Jump to content

இலங்கை தமிழர்களுக்கானதா சீமானின் அரசியல்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வாத்தியார் said:

இதைத் தான் நானும் சுட்டிக் காட்டுகின்றேன்
சீமான் அவர்கள் இப்போது செய்வது இந்தியத் தமிழர்களின்  ஈழத்து தமிழர்களின் ஆதரவு அலையைத் தன் பக்கம் இழுத்துக் கொள்வதே.
அப்படியான ஒரு அரசியலால் அவரால் எதையும் அடைந்து விட முடியாது.
ஈழத்து அடையாளங்களை அகற்றிவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றி அதன் பின்னர்
ஈழத்தவர்களுக்கு அவர் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யட்டும்

ஈழத்து அடையாளங்களுடன் அரசியல் உச்சத்துக்கு வந்தவர் விஜயகாந்த்.  இதையும் நீங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.

விஜயகாந்த் விட்ட சிறிய தவறுதான் அவரது அரசியல் வீழ்ச்சிக்கு காரணம்.

தமிழ் தமிழன் என்ற உணர்வு தமிழ்நாட்டு மக்களிடம் ஈழத்தமிழனை விட  அங்கு அதிகமாகவே இருக்கின்றது. ஆயினும் எம்மை போல்  அரசியல் பாதை அவர்களிடமும் ஒழுங்கானதாக இல்லை.

Link to comment
Share on other sites

  • Replies 72
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

நான் கட்டுமரத்தையும் நம்ப சொல்லவில்லை. ஆமைக்குஞ்சையும்  நம்ப சொல்லவில்லை.

மகிந்தவை பதவிக்கு கொண்டுவர மறைமுகமாக உதவியதும், இணைத்தலைமை நாடுகளின் அழுத்தங்களை தொடர்சசியாக புறக்கணித்தது உலக வெறுப்புக்கு உள்ளானதும்,  ஐரோப்பிய யூனியன் பிரதிநிதியின் கிளிநொச்சி விஜயத்தின் போது அவரது  நேரடி வேண்டுகோளைக் கூட புறக்கணிதததும், அதன் மூலம்  ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத பட்டியலில் இடம் பெற்றதும் மாவிலறை மூடி ஶ்ரீலங்கா அரசுக்கு உலக அனுதாபம் வரசெய்ததும், இராணுவத்தளபதி மீது தாக்குதல் நடத்தி மறைமுக யுத்த பிரகடனம் செய்ததும்,   கருணாநிதி என்ற சாதாரண  தமிழ் நாட்டு அரசியல்வாதியின் வார்ததை ஜாலத்தை நம்பி என்று புலம் பெயரிகள் சிலர் மக்கள் காதில் பூ சுற்றலாம். ஆனால்  அதை நம்ப மக்கள் அறிவிலிகள் அல்ல. 

 

மகிந்தவை பதவிக்கு கொண்டுவர மறைமுகமாக உதவியதும்

ரணில் யுத்தம் தொடங்கி இருந்தால் நீங்கள் போய் மடுவில் நின்று ஆமியை மறித்து இருப்பீர்களோ?
ஸ்ரீ லங்கா இராணுவம் எப்போது என்ன என்ன ஆயுதம் வாங்கியது ஏன் என்று ஏதாவது அறிவுரீதியான தகவல் தெரியுமா? 

 இணைத்தலைமை நாடுகளின் அழுத்தங்களை தொடர்சசியாக புறக்கணித்தது உலக வெறுப்புக்கு உள்ளானதும்,  

ஜி 8 நாடுகள் 2000 ஆண்டில் என்ன என்ன திட்டம் நிகழ்ச்சி நிரல் தீட்டினார்கள் என்று தேடி சென்று படித்து பாருங்கள் முதலில். அதுக்கப்புறம் எதை புலிகள் புறக்கணித்தார்கள் என்று கொஞ்சம் வில்லா வாரியாக பேசுவோம். 

ஐரோப்பிய யூனியன் பிரதிநிதியின் கிளிநொச்சி விஜயத்தின் போது அவரது  நேரடி வேண்டுகோளைக் கூட புறக்கணிதததும்,

என்ன வேண்டுகோள்?

அவர்கள் மீது பூனகேரியில் நிற்கும்போது மண்டைதீவில் இருந்து செல் அடித்ததாவது தெரியுமா?
அவ்வளவு யுத்தநிறுத்த மீறலை இவர்களுக்கு தெரியாமல் சிங்கள இராணுவம் செய்தது என்பதையம் நம்பியாக வேண்டும் 

அதன் மூலம்  ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத பட்டியலில் இடம் பெற்றதும்

ஐரோப்பிய யூனியன் பயங்கரவாத பட்டியலுக்கு ஐரோப்பிய யூனியன் சொன்ன காரணமாவது தெரியுமா?
ஒவொரு சுற்று பேச்சுக்கும் வந்த சொல்கெய்ம் ஏன் டில்லி சென்று திரும்பினார் என்றாவது தெரியுமா? 

மாவிலறை மூடி ஶ்ரீலங்கா அரசுக்கு உலக அனுதாபம் வரசெய்ததும்,

மாவிலாறு ஏன் மூடினார்கள் என்று எங்கேனும் வாசித்து உண்டா?
மாவிலாறு மூட முன்பு எத்தனை புலிகள் இராணுவத்தால் சுட்டு கொல்லபட்டார்கள் 
ஆயுதங்கள் அற்று அரசியல் வேலைக்கு இருந்த புலிகளுக்கு என்ன நடந்து என்றாவது தெரியுமா? 

இராணுவத்தளபதி மீது தாக்குதல் நடத்தி மறைமுக யுத்த பிரகடனம் செய்ததும்,  

எந்த இராணுவ தளபதி எப்போது?
புலிகளின்குரல் வானொலி மீது தாக்குதல் நடந்த திகதி தெரியுமா? 

கருணாநிதி என்ற சாதாரண  தமிழ் நாட்டு அரசியல்வாதியின் வார்ததை ஜாலத்தை நம்பி என்று புலம் பெயரிகள் சிலர் மக்கள் காதில் பூ சுற்றலாம். ஆனால்  அதை நம்ப மக்கள் அறிவிலிகள் அல்ல. 

இதெல்லாம் உங்கள் புலிவாந்தி மூளைக்கு தெரிய வாய்ப்பில்லை 

ரூவாண்டாவில் டுட்ஸி போராளிகளிடம் ஆயுதம் வாங்கிவிட்டு 
நேரடி கண்காணிப்பில் யு என் இராணுவம் நேரடியாக இருக்கும்போது 

யூ என் இராணுவத்தின் கண்ணுக்கு முன்னேயே வைத்து டுட்ஸி இன மக்கள் 
3 லட்ஷத்துக்கு மேல் வெட்டி கொன்றார்கள் .....வெட்ட போகிறார்கள் என்பது தெரிந்ததும் 
முதல் நாள் யூ என் ஆமி பாதுகாப்பாக வெளியேறவே அவகாசம் கேட்டது 

இதுக்கு உங்கள் இணைத்தலைமை இறைவர்கள் என்ன புடுங்கினார்கள்?  
இந்த அண்டமே அதிர்ந்த மனித படுகொலையை ,, உங்கள் இணைத்தலைமை இறைவர்கள் 
எவ்வாறு திட்டம் வகுத்து நிறைவேற்றினார்கள் என்று முதலில் தேடி வாசித்து 
கொஞ்சமாவது உலகம் பூராக சிறுபான்மை இன மனிதர்கள் அல்ல ....
சிறுபான்மை இன ஆடு மாடு கோழி போன்றவையே அழிக்கப்படுகிறது ஏன் என்று வாசித்து அறியுங்கள்.

பின்பு புலிவாந்தி பற்றி ஆராய்வோம் 

அதை நம்ப மக்கள் அறிவிலிகள் அல்ல. 

உங்கள் வீட்டு கதவுக்கு உள்ளே இருப்பவர்கள் உங்கள் மக்கள் 
நாட்டு மக்கள் எனப்படுபவர் உங்கள் வீட்டு கதவை திறந்து வெளியே வந்தால் இருப்பவர்கள் 
அவர்களில் எல்லோருக்கும் இந்த கொடிய உலகம் என்ன செய்தது என்று தெரியும் .... ஓரளவுக்கு இனி என்ன செய்யும் என்பதும் தெரியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

 

மகிந்தவை பதவிக்கு கொண்டுவர மறைமுகமாக உதவியதும்

ரணில் யுத்தம் தொடங்கி இருந்தால் நீங்கள் போய் மடுவில் நின்று ஆமியை மறித்து இருப்பீர்களோ?
ஸ்ரீ லங்கா இராணுவம் எப்போது என்ன என்ன ஆயுதம் வாங்கியது ஏன் என்று ஏதாவது அறிவுரீதியான தகவல் தெரியுமா? 

 இணைத்தலைமை நாடுகளின் அழுத்தங்களை தொடர்சசியாக புறக்கணித்தது உலக வெறுப்புக்கு உள்ளானதும்,  

ஜி 8 நாடுகள் 2000 ஆண்டில் என்ன என்ன திட்டம் நிகழ்ச்சி நிரல் தீட்டினார்கள் என்று தேடி சென்று படித்து பாருங்கள் முதலில். அதுக்கப்புறம் எதை புலிகள் புறக்கணித்தார்கள் என்று கொஞ்சம் வில்லா வாரியாக பேசுவோம். 

ஐரோப்பிய யூனியன் பிரதிநிதியின் கிளிநொச்சி விஜயத்தின் போது அவரது  நேரடி வேண்டுகோளைக் கூட புறக்கணிதததும்,

என்ன வேண்டுகோள்?

அவர்கள் மீது பூனகேரியில் நிற்கும்போது மண்டைதீவில் இருந்து செல் அடித்ததாவது தெரியுமா?
அவ்வளவு யுத்தநிறுத்த மீறலை இவர்களுக்கு தெரியாமல் சிங்கள இராணுவம் செய்தது என்பதையம் நம்பியாக வேண்டும் 

அதன் மூலம்  ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத பட்டியலில் இடம் பெற்றதும்

ஐரோப்பிய யூனியன் பயங்கரவாத பட்டியலுக்கு ஐரோப்பிய யூனியன் சொன்ன காரணமாவது தெரியுமா?
ஒவொரு சுற்று பேச்சுக்கும் வந்த சொல்கெய்ம் ஏன் டில்லி சென்று திரும்பினார் என்றாவது தெரியுமா? 

மாவிலறை மூடி ஶ்ரீலங்கா அரசுக்கு உலக அனுதாபம் வரசெய்ததும்,

மாவிலாறு ஏன் மூடினார்கள் என்று எங்கேனும் வாசித்து உண்டா?
மாவிலாறு மூட முன்பு எத்தனை புலிகள் இராணுவத்தால் சுட்டு கொல்லபட்டார்கள் 
ஆயுதங்கள் அற்று அரசியல் வேலைக்கு இருந்த புலிகளுக்கு என்ன நடந்து என்றாவது தெரியுமா? 

இராணுவத்தளபதி மீது தாக்குதல் நடத்தி மறைமுக யுத்த பிரகடனம் செய்ததும்,  

எந்த இராணுவ தளபதி எப்போது?
புலிகளின்குரல் வானொலி மீது தாக்குதல் நடந்த திகதி தெரியுமா? 

கருணாநிதி என்ற சாதாரண  தமிழ் நாட்டு அரசியல்வாதியின் வார்ததை ஜாலத்தை நம்பி என்று புலம் பெயரிகள் சிலர் மக்கள் காதில் பூ சுற்றலாம். ஆனால்  அதை நம்ப மக்கள் அறிவிலிகள் அல்ல. 

