Jump to content

இலங்கை தமிழர்களுக்கானதா சீமானின் அரசியல்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kapithan said:

கிருபனிட்டயும் துல்பனிட்டயும் ஒருக்காச் சொல்லச் சொல்லுங்கோ இலங்கை புலம் பெயரிகளுக்கு சரியான வழிகாட்டலாக யாரைக் கை காட்டுவீர்கள் எண்டு. 

அதை ஒருக்கா சொல்லச் சொல்லுங்கோ பார்ப்போம்.

(துண்டைக் காணோம் துணியைக் காணோம் எண்டு ஓடிவிடுவினம்)

 

நம்ம சுமந்திரன் ஓகே இல்லையா? :cool:

உங்கை ஒருசில இடங்களிலை சம்சும் எண்டால் தேனருவியாய் ஓடுதெல்லோ. 😂

Link to comment
Share on other sites

  • Replies 72
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

கிருபனிட்டயும் துல்பனிட்டயும் ஒருக்காச் சொல்லச் சொல்லுங்கோ இலங்கை புலம் பெயரிகளுக்கு சரியான வழிகாட்டலாக யாரைக் கை காட்டுவீர்கள் எண்டு. 

அதை ஒருக்கா சொல்லச் சொல்லுங்கோ பார்ப்போம்.

(துண்டைக் காணோம் துணியைக் காணோம் எண்டு ஓடிவிடுவினம்)

 

புலம்பெயரிகளுக்கு வழிகாட்ட புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளர்ந்து பலதையும் கற்றுத் தெளிந்து அரசியலில் ஈடுபடும் இளைய தலைமுறையினர் ஒவ்வொரு நாடுகளிலும் இருக்கின்றார்கள். உள்ளூர் அரசியலை கவனமாகக் கையாள அவர்களே போதும். வீரத் தமிழர் முன்னணி போன்ற அமைப்புக்களுடன் சேர்ந்து அவர்கள் வேலை செய்யாமல் இருக்கும்வரை பாதகமில்லை.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வியாக எழுப்பப்படும் தலைப்பு தவறானது, சிந்தாந்த அடிப்படையில் கூட.

அரசியல் மக்களுக்கான சேவை.

ஆனால், சீமானின் அரசியலில் மிகப் பெரிய நேரடி விளைவுகள், ஈழத்தமிழருக்குக்கு அரசியல் இடத்தை விரிவாக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/5/2021 at 13:48, கிருபன் said:

தனிப்பட்ட அரசியல், கொள்கை நிலைப்பாடுகள் சார்ந்து, இந்தியாவை ஆளும் கட்சிகள் மீது ஆதரவு, எதிர்ப்பு மனநிலை இருக்கலாம். ஆனால், அதனை ஓர் இராஜதந்திக் கட்டத்தில் முன்னிறுத்தி செயற்பட முடியாது. மத்தியை நரேந்திர மோடி ஆண்டாலும், நாளை ராகுல் காந்தி ஆண்டாலும், அவர்களுடனான உறவைப் பேணியாக வேண்டும். அதுபோலவே, தமிழகத்திலும் ஆட்சியில் தி.மு.க இருந்தாலும் அ.தி.மு.க இருந்தாலும், அந்த உறவைப் பேணியாக வேண்டும்.  

அதே மஜில்ஸ் அண்ட் குஜால்ஸ்  ஏன் இலங்கையை கோத்தபாய ஆண்டாலும், மஹிந்த ஆண்டாலும் 
நாமல் ஆண்டாலும் தாயக தமிழர்கள் உறவை பேணியாகவேண்டும், சிங்களவர்களுடன் இரண்டறக்கலக்க வேண்டும் என்பதையும், இலங்கையை ஆளும் கட்சிகள் மீது ஆதரவு, எதிர்ப்பு மனநிலை இருக்கலாம் இதனை ஓர் இராஜதந்திக் கட்டத்தில் முன்னிறுத்தி செயற்பட முடியாது என்பதை வலியுறுத்தாது  , இனவாதத்தையும்,பிரிவினையையையும் (போராட்டம் வெடிக்கும், இரத்தத்திலகம்,P2P ஸ்டண்ட் பேரணி ) வைத்து அரசியல் செய்யும்  கூத்தமைப்பை ஆதரிக்கினம், எங்களுக்கு மஜில்ஸையும் தெரியும் மஜில்ஸ்ட குஜால்ஸ்களையும் தெரியும்,குஜால்ஸ்களோட ஹிப்போகிரிசியும் தெரியும்     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

புலம்பெயரிகளுக்கு வழிகாட்ட புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளர்ந்து பலதையும் கற்றுத் தெளிந்து அரசியலில் ஈடுபடும் இளைய தலைமுறையினர் ஒவ்வொரு நாடுகளிலும் இருக்கின்றார்கள். உள்ளூர் அரசியலை கவனமாகக் கையாள அவர்களே போதும். வீரத் தமிழர் முன்னணி போன்ற அமைப்புக்களுடன் சேர்ந்து அவர்கள் வேலை செய்யாமல் இருக்கும்வரை பாதகமில்லை.😎

"வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா, துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு" பதில்.

🤦🏼‍♂️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Kapithan said:

"வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா, துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு" பதில்.

🤦🏼‍♂️

 

புலம்பெயரிகள்தானே தாயகத்தில் போய் அரசியல் தலைமை தாங்கவேண்டும் என்று முன்னர் ஒருமுறை கூறியிருந்தீர்கள்.  இப்போது ஏன் வழி கேட்கின்றீர்கள்?😏

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Kapithan said:

"வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா, துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு" பதில்.

