Jump to content

டெலோ முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினத்தின் 35வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டெலோ முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினத்தின் 35வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு!

 

DSCN0013.jpg
(துதி)
தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினம் அவர்களின் 35வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு நேற்றைய தினம் மட்டக்களப்பில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்க காரியாலயத்தில் அதன் உபதலைவரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளருமான இந்திரகுமார் பிரசன்னா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை பிரதி மேயர் க.சத்தியசீலன், மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் ஞா.யோகநாதன், மாநகரசபை உறுப்பினர்களான த.இராஜேந்திரன், சீ.ஜெயந்திரகுமார், பு.ரூபராஜ், ச.கமலரூபன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மறைந்த தலைவரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, ஈகைச் சுடரேற்றப்பட்டதுடன், தலைவருடன் இணைந்து மறைந்த அத்தனை இயக்க உறுப்பினர்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
DSCN0023.jpg
 
DSCN0016.jpg
DSCN0007.jpg
 
DSCN0003.jpg
 
 

spacer.png

 

http://www.battinews.com/2021/05/35.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு வயது போன பின் சுடலை ஞாணம் கிடைத்து விட்டுது ஆக்கும் இணைய தளம்களில் உண்மையை எழுகின்றார்கள் என்று எழுதுகிறார்கள் இலங்கை அரசை விட முக்கியமா புலிகளைதான் முதன்மை எதிரியாக அனைத்து இயக்கமும் பார்த்துள்ளார்கள் சகோதர படுகொலைகளை ஆரம்பித்தவர்களும் அவர்கள் தான் அப்படி சாகோதர படுகொலைகளை செய்து விட்டு வெளிநாடுகளில் ஓடி வந்து ஒழித்துக்கொண்டு கந்தன் கருணை என்று இணையம்களில் ஒப்பாரி வைத்துக்கொண்டு இருக்கினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

பலருக்கு வயது போன பின் சுடலை ஞாணம் கிடைத்து விட்டுது ஆக்கும் இணைய தளம்களில் உண்மையை எழுகின்றார்கள் என்று எழுதுகிறார்கள் இலங்கை அரசை விட முக்கியமா புலிகளைதான் முதன்மை எதிரியாக அனைத்து இயக்கமும் பார்த்துள்ளார்கள் சகோதர படுகொலைகளை ஆரம்பித்தவர்களும் அவர்கள் தான் அப்படி சாகோதர படுகொலைகளை செய்து விட்டு வெளிநாடுகளில் ஓடி வந்து ஒழித்துக்கொண்டு கந்தன் கருணை என்று இணையம்களில் ஒப்பாரி வைத்துக்கொண்டு இருக்கினம் .

தமிழ் என்ற அடையாளத்தை நிலைநாட்ட மரணித்த சகல தமிழ் போராளிகளுக்கும் அஞ்சலிகள் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, putthan said:

தமிழ் என்ற அடையாளத்தை நிலைநாட்ட மரணித்த சகல தமிழ் போராளிகளுக்கும் அஞ்சலிகள் ...

நான் கூட பல சமயங்களில்  உங்களை போலவே சிந்தித்தேன் தீருவிலில்  குமரப்பா புலேந்தி அம்மான் தூபிக்கு அருகில் அனைத்து இயக்க மாவீரர்க்கும் பொது  தூபி வேணும் என்று கொடுக்கு கட்டிக்கொண்டு சிவாஜிலிங்கம் அடிபட  அவர்களும் நாடு காண என்றுதானே கிளம்பினவர்கள் என்ற பரிதாப பார்வை இருந்தது .

ஆனால் அவர்கள்  கொடுக்கும் ஒப்புதல் வாக்கு மூலம்களை படித்தபின் எமக்குள் இவ்வளவு குரூரர்கள் இருந்தனரா  ? அப்படியானவர்களை புலிகள் அழித்ததில் எந்த பிழையும் என்னால் காண முடியவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான போராளிகள் தாயக கனவுடன் கிளம்பியவர்களுக்கு மரியாதை கொடுக்கத்தான் வேணும் . ஆனால்  டெலோவிலும் புளொட்டிலும் ஆரம்ப காலங்களில் சகோதர படுகொலை கொலை கொள்ளை வல்லுறவு செய்துவிட்டு முன்பே ஓடிவந்து இங்குள்ள நாடுகளில் கிழடு தட்டி  இருக்கின்றனர் அவர்களின் முகம்களும்  வெளிச்சத்துக்கு வரணும் . இல்லாவிட்டால் கோடியக்கரை சவுக்கம் காடுகளில் தாம் ஏன் கொல்லப்படுகின்றோம் என்று கூட தெரியாமல் கும்பல் கும்பலாக வெறும்புலி உளவாளி  சந்தேகத்தில் கொல்லப்பட்டு பாரிய கிடங்குகளில் போட்டு புதைக்கப்பட்ட மாற்று இயக்க உண்மையான போராளிகளின் ஆன்மா சாந்தியடையாது .