இதெல்லாம் உங்கள் புலிவாந்தி மூளைக்கு தெரிய வாய்ப்பில்லை 

ரூவாண்டாவில் டுட்ஸி போராளிகளிடம் ஆயுதம் வாங்கிவிட்டு 
நேரடி கண்காணிப்பில் யு என் இராணுவம் நேரடியாக இருக்கும்போது 

யூ என் இராணுவத்தின் கண்ணுக்கு முன்னேயே வைத்து டுட்ஸி இன மக்கள் 
3 லட்ஷத்துக்கு மேல் வெட்டி கொன்றார்கள் .....வெட்ட போகிறார்கள் என்பது தெரிந்ததும் 
முதல் நாள் யூ என் ஆமி பாதுகாப்பாக வெளியேறவே அவகாசம் கேட்டது 

இதுக்கு உங்கள் இணைத்தலைமை இறைவர்கள் என்ன புடுங்கினார்கள்?  
இந்த அண்டமே அதிர்ந்த மனித படுகொலையை ,, உங்கள் இணைத்தலைமை இறைவர்கள் 
எவ்வாறு திட்டம் வகுத்து நிறைவேற்றினார்கள் என்று முதலில் தேடி வாசித்து 
கொஞ்சமாவது உலகம் பூராக சிறுபான்மை இன மனிதர்கள் அல்ல ....
சிறுபான்மை இன ஆடு மாடு கோழி போன்றவையே அழிக்கப்படுகிறது ஏன் என்று வாசித்து அறியுங்கள்.

பின்பு புலிவாந்தி பற்றி ஆராய்வோம் 

அதை நம்ப மக்கள் அறிவிலிகள் அல்ல. 

உங்கள் வீட்டு கதவுக்கு உள்ளே இருப்பவர்கள் உங்கள் மக்கள் 
நாட்டு மக்கள் எனப்படுபவர் உங்கள் வீட்டு கதவை திறந்து வெளியே வந்தால் இருப்பவர்கள் 
அவர்களில் எல்லோருக்கும் இந்த கொடிய உலகம் என்ன செய்தது என்று தெரியும் .... ஓரளவுக்கு இனி என்ன செய்யும் என்பதும் தெரியும் 

விடுதலைப் போராட்டத்தை அழிக்க முடிவெடுத்த பின்னர் எல்லாப் பிழைகளுமே தமிழர் தரப்பின் பிழைகளாகத்தான் நோக்கப்படும். 

இது மனச்சாட்சியுள்ள எவருக்குமே தெரியும். 

இதில் அதிகம் விவாதிக்க ஒன்றுமேயில்லை. 

ஆச்சரியம் என்னவென்றால் சிங்களவன் சமஸ்ரி கேட்கும்போது எங்களுக்கு அது வேண்டாமென்று கூறிய தமிழ் அறிவுக் கொழுந்துகள்தான் போராட்டத்தையும் பிழை என்று கூறுவதுதான். 

🤦🏼‍♂️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

 

மகிந்தவை பதவிக்கு கொண்டுவர மறைமுகமாக உதவியதும்

ரணில் யுத்தம் தொடங்கி இருந்தால் நீங்கள் போய் மடுவில் நின்று ஆமியை மறித்து இருப்பீர்களோ?
ஸ்ரீ லங்கா இராணுவம் எப்போது என்ன என்ன ஆயுதம் வாங்கியது ஏன் என்று ஏதாவது அறிவுரீதியான தகவல் தெரியுமா? 

 இணைத்தலைமை நாடுகளின் அழுத்தங்களை தொடர்சசியாக புறக்கணித்தது உலக வெறுப்புக்கு உள்ளானதும்,  

ஜி 8 நாடுகள் 2000 ஆண்டில் என்ன என்ன திட்டம் நிகழ்ச்சி நிரல் தீட்டினார்கள் என்று தேடி சென்று படித்து பாருங்கள் முதலில். அதுக்கப்புறம் எதை புலிகள் புறக்கணித்தார்கள் என்று கொஞ்சம் வில்லா வாரியாக பேசுவோம். 

ஐரோப்பிய யூனியன் பிரதிநிதியின் கிளிநொச்சி விஜயத்தின் போது அவரது  நேரடி வேண்டுகோளைக் கூட புறக்கணிதததும்,

என்ன வேண்டுகோள்?

அவர்கள் மீது பூனகேரியில் நிற்கும்போது மண்டைதீவில் இருந்து செல் அடித்ததாவது தெரியுமா?
அவ்வளவு யுத்தநிறுத்த மீறலை இவர்களுக்கு தெரியாமல் சிங்கள இராணுவம் செய்தது என்பதையம் நம்பியாக வேண்டும் 

அதன் மூலம்  ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத பட்டியலில் இடம் பெற்றதும்

ஐரோப்பிய யூனியன் பயங்கரவாத பட்டியலுக்கு ஐரோப்பிய யூனியன் சொன்ன காரணமாவது தெரியுமா?
ஒவொரு சுற்று பேச்சுக்கும் வந்த சொல்கெய்ம் ஏன் டில்லி சென்று திரும்பினார் என்றாவது தெரியுமா? 

மாவிலறை மூடி ஶ்ரீலங்கா அரசுக்கு உலக அனுதாபம் வரசெய்ததும்,

மாவிலாறு ஏன் மூடினார்கள் என்று எங்கேனும் வாசித்து உண்டா?
மாவிலாறு மூட முன்பு எத்தனை புலிகள் இராணுவத்தால் சுட்டு கொல்லபட்டார்கள் 
ஆயுதங்கள் அற்று அரசியல் வேலைக்கு இருந்த புலிகளுக்கு என்ன நடந்து என்றாவது தெரியுமா? 

இராணுவத்தளபதி மீது தாக்குதல் நடத்தி மறைமுக யுத்த பிரகடனம் செய்ததும்,  

எந்த இராணுவ தளபதி எப்போது?
புலிகளின்குரல் வானொலி மீது தாக்குதல் நடந்த திகதி தெரியுமா? 

கருணாநிதி என்ற சாதாரண  தமிழ் நாட்டு அரசியல்வாதியின் வார்ததை ஜாலத்தை நம்பி என்று புலம் பெயரிகள் சிலர் மக்கள் காதில் பூ சுற்றலாம். ஆனால்  அதை நம்ப மக்கள் அறிவிலிகள் அல்ல. 

இதெல்லாம் உங்கள் புலிவாந்தி மூளைக்கு தெரிய வாய்ப்பில்லை 

ரூவாண்டாவில் டுட்ஸி போராளிகளிடம் ஆயுதம் வாங்கிவிட்டு 
நேரடி கண்காணிப்பில் யு என் இராணுவம் நேரடியாக இருக்கும்போது 

யூ என் இராணுவத்தின் கண்ணுக்கு முன்னேயே வைத்து டுட்ஸி இன மக்கள் 
3 லட்ஷத்துக்கு மேல் வெட்டி கொன்றார்கள் .....வெட்ட போகிறார்கள் என்பது தெரிந்ததும் 
முதல் நாள் யூ என் ஆமி பாதுகாப்பாக வெளியேறவே அவகாசம் கேட்டது 

இதுக்கு உங்கள் இணைத்தலைமை இறைவர்கள் என்ன புடுங்கினார்கள்?  
இந்த அண்டமே அதிர்ந்த மனித படுகொலையை ,, உங்கள் இணைத்தலைமை இறைவர்கள் 
எவ்வாறு திட்டம் வகுத்து நிறைவேற்றினார்கள் என்று முதலில் தேடி வாசித்து 
கொஞ்சமாவது உலகம் பூராக சிறுபான்மை இன மனிதர்கள் அல்ல ....
சிறுபான்மை இன ஆடு மாடு கோழி போன்றவையே அழிக்கப்படுகிறது ஏன் என்று வாசித்து அறியுங்கள்.

பின்பு புலிவாந்தி பற்றி ஆராய்வோம் 

அதை நம்ப மக்கள் அறிவிலிகள் அல்ல. 

உங்கள் வீட்டு கதவுக்கு உள்ளே இருப்பவர்கள் உங்கள் மக்கள் 
நாட்டு மக்கள் எனப்படுபவர் உங்கள் வீட்டு கதவை திறந்து வெளியே வந்தால் இருப்பவர்கள் 
அவர்களில் எல்லோருக்கும் இந்த கொடிய உலகம் என்ன செய்தது என்று தெரியும் .... ஓரளவுக்கு இனி என்ன செய்யும் என்பதும் தெரியும் 

அவர் இப்படி தான் அவசரத்தில் இடைக்கிடையே கொண்டையை மறைக்க மறந்து ஆவேசமாக எழுதி விடுவார். 

பார்த்தால் தெரியும்

போராட்டத்தின் போது கொண்டையை இழுத்து மூடிக்கொண்டு பல சகாப்தங்களாக வெளி உலகமே தெரியாமல் இருந்தது.☹️

Link to comment
Share on other sites

8 hours ago, Maruthankerny said:

 

மகிந்தவை பதவிக்கு கொண்டுவர மறைமுகமாக உதவியதும்

ரணில் யுத்தம் தொடங்கி இருந்தால் நீங்கள் போய் மடுவில் நின்று ஆமியை மறித்து இருப்பீர்களோ?
ஸ்ரீ லங்கா இராணுவம் எப்போது என்ன என்ன ஆயுதம் வாங்கியது ஏன் என்று ஏதாவது அறிவுரீதியான தகவல் தெரியுமா? 

 இணைத்தலைமை நாடுகளின் அழுத்தங்களை தொடர்சசியாக புறக்கணித்தது உலக வெறுப்புக்கு உள்ளானதும்,  

ஜி 8 நாடுகள் 2000 ஆண்டில் என்ன என்ன திட்டம் நிகழ்ச்சி நிரல் தீட்டினார்கள் என்று தேடி சென்று படித்து பாருங்கள் முதலில். அதுக்கப்புறம் எதை புலிகள் புறக்கணித்தார்கள் என்று கொஞ்சம் வில்லா வாரியாக பேசுவோம். 

ஐரோப்பிய யூனியன் பிரதிநிதியின் கிளிநொச்சி விஜயத்தின் போது அவரது  நேரடி வேண்டுகோளைக் கூட புறக்கணிதததும்,

என்ன வேண்டுகோள்?

அவர்கள் மீது பூனகேரியில் நிற்கும்போது மண்டைதீவில் இருந்து செல் அடித்ததாவது தெரியுமா?
அவ்வளவு யுத்தநிறுத்த மீறலை இவர்களுக்கு தெரியாமல் சிங்கள இராணுவம் செய்தது என்பதையம் நம்பியாக வேண்டும் 

அதன் மூலம்  ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத பட்டியலில் இடம் பெற்றதும்

ஐரோப்பிய யூனியன் பயங்கரவாத பட்டியலுக்கு ஐரோப்பிய யூனியன் சொன்ன காரணமாவது தெரியுமா?
ஒவொரு சுற்று பேச்சுக்கும் வந்த சொல்கெய்ம் ஏன் டில்லி சென்று திரும்பினார் என்றாவது தெரியுமா? 

மாவிலறை மூடி ஶ்ரீலங்கா அரசுக்கு உலக அனுதாபம் வரசெய்ததும்,

மாவிலாறு ஏன் மூடினார்கள் என்று எங்கேனும் வாசித்து உண்டா?
மாவிலாறு மூட முன்பு எத்தனை புலிகள் இராணுவத்தால் சுட்டு கொல்லபட்டார்கள் 
ஆயுதங்கள் அற்று அரசியல் வேலைக்கு இருந்த புலிகளுக்கு என்ன நடந்து என்றாவது தெரியுமா? 

இராணுவத்தளபதி மீது தாக்குதல் நடத்தி மறைமுக யுத்த பிரகடனம் செய்ததும்,  

எந்த இராணுவ தளபதி எப்போது?
புலிகளின்குரல் வானொலி மீது தாக்குதல் நடந்த திகதி தெரியுமா? 

