Jump to content

இலங்கை தமிழர்களுக்கானதா சீமானின் அரசியல்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வாத்தியார் said:

இதைத் தான் நானும் சுட்டிக் காட்டுகின்றேன்
சீமான் அவர்கள் இப்போது செய்வது இந்தியத் தமிழர்களின்  ஈழத்து தமிழர்களின் ஆதரவு அலையைத் தன் பக்கம் இழுத்துக் கொள்வதே.
அப்படியான ஒரு அரசியலால் அவரால் எதையும் அடைந்து விட முடியாது.
ஈழத்து அடையாளங்களை அகற்றிவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றி அதன் பின்னர்
ஈழத்தவர்களுக்கு அவர் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யட்டும்

ஈழத்து அடையாளங்களுடன் அரசியல் உச்சத்துக்கு வந்தவர் விஜயகாந்த்.  இதையும் நீங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.

விஜயகாந்த் விட்ட சிறிய தவறுதான் அவரது அரசியல் வீழ்ச்சிக்கு காரணம்.

தமிழ் தமிழன் என்ற உணர்வு தமிழ்நாட்டு மக்களிடம் ஈழத்தமிழனை விட  அங்கு அதிகமாகவே இருக்கின்றது. ஆயினும் எம்மை போல்  அரசியல் பாதை அவர்களிடமும் ஒழுங்கானதாக இல்லை.

Link to comment
Share on other sites

  • Replies 72
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

நான் கட்டுமரத்தையும் நம்ப சொல்லவில்லை. ஆமைக்குஞ்சையும்  நம்ப சொல்லவில்லை.

மகிந்தவை பதவிக்கு கொண்டுவர மறைமுகமாக உதவியதும், இணைத்தலைமை நாடுகளின் அழுத்தங்களை தொடர்சசியாக புறக்கணித்தது உலக வெறுப்புக்கு உள்ளானதும்,  ஐரோப்பிய யூனியன் பிரதிநிதியின் கிளிநொச்சி விஜயத்தின் போது அவரது  நேரடி வேண்டுகோளைக் கூட புறக்கணிதததும், அதன் மூலம்  ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத பட்டியலில் இடம் பெற்றதும் மாவிலறை மூடி ஶ்ரீலங்கா அரசுக்கு உலக அனுதாபம் வரசெய்ததும், இராணுவத்தளபதி மீது தாக்குதல் நடத்தி மறைமுக யுத்த பிரகடனம் செய்ததும்,   கருணாநிதி என்ற சாதாரண  தமிழ் நாட்டு அரசியல்வாதியின் வார்ததை ஜாலத்தை நம்பி என்று புலம் பெயரிகள் சிலர் மக்கள் காதில் பூ சுற்றலாம். ஆனால்  அதை நம்ப மக்கள் அறிவிலிகள் அல்ல. 

 

மகிந்தவை பதவிக்கு கொண்டுவர மறைமுகமாக உதவியதும்

ரணில் யுத்தம் தொடங்கி இருந்தால் நீங்கள் போய் மடுவில் நின்று ஆமியை மறித்து இருப்பீர்களோ?
ஸ்ரீ லங்கா இராணுவம் எப்போது என்ன என்ன ஆயுதம் வாங்கியது ஏன் என்று ஏதாவது அறிவுரீதியான தகவல் தெரியுமா? 

 இணைத்தலைமை நாடுகளின் அழுத்தங்களை தொடர்சசியாக புறக்கணித்தது உலக வெறுப்புக்கு உள்ளானதும்,  

ஜி 8 நாடுகள் 2000 ஆண்டில் என்ன என்ன திட்டம் நிகழ்ச்சி நிரல் தீட்டினார்கள் என்று தேடி சென்று படித்து பாருங்கள் முதலில். அதுக்கப்புறம் எதை புலிகள் புறக்கணித்தார்கள் என்று கொஞ்சம் வில்லா வாரியாக பேசுவோம். 

ஐரோப்பிய யூனியன் பிரதிநிதியின் கிளிநொச்சி விஜயத்தின் போது அவரது  நேரடி வேண்டுகோளைக் கூட புறக்கணிதததும்,

என்ன வேண்டுகோள்?

அவர்கள் மீது பூனகேரியில் நிற்கும்போது மண்டைதீவில் இருந்து செல் அடித்ததாவது தெரியுமா?
அவ்வளவு யுத்தநிறுத்த மீறலை இவர்களுக்கு தெரியாமல் சிங்கள இராணுவம் செய்தது என்பதையம் நம்பியாக வேண்டும் 

அதன் மூலம்  ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத பட்டியலில் இடம் பெற்றதும்

ஐரோப்பிய யூனியன் பயங்கரவாத பட்டியலுக்கு ஐரோப்பிய யூனியன் சொன்ன காரணமாவது தெரியுமா?
ஒவொரு சுற்று பேச்சுக்கும் வந்த சொல்கெய்ம் ஏன் டில்லி சென்று திரும்பினார் என்றாவது தெரியுமா? 

மாவிலறை மூடி ஶ்ரீலங்கா அரசுக்கு உலக அனுதாபம் வரசெய்ததும்,

மாவிலாறு ஏன் மூடினார்கள் என்று எங்கேனும் வாசித்து உண்டா?
மாவிலாறு மூட முன்பு எத்தனை புலிகள் இராணுவத்தால் சுட்டு கொல்லபட்டார்கள் 
ஆயுதங்கள் அற்று அரசியல் வேலைக்கு இருந்த புலிகளுக்கு என்ன நடந்து என்றாவது தெரியுமா? 

இராணுவத்தளபதி மீது தாக்குதல் நடத்தி மறைமுக யுத்த பிரகடனம் செய்ததும்,  

எந்த இராணுவ தளபதி எப்போது?
புலிகளின்குரல் வானொலி மீது தாக்குதல் நடந்த திகதி தெரியுமா? 

கருணாநிதி என்ற சாதாரண  தமிழ் நாட்டு அரசியல்வாதியின் வார்ததை ஜாலத்தை நம்பி என்று புலம் பெயரிகள் சிலர் மக்கள் காதில் பூ சுற்றலாம். ஆனால்  அதை நம்ப மக்கள் அறிவிலிகள் அல்ல. 

இதெல்லாம் உங்கள் புலிவாந்தி மூளைக்கு தெரிய வாய்ப்பில்லை 

ரூவாண்டாவில் டுட்ஸி போராளிகளிடம் ஆயுதம் வாங்கிவிட்டு 
நேரடி கண்காணிப்பில் யு என் இராணுவம் நேரடியாக இருக்கும்போது 

யூ என் இராணுவத்தின் கண்ணுக்கு முன்னேயே வைத்து டுட்ஸி இன மக்கள் 
3 லட்ஷத்துக்கு மேல் வெட்டி கொன்றார்கள் .....வெட்ட போகிறார்கள் என்பது தெரிந்ததும் 
முதல் நாள் யூ என் ஆமி பாதுகாப்பாக வெளியேறவே அவகாசம் கேட்டது 

இதுக்கு உங்கள் இணைத்தலைமை இறைவர்கள் என்ன புடுங்கினார்கள்?  
இந்த அண்டமே அதிர்ந்த மனித படுகொலையை ,, உங்கள் இணைத்தலைமை இறைவர்கள் 
எவ்வாறு திட்டம் வகுத்து நிறைவேற்றினார்கள் என்று முதலில் தேடி வாசித்து 
கொஞ்சமாவது உலகம் பூராக சிறுபான்மை இன மனிதர்கள் அல்ல ....
சிறுபான்மை இன ஆடு மாடு கோழி போன்றவையே அழிக்கப்படுகிறது ஏன் என்று வாசித்து அறியுங்கள்.

பின்பு புலிவாந்தி பற்றி ஆராய்வோம் 

அதை நம்ப மக்கள் அறிவிலிகள் அல்ல. 

உங்கள் வீட்டு கதவுக்கு உள்ளே இருப்பவர்கள் உங்கள் மக்கள் 
நாட்டு மக்கள் எனப்படுபவர் உங்கள் வீட்டு கதவை திறந்து வெளியே வந்தால் இருப்பவர்கள் 
அவர்களில் எல்லோருக்கும் இந்த கொடிய உலகம் என்ன செய்தது என்று தெரியும் .... ஓரளவுக்கு இனி என்ன செய்யும் என்பதும் தெரியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

 

மகிந்தவை பதவிக்கு கொண்டுவர மறைமுகமாக உதவியதும்

ரணில் யுத்தம் தொடங்கி இருந்தால் நீங்கள் போய் மடுவில் நின்று ஆமியை மறித்து இருப்பீர்களோ?
ஸ்ரீ லங்கா இராணுவம் எப்போது என்ன என்ன ஆயுதம் வாங்கியது ஏன் என்று ஏதாவது அறிவுரீதியான தகவல் தெரியுமா? 

 இணைத்தலைமை நாடுகளின் அழுத்தங்களை தொடர்சசியாக புறக்கணித்தது உலக வெறுப்புக்கு உள்ளானதும்,  

ஜி 8 நாடுகள் 2000 ஆண்டில் என்ன என்ன திட்டம் நிகழ்ச்சி நிரல் தீட்டினார்கள் என்று தேடி சென்று படித்து பாருங்கள் முதலில். அதுக்கப்புறம் எதை புலிகள் புறக்கணித்தார்கள் என்று கொஞ்சம் வில்லா வாரியாக பேசுவோம். 

ஐரோப்பிய யூனியன் பிரதிநிதியின் கிளிநொச்சி விஜயத்தின் போது அவரது  நேரடி வேண்டுகோளைக் கூட புறக்கணிதததும்,

என்ன வேண்டுகோள்?

அவர்கள் மீது பூனகேரியில் நிற்கும்போது மண்டைதீவில் இருந்து செல் அடித்ததாவது தெரியுமா?
அவ்வளவு யுத்தநிறுத்த மீறலை இவர்களுக்கு தெரியாமல் சிங்கள இராணுவம் செய்தது என்பதையம் நம்பியாக வேண்டும் 

அதன் மூலம்  ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத பட்டியலில் இடம் பெற்றதும்

ஐரோப்பிய யூனியன் பயங்கரவாத பட்டியலுக்கு ஐரோப்பிய யூனியன் சொன்ன காரணமாவது தெரியுமா?
ஒவொரு சுற்று பேச்சுக்கும் வந்த சொல்கெய்ம் ஏன் டில்லி சென்று திரும்பினார் என்றாவது தெரியுமா? 

மாவிலறை மூடி ஶ்ரீலங்கா அரசுக்கு உலக அனுதாபம் வரசெய்ததும்,

மாவிலாறு ஏன் மூடினார்கள் என்று எங்கேனும் வாசித்து உண்டா?
மாவிலாறு மூட முன்பு எத்தனை புலிகள் இராணுவத்தால் சுட்டு கொல்லபட்டார்கள் 
ஆயுதங்கள் அற்று அரசியல் வேலைக்கு இருந்த புலிகளுக்கு என்ன நடந்து என்றாவது தெரியுமா? 

இராணுவத்தளபதி மீது தாக்குதல் நடத்தி மறைமுக யுத்த பிரகடனம் செய்ததும்,  

எந்த இராணுவ தளபதி எப்போது?
புலிகளின்குரல் வானொலி மீது தாக்குதல் நடந்த திகதி தெரியுமா? 

கருணாநிதி என்ற சாதாரண  தமிழ் நாட்டு அரசியல்வாதியின் வார்ததை ஜாலத்தை நம்பி என்று புலம் பெயரிகள் சிலர் மக்கள் காதில் பூ சுற்றலாம். ஆனால்  அதை நம்ப மக்கள் அறிவிலிகள் அல்ல. 

