Jump to content

புலிகளின் தலைவரின், ஒளிப்படம் பொறிக்கப்பட்ட உடையுடன் வந்த தமிழக மீனவர்கள்- விசாரணை முன்னெடுப்பு


Recommended Posts

7 minutes ago, பெருமாள் said:

விளங்கப்படுதுங்க ?


நாளைக்கு எமது மீனவர்களை சுட்டு கொன்றபின், அவர்களுக்கு தலைவரின் படம் பொறித்த உடைகளை அணிவித்து அவர்களை புலி என்று சொல்லலாம். தலைவரின் படத்துடன் TAG பன்னியவரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் உள்ளே வைத்திருப்பதை நீங்கள் அறியவில்லையா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, zuma said:


நாளைக்கு எமது மீனவர்களை சுட்டு கொன்றபின், அவர்களுக்கு தலைவரின் படம் பொறித்த உடைகளை அணிவித்து அவர்களை புலி என்று சொல்லலாம். தலைவரின் படத்துடன் TAG பன்னியவரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் உள்ளே வைத்திருப்பதை நீங்கள் அறியவில்லையா? 

வடகிழக்கில் நடக்கிற பிரச்சனைகளை  பற்றி அழுவதுக்கு ஆள் இல்லை  உங்கடை கற்பனையான பிரச்சனைக்கு சீமானை இழுத்து கடைசியில் அப்படி நடந்தால் எனும் நிலையில் கேவலமாய் இல்லை ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை படை வெட்டும் சுடும் என்றார்கள் எமது தம்பிகள் ஒரு ஐவர் மட்டும் போய் ஒட்டுமொத்த இலங்கை கப்பல் படையையே பயத்தில் உறைய வைத்துள்ளார்கள்.

புகைப்படம் எடுத்து விட்டு விடுதலை செய்வதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. அவர்கள் அண்ணனின் போர்குணத்தை நன்கறிந்தே உள்ளார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லை தாண்டி வந்த இந்திய மீனவர்களை கைது செய்து, அவர்களது படகு, இயந்திரங்களையும் பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் நிறுத்திய இலங்கை கடற்படை. உடையில் புலிகளின் தலைவரின் பெயரும் படமும் பொறிக்கப்பட்டிருந்ததை  கண்டவுடன்: வந்த மீனவரை புகைப்படம், காணொளி எடுத்துப்போட்டு அனுப்பிவிட்டு விசாரணை செய்யினமாம். அச்சாப்பிள்ளையள். இதுக்குப் பின்னால, வடக்கில் எத்தனை அப்பாவிகள் இவர்கள் எழுதும் இந்தக் கதையில், வந்த மீனவர்களுடன் தொடர்பை பேணினார் என்று  கைது செய்யப்படப் போகிறார்களோ, யானறியேன் பராபரமே? வாறது வாறதெல்லாம் நமக்குத்தான் வரவேணுமா? சேருகிற தமிழ் கடற்படையையும் தமிழக மீனவர்களை சுடுங்கோடா என்று கட்டளை போடபோறானுகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, zuma said:

நான் சொல்ல விளைவது எதுவெனில் உயர்திரு சீமான் அவர்களின் வெட்டி போச்சை உண்மையென நம்பி செயற்படக்கூடிய சில இளஞ்சர்கள் உள்ளனர் என்பதே.

தற்போதைக்கு தமிழ்நாட்டில்மட்டும் 30 இலட்சம் பேருக்கு மேல் உள்ளார்கள்.  உலகம் பூராவும்!  கணக்கெடுக்க வேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/5/2021 at 06:15, தமிழ் சிறி said:

இலங்கை கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில், அதில் ஒரு படகில் இருந்தவர்கள் அணிந்திருந்த உடையில் புலிகளின் தலைவரின் பெயரும் படமும் பொறிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதனை அவதானித்த கடற்படையினர் குறித்த மீனவர்களை ஒளிப்படம் மற்றும் காணொளி எடுத்தபின்னர் அவர்களை விடுவித்திருந்தனர்.

ச்சே....  கொரோனாவெல்லே! மறந்தே போச்சு. அதுதான் காணொளி ஒளிப்படத்தோட நிறுத்திற்றினமாமில்லே. ஆமா....  சுற்றி வளைக்கேக்க தொற்றாதோ அது? அதுதான் அவன்பிள்ளை துணிஞ்சு போட்டாந்திருக்கான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழகன் said:

இலங்கை படை வெட்டும் சுடும் என்றார்கள் எமது தம்பிகள் ஒரு ஐவர் மட்டும் போய் ஒட்டுமொத்த இலங்கை கப்பல் படையையே பயத்தில் உறைய வைத்துள்ளார்கள்.

புகைப்படம் எடுத்து விட்டு விடுதலை செய்வதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. அவர்கள் அண்ணனின் போர்குணத்தை நன்கறிந்தே உள்ளார்கள். 

தமிழகன்,

வீறாப்புப் பேசாமல், சாதுரியமாக நடக்க முனையுங்கள். பிரபாகரனின் படம் போட்ட உடையணிந்தவர் சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொண்டார். பிரச்சனை அவருக்கு மட்டுமல்ல அவரோடு கூட வந்தவர்களுக்கும். 