கருணாநிதி என்ற சாதாரண  தமிழ் நாட்டு அரசியல்வாதியின் வார்ததை ஜாலத்தை நம்பி என்று புலம் பெயரிகள் சிலர் மக்கள் காதில் பூ சுற்றலாம். ஆனால்  அதை நம்ப மக்கள் அறிவிலிகள் அல்ல. 

இதெல்லாம் உங்கள் புலிவாந்தி மூளைக்கு தெரிய வாய்ப்பில்லை 

ரூவாண்டாவில் டுட்ஸி போராளிகளிடம் ஆயுதம் வாங்கிவிட்டு 
நேரடி கண்காணிப்பில் யு என் இராணுவம் நேரடியாக இருக்கும்போது 

யூ என் இராணுவத்தின் கண்ணுக்கு முன்னேயே வைத்து டுட்ஸி இன மக்கள் 
3 லட்ஷத்துக்கு மேல் வெட்டி கொன்றார்கள் .....வெட்ட போகிறார்கள் என்பது தெரிந்ததும் 
முதல் நாள் யூ என் ஆமி பாதுகாப்பாக வெளியேறவே அவகாசம் கேட்டது 

இதுக்கு உங்கள் இணைத்தலைமை இறைவர்கள் என்ன புடுங்கினார்கள்?  
இந்த அண்டமே அதிர்ந்த மனித படுகொலையை ,, உங்கள் இணைத்தலைமை இறைவர்கள் 
எவ்வாறு திட்டம் வகுத்து நிறைவேற்றினார்கள் என்று முதலில் தேடி வாசித்து 
கொஞ்சமாவது உலகம் பூராக சிறுபான்மை இன மனிதர்கள் அல்ல ....
சிறுபான்மை இன ஆடு மாடு கோழி போன்றவையே அழிக்கப்படுகிறது ஏன் என்று வாசித்து அறியுங்கள்.

பின்பு புலிவாந்தி பற்றி ஆராய்வோம் 

அதை நம்ப மக்கள் அறிவிலிகள் அல்ல. 

உங்கள் வீட்டு கதவுக்கு உள்ளே இருப்பவர்கள் உங்கள் மக்கள் 
நாட்டு மக்கள் எனப்படுபவர் உங்கள் வீட்டு கதவை திறந்து வெளியே வந்தால் இருப்பவர்கள் 
அவர்களில் எல்லோருக்கும் இந்த கொடிய உலகம் என்ன செய்தது என்று தெரியும் .... ஓரளவுக்கு இனி என்ன செய்யும் என்பதும் தெரியும் 

நன்றி மருதங்கேணி கருத்து களத்தில் தாயகம் தொடர்பான கருத்துக்களில் உங்களுக்கு பிடிக்காத கருத்துகளை யாராவது வைத்தால் "புலிவாந்தி" என்ற ஒற்றை வார்த்தையை கேடயமாக பயன்படுத்தி அதை சமாளிக்கலாம் என்ற நிரந்தர கொள்கையுடையவர் நீங்கள் என்பதால் அது பற்றிய விவாத‍த்தை தவிர்ப்போம். 

நடைபெற்ற ஒவ்வொரு விடயத்திற்கும் ஏதோ எமக்குள் ஒரு சமாதானம் கூறி எமக்குள் திருப்தி அடையலாம். உங்கள் சொந்த திருப்திக்கு  நீங்கள் ஏதோ பதில்களை வழங்கி திருப்தி அடையலாம். ஆகவே அது முக்கியமானதல்ல. கடந்து செல்வோம். ஆனால் முக்கியமான  ஒரு விடயத்தில் நாம் இருவரும் ஒரே கருத்தையே கொண்டிருக்கிறோம். 

நாதமுனி என்னிடம் கேட்ட கேள்விக்கு நான் கொடுத்த பதிலுக்கு உங்கள் பதில் மூலம் வலுச்சேர்த்திருக்கின்றீர்கள். எமது தனிநாட்டு கோரிக்கையையும் அதை அடைய எமது நடவடிக்கைகளும் உலகின் சக்தி வாய்ந்த நாடுகளால் விரும்பப்படாத ஒன்றாக நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது என்பதையே நீங்களும் உங்கள் பதிலில் தெளிவாக கூறியுள்ளீர்கள். எனது இணைத்தலைமை நாடு என்று  எனக்கு  நீங்கள் கூறிய, ஆனால்  நீங்கள் குடியுரிமை பெற்று நீண்ட காலம் அமைதியாக வாழும் உங்கள் நாடு 1997 ல் புலிகளை வெளிநாட்டு பயங்கரவாதிகள் பட்டியிலில் இணைத்த‍தும் 2001 ல் பிரிட்டன் அதை செய்த‍தும் அந்த வகையினதே. சமாதான பேச்சுவார்த்தையில் புலிகள் தம்மை உதாசீனம் செய்த பின்னர் ஐரோப்பிய யூனியன் செய்த‍ததும் அதையே. 

ஒரு சிறிய இனமான நாம் விரும்பியோ விரும்பாமலோ உலக வல்லரசுகளை பகைத்து அவர்களை உதாசீனம் செய்து எமது அரசியல் இலக்குகளை அடைய முடியாது என்பதே எமக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். ஒரு நாட்டை அமைக்க முற்படும் நாம் விரும்பியோ விரும்பாலமோ உலக நாடுகளை அனுசரித்து தான் போகவேண்டும். அது தவறு என்றால் நாம் புறநானூற்று தமிழர்கள். யாருக்கும் அடிபணியோம்  என்று வீரம் பேசி எமது மிகுதி வாழ்வை கழிப்போம். ஏனென்றால் பாதிக்கப்படப்போவது நாமல்லவே. 

 நான் நாதமுனிக்கு எதை கூற  முற்பட்டேனோ அதையே   நீங்களும் உங்கள் பாணியில் கூறியுள்ளீர்கள். அதற்காக உங்களுக்கு நன்றி.

மருதங்கேணி,  எமக்கு அரசியலில் வேறுபட்ட கருத்திருக்கலாம் ஆனால் நட்புடன் இருப்போம். நன்றி.

 

Link to comment
Share on other sites

5 hours ago, Kapithan said:

விடுதலைப் போராட்டத்தை அழிக்க முடிவெடுத்த பின்னர் எல்லாப் பிழைகளுமே தமிழர் தரப்பின் பிழைகளாகத்தான் நோக்கப்படும். 

இது மனச்சாட்சியுள்ள எவருக்குமே தெரியும். 

இதில் அதிகம் விவாதிக்க ஒன்றுமேயில்லை. 

ஆச்சரியம் என்னவென்றால் சிங்களவன் சமஸ்ரி கேட்கும்போது எங்களுக்கு அது வேண்டாமென்று கூறிய தமிழ் அறிவுக் கொழுந்துகள்தான் போராட்டத்தையும் பிழை என்று கூறுவதுதான். 

🤦🏼‍♂️

 

சிங்களவன் சமஸ்டி தருகிறேன் என்று கூறியபோது வேண்டாம் என று சொன்ன அறிவு கோழுந்துகள் யாரும் 1977 இன் பின்னர் உயிருடன் இல்லை. நீங்கள் எந்த அறிவு கொழுந்தைக் கூறுகின்றீர்கள்?  பேரனையா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, tulpen said:

நன்றி மருதங்கேணி கருத்து களத்தில் தாயகம் தொடர்பான கருத்துக்களில் உங்களுக்கு பிடிக்காத கருத்துகளை யாராவது வைத்தால் "புலிவாந்தி" என்ற ஒற்றை வார்த்தையை கேடயமாக பயன்படுத்தி அதை சமாளிக்கலாம் என்ற நிரந்தர கொள்கையுடையவர் நீங்கள் என்பதால் அது பற்றிய விவாத‍த்தை தவிர்ப்போம். 

நடைபெற்ற ஒவ்வொரு விடயத்திற்கும் ஏதோ எமக்குள் ஒரு சமாதானம் கூறி எமக்குள் திருப்தி அடையலாம். உங்கள் சொந்த திருப்திக்கு  நீங்கள் ஏதோ பதில்களை வழங்கி திருப்தி அடையலாம். ஆகவே அது முக்கியமானதல்ல. கடந்து செல்வோம். ஆனால் முக்கியமான  ஒரு விடயத்தில் நாம் இருவரும் ஒரே கருத்தையே கொண்டிருக்கிறோம். 

நாதமுனி என்னிடம் கேட்ட கேள்விக்கு நான் கொடுத்த பதிலுக்கு உங்கள் பதில் மூலம் வலுச்சேர்த்திருக்கின்றீர்கள். எமது தனிநாட்டு கோரிக்கையையும் அதை அடைய எமது நடவடிக்கைகளும் உலகின் சக்தி வாய்ந்த நாடுகளால் விரும்பப்படாத ஒன்றாக நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது என்பதையே நீங்களும் உங்கள் பதிலில் தெளிவாக கூறியுள்ளீர்கள். எனது இணைத்தலைமை நாடு என்று  எனக்கு  நீங்கள் கூறிய, ஆனால்  நீங்கள் குடியுரிமை பெற்று நீண்ட காலம் அமைதியாக வாழும் உங்கள் நாடு 1997 ல் புலிகளை வெளிநாட்டு பயங்கரவாதிகள் பட்டியிலில் இணைத்த‍தும் 2001 ல் பிரிட்டன் அதை செய்த‍தும் அந்த வகையினதே. சமாதான பேச்சுவார்த்தையில் புலிகள் தம்மை உதாசீனம் செய்த பின்னர் ஐரோப்பிய யூனியன் செய்த‍ததும் அதையே. 

ஒரு சிறிய இனமான நாம் விரும்பியோ விரும்பாமலோ உலக வல்லரசுகளை பகைத்து அவர்களை உதாசீனம் செய்து எமது அரசியல் இலக்குகளை அடைய முடியாது என்பதே எமக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். ஒரு நாட்டை அமைக்க முற்படும் நாம் விரும்பியோ விரும்பாலமோ உலக நாடுகளை அனுசரித்து தான் போகவேண்டும். அது தவறு என்றால் நாம் புறநானூற்று தமிழர்கள். யாருக்கும் அடிபணியோம்  என்று வீரம் பேசி எமது மிகுதி வாழ்வை கழிப்போம். ஏனென்றால் பாதிக்கப்படப்போவது நாமல்லவே. 

 நான் நாதமுனிக்கு எதை கூற  முற்பட்டேனோ அதையே   நீங்களும் உங்கள் பாணியில் கூறியுள்ளீர்கள். அதற்காக உங்களுக்கு நன்றி.

மருதங்கேணி,  எமக்கு அரசியலில் வேறுபட்ட கருத்திருக்கலாம் ஆனால் நட்புடன் இருப்போம். நன்றி.

 

தங்கள் உயிரை கூட மண்ணுக்கும் மொழிக்கும் அர்ப்பணித்து போனவர்கள் பற்றி 
டிவிடியில் விடுதலை போராட்டம் பார்த்தவர்கள் யாராக இருந்தாலும் எழுதும்போது 
கொஞ்சம் யோசிக்கவேண்டும். உலகில் தமிழ் இனம் மட்டும் அல்ல 
பெரும்பாண்மை இனத்தால் ஆக்கிரமிக்க பட்டுள்ள எல்லா இனமுமே இன்று அழிவு 
பாதையில்தான் நிற்கிறது .....இதை எம் கண்னமுன்னேயே உலக வல்லாதிக்க நாடுகள் 
செய்துகொண்டு இருக்கின்றன 
மியன்மார் ... காஸ்மீர் ... குர்திஷ் ... பலஸ்தீனியர்கள் ... உகுருஸ் (சீன முஸ்லிம்கள்).... 
அமெரிக்க இந்தியர்கள் ... ஈழ தமிழர்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம் 

இவ்வாறான ஒரு இன அழிப்பு  அதாவது நாசிகளின் யூத அழிப்புப்போல இன்னொன்று இனி உலகில் 
நடக்க கூடாது என்ற ஒற்றை காரணத்துக்காகவே ஜெனீவா உடன்படிக்கை ஏற்படுத்தி உலக வல்லரசுகள் 
ஐ நா வை தோற்றுவித்தார்கள் இன்று இத்தனை இன அழிப்பும் இந்த ஐ நா அதிகாரிகளின் முன்னிலையில் 
அதில் அங்கத்தவர்களாக இருக்கும் நாடுகளின் ஆசிகளுடனும் அவர்களால் தயாரித்து விநியோகிக்கப்படும் 
ஆயுதங்களாலுமே வெற்றிகரமாக நடாத்தபடுகிறது. 

