Jump to content

சீமான் என்ன சொல்கிறார் தேர்தல் முடிவு பற்றி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • ஆ. விஜயானந்த்
  • பிபிசி தமிழுக்காக

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 6.6 சதவிகித வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 3.9 சதவிகித வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவிகிதம் இந்தமுறை கணிசமான அளவு உயர்ந்துள்ளது.

இது அக்கட்சியின் தொண்டர்களை உற்சாகப்பட வைத்துள்ளது. வரும் காலங்களில் நாம் தமிழர் கட்சியின் வியூகம் என்ன?

சீமானிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

கேள்வி: சட்டமன்றத் தேர்தலில் 6.6 சதவிகித வாக்குகளை நாம் தமிழர் பெற்றுள்ளது. வாக்குகளாகக் கணக்கிட்டால் 30,41,974 பேர் நாம் தமிழர் கட்சியை ஆதரித்துள்ளனர்.

இந்த வாக்கு சதவிகிதம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதா?"

பதில்: எங்களுடைய உழைப்புக்கு இது போதுமானதாக இல்லை. நாங்கள் 10 சதவிகிதம் வரையில் எதிர்பார்த்தோம். மீண்டும் மீண்டும் இந்த இரண்டு கட்சிகளை மட்டும் மக்கள் தேர்வு செய்வார்கள் என்றால் புதிய அரசியல் எப்படி மலரும்? பணம் மட்டுமே பெரிய அளவில் தீர்மானிக்கும் என்றால் எதையுமே சாதிக்க முடியாது. இங்கு மாற்ற வேண்டிய அம்சங்கள் நிறைய உள்ளன. எங்களுக்கு இன்னும் 2 விழுக்காடு வாக்குகளை மக்கள் செலுத்தியிருக்கலாம்.

கேள்வி: திருவொற்றியூரில் 48,497 வாக்குகளைப் பெற்றீர்கள். அங்கு தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. உங்களால் வெற்றி பெற முடியாததற்கு என்ன காரணம்?

பதில்: அங்கு நான் வெற்றி பெற்றிருக்கலாம். அந்தத் தொகுதியில் உள்ள கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்குகள் எங்களுக்கு விழவில்லை. அவர்கள் தி.மு.கவுக்கு வாக்களித்துவிட்டார்கள். பா.ம.கவுக்கு எதிராக உள்ள ஆதித் தமிழர்களும் தி.மு.க பக்கம் சென்றுவிட்டனர். தொடக்கத்தில் இருந்தே திருவொற்றியூர் மக்கள் எனக்கு மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தார்கள். சட்டமன்ற உறுப்பினர் போலவே நினைத்துத்தான் அவர்கள் என்னிடம் பேசினார்கள். ஆனால், களநிலவரம் வேறு மாதிரியாக அமைந்துவிட்டது. ஆதிக்குடிகளின் வாக்குகளும் கிறிஸ்துவ, இஸ்லாமியர் வாக்குகளும் வராமல் போனதுதான் பிரதான காரணம்.

கேள்வி: தனித்துப் போட்டி என்ற முழக்கத்தை தொடர்ச்சியாக நீங்கள் முன்னெடுப்பதுதான் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கக் காரணமா?"

பதில்: உண்மையிலேயே அதுதான் காரணம். ஒரு தலைவன் தனித்துவத்தை இழந்துவிட்டால் என்ன பேச முடியும்? ஏற்கெனவே கண்ணுக்கு முன்னால் எத்தனையோ கட்சிகள் காணாமல் போய்விட்டன. கூட்டணி சேருவதால் சில இடங்களில் வெல்லலாம். ஆனால், தனித்துவம் இருக்கிறதா எனப் பாருங்கள்.

அவர்கள் திராவிடக் கட்சிகளைச் சார்ந்துதான் பேச வேண்டும், சிந்திக்க வேண்டும். உங்கள் மூளைக்கு ஏற்ப வேலை செய்ய முடியாது. தத்துவத்தை இழந்துவிட்டால் எப்படித் தலைவனாக இருக்க முடியும்? எனக்குக் கூட்டணி தேவையில்லை. நான் மக்களை நம்புகிறேன். இத்தனை கோடி மக்கள் இருக்கிறார்கள். கூட்டணியெல்லாம் எதற்கு?

சீமான்

கேள்வி: கவனிக்கப்படாத சமூகங்களைச் சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியதையும் ஒரு காரணமாக எடுத்துக் கொள்ளலாமா?"

