Jump to content

உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியானது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியானது!

2020ம் ஆண்டுக்கான க.பாெ.த உயர்தர (ஏ/எல்) பரீீட்சை முடிவுகள் இன்று (4) சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி சுட்டெண்ணை பயன்படுத்தி தற்போது முடிவுகளை பார்க்க முடியும்.

அடையாள அட்டை பயன்படுத்தி பார்ப்பவர்கள் காத்திருக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவை பார்க்க
 

https://newuthayan.com/உயர்தர-பரீட்சை-முடிவுகள்/

 

2020 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்­­ படி 64% மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு

Digital News Team 2021-05-04T17:33:56

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளன. அதன் அடிப்படையில் 64.39 சதவீதமான மாணவர்கள் பல்கலைக் கழகங்களிற்குத் தெரிவாகியுள்ளதாகத் தெரியவந் துள்ளது.

மேலும் பரீட்சை மீள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப் படுகின்றது.

uni-300x161.jpg

இம்முறை பரீட்சைக்காக 362,824 பரீட்ச்சார்த்திகள் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன் அடிப்படையில் அவர்களுள் 194,297 மாணவர்கள் பல்கலைக்கழகங்களிற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
 

https://thinakkural.lk/article/120218

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Check the result with this details: index: 4139679

Chavakacheri Hindu College Student Island's 1st in Maths

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து யாழ். மாணவன் சாதனை

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்

சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன், கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்தவராவர்.

கணித பிரிவின் புதிய பாடத் திட்டத்துக்கமைய மாணவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டன.

இதன்படி, 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk எனும் இணையத்தளத்தில் பார்வையிடமுடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக சுகாதார வழிகாட்டல்களுக்கமைய 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இடம்பெற்றது.

இதன்படி, 2 ஆயிரத்து 648 பரீட்சை மத்திய நிலையங்களில் மூன்று இலட்சத்து 62 ஆயிரத்து 824 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilmirror Online || தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து யாழ். மாணவன் சாதனை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனராஜ் சுந்தர்பவனுக்கு... பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://photos.app.goo.gl/zLffp3ZgeGJcifTA8

யாழ் சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் கணித பிரிவில் (Maths stream) அகில இலங்கை ரீதியில் (island wise)  முதலிடம் (1st) பெற்றிருக்கிறார்.!

மனமார்ந்த வாழ்த்துக்கள்! ❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயர் தரப் பரீட்சை, புலமைப் பரிசில் பரீட்சைகளின் திகதி அறிவிப்பு!

அகில இலங்கை ரீதியில் இரு தமிழ் மாணவர்கள் முதலிடம்- ஐந்து துறைகளின் முழு விபரம்!

2020ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், அகில இலங்கை ரீதியில் துறை ரீதியாக முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, கணித மற்றும் விஞ்ஞானப் பிரிவுகளில் அகில இலங்கை ரீதியில் தமிழ் மாணவர்கள் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் சாவகச்சேரி இந்து கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தரபவன் முதலிடம் பெற்றுள்ளார்.

அதேபோல், விஞ்ஞானப் பிரிவில்.... மட்டக்களப்பு, பட்டிருப்பு தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் மகிழுரைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தினோஜன் முதலிடம் பெற்றுள்ளார்.

வர்த்தகப் பிரிவில், காலி மாவட்டம் சங்கமித்த வித்தியாலய மாணவி அமந்தி இமாசா மதநாயக்க அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

அத்துடன், கலைப்பிரிவில் ப்ரிஸ்படேரியன் மகளிர் கல்லூரி மாணவி சாமல்கா செவ்மினி அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

இதேவேளை, உயிரியல் தொழில்நுட்பப் பிரிவில் ஹொரன தக்சிலா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சுசிகா சந்தசர என்பவர் முதலிடம் பெற்றுள்ளார்.

பரீட்சை திணைக்களத்தின் https://www.doenets.lk/ என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசித்து மாணவர்கள் பரீட்சைப் பெறுபேறுகளை அறிந்துகொள்ள முடியும்.

https://athavannews.com/2021/1214013

###########   ##############  ###############

தம்பிப்பிள்ளை தினோஜனுக்கும்.... பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதிபெற்றவர்கள் தொடர்பான அறிவிப்பு!

