Jump to content

உலகில் அழிவை நோக்கி செல்லும் குடிபெயரும் பறவைகளின் இருப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் அழிவை நோக்கி செல்லும் குடிபெயரும் பறவைகளின் இருப்பு!

மே 8, 2021

மர்லின் மரிக்கார்


spacer.png

 

உயிர் வாழ்வதற்காக கண்டம் விட்டு கண்டம் நோக்கிச் செல்லும் பறவைகள் மனித நடவடிக்கைகளால் இடைவழியில் கொல்லப்படுகின்ற பரிதாபம்!

உலக குடிபெயரும் பறவைகள் தினம் (world migratory birds day) வருடா வருடம் மே மாதம் 08 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. உலகில் வருடம் தோறும் பறவைகளின் குடிபெயர்தல்கள் இடம்பெறுகின்றன. தாம் வாழும் பிரதேசங்களில் எதிர்கொள்ளும் வாழிடச் சிக்கல், கடும் வெப்பம், கடும் குளிர், உணவுப் பற்றாக்குறை என்பவற்றை தவிர்த்துக் கொள்ளவென அவ்வாழிடங்களில் இருந்து, வாழக் கூடிய சூழல் நிறைந்த பிரதேசங்களுக்கு பறவைகள் இடம்பெயர்கின்றன.

உகந்த இடத்துக்குச் சென்று குறிப்பிட்ட காலம் தங்கி இருந்து மீண்டும் முன்னைய இடத்துக்கு திரும்பி வருவதலே ‘பறவைகள் குடிபெயர்ந்து செல்லல்’ எனப்படுகின்றது. குறிப்பாக தம் உணவு, இருப்பிடம் மற்றும் சீதோஷண நிலை என்பற்றில் நெருக்கடி ஏற்படும் போதே பறவைகள் குடிபெயர்கின்றன.

கோடை காலத்தில் புவியின் வட அரைக் கோளத்தில் நீண்ட பகற் காலம் நிலவும். அக்காலம் பறவைகள் தமது குஞ்சுகளுக்கு உணவு ஊட்ட அதிக வாய்ப்பை அளிக்கும். இக்காலத்தில் இப்பகுதிகளில் உணவும் கூடுதலாகக் கிடைக்கும். ஆனால் இலையுதிர் காலத்தில் பகற் காலம் சுருங்கி, உணவு கிடைப்பதும் அரிதாகும். அதன் விளைவாகவே வெப்ப வலயப் பிரதேசங்களுக்கு இப் பிராந்தியங்களைச் சேர்ந்த பறவைகள் குடிபெயருகின்றன.

ஏனெனில் வெப்ப வலயப் பிராந்தியங்களில் பருவ காலங்களுக்கு ஏற்ப உணவு கிடைக்கப் பெறுவதில் மாற்றங்கள் ஏற்படுவதுமில்லை. புலம்பெயரும் போது ஏற்படும் களைப்பு, சக்தி இழப்பு, ஆபத்துகள் போன்ற பாதக அம்சங்களை ஈடு செய்வதிலும் பறவைகள் கவனம் செலுத்துகின்றன.

புலம்பெயரும் பறவைகள் பல்வேறு உத்திகளைக் கையாளுகின்றன. ஒவ்வொரு வருடமும் பகல் பொழுது குறையும் காலங்களில் உணவு கிடைக்கப் பெறுவது குறைவடையும். அதனால் பெரும்பாலான பறவைகள் வெதுவெதுப்பானதும் நல்ல சாதகமானதுமான தட்ப வெப்பநிலையை நோக்கி பறந்து செல்லத் தம்மைத் தயார்படுத்திக் கொள்ளும்.

குடிபெயர்தல் ஆரம்பமாவதற்கு பல நாட்களுக்கு முன்னதாகவே அவை பயணத்திற்குத் தம்மை தயார்படுத்திக் கொள்ளும். குறிப்பாக அதிக உணவை உண்டு, கூடுதலாக ஓர் அடுக்கு கொழுப்பை உடலில் சேர்த்துக் கொள்ளும். சில பறவைகள் கூட்டமாக எப்படி அணிவகுத்துச் செல்வது என்று கூட ஒத்திகைகள் பார்த்துக் கொள்ளும். அதன் பின்னர் ஒருநாள் சிரேஷ்ட பறவைகளின் மூதாதைப் பண்புகளின் தூண்டலால் உந்தப்பட்டு முன்பின் அறியாத இடங்களுக்கு குடிபெயர்ந்து செல்லத் தொடங்கும். இப்பறவைகள் பெரும்பாலும் இரவு வேளையிலேயே பயணத்தை ஆரம்பிக்கும்.

