Jump to content

நம்பிக்கை என்று கூறவே நம்பிக்கை வருகுதில்லை!


Recommended Posts

 

நம்பிக்கை என்று கூறவே நம்பிக்கை வருகுதில்லை!

 
 
ந்தியாவில் ரொக்கட் வேகத்தில் அதிகரித்துச் செல்லும் கொரோனா பேரிடரின் பாதிப்பு நினைத்துப் பார்க்க முடியாதது. நாளொன்றுக்கு எத்தனை மனிதரென்று சரியான எண்ணிக்கை இறுதிவரை வராமலே போகலாம்.
stalin.jpg
அமெரிக்கா, கனடா, பிரித்தானியா போன்ற மனிதாபிமான நாடுகள் தாராளமாக இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. ஆனால் இந்த உதவிகள் அந்நாடு சந்திக்கும் சவாலுக்கு அவல் பொரி போன்றது.
இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தால் அதற்கு அயலிலுள்ள குட்டித்தீவான இலங்கை எதிர்பார்க்கப்பட்ட சோதனை வலயமாகியுள்ளது. அரசியல், சாதி, மத, இன பேதமின்றி இந்நோய் இங்குள்ளவர்களை ஒட்டுமொத்தமாக தாக்க ஆரம்பித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் நோய்த்தடுப்பில் முன்னணி வகுத்ததாக உலக சுகாதார நிறுவனத்தினால் பாராட்டுப் பெற்ற இலங்கையில் இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தடுப்பூசிக்குள்ளும் அரசியல் கலப்பு ஊடுருவியுள்ளது.

ஒருபுறத்தில் இலங்கையையும் இந்தியாவையும் கொரோனா பிய்த்தெறிந்து வருகின்ற போதிலும், இங்கு அரசியல் விளையாட்டுகளுக்குப் பஞ்சமில்லை. இப்போதைக்கு இந்தியாவை மட்டும் பார்ப்போம். அங்குள்ள ஐந்து மாநிலங்களில் கடந்த மாதம் இடம்பெற்ற தேர்தல்களின் முடிவுகள் வெளியானதையடுத்து அதுவே இப்போது பிரதான பேச்சுக் களமாகியுள்ளது.

இந்தியாவை ஆட்சி புரியும் மோடியின் பாரதிய ஜனதா கட்சி, மூன்று மாநிலங்களின் நேரடி மோதலில் குப்புற சரிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் திரணமல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மமதா பனர்ஜியிடம் மோடி கற்றுக் கொண்ட பாடம் அவரது வரலாற்றில் மிகையான பதிவுக்குரியது.

மிகப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள பனர்ஜி மூன்றாம் தடவையாகவும் முதலமைச்சராகியுள்ளார். விரைவில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தல் ஒன்றில் இவர் பெறப்போகும் வெற்றி, மோடியை தலைநிமிர்த்த முடியாமல் செய்யுமென நம்பலாம்.

தமிழ் நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்பார்க்கப்பட்டவாறும், கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டவாறும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. வெள்ளிக்கிழமை 7ம் திகதி ஸ்டாலின் முதன்முறையாக – குடும்ப வாரிசு என்ற நாமத்துடன் முதலமைச்சராக பதவி ஏற்றார். இவரது கன்னி அமைச்சரவையில் இரண்டு பெண்கள் உட்பட 34 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களுள் இருபதுக்கும் அதிகமானோர் பழைய முகங்கள். சுமார் பத்து வரையானோர் முதன்முறை வெற்றி பெற்றவர்கள். தி.மு.க. இளைஞரணித் தலைவரான தமது மகன் உதயநிதிக்கு அமைச்சரவையில் ஸ்டாலின் இடம் கொடுக்கவில்லை. எடுத்த எடுப்பிலேயே அமைச்சரவையில் சேர்த்துவிட்டால் வாரிசு அமைச்சர் என்ற பெயர் வந்துவிடலாமென அவர் நினைப்பது தெரிகிறது. எனவே சில வருடங்களின் பின்னர் (சிலவேளை சில மாதங்களில்) அமைச்சரவையில் மாற்றம் ஒன்றைச் செய்யும்போது அமைதியாக அமைச்சராக்கும் தந்திரம் ஸ்டாலினுக்கு பரம்பரையாக வரக்கூடிய கலை. மு.க.வின் மகன் அல்லவா?

கோபாலபுரத்தில் தாயாரின் பால் மட்டும் குடித்து ஸ்டாலின் அரசியலுக்கு வரவில்லை. தந்தையான கலைஞரின் கரம் பற்றி அவர் தோளில் தொங்கிய சால்வையைப் பிடித்து பாதம் பதித்தவர் என்பதை மறந்துவிடக்கூடாது.