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதிபெற்றவர்கள் தொடர்பான அறிவிப்பு!

2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 297 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதிபெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்முறை மூன்று இலட்சத்து 62 ஆயிரத்து 824 பேர் பரீட்சை எழுதிய நிலையில், அவர்களில் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றவர்கள் 64.39 வீதமாகும்.

அத்துடன், பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 86 பேருடைய பெறுபேறுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பரீட்சைப் பெறுபேறுகளை மீள் பரீசீலனை செய்வதற்கான விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பு பின்னர் வெயிடப்படவுள்ளது.

https://athavannews.com/2021/1214027

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கமலாவின் பெட்டை... A/L எல்லாப் பாடமும், இந்த முறையும் பெயில் மேனே...
என்ன செய்யப் போறாய்... என, கேட்டேன்.   
வெளிநாட்டு மாப்பிளையை கட்டி, அனுப்பப் போறாளாம் :grin:  ஊர்க்  கிழவி. 😜

-முகநூலில் வாசித்தது.-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனராஜ் சுந்தர்பவனுக்கும், தம்பிப்பிள்ளை தினோஜனுக்கும் வாழ்த்துக்கள் 👏

Link to comment
Share on other sites

இந்த ஆண்டு 1, 2 வது தரவரிசை ரத்து செய்யப்பட்டுள்ளது : தேர்வு ஆணையாளர் 


சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 2020 க.பொ.த. உயர்தர  (ஏ / எல்) தேர்வு முடிவுகளின் போது முதல் மற்றும் இரண்டாம் இடங்களையும், தீவு ரீதியான  தரவரிசைகளையும் பெற்ற மாணவர்கள் இந்த ஆண்டு வெளியிடப்பட மாட்டார்கள் என்று தேர்வு ஆணையர் சனத் பி.புஜிதா தெரிவித்தார்.

http://www.dailymirror.lk/breaking_news/Announcement-of-1st-2nd-rank-annulled-this-year-Commissioner-General/108-211310

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

கமலாவின் பெட்டை... A/L எல்லாப் பாடமும், இந்த முறையும் பெயில் மேனே...
என்ன செய்யப் போறாய்... என, கேட்டேன்.   
வெளிநாட்டு மாப்பிளையை கட்டி, அனுப்பப் போறாளாம் :grin:  ஊர்க்  கிழவி. 😜

-முகநூலில் வாசித்தது.-

நான் அறிந்த இரண்டு மாணவிகள் கலைப்பிரிவு ஒருவர் ABC, மற்றவர் BSS. இருவரும் ஆங்கிலம் சித்தி அடையவில்லை. ஆங்கிலம் மாணவர்கள் அதிகம் பேர் சித்தி அடையவில்லை என்றால் இந்த கோளாறு சரி செய்யப்பட வேண்டும். 

க. பொ. த சாதாரணத்தில் ஆங்கிலம் உள்ளது. மீண்டும் உயர்தரத்தில் என்னத்தை கற்பிக்கின்றார்களோ!

பிள்ளைகள் பலர் சாதாரண தரமும் உயர்தரமும் இரண்டிலும் ஆங்கிலம் பெயில் ஆகிவிட்டு சிரித்துக்கொண்டு இருப்பதா?

32 minutes ago, zuma said:

இந்த ஆண்டு 1, 2 வது தரவரிசை ரத்து செய்யப்பட்டுள்ளது : தேர்வு ஆணையாளர் 


சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 2020 க.பொ.த. உயர்தர  (ஏ / எல்) தேர்வு முடிவுகளின் போது முதல் மற்றும் இரண்டாம் இடங்களையும், தீவு ரீதியான  தரவரிசைகளையும் பெற்ற மாணவர்கள் இந்த ஆண்டு வெளியிடப்பட மாட்டார்கள் என்று தேர்வு ஆணையர் சனத் பி.புஜிதா தெரிவித்தார்.

http://www.dailymirror.lk/breaking_news/Announcement-of-1st-2nd-rank-annulled-this-year-Commissioner-General/108-211310

 

புரியவில்லையே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட மாட்டாது - பரீட்சை திணைக்களம்

(இராஜதுரை ஹஷான்)

2020ஆம் ஆண்டு இடம்பெற்று முடிந்த கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளன.

