Jump to content

சமுக வலைத்தளங்கள் முடக்கம்; புதிய வலைதளத்தை ஆரம்பித்தார் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சமுக வலைத்தளங்கள் முடக்கம்; புதிய வலைதளத்தை ஆரம்பித்தார் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிதாக வலைதளத்தை ஆரம்பித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் பாராளுமன்றத்துக்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்த போதும் ட்ரம்ப் சமூக வலைதளங்களில் தேர்தல் முறைகேடு தொடர்பாக பல்வேறு பதிவுகளை வெளியிட்டார்.

இதனால் ட்ரம்ப் வன்முறையை தூண்டியதாகக் கூறி டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஆகிய சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும் அவரது கணக்கை நிரந்தரமாக முடக்கின.

இந்த சூழலில் ட்ரம்ப் மிகவிரைவில் தனக்கென சொந்தமாக ஒரு தளத்தை அமைத்து சமூக ஊடகத்துக்கு திரும்புவார் என அவரது ஆலோசகர் ஜோசேன் மில்லர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்தார்.

அதன்படி, ட்ரம்ப் தற்போது புதிதாக தகவல் தொடர்பு வலைதளம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

இந்த வலைத்தளத்தில் உலகம் முழுவதிலிருந்தும் மக்கள் டிரம்பின் பதிவுகளுக்கு ‘லைக்’ செய்வது மற்றும் கருத்து தெரிவிப்பதோடு அவற்றை டுவிட்டர் பேஸ்புக் உள்ளிட்டவற்றிலும் பகிர முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

https://www.virakesari.lk/article/105014

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அவர் வழியே  செல்வது நல்லது போல் இருக்கு  அடிக்கடி மார்க் நம்ம பினாமி முகநூல்களை சந்தேகிப்பது  பிடிக்கவில்லை .😄

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

நானும் அவர் வழியே  செல்வது நல்லது போல் இருக்கு  அடிக்கடி மார்க் நம்ம பினாமி முகநூல்களை சந்தேகிப்பது  பிடிக்கவில்லை .😄

 

மார்க்குக்கு... தமிழ் வாசிக்கத் தெரியும் என்பதை அறிய, மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டொனால்டு ஜில்மாறு வேலை செய்ய, டிவீட்டர் ஒரு படி கண்ணில் எண்ணெய் ஊத்திக் கொண்டு நிக்கிறது.

இவர் சாதாரண வலைத்தளம் தொடங்கி பதிவாராம். அதனை அவரது விசிறி கம்பெனி, ஒரு லிங்காக ட்வீட் பண்ணுமாம் என்று தான் ஐடியா.

முதல் டீவீட்டுடன், அந்த விசிறி கம்பெனி கணக்கினையும் முடக்கி விட்டார்கள். தாங்கள் போடும் தடையினை, வேறுவகையில் மீற அனுமதிக்க முடியாது என்று சொல்லி விட்டார்கள்.

இப்போது டொனால்டு ஜில்மாறு ஐடியாவே  முடங்கி போய் உள்ளது.

பெருமாள், தமிழ்சிறியர் எண்டால் தப்பலாம், டொனால்டு எப்படி தப்பேலும்? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று டரம்ப் புதிய தளத்தில் உள்ள அவர் எழுதிய குறுகிய பதிவுகளை பார்வையிட்டேன். மனுசன் மனநிலை இன்னும் அப்படியே உள்ளது. மாற்றம் ஏதும் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிதாக வலைதளத்தை ஆரம்பித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதி லெக்சனுக்கு  மோளை இறக்கி விட இப்பவே அடித்தளம் போடுறார் போலை கிடக்கு...😁

Bei der Ankunft in Bogota: Ivanka Trump und ihr neuer Bob in Bewegung

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

பெருமாள், தமிழ்சிறியர் எண்டால் தப்பலாம், டொனால்டு எப்படி தப்பேலும்? 😁

டொனால்டு.... தமிழ்ப் பெயரிலை வந்திருக்கலாம். 😂

அந்த மனுசனுக்கு... மூழையில்லை. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அடுத்த ஜனாதிபதி லெக்சனுக்கு  மோளை இறக்கி விட இப்பவே அடித்தளம் போடுறார் போலை கிடக்கு...😁

Bei der Ankunft in Bogota: Ivanka Trump und ihr neuer Bob in Bewegung

 

உந்த டொனால்டு, தண்ட மகளே... அந்த மாதிரி பிகரு எண்டு மகளுக்கு முன்னே சொன்ன கிறுக்கர் தானே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

உந்த டொனால்டு, தண்ட மகளே... அந்த மாதிரி பிகரு எண்டு மகளுக்கு முன்னே சொன்ன கிறுக்கர் தானே...

யார் சொன்னது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், அவர் சொன்னதில உங்களுக்குச் சந்தேகமோ ? 

அத முதலில சொல்லுங்கோ..மிச்சத்த பிறகு பார்ப்போம்..

😜

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

யார் சொன்னது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், அவர் சொன்னதில உங்களுக்குச் சந்தேகமோ ? 

அத முதலில சொல்லுங்கோ..மிச்சத்த பிறகு பார்ப்போம்..

😜

நானும் ஏதாவது சொல்லிப்போடுவன், எழுதியும்போடுவன், ஆனால் ருல்பனிடம் அடிவாங்கத் தெம்பில்லைக் கபிதன்.😩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

நானும் ஏதாவது சொல்லிப்போடுவன், எழுதியும்போடுவன், ஆனால் ருல்பனிடம் அடிவாங்கத் தெம்பில்லைக் கபிதன்.😩

துல்பன் அடிக்கிற மாதிரி அடிப்பார் நீங்கள் அழுகிற மாதிரி அழுங்கோ. ஆனா அதுக்காக சொல்ல வாறத மட்டும் நிப்பாட்டிப் போடாதெயுங்கோ. அவர் உள்ளூர ரசிப்பார் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

உந்த டொனால்டு, தண்ட மகளே... அந்த மாதிரி பிகரு எண்டு மகளுக்கு முன்னே சொன்ன கிறுக்கர் தானே...

மகளே தகப்பனின் கையை தட்டி விட்ட வீடியோக்கள் எக்கச்சக்கம்..😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.