தி.மு.க.வின் வெற்றிக்கு முதலில் வாழ்த்துக் கூறியவர் பிரதமர் மோடி. ஒன்றிணைந்து பணியாற்றுவோம், கொரோனாவை ஒழிக்க செயற்படுவோம் என்றவாறு இவரது வாழ்த்து இருந்தது. தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறுமென்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்துச் செய்தி தயாராக இருப்பதாகவும் மோடி தரப்பிலிருந்து தேர்தல் முடிவு வெளிவருவதற்கு முதல் நாள் அறிவிக்கப்பட்டது. ஆனால், வாழ்த்து வந்தது ஸ்டாலினுக்கு. இருவருக்குமே மோடியின் வாழ்த்துச் செய்தி தயாராக இருந்திருக்கிறது. ஸ்டாலின் வென்றதால் அவருக்குக் கிடைத்தது.

அடுத்த கடிதம் சில நாட்களில் ஸ்டாலினுக்கு மோடியிடமிருந்து வரக்கூடும். அதன் பின்னரே அரசியல் சடுகுடு ஆட்டம் அங்கு ஆரம்பமாகும். ஸ்டாலின் இணைய (அடங்க) மறுத்தால் கலைஞர் ஆட்சியும், எம்.ஜி.ஆர். ஆட்சியும் முன்னைய ஆட்சித் தரப்புகளால் கலைக்கப்பட்ட வரலாறு அவருக்கு நினைவூட்டப்படலாம். இப்படி இடம்பெறவில்லையென்றால், அது இந்திய அரசியலாக முடியாது.

பிரதமர் மோடி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கூற முன்வந்தது போன்று இலங்கையின் ஆட்சியாளர்களான அண்ணனுக்கும் தம்பிக்கும் இன்னமும் மனசு வரவில்லை. தி.மு.க.வுக்கு வாழ்த்துக் கூறினால் தங்களை ஆட்சிக் கதிரைக்குக் கொண்டுவந்த சிங்கள மகாஜனங்கள் கோபம் கொள்வார்களென நினைக்கிறார்கள் போலும்.

தமிழ்நாடு இலங்கையைவிட எல்லா வகையிலும் மூன்று மடங்கு பெரிதானது. இலங்கையின் துணைத் தூதரகமொன்று தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இயங்குகிறது. அந்த வகையில் மோடி சம்பிரதாயத்துக்கு வாழ்த்துக் கூறியதுபோல ராஜபக்சக்களும் செய்திருக்கலாம். ஆனால், அந்த எண்ணம் அவர்களுக்கு இன்னமும் வரவில்லை.

அதனாலென்ன, பரவாயில்லை! இலங்கை அரசியலின் முக்கியமான தமிழ்த் தலைவர்கள் விரைந்து விழுந்து விழுந்து தங்கள் வாழ்த்தை அனுப்பி அரும்பெரும் சாதனைகள் புரிந்துள்ளனர். அதுவும் ஒரு வீட்டுக்குள்ளிருந்தே அரை டசினுக்கும் மேலான தனித்தனி வாழ்த்துகள். இவற்றுள் சிலவற்றை மட்டும் இங்கு பார்க்கலாம்…….

தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா: ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைவதால் தமிழினம் விடுதலை பெறக்கூடிய வாய்ப்புண்டு (ஆரூடம்).

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன்: தொடர்ச்சியான இனவழிப்புக்கு நீதியையும், ஈழத்தமிழர்களுக்கான உரிமையைப் பெற்றுத் தரவும் தமிழகத்திலிருந்து ஸ்டாலின் தலைமையில் வலுவான குரல் ஒலிக்குமென நம்பிக்கை கொள்கிறோம் (பொறுத்திருப்போம்).

ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்: உலகவாழ் தமிழ் மக்களுக்கு தலைவராக ஸ்டாலின் இயங்கி வழிகாட்ட வேண்டும் (கலைஞரும் உலகத் தமிழர் தலைவராக இருந்தவரல்லவா?).

புளொட் இயக்கத் தலைவர் சித்தார்த்தன்: தமிழ் மக்கள் பிரச்சனையைத் தீர்க்க இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தீர்ப்பு பெற்றுத் தர வேண்டும் (மோடிக்கு பாலர் வகுப்பு நடத்த வேண்டுமா?).

ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்: இலங்கைத் தமிழரின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி உதவ வேண்டும் (எடுப்பார் கைப்பிள்ளையின் கோரிக்கை).

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி: உங்கள் தந்தை கலைஞரின் பணியை தொடருங்கள் (மீண்டும் அதே உண்ணாவிரதமா?).

தமிழர் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்: இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழர் பிரச்சனையை தீர்ப்பதற்கு ஸ்டாலின் அரசு முன்வர வேண்டும் (இலங்கைக்கான பொதுவான வேண்டுகோள்).

மலையக மக்கள் முன்னணித் தலைவர் வே. இராதாகிருஸ்ணன்: இலங்கைத் தமிழர் இனப்பிரச்சனைக்கு ஸ்டாலின் உதவ வேண்டும் (மத்திய அரசுடன் மோதும் பலம் இவருக்கு உண்டா?).

