில், பட்டியலின வேட்பாளர்கள்; பெண்களுக்கு அதிக இடங்களில் வாய்ப்பு; அரசியல் ரீதியாக மிகவும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்குப் போட்டியிட வாய்ப்பு; தொகுதியில் பெரும்பான்மை சமூகமாக இல்லாதவர்களுக்கு வாய்ப்பு; திருநங்கையை வேட்பாளராக்கியது என பல பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டார் சீமான்.

 

அதனைத் தொடர்ந்து நடந்த, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள நாற்பது தொகுதிகளில் இருபது தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களையும் இருபது தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும் களமிறக்கியது நாம் தமிழர் கட்சி. ஒட்டுமொத்தமாக 16,45,185 வாக்குகளைப் பெற்று ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது. அந்தக் கட்சியின் வாக்கு சதவிகிதம் 1.1-ல் இருந்து 3.87 ஆக அதிகரித்தது. அப்போதே நாம் தமிழர் கட்சியின் மீது அனைவரின் கவனமும் லேசாகத் திரும்பியது. ஆனால் இந்தமுறை, 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட அந்தக் கட்சி யாருமே எதிர்பாராத வகையில், 30,41,974 (6.6%) வாக்குகள் பெற்று தி.மு.க, அ.தி.மு.கவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

வேட்பு மனுத் தாக்கல் செய்ய கரும்புடன் மாட்டு வண்டியில் வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
 
வேட்பு மனுத் தாக்கல் செய்ய கரும்புடன் மாட்டு வண்டியில் வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

வாக்கு எண்ணிக்கையில் வளர்ச்சி!

நாம் தமிழர் கட்சியின் அரசியல் வளர்ச்சி என்பது படிப்படியாக நிகழ்ந்து வருகிறது. இந்தத் தேர்தலில், மாற்று அணிகளில் மற்ற இரு அணிகளின் மீதிருந்த அளவுக்கு எதிர்பார்ப்போ, மீடியா வெளிச்சமோ நாம் தமிழர் கட்சியின் மீது இல்லை. ஆனாலும், 30 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்துக்கு வந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் போட்டியிட்ட 234 தொகுதிகளில் கிட்டத்தட்ட 183 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்தான் மூன்றாமிடம். தவிர, நாற்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை ஒரு தொகுதியிலும் முப்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை முன்று தொகுதியிலும் இருபதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை 19 தொகுதிகளிலும் பதினைந்தாயிரத்துக்கும் அதிகமாக 36 தொகுதிகளிலும் பத்தாயிரத்துக்கும் அதிகமாக 103 தொகுதிகளிலும் 6 -9 ஆயிரம் வாக்குகளை 68 தொகுதிகளிலும் பெற்றிருக்கிறது. ஐந்தாயிரத்துக்கு குறைவான வாக்குகளை வெறும் நான்கு தொகுதிகளில் மட்டுமே பெற்றிருக்கிறது.

 

கடந்த 2016 தேர்தலில், ஒவ்வொரு தொகுதியிலும் ஐந்தாயிரத்துக்கும் அதிகமாக வாக்குகளைப் பெறுவதே அந்தக் கட்சிக்கு பெரிய விஷயமாக இருந்தது. அதேபோல, அந்தத் தேர்தலில் பல தொகுதிகளில் மூன்றிலக்க வாக்குகளையே அந்தக் கட்சி பெற்றது. சீமான் பெற்ற 12,497 வாக்குகளே அந்தக் கட்சி பெற்ற அதிகமான வாக்காக இருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் அது அப்படியே மாறியிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது அந்தக் கட்சிக்கு இது அபார வளர்ச்சியே. கட்சி மட்டுமல்ல, சீமான் மீதான மக்களின் கவனமும் அதிகரித்திருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், கடலூரில் தொகுதியில் போட்டியிட்டு, வெறும், 12,497 வாக்குகளைப் பெற்று ஐந்தாவது இடத்துக்குத்தான் சீமானால் வரமுடிந்தது. ஆனால், இந்தமுறை கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்துக்கு வந்திருக்கிறார். பெண்களை ஒப்புக்காக வேட்பாளர்களாக நிறுத்துகிறார்கள் என்கிற விமர்சனமும் சரிபாதி பெண் வேட்பாளர்களை நிறுத்தியபோது எழுந்தது. ஆனால், தற்போது அந்தக் கட்சி பெற்றுள்ள 30 லட்சம் வாக்குகளில் 16 லட்சம் வாக்குகள் பெண் வேட்பாளர்கள் வாங்கியதுதான் என பெருமிதமாகச் சொல்கிறார்கள் அந்தக் கட்சி நிர்வாகிகள்.

