Jump to content

’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’ - சரத் பொன்சேகா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

-பா.நிரோஸ்

யுத்தம் செய்து, நாட்டிலிருந்த பயங்கரவாதத்தை ஒழித்தார்கள் என்பதற்காக, எவரையும் கொலை செய்வதற்கு, இராணுவத்தினருக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவித்த முன்னாள் இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கொலைக்காரர்களைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் கொள்கைத் தவறெனவும் விமர்சித்தார்.

கொரோனா வைரஸ் நிலைமைகள் தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், கைது செய்யப்படுவார் என்ற அச்சத்திலேயே ஹரீன் பெர்ணான்டோ எம்.பி இருப்பதாகவும் 'ஹோர்ன்'   அடித்த குற்றத்துக்காக நபரொருவர் கைது செய்யப்படும் நிலைமைக்கு, இந்நாடு சென்றுள்ளதென்றும் இவை அனைத்தும், ஜனநாயக விரோதச் செயற்பாடுகளெனவும் சாடினார்.

“கொழும்பைச் சேர்ந்த 11 இளைஞர்களை, கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரண்ணாகொட கொலை செய்தாரென்று, பாராளுமன்றத்தில் நான் உரையாற்றிய பின்னர், தமிழினி எழுதிய புத்தகமொன்றிலும் சூசையின் மகன் வழங்கிய நேர்காணல் ஒன்றிலும், வசந்த கருண்ணாகொட உள்ளிட்ட கடற்படையினரே யுத்தத்தில் சிறப்பாகச் செயற்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக, சபையில் உள்ள எனது நண்பர் ஒருவர் கூறினார்.

“தமிழினி கூறுவது உண்மையாக இருக்கலாம். அதற்காக, தமிழினியிடமிருந்து பயங்கரவாதம் தொடர்பில் கற்றுக்கொள்ள வேண்டாம். இதேவேளை, யுத்தம் செய்தார்களென்பதற்காக, எவரை கொலை செய்யும் அதிகாரம் இராணுவத்தினருக்கு வழங்கப்படவில்லை” எனவும், பொன்சேகா எம்.பி தெரிவித்தார்.

Tamilmirror Online || ’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லுங்க, சொல்லுங்க..... மாத்தையா!  இன்னும் எவ்வளவோ கேட்க நாம் ஆவலாயுள்ளோம் எங்கள் உறவுகளுக்கு நடந்தது என்ற ஏக்கத்தோடு.

Link to comment
Share on other sites

சரத் வீரசேகரவும், சரத் பொன்சேகாவும் சபையில் வாக்குவாதம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் சொன்னால் அலட்சியம் செய்யலாம், இருவர் சொன்னால் தட்டிக்கழிக்கலாம், ஆனால் பலபேர் சொன்னதை சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டதை இந்த இரண்டு முட்டாள்களும் மாறிமாறி தட்டி உடைத்து சரியென்று நிறுவி விட்டு எதை சரி செய்யப்  பார்க்கிறார்கள்?   "காட்டிகொடுத்துவிட்டார்." நாம் மறைத்ததை  வெளிப்படுத்தி விட்டார் என்று ஒப்புதல் அளிக்கிறார் இந்த  அறிவாளி. "நான் செய்த கொலைகள் எத்தனை? நீ செய்த கொலைகள் எத்தனை?" என்று பட்டியலிடுவார்கள் வெகு விரைவில்.

Link to comment
Share on other sites

3 hours ago, satan said:

ஒருவர் சொன்னால் அலட்சியம் செய்யலாம், இருவர் சொன்னால் தட்டிக்கழிக்கலாம், ஆனால் பலபேர் சொன்னதை சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டதை இந்த இரண்டு முட்டாள்களும் மாறிமாறி தட்டி உடைத்து சரியென்று நிறுவி விட்டு எதை சரி செய்யப்  பார்க்கிறார்கள்? 

ஒரு மனித மிருகத்தை மன்னனாக்கி மகிழும் மிருகம் பெற்றுவந்த பரம்பரையில் வளர்ந்து வந்தவர்களிடம், மனிதத்தை எதிர்பார்க்க முடியுமா.?? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.