Jump to content

ஸ்டாலின் முன் உள்ள இமாலய சவால்கள் - எப்படி எதிர்கொள்ளப்போகிறார்? - BBC News தமிழ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பெருந்தொற்று, கடன் சுமை: ஸ்டாலின் முன் உள்ள இமாலய சவால்கள் - எப்படி எதிர்கொள்ளப் போகிறார்?

 

  • விஷ்ணுப்ரியா ராஜசேகர்
  • பிபிசி தமிழ்

30 நிமிடங்களுக்கு முன்னர்

ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் தீவிரமாகியிருக்கும் நெருக்கடியான சூழலில் புதிய ஆட்சி அமையபோகிறது. மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்கவுள்ளார். அவர் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் என்ன?

 

எதிர்நிற்கும் சவால்கள்

 

எந்தவொரு புதிய அரசும், ஆட்சி அதிகாரத்தில் காலூன்றி சுதாரிக்க ஆறு மாத கால அவகாசம் தேவை. ஆனால் அமையப்போகும் திமுக ஆட்சிக்கு எதிர்வரும் ஆறு மாதங்களும் அதீத நெருக்கடியான காலமாக இருக்கும். அதற்கு முக்கிய காரணம் கொரோனா இரண்டாம் அலை.

கொரோனா தொற்றின் முதல் அலையை தமிழ்நாடு ஏதோ சமாளித்து விட்டாலும், இரண்டாவது அலை என்பது அதை காட்டிலும் கடினமானதாகவே உள்ளது. எனவே கொரோனா தொற்றை முதல்வராக பதவியேற்கவுள்ள ஸ்டாலின் எவ்வாறு கையாளப் போகிறார், போதுமான தடுப்பூசிகளை மத்திய அரசிடமிருந்து எவ்வாறு பெற போகிறார் என்பதுதான் அவர் முன் உள்ள இமாலய சவால்களில் முதன்மையானது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

 

கொரோனா பெருந்தொற்று

 

"கொரோனா இரண்டாம் அலை அதிக ஆபத்தானதாக உள்ளது. இளைஞர்களை தாக்குகிறது. இதுவரை பார்க்காத எண்ணிக்கையை காட்டிலும் இப்போது எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. முதல் அலையில் மருத்துவமனை படுக்கைகளுக்கு எந்த தட்டுபாடும் இல்லை. ஆனால் இந்த இரண்டாம் அலையில் ஐசியூ படுக்கைகள் தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு தீவிரமாக உள்ளது. அது போக இங்கேயும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற நிலைமை இருப்பதுபோலவே தெரிகிறது. எனவே திமுகவினர் மிக நெருக்கடியான காலகட்டத்தில் தான் பொறுப்பை கையில் எடுக்கிறார்கள்." என்கிறார் மூத்த பத்திரிகையாளர் டி. சுரேஷ் குமார்.

கொரோனா பெருந்தொற்று நெருக்கடி என்பது வெறும் சுகாதார நெருக்கடி என்ற நிலையில் மட்டும் நின்று விடுவதில்லை. அது ஒரு பெரும் பொருளாதார நெருக்கடிக்குக்கும் வித்திடும். எனவே பெருந்தொற்றால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டும் என்பதும் தமிழகத்தின் தற்போதைய பெரும் தேவை.

"பொதுமுடக்கம் இல்லை என்றாலும், கிட்டத்தட்ட முழு முடக்கம் போன்ற கட்டுப்பாடுகள் இருக்கும் ஒரு சூழலில் வாழ்வாதாரம் பெரிதாக பாதிக்கப்படும். ஒரு பக்கம் தமிழகம் இதுவரை காணாத மிகப்பெரிய சுகாதார நெருக்கடி மறுப்புறம் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே பொருளாதாரம் கிட்டதட்ட ஸ்தம்பிக்கும் நிலைக்கு வரும்போது அரசு என்ன செய்யவிருக்கிறது என்பதுதான் மிகப்பெரிய சவால்." என்கிறார் சுரேஷ் குமார்.

பட மூலாதாரம், Getty Images

கொரோனா தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கையின் பெரும் பகுதியாக மாநிலத்தின் மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும் அது மத்திய அரசின் கையில் உள்ளதால் இதை கையாளுவதும் திமுகவிற்கு பெரிய சவலாகவே இருக்கும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

"18-45 வயதினருக்கு தடுப்புசி போடுவது அடுத்தகட்ட நடவடிக்கை, அது மத்திய அரசின் கையில் உள்ளது. திமுக என்பது பாஜகவுக்கு எதிராக இருக்ககூடிய ஒரு கட்சி எனவே அதை கையாள்வதும் சவாலானதுதான். சரியாக கையாளவில்லை என்றால் மகராஷ்டிராவுக்கு வந்த சூழல் தமிழகத்துக்கு வந்துவிடும்." என்கிறார் மூத்த பத்திரிகையாளர் லஷ்மி.