இதெல்லாம் உங்கள் புலிவாந்தி மூளைக்கு தெரிய வாய்ப்பில்லை 

ரூவாண்டாவில் டுட்ஸி போராளிகளிடம் ஆயுதம் வாங்கிவிட்டு 
நேரடி கண்காணிப்பில் யு என் இராணுவம் நேரடியாக இருக்கும்போது 

யூ என் இராணுவத்தின் கண்ணுக்கு முன்னேயே வைத்து டுட்ஸி இன மக்கள் 
3 லட்ஷத்துக்கு மேல் வெட்டி கொன்றார்கள் .....வெட்ட போகிறார்கள் என்பது தெரிந்ததும் 
முதல் நாள் யூ என் ஆமி பாதுகாப்பாக வெளியேறவே அவகாசம் கேட்டது 

இதுக்கு உங்கள் இணைத்தலைமை இறைவர்கள் என்ன புடுங்கினார்கள்?  
இந்த அண்டமே அதிர்ந்த மனித படுகொலையை ,, உங்கள் இணைத்தலைமை இறைவர்கள் 
எவ்வாறு திட்டம் வகுத்து நிறைவேற்றினார்கள் என்று முதலில் தேடி வாசித்து 
கொஞ்சமாவது உலகம் பூராக சிறுபான்மை இன மனிதர்கள் அல்ல ....
சிறுபான்மை இன ஆடு மாடு கோழி போன்றவையே அழிக்கப்படுகிறது ஏன் என்று வாசித்து அறியுங்கள்.

பின்பு புலிவாந்தி பற்றி ஆராய்வோம் 

அதை நம்ப மக்கள் அறிவிலிகள் அல்ல. 

உங்கள் வீட்டு கதவுக்கு உள்ளே இருப்பவர்கள் உங்கள் மக்கள் 
நாட்டு மக்கள் எனப்படுபவர் உங்கள் வீட்டு கதவை திறந்து வெளியே வந்தால் இருப்பவர்கள் 
அவர்களில் எல்லோருக்கும் இந்த கொடிய உலகம் என்ன செய்தது என்று தெரியும் .... ஓரளவுக்கு இனி என்ன செய்யும் என்பதும் தெரியும் 

விடுதலைப் போராட்டத்தை அழிக்க முடிவெடுத்த பின்னர் எல்லாப் பிழைகளுமே தமிழர் தரப்பின் பிழைகளாகத்தான் நோக்கப்படும். 

இது மனச்சாட்சியுள்ள எவருக்குமே தெரியும். 

இதில் அதிகம் விவாதிக்க ஒன்றுமேயில்லை. 

ஆச்சரியம் என்னவென்றால் சிங்களவன் சமஸ்ரி கேட்கும்போது எங்களுக்கு அது வேண்டாமென்று கூறிய தமிழ் அறிவுக் கொழுந்துகள்தான் போராட்டத்தையும் பிழை என்று கூறுவதுதான். 

🤦🏼‍♂️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

 

மகிந்தவை பதவிக்கு கொண்டுவர மறைமுகமாக உதவியதும்

ரணில் யுத்தம் தொடங்கி இருந்தால் நீங்கள் போய் மடுவில் நின்று ஆமியை மறித்து இருப்பீர்களோ?
ஸ்ரீ லங்கா இராணுவம் எப்போது என்ன என்ன ஆயுதம் வாங்கியது ஏன் என்று ஏதாவது அறிவுரீதியான தகவல் தெரியுமா? 

 இணைத்தலைமை நாடுகளின் அழுத்தங்களை தொடர்சசியாக புறக்கணித்தது உலக வெறுப்புக்கு உள்ளானதும்,  

ஜி 8 நாடுகள் 2000 ஆண்டில் என்ன என்ன திட்டம் நிகழ்ச்சி நிரல் தீட்டினார்கள் என்று தேடி சென்று படித்து பாருங்கள் முதலில். அதுக்கப்புறம் எதை புலிகள் புறக்கணித்தார்கள் என்று கொஞ்சம் வில்லா வாரியாக பேசுவோம். 

ஐரோப்பிய யூனியன் பிரதிநிதியின் கிளிநொச்சி விஜயத்தின் போது அவரது  நேரடி வேண்டுகோளைக் கூட புறக்கணிதததும்,

என்ன வேண்டுகோள்?

அவர்கள் மீது பூனகேரியில் நிற்கும்போது மண்டைதீவில் இருந்து செல் அடித்ததாவது தெரியுமா?
அவ்வளவு யுத்தநிறுத்த மீறலை இவர்களுக்கு தெரியாமல் சிங்கள இராணுவம் செய்தது என்பதையம் நம்பியாக வேண்டும் 

அதன் மூலம்  ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத பட்டியலில் இடம் பெற்றதும்

ஐரோப்பிய யூனியன் பயங்கரவாத பட்டியலுக்கு ஐரோப்பிய யூனியன் சொன்ன காரணமாவது தெரியுமா?
ஒவொரு சுற்று பேச்சுக்கும் வந்த சொல்கெய்ம் ஏன் டில்லி சென்று திரும்பினார் என்றாவது தெரியுமா? 

மாவிலறை மூடி ஶ்ரீலங்கா அரசுக்கு உலக அனுதாபம் வரசெய்ததும்,

மாவிலாறு ஏன் மூடினார்கள் என்று எங்கேனும் வாசித்து உண்டா?
மாவிலாறு மூட முன்பு எத்தனை புலிகள் இராணுவத்தால் சுட்டு கொல்லபட்டார்கள் 
ஆயுதங்கள் அற்று அரசியல் வேலைக்கு இருந்த புலிகளுக்கு என்ன நடந்து என்றாவது தெரியுமா? 

இராணுவத்தளபதி மீது தாக்குதல் நடத்தி மறைமுக யுத்த பிரகடனம் செய்ததும்,  

எந்த இராணுவ தளபதி எப்போது?
புலிகளின்குரல் வானொலி மீது தாக்குதல் நடந்த திகதி தெரியுமா? 

கருணாநிதி என்ற சாதாரண  தமிழ் நாட்டு அரசியல்வாதியின் வார்ததை ஜாலத்தை நம்பி என்று புலம் பெயரிகள் சிலர் மக்கள் காதில் பூ சுற்றலாம். ஆனால்  அதை நம்ப மக்கள் அறிவிலிகள் அல்ல. 

இதெல்லாம் உங்கள் புலிவாந்தி மூளைக்கு தெரிய வாய்ப்பில்லை 

ரூவாண்டாவில் டுட்ஸி போராளிகளிடம் ஆயுதம் வாங்கிவிட்டு 
நேரடி கண்காணிப்பில் யு என் இராணுவம் நேரடியாக இருக்கும்போது 

யூ என் இராணுவத்தின் கண்ணுக்கு முன்னேயே வைத்து டுட்ஸி இன மக்கள் 
3 லட்ஷத்துக்கு மேல் வெட்டி கொன்றார்கள் .....வெட்ட போகிறார்கள் என்பது தெரிந்ததும் 
முதல் நாள் யூ என் ஆமி பாதுகாப்பாக வெளியேறவே அவகாசம் கேட்டது 

இதுக்கு உங்கள் இணைத்தலைமை இறைவர்கள் என்ன புடுங்கினார்கள்?  
இந்த அண்டமே அதிர்ந்த மனித படுகொலையை ,, உங்கள் இணைத்தலைமை இறைவர்கள் 
எவ்வாறு திட்டம் வகுத்து நிறைவேற்றினார்கள் என்று முதலில் தேடி வாசித்து 
கொஞ்சமாவது உலகம் பூராக சிறுபான்மை இன மனிதர்கள் அல்ல ....
சிறுபான்மை இன ஆடு மாடு கோழி போன்றவையே அழிக்கப்படுகிறது ஏன் என்று வாசித்து அறியுங்கள்.

பின்பு புலிவாந்தி பற்றி ஆராய்வோம் 

அதை நம்ப மக்கள் அறிவிலிகள் அல்ல. 

உங்கள் வீட்டு கதவுக்கு உள்ளே இருப்பவர்கள் உங்கள் மக்கள் 
நாட்டு மக்கள் எனப்படுபவர் உங்கள் வீட்டு கதவை திறந்து வெளியே வந்தால் இருப்பவர்கள் 
அவர்களில் எல்லோருக்கும் இந்த கொடிய உலகம் என்ன செய்தது என்று தெரியும் .... ஓரளவுக்கு இனி என்ன செய்யும் என்பதும் தெரியும் 

அவர் இப்படி தான் அவசரத்தில் இடைக்கிடையே கொண்டையை மறைக்க மறந்து ஆவேசமாக எழுதி விடுவார். 

பார்த்தால் தெரியும்

போராட்டத்தின் போது கொண்டையை இழுத்து மூடிக்கொண்டு பல சகாப்தங்களாக வெளி உலகமே தெரியாமல் இருந்தது.☹️

Link to comment
Share on other sites

8 hours ago, Maruthankerny said:

 

மகிந்தவை பதவிக்கு கொண்டுவர மறைமுகமாக உதவியதும்

ரணில் யுத்தம் தொடங்கி இருந்தால் நீங்கள் போய் மடுவில் நின்று ஆமியை மறித்து இருப்பீர்களோ?
ஸ்ரீ லங்கா இராணுவம் எப்போது என்ன என்ன ஆயுதம் வாங்கியது ஏன் என்று ஏதாவது அறிவுரீதியான தகவல் தெரியுமா? 

 இணைத்தலைமை நாடுகளின் அழுத்தங்களை தொடர்சசியாக புறக்கணித்தது உலக வெறுப்புக்கு உள்ளானதும்,  

ஜி 8 நாடுகள் 2000 ஆண்டில் என்ன என்ன திட்டம் நிகழ்ச்சி நிரல் தீட்டினார்கள் என்று தேடி சென்று படித்து பாருங்கள் முதலில். அதுக்கப்புறம் எதை புலிகள் புறக்கணித்தார்கள் என்று கொஞ்சம் வில்லா வாரியாக பேசுவோம். 

ஐரோப்பிய யூனியன் பிரதிநிதியின் கிளிநொச்சி விஜயத்தின் போது அவரது  நேரடி வேண்டுகோளைக் கூட புறக்கணிதததும்,

என்ன வேண்டுகோள்?

அவர்கள் மீது பூனகேரியில் நிற்கும்போது மண்டைதீவில் இருந்து செல் அடித்ததாவது தெரியுமா?
அவ்வளவு யுத்தநிறுத்த மீறலை இவர்களுக்கு தெரியாமல் சிங்கள இராணுவம் செய்தது என்பதையம் நம்பியாக வேண்டும் 

அதன் மூலம்  ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத பட்டியலில் இடம் பெற்றதும்

ஐரோப்பிய யூனியன் பயங்கரவாத பட்டியலுக்கு ஐரோப்பிய யூனியன் சொன்ன காரணமாவது தெரியுமா?
ஒவொரு சுற்று பேச்சுக்கும் வந்த சொல்கெய்ம் ஏன் டில்லி சென்று திரும்பினார் என்றாவது தெரியுமா? 

மாவிலறை மூடி ஶ்ரீலங்கா அரசுக்கு உலக அனுதாபம் வரசெய்ததும்,

மாவிலாறு ஏன் மூடினார்கள் என்று எங்கேனும் வாசித்து உண்டா?
மாவிலாறு மூட முன்பு எத்தனை புலிகள் இராணுவத்தால் சுட்டு கொல்லபட்டார்கள் 
ஆயுதங்கள் அற்று அரசியல் வேலைக்கு இருந்த புலிகளுக்கு என்ன நடந்து என்றாவது தெரியுமா? 