🤦🏼‍♂️

வாயால வடை சுடுபவர்களின் கொள்ளளவு இவ்வளவு தான்.

இளைஞர்கள் வருவார்கள் செய்வார்கள். வானத்தில் இருந்து என்று எழுத மறந்து விட்டார்.

அவர்களை அணுகணும் ஒன்றிணைக்கணும்  நிர்வாக நிதி ஆட்பலம் கொண்ட பலம் வாய்ந்த அமைப்பாக உருவாக்கணும். 

யார் செய்வது?

யார் செய்கிறார்கள்??

 

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

"வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா, துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு" பதில்.

🤦🏼‍♂️

 

நீங்கள் கேட்ட கேள்வி புலம் பெயரிகளுக்கான வழிகாட்டி யார் என்பது. புலம் பெயரிகளுக்கான அரசியல் வழிகாட்டியாக புலம் பெயர் நாடுகளில் கற்றுத் தேர்ந்த இளைய தலைமுறையினர் என்ற  கிருபனின் பதிலில் என்ன தவறு? 

உங்கள் கேள்வி தாயகத்தில் உள்ளோருக்கு என்று கேட்டால் அங்கும் ஏறத்தாள அதே பதில் தான்.  அங்கு இதுவரை பல தசாப்தங்களாக தலைமை வகித்தவர்கள் எவரும் சிறந்த வழிகாட்டிகளாக அமையவில்லை என்பதையே தமிழரின் தொடர்சசியான அரசியல் பின்னடைவுகளும் அதைத் தொடர்ந்த இறுதி பேரழிவும் அந்த பேரழிவை நிவர்ததி செய்யமுடியாமல் தவிதக்கும் தற்போதைய அரசியல்வாதிகளின் நிலையும்  தெளிவாக காட்டி நிற்கிறது. ஆகவே அங்கும் கல்வி கற்ற  புதிய இளைய தலைமுறையினரே பழைய தலைமுறையின் கற்பனாவாத அரசியலை நன்கு புரிந்து அதிலிருந்து மீண்டு தமது புதிய அரசியல் வழிமுறையுடன்   அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டிகளாக அமைய வேண்டும். 

எங்கோ அடுத்த நாட்டில் தமது சுயநல அரசியலுக்காக வார்ததைஜால(Populism) அரசியலை நடத்தும் அரசியல்வாதிகளை நம்புவது மேலும் பின்னடைவையே கொண்டுவரும்.  

Link to comment
Share on other sites

12 hours ago, zuma said:

சரியாக சொன்னீர்கள் நீங்கள். நாம் யாரையும் நம்பி நடக்க கூடாது. ஊரிலை சொல்லுவார்கள் நம்ப நட நம்பி நடவதே என்று. இந்தியா அரசியலே எமக்கு யாரும் எதிரிகள் அல்ல. அப்படி யாரும் ஒருசாரார் எதிரி என்று எமக்கு சொன்னால்,  சொல்லுகிறவன் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் பசு தோல் போர்த்திய ஓநாய்கள் ஆகும். 

நீங்கள் தான் இன்னும் சரியாய் சொல்லுகிறீர்கள் .

வைக்கோல் பட்டை ...மாதிரி அடிமைகளுடன் அவதானமாக இருக்கவேண்டும்   தானும் படுக்காது தள்ளியும் படுக்காது .சரியான சபை குழப்பியல் .

அதில் ஒரு ஆனந்தம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

வாயால வடை சுடுபவர்களின் கொள்ளளவு இவ்வளவு தான்.

இளைஞர்கள் வருவார்கள் செய்வார்கள். வானத்தில் இருந்து என்று எழுத மறந்து விட்டார்.

அவர்களை அணுகணும் ஒன்றிணைக்கணும்  நிர்வாக நிதி ஆட்பலம் கொண்ட பலம் வாய்ந்த அமைப்பாக உருவாக்கணும். 

யார் செய்வது?

யார் செய்கிறார்கள்??

 

நீங்கள்  backseat driver ஆக இருக்கவேண்டும் என்று  விரும்புவர் என்று தெரியும்.😁

மேய்ப்பன் இல்லாத மந்தைகளாக இருப்பதால் ஒரு மேய்ப்பன் வேண்டும் என்று கபிதான் கேட்கின்றார். ஆனால் ஒரு மேய்ப்பன் என்று சொல்ல யாரும் இல்லை என்பதுதான் நிலைமை..

இந்த நிலை மாறவேண்டுமென்றால், அது இளையோரிடம் இருந்துதான் வரவேண்டும். அப்படித்தான் முன்னைய வரலாறும் இருக்கின்றது. 

தாயகத்தில் உள்ளவர்கள் தமக்கான தலைமையை தாமே கண்டடைவார்கள். புலம்பெயரிகள் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தால் போதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

நீங்கள் கேட்ட கேள்வி புலம் பெயரிகளுக்கான வழிகாட்டி யார் என்பது. புலம் பெயரிகளுக்கான அரசியல் வழிகாட்டியாக புலம் பெயர் நாடுகளில் கற்றுத் தேர்ந்த இளைய தலைமுறையினர் என்ற  கிருபனின் பதிலில் என்ன தவறு? 