இதுக்கு எதிராக போராடிக்கொண்டு இருப்பவர்கள் போராடினாலும் அழிக்கப்படுவார்கள் 
போராடாமல் இருந்தாலும் அழிக்கப்படுவார்கள். சும்மா இருந்து அழிவதைவிட ஒரு சிறிய பலம் பெற்று 
போராடும்போது அழிவுக்கார்கள் எதிர்பாராத சில நகர்வுகளை செய்து தற்காலிக ஒரு தற்காப்பு நிலையை 
தோற்றுவிக்க முடியும் அதனால்தான் தங்கள் உயிர்கள் போனால்கூட பரவாயில்லை எமது சந்ததி வாழட்டும் 
என்று உலகம் பூராக போராடுகிறார்கள். 

புலிகளை பொறுத்தவரை புலிகளுக்கு எதிரான போரை அமெரிக்கா பிரிட்டன் இஸ்ரேல் பாகிஸ்தான் 
இந்தியா ரஸ்யா சீனா 1982 இல் இருந்தே செய்துகொண்டுதான் இருக்கிறாரார்கள். 1983 இனக்கலவரத்தின் பின்பு இலங்கை ஒரு இன அழிப்பு நாடு என்பது ஐ நா வில் பதியப்பட்டு இருக்கிறது அது இந்திராகாந்தி முன்மொழிந்து  ரஸ்யா ஆதரித்து நிறைவேறியது. அதன் பிரகாரம் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தில்  இலங்கை இன அழிப்பு பட்டியலில்தான் இருந்தது  ... 1997இல் புலிகளை பயங்கரவாத பட்டியலில்  அமெரிக்க போட்டத்தன் முதல் காரணமே அந்த லிஸ்ட்டில் இருந்து இலங்கை அரசை எடுப்பதற்குத்தான். அதன் பின்பு பாகிஸ்தான் ஊடாக இருந்த ஆயுத விநியோகத்தை நேரடியாக அமெரிக்க 
அரசே செய்ய தொடங்கியதோடு இராணுவ பயிற்சி வழங்கவும் தொடங்கியது. அன்றில் இருந்து அமேரிக்கா புலிகளுக்கு எதிரான  போரின் நேரடி பங்குதாராகவே இருந்து வருகிறது. 

இந்திய இராணுவத்துடன் புலிகள் போருக்கு போனபோது 
மரணத்தை தவிர்த்து புலிகளுக்கு வேறு எந்த தெரிவும் இருக்கவில்லை 
இந்திய இராணுவத்துடன் போராடி பிரபாகரன் உயிர் தப்புவார் என்பது 
பிராபகரன் உட்பட இலங்கையில் எங்காவது ஒரு பெட்டிக்கடை வைத்தருந்தவர் 
கூட எதிர்பார்த்திருக்காத ஒன்று. இந்திய இராணுவ இலங்கை வருகையின் நோக்கில் 
பிரகாரனை அழிப்பது புலிகளை அதோடு வழிக்கு கொண்டுவருவது என்பது  
இந்திய இராணுவ தளபதி கரிச்சந்திரா எழுதிய புத்தகத்திலேயே உண்டு. இது இனி என்னுடைய ஊகமோ 
புலிகளின் கருத்தோ அல்ல ... சாதாரணமாக ஆறறிவும் செயலில் இருந்தாலே புரியும். 

ராஜீவ் காந்தி 13ஆவது திருத்த தீர்வை ஜே ஆரிடம் கொடுத்த போதே ஜே ஆர் அதை எறிந்துவிட்டார் 
இந்தியாவின் எதிர்பார்ப்பு மாகாணசபை தேர்தலை கொண்டுவந்தால் அமிர்தலிங்கமே வெல்லுவார் 
புலிகளின் பலம் அதோடு குறையும்போது சந்தர்ப்பம் பார்த்து பிரபாகரனை தட்டிவிட்டு மற்றவர்களையும் 
வழிக்கு கொண்டுவருவதே ......... தேர்தலை முதலில் புலிகள் புறக்கணிக்க முதல் காரணம் இந்தியா கூட்டிவந்த  வானரங்கள் மீண்டும் அரசியலில் ஈடுபடுவதை அவர்கள் விரும்பி இருக்கவில்லை 
ஆனாலும் அப்போதைய பல்கலைக்கழக பேராசிரியர் உட்பட பலர் புலிகளை தேர்தலில் பங்கேடுக்குமாறே வற்புறுத்த  புலிகள் நேரடியாக தாம் போட்டியிடாது ... சில பேர்களை அறிவித்தார்கள் 
அப்போதைய சூழலை சிங்கள அரசுதான் இந்தியாவுக்கு கூறியது புலிகளின் வெற்றி தடுக்க முடியாதது என்று 
பின்புதான் இந்தியா ஓரளவுக்கு புரிய தொடங்கியது தேர்தல் வைத்தாலும் புலிகளுக்கே வெற்றி என்பது. 
அப்போது தேர்தல் என்ற தெரிவை இந்தியா கைவிட தொடங்கியது. (இது வீடியோவில் இருக்கிறது பிரபாகரனுக்கும்  ஆண்டன் பாலசிங்கம் அவர்களுக்கும் ராஜிவ் டில்லியில் சொன்னது அவர்கள் இருவருக்கும் ஒரு அமைச்சர் பதவி  நிச்சயம் இருக்கும் என்றும் கூடுதல் அமைச்சர்களை பெறுவது என்பது இவர்களின் பிரச்சாரம் மக்கள் ஆதரவை  பொறுத்தது என்று.  ராஜிவ் தமிழ் நாட்டில் இருந்து போகும் அரசியல் வாதிகளுடன் பேசுவது போன்றே  பேசிக்கொண்டு இருந்தார் ....அவ்வாறான ஒரு மோடன்தான் ராஜிவ்) 
இப்படியே படி படியாக குமரப்பா புலேந்திரன் கைது வரை வந்தபோது .... புலிகள் இந்தியாவை கேட்டது 
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி அவர்களை இந்திய இராணுவம் பொறுப்பெடுக்க வேண்டும் என்பதே 
பலாலி இந்திய இராணுவ தளபதி கூறுகிறார் (இவர் புலிகளின் அனுதாபியாகவே இருந்தார் .. உடல்களை கையளித்தபோது அவர் கொஞ்சம் கண்கலங்கியதாக  சொன்னார்கள்) தான் டிக்ஸித்தின் உத்தரவுக்கு காத்த்திருக்கிறேன்  என்று (அது உண்மையாகவும் இருக்கலாம்) டிக்சித் தான் டில்லிக்கு காத்திருப்பதாக மாலை  அறிவிக்கிறார் ... அன்று அதிகாலை சிங்கள இராணுவம் கொழுப்புக்கு ஏற்றுவதுக்கு போனபோது அவர்கள் குப்பி அடித்தார்கள். ( அதில் தப்பிய நால்வரில் ஒருவர் எங்கள் ஊரை சேர்ந்தவர் அவர் மூலம் எங்களுக்கு  நடந்த அனைத்த்தும் தெரியும்) 

இப்போது புலிகளுக்கு இருந்தது இரண்டு தெரிவுதான் 
மற்றவர்களும் குப்பி அடித்து சாவது அல்லது மீண்டும் ஆயுதங்களை தூக்குவது.
இரண்டிலும் மரணம் என்பது யாபேருக்கும் தெரிந்த ஒன்று 
இந்தியா ஒவ்வாரு நாளும் எவ்வாறு ஏமாற்றியது என்பது அப்போது பேப்பர் வாசித்த அனைவருக்கும் தெரியும்.

நான் குமரப்பா புலேந்திரனின் தகனத்துக்கு சென்று இருந்தேன் 
வெற்றிலைக்கேணியை சேர்ந்த இருவர் அதில் இறந்து இருந்தார்கள் 
தவக்குமார் ரெஜினோல்ட் அவர்கள் உடல்கள் வீட்டுக்கு கொண்டுவந்து பின்னேரம் 2 மணிக்கு 
கொண்டு சென்றார்கள் அப்போதே நாமும் சென்றோம் ... தெருவில்வெளியில் அப்போதே புலிகள் ஆயுதங்களுடன்தான் நின்றார்கள் 

திருநெல்வேலியில் இந்திய இராணுவம் புலிகளை அந்த அளவுக்கு குறைவான மதிப்பீடு 
இல்லாமல் .... ஒரு 25 புலிகளாவது தங்களை தாக்குவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் 
இன்னும் ஒரு கெலியில் இறங்கி இருப்பின் ... தலைவர் பிரபாகரன் அன்றே இறந்து இருப்பார் 
புலிகளுக்கும் அது எதிர்பாராத தாக்குதல்தான் ..  

புலிகளுடைய பயணம் என்பது இந்த ஏகாபத்தியத்தின் பிடியில் இருந்து 
தப்பும் தற்காப்பு போலத்தான் ஒவ்வெருநாளும் கழிந்தது 
புலிகள் விட்டு கொடுக்கிறதுக்கும் விடாமல் கொடுக்கிறதுக்கும் எதுவுமே இருக்கவில்லை 
புலிகள் மீதான குறிப்பாக தலைமை மீதான தாக்குதல் திட்டங்கள் யுத்தத்தை விட சமாதான காலங்களில்தான் அருகருகாக வந்து போயிருக்கிறது 

இன்று எங்களை அழிக்கும் சிங்களவர்களுக்கும் 
நாளை இதே நிலைமைதான் ... சம்மந்தர் போல சீனாவுக்கு 
தலை ஆட்ட பெயருக்கு ஒரு சிங்கள பொம்பை இருக்கும் 
அவர்களுடைய ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அரங்கேறும் 

Link to comment
Share on other sites

9 minutes ago, Maruthankerny said:

தங்கள் உயிரை கூட மண்ணுக்கும் மொழிக்கும் அர்ப்பணித்து போனவர்கள் பற்றி 
டிவிடியில் விடுதலை போராட்டம் பார்த்தவர்கள் யாராக இருந்தாலும் எழுதும்போது 
கொஞ்சம் யோசிக்கவேண்டும். உலகில் தமிழ் இனம் மட்டும் அல்ல 
பெரும்பாண்மை இனத்தால் ஆக்கிரமிக்க பட்டுள்ள எல்லா இனமுமே இன்று அழிவு 
பாதையில்தான் நிற்கிறது .....இதை எம் கண்னமுன்னேயே உலக வல்லாதிக்க நாடுகள் 
செய்துகொண்டு இருக்கின்றன 
மியன்மார் ... காஸ்மீர் ... குர்திஷ் ... பலஸ்தீனியர்கள் ... உகுருஸ் (சீன முஸ்லிம்கள்).... 
அமெரிக்க இந்தியர்கள் ... ஈழ தமிழர்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம் 

இவ்வாறான ஒரு இன அழிப்பு  அதாவது நாசிகளின் யூத அழிப்புப்போல இன்னொன்று இனி உலகில் 
நடக்க கூடாது என்ற ஒற்றை காரணத்துக்காகவே ஜெனீவா உடன்படிக்கை ஏற்படுத்தி உலக வல்லரசுகள் 
ஐ நா வை தோற்றுவித்தார்கள் இன்று இத்தனை இன அழிப்பும் இந்த ஐ நா அதிகாரிகளின் முன்னிலையில் 
அதில் அங்கத்தவர்களாக இருக்கும் நாடுகளின் ஆசிகளுடனும் அவர்களால் தயாரித்து விநியோகிக்கப்படும் 
ஆயுதங்களாலுமே வெற்றிகரமாக நடாத்தபடுகிறது. 