உதவிகள் வழங்கும் நாம் தமிழர் கட்சியினர்
 
உதவிகள் வழங்கும் நாம் தமிழர் கட்சியினர் நா.ராஜமுருகன்

சாதித்தது எப்படி?

தேர்தல் காலங்களிலும் மற்ற நேரங்களிலும் சரி எப்போதும் களத்தில் மக்களோடு மக்களாக நிற்கின்றனர் நாம் தமிழர் கட்சியினர். உறுப்பினர் சேர்க்கையில் ஆரம்பித்து ஏரி, குளங்குளைத் தூர் வாருவது, நிலவேம்புக் கசாயம் கொடுப்பது, பன விதைகளை நடுவது, இரத்த தான முகாம் நடத்துவது, பகுதிப் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுப்பது என எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கிறார்கள். அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக இருப்பது அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய பலம். தமிழகத்தில் தற்போது ஊருக்கு நான்கு பேர் இருந்தாலும், அந்தக் கட்சிக்கு கிளை இல்லாத ஊர்களே இல்லை என்றளவுக்கு ஆகிவிட்டது.

கொரோனா காலத்திலும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வந்தனர் நாம் தமிழர் கட்சியினர். கொரோனா மீட்புப் பணிகளைக் கருத்தில்கொண்டு, பேரிடர் மீட்புப் பாசறை என தனி அமைப்பையே உருவாக்கினார்கள். ``கிருமிநாசினி தெளிக்கும் பணி முதல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது வரை மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து தன்னார்வலர்களாகச் செயல்பட்டனர். மக்களுக்கு சாப்பாடு சமைத்துக் கொடுக்கும் வேலையில் மட்டும், தொகுதிக்கு 40 பேர் இருந்தனர். தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் களத்தில் இறங்கிப் பணியாற்றினர். தவிர தேர்தலுக்கு மூன்று, நான்கு மாதங்களுக்கு முன்பே வேட்பாளர்கள் களத்தில் இறங்கி பிரசாரம் செய்ய ஆரம்பித்ததுதான் தற்போது அவர்களுக்குக் கைகொடுத்திருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அவர்களால் மேம்படும் கட்சிக் கட்டமைப்பு அந்தக் கட்சியின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. தவிர, அரசியல் விமர்சகர்களால் அந்தக் கட்சிக்கு மைனஸாகப் பார்க்கப்படும்,'' தனித்துப் போட்டி என்கிற விஷயம்தான் எங்களை நோக்கி இளைஞர்கள் வருவதற்கும் மக்களின் கவனம் எங்கள் மீது திரும்புவதற்குக் காரணம். அதுவே எங்கள் பலம்' என்கிறார்கள் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள்.

3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி! - நாம் தமிழர் சாதித்தது எப்படி?
 

நாம் தமிழர் கட்சியின்மீது அனைவரும் முதன்மையாக வைக்கக்கூடிய விமர்சனம் அவர்கள் சமூக வலைத்தளங்களில் மட்டுமே ஆக்டிவ்வாக இருக்கிறார்கள் என்பதுதான். சோஷியல் மீடியாவில் தேர்தல் வைத்தால் சீமான்தான் முதலமைச்சர் ஆவார் என மாற்றுக் கட்சியினரால் அவர்கள் கேலி செய்யப்படுவதும் உண்டு. ஆனால், அது போன்ற விமர்சனங்களை எல்லாம் தவிடுபொடியாக்கி இருக்கிறது இந்தத் தேர்தல் முடிவுகள். அதேபோல கிராமப்புறங்களில் மட்டும்தான் செல்வாக்கு இருக்கிறது. படித்தவர்கள் அதிகம் உள்ள மாநகரங்களில் நாம் தமிழர் கட்சிக்கு செல்வாக்கு இல்லை என்கிற கருத்துகளும் முன்வைக்கப்படுவதுண்டு. ஆனால், அதுவும் இல்லை என இந்தத் தேர்தலில் நிரூபணமாகியிருக்கிறது.

