Jump to content

சீனாவின் தடுப்பூசி குறித்து, உலக சுகாதார நிறுவனம் தகவல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் தடுப்பூசி குறித்து உலக சுகாதார நிறுவனம் தகவல்!

சீனாவின் தடுப்பூசி குறித்து, உலக சுகாதார நிறுவனம் தகவல்!

சீனாவின் சினோவக் பயோடெக் தயாரித்த கொரோனா தடுப்பூசி 60 வயதிற்குட்பட்ட பெரியவர்களுக்கு கொரோனா தொற்றைத் தடுப்பதில் திறமையானது என உலக சுகாதார நிறுவன வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனினும், குறித்த தடுப்பூசியால் கடுமையான பாதகமான விளைவுகளின் ஆபத்து குறித்து இன்னும் சரியான முடிவுகள் கிடைக்கவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் மூலோபாய ஆலோசனைக் குழுவின் சுயாதீன வல்லுநர்கள், சீனா, பிரேசில், இந்தோனேசியா, துருக்கி மற்றும் சிலி ஆகிய நாடுகளில் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளிலிருந்து சினோவக்கின் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.

இதேவேளை, சில கொரோனா நோயாளிகளுக்கு கடுமையான பக்கவிளைவுகளின் ஆபத்து உள்ளமை தொடர்பாக சீன அரசுக்குச் சொந்தமான மருந்து தயாரிப்பு நிறுவனமான சினோபார்ம் நிறுவனமும் தகவலை வெளியிட்டுள்ளது.

இதனிடையே, சினோவக் தடுப்பூசி 32 நாடுகளால் உள்ளநாட்டு அதிகார வரம்புகளின்கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் 260 மில்லியன் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதைாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2021/1214184

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்

1-28-696x392.jpg
 16 Views

சீன அரசுக்கு சொந்தமான சீனோஃபார்ம் நிறுவனம் தயாரித்த கோவிட்-19 தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அவசரகாலப் பயன்பாட்டு அனுமதி வழங்கியுள்ளது.

மேற்கத்திய நாடு ஒன்றால் தயாரிக்கப்படாத தடுப்பூசி ஒன்று உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்தை பெறுவது இதுவே முதல் முறையாகும் .

சீனாவிலும் வேறு சில உலக நாடுகளிலும் இந்த தடுப்பூசி ஏற்கனவே கோடிக்கணக்கான மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக ஃபைசர் அஸ்ட்ராஜெனீகா, ஜான்சன் & ஜான்சன் மற்றும் மாடெர்னா ஆகிய தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு மட்டுமே உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்திருந்தது.

மேலும் சீனா தயாரித்துள்ள இன்னொரு தடுப்பூசியான ‘சீனோவேக்’ குறித்த முடிவு அடுத்து வரும் சில நாட்களில் உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவின் ஸ்புட்னிக்-V தடுப்பூசி ஏற்கனவே உலக சுகாதார நிறுவனத்தால் மதிப்பிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/?p=49076

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபர் உள்ளிட்ட 15 பேருக்கு யாழில் கொரோனா!

May 9, 2021

 

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர்களில் யாழ்ப்பாணம் மேலதிக அரச அதிபருக்கும் கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 486 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15 பேரும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டஙகளில் தலா 2 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 2 பேருக்கும், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 4 பேருக்கும் , தெல்லிப்பழை வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் மூவருக்கும் (அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் மேலதிக அரச அதிபர்) சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவருக்கும் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை, காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட தலா ஒருவருக்கும் , திருநெல்வேலியில் உள்ள நோதேர்ன் தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும், வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் என 15பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை கிளிநொச்சி தர்ம்புரம் வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்குச் சென்ற இருவருக்கும் , வவுனியா பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட இருவருக்கு , முல்லைத்தீவு பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்குச் சென்ற இருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

 

https://globaltamilnews.net/2021/160671/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.