இதுக்கு எதிராக போராடிக்கொண்டு இருப்பவர்கள் போராடினாலும் அழிக்கப்படுவார்கள் 
போராடாமல் இருந்தாலும் அழிக்கப்படுவார்கள். சும்மா இருந்து அழிவதைவிட ஒரு சிறிய பலம் பெற்று 
போராடும்போது அழிவுக்கார்கள் எதிர்பாராத சில நகர்வுகளை செய்து தற்காலிக ஒரு தற்காப்பு நிலையை 
தோற்றுவிக்க முடியும் அதனால்தான் தங்கள் உயிர்கள் போனால்கூட பரவாயில்லை எமது சந்ததி வாழட்டும் 
என்று உலகம் பூராக போராடுகிறார்கள். 

புலிகளை பொறுத்தவரை புலிகளுக்கு எதிரான போரை அமெரிக்கா பிரிட்டன் இஸ்ரேல் பாகிஸ்தான் 
இந்தியா ரஸ்யா சீனா 1982 இல் இருந்தே செய்துகொண்டுதான் இருக்கிறாரார்கள். 1983 இனக்கலவரத்தின் பின்பு இலங்கை ஒரு இன அழிப்பு நாடு என்பது ஐ நா வில் பதியப்பட்டு இருக்கிறது அது இந்திராகாந்தி முன்மொழிந்து  ரஸ்யா ஆதரித்து நிறைவேறியது. அதன் பிரகாரம் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தில்  இலங்கை இன அழிப்பு பட்டியலில்தான் இருந்தது  ... 1997இல் புலிகளை பயங்கரவாத பட்டியலில்  அமெரிக்க போட்டத்தன் முதல் காரணமே அந்த லிஸ்ட்டில் இருந்து இலங்கை அரசை எடுப்பதற்குத்தான். அதன் பின்பு பாகிஸ்தான் ஊடாக இருந்த ஆயுத விநியோகத்தை நேரடியாக அமெரிக்க 
அரசே செய்ய தொடங்கியதோடு இராணுவ பயிற்சி வழங்கவும் தொடங்கியது. அன்றில் இருந்து அமேரிக்கா புலிகளுக்கு எதிரான  போரின் நேரடி பங்குதாராகவே இருந்து வருகிறது. 

இந்திய இராணுவத்துடன் புலிகள் போருக்கு போனபோது 
மரணத்தை தவிர்த்து புலிகளுக்கு வேறு எந்த தெரிவும் இருக்கவில்லை 
இந்திய இராணுவத்துடன் போராடி பிரபாகரன் உயிர் தப்புவார் என்பது 
பிராபகரன் உட்பட இலங்கையில் எங்காவது ஒரு பெட்டிக்கடை வைத்தருந்தவர் 
கூட எதிர்பார்த்திருக்காத ஒன்று. இந்திய இராணுவ இலங்கை வருகையின் நோக்கில் 
பிரகாரனை அழிப்பது புலிகளை அதோடு வழிக்கு கொண்டுவருவது என்பது  
இந்திய இராணுவ தளபதி கரிச்சந்திரா எழுதிய புத்தகத்திலேயே உண்டு. இது இனி என்னுடைய ஊகமோ 
புலிகளின் கருத்தோ அல்ல ... சாதாரணமாக ஆறறிவும் செயலில் இருந்தாலே புரியும். 

ராஜீவ் காந்தி 13ஆவது திருத்த தீர்வை ஜே ஆரிடம் கொடுத்த போதே ஜே ஆர் அதை எறிந்துவிட்டார் 
இந்தியாவின் எதிர்பார்ப்பு மாகாணசபை தேர்தலை கொண்டுவந்தால் அமிர்தலிங்கமே வெல்லுவார் 
புலிகளின் பலம் அதோடு குறையும்போது சந்தர்ப்பம் பார்த்து பிரபாகரனை தட்டிவிட்டு மற்றவர்களையும் 
வழிக்கு கொண்டுவருவதே ......... தேர்தலை முதலில் புலிகள் புறக்கணிக்க முதல் காரணம் இந்தியா கூட்டிவந்த  வானரங்கள் மீண்டும் அரசியலில் ஈடுபடுவதை அவர்கள் விரும்பி இருக்கவில்லை 
ஆனாலும் அப்போதைய பல்கலைக்கழக பேராசிரியர் உட்பட பலர் புலிகளை தேர்தலில் பங்கேடுக்குமாறே வற்புறுத்த  புலிகள் நேரடியாக தாம் போட்டியிடாது ... சில பேர்களை அறிவித்தார்கள் 
அப்போதைய சூழலை சிங்கள அரசுதான் இந்தியாவுக்கு கூறியது புலிகளின் வெற்றி தடுக்க முடியாதது என்று 
பின்புதான் இந்தியா ஓரளவுக்கு புரிய தொடங்கியது தேர்தல் வைத்தாலும் புலிகளுக்கே வெற்றி என்பது. 
அப்போது தேர்தல் என்ற தெரிவை இந்தியா கைவிட தொடங்கியது. (இது வீடியோவில் இருக்கிறது பிரபாகரனுக்கும்  ஆண்டன் பாலசிங்கம் அவர்களுக்கும் ராஜிவ் டில்லியில் சொன்னது அவர்கள் இருவருக்கும் ஒரு அமைச்சர் பதவி  நிச்சயம் இருக்கும் என்றும் கூடுதல் அமைச்சர்களை பெறுவது என்பது இவர்களின் பிரச்சாரம் மக்கள் ஆதரவை  பொறுத்தது என்று.  ராஜிவ் தமிழ் நாட்டில் இருந்து போகும் அரசியல் வாதிகளுடன் பேசுவது போன்றே  பேசிக்கொண்டு இருந்தார் ....அவ்வாறான ஒரு மோடன்தான் ராஜிவ்) 
இப்படியே படி படியாக குமரப்பா புலேந்திரன் கைது வரை வந்தபோது .... புலிகள் இந்தியாவை கேட்டது 
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி அவர்களை இந்திய இராணுவம் பொறுப்பெடுக்க வேண்டும் என்பதே 
பலாலி இந்திய இராணுவ தளபதி கூறுகிறார் (இவர் புலிகளின் அனுதாபியாகவே இருந்தார் .. உடல்களை கையளித்தபோது அவர் கொஞ்சம் கண்கலங்கியதாக  சொன்னார்கள்) தான் டிக்ஸித்தின் உத்தரவுக்கு காத்த்திருக்கிறேன்  என்று (அது உண்மையாகவும் இருக்கலாம்) டிக்சித் தான் டில்லிக்கு காத்திருப்பதாக மாலை  அறிவிக்கிறார் ... அன்று அதிகாலை சிங்கள இராணுவம் கொழுப்புக்கு ஏற்றுவதுக்கு போனபோது அவர்கள் குப்பி அடித்தார்கள். ( அதில் தப்பிய நால்வரில் ஒருவர் எங்கள் ஊரை சேர்ந்தவர் அவர் மூலம் எங்களுக்கு  நடந்த அனைத்த்தும் தெரியும்) 

இப்போது புலிகளுக்கு இருந்தது இரண்டு தெரிவுதான் 
மற்றவர்களும் குப்பி அடித்து சாவது அல்லது மீண்டும் ஆயுதங்களை தூக்குவது.
இரண்டிலும் மரணம் என்பது யாபேருக்கும் தெரிந்த ஒன்று 
இந்தியா ஒவ்வாரு நாளும் எவ்வாறு ஏமாற்றியது என்பது அப்போது பேப்பர் வாசித்த அனைவருக்கும் தெரியும்.

நான் குமரப்பா புலேந்திரனின் தகனத்துக்கு சென்று இருந்தேன் 
வெற்றிலைக்கேணியை சேர்ந்த இருவர் அதில் இறந்து இருந்தார்கள் 
தவக்குமார் ரெஜினோல்ட் அவர்கள் உடல்கள் வீட்டுக்கு கொண்டுவந்து பின்னேரம் 2 மணிக்கு 
கொண்டு சென்றார்கள் அப்போதே நாமும் சென்றோம் ... தெருவில்வெளியில் அப்போதே புலிகள் ஆயுதங்களுடன்தான் நின்றார்கள் 

திருநெல்வேலியில் இந்திய இராணுவம் புலிகளை அந்த அளவுக்கு குறைவான மதிப்பீடு 
இல்லாமல் .... ஒரு 25 புலிகளாவது தங்களை தாக்குவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் 
இன்னும் ஒரு கெலியில் இறங்கி இருப்பின் ... தலைவர் பிரபாகரன் அன்றே இறந்து இருப்பார் 
புலிகளுக்கும் அது எதிர்பாராத தாக்குதல்தான் ..  

புலிகளுடைய பயணம் என்பது இந்த ஏகாபத்தியத்தின் பிடியில் இருந்து 
தப்பும் தற்காப்பு போலத்தான் ஒவ்வெருநாளும் கழிந்தது 
புலிகள் விட்டு கொடுக்கிறதுக்கும் விடாமல் கொடுக்கிறதுக்கும் எதுவுமே இருக்கவில்லை 
புலிகள் மீதான குறிப்பாக தலைமை மீதான தாக்குதல் திட்டங்கள் யுத்தத்தை விட சமாதான காலங்களில்தான் அருகருகாக வந்து போயிருக்கிறது 

இன்று எங்களை அழிக்கும் சிங்களவர்களுக்கும் 
நாளை இதே நிலைமைதான் ... சம்மந்தர் போல சீனாவுக்கு 
தலை ஆட்ட பெயருக்கு ஒரு சிங்கள பொம்பை இருக்கும் 
அவர்களுடைய ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அரங்கேறும் 

நன்றி மருதங்கேணி. நீண்ட கதை எழுதியுள்ளீர்கள். அனேகமானவை புலிகளின் வெளியீடுகளில் ஏற்கனவே  பல ஆண்டுகளுக்கு முன் வாசித்தவை தான்.  அவற்றைத் திருப்பி மினக்கெட்டு நேரம் எடுத்து எழுதியதற்கு நன்றிகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

 நீண்ட கதை எழுதியுள்ளீர்கள். 

நல்லா வருவியள்????😡😡😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, tulpen said:

நான் கட்டுமரத்தையும் நம்ப சொல்லவில்லை. ஆமைக்குஞ்சையும்  நம்ப சொல்லவில்லை.

மகிந்தவை பதவிக்கு கொண்டுவர மறைமுகமாக உதவியதும்,  இணைத்தலைமை நாடுகளின் அழுத்தங்களை தொடர்சசியாக புறக்கணித்தது உலக வெறுப்புக்கு உள்ளானதும்,  ஐரோப்பிய யூனியன் பிரதிநிதியின் கிளிநொச்சி விஜயத்தின் போது அவரது  நேரடி வேண்டுகோளைக் கூட புறக்கணிதததும், அதன் மூலம்  ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத பட்டியலில் இடம் பெற்றதும் மாவிலறை மூடி ஶ்ரீலங்கா அரசுக்கு உலக அனுதாபம் வரசெய்ததும், இராணுவத்தளபதி மீது தாக்குதல் நடத்தி மறைமுக யுத்த பிரகடனம் செய்ததும்,   கருணாநிதி என்ற சாதாரண  தமிழ் நாட்டு அரசியல்வாதியின் வார்ததை ஜாலத்தை நம்பி என்று புலம் பெயரிகள் சிலர் மக்கள் காதில் பூ சுற்றலாம். ஆனால்  அதை நம்ப மக்கள் அறிவிலிகள் அல்ல. 