இராணுவத்தளபதி மீது தாக்குதல் நடத்தி மறைமுக யுத்த பிரகடனம் செய்ததும்,  

எந்த இராணுவ தளபதி எப்போது?
புலிகளின்குரல் வானொலி மீது தாக்குதல் நடந்த திகதி தெரியுமா? 

கருணாநிதி என்ற சாதாரண  தமிழ் நாட்டு அரசியல்வாதியின் வார்ததை ஜாலத்தை நம்பி என்று புலம் பெயரிகள் சிலர் மக்கள் காதில் பூ சுற்றலாம். ஆனால்  அதை நம்ப மக்கள் அறிவிலிகள் அல்ல. 

இதெல்லாம் உங்கள் புலிவாந்தி மூளைக்கு தெரிய வாய்ப்பில்லை 

ரூவாண்டாவில் டுட்ஸி போராளிகளிடம் ஆயுதம் வாங்கிவிட்டு 
நேரடி கண்காணிப்பில் யு என் இராணுவம் நேரடியாக இருக்கும்போது 

யூ என் இராணுவத்தின் கண்ணுக்கு முன்னேயே வைத்து டுட்ஸி இன மக்கள் 
3 லட்ஷத்துக்கு மேல் வெட்டி கொன்றார்கள் .....வெட்ட போகிறார்கள் என்பது தெரிந்ததும் 
முதல் நாள் யூ என் ஆமி பாதுகாப்பாக வெளியேறவே அவகாசம் கேட்டது 

இதுக்கு உங்கள் இணைத்தலைமை இறைவர்கள் என்ன புடுங்கினார்கள்?  
இந்த அண்டமே அதிர்ந்த மனித படுகொலையை ,, உங்கள் இணைத்தலைமை இறைவர்கள் 
எவ்வாறு திட்டம் வகுத்து நிறைவேற்றினார்கள் என்று முதலில் தேடி வாசித்து 
கொஞ்சமாவது உலகம் பூராக சிறுபான்மை இன மனிதர்கள் அல்ல ....
சிறுபான்மை இன ஆடு மாடு கோழி போன்றவையே அழிக்கப்படுகிறது ஏன் என்று வாசித்து அறியுங்கள்.

பின்பு புலிவாந்தி பற்றி ஆராய்வோம் 

அதை நம்ப மக்கள் அறிவிலிகள் அல்ல. 

உங்கள் வீட்டு கதவுக்கு உள்ளே இருப்பவர்கள் உங்கள் மக்கள் 
நாட்டு மக்கள் எனப்படுபவர் உங்கள் வீட்டு கதவை திறந்து வெளியே வந்தால் இருப்பவர்கள் 
அவர்களில் எல்லோருக்கும் இந்த கொடிய உலகம் என்ன செய்தது என்று தெரியும் .... ஓரளவுக்கு இனி என்ன செய்யும் என்பதும் தெரியும் 

நன்றி மருதங்கேணி கருத்து களத்தில் தாயகம் தொடர்பான கருத்துக்களில் உங்களுக்கு பிடிக்காத கருத்துகளை யாராவது வைத்தால் "புலிவாந்தி" என்ற ஒற்றை வார்த்தையை கேடயமாக பயன்படுத்தி அதை சமாளிக்கலாம் என்ற நிரந்தர கொள்கையுடையவர் நீங்கள் என்பதால் அது பற்றிய விவாத‍த்தை தவிர்ப்போம். 

நடைபெற்ற ஒவ்வொரு விடயத்திற்கும் ஏதோ எமக்குள் ஒரு சமாதானம் கூறி எமக்குள் திருப்தி அடையலாம். உங்கள் சொந்த திருப்திக்கு  நீங்கள் ஏதோ பதில்களை வழங்கி திருப்தி அடையலாம். ஆகவே அது முக்கியமானதல்ல. கடந்து செல்வோம். ஆனால் முக்கியமான  ஒரு விடயத்தில் நாம் இருவரும் ஒரே கருத்தையே கொண்டிருக்கிறோம். 

நாதமுனி என்னிடம் கேட்ட கேள்விக்கு நான் கொடுத்த பதிலுக்கு உங்கள் பதில் மூலம் வலுச்சேர்த்திருக்கின்றீர்கள். எமது தனிநாட்டு கோரிக்கையையும் அதை அடைய எமது நடவடிக்கைகளும் உலகின் சக்தி வாய்ந்த நாடுகளால் விரும்பப்படாத ஒன்றாக நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது என்பதையே நீங்களும் உங்கள் பதிலில் தெளிவாக கூறியுள்ளீர்கள். எனது இணைத்தலைமை நாடு என்று  எனக்கு  நீங்கள் கூறிய, ஆனால்  நீங்கள் குடியுரிமை பெற்று நீண்ட காலம் அமைதியாக வாழும் உங்கள் நாடு 1997 ல் புலிகளை வெளிநாட்டு பயங்கரவாதிகள் பட்டியிலில் இணைத்த‍தும் 2001 ல் பிரிட்டன் அதை செய்த‍தும் அந்த வகையினதே. சமாதான பேச்சுவார்த்தையில் புலிகள் தம்மை உதாசீனம் செய்த பின்னர் ஐரோப்பிய யூனியன் செய்த‍ததும் அதையே. 

ஒரு சிறிய இனமான நாம் விரும்பியோ விரும்பாமலோ உலக வல்லரசுகளை பகைத்து அவர்களை உதாசீனம் செய்து எமது அரசியல் இலக்குகளை அடைய முடியாது என்பதே எமக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். ஒரு நாட்டை அமைக்க முற்படும் நாம் விரும்பியோ விரும்பாலமோ உலக நாடுகளை அனுசரித்து தான் போகவேண்டும். அது தவறு என்றால் நாம் புறநானூற்று தமிழர்கள். யாருக்கும் அடிபணியோம்  என்று வீரம் பேசி எமது மிகுதி வாழ்வை கழிப்போம். ஏனென்றால் பாதிக்கப்படப்போவது நாமல்லவே. 

 நான் நாதமுனிக்கு எதை கூற  முற்பட்டேனோ அதையே   நீங்களும் உங்கள் பாணியில் கூறியுள்ளீர்கள். அதற்காக உங்களுக்கு நன்றி.

மருதங்கேணி,  எமக்கு அரசியலில் வேறுபட்ட கருத்திருக்கலாம் ஆனால் நட்புடன் இருப்போம். நன்றி.

 

Link to comment
Share on other sites

5 hours ago, Kapithan said:

விடுதலைப் போராட்டத்தை அழிக்க முடிவெடுத்த பின்னர் எல்லாப் பிழைகளுமே தமிழர் தரப்பின் பிழைகளாகத்தான் நோக்கப்படும். 

இது மனச்சாட்சியுள்ள எவருக்குமே தெரியும். 

இதில் அதிகம் விவாதிக்க ஒன்றுமேயில்லை. 

ஆச்சரியம் என்னவென்றால் சிங்களவன் சமஸ்ரி கேட்கும்போது எங்களுக்கு அது வேண்டாமென்று கூறிய தமிழ் அறிவுக் கொழுந்துகள்தான் போராட்டத்தையும் பிழை என்று கூறுவதுதான். 

🤦🏼‍♂️

 

சிங்களவன் சமஸ்டி தருகிறேன் என்று கூறியபோது வேண்டாம் என று சொன்ன அறிவு கோழுந்துகள் யாரும் 1977 இன் பின்னர் உயிருடன் இல்லை. நீங்கள் எந்த அறிவு கொழுந்தைக் கூறுகின்றீர்கள்?  பேரனையா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, tulpen said:

நன்றி மருதங்கேணி கருத்து களத்தில் தாயகம் தொடர்பான கருத்துக்களில் உங்களுக்கு பிடிக்காத கருத்துகளை யாராவது வைத்தால் "புலிவாந்தி" என்ற ஒற்றை வார்த்தையை கேடயமாக பயன்படுத்தி அதை சமாளிக்கலாம் என்ற நிரந்தர கொள்கையுடையவர் நீங்கள் என்பதால் அது பற்றிய விவாத‍த்தை தவிர்ப்போம். 

நடைபெற்ற ஒவ்வொரு விடயத்திற்கும் ஏதோ எமக்குள் ஒரு சமாதானம் கூறி எமக்குள் திருப்தி அடையலாம். உங்கள் சொந்த திருப்திக்கு  நீங்கள் ஏதோ பதில்களை வழங்கி திருப்தி அடையலாம். ஆகவே அது முக்கியமானதல்ல. கடந்து செல்வோம். ஆனால் முக்கியமான  ஒரு விடயத்தில் நாம் இருவரும் ஒரே கருத்தையே கொண்டிருக்கிறோம். 

நாதமுனி என்னிடம் கேட்ட கேள்விக்கு நான் கொடுத்த பதிலுக்கு உங்கள் பதில் மூலம் வலுச்சேர்த்திருக்கின்றீர்கள். எமது தனிநாட்டு கோரிக்கையையும் அதை அடைய எமது நடவடிக்கைகளும் உலகின் சக்தி வாய்ந்த நாடுகளால் விரும்பப்படாத ஒன்றாக நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது என்பதையே நீங்களும் உங்கள் பதிலில் தெளிவாக கூறியுள்ளீர்கள். எனது இணைத்தலைமை நாடு என்று  எனக்கு  நீங்கள் கூறிய, ஆனால்  நீங்கள் குடியுரிமை பெற்று நீண்ட காலம் அமைதியாக வாழும் உங்கள் நாடு 1997 ல் புலிகளை வெளிநாட்டு பயங்கரவாதிகள் பட்டியிலில் இணைத்த‍தும் 2001 ல் பிரிட்டன் அதை செய்த‍தும் அந்த வகையினதே. சமாதான பேச்சுவார்த்தையில் புலிகள் தம்மை உதாசீனம் செய்த பின்னர் ஐரோப்பிய யூனியன் செய்த‍ததும் அதையே. 

ஒரு சிறிய இனமான நாம் விரும்பியோ விரும்பாமலோ உலக வல்லரசுகளை பகைத்து அவர்களை உதாசீனம் செய்து எமது அரசியல் இலக்குகளை அடைய முடியாது என்பதே எமக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். ஒரு நாட்டை அமைக்க முற்படும் நாம் விரும்பியோ விரும்பாலமோ உலக நாடுகளை அனுசரித்து தான் போகவேண்டும். அது தவறு என்றால் நாம் புறநானூற்று தமிழர்கள். யாருக்கும் அடிபணியோம்  என்று வீரம் பேசி எமது மிகுதி வாழ்வை கழிப்போம். ஏனென்றால் பாதிக்கப்படப்போவது நாமல்லவே. 

 நான் நாதமுனிக்கு எதை கூற  முற்பட்டேனோ அதையே   நீங்களும் உங்கள் பாணியில் கூறியுள்ளீர்கள். அதற்காக உங்களுக்கு நன்றி.

மருதங்கேணி,  எமக்கு அரசியலில் வேறுபட்ட கருத்திருக்கலாம் ஆனால் நட்புடன் இருப்போம். நன்றி.