"ஆக்சிஜன் விநியோகத்தை பொறுத்தவரை வேறு மாநிலத்திற்கு கொடுக்க வேண்டாம் என்ற அழுத்தம் தரலாம். ஆனால் தடுப்பு மருந்தை பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலமும் போராடி பெற வேண்டிய சூழலே உள்ளது. இந்த தடுப்பூசி செயல்பாட்டை நிறைவேற்றினால் மட்டுமே கொரோனா நெருக்கடியிலிருந்து முழுமையாக வெளியே வர முடியும். மத்திய அரசு தமிழகத்திற்கு தடுப்பூசிகளை எந்த அளவிற்கு ஒதுக்கிறது என்றும் பார்க்க வேண்டும்." என்கிறார் சுரேஷ் குமார்.

 

அறிவித்துள்ள திட்டங்களை செயல்படுத்த முடியுமா?

 

பெருந்தொற்றை சமாளிக்காமல் அதிலிருந்து மீளாமல் வேறு எந்த திட்டத்தையும் நிறைவேற்ற இயலாத ஒரு சூழலே நிலவுகிறது என்கிறார் சுரேஷ் குமார்.

கொரோனா காலத்தில் குடும்பங்களுக்கு 4000ரூபாய் நிதி உதவி குடும்ப தலைவிகளுக்கு ஊக்க தொகை என்பதெல்லாம் உடனடியாக நிறைவேற்றுவது சிரமமாகவே இருக்கும் என்கிறார் அவர்.

 

மத்திய அரசின் ஒத்துழைப்பு

 

மத்தியில் இருக்கும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வந்துள்ளது திமுக. மேலும் திமுகவுடன் கொள்கை அளவில் முரண்பாடு கொண்ட ஒரு கட்சி மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக. எனவே மத்திய அரசுடன் இணக்கமாக செல்வது என்பது ஸ்டாலின் முன் வைக்கப்பட்டுள்ள சவால்களில் ஒன்றாகவே இருக்கும்.

பட மூலாதாரம், Getty Images

"2019ஆம் ஆண்டு தேர்தலில் வேறு எந்த தலைவரும் விமர்சிக்காத அளவிற்கு ஸ்டாலின் மோடியை கடுமையாக விமர்சித்திருந்தார். எனவே திமுக கடுமையான ஒரு பாஜக எதிர்ப்பு நிலை எடுத்திருந்த பட்சத்தில் அதை திருப்பி கொடுக்கவே பாஜக முயற்சி செய்யும்." என்கிறார் சுரேஷ் குமார்.

 

மாநிலத்தின் நிதி சுமை

 

பெருந்தொற்றால் ஏற்படும் புதிய பொருளாதார நெருக்கடி, வேலையிழப்புகள், இவை எல்லாம் மாநிலத்தில் ஏற்கனவே இருக்கும் கடன் சுமையின் மீது கூடுதல் அழுத்தத்தை உருவாக்கும். எனவே புதியதாக வரும் அரசு நிதி மேலாண்மைக்கு பல்வேறு துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை அதிகமாக உள்ளது.

"மாநிலத்தின் நிதி நிலைமைகள் குறித்து முந்தைய அதிமுக ஆட்சி பெரிதாக கவனம் செலுத்தவில்லை. அதை சரியாக கையாளவில்லை. அதிக வட்டிகளில் பெரிய கடன்களை வாங்கியது. எனவே ஸ்டாலின் பதவியேற்கும் சமயத்தில் மாநிலத்தின் நிதி நிலைமை குறித்து மக்களுக்கு அறிவித்துவிட வேண்டும். எந்த அளவிற்கு நிதியுடன் அவர் பொறுப்பேற்கிறார் என்பதை மக்களுக்கு தெளிவு படுத்திட வேண்டும்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன்.

தமிழகத்திற்கு பல காலமாக ஜிஎஸ்டி ரிடன்ஸ் வழங்கப்படவில்லை என்பதும் கூடுதல் சுமையே என்கிறார் லஷ்மி.