பதில்: அப்படியில்லை. நாங்கள் எவ்வளவோ பேசி வருகிறோம். நீர், நிலம் காப்பாற்றப்படுவது. கல்வி, மருத்துவம், கிராமப்புற பொருளாதாரம் ஆகியவற்றைப் பற்றியும் பேசி வருகிறோம். பொதுத்தொகுதிகளில் ஆதித்தமிழரை நிறுத்திய இடங்களில் கூடுதல் வாக்குகள் கிடைத்துள்ளன. கடந்த தேர்தலில் நாங்கள் கவனிக்கப்படவில்லை. இந்தத் தேர்தலில் கவனிக்கப்பட்டிருக்கிறோம்.

கேள்வி: தி.மு.க எதிர்ப்பு என்ற புள்ளியை மையமாக வைத்து இந்தத் தேர்தலில் வலம் வந்தீர்கள். ஆனால், பல தொகுதிகளில் அ.தி.மு.கவின் தோல்விக்கு நாம் தமிழர் வேட்பாளர்கள் காரணமாக இருக்கிறார்களே?

பதில்: தி.மு.க வெற்றியைத் தடுக்க வேண்டும், அ.தி.மு.க வெற்றியை பாதிக்க வேண்டும் என்றெல்லாம் நாங்கள் தேர்தல் வேலை பார்க்கவில்லை. நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தேர்தலில் பணியாற்றினோம். இதில் சிலருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். இனிவரும் காலங்களில் தி.மு.கவுக்கு அ.தி.மு.க மாற்று இல்லை என்ற முடிவுக்குக்கூட மக்கள் வந்திருக்கலாம். இனி அந்த எண்ணம் கூடிக் கொண்டே போகவும் வாய்ப்புள்ளது.

கேள்வி: அப்படியானால், 65 தொகுதிகளில் அ.தி.மு.க வென்றதை எப்படிப் பார்ப்பது?

பதில்: இங்கு தி.மு.க வந்துவிடக் கூடாது என ஒரு கூட்டம் நினைக்கிறது. அ.தி.மு.க வந்துவிடக் கூடாது என இன்னொரு கூட்டம் நினைக்கிறது. இதனால்தான் சிலருக்கு வாக்குகளாக விழுகின்றன. அதேநேரம், எங்களைப் போன்றவர்களுக்கு வாக்களிக்கலாம் என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் படிப்படியாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அந்த நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். அதைக் கொடுக்கும் வரையில் போராடித்தான் ஆக வேண்டும்.

சீமான்

பட மூலாதாரம்,NAAM TAMILAR

கேள்வி: கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 3.7 சதவிகித வாக்குகளைப் பெற்றது. இந்தமுறை அதன் வாக்கு விகிதம் 2.45 சதவிகிதமாக உள்ளது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

பதில்: அண்ணன் கமல்ஹாசன் பகுதிநேரமாக அரசியல் செய்கிறார். தேர்தல் வரும்போது மட்டும்தான் வெளியில் வருகிறார். மற்ற நேரங்களில் அரசியல் செய்வதில்லை. நாங்கள் மக்கள் பிரச்னைகளுக்காக களத்தில் நிற்கிறோம். ஒரு ஆர்ப்பாட்டமோ, போராட்டத்தையோ தினகரனோ, கமலோ நடத்தியதில்லை. இதுதான் காரணம்.

கேள்வி: தென் மண்டலத்தில் தினகரனின் அ.ம.மு.க பெரிய சக்தியாக மாறும் எனப் பேசப்பட்டது. அவர்கள் களத்தை இழந்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: தினகரன், எடப்பாடி பழனிசாமி என இருவருமே, `அம்மா ஆட்சியை கொண்டு வருவோம்' எனப் பேசி வந்தனர். இது குழப்பதை ஏற்படுத்தியிருக்கலாம்.

``கேள்வி: சசிகலா அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பிருக்கிறதா?"

பதில்: அதை அவர்தான் முடிவெடுக்க வேண்டும். இனி அவர் அ.தி.மு.கவில் இணைந்து பணியாற்றுவாரா? அ.ம.மு.கவில் சேர்வாரா? என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.

கேள்வி: இந்தத் தேர்தலில் 450 கோடி ரூபாய்களை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்திருக்கிறது. ஆணையத்தின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?'

பதில்: பணநாயகத்தை தேர்தல் ஆணையம் அதிகரிக்கிறது. சாலைகளில் நின்று பணத்தைப் பறிமுதல் செய்வது தவறானது. அது மக்களின் பணம். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக திருச்சியில் கே.என்.நேரு பேசிய காணொலி வெளியில் வந்தது. `பணம் கொடுத்தால் 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்கத் தடை' என முடிவெடுத்தால் பயப்படுவார்கள்.