 

தங்கள் உயிரை கூட மண்ணுக்கும் மொழிக்கும் அர்ப்பணித்து போனவர்கள் பற்றி 
டிவிடியில் விடுதலை போராட்டம் பார்த்தவர்கள் யாராக இருந்தாலும் எழுதும்போது 
கொஞ்சம் யோசிக்கவேண்டும். உலகில் தமிழ் இனம் மட்டும் அல்ல 
பெரும்பாண்மை இனத்தால் ஆக்கிரமிக்க பட்டுள்ள எல்லா இனமுமே இன்று அழிவு 
பாதையில்தான் நிற்கிறது .....இதை எம் கண்னமுன்னேயே உலக வல்லாதிக்க நாடுகள் 
செய்துகொண்டு இருக்கின்றன 
மியன்மார் ... காஸ்மீர் ... குர்திஷ் ... பலஸ்தீனியர்கள் ... உகுருஸ் (சீன முஸ்லிம்கள்).... 
அமெரிக்க இந்தியர்கள் ... ஈழ தமிழர்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம் 

இவ்வாறான ஒரு இன அழிப்பு  அதாவது நாசிகளின் யூத அழிப்புப்போல இன்னொன்று இனி உலகில் 
நடக்க கூடாது என்ற ஒற்றை காரணத்துக்காகவே ஜெனீவா உடன்படிக்கை ஏற்படுத்தி உலக வல்லரசுகள் 
ஐ நா வை தோற்றுவித்தார்கள் இன்று இத்தனை இன அழிப்பும் இந்த ஐ நா அதிகாரிகளின் முன்னிலையில் 
அதில் அங்கத்தவர்களாக இருக்கும் நாடுகளின் ஆசிகளுடனும் அவர்களால் தயாரித்து விநியோகிக்கப்படும் 
ஆயுதங்களாலுமே வெற்றிகரமாக நடாத்தபடுகிறது. 

இதுக்கு எதிராக போராடிக்கொண்டு இருப்பவர்கள் போராடினாலும் அழிக்கப்படுவார்கள் 
போராடாமல் இருந்தாலும் அழிக்கப்படுவார்கள். சும்மா இருந்து அழிவதைவிட ஒரு சிறிய பலம் பெற்று 
போராடும்போது அழிவுக்கார்கள் எதிர்பாராத சில நகர்வுகளை செய்து தற்காலிக ஒரு தற்காப்பு நிலையை 
தோற்றுவிக்க முடியும் அதனால்தான் தங்கள் உயிர்கள் போனால்கூட பரவாயில்லை எமது சந்ததி வாழட்டும் 
என்று உலகம் பூராக போராடுகிறார்கள். 

புலிகளை பொறுத்தவரை புலிகளுக்கு எதிரான போரை அமெரிக்கா பிரிட்டன் இஸ்ரேல் பாகிஸ்தான் 
இந்தியா ரஸ்யா சீனா 1982 இல் இருந்தே செய்துகொண்டுதான் இருக்கிறாரார்கள். 1983 இனக்கலவரத்தின் பின்பு இலங்கை ஒரு இன அழிப்பு நாடு என்பது ஐ நா வில் பதியப்பட்டு இருக்கிறது அது இந்திராகாந்தி முன்மொழிந்து  ரஸ்யா ஆதரித்து நிறைவேறியது. அதன் பிரகாரம் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தில்  இலங்கை இன அழிப்பு பட்டியலில்தான் இருந்தது  ... 1997இல் புலிகளை பயங்கரவாத பட்டியலில்  அமெரிக்க போட்டத்தன் முதல் காரணமே அந்த லிஸ்ட்டில் இருந்து இலங்கை அரசை எடுப்பதற்குத்தான். அதன் பின்பு பாகிஸ்தான் ஊடாக இருந்த ஆயுத விநியோகத்தை நேரடியாக அமெரிக்க 
அரசே செய்ய தொடங்கியதோடு இராணுவ பயிற்சி வழங்கவும் தொடங்கியது. அன்றில் இருந்து அமேரிக்கா புலிகளுக்கு எதிரான  போரின் நேரடி பங்குதாராகவே இருந்து வருகிறது. 

இந்திய இராணுவத்துடன் புலிகள் போருக்கு போனபோது 
மரணத்தை தவிர்த்து புலிகளுக்கு வேறு எந்த தெரிவும் இருக்கவில்லை 
இந்திய இராணுவத்துடன் போராடி பிரபாகரன் உயிர் தப்புவார் என்பது 
பிராபகரன் உட்பட இலங்கையில் எங்காவது ஒரு பெட்டிக்கடை வைத்தருந்தவர் 
கூட எதிர்பார்த்திருக்காத ஒன்று. இந்திய இராணுவ இலங்கை வருகையின் நோக்கில் 
பிரகாரனை அழிப்பது புலிகளை அதோடு வழிக்கு கொண்டுவருவது என்பது  
இந்திய இராணுவ தளபதி கரிச்சந்திரா எழுதிய புத்தகத்திலேயே உண்டு. இது இனி என்னுடைய ஊகமோ 
புலிகளின் கருத்தோ அல்ல ... சாதாரணமாக ஆறறிவும் செயலில் இருந்தாலே புரியும். 

ராஜீவ் காந்தி 13ஆவது திருத்த தீர்வை ஜே ஆரிடம் கொடுத்த போதே ஜே ஆர் அதை எறிந்துவிட்டார் 
இந்தியாவின் எதிர்பார்ப்பு மாகாணசபை தேர்தலை கொண்டுவந்தால் அமிர்தலிங்கமே வெல்லுவார் 
புலிகளின் பலம் அதோடு குறையும்போது சந்தர்ப்பம் பார்த்து பிரபாகரனை தட்டிவிட்டு மற்றவர்களையும் 
வழிக்கு கொண்டுவருவதே ......... தேர்தலை முதலில் புலிகள் புறக்கணிக்க முதல் காரணம் இந்தியா கூட்டிவந்த  வானரங்கள் மீண்டும் அரசியலில் ஈடுபடுவதை அவர்கள் விரும்பி இருக்கவில்லை 
ஆனாலும் அப்போதைய பல்கலைக்கழக பேராசிரியர் உட்பட பலர் புலிகளை தேர்தலில் பங்கேடுக்குமாறே வற்புறுத்த  புலிகள் நேரடியாக தாம் போட்டியிடாது ... சில பேர்களை அறிவித்தார்கள் 
அப்போதைய சூழலை சிங்கள அரசுதான் இந்தியாவுக்கு கூறியது புலிகளின் வெற்றி தடுக்க முடியாதது என்று 
பின்புதான் இந்தியா ஓரளவுக்கு புரிய தொடங்கியது தேர்தல் வைத்தாலும் புலிகளுக்கே வெற்றி என்பது. 
அப்போது தேர்தல் என்ற தெரிவை இந்தியா கைவிட தொடங்கியது. (இது வீடியோவில் இருக்கிறது பிரபாகரனுக்கும்  ஆண்டன் பாலசிங்கம் அவர்களுக்கும் ராஜிவ் டில்லியில் சொன்னது அவர்கள் இருவருக்கும் ஒரு அமைச்சர் பதவி  நிச்சயம் இருக்கும் என்றும் கூடுதல் அமைச்சர்களை பெறுவது என்பது இவர்களின் பிரச்சாரம் மக்கள் ஆதரவை  பொறுத்தது என்று.  ராஜிவ் தமிழ் நாட்டில் இருந்து போகும் அரசியல் வாதிகளுடன் பேசுவது போன்றே  பேசிக்கொண்டு இருந்தார் ....அவ்வாறான ஒரு மோடன்தான் ராஜிவ்) 
இப்படியே படி படியாக குமரப்பா புலேந்திரன் கைது வரை வந்தபோது .... புலிகள் இந்தியாவை கேட்டது 
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி அவர்களை இந்திய இராணுவம் பொறுப்பெடுக்க வேண்டும் என்பதே 
பலாலி இந்திய இராணுவ தளபதி கூறுகிறார் (இவர் புலிகளின் அனுதாபியாகவே இருந்தார் .. உடல்களை கையளித்தபோது அவர் கொஞ்சம் கண்கலங்கியதாக  சொன்னார்கள்) தான் டிக்ஸித்தின் உத்தரவுக்கு காத்த்திருக்கிறேன்  என்று (அது உண்மையாகவும் இருக்கலாம்) டிக்சித் தான் டில்லிக்கு காத்திருப்பதாக மாலை  அறிவிக்கிறார் ... அன்று அதிகாலை சிங்கள இராணுவம் கொழுப்புக்கு ஏற்றுவதுக்கு போனபோது அவர்கள் குப்பி அடித்தார்கள். ( அதில் தப்பிய நால்வரில் ஒருவர் எங்கள் ஊரை சேர்ந்தவர் அவர் மூலம் எங்களுக்கு  நடந்த அனைத்த்தும் தெரியும்) 

இப்போது புலிகளுக்கு இருந்தது இரண்டு தெரிவுதான் 
மற்றவர்களும் குப்பி அடித்து சாவது அல்லது மீண்டும் ஆயுதங்களை தூக்குவது.
இரண்டிலும் மரணம் என்பது யாபேருக்கும் தெரிந்த ஒன்று 
இந்தியா ஒவ்வாரு நாளும் எவ்வாறு ஏமாற்றியது என்பது அப்போது பேப்பர் வாசித்த அனைவருக்கும் தெரியும்.

நான் குமரப்பா புலேந்திரனின் தகனத்துக்கு சென்று இருந்தேன் 
வெற்றிலைக்கேணியை சேர்ந்த இருவர் அதில் இறந்து இருந்தார்கள் 
தவக்குமார் ரெஜினோல்ட் அவர்கள் உடல்கள் வீட்டுக்கு கொண்டுவந்து பின்னேரம் 2 மணிக்கு 
கொண்டு சென்றார்கள் அப்போதே நாமும் சென்றோம் ... தெருவில்வெளியில் அப்போதே புலிகள் ஆயுதங்களுடன்தான் நின்றார்கள் 

திருநெல்வேலியில் இந்திய இராணுவம் புலிகளை அந்த அளவுக்கு குறைவான மதிப்பீடு 
இல்லாமல் .... ஒரு 25 புலிகளாவது தங்களை தாக்குவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் 
இன்னும் ஒரு கெலியில் இறங்கி இருப்பின் ... தலைவர் பிரபாகரன் அன்றே இறந்து இருப்பார் 
புலிகளுக்கும் அது எதிர்பாராத தாக்குதல்தான் ..  

புலிகளுடைய பயணம் என்பது இந்த ஏகாபத்தியத்தின் பிடியில் இருந்து 
தப்பும் தற்காப்பு போலத்தான் ஒவ்வெருநாளும் கழிந்தது 
புலிகள் விட்டு கொடுக்கிறதுக்கும் விடாமல் கொடுக்கிறதுக்கும் எதுவுமே இருக்கவில்லை 
புலிகள் மீதான குறிப்பாக தலைமை மீதான தாக்குதல் திட்டங்கள் யுத்தத்தை விட சமாதான காலங்களில்தான் அருகருகாக வந்து போயிருக்கிறது 

இன்று எங்களை அழிக்கும் சிங்களவர்களுக்கும் 
நாளை இதே நிலைமைதான் ... சம்மந்தர் போல சீனாவுக்கு 
தலை ஆட்ட பெயருக்கு ஒரு சிங்கள பொம்பை இருக்கும் 
அவர்களுடைய ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அரங்கேறும் 

Link to comment
Share on other sites

9 minutes ago, Maruthankerny said:

தங்கள் உயிரை கூட மண்ணுக்கும் மொழிக்கும் அர்ப்பணித்து போனவர்கள் பற்றி 
டிவிடியில் விடுதலை போராட்டம் பார்த்தவர்கள் யாராக இருந்தாலும் எழுதும்போது 
கொஞ்சம் யோசிக்கவேண்டும். உலகில் தமிழ் இனம் மட்டும் அல்ல 
பெரும்பாண்மை இனத்தால் ஆக்கிரமிக்க பட்டுள்ள எல்லா இனமுமே இன்று அழிவு 
பாதையில்தான் நிற்கிறது .....இதை எம் கண்னமுன்னேயே உலக வல்லாதிக்க நாடுகள் 
செய்துகொண்டு இருக்கின்றன 
மியன்மார் ... காஸ்மீர் ... குர்திஷ் ... பலஸ்தீனியர்கள் ... உகுருஸ் (சீன முஸ்லிம்கள்).... 
அமெரிக்க இந்தியர்கள் ... ஈழ தமிழர்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம் 

இவ்வாறான ஒரு இன அழிப்பு  அதாவது நாசிகளின் யூத அழிப்புப்போல இன்னொன்று இனி உலகில் 
நடக்க கூடாது என்ற ஒற்றை காரணத்துக்காகவே ஜெனீவா உடன்படிக்கை ஏற்படுத்தி உலக வல்லரசுகள் 
ஐ நா வை தோற்றுவித்தார்கள் இன்று இத்தனை இன அழிப்பும் இந்த ஐ நா அதிகாரிகளின் முன்னிலையில் 
அதில் அங்கத்தவர்களாக இருக்கும் நாடுகளின் ஆசிகளுடனும் அவர்களால் தயாரித்து விநியோகிக்கப்படும் 
ஆயுதங்களாலுமே வெற்றிகரமாக நடாத்தபடுகிறது. 

