Jump to content

இல்லாளிடம் எல்லாவற்றையும் இயம்புதல் நலமா ?


Recommended Posts

என்னுடன் பணிபுரியும் ஒரு பணியாளரின் (A)அறையில் அவருடன் தங்கியிருக்கும் ஒரு நபருக்குக் கோரணா தாக்கம் ஏற்பட்டு அவர் தனிமைப்படுத்தல் சிகிச்சைக்கு அனுப்பப் பட்டுள்ளார்.இதனை இப்பணியாளர் எமக்கு அறிவித்து விட்டு தான் கோவிட் பரிசோதனை செய்துகொண்டு முடிவு வரும்வரை வீட்டில் தங்கிக்கொண்டார்.

இச்செய்திகளை என்னுடன் பணிபுரியும் இன்னுமொரு பணியாள்(B) தன்னுடைய மனைவியிடம் சொல்லியிருக்கிறார்.உடனே அவருடைய மனைவி நீங்கள் என்னருகே வரக்கூடாது,தனி அறையில் தங்குங்கள் எனப்பலவாறு கதைத்துக்கொண்டு தான் தனிஅறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாராம்.இப்போது அப்பெண் மனநிலை பாதிப்புக்குள்ளாகி,கணவரைப்பற்றியோ மகனைப்பற்றியோ,குடும்பநிலை பற்றியோ சிந்தனை அற்றவராக வைத்தியசிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறாராம் வைத்தியசாலையில் இருவாரங்களாக..இவரும்,இவரது 12வயது மகனும் கஸ்டப்படுகின்றனர்.ஆனால் முதல்பணியாளரின்(A) வைத்திய அறிக்கை எதிர்மறையாக வந்துள்ளது.

எல்லாவற்றையும் இல்லாளிடம் எடுத்தியம்பும் கணவன்மாரின் செய்கைபற்றி சற்றுச் சிந்திக்க வேண்டியதாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் நினைத்திருக்க மாடடார் தன மனைவி இவ்வளவு   சீரியஸாக எடுப்பார் என்று. ஏற்கனவே கோவிட பிரச்னை பற்றி பயந்தவராக மனக் குழப்பம் உள்ளவராக இருந்திருக்க கூடும்.ஆதனால் தான்  சொல்வார்கள் "இடம் பொருள் ஏவல் "அறிந்து செயற்பட வேண்டும். என. இனி அவர்தான் தனது  கவனிப்பினாலும்   அன்பாலும் ஆதரவாலும்  நல்ல தன்மையான அறிவுரையாலும் ஒழுங்காக மருந்து எடுப்பதாலும் மீடடக வேண்டும். நலம் பெற வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிலாமதி said:

அவர் நினைத்திருக்க மாடடார் தன மனைவி இவ்வளவு   சீரியஸாக எடுப்பார் என்று. ஏற்கனவே கோவிட பிரச்னை பற்றி பயந்தவராக மனக் குழப்பம் உள்ளவராக இருந்திருக்க கூடும்.ஆதனால் தான்  சொல்வார்கள் "இடம் பொருள் ஏவல் "அறிந்து செயற்பட வேண்டும். என. இனி அவர்தான் தனது  கவனிப்பினாலும்   அன்பாலும் ஆதரவாலும்  நல்ல தன்மையான அறிவுரையாலும் ஒழுங்காக மருந்து எடுப்பதாலும் மீடடக வேண்டும். நலம் பெற வாழ்த்துக்கள்

மனைவியிடம் சொல்ல. வேண்டியது.   Duty of Care 😄இல்லையா,நிலாக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நந்தி said:

என்னுடன் பணிபுரியும் ஒரு பணியாளரின் (A)அறையில் அவருடன் தங்கியிருக்கும் ஒரு நபருக்குக் கோரணா தாக்கம் ஏற்பட்டு அவர் தனிமைப்படுத்தல் சிகிச்சைக்கு அனுப்பப் பட்டுள்ளார்.இதனை இப்பணியாளர் எமக்கு அறிவித்து விட்டு தான் கோவிட் பரிசோதனை செய்துகொண்டு முடிவு வரும்வரை வீட்டில் தங்கிக்கொண்டார்.