spacer.png

இவ்வாறு குடிபெயரும் பறவைகள் இரு விதமான நேர் உணர்வைப் பெற்றுக் கொள்ளும். ஒன்று உள்ளூர் நேரத்தைச் சார்ந்தது. மற்றொன்று பருவ நிலை மாற்றம் தொடர்பானது. அத்தோடு புவிக் காந்தப்புலத்தைச் சார்ந்ததும் அதில் அடங்கும். குறிப்பாக பூமியின் காந்த விசையில் ஏற்படும் மாற்றத்தை உணர்ந்து தாம் செல்ல வேண்டிய இடத்தை இப்பறவைகள் கண்டறிந்து கொள்ளும். இவை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், பறவைகளின் வான் வழிப் பயண உத்திகள், வயதான பறவைகளில் அதிகமாகக் காணப்படுவதும் உலகம் முழுவதும் உள்ள பறவையினங்கள் பன்னிரண்டு வான்வழிகளைப் பயன்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும் வட அரைக் கோளத்திலுள்ள ஐரோப்பிய, வட அமெரிக்க, ரஷ்ய நாடுகளில் வருடா வருடம் ஓகஸ்ட், செப்டம்பர் முதல் பனிப்பொழிவு ஆரம்பித்து விடும். இதன் விளைவாகப் பறவைகளின் உணவுகள் பனியினால் மூடப்படும். அதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையை தவிர்த்து உடல் சீதோஷண நிலையையும் பேணிக் கொள்வதற்காக அந்நாடுகளைச் சேர்ந்த பெரும்பாலான பறவைகள் ஆசிய, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய கண்ட நாடுகளுக்கு குடிபெயர்கின்றன.

பொதுவாகப் பெரும்பாலான பறவைகள் குடிபெயர்வின் போது மிக நீண்ட தூரம் பயணிக்கக் கூடியனவாக உள்ளன. அதிலும் இனப்பெருக்கக் காலத்தை மிதவெப்பப் பகுதிகளில் அல்லது வட அரைக்கோளத்தில் கழிக்கின்ற பறவைகள், ஏனைய காலங்களில் வெப்ப வலயங்களை அல்லது தென் அரைக்கோளத்திலுள்ள மிதவெப்ப வலயப் பகுதிகளை நாடிச் செல்லும். குறிப்பாக வடக்கு ஐரோப்பாவிலுள்ள சில பறவைகள், ஆபிரிக்காவிலுள்ள குளிர்கால இடங்களை நோக்கி 6,800 மைல் அல்லது அதனை விடவும் அதிகமான தூரம் பயணிக்கின்றன. இப்பறவைகள் தங்களுக்குள் ஒலிகளை எழுப்பி ஒன்றுடன் ஒன்று மோதாமலும், சரியான இடைவெளியுடனும், ஒரு குறிப்பிட்ட வேகத்துடனும் பறந்து செல்லக் கூடியனவாக இருக்கின்றன எனப் பறவையியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகில் மிகவும் நீண்ட தூரம் பறக்கும் குடிபெயரும் பறவையாக ‘ஆர்ட்டிக்டேன்’ விளங்குகின்றது. இது வட துருவ ஆர்க்டிக்கில் இருந்து ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா கண்டங்களின் வழியே தென்துருவ அண்டாட்டிக்காவின் பனிப்பரப்புக்கு குளிர்காலத்தில் குடிபெயரக் கூடிய பறவையாக உள்ளது. சுமார் ஒரு அடி நீளமுள்ள இப்பறவை, வாழ்நாளின் பெரும்பகுதியை பறப்பதிலேயே கழிக்கின்றது. இப்பறவை ஒரு முறை குடிபெயர்ந்து சென்று திரும்பி வர 70ஆயிரத்து 900 கி.மீ. பயணிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

spacer.png

இதேவேளை இந்தியாவில் 1263 பறவைகள் காணப்படுகின்றன. அவற்றில் 160 வகை பறவைகள் குடிபெயரக் கூடியனவாக உள்ளன. அண்மையில் வட அமெரிக்காவின் அலஸ்காவை சேர்ந்த பறவையொன்று சுமார் 12 ஆயிரம் கிலோ மீற்றர் தூரம் பயணித்து அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ளமை கண்டறியப்பட்டது. அத்தோடு சீனாவிலுள்ள ஒரிரு பறவைகள் இந்தியா மற்றும் இலங்கையைக் கடந்து தென்னாபிரிக்காவுக்கு குடிபெயர்ந்து செல்லக் கூடியனவாக உள்ளன. சில பறவைகள் குடிபெயரும் போது 7 – 10 நாட்கள் எங்கும் தரித்து நிற்காது பயணத்தை மேற்கொள்ளும் இயல்பைக் கொண்டுள்ளன’ என்கிறனர் பறவையில் நிபுணர்கள்.