உங்கள் கேள்வி தாயகத்தில் உள்ளோருக்கு என்று கேட்டால் அங்கும் ஏறத்தாள அதே பதில் தான்.  அங்கு இதுவரை பல தசாப்தங்களாக தலைமை வகித்தவர்கள் எவரும் சிறந்த வழிகாட்டிகளாக அமையவில்லை என்பதையே தமிழரின் தொடர்சசியான அரசியல் பின்னடைவுகளும் அதைத் தொடர்ந்த இறுதி பேரழிவும் அந்த பேரழிவை நிவர்ததி செய்யமுடியாமல் தவிதக்கும் தற்போதைய அரசியல்வாதிகளின் நிலையும்  தெளிவாக காட்டி நிற்கிறது. ஆகவே அங்கும் கல்வி கற்ற  புதிய இளைய தலைமுறையினரே பழைய தலைமுறையின் கற்பனாவாத அரசியலை நன்கு புரிந்து அதிலிருந்து மீண்டு தமது புதிய அரசியல் வழிமுறையுடன்   அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டிகளாக அமைய வேண்டும். 

எங்கோ அடுத்த நாட்டில் தமது சுயநல அரசியலுக்காக வார்ததைஜால(Populism) அரசியலை நடத்தும் அரசியல்வாதிகளை நம்புவது மேலும் பின்னடைவையே கொண்டுவரும்.  

உண்மையில் உங்களுக்கு எனது கேள்வி புரியவில்லையா அல்லது 

நான்தான் குழம்புகிறேனா

🤯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

நீங்கள்  backseat driver ஆக இருக்கவேண்டும் என்று  விரும்புவர் என்று தெரியும்.😁

மேய்ப்பன் இல்லாத மந்தைகளாக இருப்பதால் ஒரு மேய்ப்பன் வேண்டும் என்று கபிதான் கேட்கின்றார். ஆனால் ஒரு மேய்ப்பன் என்று சொல்ல யாரும் இல்லை என்பதுதான் நிலைமை..

இந்த நிலை மாறவேண்டுமென்றால், அது இளையோரிடம் இருந்துதான் வரவேண்டும். அப்படித்தான் முன்னைய வரலாறும் இருக்கின்றது. 

தாயகத்தில் உள்ளவர்கள் தமக்கான தலைமையை தாமே கண்டடைவார்கள். புலம்பெயரிகள் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தால் போதும்.

ஒரு செயலை

அல்லது முயற்சியை இவ்வாறு தான் உங்கள் போன்றவர்களால் கேவலப்படுத்த முடியும் என்று தெரியும்.

ஆனால் நான் பலருக்கு நிஐமாகவே முன் சீற்றில் ரைவராக இருந்திருக்கின்றேன். அதில் இன்றும் பெருமை தான். 

அந்த பின் சீற்றில் நான் கொண்டு திரிந்து வளர்ந்த இளையவர்களில் சிலர் இன்று பிரான்சில் தமிழர் சார்பாக பேசும் வல்லமை பெற்று மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றனர். 

இனி அவர்களுக்கு அனுபவம் படிப்பு உணர்வு இருக்கிறது

பார்த்து கொள்வார்கள். 

Link to comment
Share on other sites

28 minutes ago, விசுகு said:

ஒரு செயலை

அல்லது முயற்சியை இவ்வாறு தான் உங்கள் போன்றவர்களால் கேவலப்படுத்த முடியும் என்று தெரியும்.

ஆனால் நான் பலருக்கு நிஐமாகவே முன் சீற்றில் ரைவராக இருந்திருக்கின்றேன். அதில் இன்றும் பெருமை தான். 

அந்த பின் சீற்றில் நான் கொண்டு திரிந்து வளர்ந்த இளையவர்களில் சிலர் இன்று பிரான்சில் தமிழர் சார்பாக பேசும் வல்லமை பெற்று மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றனர். 

இனி அவர்களுக்கு அனுபவம் படிப்பு உணர்வு இருக்கிறது

பார்த்து கொள்வார்கள். 

உங்களை யார் பிள்ளைகளை படிக்க வைத்து அவர்களுக்கு அறிவை ஊட்ட சொன்னது. நாங்கள் அவர்களை தெருவில் நின்று தறுதலையாக திரிய வேண்டும் என்று எவ்வளவு கஸ்ரப்படுகிறோம். நீங்கள் என்ன என்றால்  உங்களை எல்லாம் திருத்த முடியாது. இப்படியே போனால் நாங்கள் எப்படி பிழைப்பு நடத்துவது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

கிருபனிட்டயும் துல்பனிட்டயும் ஒருக்காச் சொல்லச் சொல்லுங்கோ இலங்கை புலம் பெயரிகளுக்கு சரியான வழிகாட்டலாக யாரைக் கை காட்டுவீர்கள் எண்டு. 

அதை ஒருக்கா சொல்லச் சொல்லுங்கோ பார்ப்போம்.

 

கபிதான் கைகாட்டியிருக்கு😁

👇🏾👇🏾

46 minutes ago, விசுகு said:

நான் பலருக்கு நிஐமாகவே முன் சீற்றில் ரைவராக இருந்திருக்கின்றேன். அதில் இன்றும் பெருமை தான். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கபிதான் கைகாட்டியிருக்கு😁

👇🏾👇🏾

இந்த கை காட்டுதல் மற்றும் முன் மொழிதல் 2009க்கு பின்னர் பல தடவைகள் வந்தன. ஆனால் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் இங்கும் யாழில் பல முறை எழுதிய தான் எனது பைல் உலகுக்கு இன்றுவரை அலர்சியாகவே உள்ளது. எனவே புது முகங்களில் புதிய வழிகளில் புதிய தலைமுறையின் வழி நடாத்துதலில் தான் நாம் பயணிக்கணும்.