இப்போதெல்லாம் பணம் கொடுப்பது என்பது உரிமைப் பிரச்னையாக மாறிவிட்டது. பணம் வரவில்லை என மக்களும் வீதிகளில் வந்து போராடுகிறார்கள். இதனால் நல்ல தேசம் உருவாவதற்கு வாய்ப்பில்லை. இதன்பிறகும், `நல்லாட்சியைக் கொடுப்போம்' என்று கூறுவதெல்லாம் ஏமாற்று வேலைதானே?

கேள்வி: தமிழக தேர்தல் முடிவுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: எங்களைப் பொறுத்தவரையில் வளர்ச்சியாகத்தான் பார்க்கிறேன். மக்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு ஏற்ற உயர்வு வரவில்லை என்றாலும் மேலும் மேலும் சோர்வில்லாமல் போட்டியிடுவதற்கான உந்துதலைக் கொடுத்துள்ளது. அதேநேரம், இந்தத் தேர்தலில் 8,500 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளேன். ஏராளமான மேடைகளில் பேசினேன். எவ்வளவோ கருத்துகளை எடுத்துக் கூறினேன். பணம் இருந்தால்தான் அரசியல் என்பதைக் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதைத் தகர்க்க வேண்டும்.

அரசியல் கட்சிகளும் எந்தத் தேர்தல் வேலைகளையும் செய்யாமல் கடைசி 2 நாளில் பணம் கொடுத்து மாற்றிவிடுகிறார்கள். பரமக்குடியில் ஓர் அரசியல் கட்சி பிரமுகர், `நீங்க என்ன பேசினாலும் ஒரே இரவில் பணம் கொடுத்து முடித்துவிடுவோம்' என்கிறார். 300, 500 ரூபாயெல்லாம் ஒரு பணமா? என்ன பிழை செய்கிறோம் என்பதே மக்களுக்குத் தெரியவில்லை".

கேள்வி: முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுவிட்டார். அவருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?"

பதில்: அவர்தான் நிறைய ஆலோசகர்களை வைத்திருக்கிறாரே.. 100 நாள்களில் பிரச்னைகளைத் தீர்ப்பதாக உறுதிமொழி கொடுத்திருக்கிறார். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்த்துவிட்டு விரிவாகப் பேசுகிறேன்."

சீமான் என்ன சொல்கிறார் தேர்தல் முடிவு பற்றி? 8,500 கிலோமீட்டர் பயணம்.. 6.6 சதவிகித வாக்குகள் - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேட்டியில் சோர்வு தென்படுகிறது. நாளடைவில் இது மாறலாம், மாற வேண்டும். மாறும். 

👍

Link to comment
Share on other sites

 

Quote

 

கேள்வி: தி.மு.க எதிர்ப்பு என்ற புள்ளியை மையமாக வைத்து இந்தத் தேர்தலில் வலம் வந்தீர்கள். ஆனால், பல தொகுதிகளில் அ.தி.மு.கவின் தோல்விக்கு நாம் தமிழர் வேட்பாளர்கள் காரணமாக இருக்கிறார்களே?

பதில்: தி.மு.க வெற்றியைத் தடுக்க வேண்டும், அ.தி.மு.க வெற்றியை பாதிக்க வேண்டும் என்றெல்லாம் நாங்கள் தேர்தல் வேலை பார்க்கவில்லை. நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தேர்தலில் பணியாற்றினோம். இதில் சிலருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். இனிவரும் காலங்களில் தி.மு.கவுக்கு அ.தி.மு.க மாற்று இல்லை என்ற முடிவுக்குக்கூட மக்கள் வந்திருக்கலாம். இனி அந்த எண்ணம் கூடிக் கொண்டே போகவும் வாய்ப்புள்ளது.

கேள்வி: அப்படியானால், 65 தொகுதிகளில் அ.தி.மு.க வென்றதை எப்படிப் பார்ப்பது?

பதில்: இங்கு தி.மு.க வந்துவிடக் கூடாது என ஒரு கூட்டம் நினைக்கிறது. அ.தி.மு.க வந்துவிடக் கூடாது என இன்னொரு கூட்டம் நினைக்கிறது. இதனால்தான் சிலருக்கு வாக்குகளாக விழுகின்றன. அதேநேரம், எங்களைப் போன்றவர்களுக்கு வாக்களிக்கலாம் என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் படிப்படியாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அந்த நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். அதைக் கொடுக்கும் வரையில் போராடித்தான் ஆக வேண்டும்.