அப்ப நீங்கள் சொல்லவருவது, ரதி அக்கா சொல்வதுதானே.

அம்மான் வாஸ் கரெக்ட்.... அப்படித்தானே....

Chennai will not abandon people, who believed the city, says actor Vivek |  Tamil Movie News - Times of India

****

மரணத்தின் செய்தி முதலே தெரிந்தால், மனிதன் இறைவனை நினைப்பானா?

இதுதான் நடக்கப் போகிறது என்று புரிந்து விட்டால், உயில் எழுத ஆரம்பித்து விடுவீர்கள், இல்லையா.

அதேதான். சாடை அறியாதவன் சர்வ முட்டாள். தலைமைக்கு புரிந்து விட்டது என்று நினைக்கிறேன். சீக்கிரமே முடித்து துலையுங்கள் என்று முடிவுக்கு வந்து இருக்கலாம்.

மக்களையும் சேர்த்து அழித்து முடித்த, சிங்களம் சிக்கலை சந்திக்க போகிறது.

நீங்கள் சொன்ன அதே முட்டாள் தனத்தினை, சிங்களம் செய்கிறது, அதன் முடிவும் தெரிகிறது. 

துப்பாக்கியால் அடைய முடியாததை, வல்லரசு போட்டிகள் வழங்கலாம். பார்ப்போம்.

1 hour ago, tulpen said:

சிங்களவன் சமஸ்டி தருகிறேன் என்று கூறியபோது வேண்டாம் என று சொன்ன அறிவு கோழுந்துகள் யாரும் 1977 இன் பின்னர் உயிருடன் இல்லை. நீங்கள் எந்த அறிவு கொழுந்தைக் கூறுகின்றீர்கள்?  பேரனையா? 

சிங்களவன் எப்ப சமஸ்டி தாறன் எண்டு சொன்னவன் என்று ஒருக்கா விளங்கப்படுத்துவியலே....

சும்மா, கதை விட்டதை சொல்ல கூடாது. உளப்பூர்வமாக தருவதாக இருந்து, அதனை தமிழர் தரப்பு மறுத்ததாக இருக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

அப்ப நீங்கள் சொல்லவருவது, ரதி அக்கா சொல்வதுதானே.

அம்மான் வாஸ் கரெக்ட்.... அப்படித்தானே....

Chennai will not abandon people, who believed the city, says actor Vivek |  Tamil Movie News - Times of India

****

மரணத்தின் செய்தி முதலே தெரிந்தால், மனிதன் இறைவனை நினைப்பானா?

இதுதான் நடக்கப் போகிறது என்று புரிந்து விட்டால், உயில் எழுத ஆரம்பித்து விடுவீர்கள், இல்லையா.

அதேதான். சாடை அறியாதவன் சர்வ முட்டாள். தலைமைக்கு புரிந்து விட்டது என்று நினைக்கிறேன். சீக்கிரமே முடித்து துலையுங்கள் என்று முடிவுக்கு வந்து இருக்கலாம்.

மக்களையும் சேர்த்து அழித்து முடித்த, சிங்களம் சிக்கலை சந்திக்க போகிறது.

நீங்கள் சொன்ன அதே முட்டாள் தனத்தினை, சிங்களம் செய்கிறது, அதன் முடிவும் தெரிகிறது. 

துப்பாக்கியால் அடைய முடியாததை, வல்லரசு போட்டிகள் வழங்கலாம். பார்ப்போம்.

சிங்களவன் எப்ப சமஸ்டி தாறன் எண்டு சொன்னவன் என்று ஒருக்கா விளங்கப்படுத்துவியலே....

சும்மா, கதை விட்டதை சொல்ல கூடாது. உளப்பூர்வமாக தருவதாக இருந்து, அதனை தமிழர் தரப்பு மறுத்ததாக இருக்க வேண்டும். 

உண்மையில் மிகுந்த ஆத்திரமும் கோபமும் வருகிறது

யாழில் இருந்து போகும் போது அப்படி போக விரும்பவில்லை.😡😡😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது மக்களிடையே சரித்திர புரிதல் இல்லை.

பாடபுத்தங்களில், இலங்கையினை போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர்கள் ஆண்டார்கள் என்பதை வைத்து அப்படியே நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இடையில் இருந்த வன்னி ராஜ்ஜியம் காரணமாக, வடக்கு தமிழர் பகுதி, போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் அவர்களால், தனியாகவே ஆளப்பட்டது.

1834ம் ஆண்டு வரை, இலங்கை ஒரே நாடாக இருக்கவில்லை. இந்தியாவும் அதுபோல ஒரு நாடாக இருக்கவில்லை. இரண்டையுமே கைப்பற்றி ஆண்டது கார்ப்பரேட் கம்பெனியான கிழக்கு இந்திய கொம்பனி. பிரிட்டிஷ் அரசு அல்ல.

இந்த நிறுவனத்தின் பெரும் ஊழல் காரணமாக, அங்கே வேலைக்கு சென்றவர்கள் பெரும் பணக்கார்களாக திரும்ப, முதலீடு செய்தவர்கள் நஷ்ட கணக்கு தொடர்ந்து தரப்பட, அவர்களின் நெருக்குவாரத்தில் சந்தர்ப்பம் பார்த்து, 1858ல் கம்பெனியை கலைத்து, இரண்டு நாடுகளையும் பிரிட்டிஷ் அரசு நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது.

உலக வரலாறில் பெரும் பேரரசு ஒன்றினை நடாத்திய கார்பொரேட் நிறுவனம், கிழக்கு இந்திய கொம்பனி மட்டுமே. அந்த நிறுவனத்தின், உயர் அதிகாரி, சர்மன், பிரிட்டிஷ், ஸ்பானிஷ், போர்துக்கீஸ் முடிதரித்த மன்னர்களுக்கு இணையாக ஒரு சக்கரவர்த்தியாக திகழ்ந்ததை, ஜீரணிக்க முடியவில்லை.   1857ல் இந்தியாவில் நடந்த சிப்பாய் கலகத்தினை தொடர்ந்து, கொம்பனி கலைக்கப்பட்டது.

ஆக நாம் போர்த்துக்கேயரின் கீழ் 42 ஆண்டுகளும், ஒல்லாந்தரின் கீழ் 140 ஆண்டுகளும், கிழக்கு இந்திய கொம்பனியின் கீழ், 61 ஆண்டுகளும், பிரிட்டிஷ் அரசின் கீழ் 90 ஆண்டுகளும், இப்போது சிங்களவன் கீழ், 73 ஆண்டுகளும் அடிமையாக வாழ்கிறோம்.

மறுபக்கம், கடந்த 502 ஆண்டுகாலமாக இந்திய தமிழர்கள் அந்நியர்கள் தம்மை ஆள விட்டு உள்ளார்கள்.

1520 அளவில் விஜய நகர பேரரசும், பின்னர், கிழக்கு இந்திய கொம்பனியும், பின்னர் பிரிட்டிஷ் அரசும், இறுதியாக இந்திய அரசுமாக விடுதலை என்ற பெயரில், அடிமையாக வாழ்கின்றனர். 

**

பொடி, படிக்கவில்லையே, படிப்பு சரிவராவிடில், ஏத்துங்கோ, சுவிசுக்கு, ஜெர்மனிக்கு, கனடாவுக்கு  என்று இருப்பது போல, அன்று இங்கிலாந்திலும் ஒரு காலம் இருந்தது.

பொடி, படிக்கவில்லையே, படிப்பு சரிவராவிடில், ஏத்துங்கோ, கப்பலில், இந்தியா, இலங்கை போட்டு மனுசனா நாலு காசு உழைச்சு வரட்டும்.

அப்படி, ரௌடியாக் திரிந்த ஒருவரை பிடித்து அனுப்பிவிட்டார் தந்தை. பொடியின் பெயர், கிளைவ் ராபர்ட். சென்னையில் இருந்து, படையுடன் போய், கல்கத்தாவில் பிரஞ்சு, இஸ்லாமிய படையினை முறியடித்து, கிழக்கிந்திய கொம்பனி பேரரசுக்கு முதல் வித்து இட்டார்.

பெரும் பணக்காராக திரும்பினார். கப்பம், திருட்டு என்று குத்தம் சுமத்தப்பட்டாலும், உங்களுக்கு இந்தியா என்ற பெரும் முத்தினை நானே எடுத்து தந்தேன், என் பெருமையினை, திருட்டு குத்தம் சொல்லி மலின படுத்தவேண்டாம் என்று பிரிட்டிஷ் பாராளுமன்ற விசாரணை குழு முன் தினா வெட்டாக கூறிய நபர் அவர். 

விசாரணையில் இருந்து தப்பினார். ஆனாலும் போதை பொருள் பாவனை காரணமாக, லண்டன் Mayfair என்ற பணக்காரர்கள் வாழும் பகுதியில், இருந்த தனது வீட்டில் இறந்து கிடந்தார். இந்த Mayfair பணக்காரத்தனமே பல பிரிட்டிஷ் உயர்மட்டத்தினரை எரிச்சல் அடைய வைத்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

ஆச்சரியம் என்னவென்றால் சிங்களவன் சமஸ்ரி கேட்கும்போது எங்களுக்கு அது வேண்டாமென்று கூறிய தமிழ் அறிவுக் கொழுந்துகள்தான் போராட்டத்தையும் பிழை என்று கூறுவதுதான். 

இது எப்ப நடந்தது?🤔

 

ஈழம் தவிர எல்லாம் தருவோம் என்று பிரேமதாஸ சொன்னதைக் குறிப்பிடுகின்றீர்களா?

அல்லது

பண்டா-செல்வா ஒப்பந்தம் 

அல்லது

டட்லி-செல்வா ஒப்பந்தம் 

அல்லது

....

 

தமிழ் மிரரில் வந்த வரலாற்றுத் தொடர் யாழில் இருக்கின்றது. நேரம் இருந்தால் கொஞ்சம் படிக்கலாம்..

 

Link to comment
Share on other sites

37 minutes ago, கிருபன் said:

இது எப்ப நடந்தது?🤔

 

ஈழம் தவிர எல்லாம் தருவோம் என்று பிரேமதாஸ சொன்னதைக் குறிப்பிடுகின்றீர்களா?

அல்லது

பண்டா-செல்வா ஒப்பந்தம் 

அல்லது

டட்லி-செல்வா ஒப்பந்தம் 

அல்லது

....

 

தமிழ் மிரரில் வந்த வரலாற்றுத் தொடர் யாழில் இருக்கின்றது. நேரம் இருந்தால் கொஞ்சம் படிக்கலாம்..

 

கபிதன் கூறியது 1929 ல் இலங்கைக்கு சமஸ்டி தீர்வை சிங்கள தரப்பில் இருந்து பண்டாரநாயக்கா பிரிட்டிஷ் அரசிடம் வலியுறுத்தியதைப் பற்றி என்று.  அப்போது அரசியலில் இருந்த எவரும் 1977 இன் பின்னர் உயிருடன் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

கபிதன் கூறியது 1929 ல் இலங்கைக்கு சமஸ்டி தீர்வை சிங்கள தரப்பில் இருந்து பண்டாரநாயக்கா பிரிட்டிஷ் அரசிடம் வலியுறுத்தியதைப் பற்றி என்று.  அப்போது அரசியலில் இருந்த எவரும் 1977 இன் பின்னர் உயிருடன் இல்லை. 