விரும்பிய உடையை அணியலாம். அதில் தவறேதும் இல்லை. ஆனால் இலங்கையின் கடற் பரப்புக்குள் செல்லும்போது மூளையையும் கொஞ்சம் பாவிக்க வேண்டுமல்லவா..?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kapithan said:

விரும்பிய உடையை அணியலாம். அதில் தவறேதும் இல்லை. ஆனால் இலங்கையின் கடற் பரப்புக்குள் செல்லும்போது மூளையையும் கொஞ்சம் பாவிக்க வேண்டுமல்லவா..?

 

முதலில் இன்னொருநாட்டு பிரஜையான அவர்  அவர் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்ததே தவறு,

தவறுக்குமேல் தவறு செய்தவரை மூளையை பாவிக்க சொல்லி கேட்பது வேடிக்கை,

சிறு பராயத்திலிருந்து தனது முதுமை எட்டி பார்க்கும் காலம்வரை எந்தவித விளம்பரமும் இல்லாது, மாவீரர்நாளில் மட்டும் ஒரேயொரு சிற்றுரையாற்றுவதைதவிர தன்னை பற்றிய எந்தவித அலப்பறைகளும் இல்லாது வாழ்ந்த ஒருவரின் பெயரை வைத்து  தாய் தமிழகத்திலும், தப்பியோடி தட்டச்சு தளபதிகளாய் மற்றவர்களுக்கு இன்று சுத்தி சுத்தி துரோகிபட்டம் வழங்கும் ’’உச்சா’’ நீதிமன்ற தளபதிகளான எம்மவர்களில் ஒரு சிலரும் பண்ணும் விளம்பரம் கலந்த அலப்பறை இருக்கிறதே....

அதுவும் ஒருவகை இந்த எல்லைதாண்டி கரிகாலன் படம் பதித்த டீ சேர்ட்டுடன் இலங்கை கடற்பரப்பில் நுழைந்து சிங்களவன் கடற்படையிடம் சிக்கிகொண்டவர்களின் மூளையில்லாத செயற்பாடுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழகன் said:

இலங்கை படை வெட்டும் சுடும் என்றார்கள் எமது தம்பிகள் ஒரு ஐவர் மட்டும் போய் ஒட்டுமொத்த இலங்கை கப்பல் படையையே பயத்தில் உறைய வைத்துள்ளார்கள்.

புகைப்படம் எடுத்து விட்டு விடுதலை செய்வதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. அவர்கள் அண்ணனின் போர்குணத்தை நன்கறிந்தே உள்ளார்கள். 

வணக்கம் தமிழகன்! உங்கள் அண்ணனின் "போர்க்குணத்தை" நாங்கள் கண்ட ஒரு சம்பவத்தை இங்கே பகிர அனுமதியுங்கள்!

2020 டிசம்பர் 12 இல் அமெரிக்காவின் இலங்கைத் தமிழ்ச்சங்கம் வருடாந்த "தமிழர் சங்கமம்" நிகழ்ச்சியை இணையம் மூலம் நடாத்தியது. உங்கள் அண்ணனும் பேச்சாளராக இணையவழியில் கலந்து கொண்டார். அவர் உரையாற்ற தமிழகத்தில் இருந்து இணைந்து கொண்ட நேரம் யாரோ ஆர்வக் கோளாறுத் தம்பிகள் மேசையின் வலது மூலையில் கட்சிக் கொடியை வைத்து விட்டார்கள். அண்ணன் கமெராவைப் பார்த்தபடியே வலது கையால் கொடியை கமெராவின் பீல்டில் இருந்து தள்ளி வைத்து விட்டார்! அதன் பிறகு 45 நிமிடம் வரை ஆக்ரோஷமாகப் பேசினார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழகன் said:

இலங்கை படை வெட்டும் சுடும் என்றார்கள் எமது தம்பிகள் ஒரு ஐவர் மட்டும் போய் ஒட்டுமொத்த இலங்கை கப்பல் படையையே பயத்தில் உறைய வைத்துள்ளார்கள்.

புகைப்படம் எடுத்து விட்டு விடுதலை செய்வதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. அவர்கள் அண்ணனின் போர்குணத்தை நன்கறிந்தே உள்ளார்கள். 

உங்கள் அண்ணரின் வீடியோ பேச்சுக்களை வெளிநாடுகளில் வாழ்கின்ற  ஈழதமிழர்கள் கேட்பது போன்று இலங்கை படையினரும் கேட்டிருப்பார்கள்.அதனால் தான் பயம் ஏற்பட்டிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/5/2021 at 19:21, valavan said:

தமிழகத்திலும், தப்பியோடி தட்டச்சு தளபதிகளாய் மற்றவர்களுக்கு இன்று சுத்தி சுத்தி துரோகிபட்டம் வழங்கும் ’’உச்சா’’ நீதிமன்ற தளபதிகளான எம்மவர்களில் ஒரு சிலரும் பண்ணும் விளம்பரம் கலந்த அலப்பறை இருக்கிறதே....

அதுவும் ஒருவகை இந்த எல்லைதாண்டி கரிகாலன் படம் பதித்த டீ சேர்ட்டுடன் இலங்கை கடற்பரப்பில் நுழைந்து சிங்களவன் கடற்படையிடம் சிக்கிகொண்டவர்களின் மூளையில்லாத செயற்பாடுதான்.

என்னத்த சொல்ல ஓமென்றும் சொல்ல ஏலா , இல்லையென்றும் சொல்ல ஏலாமல் இருக்கு எங்களுக்கு பச்சை குத்தியாச்சு தெரியுமா என்ன ??  
பல பேரை பார்த்தாச்சு அதனால கண்டுக்கிறதில்ல 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.