Link to comment
Share on other sites

உணரவுடன் போராட சென்று உயிர் நீத்த அனைத்து போராளிகளும் நினைவு மரியாதை செய்யத்தக்கவர்களே. அந்த வகையில் ஶ்ரீசபாரத்தினம் என ற போராளிக்கும் அவருடன் மாவீரர் களான அனைவருக்கும் நினைவு வணக்கங்கள். குரூரர்களும் கொலைஞர்களும் எல்லா இயக்கங்களிலும் இருந்தார்கள். அதேபோல தம்மை அர்பணித்த தியாக சீலர்களும் எல்லா இயக்கங்களிலும் இருந்தார்கள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

. குரூரர்களும் கொலைஞர்களும் எல்லா இயக்கங்களிலும் இருந்தார்கள். அதேபோல தம்மை அர்பணித்த தியாக சீலர்களும் எல்லா இயக்கங்களிலும் இருந்தார்கள். 

 

மட்டக்களப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு உடல்களை யாருமே தொடக்கூடாது அப்படி தொட்டால் தொட்டவரும் சுடப்படுவார் என எச்சரிக்கை கொடுத்தே மாறி மாறி சுட்டுக்கொன்றார்கள். உழவு இயந்திரத்தில் உடல்களை  கட்டி இழுத்த சம்பவங்களும் உண்டு எல்லாம் எமது சகோதரர்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

35 வருடங்களின் பின் இப்போதும் என்ன எம்மிடையே சகோதரத்துவம் வளர்ந்துவிட்டதா.. என்ன?

யூனியன் கல்லூரி மாணவர்களின் தலையில் அண்மையில் விழுந்த பொல்லாங்கட்டையே எமது இப்போதைய நிலை பற்றி பல விடயங்களை சொல்லாமல் சொல்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

35 வருடங்களின் பின் இப்போதும் என்ன எம்மிடையே சகோதரத்துவம் வளர்ந்துவிட்டதா.. என்ன?

யூனியன் கல்லூரி மாணவர்களின் தலையில் அண்மையில் விழுந்த பொல்லாங்கட்டையே எமது இப்போதைய நிலை பற்றி பல விடயங்களை சொல்லாமல் சொல்கின்றது.

இதுக்கு லாடம் கட்ட மீரா தான் சரி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து இயக்கங்களும் இருந்த சமகாலத்தில் ,

ஆயுதவளம் இயங்குநிலை போராளிகள் எண்ணிக்கை என்ற வகையில் தமிழீழத்தில் பலம் வாய்ந்த ராணுவமாக முதலிடத்தில் இருந்தது  ரெலோதான்.

இரண்டாம் இடத்தில்தான் ஆயுதம்,போராளிகள் எண்ணிக்கையில் புலிகள் இருந்தார்கள்.

உறுப்பினர்களில் மட்டும் பெரிதாக வைத்துக்கொண்டு எந்த இயங்கு நிலையிலும்  இருந்திராத புளொட்டை எல்லாம் பெரிய இயக்கம் என்று எந்த கணக்கிலும் எடுக்க முடியாது .

ஆனால் ரெலோ ஓரிரு தாக்குதல்களை தவிர தம்மிடம் இருந்த எந்த வளங்களையும் போராட்டத்துக்கு பயன்படுத்தவில்லை.

ரெலோவின் போராளிகளிடம் போர்க்குணம் என்பது அறவே இல்லாமல்போய் ஊருக்குள்ள கலர் காட்டுவதே அவர்கள் போராட்டமாய் போனதால் எளிதாக புலிகளால் துடைத்து அகற்றப்பட்டார்கள்.

ரெலோவின் யாழ்மாவட்ட பொறுப்பாளராக இருந்த பொபியின் தான் தோன்றிதனமான....நடவடிக்கைகளுக்குசன்மானமாக  சல்லடையாக்கப்பட்டதுதான் ஸ்ரீ சபாரத்தினத்தின் உடல்,.