தமிழகத்தில், வட தமிழகத்தில் மட்டும் செல்வாக்குப் பெற்ற கட்சி, தென் மாவட்டங்களில் மட்டும் செல்வாக்கு உள்ள கட்சி, மாநகரங்களில் மட்டும் செல்வாக்கு பெற்றுள்ள கட்சி என எந்தவித சட்டகத்துக்குள்ளும் அகப்படாமல் தமிழகம் முழுவதும் பரந்து விரிந்திருக்கிறது நாம் தமிழரின் ராஜ்ஜியம். அது வெற்றி பெறும் அளவுக்கு இல்லாவிட்டாலும் தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் வேருன்றியிருக்கிறது நாம் தமிழர் கட்சி. எதிர்காலத்தில் இதைவிட அதிகமான களப்பணி, புதிதான் அரசியல் வியூகங்களை வகுத்தால் நிச்சயமாக கணிசமான இடங்களில் வெற்றியைக் கூட பெற அந்தக் கட்சியால் முடியும் என்பதே கள எதார்த்தமாக இருக்கிறது!

3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி! - நாம் தமிழர் சாதித்தது எப்படி? | The third largest party in Tamil Nadu - Nam tamilar party's success story! - Vikatan

Link to comment
Share on other sites

  • Replies 115
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது இடத்தில் சீமான்: நாம் தமிழருக்கு விழுந்த வாக்குகள் சொல்வது என்ன?

  • எம்.மணிகண்டன்
  • பிபிசி தமிழ்

நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலில் ஓர் இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.

ஆனாலும் 170-க்கும் அதிகமான இடங்களில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு அடுத்த இடத்தைப் பிடித்திருக்கிறது நாம் தமிழர் கட்சி.

இது எப்படி சாத்தியமாயிற்று. அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கூறுவதைப் போல திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்து வருகிறதா?

நாம் தமிழர் கட்சி 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 1.1 சதவிகித வாக்குகளைப் பெற்றது. ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை.2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தது. அதில் 3.9 சதவிகித வாக்குகளைப் பெற்றது. அந்தத் தேர்தலில் முதன் முறையாகக் களமிறங்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 5.5 சதவிகித வாக்குகளையும், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் 3.7 சதவிகித வாக்குகளையும் பெற்றன.

நடந்து முடிந்திருக்கும் 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சுமார் 7 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இது கடந்த சட்டப் பேரவைத் தேர்தலைவிட ஆறரை மடங்கு. மக்களவைத் தேர்தலில் பெற்றதை விட ஏறத்தாழ இரண்டு மடங்கு. ஒரு தொகுதியில்கூட வெற்றபெற முடியவில்லை என்றாலும், ஆட்சியைப் பிடித்திருக்கும் திமுக, எதிர்க்கட்சி வரிசையில் அமரப்போகும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளைப் பெற்ற கட்சியாக நாம் தமிழர் இருக்கிறது.

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 48 ஆயிரத்துக்கும் சற்று அதிகம். வாக்கு சதவிகிதம் 24.3%. மற்ற தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்கு சதவிகிதம் இந்த அளவுக்கு இல்லையென்றாலும், 170-க்கும் அதிகமான தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

இந்தத் தரவுகள் தமிழர் கட்சியின் படிப்படியான முன்னேற்றத்தைக் காட்டுகிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் கணபதி.

"சிந்தாந்த ரீதியாக தொடர்ந்து உறுதியுடன் இருக்கும் அரசியல் இயக்கங்கள் தேர்தல் அரசியலில் வெற்றி பெறுவதை வரலாற்றில் பார்த்திருக்கிறோம். திமுகவும் இப்படி வளர்ந்த இயக்கம்தான். அந்த வகையில் கடந்த 3 தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி படிப்படியாக வளர்ந்திருக்கிறது " என்கிறார் அவர்.

நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான இடும்பாவனம் கார்த்திக்குக்கு தேர்தல் முடிவுகளில் திருப்தியில்லை. "தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கவில்லை" என்றார் அவர். இருப்பினும் தங்களுக்குக் கிடைத்திருக்கும் சுமார் 30 லட்சம் வாக்குகளையும் 7% வாக்கு விகிதத்தையும் மாற்றத்துக்கான விதைகளாகவே கருதுவதாக அவர் கூறுகிறார்.

"வரலாற்றில் நாம் தமிழர் கட்சியைப் போல தேர்தல் சமரசம் செய்து கொள்ளாத கட்சி எதுவுமில்லை. திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளும் அவ்வப்போது சமரசம் செய்துகொள்கின்றன" என்கிறார் இடும்பாவனம் கார்த்திக்.

நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்திருக்கும் வாக்குகள் தொடக்கத்தில் இருந்தே பலரையும் கவனிக்க வைத்திருக்கின்றன. காங்கிரஸ் எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் இதை "ஏற்கெனவே நிறுவப்பட்டிருக்கும் அரசியல் கட்டமைப்பை எதிர்க்கும் வாக்கு" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்கு வாக்களிப்போரைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.

இதேபோன்றதொரு கருத்தைப் பதிவு செய்திருக்கும் இயக்குநர் சேரன், வேட்பாளர்கள் தோல்வி கண்டாலும் கட்சி வளர்ச்சியைக் கண்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

 

நாம் தமிழர் கட்சி வாக்கு விகிதங்களில் வளர்ந்து வந்தாலும் அந்தக் கட்சிக்கு பலவிதமான சவால்களும் நெருக்கடிகளும் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் கணபதி கூறுகிறார்.

"சீமானின் பேச்சுக்கு இளைஞர்களை ஈர்க்கும் ஆற்றல் இருக்கிறது. அவரை நம்பி ஏராளமான இளைஞர்கள் வருகிறார்கள். அவர்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். கட்சியில் இருந்து முக்கியத் தலைவர்கள் தொடர்ந்து விலகினால் தொண்டர்கள் நம்பிக்கை இழக்க நேரிடும். அதேபோல கூடிய விரைவில் அரசியல் பதவிகளைப் பிடிக்க வேண்டும்." என்கிறார் கணபதி.

Seeman

பட மூலாதாரம்,NAAM THAMILAR

"தற்கால அரசியல் சூழலில் கொள்கை மட்டுமே அரசியலில் வெற்றிபெறப் போதுமானது இல்லை. காலத்துக்குத் தக்கபடி நவீன உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும். பிற கட்சிகளில் இருந்து பெரிய தலைவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு வந்தால் கட்சி அரசியல் ரீதியான ஆற்றல் கிடைக்கும். அதிமுக, தேமுதிக போன்ற கட்சிகளின் தொடக்க காலம் இப்படிக் கட்டமைக்கப் பட்டதுதான்." என்று குறிப்பிடுகிறார் கணபதி.

"அரசியல் அதிகாரத்தை நோக்கிய பாய்ச்சல்" என்று தங்களது தேர்தல் உத்தியைப் பற்றிக் குறிப்பிடும் இடும்பாவனம் கார்த்திக், நாம் தமிழர் கட்சியின் இலக்கு அதுதான் என்கிறார். திமுக , அதிமுக ஆகிய இரு கட்சிகளில் இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யும் மக்களின் எதிர்ப்பு வாக்கு மனநிலையே தங்களது வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

ஆயினும் தற்போது அமையும் திமுகவின் ஆட்சியால் இரு திராவிடக் கட்சிகளின் மீதும் மக்கள் நம்பிக்கை இழப்பார்கள் என்றும் அவற்றுக்கு மாற்றாக நாம் தமிழருக்கு வாக்களிப்பார்கள் என்றும் இடும்பாவனம் கார்த்திக் நம்புகிறார்.

"2024 மக்களவைத் தேர்தலிலும், 2026 சட்டப் பேரவைத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும்" என்கிறார் அவர்.

மூன்றாவது இடத்தில் சீமான்: நாம் தமிழருக்கு விழுந்த வாக்குகள் சொல்வது என்ன? - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பெருமாள் said:

1 நபர் மற்றும் , ’SUN NEWS தேர்தல் செய்திகள் நாம் தமிழருக்கு விழுந்த வாக்குகளை நினைத்து கவலைகொள்கிறேன் -ப.சிதம்பரம் 1:17 நாம் தமிழருக்கு விழுந்த வாக்குகளை நினைத்து கவலைகொள்கிறேன் ப.சிதம்பரம்... Sun News 9.5K views 54 minutes ago’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

இந்த நரி  வாலை  கிளப்புது .

இவர் மேலும் மேலும்/நிரந்தரமாக கவலை கொள்ள அந்த இயற்கையை வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனது வாக்கு வங்கியை உயர்த்திக் கொண்ட நாம் தமிழர் கட்சி!

நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் சேர்த்து 7% சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. பெரிய கட்சிகள் எதுவும் தனித்துப் போட்டியிடாத நிலையில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி சுமார் 30 லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளது.
நாம் தமிழர் கட்சி 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 1.1 சதவிகித வாக்குகளைப் பெற்றது. ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை.2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தது. அதில் 3.9 சதவிகித வாக்குகளைப் பெற்றது. 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சுமார் 7 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இது கடந்த சட்டப் பேரவைத் தேர்தலை அதிகம்.