இதுக்கு எதிராக போராடிக்கொண்டு இருப்பவர்கள் போராடினாலும் அழிக்கப்படுவார்கள் 
போராடாமல் இருந்தாலும் அழிக்கப்படுவார்கள். சும்மா இருந்து அழிவதைவிட ஒரு சிறிய பலம் பெற்று 
போராடும்போது அழிவுக்கார்கள் எதிர்பாராத சில நகர்வுகளை செய்து தற்காலிக ஒரு தற்காப்பு நிலையை 
தோற்றுவிக்க முடியும் அதனால்தான் தங்கள் உயிர்கள் போனால்கூட பரவாயில்லை எமது சந்ததி வாழட்டும் 
என்று உலகம் பூராக போராடுகிறார்கள். 

புலிகளை பொறுத்தவரை புலிகளுக்கு எதிரான போரை அமெரிக்கா பிரிட்டன் இஸ்ரேல் பாகிஸ்தான் 
இந்தியா ரஸ்யா சீனா 1982 இல் இருந்தே செய்துகொண்டுதான் இருக்கிறாரார்கள். 1983 இனக்கலவரத்தின் பின்பு இலங்கை ஒரு இன அழிப்பு நாடு என்பது ஐ நா வில் பதியப்பட்டு இருக்கிறது அது இந்திராகாந்தி முன்மொழிந்து  ரஸ்யா ஆதரித்து நிறைவேறியது. அதன் பிரகாரம் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தில்  இலங்கை இன அழிப்பு பட்டியலில்தான் இருந்தது  ... 1997இல் புலிகளை பயங்கரவாத பட்டியலில்  அமெரிக்க போட்டத்தன் முதல் காரணமே அந்த லிஸ்ட்டில் இருந்து இலங்கை அரசை எடுப்பதற்குத்தான். அதன் பின்பு பாகிஸ்தான் ஊடாக இருந்த ஆயுத விநியோகத்தை நேரடியாக அமெரிக்க 
அரசே செய்ய தொடங்கியதோடு இராணுவ பயிற்சி வழங்கவும் தொடங்கியது. அன்றில் இருந்து அமேரிக்கா புலிகளுக்கு எதிரான  போரின் நேரடி பங்குதாராகவே இருந்து வருகிறது. 

இந்திய இராணுவத்துடன் புலிகள் போருக்கு போனபோது 
மரணத்தை தவிர்த்து புலிகளுக்கு வேறு எந்த தெரிவும் இருக்கவில்லை 
இந்திய இராணுவத்துடன் போராடி பிரபாகரன் உயிர் தப்புவார் என்பது 
பிராபகரன் உட்பட இலங்கையில் எங்காவது ஒரு பெட்டிக்கடை வைத்தருந்தவர் 
கூட எதிர்பார்த்திருக்காத ஒன்று. இந்திய இராணுவ இலங்கை வருகையின் நோக்கில் 
பிரகாரனை அழிப்பது புலிகளை அதோடு வழிக்கு கொண்டுவருவது என்பது  
இந்திய இராணுவ தளபதி கரிச்சந்திரா எழுதிய புத்தகத்திலேயே உண்டு. இது இனி என்னுடைய ஊகமோ 
புலிகளின் கருத்தோ அல்ல ... சாதாரணமாக ஆறறிவும் செயலில் இருந்தாலே புரியும். 

ராஜீவ் காந்தி 13ஆவது திருத்த தீர்வை ஜே ஆரிடம் கொடுத்த போதே ஜே ஆர் அதை எறிந்துவிட்டார் 
இந்தியாவின் எதிர்பார்ப்பு மாகாணசபை தேர்தலை கொண்டுவந்தால் அமிர்தலிங்கமே வெல்லுவார் 
புலிகளின் பலம் அதோடு குறையும்போது சந்தர்ப்பம் பார்த்து பிரபாகரனை தட்டிவிட்டு மற்றவர்களையும் 
வழிக்கு கொண்டுவருவதே ......... தேர்தலை முதலில் புலிகள் புறக்கணிக்க முதல் காரணம் இந்தியா கூட்டிவந்த  வானரங்கள் மீண்டும் அரசியலில் ஈடுபடுவதை அவர்கள் விரும்பி இருக்கவில்லை 
ஆனாலும் அப்போதைய பல்கலைக்கழக பேராசிரியர் உட்பட பலர் புலிகளை தேர்தலில் பங்கேடுக்குமாறே வற்புறுத்த  புலிகள் நேரடியாக தாம் போட்டியிடாது ... சில பேர்களை அறிவித்தார்கள் 
அப்போதைய சூழலை சிங்கள அரசுதான் இந்தியாவுக்கு கூறியது புலிகளின் வெற்றி தடுக்க முடியாதது என்று 
பின்புதான் இந்தியா ஓரளவுக்கு புரிய தொடங்கியது தேர்தல் வைத்தாலும் புலிகளுக்கே வெற்றி என்பது. 
அப்போது தேர்தல் என்ற தெரிவை இந்தியா கைவிட தொடங்கியது. (இது வீடியோவில் இருக்கிறது பிரபாகரனுக்கும்  ஆண்டன் பாலசிங்கம் அவர்களுக்கும் ராஜிவ் டில்லியில் சொன்னது அவர்கள் இருவருக்கும் ஒரு அமைச்சர் பதவி  நிச்சயம் இருக்கும் என்றும் கூடுதல் அமைச்சர்களை பெறுவது என்பது இவர்களின் பிரச்சாரம் மக்கள் ஆதரவை  பொறுத்தது என்று.  ராஜிவ் தமிழ் நாட்டில் இருந்து போகும் அரசியல் வாதிகளுடன் பேசுவது போன்றே  பேசிக்கொண்டு இருந்தார் ....அவ்வாறான ஒரு மோடன்தான் ராஜிவ்) 
இப்படியே படி படியாக குமரப்பா புலேந்திரன் கைது வரை வந்தபோது .... புலிகள் இந்தியாவை கேட்டது 
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி அவர்களை இந்திய இராணுவம் பொறுப்பெடுக்க வேண்டும் என்பதே 
பலாலி இந்திய இராணுவ தளபதி கூறுகிறார் (இவர் புலிகளின் அனுதாபியாகவே இருந்தார் .. உடல்களை கையளித்தபோது அவர் கொஞ்சம் கண்கலங்கியதாக  சொன்னார்கள்) தான் டிக்ஸித்தின் உத்தரவுக்கு காத்த்திருக்கிறேன்  என்று (அது உண்மையாகவும் இருக்கலாம்) டிக்சித் தான் டில்லிக்கு காத்திருப்பதாக மாலை  அறிவிக்கிறார் ... அன்று அதிகாலை சிங்கள இராணுவம் கொழுப்புக்கு ஏற்றுவதுக்கு போனபோது அவர்கள் குப்பி அடித்தார்கள். ( அதில் தப்பிய நால்வரில் ஒருவர் எங்கள் ஊரை சேர்ந்தவர் அவர் மூலம் எங்களுக்கு  நடந்த அனைத்த்தும் தெரியும்) 

இப்போது புலிகளுக்கு இருந்தது இரண்டு தெரிவுதான் 
மற்றவர்களும் குப்பி அடித்து சாவது அல்லது மீண்டும் ஆயுதங்களை தூக்குவது.
இரண்டிலும் மரணம் என்பது யாபேருக்கும் தெரிந்த ஒன்று 
இந்தியா ஒவ்வாரு நாளும் எவ்வாறு ஏமாற்றியது என்பது அப்போது பேப்பர் வாசித்த அனைவருக்கும் தெரியும்.

நான் குமரப்பா புலேந்திரனின் தகனத்துக்கு சென்று இருந்தேன் 
வெற்றிலைக்கேணியை சேர்ந்த இருவர் அதில் இறந்து இருந்தார்கள் 
தவக்குமார் ரெஜினோல்ட் அவர்கள் உடல்கள் வீட்டுக்கு கொண்டுவந்து பின்னேரம் 2 மணிக்கு 
கொண்டு சென்றார்கள் அப்போதே நாமும் சென்றோம் ... தெருவில்வெளியில் அப்போதே புலிகள் ஆயுதங்களுடன்தான் நின்றார்கள் 

திருநெல்வேலியில் இந்திய இராணுவம் புலிகளை அந்த அளவுக்கு குறைவான மதிப்பீடு 
இல்லாமல் .... ஒரு 25 புலிகளாவது தங்களை தாக்குவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் 
இன்னும் ஒரு கெலியில் இறங்கி இருப்பின் ... தலைவர் பிரபாகரன் அன்றே இறந்து இருப்பார் 
புலிகளுக்கும் அது எதிர்பாராத தாக்குதல்தான் ..  

புலிகளுடைய பயணம் என்பது இந்த ஏகாபத்தியத்தின் பிடியில் இருந்து 
தப்பும் தற்காப்பு போலத்தான் ஒவ்வெருநாளும் கழிந்தது 
புலிகள் விட்டு கொடுக்கிறதுக்கும் விடாமல் கொடுக்கிறதுக்கும் எதுவுமே இருக்கவில்லை 
புலிகள் மீதான குறிப்பாக தலைமை மீதான தாக்குதல் திட்டங்கள் யுத்தத்தை விட சமாதான காலங்களில்தான் அருகருகாக வந்து போயிருக்கிறது 

இன்று எங்களை அழிக்கும் சிங்களவர்களுக்கும் 
நாளை இதே நிலைமைதான் ... சம்மந்தர் போல சீனாவுக்கு 
தலை ஆட்ட பெயருக்கு ஒரு சிங்கள பொம்பை இருக்கும் 
அவர்களுடைய ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அரங்கேறும் 

நன்றி மருதங்கேணி. நீண்ட கதை எழுதியுள்ளீர்கள். அனேகமானவை புலிகளின் வெளியீடுகளில் ஏற்கனவே  பல ஆண்டுகளுக்கு முன் வாசித்தவை தான்.  அவற்றைத் திருப்பி மினக்கெட்டு நேரம் எடுத்து எழுதியதற்கு நன்றிகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

 நீண்ட கதை எழுதியுள்ளீர்கள். 

நல்லா வருவியள்????😡😡😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, tulpen said:

நான் கட்டுமரத்தையும் நம்ப சொல்லவில்லை. ஆமைக்குஞ்சையும்  நம்ப சொல்லவில்லை.