இந்த முடிவுக்கு நான் வந்து 12 வருடமாகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

உண்மையில் உங்களுக்கு எனது கேள்வி புரியவில்லையா அல்லது 

நான்தான் குழம்புகிறேனா

🤯

நீங்கள் வேற. எங்களுக்கு கேள்வியெல்லாம் நல்லாத்தான் விளங்குது. ஆனால் பதில்தான் தெரியாதே. என்ன செய்யிறது. அதுதான் வெளிநாட்டிலை இளையதலைமுறை கொண்டுநடத்தும் எண்டு ஒரு புருடாவிடுறது. யார் யார் என்ன செய்யினம்? எப்படி செய்யினம்? என்றுகேட்டால் எஸ்கேப்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Eppothum Thamizhan said:

நீங்கள் வேற. எங்களுக்கு கேள்வியெல்லாம் நல்லாத்தான் விளங்குது. ஆனால் பதில்தான் தெரியாதே. என்ன செய்யிறது. அதுதான் வெளிநாட்டிலை இளையதலைமுறை கொண்டுநடத்தும் எண்டு ஒரு புருடாவிடுறது. யார் யார் என்ன செய்யினம்? எப்படி செய்யினம்? என்றுகேட்டால் எஸ்கேப்!!

இல்லாத ஒன்றை பிடித்து தொங்கினால் எல்லாத்துக்கும் வசதி 
சரி பிழையை பற்றி யாரும் பெரிதாக அலட்ட முடியாது 

அப்போதான்  இருக்கிறது எல்லா மீதும் 
எங்கள் வெறுப்பை கச்சிதமாக உமிழ்ந்துகொண்டு 
மாய ஜாலம் பேசிக்கொண்டு இருக்கலாம் 

இறங்கி ஒரு ரோட்டில் கிடக்கும் கல்லை என்றாலும் 
தூக்கி அருகில் போடுபவனுக்கே இன்னொருவனின் உழைப்பு
பற்றி புரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, tulpen said:

எங்கோ அடுத்த நாட்டில் தமது சுயநல அரசியலுக்காக வார்ததைஜால(Populism) அரசியலை நடத்தும் அரசியல்வாதிகளை நம்புவது மேலும் பின்னடைவையே கொண்டுவரும்.  

👍

வார்த்தை ஜாலங்களில் மயங்கி இருப்பவர்களுக்கு நல்லதொரு அறிவுரை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, tulpen said:

எங்கோ அடுத்த நாட்டில் தமது சுயநல அரசியலுக்காக வார்ததைஜால(Populism) அரசியலை நடத்தும் அரசியல்வாதிகளை நம்புவது மேலும் பின்னடைவையே கொண்டுவரும்.  

சரியாக சொன்னீர்கள். அப்பப்ப கட்டுமரம் கருணாநிதியை இழுத்து விடுகிறீர்கள்.

அவரது வாய் ஜாலத்தினை நம்பி, வெளியே வந்து, செல் தாக்குதலுக்கு இலக்காகி இறந்த மக்களை சொல்கிறீர்கள் போலும். ம்..ம்ம்ம்ம்ம் என்ன செய்யிறது.

அரசியல்.... என்ன பண்ணுறது...

22 minutes ago, விளங்க நினைப்பவன் said:

👍

வார்த்தை ஜாலங்களில் மயங்கி இருப்பவர்களுக்கு நல்லதொரு அறிவுரை.

 

Link to comment
Share on other sites

34 minutes ago, Nathamuni said:

சரியாக சொன்னீர்கள். அப்பப்ப கட்டுமரம் கருணாநிதியை இழுத்து விடுகிறீர்கள்.

அவரது வாய் ஜாலத்தினை நம்பி, வெளியே வந்து, செல் தாக்குதலுக்கு இலக்காகி இறந்த மக்களை சொல்கிறீர்கள் போலும். ம்..ம்ம்ம்ம்ம் என்ன செய்யிறது.

அரசியல்.... என்ன பண்ணுறது...

நான் கட்டுமரத்தையும் நம்ப சொல்லவில்லை. ஆமைக்குஞ்சையும்  நம்ப சொல்லவில்லை.

மகிந்தவை பதவிக்கு கொண்டுவர மறைமுகமாக உதவியதும்,  இணைத்தலைமை நாடுகளின் அழுத்தங்களை தொடர்சசியாக புறக்கணித்தது உலக வெறுப்புக்கு உள்ளானதும்,  ஐரோப்பிய யூனியன் பிரதிநிதியின் கிளிநொச்சி விஜயத்தின் போது அவரது  நேரடி வேண்டுகோளைக் கூட புறக்கணிதததும், அதன் மூலம்  ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத பட்டியலில் இடம் பெற்றதும் மாவிலறை மூடி ஶ்ரீலங்கா அரசுக்கு உலக அனுதாபம் வரசெய்ததும், இராணுவத்தளபதி மீது தாக்குதல் நடத்தி மறைமுக யுத்த பிரகடனம் செய்ததும்,   கருணாநிதி என்ற சாதாரண  தமிழ் நாட்டு அரசியல்வாதியின் வார்ததை ஜாலத்தை நம்பி என்று புலம் பெயரிகள் சிலர் மக்கள் காதில் பூ சுற்றலாம். ஆனால்  அதை நம்ப மக்கள் அறிவிலிகள் அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/5/2021 at 07:48, கிருபன் said:

அத்தோடு, ஒரு கட்டம் வரையில் தலைவர் பிரபாகரனைத் தன்னுடைய வளர்ச்சிக்காக முன்னிறுத்திய சீமான், இன்றைக்கு பிரபாகரனைத் தாண்டிய ஒருவராகத் தன்னை முன்னிறுத்த முனைகிறார்.   