ஒவ்வொரு தொகுதியிலும் மூன்றாயிரம் முதல் பதினைந்தாயிரம் வரை வாக்குகளைப் பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி முதல் தலைமுறை வாக்காளர்களைக் கவர்ந்துள்ளது எனலாம். சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 48 ஆயிரம். திருவொற்றியூரில் பதிவான வாக்குகளில் 24.3 சதவிகித வாக்குகளை சீமான் பெற்றுள்ளார்.
3 தேர்தலகளை எதிர்கொண்டுள்ள நாம் தமிழர் கட்சி படிப்படியாக வளர்ந்து வருவதை இந்த தேர்தல் டேட்டாக்கள் நமக்கு உணர்த்தும். 

ஆனால் இதை அடுத்தடுத்த தேர்தல்களில் தக்க வைத்துக் கொள்ளலாம் என்றாலும் இதே நிலையில் கூடுதலாக சில சதவிகிதங்கள் கூடுமே தவிற ஒரு தொகுதியில் கூட வெல்லும் நிலை ஏற்படாது. காரணம் திமுக, அதிமுக என்ற இரு பெறும் கட்சிகளும் சராசரியாக 30 முதல் 37 சதவிகிதம் வரையிலான வாக்கு வங்கியை கடந்த 30 ஆண்டுகளாக வைத்துள்ளன. தேமுதிக வந்த போதும், கமல் வந்த போதும் சீமான் வந்த போதும் இந்த வாக்கு வங்கியில் சேதங்களை உருவாக்க முடியவில்லை.எஞ்சியிருக்கும் 30 சதவிகித வாக்குகளில் அதிக பட்சம் 15% வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற முடியும். ஏதாவது ஒரு பெரிய கட்சியோடு மறைமுக கூட்டணி வைத்துக் கொண்டு இன்னொரு கட்சியின் வெற்றியை நான் பறித்து விடுவேன் என்றுதான் நாம் தமிழர் பயணிக்க முடியும்.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி பொது எதிரியாக திமுகவை அறிவித்தது. நேரடியாகவே அதிமுகவை ஆதரித்தது. திமுக,திராவிட இயக்க எதிர்ப்பு என்ற அடிப்படை கோட்பாட்டோடு பயணிக்கும் சீமான் தனக்கு கிடைக்க இருக்கும் அதிக பட்சமான 10 முதல் 15 சதவிகித வாக்கு வங்கியை வைத்து அதற்குரிய விலையை பேரங்கள் மூலம் பெற்றுக் கொண்டு தமிழக அரசியலில் இருக்கலாம். ஆனால் திராவிட இயக்கம் தேசிய இயக்கங்களை வீழ்த்திய அரியணை ஏறியது போல ஒரு போதும் ஒரு பரந்து பட்ட மக்கள் இயக்கமாக மாற வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.


https://inioru.com/தனது-வாக்கு-வங்கியை-உயர்/

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓடமும் ஓர் நாள்??

நாம் தமிழர் கட்சியின் செய்திகளை தேடிப்பிடித்து இணைக்கும் காலமும் வரும். வந்து விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விசுகு said:

ஓடமும் ஓர் நாள்??

நாம் தமிழர் கட்சியின் செய்திகளை தேடிப்பிடித்து இணைக்கும் காலமும் வரும். வந்து விட்டது.

பிஜேபியுடன் கூட்டுச் சேராமல் ஸிம்மான் அதிகாரத்தில் பங்காளியாக முடியாது. அதிகம் கல்வியறிவு கொண்ட இடதுசாரி பாரம்பரியத்தில் வளர்ந்த மேற்கு வங்கத்தில் பிஜேபி முக்கிய சக்தியாக வளர்ந்துள்ளது. அதுபோல தமிழகத்திலும் அடுத்த பத்தாண்டுகளில் நடைபெறலாம். அதற்கு ஸிம்மான் உதவி செய்வார். தனித்தே இருக்கவேண்டும் என்று நினைத்தால் தொடர்ந்தும் தங்கமுட்டைகள்தான்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தா சிக்னல் போகுது. சேர்ந்து பயணிப்பமாம். ஏ டீமா? பி டீமா? சி டீமா? 😁

 

ஊழல் செய்ய/ செய்த ஊழலை மறைக்க எதுவும் செய்வார்கள். மகிந்தவை சந்தித்து வாழ்த்து சொன்னது போல்....