"மாநிலத்தில் கடன் 4.85 லட்சம் கோடி ஆக உள்ளது. தேர்தல் சமயத்தில் சொன்னது போல 4000 ரூபாய் கொடுத்தால் ஒரு லட்சம் கோடி வரை இரண்டு வருடங்களுக்கு தேவைப்படும். எனவே இதை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பது தெரியவில்லை. ஏனென்றால் மாநிலத்தின் வருவாய் வாய்ப்புகள் குறைந்து விட்டன. போன பொதுமுடக்கத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அப்போது மதுக்கடைகளால் வரக்கூடிய வருவாய் குறைந்தது. அடுத்ததாக ஜிஎஸ்டி ரிட்டன்ர்ஸ் எதுவும் வரவில்லை. ஊதியங்களுக்கும், மானியத்திற்கும் மாநிலத்தின் வரி வருவாயிலிருந்து 150 சதவீதம் வரை செலவு செய்திட வேண்டும் அவ்வாறு செலவு செய்தால் இந்த சூழலில் இருந்து மீண்டு வருவது கடினம். எனவே தொலைநோக்கத்துடன் திட்டங்களை வகுத்தால் மட்டுமே மாநிலத்தை மீட்டு வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்ல முடியும்." என்கிறார் லஷ்மி.

 

ஸ்டெர்லைட், எட்டு வழி சாலை, நீட்

 

கொரோனா பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி என்ற பெரும் சவால்கள் உடனடியாக காத்திருந்தாலும், முந்தைய ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பெரும் போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் தூண்டிய முக்கிய பிரச்னைகளை திமுக அரசு எவ்வாறு கையாளவிருக்கிறது என்பதும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

பட மூலாதாரம், Getty Images

அவ்வாறு முந்தைய ஆட்சிக்காலத்தில் எதிர்ப்புகளை உருவாக்கிய பிரச்னைகள் தேர்தல் சமயத்தில் பெரும் தாக்கத்தையும் செலுத்தியுள்ளது என்கிறார் பத்திரிகையாளர் இளங்கோவன்.

"10.5 சதவீத இட ஒதுக்கீடு என்பதையும் மீறி வட தமிழகத்தில் திமுக வெற்றி பெற்று இருப்பது எட்டு வழி சாலை பிரச்னையும் இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை சொல்கிறது. ஏனென்றால் மக்கள் தங்களின் நிலங்களையும், வாழ்வாதாரங்களையும் இழக்கும்படியான திட்டமாக அது உள்ளது. எனவே ஸ்டாலின் அதை மிக கவனமாக கையாள வேண்டும்" என்கிறார் இளங்கோவன்.

"அதேபோன்று ஸ்டெர்லைட் விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மிது தொடுக்கப்பட்ட பொய் வழக்குகள் திரும்பப் பெறப்படும் என ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதை அப்பகுதி மக்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். எந்த குற்றப் பின்னணியும் இல்லாத 13 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு எந்த ஒரு விளக்கத்தையும், நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது கடந்த கால அரசு. எனவே அந்த விவகாரத்தையும் ஸ்டாலின் சரியான முறையில் அணுகி முதிர்ச்சியான முறையில் உண்மையான குற்றவாளிகளை வெளிக்கொணர வேண்டும். அதுவும் ஸ்டெலைட் திறக்கப்படாமல் இவற்றை செயல்படுத்திட வேண்டும்," என்கிறார் அவர்.

கடந்த ஆட்சியில் மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு அதிமுக அரசு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்பதும் இந்த தேர்தலில் அக்கட்சிக்கு பெரும் பாதகமாக அமைந்தது.

"காவிரி டெல்டா மாவட்டங்களில் திமுக வென்றதற்கு காரணம், தொழிற்சாலைகளின் நலன்களுக்காக விளைநிலங்களை பாதிக்கும் திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தபோது அதிமுக அரசு அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதால்தான். எனவே ஸ்டாலின் இம்முறை அதில் பெரும் கவனம் செலுத்த வேண்டும்,"

"அடுத்தபடியாக நீட்டை பொறுத்தவரை தனி ஒரு மாநிலமாக தமிழ்நாட்டில் என்ன செய்ய முடியும் என்பது தெரியவில்லை ஆனால் ஒரு வலுவான சட்ட நிபுணர்கள் கல்வியாளர்களின் ஆலோசனையை கொண்ட குழுவை அமைத்து கல்வியில் மாநிலத்தின் உரிமையை மீட்டெடுக்க என்ன செய்ய முடியுமோ அதை விரைவாக செய்ய வேண்டும்." என்கிறார் இளங்கோவன்.

 

சட்டம் ஒழுங்கு பிரச்னை

 

இவைகளை தாண்டி, "தமிழ்நாட்டில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பே இல்லை என்பதுபோல மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களால் வட இந்தியர்களுக்கு அதிகமாக வேலை கிடைக்கும் சூழல் உள்ளது அதை தடுத்து தமிழர்களுக்கு வேலை என்பதை கொண்டு வர வேண்டும்." என்கிறார் வழக்கறிஞர் அருள்மொழி.