மகிந்தவை பதவிக்கு கொண்டுவர மறைமுகமாக உதவியதும்,  இணைத்தலைமை நாடுகளின் அழுத்தங்களை தொடர்சசியாக புறக்கணித்தது உலக வெறுப்புக்கு உள்ளானதும்,  ஐரோப்பிய யூனியன் பிரதிநிதியின் கிளிநொச்சி விஜயத்தின் போது அவரது  நேரடி வேண்டுகோளைக் கூட புறக்கணிதததும், அதன் மூலம்  ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத பட்டியலில் இடம் பெற்றதும் மாவிலறை மூடி ஶ்ரீலங்கா அரசுக்கு உலக அனுதாபம் வரசெய்ததும், இராணுவத்தளபதி மீது தாக்குதல் நடத்தி மறைமுக யுத்த பிரகடனம் செய்ததும்,   கருணாநிதி என்ற சாதாரண  தமிழ் நாட்டு அரசியல்வாதியின் வார்ததை ஜாலத்தை நம்பி என்று புலம் பெயரிகள் சிலர் மக்கள் காதில் பூ சுற்றலாம். ஆனால்  அதை நம்ப மக்கள் அறிவிலிகள் அல்ல. 

அப்ப நீங்கள் சொல்லவருவது, ரதி அக்கா சொல்வதுதானே.

அம்மான் வாஸ் கரெக்ட்.... அப்படித்தானே....

Chennai will not abandon people, who believed the city, says actor Vivek |  Tamil Movie News - Times of India

****

மரணத்தின் செய்தி முதலே தெரிந்தால், மனிதன் இறைவனை நினைப்பானா?

இதுதான் நடக்கப் போகிறது என்று புரிந்து விட்டால், உயில் எழுத ஆரம்பித்து விடுவீர்கள், இல்லையா.

அதேதான். சாடை அறியாதவன் சர்வ முட்டாள். தலைமைக்கு புரிந்து விட்டது என்று நினைக்கிறேன். சீக்கிரமே முடித்து துலையுங்கள் என்று முடிவுக்கு வந்து இருக்கலாம்.

மக்களையும் சேர்த்து அழித்து முடித்த, சிங்களம் சிக்கலை சந்திக்க போகிறது.

நீங்கள் சொன்ன அதே முட்டாள் தனத்தினை, சிங்களம் செய்கிறது, அதன் முடிவும் தெரிகிறது. 

துப்பாக்கியால் அடைய முடியாததை, வல்லரசு போட்டிகள் வழங்கலாம். பார்ப்போம்.

1 hour ago, tulpen said:

சிங்களவன் சமஸ்டி தருகிறேன் என்று கூறியபோது வேண்டாம் என று சொன்ன அறிவு கோழுந்துகள் யாரும் 1977 இன் பின்னர் உயிருடன் இல்லை. நீங்கள் எந்த அறிவு கொழுந்தைக் கூறுகின்றீர்கள்?  பேரனையா? 

சிங்களவன் எப்ப சமஸ்டி தாறன் எண்டு சொன்னவன் என்று ஒருக்கா விளங்கப்படுத்துவியலே....

சும்மா, கதை விட்டதை சொல்ல கூடாது. உளப்பூர்வமாக தருவதாக இருந்து, அதனை தமிழர் தரப்பு மறுத்ததாக இருக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

அப்ப நீங்கள் சொல்லவருவது, ரதி அக்கா சொல்வதுதானே.

அம்மான் வாஸ் கரெக்ட்.... அப்படித்தானே....

Chennai will not abandon people, who believed the city, says actor Vivek |  Tamil Movie News - Times of India

****

மரணத்தின் செய்தி முதலே தெரிந்தால், மனிதன் இறைவனை நினைப்பானா?

இதுதான் நடக்கப் போகிறது என்று புரிந்து விட்டால், உயில் எழுத ஆரம்பித்து விடுவீர்கள், இல்லையா.

அதேதான். சாடை அறியாதவன் சர்வ முட்டாள். தலைமைக்கு புரிந்து விட்டது என்று நினைக்கிறேன். சீக்கிரமே முடித்து துலையுங்கள் என்று முடிவுக்கு வந்து இருக்கலாம்.

மக்களையும் சேர்த்து அழித்து முடித்த, சிங்களம் சிக்கலை சந்திக்க போகிறது.

நீங்கள் சொன்ன அதே முட்டாள் தனத்தினை, சிங்களம் செய்கிறது, அதன் முடிவும் தெரிகிறது. 

துப்பாக்கியால் அடைய முடியாததை, வல்லரசு போட்டிகள் வழங்கலாம். பார்ப்போம்.

சிங்களவன் எப்ப சமஸ்டி தாறன் எண்டு சொன்னவன் என்று ஒருக்கா விளங்கப்படுத்துவியலே....

சும்மா, கதை விட்டதை சொல்ல கூடாது. உளப்பூர்வமாக தருவதாக இருந்து, அதனை தமிழர் தரப்பு மறுத்ததாக இருக்க வேண்டும். 

உண்மையில் மிகுந்த ஆத்திரமும் கோபமும் வருகிறது

யாழில் இருந்து போகும் போது அப்படி போக விரும்பவில்லை.😡😡😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது மக்களிடையே சரித்திர புரிதல் இல்லை.

பாடபுத்தங்களில், இலங்கையினை போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர்கள் ஆண்டார்கள் என்பதை வைத்து அப்படியே நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இடையில் இருந்த வன்னி ராஜ்ஜியம் காரணமாக, வடக்கு தமிழர் பகுதி, போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் அவர்களால், தனியாகவே ஆளப்பட்டது.

1834ம் ஆண்டு வரை, இலங்கை ஒரே நாடாக இருக்கவில்லை. இந்தியாவும் அதுபோல ஒரு நாடாக இருக்கவில்லை. இரண்டையுமே கைப்பற்றி ஆண்டது கார்ப்பரேட் கம்பெனியான கிழக்கு இந்திய கொம்பனி. பிரிட்டிஷ் அரசு அல்ல.

இந்த நிறுவனத்தின் பெரும் ஊழல் காரணமாக, அங்கே வேலைக்கு சென்றவர்கள் பெரும் பணக்கார்களாக திரும்ப, முதலீடு செய்தவர்கள் நஷ்ட கணக்கு தொடர்ந்து தரப்பட, அவர்களின் நெருக்குவாரத்தில் சந்தர்ப்பம் பார்த்து, 1858ல் கம்பெனியை கலைத்து, இரண்டு நாடுகளையும் பிரிட்டிஷ் அரசு நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது.

உலக வரலாறில் பெரும் பேரரசு ஒன்றினை நடாத்திய கார்பொரேட் நிறுவனம், கிழக்கு இந்திய கொம்பனி மட்டுமே. அந்த நிறுவனத்தின், உயர் அதிகாரி, சர்மன், பிரிட்டிஷ், ஸ்பானிஷ், போர்துக்கீஸ் முடிதரித்த மன்னர்களுக்கு இணையாக ஒரு சக்கரவர்த்தியாக திகழ்ந்ததை, ஜீரணிக்க முடியவில்லை.   1857ல் இந்தியாவில் நடந்த சிப்பாய் கலகத்தினை தொடர்ந்து, கொம்பனி கலைக்கப்பட்டது.

ஆக நாம் போர்த்துக்கேயரின் கீழ் 42 ஆண்டுகளும், ஒல்லாந்தரின் கீழ் 140 ஆண்டுகளும், கிழக்கு இந்திய கொம்பனியின் கீழ், 61 ஆண்டுகளும், பிரிட்டிஷ் அரசின் கீழ் 90 ஆண்டுகளும், இப்போது சிங்களவன் கீழ், 73 ஆண்டுகளும் அடிமையாக வாழ்கிறோம்.

மறுபக்கம், கடந்த 502 ஆண்டுகாலமாக இந்திய தமிழர்கள் அந்நியர்கள் தம்மை ஆள விட்டு உள்ளார்கள்.

1520 அளவில் விஜய நகர பேரரசும், பின்னர், கிழக்கு இந்திய கொம்பனியும், பின்னர் பிரிட்டிஷ் அரசும், இறுதியாக இந்திய அரசுமாக விடுதலை என்ற பெயரில், அடிமையாக வாழ்கின்றனர். 

**

பொடி, படிக்கவில்லையே, படிப்பு சரிவராவிடில், ஏத்துங்கோ, சுவிசுக்கு, ஜெர்மனிக்கு, கனடாவுக்கு  என்று இருப்பது போல, அன்று இங்கிலாந்திலும் ஒரு காலம் இருந்தது.

பொடி, படிக்கவில்லையே, படிப்பு சரிவராவிடில், ஏத்துங்கோ, கப்பலில், இந்தியா, இலங்கை போட்டு மனுசனா நாலு காசு உழைச்சு வரட்டும்.

அப்படி, ரௌடியாக் திரிந்த ஒருவரை பிடித்து அனுப்பிவிட்டார் தந்தை. பொடியின் பெயர், கிளைவ் ராபர்ட். சென்னையில் இருந்து, படையுடன் போய், கல்கத்தாவில் பிரஞ்சு, இஸ்லாமிய படையினை முறியடித்து, கிழக்கிந்திய கொம்பனி பேரரசுக்கு முதல் வித்து இட்டார்.

பெரும் பணக்காராக திரும்பினார். கப்பம், திருட்டு என்று குத்தம் சுமத்தப்பட்டாலும், உங்களுக்கு இந்தியா என்ற பெரும் முத்தினை நானே எடுத்து தந்தேன், என் பெருமையினை, திருட்டு குத்தம் சொல்லி மலின படுத்தவேண்டாம் என்று பிரிட்டிஷ் பாராளுமன்ற விசாரணை குழு முன் தினா வெட்டாக கூறிய நபர் அவர். 

விசாரணையில் இருந்து தப்பினார். ஆனாலும் போதை பொருள் பாவனை காரணமாக, லண்டன் Mayfair என்ற பணக்காரர்கள் வாழும் பகுதியில், இருந்த தனது வீட்டில் இறந்து கிடந்தார். இந்த Mayfair பணக்காரத்தனமே பல பிரிட்டிஷ் உயர்மட்டத்தினரை எரிச்சல் அடைய வைத்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

ஆச்சரியம் என்னவென்றால் சிங்களவன் சமஸ்ரி கேட்கும்போது எங்களுக்கு அது வேண்டாமென்று கூறிய தமிழ் அறிவுக் கொழுந்துகள்தான் போராட்டத்தையும் பிழை என்று கூறுவதுதான். 

இது எப்ப நடந்தது?🤔

 

ஈழம் தவிர எல்லாம் தருவோம் என்று பிரேமதாஸ சொன்னதைக் குறிப்பிடுகின்றீர்களா?

அல்லது

பண்டா-செல்வா ஒப்பந்தம் 

அல்லது

டட்லி-செல்வா ஒப்பந்தம் 

அல்லது

....

 

தமிழ் மிரரில் வந்த வரலாற்றுத் தொடர் யாழில் இருக்கின்றது. நேரம் இருந்தால் கொஞ்சம் படிக்கலாம்..

 

Link to comment
Share on other sites

37 minutes ago, கிருபன் said:

இது எப்ப நடந்தது?🤔

 

ஈழம் தவிர எல்லாம் தருவோம் என்று பிரேமதாஸ சொன்னதைக் குறிப்பிடுகின்றீர்களா?

அல்லது

பண்டா-செல்வா ஒப்பந்தம் 

அல்லது

டட்லி-செல்வா ஒப்பந்தம் 

அல்லது

....

 

தமிழ் மிரரில் வந்த வரலாற்றுத் தொடர் யாழில் இருக்கின்றது. நேரம் இருந்தால் கொஞ்சம் படிக்கலாம்..