இவர்களைத் தவிர கூட்டமைப்பின் சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன் ஆகியோரும் தங்கள் பங்கை வாழ்த்தாக நிறைவேற்றியுள்ளனர். கூட்டமைப்பின் தோழர்களான ஒவ்வொருவரும் தனித்தனியாக வாழ்த்துக் கூறியபோதிலும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அமைதி காக்கிறார். நேரில் சென்று ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கூற அவர் விரும்புவதாக ஒரு தகவல். இவரது அறிக்கை எழுத்தாளரான, கனடாவிலிருந்து பதவி எதிர்பார்த்து சென்ற குகதாசனின் ஒத்துழையாமையே வாழ்த்துச் செய்தி வெளிவராததற்குக் காரணமென இன்னொரு தகவல். எது சரியோ?

இத்தனைபேர் தாயகத்திலிருந்து வாழ்த்துத் தெரிவித்தும் ஒன்றை மட்டுமே தி.மு.க.வின் முரசொலி பத்திரிகை பிரசுரித்துள்ளது. அது சி.வி. விக்னேஸ்வரனுடையது. எந்த அடிப்படையில் இந்த தெரிவு இடம்பெற்றது என்று தெரியவில்லை. வாழ்த்தின் விடயதானமா, உள்ளடக்க நிதானமா, சட்டமும் நீதியும் அறிந்தவர் என்ற வல்லாண்மையா அல்லது வடமாகாண முன்னாள் முதலமைச்சர் என்ற தகுதியா?

 

இதனூடாக முக்கிய பொறுப்பொன்று விக்னேஸ்வரன் அவர்களிடம் விடப்பட்டிருப்பது தெரிகிறது. அதாவது, தாமதமின்றி தமிழகம் சென்று ஸ்டாலினை நேரடியாகச் சந்தித்து தாயக மக்களினதும், தமிழகத்திலுள்ள ஈழ அகதிகளதும் நிலைவரத்தை நேரடியாக தெரிவிக்க வேண்டும்.

ஈ.பி.டி.பி. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், யாழ் மாவட்ட எம்.பி. அங்கஜன் ராமநாதன் ஆகியோரும் தங்கள் வாழ்த்தினை ஸ்டாலினுக்கு அனுப்பியிருக்கிறார்கள். கனடாவிலிருந்தும் சில முன்னாள் பிரமுகர்கள் தம்பாட்டுக்கு அறிவாலய முகவரி தேடி கடிதம் எழுதியுள்ளனர். (இது அவர்களின் தனிப்பட்ட தேவைக்கானது).

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாரின் வாழ்த்து இதுவரை வெளிவரவில்லை. பொதுவாக இவ்வாறான அறிக்கைகளில் இவர் மிகவும் கம்மி. எதிலும் அவசரப்படக்கூடாது என்ற கொள்கை வழியானதாக இருக்கலாம்.

மறுபுறத்தில், தமிழக புதிய முதலமைச்சர் ஸ்டாலின் ஈழத் தமிழர் விவகாரத்தில் தமது நல்லெண்ணத்தை எவ்வாறு வெளிப்படுத்தப் போகிறாரென்று அறிவதற்கு பலரும் ஆவலோடு காத்துள்ளனர். இதற்கான முதல் அறிகுறியாக ஆகக்குறைந்தது அந்த ஏழு பேரையும் சட்டப்படி அவர் விடுதலை செய்யலாமல்லவா? செய்வாரா?

தேர்தலின்போது ஈழத்தமிழர் பற்றி சீமான் தரப்பினரைத் தவிர வேறு எவருமே மறந்தும் வாய் திறக்கவில்லை. பதவிச் சுகத்தில் இன்பம் துய்க்கும் தமிழகத்தில் ஆட்சித் தரப்பு, கட்சிகள் தரப்பு, அரச அதிகாரிகள் தரப்பு, வாக்காளர் தரப்பு என்பவை ஒன்றிணையாத நான்கு துருவங்களாக இருக்கும்வரை ஈழத்தமிழர் பற்றி எவராவது சிந்திக்க இடமுண்டா?

எதிலும் நம்பிக்கை வையுங்கள், நம்பிக்கை வைத்தால் நல்லது நடைபெறுமென்று பிரித்தானிய தமிழ் வானொலி ஒன்றின் நிகழ்ச்சித் தயாரிப்பு நண்பர் ஒருவர் கடந்த வாரம் என்னிடம் கூறினார்.

அதற்கு நான் கூறிய பதில்: நம்பிக்கை என்று சொல்லவே நம்பிக்கை வருகுதில்லையே என்பது. ஏனென்றால், இது அரசியல்…… இது இந்திய அரசியல்!

https://tamilpress24.com/நம்பிக்கை-என்று-கூறவே-நம/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.