வருடாந்தம் சுமார் 250 பறவைகள் இலங்கைக்கு குடிபெயர்ந்து வருகின்றன. இப்பறவைகள் பெரும்பாலும் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர், ஒக்டோபர் நவம்பர் மாதங்களில் வருகை தருவதோடு மார்ச், ஏப்ரல் வரையும் இங்கு தங்கி இருக்கும். அதன் பின்னர் அவற்றின் பூர்வீக இடங்களுக்கு திரும்பி விடும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிரியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சம்பத் செனவிரத்ன சுட்டிக் காட்டியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகள், இமாலயம், அவுஸ்திரேலியா போன்ற பிரதேசங்களில் இருந்துதான் இலங்கைக்கு குடிபெயரும் பறவைகள் வருகை தருகின்றன. இப்பறவைகள் பிரதானமாக மூன்று வழிகள் ஊடாக நாட்டுக்குள் வருகை தருவதாக குறிப்பிடுகின்ற பறவையியல் நோக்குனர் பியல் மாரசிங்க, அவற்றில் ஒன்று வடபகுதியின் ஊடாக வருகை தருதல், இரண்டு காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக வருதல், மூன்று திருகோணமலை பிராந்தியத்தின் ஊடாக வருகை தருதல் ஆகியனவே அந்த மார்க்கங்கள் என்கின்றார்.

இவ்வாறு வருகை தரும் குடிபெயரும் பறவைகள் உள்நாட்டிலுள்ள நீர்நிலைகளுக்கு அருகிலும் சதுப்பு நிலப்பகுதிகளிலும் பெரிதும் தங்கி இருக்கும். ஒரு சில பறவைகள் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் மாறிமாறி தங்கி இருப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு குடிபெயரும் பறவைகள் தம் பூர்வீக வாழிடங்களில்தான் இனப்பெருக்கத்தை மேற்கொள்ளும் என சில பறவையியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளை ஒரு சில பறவைகள் குடிபெயர்ந்து தங்கி இருக்கும் பிரதேசங்களில் இனப்பெருக்கத்தை மேற்கொண்டு தம் இளம் உயிரிகளுடன் பூர்வீக இடத்துக்கு திரும்பிச் செல்வதாக வேறு சில பறவையியல் அவதானிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

குடிபெயரும் பறவைகளின் இறப்பு அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 1.40 இலட்சம் முதல் 3.28 இலட்சம் பறவைகள் காற்று விசையாழிகள் மூலமாக உலகெங்கிலும் கொல்லப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதை விடவும் பெரிய ஆபத்து காற்றாலைகள் மற்றும் அதனுடன் இணைந்த மின்வழங்கல் முறைகளால் பறவைகளின் வாழ்விடங்களை மனிதன் அழித்து விடுவதாகும் என்கின்றனர் அமெரிக்க ஆய்வாளர்கள்.

அத்தோடு குடிபெயரும் பறவைகளை வேட்டையாடுதலும் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றது. அவற்றின் வாழிடங்களை அழித்தல் போன்ற நடவடிக்கைகளும் அதிகளவில் இடம்பெறுகின்றன. இவை குடிபெயரும் பறவைகளுக்கு பெரும் சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் மாறியுள்ளன.

குடிபெயரும் பறவைகளையும் அவற்றின் இருப்பிடங்களையும் பாதுகாப்பது தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்தான் 2006 முதல் மே 08 ஆம் திகதி உலக குடிபெயரும் பறவைகள் உலக தினமாகப் பிரகனப்படுத்தப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

ஆகவே குடிபெயரும் பறவைகளின் இருப்புக்கும் பாதுகாப்புக்கும் பங்களிப்பதன் அவசியம் உலகளாவிய ரீதியில் உணரப்பட்டிருப்பது தெளிவாகின்றது. அதனால் பறவைகளைப் பாதுகாப்பதில் ஒவ்வொருவரும் பங்கெடுத்து கொள்வது அவசியம்.

-தினகரன்
2021.05.08

 

https://chakkaram.com/2021/05/08/உலகில்-அழிவை-நோக்கி-செல்/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.