புலம்பெயர் தமிழர்கள், முதலில் தங்களது ஆதரவையும் நிதிப்பங்களிப்பையும் எங்கு கொட்டுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் ஈழம் கிடைத்து விட்டது அதற்கான உலக நாடுகளின்    அங்கீகாரம் தான் தேவை என்ற நிலையில் இருந்த நாங்கள் இன்று....
நாம் தமிழர் கட்சி தான்    எங்களுக்கு எல்லாமே என்ற நிலையில் நிற்பது வேதனைக்குரியது
பணத்தை வீசினால்   விடுதலை கிடைக்கும் என நான் நம்பவில்லை
முடிவில் பூஜ்ஜியம் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

தமிழ் ஈழம் கிடைத்து விட்டது அதற்கான உலக நாடுகளின்    அங்கீகாரம் தான் தேவை என்ற நிலையில் இருந்த நாங்கள் இன்று....
நாம் தமிழர் கட்சி தான்    எங்களுக்கு எல்லாமே என்ற நிலையில் நிற்பது வேதனைக்குரியது
பணத்தை வீசினால்   விடுதலை கிடைக்கும் என நான் நம்பவில்லை

என்னைப்பொறுத்தவரை நான் என்றுமே அப்படி நினைத்தில்லை. என்னைப்போன்றவர்கள் சீமானுக்கு ஆதரவு என்றவுடன் ஏதோ தனிநாடு தனித்தமிழீழம் என்று நினைத்து   மற்றவர்கள் தேவையில்லாத மீம்ஸ்களோடு அநாவசியமான தனிமனித தாக்குதல்களிலும் ஈடுபடுகின்றார்கள்.

சென்ற தேர்தலில் கூட சீமானின் வளர்ச்சியை எதிர்பார்த்தோம். சீமான் முதலமைச்சர் பதவியை அல்ல.

ஈழத்தமிழருக்காக குரல் கொடுப்பவர்களுக்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டியது எமது கடமை. அவர்கள் தவறு விடும் போது சுட்டிக்காட்டுவதும் எமது கடமை. மாறாக எமக்கு ஆதரவு தருபவர்களை இழிவு படுத்துவது நமக்கு அழகல்ல.

எமக்கு தேவை ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரல். அது எங்கு கிடைக்கின்றதோ அங்கே எமது குரலும் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/5/2021 at 21:50, zuma said:

சீமானை குறித்து, புலம்பெயந்தவர்களை விட தாயாக மக்களும், அரசியல்வாதிகளும், அரசியல்  விமர்சகர்களும், பத்திரிகையாளரும் தெளிவாக இருப்பது மன மகிழ்ச்யை கொடுக்கின்றது. 

ஆம் உண்மை ..சீமான் இந்தியன். ...தமிழ்நாடு இந்தியா. ...இந்தியா என்கின்ற. தமிழ்நாட்டை நம்ப முடியாது.இந்தியன்  என்கிற சீமான். இலங்கைத்தமிழருக்கான  அரசியலை செய்யவும் முடியாது  தற்போது. இலங்கைத்தமிழருக்கு நல்ல தலமையில்லை ...எதிர்காலத்தில் இலங்கைத்தமிழரிலிருந்து  நல்ல தலமை உருவாகும்..தலைவரின்  படத்தை கூட்டங்களில் வைத்த சீமான். இந்தியச்சட்டம் அனுமதிக்கவில்லையென்று  வைக்கமால்விட்டார் ...இவருக்கு  இந்தியச்சட்டம் முதலில் தெரியாதா?.  நான் படத்தைத்தொடர்த்தும் வைப்பேன்  நீங்கள் செய்வதைச்செய்யுங்கள் என்று சொல்லியிருந்தால்  ...இவரைத் தலைவராகப்பார்த்திருக்கமுடியும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, குமாரசாமி said:

என்னைப்பொறுத்தவரை நான் என்றுமே அப்படி நினைத்தில்லை.

ஈழத்தமிழருக்காக குரல் கொடுப்பவர்களுக்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டியது எமது கடமை. அவர்கள் தவறு விடும் போது சுட்டிக்காட்டுவதும் எமது கடமை. மாறாக எமக்கு ஆதரவு தருபவர்களை இழிவு படுத்துவது நமக்கு அழகல்ல.

 

இதைத் தான் நானும் சுட்டிக் காட்டுகின்றேன்
சீமான் அவர்கள் இப்போது செய்வது இந்தியத் தமிழர்களின்  ஈழத்து தமிழர்களின் ஆதரவு அலையைத் தன் பக்கம் இழுத்துக் கொள்வதே.
அப்படியான ஒரு அரசியலால் அவரால் எதையும் அடைந்து விட முடியாது.
ஈழத்து அடையாளங்களை அகற்றிவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றி அதன் பின்னர்
ஈழத்தவர்களுக்கு அவர் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யட்டும்

Link to comment
Share on other sites

http://www.nillanthan.com/wp-content/uploads/2021/05/181669999_4552120971481973_1764314736031570882_n.jpg
 

தமிழகத்தில் புதிய ஆட்சி வந்திருகிறது. அது தமிழக மக்களின் தீர்ப்பு. இதில் ஈழத்தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? ஒரே வரியில் சொன்னால் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை தமது நோக்கு நிலைகளில் இருந்து எப்படி வெற்றிகரமாக கையாளலாம் என்று சிந்திப்பதே பொருத்தமாயிருக்கும்.