 

 

 

திமுகவின் வாக்குகளை பிரிப்பதற்காகவே சித்தப்பாக்களால் களம் இறக்கப்படடவர் தான் அண்ணல் சீமான் அவர்கள், ஆனால் அது பூமராங்காக மாறி அதிமுக வாக்குகளை பிரித்து விட்டது. 😁😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, zuma said:

 

 

 

திமுகவின் வாக்குகளை பிரிப்பதற்காகவே சித்தப்பாக்களால் களம் இறக்கப்படடவர் தான் அண்ணல் சீமான் அவர்கள், ஆனால் அது பூமராங்காக மாறி அதிமுக வாக்குகளை பிரித்து விட்டது. 😁😂😂

ஓ அப்படியா உங்கட அப்பா சொன்னவரா

 

மக்களுக்கான போராட்டங்களை தொடர்வோம்: சீமான் உறுதி

seeman  
 

சென்னை

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கடந்த தேர்தலில் 30 லட்சத்துக்கும் மேலான வாக்குகளைப் பெற்று, தமிழகத்தின் தனித்துவமான அரசியல் அமைப்பாக நாம் தமிழர் கட்சி மாறியுள்ளது. 2016 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 4,58,104 வாக்குகளை (1.1 சதவீதம்) பெற்றோம். 2019 மக்களவைத் தேர்தலில் 16,45,185 வாக்குகளை (4 சதவீதம்) பெற்றோம். இந்த தேர்தலில் 30,41,974 வாக்குகளுடன், தமிழகத்தின் 3-வது பெரிய அரசியல் பேரியக்கமாக மாறியுள்ளோம்.

 
 
 

தொடர்ந்து மக்களுக்கான போராட்டக் களங்களிலும், துயர்துடைப்புப் பணிகளிலும் முன்பைக்காட்டிலும் பன்மடங்கு எழுச்சியுடன் நாம் தமிழர் கட்சி பணியாற்றும். மக்கள் மன்றங்களில் வலிமையாக குரல்கொடுத்து, எதிர்க்கட்சியாக நிலைபெறுவோம். புதிதாக அமையவுள்ள தமிழக அரசுக்கும், கேரளாவில் தேர்வு செய்யப்பட்டுள்ள பினராயி விஜயன், மேற்கு வங்கத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள மம்தா பானர்ஜிக்கு வாழ்த்துகள்.

இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

https://www.hindutamil.in/news/tamilnadu/667158-seeman.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2021 at 23:42, Kapithan said:

பேட்டியில் சோர்வு தென்படுகிறது. நாளடைவில் இது மாறலாம், மாற வேண்டும். மாறும். 

👍

வாஸ்தவம்தானே? அண்ணன் குறைந்த பட்சம் 30-50 சீட்டுக்களையாவது எதிர்பார்த்தார். 

முடிவுக்கு முந்திய நாள் அறிக்கை கூட மிக நம்பிக்கையாகவே வந்தது.

ஆனால் மக்கள்? அண்ணனை தவிர மிகுதி 234 வேட்பாளர்களையும் கட்டுப்பணமும் இழக்கும்படி வாக்கு போட்டுள்ளார்கள்.

அண்ணன் அதிமுக கூட்டணியை நோக்கி நகர்வதே சிறப்பு?

வெளிநாடுவாழ் உறவுகளின் பொருளாதார உதவியும் அதி அவசியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழகன் said:

ஆனால் மக்கள்? அண்ணனை தவிர மிகுதி 234 வேட்பாளர்களையும் கட்டுப்பணமும் இழக்கும்படி வாக்கு போட்டுள்ளார்கள்.

கோவிட்-19  மிகவும் மோசமாக தமிழ்நாட்டில் உள்ள நிலையில் ஸ்டாலினுக்கு பதிலாக தமிழகனின் தலைவர் வெற்றி பெற்று முதல்வராகி இருந்தால் என்ன நடந்திருக்கும் கொரோனாவைரஸ்சை எதிர்த்து போராட ஒரு special force அமைத்திருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விளங்க நினைப்பவன் said:

கோவிட்-19  மிகவும் மோசமாக தமிழ்நாட்டில் உள்ள நிலையில் ஸ்டாலினுக்கு பதிலாக தமிழகனின் தலைவர் வெற்றி பெற்று முதல்வராகி இருந்தால் என்ன நடந்திருக்கும் கொரோனாவைரஸ்சை எதிர்த்து போராட ஒரு special force அமைத்திருப்பார்.

அவர் special force அமைத்திருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்..?

வழமை போன்று ஒரு வாளி சேற்றுடன் இந்த உலகமெல்லாம் சுற்றித் திருந்திருப்பீர்கள். பழக்க தோசம் வேறென்ன..?

🤦🏼‍♂️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.