 

கபிதன் கூறியது 1929 ல் இலங்கைக்கு சமஸ்டி தீர்வை சிங்கள தரப்பில் இருந்து பண்டாரநாயக்கா பிரிட்டிஷ் அரசிடம் வலியுறுத்தியதைப் பற்றி என்று.  அப்போது அரசியலில் இருந்த எவரும் 1977 இன் பின்னர் உயிருடன் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

கபிதன் கூறியது 1929 ல் இலங்கைக்கு சமஸ்டி தீர்வை சிங்கள தரப்பில் இருந்து பண்டாரநாயக்கா பிரிட்டிஷ் அரசிடம் வலியுறுத்தியதைப் பற்றி என்று.  அப்போது அரசியலில் இருந்த எவரும் 1977 இன் பின்னர் உயிருடன் இல்லை. 

1929ல் பிரிட்டிஷ் அரசு காலத்தில், சமஸ்டி ஒரு சீரியஸ் கோரிக்கையாக அல்லது, விவாதத்துக்குரிய ஒரு விடயமாக இருந்திருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?

இரண்டாம் யுத்த காலத்துக்கு பின்னர் தான், பிரிட்டனின் இரும்பு பிடி தளரும் சாத்தியம் தெரிந்தது. முதலில் இவர்கள் போகட்டும், நாம் பிறகு பார்க்கலாம் என்று நினைத்தார்கள்.

அது தவறு என்று காலம் நிரூபித்தது.
 

Link to comment
Share on other sites

16 hours ago, nunavilan said:

தமிழகத்தில் புதிய ஆட்சி வந்திருகிறது. அது தமிழக மக்களின் தீர்ப்பு. இதில் ஈழத்தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? ஒரே வரியில் சொன்னால் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை தமது நோக்கு நிலைகளில் இருந்து எப்படி வெற்றிகரமாக கையாளலாம் என்று சிந்திப்பதே பொருத்தமாயிருக்கும்.

தமிழகம் எனப்படுவது தட்டையான எகபரிமாணம் கொண்ட ஒரு மக்கள்தொகுதி அல்ல. அது பல பரிமாணங்களைக் கொண்ட பல அடுக்குகளைக் கொண்ட ஒரு கலவை.  முதலாவது அடுக்கு தமிழக அரசு. அது ஒரு மாநில அரசு. இந்திய மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும் அரைச் சமஸ்டி கட்டமைப்பு. கவனியுங்கள் அது ஒரு முழுச் சமஸ்டி கட்டமைப்பு அல்ல.

இரண்டாவது தமிழகத்தில் உள்ள கட்சிகள். மூன்றாவதாக தமிழகத்திலுள்ள ஈழ உணர்வாளர்கள் அல்லது செயற்பாட்டாளர்களர்கள்.நாலாவது அடுக்கு  தமிழகத்தில் உள்ள சாதாரண ஜனங்கள். ஐந்தாவதாக சிவில் சமூகங்களையும் ஊடகங்களையும் கூறலாம்.இந்த ஐந்து அடுக்குகளையும் ஒரே விதமாக அணுக முடியாது. ஒரே விதமாக கையாளவும் முடியாது.

முதலாவதாக மாநில அரசுக் கட்டமைப்பு.தமிழக அரசை அதன் வரையறைகளுக்குள் வைத்து விளங்கிக்கொள்ள வேண்டும். அது எதைச் செய்ய முடியுமோ அதைத்தான் எதிர்பார்க்கலாம்.ஒரு மாநில அரசாக அதற்கு இருக்கக்கூடிய வரையறைகளின் அடிப்படையில்தான் அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு எதையும் செய்யமுடியும்..

இரண்டாவது தமிழகத்தில் உள்ள கட்சிகள்.தமிழகத்திலுள்ள கட்சிகளில் ஈழத்தமிழர்களுக்கு நெருக்கமான கட்சிகளும் உண்டு. நெருக்கம் குறைந்த கட்சிகளும் உண்டு. எப்படியானாலும் இக்கட்சிகள் யாவும் அங்கேயுள்ள தேர்தல் அரசியலுக்கு உட்பட்டவை. எனவே ஈழத் தமிழர் விவகாரத்தையும் அவர்கள் தேர்தல் அரசியலுக்கு ஊடாகவே கையாள முயல்வார்கள். அதில் தேர்தல் நோக்குநிலையிலான நலன்கள் இருக்கும். அந்த நலன்களின் அடிப்படையில்தான் ஈழத் தமிழர் விவகாரம் கையாளப்படும். இதில் ஈழத் தமிழர்களுக்கு நெருக்கமான சில அரசியல்வாதிகள் உண்டு. அவர்கள் ஈழத்தமிழர்களுக்காக ஆபத்துக்களை சந்தித்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக ஈழத்தமிழர்கள் பொறுத்து மாறாத நிலைப்பாட்டோடு காணப்படுகிறார்கள்.அவர்களோடு ஈழத்தமிழர்கள் மானசீகமான உறவுகளை வைத்துக் கொள்ளலாம். ஆனால் கட்சி நலன் என்று வரும்பொழுது குறிப்பாக தேர்தல் அரசியல் என்று வரும் பொழுது அவர்கள் தமிழகத்தின் கள யதார்த்தத்துக்கு ஏற்பவே முடிவெடுப்பார்கள். அதில் ஈழத்தமிழர்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை.

மூன்றாவது தமிழகத்தில் உள்ள செயற்பாட்டாளர்கள். இவர்கள் தேர்தல் நோக்குநிலை அற்றவர்கள். கொள்கை ரீதியாக ஈழத் தமிழர்களோடு நெருங்கி வருவார்கள். இவர்களோடு கொள்கை அடிப்படையில் கூட்டு வைத்துக் கொள்ளலாம். அது ஒருவிதத்தில் மாறாத உறவாகவும் இருக்கும்.

நாலாவது சாதாரண தமிழக மக்கள். இதுதான் பெரிய தொகை. எல்லா கட்சிகளிலும் இவர்கள் உண்டு. ஈழத் தமிழர்கள் என்றால் அவர்கள் இன ரீதியாக கொதித்து எழுவார்கள். மொழிரீதியாக கொதித்து எழுவார்கள். அவர்களுடைய கட்சித் தலைவர்கள் அவர்களை தேர்தல் நோக்கு நிலைகளில் இருந்து வழிநடத்தக் கூடும். ஆனால் ஈழத்தமிழர்களுக்கும் சாதாரண தமிழக மக்களுக்கும் இடையிலான உறவு என்பது தூய்மையானது. அரசியல் நலன்கள் அற்றது.சுயநலம் அற்றது.அதிலுள்ள உண்மை மற்றும் உணர்வு ஒருமைப்பாடு  காரணமாகத்தான் தமிழகத்தில் இதுவரையிலும் 19 பேர் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்திருக்கிறார்கள்.

எனவே தமிழகத்தின் சாதாரண ஜனங்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையிலான உறவுகள் ஒப்பீட்டளவில் புனிதமானவை. அந்த உறவை ஈழத்தமிழர்கள் மதிக்க வேண்டும். ஆனால் இந்த சாதாரண தமிழக மக்கள்தான் ஈழத் தமிழர்களால் விரும்பப்படுகின்ற அல்லது வெறுக்கப்படுகின்ற தலைவர்களைத் தெரிந்தெடுக்கிறார்கள். எனவே தமிழகத்தின் தலைவர்களை குறித்து கருத்து கூறும் பொழுதும் தமிழக தலைவர்களை அணுகும் போதும் சாதாரண தமிழக மக்களின் உணர்வுகளை மதித்தே எதையும் செய்ய வேண்டும்.இதுவிடயத்தில் சாதாரண தமிழக மக்களை பகைநிலைக்கு தள்ளாத ஒரு நிதானப்போக்கை ஈழத்தமிழர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

ஐந்தாவது ஊடகங்களும் சிவில் அமைப்புக்களும்.கருத்துருவாக்கிகளும்.இங்கேயும் ஈழத்தமிழர்களுக்காக  நலன்சாராது விசுவாசமாக உழைப்பவர்கள் உண்டு.

மேற்கண்டவற்றின் அடிப்படையில் தொகுத்துச் சிந்தித்தால் ஈழத்தமிழ் நோக்கு நிலையில் இருந்து தமிழகத்தை எப்படி கையாள வேண்டும் என்ற ஒரு தெளிவான வழி வரைபடம் கிடைக்கும். துரதிஸ்டவசமாக ஈழத்தமிழர்களிடம் அவ்வாறான வழிவரைபடம் எதுவும் கிடையாது. ஆயுதப்போராட்ட காலத்தில் இருந்து இன்றுவரையிலும் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. தமிழகத்துக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையில் தொடர்பாடல் மையங்கள் என்று கருதத்தக்க அலுவலகங்கள் அல்லது தகவல் வழங்கும் நிலையங்கள் தமிழகத்தில் இல்லை. குறைந்தபட்சம் ஈழத்தமிழ் அகதிகளின் நலன்களைக் கவனிப்பதற்குக்கூட கட்சிகளிடம் பொருத்தமான கட்டமைப்புக்கள் இல்லை.தமிழக ஊடகங்களுக்கும் ஈழத்தமிழ் ஊடகங்களுக்கும் இடையில் ஒரு பொதுவான தொழில்சார் இடையூடாட்டக் கட்டமைப்பும் இல்லை.தமிழகத்திலுள்ள கருத்துருவாக்கிகளுக்கும் ஈழத்தமிழ் கருத்துருவாக்கிகளுக்கும் இடையிலும் ஒரு இடையூடாடட்டப் பரப்பு இல்லை.தமிழகத்து சிவில் அமைப்புகளுக்கும் ஈழுத்து சிவில்அமைப்புகளுக்கும் இடையிலும் பொதுவான ஒரு இடையூடாடட்டத் தளம் கிடையாது.

எனவே கடந்த பல தசாப்தங்களாக ஈழத் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் இடையூடாடக்கூடிய பொதுப்பரப்புகளை கட்டமைப்புகளை ஈழத்தமிழர்கள் உருவாகியிருக்கவில்லை. தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் ஆதரவு செயற்பாட்டாளர்களும் கட்சிகளும் கூட அதைச் செய்திருக்கவில்லை. குறிப்பாக ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின்னர் மோசமாக சேதமடைந்த நிலைமைகளை சீர்செய்யும் விதத்தில் தீர்க்கதரிசனம் மிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.உதாரணமாக,ராஜீவ் காந்தி கொல்லப்பட முன்பு ஈழத் தமிழர்களுக்கு மிக ஆதரவாக காணப்பட்ட தமிழகத்தின் இடதுசாரிச் சிந்தனையாளர்களில் ஒருவரான எஸ்.வி. ராஜதுரை போன்றவர்கள் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபின் ஈழத்தமிழர்களை நோக்கி  இன்றுவரையிலும் முன்னரளவுக்கு நெருங்கிவரவில்லை என்பதை இங்கே சுட்டிக்காட்டவேண்டும்.

இவ்வாறான பாரதூரமான ஒரு வெற்றிடத்தில் தமிழகத் தலைவர்கள் ஈழத் தமிழர்களுக்காகத் தியாகம் செய்ய வேண்டும் என்று ஒரு பகுதி ஈழத்தமிழர்கள் எதிர்பார்கிறார்கள்.தமிழகத் தலைவர்கள் மட்டுமல்ல தென்னிலங்கையில் இருக்கும் கட்சித் தலைவர்கள் செயற்பாட்டாளர்கள் பொறுத்தும் ஒருபகுதி ஈழத்தமிழர்களின் நோக்குநிலை அணுகுமுறை அவ்வாறுதான் இருக்கிறது.உலகிலுள்ள எல்லாருமே எங்களை நேசிக்க வேண்டும் எங்களுக்காகத் தியாகம் செய்யவேண்டும் என்று ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் விரும்புகிறார்கள். ஆனால் அது ஒரு அப்பாவித்தனமான விருப்பம். ஏனெனில் தாயகத்துக்கு வெளியே இருப்பவர்களும் ஈழத்தமிழர்கள் அல்லாத வெளி இனத்தவர்களும் அவரவருக்கேயான அரசியல் சூழ்நிலைகளில் கைதிகளே.அவரவர் தங்களுடைய நிலைமைகளுக்குள்ளிருந்துதான் ஈழத்தமிழர்களுக்காக எதையும் செய்யமுடியும்.