1929ல் பிரிட்டிஷ் அரசு காலத்தில், சமஸ்டி ஒரு சீரியஸ் கோரிக்கையாக அல்லது, விவாதத்துக்குரிய ஒரு விடயமாக இருந்திருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?

இரண்டாம் யுத்த காலத்துக்கு பின்னர் தான், பிரிட்டனின் இரும்பு பிடி தளரும் சாத்தியம் தெரிந்தது. முதலில் இவர்கள் போகட்டும், நாம் பிறகு பார்க்கலாம் என்று நினைத்தார்கள்.

அது தவறு என்று காலம் நிரூபித்தது.
 

Link to comment
Share on other sites

16 hours ago, nunavilan said:

தமிழகத்தில் புதிய ஆட்சி வந்திருகிறது. அது தமிழக மக்களின் தீர்ப்பு. இதில் ஈழத்தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? ஒரே வரியில் சொன்னால் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை தமது நோக்கு நிலைகளில் இருந்து எப்படி வெற்றிகரமாக கையாளலாம் என்று சிந்திப்பதே பொருத்தமாயிருக்கும்.

தமிழகம் எனப்படுவது தட்டையான எகபரிமாணம் கொண்ட ஒரு மக்கள்தொகுதி அல்ல. அது பல பரிமாணங்களைக் கொண்ட பல அடுக்குகளைக் கொண்ட ஒரு கலவை.  முதலாவது அடுக்கு தமிழக அரசு. அது ஒரு மாநில அரசு. இந்திய மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும் அரைச் சமஸ்டி கட்டமைப்பு. கவனியுங்கள் அது ஒரு முழுச் சமஸ்டி கட்டமைப்பு அல்ல.

இரண்டாவது தமிழகத்தில் உள்ள கட்சிகள். மூன்றாவதாக தமிழகத்திலுள்ள ஈழ உணர்வாளர்கள் அல்லது செயற்பாட்டாளர்களர்கள்.நாலாவது அடுக்கு  தமிழகத்தில் உள்ள சாதாரண ஜனங்கள். ஐந்தாவதாக சிவில் சமூகங்களையும் ஊடகங்களையும் கூறலாம்.இந்த ஐந்து அடுக்குகளையும் ஒரே விதமாக அணுக முடியாது. ஒரே விதமாக கையாளவும் முடியாது.

முதலாவதாக மாநில அரசுக் கட்டமைப்பு.தமிழக அரசை அதன் வரையறைகளுக்குள் வைத்து விளங்கிக்கொள்ள வேண்டும். அது எதைச் செய்ய முடியுமோ அதைத்தான் எதிர்பார்க்கலாம்.ஒரு மாநில அரசாக அதற்கு இருக்கக்கூடிய வரையறைகளின் அடிப்படையில்தான் அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு எதையும் செய்யமுடியும்..

இரண்டாவது தமிழகத்தில் உள்ள கட்சிகள்.தமிழகத்திலுள்ள கட்சிகளில் ஈழத்தமிழர்களுக்கு நெருக்கமான கட்சிகளும் உண்டு. நெருக்கம் குறைந்த கட்சிகளும் உண்டு. எப்படியானாலும் இக்கட்சிகள் யாவும் அங்கேயுள்ள தேர்தல் அரசியலுக்கு உட்பட்டவை. எனவே ஈழத் தமிழர் விவகாரத்தையும் அவர்கள் தேர்தல் அரசியலுக்கு ஊடாகவே கையாள முயல்வார்கள். அதில் தேர்தல் நோக்குநிலையிலான நலன்கள் இருக்கும். அந்த நலன்களின் அடிப்படையில்தான் ஈழத் தமிழர் விவகாரம் கையாளப்படும். இதில் ஈழத் தமிழர்களுக்கு நெருக்கமான சில அரசியல்வாதிகள் உண்டு. அவர்கள் ஈழத்தமிழர்களுக்காக ஆபத்துக்களை சந்தித்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக ஈழத்தமிழர்கள் பொறுத்து மாறாத நிலைப்பாட்டோடு காணப்படுகிறார்கள்.அவர்களோடு ஈழத்தமிழர்கள் மானசீகமான உறவுகளை வைத்துக் கொள்ளலாம். ஆனால் கட்சி நலன் என்று வரும்பொழுது குறிப்பாக தேர்தல் அரசியல் என்று வரும் பொழுது அவர்கள் தமிழகத்தின் கள யதார்த்தத்துக்கு ஏற்பவே முடிவெடுப்பார்கள். அதில் ஈழத்தமிழர்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை.

மூன்றாவது தமிழகத்தில் உள்ள செயற்பாட்டாளர்கள். இவர்கள் தேர்தல் நோக்குநிலை அற்றவர்கள். கொள்கை ரீதியாக ஈழத் தமிழர்களோடு நெருங்கி வருவார்கள். இவர்களோடு கொள்கை அடிப்படையில் கூட்டு வைத்துக் கொள்ளலாம். அது ஒருவிதத்தில் மாறாத உறவாகவும் இருக்கும்.

நாலாவது சாதாரண தமிழக மக்கள். இதுதான் பெரிய தொகை. எல்லா கட்சிகளிலும் இவர்கள் உண்டு. ஈழத் தமிழர்கள் என்றால் அவர்கள் இன ரீதியாக கொதித்து எழுவார்கள். மொழிரீதியாக கொதித்து எழுவார்கள். அவர்களுடைய கட்சித் தலைவர்கள் அவர்களை தேர்தல் நோக்கு நிலைகளில் இருந்து வழிநடத்தக் கூடும். ஆனால் ஈழத்தமிழர்களுக்கும் சாதாரண தமிழக மக்களுக்கும் இடையிலான உறவு என்பது தூய்மையானது. அரசியல் நலன்கள் அற்றது.சுயநலம் அற்றது.அதிலுள்ள உண்மை மற்றும் உணர்வு ஒருமைப்பாடு  காரணமாகத்தான் தமிழகத்தில் இதுவரையிலும் 19 பேர் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்திருக்கிறார்கள்.

எனவே தமிழகத்தின் சாதாரண ஜனங்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையிலான உறவுகள் ஒப்பீட்டளவில் புனிதமானவை. அந்த உறவை ஈழத்தமிழர்கள் மதிக்க வேண்டும். ஆனால் இந்த சாதாரண தமிழக மக்கள்தான் ஈழத் தமிழர்களால் விரும்பப்படுகின்ற அல்லது வெறுக்கப்படுகின்ற தலைவர்களைத் தெரிந்தெடுக்கிறார்கள். எனவே தமிழகத்தின் தலைவர்களை குறித்து கருத்து கூறும் பொழுதும் தமிழக தலைவர்களை அணுகும் போதும் சாதாரண தமிழக மக்களின் உணர்வுகளை மதித்தே எதையும் செய்ய வேண்டும்.இதுவிடயத்தில் சாதாரண தமிழக மக்களை பகைநிலைக்கு தள்ளாத ஒரு நிதானப்போக்கை ஈழத்தமிழர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

ஐந்தாவது ஊடகங்களும் சிவில் அமைப்புக்களும்.கருத்துருவாக்கிகளும்.இங்கேயும் ஈழத்தமிழர்களுக்காக  நலன்சாராது விசுவாசமாக உழைப்பவர்கள் உண்டு.

மேற்கண்டவற்றின் அடிப்படையில் தொகுத்துச் சிந்தித்தால் ஈழத்தமிழ் நோக்கு நிலையில் இருந்து தமிழகத்தை எப்படி கையாள வேண்டும் என்ற ஒரு தெளிவான வழி வரைபடம் கிடைக்கும். துரதிஸ்டவசமாக ஈழத்தமிழர்களிடம் அவ்வாறான வழிவரைபடம் எதுவும் கிடையாது. ஆயுதப்போராட்ட காலத்தில் இருந்து இன்றுவரையிலும் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. தமிழகத்துக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையில் தொடர்பாடல் மையங்கள் என்று கருதத்தக்க அலுவலகங்கள் அல்லது தகவல் வழங்கும் நிலையங்கள் தமிழகத்தில் இல்லை. குறைந்தபட்சம் ஈழத்தமிழ் அகதிகளின் நலன்களைக் கவனிப்பதற்குக்கூட கட்சிகளிடம் பொருத்தமான கட்டமைப்புக்கள் இல்லை.தமிழக ஊடகங்களுக்கும் ஈழத்தமிழ் ஊடகங்களுக்கும் இடையில் ஒரு பொதுவான தொழில்சார் இடையூடாட்டக் கட்டமைப்பும் இல்லை.தமிழகத்திலுள்ள கருத்துருவாக்கிகளுக்கும் ஈழத்தமிழ் கருத்துருவாக்கிகளுக்கும் இடையிலும் ஒரு இடையூடாடட்டப் பரப்பு இல்லை.தமிழகத்து சிவில் அமைப்புகளுக்கும் ஈழுத்து சிவில்அமைப்புகளுக்கும் இடையிலும் பொதுவான ஒரு இடையூடாடட்டத் தளம் கிடையாது.

எனவே கடந்த பல தசாப்தங்களாக ஈழத் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் இடையூடாடக்கூடிய பொதுப்பரப்புகளை கட்டமைப்புகளை ஈழத்தமிழர்கள் உருவாகியிருக்கவில்லை. தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் ஆதரவு செயற்பாட்டாளர்களும் கட்சிகளும் கூட அதைச் செய்திருக்கவில்லை. குறிப்பாக ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின்னர் மோசமாக சேதமடைந்த நிலைமைகளை சீர்செய்யும் விதத்தில் தீர்க்கதரிசனம் மிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.உதாரணமாக,ராஜீவ் காந்தி கொல்லப்பட முன்பு ஈழத் தமிழர்களுக்கு மிக ஆதரவாக காணப்பட்ட தமிழகத்தின் இடதுசாரிச் சிந்தனையாளர்களில் ஒருவரான எஸ்.வி. ராஜதுரை போன்றவர்கள் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபின் ஈழத்தமிழர்களை நோக்கி  இன்றுவரையிலும் முன்னரளவுக்கு நெருங்கிவரவில்லை என்பதை இங்கே சுட்டிக்காட்டவேண்டும்.

இவ்வாறான பாரதூரமான ஒரு வெற்றிடத்தில் தமிழகத் தலைவர்கள் ஈழத் தமிழர்களுக்காகத் தியாகம் செய்ய வேண்டும் என்று ஒரு பகுதி ஈழத்தமிழர்கள் எதிர்பார்கிறார்கள்.தமிழகத் தலைவர்கள் மட்டுமல்ல தென்னிலங்கையில் இருக்கும் கட்சித் தலைவர்கள் செயற்பாட்டாளர்கள் பொறுத்தும் ஒருபகுதி ஈழத்தமிழர்களின் நோக்குநிலை அணுகுமுறை அவ்வாறுதான் இருக்கிறது.உலகிலுள்ள எல்லாருமே எங்களை நேசிக்க வேண்டும் எங்களுக்காகத் தியாகம் செய்யவேண்டும் என்று ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் விரும்புகிறார்கள். ஆனால் அது ஒரு அப்பாவித்தனமான விருப்பம். ஏனெனில் தாயகத்துக்கு வெளியே இருப்பவர்களும் ஈழத்தமிழர்கள் அல்லாத வெளி இனத்தவர்களும் அவரவருக்கேயான அரசியல் சூழ்நிலைகளில் கைதிகளே.அவரவர் தங்களுடைய நிலைமைகளுக்குள்ளிருந்துதான் ஈழத்தமிழர்களுக்காக எதையும் செய்யமுடியும்.