Pawan Khera on Twitter: "Year 2010. Kanimozhi and Baalu honouring Mahinda  Rajapaksa. Wasn't he a war criminal in 2010? http://t.co/SE8dvKQPar"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, கிருபன் said:

பிஜேபியுடன் கூட்டுச் சேராமல் ஸிம்மான் அதிகாரத்தில் பங்காளியாக முடியாது. அதிகம் கல்வியறிவு கொண்ட இடதுசாரி பாரம்பரியத்தில் வளர்ந்த மேற்கு வங்கத்தில் பிஜேபி முக்கிய சக்தியாக வளர்ந்துள்ளது. அதுபோல தமிழகத்திலும் அடுத்த பத்தாண்டுகளில் நடைபெறலாம். அதற்கு ஸிம்மான் உதவி செய்வார். தனித்தே இருக்கவேண்டும் என்று நினைத்தால் தொடர்ந்தும் தங்கமுட்டைகள்தான்😁

கருத்துக்கு பஞ்சம் என்றால் ஒதுங்கி செல்லுங்கள்

அதை விடுத்து கேட்ட ஊருக்கு வழி சொல்வதை விடுத்து வேறு சளாப்பல் தேவையற்ற நேரவிரயம் 

முதலில் யாழ் களத்தின் விதிமுறைகளின் படி ஒரு தலைவருக்கு பட்டப்பெயர்கள் வைத்து எழுதுவது தவறு 

செய்தியை இணைப்பவர் என்ற வகையில் உங்களுக்கு அது இன்னும் இறுக்கமாக தெரிந்து இருக்கணும். 

இனி வரும் காலங்களில் உங்களுக்கு அதிக அளவில் தூக்கம் கலையும். தயாராகுங்கள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

இந்தா சிக்னல் போகுது. சேர்ந்து பயணிப்பமாம். ஏ டீமா? பி டீமா? சி டீமா? 😁

 

 

 

இந்த காணொளியில் கனிமொழி அம்மையார் இறுதியில் ஒரு வசனம் கூறுகின்றார்
......தேர்தல் முடிந்து விட்டதால் கடந்த ஆட்சியின்
குறைகளை பற்றித் நான்  கூறவிரும்பவில்லை
ஆனால் மக்கள் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளார்கள்.......

இப்படி ஒரு கருத்தை யாரும் எதிர்பார்த்தார்களா
தெரியவில்லை
சபை நாகரீகம் அவருக்கும் தெரிகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்து ஆண்டுகளின் முன் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று சொன்னார்கள், அடுத்த தேர்தலில் ஒரு ஆசனமாவது கிடைக்கின்றதா பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

பத்து ஆண்டுகளின் முன் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று சொன்னார்கள், அடுத்த தேர்தலில் ஒரு ஆசனமாவது கிடைக்கின்றதா பார்ப்போம்.

கட்டுக்காசு கிடைக்கிறதா என்று பார்ப்போம்

நெட்டோவை விட முன்னுக்கு வந்து காட்டுங்கள் பார்ப்போம் என்பதெல்லாம் போய்  ஆசனம் எடுத்து காட்டுங்கள் பார்ப்போம் என்று வந்து நிற்கிறது.

எழுதி வைத்து கொள்ளுங்கள்

ஆட்சி அமைத்தது காட்டுங்கள் என்று எழுத உங்களுக்கு அடுத்த முறை (2026) சந்தர்ப்பமே வராது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

பத்து ஆண்டுகளின் முன் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று சொன்னார்கள், அடுத்த தேர்தலில் ஒரு ஆசனமாவது கிடைக்கின்றதா பார்ப்போம்.

ஆட்சியை கைப்பற்றுவதென்பது இன்றைய நிலைமையில் ஒரு கனவுதான்.
ஆனாலும் தலைமை விடும் பிழைகளை சுட்டிக்காட்டி சரி செய்து
அல்லது தேவையேற்பட்டால் தலைமையைக்  கடந்து அடுத்த தலைமையுடன் கூட அந்தக் கனவு நினைவேறலாம். கால ஓட்டத்தில் பல நிகழ்வுகள் நடக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

இனி வரும் காலங்களில் உங்களுக்கு அதிக அளவில் தூக்கம் கலையும். தயாராகுங்கள். 

கனவில் ஸிம்மான் (சமஸ்கிருதப் பெயர்!) வந்து உறுமி வெருட்டப் போகின்றாருக்கும்😁

எனது கருத்துக்கு பொழிப்புரையை தமிழகன் வந்து வழங்குவார்! அப்பவாவது உங்களுக்கு புரியும் என நினைக்கின்றேன்!