ஆம் ஸ்ரீ சபாவின் உடலில் 28 குண்டுகள் பாய்ந்திருந்ததாக பேசிக்கொள்வார்கள். அதாவது ஏறத்தாள ஒரு ஏகே-யின் முழு மகசீனும் முடியும்வரை கிட்டர் ஸ்ரீக்கு ஓட்டோவில் பிடிச்சிருக்கிறார்.

புலிகளின் நடவடிக்கையின்போது ரெலோ என்ற பெயரில் அழிந்தது எந்த பக்கம் ஓடுறது எண்டு தெரியாமல் சிக்கிக்கொண்ட மட்டக்களப்பு திருமலை மன்னார் போராளிகள்தான், சிகரெட்டும் கொக்கோகோலாவுடனும் வாழ்ந்த யாழ்ப்பாணத்து ரெலோ வீரர்கள் ஒழுங்கைகளினால் ஓடிதப்பி இந்தியா உட்பட்ட  வெளிநாடுகளில் தஞ்சமடைந்தார்கள்.

இலங்கை ராணுவத்துக்கு எதிரான ஓரிரு பாரிய தாக்குதல்களை வழிநடத்திய அந்த ஸ்ரீசபாரத்தினத்துக்கு மட்டும் எப்போதும் அஞ்சலிகள் இருக்கும்.

அஞ்சலிகள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, valavan said:

இலங்கை ராணுவத்துக்கு எதிரான ஓரிரு பாரிய தாக்குதல்களை வழிநடத்திய அந்த ஸ்ரீசபாரத்தினத்துக்கு மட்டும் எப்போதும் அஞ்சலிகள் இருக்கும்.

வயது  போய்க்கொண்டு இருக்குதுசிறி சபா எங்கு தாக்குதல் இலங்கை ராணுவத்துக்கு எதிராக செய்தார் என்று மறந்து விட்டது சொல்ல முடியுமா ? இப்படியான விடயங்களுக்கு கம்பர் மலை புவனியார் விளக்கம் தருவார் அவரும் மாரடைப்பில் இறந்து விட்டார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓரு  போலீஸ் நிலைய தாக்குதல், வங்கிகள் மீதான தாக்குதல், ரயில் வண்டி தொடர் மீதான தாக்குதல் நினைவில் இருக்கிறது. மேலதிக விபரங்கள் தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Sasi_varnam said:

ஓரு  போலீஸ் நிலைய தாக்குதல், வங்கிகள் மீதான தாக்குதல், ரயில் வண்டி தொடர் மீதான தாக்குதல் நினைவில் இருக்கிறது. மேலதிக விபரங்கள் தெரியவில்லை. 

அவையெல்லாம் உடுப்பிட்டி தாஸ் முன்னின்று செய்த தாக்குதல்கள். பொபி தாஸை யாழ் ஆஸ்பத்திரியில் வைத்து சுட்டது மட்டும்தான் செய்தவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

ஓரு  போலீஸ் நிலைய தாக்குதல், வங்கிகள் மீதான தாக்குதல், ரயில் வண்டி தொடர் மீதான தாக்குதல் நினைவில் இருக்கிறது. மேலதிக விபரங்கள் தெரியவில்லை. 

சாவகச்சேரி  காவல்நிலைய தாக்குதலின் தொடராக நாவற்குழி ராணுவ தொடரணிமீதான தாக்குதல், முறிகண்டி ராணுவ தொடரூந்து மீதான தாக்குதல், மற்றும் கொக்காவில் கிளிநொச்சி ராணுவ முகாம்கள்மீதான தாக்குதல் முயற்சியென்று  குறிப்பிடதக்க ராணுவ நடவடிக்கைகளில் ரெலோ இறங்கியிருக்கிறது,

ஆனால் கிருபன் சொன்னதுபோல் அவை அனைத்தும் ரெலோவின் வடமராட்சி பிரிவான தாஸ்குரூப்பினால்தான் செய்யப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, valavan said:

சாவகச்சேரி  காவல்நிலைய தாக்குதலின் தொடராக நாவற்குழி ராணுவ தொடரணிமீதான தாக்குதல், முறிகண்டி ராணுவ தொடரூந்து மீதான தாக்குதல், மற்றும் கொக்காவில் கிளிநொச்சி ராணுவ முகாம்கள்மீதான தாக்குதல் முயற்சியென்று  குறிப்பிடதக்க ராணுவ நடவடிக்கைகளில் ரெலோ இறங்கியிருக்கிறது,

ஆனால் கிருபன் சொன்னதுபோல் அவை அனைத்தும் ரெலோவின் வடமராட்சி பிரிவான தாஸ்குரூப்பினால்தான் செய்யப்பட்டது.