தமிழகம் எனப்படுவது தட்டையான எகபரிமாணம் கொண்ட ஒரு மக்கள்தொகுதி அல்ல. அது பல பரிமாணங்களைக் கொண்ட பல அடுக்குகளைக் கொண்ட ஒரு கலவை.  முதலாவது அடுக்கு தமிழக அரசு. அது ஒரு மாநில அரசு. இந்திய மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும் அரைச் சமஸ்டி கட்டமைப்பு. கவனியுங்கள் அது ஒரு முழுச் சமஸ்டி கட்டமைப்பு அல்ல.

இரண்டாவது தமிழகத்தில் உள்ள கட்சிகள். மூன்றாவதாக தமிழகத்திலுள்ள ஈழ உணர்வாளர்கள் அல்லது செயற்பாட்டாளர்களர்கள்.நாலாவது அடுக்கு  தமிழகத்தில் உள்ள சாதாரண ஜனங்கள். ஐந்தாவதாக சிவில் சமூகங்களையும் ஊடகங்களையும் கூறலாம்.இந்த ஐந்து அடுக்குகளையும் ஒரே விதமாக அணுக முடியாது. ஒரே விதமாக கையாளவும் முடியாது.

முதலாவதாக மாநில அரசுக் கட்டமைப்பு.தமிழக அரசை அதன் வரையறைகளுக்குள் வைத்து விளங்கிக்கொள்ள வேண்டும். அது எதைச் செய்ய முடியுமோ அதைத்தான் எதிர்பார்க்கலாம்.ஒரு மாநில அரசாக அதற்கு இருக்கக்கூடிய வரையறைகளின் அடிப்படையில்தான் அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு எதையும் செய்யமுடியும்..

இரண்டாவது தமிழகத்தில் உள்ள கட்சிகள்.தமிழகத்திலுள்ள கட்சிகளில் ஈழத்தமிழர்களுக்கு நெருக்கமான கட்சிகளும் உண்டு. நெருக்கம் குறைந்த கட்சிகளும் உண்டு. எப்படியானாலும் இக்கட்சிகள் யாவும் அங்கேயுள்ள தேர்தல் அரசியலுக்கு உட்பட்டவை. எனவே ஈழத் தமிழர் விவகாரத்தையும் அவர்கள் தேர்தல் அரசியலுக்கு ஊடாகவே கையாள முயல்வார்கள். அதில் தேர்தல் நோக்குநிலையிலான நலன்கள் இருக்கும். அந்த நலன்களின் அடிப்படையில்தான் ஈழத் தமிழர் விவகாரம் கையாளப்படும். இதில் ஈழத் தமிழர்களுக்கு நெருக்கமான சில அரசியல்வாதிகள் உண்டு. அவர்கள் ஈழத்தமிழர்களுக்காக ஆபத்துக்களை சந்தித்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக ஈழத்தமிழர்கள் பொறுத்து மாறாத நிலைப்பாட்டோடு காணப்படுகிறார்கள்.அவர்களோடு ஈழத்தமிழர்கள் மானசீகமான உறவுகளை வைத்துக் கொள்ளலாம். ஆனால் கட்சி நலன் என்று வரும்பொழுது குறிப்பாக தேர்தல் அரசியல் என்று வரும் பொழுது அவர்கள் தமிழகத்தின் கள யதார்த்தத்துக்கு ஏற்பவே முடிவெடுப்பார்கள். அதில் ஈழத்தமிழர்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை.

மூன்றாவது தமிழகத்தில் உள்ள செயற்பாட்டாளர்கள். இவர்கள் தேர்தல் நோக்குநிலை அற்றவர்கள். கொள்கை ரீதியாக ஈழத் தமிழர்களோடு நெருங்கி வருவார்கள். இவர்களோடு கொள்கை அடிப்படையில் கூட்டு வைத்துக் கொள்ளலாம். அது ஒருவிதத்தில் மாறாத உறவாகவும் இருக்கும்.

நாலாவது சாதாரண தமிழக மக்கள். இதுதான் பெரிய தொகை. எல்லா கட்சிகளிலும் இவர்கள் உண்டு. ஈழத் தமிழர்கள் என்றால் அவர்கள் இன ரீதியாக கொதித்து எழுவார்கள். மொழிரீதியாக கொதித்து எழுவார்கள். அவர்களுடைய கட்சித் தலைவர்கள் அவர்களை தேர்தல் நோக்கு நிலைகளில் இருந்து வழிநடத்தக் கூடும். ஆனால் ஈழத்தமிழர்களுக்கும் சாதாரண தமிழக மக்களுக்கும் இடையிலான உறவு என்பது தூய்மையானது. அரசியல் நலன்கள் அற்றது.சுயநலம் அற்றது.அதிலுள்ள உண்மை மற்றும் உணர்வு ஒருமைப்பாடு  காரணமாகத்தான் தமிழகத்தில் இதுவரையிலும் 19 பேர் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்திருக்கிறார்கள்.

எனவே தமிழகத்தின் சாதாரண ஜனங்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையிலான உறவுகள் ஒப்பீட்டளவில் புனிதமானவை. அந்த உறவை ஈழத்தமிழர்கள் மதிக்க வேண்டும். ஆனால் இந்த சாதாரண தமிழக மக்கள்தான் ஈழத் தமிழர்களால் விரும்பப்படுகின்ற அல்லது வெறுக்கப்படுகின்ற தலைவர்களைத் தெரிந்தெடுக்கிறார்கள். எனவே தமிழகத்தின் தலைவர்களை குறித்து கருத்து கூறும் பொழுதும் தமிழக தலைவர்களை அணுகும் போதும் சாதாரண தமிழக மக்களின் உணர்வுகளை மதித்தே எதையும் செய்ய வேண்டும்.இதுவிடயத்தில் சாதாரண தமிழக மக்களை பகைநிலைக்கு தள்ளாத ஒரு நிதானப்போக்கை ஈழத்தமிழர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

ஐந்தாவது ஊடகங்களும் சிவில் அமைப்புக்களும்.கருத்துருவாக்கிகளும்.இங்கேயும் ஈழத்தமிழர்களுக்காக  நலன்சாராது விசுவாசமாக உழைப்பவர்கள் உண்டு.