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

எழுதி வைத்து கொள்ளுங்கள்

ஆட்சி அமைத்தது காட்டுங்கள் என்று எழுத உங்களுக்கு அடுத்த முறை (2026) சந்தர்ப்பமே வராது

அது தான் எனது விருப்பமும்.

ஆனாலும் சூழல் இன்னும் சில காலங்கள் அப்படியே தான் இருக்கும்.

எல்லாம் கடந்து செல்லும்வரை சீமான் நிலைதடுமாறாது இருக்க வேண்டுமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, விசுகு said:

கருத்துக்கு பஞ்சம் என்றால் ஒதுங்கி செல்லுங்கள்

அதை விடுத்து கேட்ட ஊருக்கு வழி சொல்வதை விடுத்து வேறு சளாப்பல் தேவையற்ற நேரவிரயம் 

முதலில் யாழ் களத்தின் விதிமுறைகளின் படி ஒரு தலைவருக்கு பட்டப்பெயர்கள் வைத்து எழுதுவது தவறு 

செய்தியை இணைப்பவர் என்ற வகையில் உங்களுக்கு அது இன்னும் இறுக்கமாக தெரிந்து இருக்கணும். 

இனி வரும் காலங்களில் உங்களுக்கு அதிக அளவில் தூக்கம் கலையும். தயாராகுங்கள். 

 

நாம் தமிழர் கட்சிக்கான கேவல துணுக்குகளும்,கேவல பெயர்களும் யாழ்களத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது போல் தெரிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பிஜேபியுடன் கூட்டுச் சேராமல் ஸிம்மான் அதிகாரத்தில் பங்காளியாக முடியாது. அதிகம் கல்வியறிவு கொண்ட இடதுசாரி பாரம்பரியத்தில் வளர்ந்த மேற்கு வங்கத்தில் பிஜேபி முக்கிய சக்தியாக வளர்ந்துள்ளது. அதுபோல தமிழகத்திலும் அடுத்த பத்தாண்டுகளில் நடைபெறலாம். அதற்கு ஸிம்மான் உதவி செய்வார். தனித்தே இருக்கவேண்டும் என்று நினைத்தால் தொடர்ந்தும் தங்கமுட்டைகள்தான்😁

சீமான் எந்தக்கட்சியுடன் கூட்டுச்சேர்கிறாரோ  அந்தக்கட்சி தெலுங்கர் வாக்கை  இழக்கும்  அதாவது20000தொடக்கம் 50000வரை ...(100 சட்டமன்றத்தொகுதிகளில்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

கனவில் ஸிம்மான் (சமஸ்கிருதப் பெயர்!) வந்து உறுமி வெருட்டப் போகின்றாருக்கும்😁

எனது கருத்துக்கு பொழிப்புரையை தமிழகன் வந்து வழங்குவார்! அப்பவாவது உங்களுக்கு புரியும் என நினைக்கின்றேன்!

 

சீமானை  சைமன் என எள்ளி நகையாடி களைத்து விட்டீர்கள். இப்போது ஸிம்மான் என  சமஸ்கிருத ஆதாரத்துடன் புது வேடம் புகுந்துள்ளீர்கள். நீங்களும் உங்களைப்போன்றவர்களும் பாடம் படிக்க அதிக காலம் எடுக்குமென நினைக்கின்றேன்

நன்று.

காலங்கள் மலரும்.அப்போது சந்திக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

நாம் தமிழர் கட்சிக்கான கேவல துணுக்குகளும்,கேவல பெயர்களும் யாழ்களத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது போல் தெரிகின்றது.

இது இண்டைக்கா உங்க‌ளுக்கு தெரிஞ்ச‌து தாத்தா
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

சீமான் எந்தக்கட்சியுடன் கூட்டுச்சேர்கிறாரோ  அந்தக்கட்சி தெலுங்கர் வாக்கை  இழக்கும்  அதாவது20000தொடக்கம் 50000வரை ...(100 சட்டமன்றத்தொகுதிகளில்)

கந்தையா57! தமிழ்நாட்டு அரசு மத்திய அரசை மீறி ஈழத்தமிழருக்கு எதையுமே செய்ய முடியாது என கூறுபவர்கள் ஏன் சீமான் அரசியலை பற்றி இங்கு வெட்டி விளாசுகின்றார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

சீமானை  சைமன் என எள்ளி நகையாடி களைத்து விட்டீர்கள். இப்போது ஸிம்மான் என  சமஸ்கிருத ஆதாரத்துடன் புது வேடம் புகுந்துள்ளீர்கள். நீங்களும் உங்களைப்போன்றவர்களும் பாடம் படிக்க அதிக காலம் எடுக்குமென நினைக்கின்றேன்

நன்று.