தாஸ் இல்லையென்றால் டெலோ இல்லை அந்த வீர மாமனிதனுக்கு முழங்காலிட்டு அஞ்சலி செலுத்தும் மாற்று இயக்க நபர்களில்  தாஸ் ஒருத்தர் சிறியர் என்ன செய்தவர் என்பதை இன்னும் அறிய ஆவல் .அவருக்கு காலில் வெடிபோட்டவர் கனடாவில் இருக்கிறார் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

யூனியன் கல்லூரி மாணவர்களின் தலையில் அண்மையில் விழுந்த பொல்லாங்கட்டையே எமது இப்போதைய நிலை பற்றி பல விடயங்களை சொல்லாமல் சொல்கின்றது.

அது இரண்டு சபைக்கு இடையிலான பிரச்சனை என்று சொல்வினம் இங்க சிலர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

தாஸ் இல்லையென்றால் டெலோ இல்லை அந்த வீர மாமனிதனுக்கு முழங்காலிட்டு அஞ்சலி செலுத்தும் மாற்று இயக்க நபர்களில்  தாஸ் ஒருத்தர் சிறியர் என்ன செய்தவர் என்பதை இன்னும் அறிய ஆவல் .அவருக்கு காலில் வெடிபோட்டவர் கனடாவில் இருக்கிறார் ? 

 சிறி எதுவுமே தாஸுக்கு கொடுக்கவில்லை,

தாஸுக்கும் ரெலோவுக்கும் சம்பந்தமேயில்லை,

தாஸுக்கு தலைவராக குன்னகுடி வைத்தியநாதன் இருந்தார்.

தாஸ் தானாக போராளிகளை சேர்த்து பயிற்சி கொடுத்து சொந்தமா  கொட்டன் பொல்லுகள்  சீவி மற்றும் அலவாங்கு மண்வெட்டி  போன்ற கனரக ஆயுதங்களை செய்து அவற்றைக்கொண்டு  இலங்கை பாதுகாப்புபடைகளின்மீது தாக்குதல் செய்தார் .

உங்கள் ஆவலை பூர்த்தி செய்ததில் ஆனந்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, valavan said:

 சிறி எதுவுமே தாஸுக்கு கொடுக்கவில்லை,

தாஸுக்கும் ரெலோவுக்கும் சம்பந்தமேயில்லை,

தாஸுக்கு தலைவராக குன்னகுடி வைத்தியநாதன் இருந்தார்.

தாஸ் தானாக போராளிகளை சேர்த்து பயிற்சி கொடுத்து சொந்தமா  கொட்டன் பொல்லுகள்  சீவி மற்றும் அலவாங்கு மண்வெட்டி  போன்ற கனரக ஆயுதங்களை செய்து அவற்றைக்கொண்டு  இலங்கை பாதுகாப்புபடைகளின்மீது தாக்குதல் செய்தார் .

உங்கள் ஆவலை பூர்த்தி செய்ததில் ஆனந்தம்.

ரென்சன் ஆக வேண்டாம் இன்றும் பழைய டெலோ ஆட்களுடன் நல்ல நட்ப்புடனே  உள்ளேன் சரித்திரம் மாற கூடாது பாருங்க .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

46-B3-FBA5-2-B22-405-D-9656-2-AB6-FD8-AB

8 minutes ago, valavan said:

 சிறி எதுவுமே தாஸுக்கு கொடுக்கவில்லை,

தாஸுக்கும் ரெலோவுக்கும் சம்பந்தமேயில்லை,

தாஸுக்கு தலைவராக குன்னகுடி வைத்தியநாதன் இருந்தார்.

தாஸ் தானாக போராளிகளை சேர்த்து பயிற்சி கொடுத்து சொந்தமா  கொட்டன் பொல்லுகள்  சீவி மற்றும் அலவாங்கு மண்வெட்டி  போன்ற கனரக ஆயுதங்களை செய்து அவற்றைக்கொண்டு  இலங்கை பாதுகாப்புபடைகளின்மீது தாக்குதல் செய்தார் .

உங்கள் ஆவலை பூர்த்தி செய்ததில் ஆனந்தம்.