மேற்கண்டவற்றின் அடிப்படையில் தொகுத்துச் சிந்தித்தால் ஈழத்தமிழ் நோக்கு நிலையில் இருந்து தமிழகத்தை எப்படி கையாள வேண்டும் என்ற ஒரு தெளிவான வழி வரைபடம் கிடைக்கும். துரதிஸ்டவசமாக ஈழத்தமிழர்களிடம் அவ்வாறான வழிவரைபடம் எதுவும் கிடையாது. ஆயுதப்போராட்ட காலத்தில் இருந்து இன்றுவரையிலும் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. தமிழகத்துக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையில் தொடர்பாடல் மையங்கள் என்று கருதத்தக்க அலுவலகங்கள் அல்லது தகவல் வழங்கும் நிலையங்கள் தமிழகத்தில் இல்லை. குறைந்தபட்சம் ஈழத்தமிழ் அகதிகளின் நலன்களைக் கவனிப்பதற்குக்கூட கட்சிகளிடம் பொருத்தமான கட்டமைப்புக்கள் இல்லை.தமிழக ஊடகங்களுக்கும் ஈழத்தமிழ் ஊடகங்களுக்கும் இடையில் ஒரு பொதுவான தொழில்சார் இடையூடாட்டக் கட்டமைப்பும் இல்லை.தமிழகத்திலுள்ள கருத்துருவாக்கிகளுக்கும் ஈழத்தமிழ் கருத்துருவாக்கிகளுக்கும் இடையிலும் ஒரு இடையூடாடட்டப் பரப்பு இல்லை.தமிழகத்து சிவில் அமைப்புகளுக்கும் ஈழுத்து சிவில்அமைப்புகளுக்கும் இடையிலும் பொதுவான ஒரு இடையூடாடட்டத் தளம் கிடையாது.

எனவே கடந்த பல தசாப்தங்களாக ஈழத் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் இடையூடாடக்கூடிய பொதுப்பரப்புகளை கட்டமைப்புகளை ஈழத்தமிழர்கள் உருவாகியிருக்கவில்லை. தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் ஆதரவு செயற்பாட்டாளர்களும் கட்சிகளும் கூட அதைச் செய்திருக்கவில்லை. குறிப்பாக ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின்னர் மோசமாக சேதமடைந்த நிலைமைகளை சீர்செய்யும் விதத்தில் தீர்க்கதரிசனம் மிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.உதாரணமாக,ராஜீவ் காந்தி கொல்லப்பட முன்பு ஈழத் தமிழர்களுக்கு மிக ஆதரவாக காணப்பட்ட தமிழகத்தின் இடதுசாரிச் சிந்தனையாளர்களில் ஒருவரான எஸ்.வி. ராஜதுரை போன்றவர்கள் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபின் ஈழத்தமிழர்களை நோக்கி  இன்றுவரையிலும் முன்னரளவுக்கு நெருங்கிவரவில்லை என்பதை இங்கே சுட்டிக்காட்டவேண்டும்.

இவ்வாறான பாரதூரமான ஒரு வெற்றிடத்தில் தமிழகத் தலைவர்கள் ஈழத் தமிழர்களுக்காகத் தியாகம் செய்ய வேண்டும் என்று ஒரு பகுதி ஈழத்தமிழர்கள் எதிர்பார்கிறார்கள்.தமிழகத் தலைவர்கள் மட்டுமல்ல தென்னிலங்கையில் இருக்கும் கட்சித் தலைவர்கள் செயற்பாட்டாளர்கள் பொறுத்தும் ஒருபகுதி ஈழத்தமிழர்களின் நோக்குநிலை அணுகுமுறை அவ்வாறுதான் இருக்கிறது.உலகிலுள்ள எல்லாருமே எங்களை நேசிக்க வேண்டும் எங்களுக்காகத் தியாகம் செய்யவேண்டும் என்று ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் விரும்புகிறார்கள். ஆனால் அது ஒரு அப்பாவித்தனமான விருப்பம். ஏனெனில் தாயகத்துக்கு வெளியே இருப்பவர்களும் ஈழத்தமிழர்கள் அல்லாத வெளி இனத்தவர்களும் அவரவருக்கேயான அரசியல் சூழ்நிலைகளில் கைதிகளே.அவரவர் தங்களுடைய நிலைமைகளுக்குள்ளிருந்துதான் ஈழத்தமிழர்களுக்காக எதையும் செய்யமுடியும்.

உதாரணமாக மனோகணேசன். அவர் ஒரு தென்னிலங்கை மைய அரசியல்வாதி.அவர் ஒரு தமிழ்த் தேசியவாதியாக இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை. அவர் இனவாதத்துக்கு எதிரான ஒரு தமிழ் அரசியல்வாதியாக இருந்தாலே போதும்.அதுவே ஈழத்தமிழர்களுக்கு ஒரு பலம்.

அடுத்த உதாரணம் சிங்கள திரைக்கலைஞர்கள் மற்றும் மனித உரிமைவாதிகள். இவர்கள் இனவாதத்துக்கு எதிராக நிலைப்பாடு எடுத்தாலே போதும். அவர்கள் தமிழ்தேசியவாதிகளாக இருக்கவேண்டும் என்று எப்படி எதிர்பார்ப்பது?