காலங்கள் மலரும்.அப்போது சந்திக்கலாம்.

யாழ் க‌ள‌ம் முக‌ நூலை மிஞ்சி விட்ட‌து தாத்தா

இதில் ப‌ன்பான‌ முறையில் க‌ருத்தாட‌னும் என்று விதிமுறையாம்.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

கந்தையா57! தமிழ்நாட்டு அரசு மத்திய அரசை மீறி ஈழத்தமிழருக்கு எதையுமே செய்ய முடியாது என கூறுபவர்கள் ஏன் சீமான் அரசியலை பற்றி இங்கு வெட்டி விளாசுகின்றார்கள்?

ஆம் அது எங்களுக்கு அனுபவம் கற்றுத்தந்தது. அனுபவமென்பது  ஒர்ஆசிரியாரல் கற்றுக் கொடுப்பதில்லை ..பல தோல்விகளால். கற்றுக்கொடுக்கப்படும் ..தமிழ்நாட்டு அரசியல் பேசும்போது கருணநிதி பற்றிப்பேசாதே....எம.ஜி.ஆர். பற்றிப்பேசாதே....என்க்கூறமிடியுமா? சீமான் தமிழ் நாட்டு அரசியலில் இருப்பதாலும் ...மேதகுவின் விம்பமெனப் புலுடா விடுவாதாலும்  ..கதைக்கிறோம்...இப்படி நாங்கள் கதைப்தால் சீமான் வளர இடமுண்டு  புகழ்ச்சியால் ஒருவனும் ஒரபோதும்  வளர்த்ததில்லை மாறாக அவனுடைய சிந்தனை ஆற்றல் முடக்கப்படுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

கந்தையா57! தமிழ்நாட்டு அரசு மத்திய அரசை மீறி ஈழத்தமிழருக்கு எதையுமே செய்ய முடியாது என கூறுபவர்கள் ஏன் சீமான் அரசியலை பற்றி இங்கு வெட்டி விளாசுகின்றார்கள்?

யாழ்க‌ள‌த்தில் வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் என‌க்கு சொன்ன‌ அறிவுரை 
த‌ம்பி நீங்க‌ள் எம் போராட்ட‌ம் ம‌ற்றும் த‌மிழ‌க‌ அர‌சிய‌லை ப‌ற்றி ந‌ல்லாக‌ தெரிந்து வைத்து இருக்கிறீங்க‌ள்..........இந்த‌ த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌துக‌ளை சொல்லி கொடுக்க‌ சொன்னார்..........

அந்த‌ ஜ‌யா வேற‌ யாரும் இல்லை நொச்சி என்ற‌ உற‌வு தான்.........யாழ்க‌ள‌த்தில் ந‌ட‌க்கும் கேலி கூத்துக‌ளை பார்த்து அருவ‌ருப்பில் யாழை விட்டு ஒதிங்கின‌ உற‌வுக‌ள் ப‌ல‌ர்...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kandiah57 said:

ஆம் அது எங்களுக்கு அனுபவம் கற்றுத்தந்தது. அனுபவமென்பது  ஒர்ஆசிரியாரல் கற்றுக் கொடுப்பதில்லை ..பல தோல்விகளால். கற்றுக்கொடுக்கப்படும் ..தமிழ்நாட்டு அரசியல் பேசும்போது கருணநிதி பற்றிப்பேசாதே....எம.ஜி.ஆர். பற்றிப்பேசாதே....என்க்கூறமிடியுமா? சீமான் தமிழ் நாட்டு அரசியலில் இருப்பதாலும் ...மேதகுவின் விம்பமெனப் புலுடா விடுவாதாலும்  ..கதைக்கிறோம்...இப்படி நாங்கள் கதைப்தால் சீமான் வளர இடமுண்டு  புகழ்ச்சியால் ஒருவனும் ஒரபோதும்  வளர்த்ததில்லை மாறாக அவனுடைய சிந்தனை ஆற்றல் முடக்கப்படுகிறது. 

சீமான் தன்னை தலைவர் பிரபாகரனின் பிம்பம் என சொன்னாரா? எங்கே? எப்போது?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.