சிறி தாசுக்கு எதுவுமே கொடுக்க வில்லையா..... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

35 வருடங்களின் பின் இப்போதும் என்ன எம்மிடையே சகோதரத்துவம் வளர்ந்துவிட்டதா.. என்ன?

யூனியன் கல்லூரி மாணவர்களின் தலையில் அண்மையில் விழுந்த பொல்லாங்கட்டையே எமது இப்போதைய நிலை பற்றி பல விடயங்களை சொல்லாமல் சொல்கின்றது.

தலைப்பிற்கு தொடர்பில்லாத விடயங்களைத் தவிர்ப்பது தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்க உதவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

தலைப்பிற்கு தொடர்பில்லாத விடயங்களைத் தவிர்ப்பது தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்க உதவும். 

உங்கட கண்ணிற்கு இப்படியானவை மட்டும்  தெரிந்து விடுகிறது.... 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, MEERA said:

46-B3-FBA5-2-B22-405-D-9656-2-AB6-FD8-AB

சிறி தாசுக்கு எதுவுமே கொடுக்க வில்லையா..... 

சத்தமாக பேசாதீர்கள் அப்புறம் யாராவது இதேபோல ஒரு போஸ்டரை இங்கே கொண்டுவந்து ஒட்டிவிட்டு  கருணாவிற்கும் மாத்தையாவிற்கும் தலைவர் எதுவுமே கொடுக்கவில்லையா என்று கேட்டுவிடபோகிறார்கள்.

காட்சிகள் ஒன்றாகதான் அனைத்து இயக்கங்களிலும் இருந்தது, காரணங்கள்தான் வேறுவேறாக சொல்லப்பட்டது.

தாஸ்குரூப்பின் அழிவை நடத்தியதே பொபி என்பது பலருக்கும் தெரிந்திருக்கும், யாழ்ப்பாணத்தில் ரெலோ என்பது 100% பொபியின் கட்டுப்பாட்டிலேயே இயங்கியது, தாஸ் பொபி பிரிவின் முன்னர் இந்தியாவிலிருந்தபடி பலமான ரெலோவை வழிநடத்தியது ஸ்ரீ. இந்தியாவிலிருந்து யாழ் வந்தபின் ஸ்ரீயும் பல்லு புடுங்கிய பாம்பாக பொபி கட்டுப்பாட்டில் ஏறக்குறைய சூழ்நிலை கைதி நிலையிலேயே இருந்தார் என்பது வரலாறு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, MEERA said:

உங்கட கண்ணிற்கு இப்படியானவை மட்டும்  தெரிந்து விடுகிறது.... 😂

மீரா,

சாதி சமயத்தில எனக்கு நம்பிக்கையில்ல, உங்களுக்கிருக்கெண்டா நான் என்ன செய்யிறது....😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் இறந்ததை நினைவு கூற அவர் சார்ந்தோருக்கு உரிமை உண்டு. 

ஆனால்.. இவர் என்ன வீரத்தைச் செய்தற்காக வீரவணக்கம் செய்யினம்..??! நினைவஞ்சலி செய்யுங்கோ அது தப்பில்ல.

ஆனால்.. மக்களுக்கு முன் வீரர்களாக்க நினைக்க வேண்டாம்.. துரோகிகளை. 

Link to comment
Share on other sites

3 minutes ago, nedukkalapoovan said:

ஒருவர் இறந்ததை நினைவு கூற அவர் சார்ந்தோருக்கு உரிமை உண்டு. 

ஆனால்.. இவர் என்ன வீரத்தைச் செய்தற்காக வீரவணக்கம் செய்யினம்..??! நினைவஞ்சலி செய்யுங்கோ அது தப்பில்ல.

ஆனால்.. மக்களுக்கு முன் வீரர்களாக்க நினைக்க வேண்டாம்.. துரோகிகளை. 

நீங்கள் கூறுவது சரி என்றால் கோத்தபாய கூறுவதும் சரி என்று ஆகிவிடும். யார் தியாகி , யார் துரோகி என்று முடிவெடுத்து,  சான்றிதழ் கொடுக்கும் உரிமையை நீங்கள் யாரிடம் இருந்து எப்போது பெற்றீர்கள்?   ஶ்ரீசபாரத்தினமும் மக்களுக்காக போராடவந்து அநியாயமாக கொல்லப்பட்ட ஒரு போராளிதான். எமக்காக போராடி இறந்த ஒரு போராளிக்கு வீரவணக்கம் செய்வதில் கூட பாரபட்சம் காட்டுவீரகள் என்றால் இதை விட கோத்தபாய மேல்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.