மேலும், பெண்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கின்ற வன்முறை¬ போக்கு ஆபாச தாக்குதல்கள், இவற்றை சரியான முறையில் வெறும் சட்டம் ஒழுங்கு நடவடிக்கையாக மட்டுமின்றி சமூக ஒழுங்கு நடவடிக்கையாக, பெண்ணுரிமைக்கு முன்னுரிமை கொடுத்து அதை செயல்படுத்துவதும் கடமைகளும் முதல்வராக பதவியேற்கவுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உள்ளது என்கிறார் அருள்மொழி.

 

முதல்வராக ஸ்டாலின்

 

பட மூலாதாரம், ARUN SANKAR

தமிழகத்திற்கு திமுகவின் ஆட்சி புதியதில்லை என்றாலும், தற்போது கருணாநிதி அல்லாத ஒரு திமுக ஆட்சி அமையவிருக்கிறது. ஸ்டாலின் முதன்முறையாக முதல்வர் பதவியில் அமருகிறார். அந்த நிலையில் ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் முதல்வராக எவ்வாறு செயல்படுவார் என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளன.

"ஸ்டாலினை பொறுத்தவரை நல்ல அதிகாரிகளை தன் ஆலோசகராக உடன் வைத்துக் கொண்டு செயல்படும் ஒரு நபராகவே இருந்துள்ளார். அவர் சென்னை மேயராக இருந்த சமயத்திலும், துணை முதல்வராக இருந்த சமயத்திலும் சிறந்த ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவை வைத்து கொண்டு அந்த குழுவிற்கு முழு சுதந்திரம் கொடுத்து அவர் செயல்பட்டுள்ளார். அது ஒரு நல்ல விஷயம். ஏனென்றால் தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிகாரிகளை சுதந்திரமாக செயல்படவிட்டால் அவர்கள் நல்ல முறையில் செயல்படும் நிலையில்தான் உள்ளனர்." என்கிறார் சுரேஷ் குமார்.

"அதேபோல எளிதாக அணுகும் ஒரு நபராகவே ஸ்டாலின் இருந்துள்ளார். துணை முதல்வராக இருக்கும் போது காலை நடைபயிற்சி செய்யும் சமயத்தில் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார். அவர் ப்ரோ ஆக்டிவாக இருந்த ஒரு தலைவர் தான் எனவே தற்போது களத்தில் இறங்கி செயல்படக்கூடிய ஒரு தலைவராக இருப்பார் என்றே தோன்றுகிறது." என்கிறார் சுரேஷ் குமார்.

 

அரசியல் ரீதியான சவால்

 

தனிப்பட்ட ரீதியில் மட்டுமல்ல திமுகவையும் தொடர்ந்து வலுவாக மாற்ற வேண்டும் என்றால் அக்கட்சி மீது கட்டமைக்கப்பட்டுள்ள இமேஜ்களை மாற்ற கடுமையாக செயல்பட வேண்டும் என்கிறார் லஷ்மி.

"அரசியல் ரீதியாக பார்க்க வேண்டுமென்றால் தற்போது ஒரு வலுவான எதிர்க்கட்சி அமைந்துள்ளது. அதிமுக வலுவான ஒரு எதிர்க்கட்சியாக இருக்கும்போது இவர்களை கேள்வி கேட்க நிறைய ஆள் இருக்கிறார்கள் என்று அர்த்தம் அதுவும் பாஜகவும் உடன் இருக்கிறார்கள் அவர்கள் மத்தியில் ஆட்சியில் இருக்க கூடியவர்கள் எனவே எந்தஒரு திட்டமும் உடனடியாக முன்னெடுத்து செல்ல முடியாத ஒரு நிலை ஏற்படும். திமுக மாநில உரிமைகளை பேசும் கட்சி ஆனால் பாஜகவால் கூட்டாட்சி முறையை ஏற்றுக் கொள்ள முடியாது எனவே இது ஒரு பெரிய சவால்"

"திமுகவுக்கு என்று கட்டமைக்கப்பட்ட பெயர்கள் எப்போதுமே உண்டு எனவே அந்த இமேஜை எப்படி உடைக்கபோகிறார் என்பது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய ஒரு சவால். இது அனைத்தையும் கடக்கவில்லை என்றால் மற்றொரு முறையும் திமுக வெற்றி பெறுவது சந்தேகமே." என்கிறார் லஷ்மி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.