பரீட்சை பெறுபேறுகளை பாடசாலை அதிபர்கள் மற்றும் வலய கல்வி பணிப்பாளர்கள் பரீட்சை பெறுபேறுகளை இணையவழி முறைமை ஊடாக தரவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ள தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

http://cdn.virakesari.lk/uploads/medium/file/113889/education_department.jpg

அத்துடன் தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தமது பெறுபேறுகளை பதிவிறக்கம் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித தெரிவித்தார்.

பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்  மேலும் குறிப்பிடுகையில்,

பரீட்சை பெறுபேகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் முதல் , இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றுக் கொண்ட  மாணவர்களின்  விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்காது.

நிலைகள் அறிவிக்கப்படும் போது  பெரும்பாலான மாணவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்படுவதால். உளவியல் ஆலோசனை சபையின் பரிந்துரைக்கமைய 2019ஆம் ஆண்டு எடுத்த தீர்மானத்துக்கு அமைய  செயற்படுத்தப்படுகிறது.

அதற்கமைய பரீட்சைகள் சான்று பரீட்சைகளாக மாத்திரமே கருதப்படும் என்பதுடன் இது முதலாவது இரண்டாவது இடங்களைப் பிடித்தவர்களை தெரிவு செய்யும் பரீட்சை இல்லை என்றும் மாவட்டம் மற்றும் அகில இலங்கை ரீதியில் தெரிவுசெய்யப்புடுவதானது பல்கலைக்கழக அனுமதிக்காக மாத்திரம் என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும்.

தற்போது ஏற்பட்டுள்ள பாரிய போட்டித்தன்மையானது பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி கிடைக்கும் மாணவர்களைப் போல கிடைக்காத மாணவர்களுக்கும் உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்கலைகழகத்துக்கு தெரிவாகாத மாணவர்களின் அடுத்தக்கட்ட கற்றல் நடவடிக்கை குறித்து திறன்விருத்தி அமைச்சு மட்டத்தில்   பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் பாடசாலைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பெறுபேறுகள் மீள் பரிசீலனைக்காக பாடசாலைகள் ஊடாக அனுப்பவும் தனிப்பட்ட பரிட்சார்த்திகள் தனிப்பட்ட ரீதியில்  விண்ணப்பிக்கவும் வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும் அது குறித்து எதிர்வரும் நாள்களில் பத்திரிகைகள் வாயிலாக அறிவிக்கப்படும் என்றார்.
 

 

https://www.virakesari.lk/article/104959

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

கமலாவின் பெட்டை... A/L எல்லாப் பாடமும், இந்த முறையும் பெயில் மேனே...
என்ன செய்யப் போறாய்... என, கேட்டேன்.   
வெளிநாட்டு மாப்பிளையை கட்டி, அனுப்பப் போறாளாம் :grin:  ஊர்க்  கிழவி. 😜

-முகநூலில் வாசித்தது.-

கமலாவின் பெட்டை ஏ எல்லில எல்லாப் பாடமும் பெயில் என்றால் அவாவுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை தான் சரி. அவர் ஓ எல்லில எல்லாப் பாடமும் பெயில் விட்டிருப்பார். அதால வெளிநாட்டுக்கு வந்திருப்பார். 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nedukkalapoovan said:

கமலாவின் பெட்டை ஏ எல்லில எல்லாப் பாடமும் பெயில் என்றால் அவாவுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை தான் சரி. அவர் ஓ எல்லில எல்லாப் பாடமும் பெயில் விட்டிருப்பார். அதால வெளிநாட்டுக்கு வந்திருப்பார். 😜

அப்ப வெளிநாட்டுக்கு ஓடி வந்தவனெல்லாம் ஓஎல்லிலை பெயில் விட்டவங்கள் அப்பிடித்தானே? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2021 at 05:03, குமாரசாமி said:

அப்ப வெளிநாட்டுக்கு ஓடி வந்தவனெல்லாம் ஓஎல்லிலை பெயில் விட்டவங்கள் அப்பிடித்தானே? 😎