உதாரணமாக மனோகணேசன். அவர் ஒரு தென்னிலங்கை மைய அரசியல்வாதி.அவர் ஒரு தமிழ்த் தேசியவாதியாக இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை. அவர் இனவாதத்துக்கு எதிரான ஒரு தமிழ் அரசியல்வாதியாக இருந்தாலே போதும்.அதுவே ஈழத்தமிழர்களுக்கு ஒரு பலம்.

அடுத்த உதாரணம் சிங்கள திரைக்கலைஞர்கள் மற்றும் மனித உரிமைவாதிகள். இவர்கள் இனவாதத்துக்கு எதிராக நிலைப்பாடு எடுத்தாலே போதும். அவர்கள் தமிழ்தேசியவாதிகளாக இருக்கவேண்டும் என்று எப்படி எதிர்பார்ப்பது?

இது தமிழகத்திற்கும் பொருந்தும். ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் தமிழகம் ஈழத் தமிழர்களுக்கு ஒரு பின்தளமாக இருந்தது.இது வரையிலும் 19பேர் தமிழகத்தில் தீக்குளித்திருக்கிறார்கள்.இவைகாரணமாக ஈழத்தமிழர்கள் இந்தியாவை தாயகம் என்று அழைத்துக் கொண்டு அளவுக்குமிஞ்சி நம்பிக்கைகளை முதலீடு செய்கிறார்கள் ; அளவுக்கு மிஞ்சி தமிழகத்தலைவர்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.இது ஒருவகையில் வெளியாருக்காக காத்திருக்கும் அரசியலில் ஒரு கிளைதான். வெளியாருக்காகக் காத்திருப்பது என்பதே தன் பலமிழந்து வெளிநோக்கி காத்திருப்பதுதான். அது அடிப்படையிலேயே பலவீனமான அரசியல். அந்த பலவீனம்தான் மற்றவர்கள் எல்லாரும் தங்களுக்காக தியாகம் செய்ய வேண்டும் என்று அளவுக்கு மிஞ்சி எதிர்பார்ப்பதும் ஆகும்.

ஆனால் அரசியல்உறவுகள் அவ்வாறு உண்மையானவை அல்ல. நலன்சாரா உறவுகளும் அல்ல. அவை முழுக்கமுழுக்க நலன்சார் உறவுகளே. இதைப் புத்திபூர்வமாக விளங்கிக் கொண்டால் ஈழத்தமிழர்கள் தமிழகத் தலைவர்களிடம் அளவுக்குமிஞ்சி எதிர்பார்க்க மாட்டார்கள். அவ்வாறு எதிர்பார்த்து அதில் ஏமாற்றம் அடையும்போது அளவுக்குமிஞ்சி வெறுக்கவும் மாட்டார்கள். கடந்த 12 ஆண்டுகளாக சமூக வலைத்தளங்களில் நிகழும் உரையாடல்களை தொகுத்துப் பார்க்கும் எவருக்கும் இது தெளிவாகத் தெரியும்.சமூகவலைத்தளங்கள் இது விடயத்தில் முழுத் தமிழர்களையும் பிரதிபலிக்கவில்லை என்பதனை இக்கட்டுரை ஏற்றுக் கொள்கிறது. எனினும் ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினரின் எதிர்பார்ப்பு அது என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.

இவ்வாறான ஒரு பின்னணியில் இப்போது தமிழகத்தில் ஒரு புதிய அரசாங்கம் வந்திருக்கிறது.அந்த அரசாங்கத்தை எப்படி நெருங்க வேண்டும்? எந்த அடிப்படையில் நெருங்க வேண்டும்?யாருக்கூடாக நெருங்க வேண்டும்?யாரை வைத்து யாரை கையாளவேண்டும்?  போன்ற எல்லா உபாயங்களை முதலில் ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் முதலில் ஈழத்தமிழர்கள் இதுதொடர்பில் ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வரவேண்டும். தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் தங்களுக்கிடையே ஐக்கியப்பட்டு ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அது ஒரு விதத்தில் எனது கட்டுரைகளில் நான் திரும்பத் திரும்பக் கூறுவது போல ஈழத்தமிழர்களுக்கான வெளியுறவு கட்டமைப்புத்தான்.  அந்த வெளியுறவு கொள்கையின் ஒரு பகுதியாக தமிழகத்தை எவ்வாறு கையாள்வது என்பதற்கும் ஒரு வழி வரைபடம் தெளிவாக உருவாக்கப்பட வேண்டும்.

தமிழகத்தின் புதிய அரசாங்கத்தில் ஈழத் தமிழர்களோடு தொடர்ச்சியாக நெருக்கமாக நிற்கும் வைகோவிற்கு நான்கு ஆசனங்கள் உண்டு. மற்றொருவர் திருமாவளவன்.அவருடைய கட்சிக்கும் 4 ஆசனங்கள் உண்டு. இது தவிர திமுகவிற்குள்ளும் மருத்துவர் எழிலனைப் போல பலர் ஈழத்தமிழர்களோடு நெருக்கமான மானசீகமான உறவை கொண்டிருக்கிறார்கள். பாரதிய ஜனதாவுக்குள்ளும் வானதி சிறினிவாசன் புலம்பெயந்த தமிழர்களோடு நெருக்கமாயுள்ளார்.அவர்களைப்போல மேலும் புதிய ஆளுமைகளை எப்படி சம்பாதிக்கலாம் என்று ஈழத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

இடதுசாரி மரபில் வந்த ஒரு தமிழக நண்பர் அடிக்கடி கூறுவார் தமிழகத்தில் ஈழத்தமிழ் ஆதரவு என்பது ஒரு உள்ளுறையும் சக்தி. அதை ஒரு தூலமான சக்தியாக மாஸ் போர்ஸ் ஆக மாற்ற வேண்டும் என்று. ஆம்.அதை ஈழத்தமிழர்களின் ஒத்துழைப்போடு தமிழக தலைவர்களும் செயற்பாட்டாளர்களும்தான் செய்ய முடியும்.அதை ஈழத்தமிழர்கள் நேரடியாக செய்ய முடியாது.

http://www.nillanthan.com/4980/?fbclid=IwAR0wd7CnmQFY2qhsfPLJS3XDI-4DKW-ZmoEfDVTYQjqNCnpRrqjA1sghbYo

இணைப்புக்கு நன்றி நுணா. மிகவும் தரமான வெறுப்பு உவப்பு அற்ற ஒரு கட்டுரை.

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

1929ல் பிரிட்டிஷ் அரசு காலத்தில், சமஸ்டி ஒரு சீரியஸ் கோரிக்கையாக அல்லது, விவாதத்துக்குரிய ஒரு விடயமாக இருந்திருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?

வரலாற்றில் நடந்ததாக கூறப்படும் ஒரு விடயத்தை வரலாற்று புத்தகங்களில் தான் தேட வேண்டுமே தவிர இங்கு வழமையான  விடுப்பு கதை போல் ஊகிக்க முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, tulpen said:

வரலாற்றில் நடந்ததாக கூறப்படும் ஒரு விடயத்தை வரலாற்று புத்தகங்களில் தான் தேட வேண்டுமே தவிர இங்கு வழமையான  விடுப்பு கதை போல் ஊகிக்க முடியாது. 

வரலாறு பெரும்பாலும் ஊகிப்பு சேர்ந்ததாகவே இருக்கும் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா? 

Link to comment
Share on other sites

5 minutes ago, Nathamuni said:

வரலாறு பெரும்பாலும் ஊகிப்பு சேர்ந்ததாகவே இருக்கும் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா? 

வரலாறு என்றால் எப்போதோ  பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த மன்னர் கால வரலாறுகளை பற்றி இங்கு  பேசப்படவில்லை. அங்கு கூட பல கோணத்திலான வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையிலேயே அந்த ஊகிப்பு இடம் பெறும் 

 வரலாற்று குறிப்புக்கள் திகதி வாரியாக பேணப்பட்ட மிக அண்மைக்காலத்தில் நடை பெற்ற விடயங்களுக்கு ஊகிப்பு தேவையில்லை. அதற்கான வரலாற்று குறிப்புகள் எங்கு இருக்கின்றன என்பதை தேடுவதே சரியானதாக இருக்கும். அதை தேடும் சோம்பேறித்தனத்துக்காக தனிநபர் ஊகிப்புக்களை வரலாறாக கொள்ள முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, tulpen said:

வரலாறு என்றால் எப்போதோ  பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த மன்னர் கால வரலாறுகளை பற்றி இங்கு  பேசப்படவில்லை. அங்கு கூட பல கோணத்திலான வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையிலேயே அந்த ஊகிப்பு இடம் பெறும் 

 வரலாற்று குறிப்புக்கள் திகதி வாரியாக பேணப்பட்ட மிக அண்மைக்காலத்தில் நடை பெற்ற விடயங்களுக்கு ஊகிப்பு தேவையில்லை. அதற்கான வரலாற்று குறிப்புகள் எங்கு இருக்கின்றன என்பதை தேடுவதே சரியானதாக இருக்கும். அதை தேடும் சோம்பேறித்தனத்துக்காக தனிநபர் ஊகிப்புக்களை வரலாறாக கொள்ள முடியாது. 

கேட்ட கேள்விக்கு தெளிவாக ஒரு சொல் பதில் தரவும். (இல்லாவிடில் புள்ளிகள் வழங்கப்படமாட்டாது 🧐)

1929... கிட்டத்தட்ட 100 வருடங்கள் முன்பு... 

Link to comment
Share on other sites

4 minutes ago, Nathamuni said:

கேட்ட கேள்விக்கு தெளிவாக ஒரு சொல் பதில் தரவும். (இல்லாவிடில் புள்ளிகள் வழங்கப்படமாட்டாது 🧐)

1929... கிட்டத்தட்ட 100 வருடங்கள் முன்பு... 

20 ம் நூற்றாண்டின் ஆரம்பம். தகவல்கள் பேணப்படும் பிரிட்டிஷ் ஆட்சியின் அரச மட்டத்தில் நடைபெற்ற விடயம். நூறு வருடம் என்பது வரலாற்றில் மிக அண்மை. அதை  அதிகம் என்று கூறும் அளவுக்கு இருக்கும்  நீங்கள் புள்ளி வழங்க போவதாக வேறு கூறுகின்றீர்கள்.😂😂😂😂😂 உங்கள் புள்ளிகள் எனக்கு வேண்டாம். 

வரலாற்று பதிவேடுகளை, புத்தகங்களை முறைப்படி தேடுவதன் மூலமே தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். நிச்சயமாக நேரத்தை செலவிடவேண்டி இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, tulpen said:

20 ம் நூற்றாண்டின் ஆரம்பம். தகவல்கள் பேணப்படும் பிரிட்டிஷ் ஆட்சியின் அரச மட்டத்தில் நடைபெற்ற விடயம். நூறு வருடம் என்பது வரலாற்றில் மிக அண்மை. அதை  அதிகம் என்று கூறும் அளவுக்கு இருக்கும்  நீங்கள் புள்ளி வழங்க போவதாக வேறு கூறுகின்றீர்கள்.😂😂😂😂😂 உங்கள் புள்ளிகள் எனக்கு வேண்டாம். 

வரலாற்று பதிவேடுகளை, புத்தகங்களை முறைப்படி தேடுவதன் மூலமே தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். நிச்சயமாக நேரத்தை செலவிடவேண்டி இருக்கும். 

போனகிழமை எங்களுக்கு விலாவாரியா என்ன நடந்தது எண்டு நாமளே மறந்து போனோம்.

அதுதான் சொல்கிறேன், புனைவு இல்லாத வரலாறு என்ற ஒன்றே கிடையாது.

ஆகவே உங்களுக்கு முழு புள்ளிகள் வழங்கப்படுகின்றன. வகுப்பேத்தப்பட்டுளீர் (ஆகையினால் இந்த திரியில் இருந்து வேறு புது திரிக்கு போலாம், வாங்கோ) 😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.