இது தமிழகத்திற்கும் பொருந்தும். ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் தமிழகம் ஈழத் தமிழர்களுக்கு ஒரு பின்தளமாக இருந்தது.இது வரையிலும் 19பேர் தமிழகத்தில் தீக்குளித்திருக்கிறார்கள்.இவைகாரணமாக ஈழத்தமிழர்கள் இந்தியாவை தாயகம் என்று அழைத்துக் கொண்டு அளவுக்குமிஞ்சி நம்பிக்கைகளை முதலீடு செய்கிறார்கள் ; அளவுக்கு மிஞ்சி தமிழகத்தலைவர்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.இது ஒருவகையில் வெளியாருக்காக காத்திருக்கும் அரசியலில் ஒரு கிளைதான். வெளியாருக்காகக் காத்திருப்பது என்பதே தன் பலமிழந்து வெளிநோக்கி காத்திருப்பதுதான். அது அடிப்படையிலேயே பலவீனமான அரசியல். அந்த பலவீனம்தான் மற்றவர்கள் எல்லாரும் தங்களுக்காக தியாகம் செய்ய வேண்டும் என்று அளவுக்கு மிஞ்சி எதிர்பார்ப்பதும் ஆகும்.

ஆனால் அரசியல்உறவுகள் அவ்வாறு உண்மையானவை அல்ல. நலன்சாரா உறவுகளும் அல்ல. அவை முழுக்கமுழுக்க நலன்சார் உறவுகளே. இதைப் புத்திபூர்வமாக விளங்கிக் கொண்டால் ஈழத்தமிழர்கள் தமிழகத் தலைவர்களிடம் அளவுக்குமிஞ்சி எதிர்பார்க்க மாட்டார்கள். அவ்வாறு எதிர்பார்த்து அதில் ஏமாற்றம் அடையும்போது அளவுக்குமிஞ்சி வெறுக்கவும் மாட்டார்கள். கடந்த 12 ஆண்டுகளாக சமூக வலைத்தளங்களில் நிகழும் உரையாடல்களை தொகுத்துப் பார்க்கும் எவருக்கும் இது தெளிவாகத் தெரியும்.சமூகவலைத்தளங்கள் இது விடயத்தில் முழுத் தமிழர்களையும் பிரதிபலிக்கவில்லை என்பதனை இக்கட்டுரை ஏற்றுக் கொள்கிறது. எனினும் ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினரின் எதிர்பார்ப்பு அது என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.

இவ்வாறான ஒரு பின்னணியில் இப்போது தமிழகத்தில் ஒரு புதிய அரசாங்கம் வந்திருக்கிறது.அந்த அரசாங்கத்தை எப்படி நெருங்க வேண்டும்? எந்த அடிப்படையில் நெருங்க வேண்டும்?யாருக்கூடாக நெருங்க வேண்டும்?யாரை வைத்து யாரை கையாளவேண்டும்?  போன்ற எல்லா உபாயங்களை முதலில் ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் முதலில் ஈழத்தமிழர்கள் இதுதொடர்பில் ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வரவேண்டும். தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் தங்களுக்கிடையே ஐக்கியப்பட்டு ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அது ஒரு விதத்தில் எனது கட்டுரைகளில் நான் திரும்பத் திரும்பக் கூறுவது போல ஈழத்தமிழர்களுக்கான வெளியுறவு கட்டமைப்புத்தான்.  அந்த வெளியுறவு கொள்கையின் ஒரு பகுதியாக தமிழகத்தை எவ்வாறு கையாள்வது என்பதற்கும் ஒரு வழி வரைபடம் தெளிவாக உருவாக்கப்பட வேண்டும்.

தமிழகத்தின் புதிய அரசாங்கத்தில் ஈழத் தமிழர்களோடு தொடர்ச்சியாக நெருக்கமாக நிற்கும் வைகோவிற்கு நான்கு ஆசனங்கள் உண்டு. மற்றொருவர் திருமாவளவன்.அவருடைய கட்சிக்கும் 4 ஆசனங்கள் உண்டு. இது தவிர திமுகவிற்குள்ளும் மருத்துவர் எழிலனைப் போல பலர் ஈழத்தமிழர்களோடு நெருக்கமான மானசீகமான உறவை கொண்டிருக்கிறார்கள். பாரதிய ஜனதாவுக்குள்ளும் வானதி சிறினிவாசன் புலம்பெயந்த தமிழர்களோடு நெருக்கமாயுள்ளார்.அவர்களைப்போல மேலும் புதிய ஆளுமைகளை எப்படி சம்பாதிக்கலாம் என்று ஈழத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

இடதுசாரி மரபில் வந்த ஒரு தமிழக நண்பர் அடிக்கடி கூறுவார் தமிழகத்தில் ஈழத்தமிழ் ஆதரவு என்பது ஒரு உள்ளுறையும் சக்தி. அதை ஒரு தூலமான சக்தியாக மாஸ் போர்ஸ் ஆக மாற்ற வேண்டும் என்று. ஆம்.அதை ஈழத்தமிழர்களின் ஒத்துழைப்போடு தமிழக தலைவர்களும் செயற்பாட்டாளர்களும்தான் செய்ய முடியும்.அதை ஈழத்தமிழர்கள் நேரடியாக செய்ய முடியாது.

http://www.nillanthan.com/4980/?fbclid=IwAR0wd7CnmQFY2qhsfPLJS3XDI-4DKW-ZmoEfDVTYQjqNCnpRrqjA1sghbYo

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • ஐந்து...  பன்னீர்செல்வம். 😂 ராமன்... எத்தனை ராமனடி.... 🤣
    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.