பலர் பெயிலாகி  ஓடி வந்தாலும் இங்க வந்து 10 வருசம் படிச்சு  இஞ்ஞினியராகி பெண்ஸ் கார் என்று ஒடி திரியிராங்கள் கண்டியளோ ....எங்கன்ட பெடியள் சுழியங்கள் மண் அப்படி ..வசதி வாய்ப்பு கிடைச்சால் பிரிச்சு மேய்ந்து போடுவாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, putthan said:

பலர் பெயிலாகி  ஓடி வந்தாலும் இங்க வந்து 10 வருசம் படிச்சு  இஞ்ஞினியராகி பெண்ஸ் கார் என்று ஒடி திரியிராங்கள் கண்டியளோ ....எங்கன்ட பெடியள் சுழியங்கள் மண் அப்படி ..வசதி வாய்ப்பு கிடைச்சால் பிரிச்சு மேய்ந்து போடுவாங்கள்.

அட நீங்கள் வேற ஓடி வந்தவங்களின்ரை பிள்ளையள் இப்ப பென்ஸ் கொம்பனிக்கே கணக்கு எழுதுறாங்கள்.

Link to comment
Share on other sites

அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் முதலிடம் பெற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த தனராஜ் சுந்தர்பவன்! 

வௌியான 2020 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, யாழ்ப்பாணத்தை சேர்ந்த தனராஜ் சுந்தர்பவன் அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

யாழ். சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவரான தனராஜ் சுந்தர்பவன், கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9A அதிவிசேட சித்தியினை பெற்றிருந்ததுடன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 182 புள்ளிகளை பெற்று சித்தியடைந்திருந்தார்.

2014 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற கணித ஒலிம்பியாட் போட்டியிலும் தனராஜ் சுந்தர்பவன் பதக்கம் வென்று சாதித்திருந்தார்.

உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் முதலிடத்தை பெற்ற தனராஜ் சுந்தர்பவன், இணை பாடவிதான செயற்பாடுகளிலும் திறமையை வௌிப்படுத்தியவராவார்.

இதனிடையே அகில இலங்கை ரீதியில் விஞ்ஞானப் பிரிவில் அம்பாறை – கல்முனை ஷாஹிரா தேசிய பாடசாலையின் ஐ.அன்பஸ் அஹமட் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளார்.

இணைப்பாடவிதான செயற்பாடுகளில் அதீத ஆர்வம் காட்டிய அன்பாஸ் அஹமட், மாகாண மட்ட சதுரங்கப் போட்டியிலும் சாதனை படைத்துள்ளார்.

இதேவேளை காலி சங்கமித்த பாலிகா வித்தியாலயத்தின் அமந்தி மதநாயக்க வணிகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

உயிரியல் பிரிவில், ஹொரணை தக்ஷிலா கல்லூரியின் மாணவி சுசிகா சந்தசர, அகில இலங்கை ரீதியில் முதல் நிலையைப் பெற்றுள்ளார்.

குறித்த பாடசாலையின் அவிஷ்க சானுக்க தகவல் தொழில்நுட்பப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்துள்ளார்.

 

https://ilakkiyainfo.com/அகில-இலங்கை-ரீதியில்-கணி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

அட நீங்கள் வேற ஓடி வந்தவங்களின்ரை பிள்ளையள் இப்ப பென்ஸ் கொம்பனிக்கே கணக்கு எழுதுறாங்கள்.

உந்த சீனாக்காரன் வந்து அடிமைபடுத்தினால் அந்த சனங்கள் வெளிநாட்டுக்கு போய் இப்படி பிரிச்சு மேய்ய முடியுமோ தெரியவில்லை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, putthan said:

உந்த சீனாக்காரன் வந்து அடிமைபடுத்தினால் அந்த சனங்கள் வெளிநாட்டுக்கு போய் இப்படி பிரிச்சு மேய்ய முடியுமோ தெரியவில்லை....

கந்தக புகையின் பின்னரும் மிளிர்கின்றார்கள். அவர்கள் தூண்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

கந்தக புகையின் பின்னரும் மிளிர்கின்றார்கள். அவர்கள் தூண்கள்.

உண்மை மாற்றுகருத்துக்கு இடமில்லை 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.