இச்செய்திகளை என்னுடன் பணிபுரியும் இன்னுமொரு பணியாள்(B) தன்னுடைய மனைவியிடம் சொல்லியிருக்கிறார்.உடனே அவருடைய மனைவி நீங்கள் என்னருகே வரக்கூடாது,தனி அறையில் தங்குங்கள் எனப்பலவாறு கதைத்துக்கொண்டு தான் தனிஅறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாராம்.இப்போது அப்பெண் மனநிலை பாதிப்புக்குள்ளாகி,கணவரைப்பற்றியோ மகனைப்பற்றியோ,குடும்பநிலை பற்றியோ சிந்தனை அற்றவராக வைத்தியசிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறாராம் வைத்தியசாலையில் இருவாரங்களாக..இவரும்,இவரது 12வயது மகனும் கஸ்டப்படுகின்றனர்.ஆனால் முதல்பணியாளரின்(A) வைத்திய அறிக்கை எதிர்மறையாக வந்துள்ளது.

எல்லாவற்றையும் இல்லாளிடம் எடுத்தியம்பும் கணவன்மாரின் செய்கைபற்றி சற்றுச் சிந்திக்க வேண்டியதாக உள்ளது.

நீங்கள் சொல்ல வருவது புரிகிறது....

ஆனால் சொன்ன விதம்.... வேறு மாதிரியான அர்த்தத்தினை கொடுக்கிறது அல்லவா.

அதாவது, பணியாளர் A க்கும், பணியாளர் B யின் மனைவிக்கும் ஏதோ தொடர்பு இருந்தது போலவும், முன்னவர் நிலைமை தெரிய வர, பின்னவர் மனைவி தனிமைப்படுத்திக் கொண்டார் போலவும் கருத்து அமையக்கூடியதாக உள்ளதே.

முதலில் நகைசுவையாக சொல்கிறீர்கள் என்று நினைத்தேன்.

இது குறித்து யாழ்ப்பாணத்தில், ஒரு A ஜோக் ஒன்றும் இருந்தது.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 8/5/2021 at 20:21, நந்தி said:

எல்லாவற்றையும் இல்லாளிடம் எடுத்தியம்பும் கணவன்மாரின் செய்கைபற்றி சற்றுச் சிந்திக்க வேண்டியதாக உள்ளது.

இது போன்ற இயல்பான நிகழ்வையெல்லாம் கணவன்  மனைவியிடமோ, மனைவி  கணவனிடமோ பகிர்தலை யோசிக்க, தவிர்க்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். ஆனால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வு சற்று அரிதானது. நிலாமதி அவர்கள் சொன்னது போல, இந்நிகழ்வில் மனைவி கொரோனா பயத்தினால் உளவியல் பாதிப்படைந்துள்ளார் என்று வீட்டிலுள்ளோருக்குத் தெரிய வந்திருந்தால் சொல்வதைத் தவிர்க்கலாம் ; சொல்லாமல் கணவன் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கலாம். நிற்க.

          தலைப்பைப் பார்த்ததும் வேறு தனிப்பட்ட விஷயமாய் நினைத்ததால், அதையொட்டியும் எழுதி விவாதத்தைத் (தாமதமானாலும் விவாதம் ஏற்படுமானால்) திசை திருப்பும் எண்ணம் தோன்றுகிறது (!). பிற்காலத்திய கதைகளிலும் திரைப்படங்களிலும் நாயகன் புதுமை செய்வதாக எண்ணி, திருமணத்திற்குச் சற்று முன்னரோ பின்னரோ தனது பழைய காதலைப் பற்றிக் கூறி, பிற்காலத்தியத் தவறான புரிதல்களைத் தவிர்க்க அவளும் வெளிப்படையாகப் பேசலாம் எனும் காட்சியமைப்பைக் காண்கிறோம். உளவியல் ரீதியாக அணுகும்போது இதில் நேர்மை, வெளிப்படைத்தன்மையெல்லாம் அபத்தமாகத் தோன்றுகிறது. இதனால்  எத்துணைப் பக்குவப்பட்ட மனதானாலும், ஆழ்மனது உடையாவிட்டால் கூட கீறல் விழுந்த கண்ணாடியாகும் ; கடைசி வரை ஒட்டாது என்பது என் அனுபவ ஞானமல்ல ; கேள்வி ஞானம். எனவே காதல், கத்திரிக்காய் என்ற மிகவும் தனிப்பட்ட விடயமெல்லாம் மனமெனும் அறையிலிருந்து அம்பலத்திற்கு வரக்கூடாது. அந்த அம்பலத்தில் கணவனும் உண்டு ; மனைவியும் உண்டு. மரணத்தில் கட்டையோடு எரிய வேண்டியதை வாழும்போது வெளியே எடுத்தால்  வாழும் வரை சுடும்.

     எனவே தலைப்பில் உள்ள கேள்விக்கு என் பதில்

இல்லாளிடமோ கொண்டவனிடமோ எல்லாவற்றையும் இயம்புதல் நலமில்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.