உதாரணமாக மனோகணேசன். அவர் ஒரு தென்னிலங்கை மைய அரசியல்வாதி.அவர் ஒரு தமிழ்த் தேசியவாதியாக இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை. அவர் இனவாதத்துக்கு எதிரான ஒரு தமிழ் அரசியல்வாதியாக இருந்தாலே போதும்.அதுவே ஈழத்தமிழர்களுக்கு ஒரு பலம்.

அடுத்த உதாரணம் சிங்கள திரைக்கலைஞர்கள் மற்றும் மனித உரிமைவாதிகள். இவர்கள் இனவாதத்துக்கு எதிராக நிலைப்பாடு எடுத்தாலே போதும். அவர்கள் தமிழ்தேசியவாதிகளாக இருக்கவேண்டும் என்று எப்படி எதிர்பார்ப்பது?

இது தமிழகத்திற்கும் பொருந்தும். ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் தமிழகம் ஈழத் தமிழர்களுக்கு ஒரு பின்தளமாக இருந்தது.இது வரையிலும் 19பேர் தமிழகத்தில் தீக்குளித்திருக்கிறார்கள்.இவைகாரணமாக ஈழத்தமிழர்கள் இந்தியாவை தாயகம் என்று அழைத்துக் கொண்டு அளவுக்குமிஞ்சி நம்பிக்கைகளை முதலீடு செய்கிறார்கள் ; அளவுக்கு மிஞ்சி தமிழகத்தலைவர்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.இது ஒருவகையில் வெளியாருக்காக காத்திருக்கும் அரசியலில் ஒரு கிளைதான். வெளியாருக்காகக் காத்திருப்பது என்பதே தன் பலமிழந்து வெளிநோக்கி காத்திருப்பதுதான். அது அடிப்படையிலேயே பலவீனமான அரசியல். அந்த பலவீனம்தான் மற்றவர்கள் எல்லாரும் தங்களுக்காக தியாகம் செய்ய வேண்டும் என்று அளவுக்கு மிஞ்சி எதிர்பார்ப்பதும் ஆகும்.

ஆனால் அரசியல்உறவுகள் அவ்வாறு உண்மையானவை அல்ல. நலன்சாரா உறவுகளும் அல்ல. அவை முழுக்கமுழுக்க நலன்சார் உறவுகளே. இதைப் புத்திபூர்வமாக விளங்கிக் கொண்டால் ஈழத்தமிழர்கள் தமிழகத் தலைவர்களிடம் அளவுக்குமிஞ்சி எதிர்பார்க்க மாட்டார்கள். அவ்வாறு எதிர்பார்த்து அதில் ஏமாற்றம் அடையும்போது அளவுக்குமிஞ்சி வெறுக்கவும் மாட்டார்கள். கடந்த 12 ஆண்டுகளாக சமூக வலைத்தளங்களில் நிகழும் உரையாடல்களை தொகுத்துப் பார்க்கும் எவருக்கும் இது தெளிவாகத் தெரியும்.சமூகவலைத்தளங்கள் இது விடயத்தில் முழுத் தமிழர்களையும் பிரதிபலிக்கவில்லை என்பதனை இக்கட்டுரை ஏற்றுக் கொள்கிறது. எனினும் ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினரின் எதிர்பார்ப்பு அது என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.

இவ்வாறான ஒரு பின்னணியில் இப்போது தமிழகத்தில் ஒரு புதிய அரசாங்கம் வந்திருக்கிறது.அந்த அரசாங்கத்தை எப்படி நெருங்க வேண்டும்? எந்த அடிப்படையில் நெருங்க வேண்டும்?யாருக்கூடாக நெருங்க வேண்டும்?யாரை வைத்து யாரை கையாளவேண்டும்?  போன்ற எல்லா உபாயங்களை முதலில் ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் முதலில் ஈழத்தமிழர்கள் இதுதொடர்பில் ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வரவேண்டும். தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் தங்களுக்கிடையே ஐக்கியப்பட்டு ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அது ஒரு விதத்தில் எனது கட்டுரைகளில் நான் திரும்பத் திரும்பக் கூறுவது போல ஈழத்தமிழர்களுக்கான வெளியுறவு கட்டமைப்புத்தான்.  அந்த வெளியுறவு கொள்கையின் ஒரு பகுதியாக தமிழகத்தை எவ்வாறு கையாள்வது என்பதற்கும் ஒரு வழி வரைபடம் தெளிவாக உருவாக்கப்பட வேண்டும்.

தமிழகத்தின் புதிய அரசாங்கத்தில் ஈழத் தமிழர்களோடு தொடர்ச்சியாக நெருக்கமாக நிற்கும் வைகோவிற்கு நான்கு ஆசனங்கள் உண்டு. மற்றொருவர் திருமாவளவன்.அவருடைய கட்சிக்கும் 4 ஆசனங்கள் உண்டு. இது தவிர திமுகவிற்குள்ளும் மருத்துவர் எழிலனைப் போல பலர் ஈழத்தமிழர்களோடு நெருக்கமான மானசீகமான உறவை கொண்டிருக்கிறார்கள். பாரதிய ஜனதாவுக்குள்ளும் வானதி சிறினிவாசன் புலம்பெயந்த தமிழர்களோடு நெருக்கமாயுள்ளார்.அவர்களைப்போல மேலும் புதிய ஆளுமைகளை எப்படி சம்பாதிக்கலாம் என்று ஈழத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

இடதுசாரி மரபில் வந்த ஒரு தமிழக நண்பர் அடிக்கடி கூறுவார் தமிழகத்தில் ஈழத்தமிழ் ஆதரவு என்பது ஒரு உள்ளுறையும் சக்தி. அதை ஒரு தூலமான சக்தியாக மாஸ் போர்ஸ் ஆக மாற்ற வேண்டும் என்று. ஆம்.அதை ஈழத்தமிழர்களின் ஒத்துழைப்போடு தமிழக தலைவர்களும் செயற்பாட்டாளர்களும்தான் செய்ய முடியும்.அதை ஈழத்தமிழர்கள் நேரடியாக செய்ய முடியாது.

http://www.nillanthan.com/4980/?fbclid=IwAR0wd7CnmQFY2qhsfPLJS3XDI-4DKW-ZmoEfDVTYQjqNCnpRrqjA1sghbYo

இணைப்புக்கு நன்றி நுணா. மிகவும் தரமான வெறுப்பு உவப்பு அற்ற ஒரு கட்டுரை.

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

1929ல் பிரிட்டிஷ் அரசு காலத்தில், சமஸ்டி ஒரு சீரியஸ் கோரிக்கையாக அல்லது, விவாதத்துக்குரிய ஒரு விடயமாக இருந்திருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?

வரலாற்றில் நடந்ததாக கூறப்படும் ஒரு விடயத்தை வரலாற்று புத்தகங்களில் தான் தேட வேண்டுமே தவிர இங்கு வழமையான  விடுப்பு கதை போல் ஊகிக்க முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, tulpen said:

வரலாற்றில் நடந்ததாக கூறப்படும் ஒரு விடயத்தை வரலாற்று புத்தகங்களில் தான் தேட வேண்டுமே தவிர இங்கு வழமையான  விடுப்பு கதை போல் ஊகிக்க முடியாது. 

வரலாறு பெரும்பாலும் ஊகிப்பு சேர்ந்ததாகவே இருக்கும் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா? 

Link to comment
Share on other sites

5 minutes ago, Nathamuni said:

வரலாறு பெரும்பாலும் ஊகிப்பு சேர்ந்ததாகவே இருக்கும் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா? 

வரலாறு என்றால் எப்போதோ  பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த மன்னர் கால வரலாறுகளை பற்றி இங்கு  பேசப்படவில்லை. அங்கு கூட பல கோணத்திலான வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையிலேயே அந்த ஊகிப்பு இடம் பெறும் 

 வரலாற்று குறிப்புக்கள் திகதி வாரியாக பேணப்பட்ட மிக அண்மைக்காலத்தில் நடை பெற்ற விடயங்களுக்கு ஊகிப்பு தேவையில்லை. அதற்கான வரலாற்று குறிப்புகள் எங்கு இருக்கின்றன என்பதை தேடுவதே சரியானதாக இருக்கும். அதை தேடும் சோம்பேறித்தனத்துக்காக தனிநபர் ஊகிப்புக்களை வரலாறாக கொள்ள முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, tulpen said:

வரலாறு என்றால் எப்போதோ  பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த மன்னர் கால வரலாறுகளை பற்றி இங்கு  பேசப்படவில்லை. அங்கு கூட பல கோணத்திலான வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையிலேயே அந்த ஊகிப்பு இடம் பெறும் 

 வரலாற்று குறிப்புக்கள் திகதி வாரியாக பேணப்பட்ட மிக அண்மைக்காலத்தில் நடை பெற்ற விடயங்களுக்கு ஊகிப்பு தேவையில்லை. அதற்கான வரலாற்று குறிப்புகள் எங்கு இருக்கின்றன என்பதை தேடுவதே சரியானதாக இருக்கும். அதை தேடும் சோம்பேறித்தனத்துக்காக தனிநபர் ஊகிப்புக்களை வரலாறாக கொள்ள முடியாது. 

கேட்ட கேள்விக்கு தெளிவாக ஒரு சொல் பதில் தரவும். (இல்லாவிடில் புள்ளிகள் வழங்கப்படமாட்டாது 🧐)

1929... கிட்டத்தட்ட 100 வருடங்கள் முன்பு... 

Link to comment
Share on other sites

4 minutes ago, Nathamuni said:

கேட்ட கேள்விக்கு தெளிவாக ஒரு சொல் பதில் தரவும். (இல்லாவிடில் புள்ளிகள் வழங்கப்படமாட்டாது 🧐)

1929... கிட்டத்தட்ட 100 வருடங்கள் முன்பு... 

20 ம் நூற்றாண்டின் ஆரம்பம். தகவல்கள் பேணப்படும் பிரிட்டிஷ் ஆட்சியின் அரச மட்டத்தில் நடைபெற்ற விடயம். நூறு வருடம் என்பது வரலாற்றில் மிக அண்மை. அதை  அதிகம் என்று கூறும் அளவுக்கு இருக்கும்  நீங்கள் புள்ளி வழங்க போவதாக வேறு கூறுகின்றீர்கள்.😂😂😂😂😂 உங்கள் புள்ளிகள் எனக்கு வேண்டாம். 

வரலாற்று பதிவேடுகளை, புத்தகங்களை முறைப்படி தேடுவதன் மூலமே தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். நிச்சயமாக நேரத்தை செலவிடவேண்டி இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, tulpen said:

20 ம் நூற்றாண்டின் ஆரம்பம். தகவல்கள் பேணப்படும் பிரிட்டிஷ் ஆட்சியின் அரச மட்டத்தில் நடைபெற்ற விடயம். நூறு வருடம் என்பது வரலாற்றில் மிக அண்மை. அதை  அதிகம் என்று கூறும் அளவுக்கு இருக்கும்  நீங்கள் புள்ளி வழங்க போவதாக வேறு கூறுகின்றீர்கள்.😂😂😂😂😂 உங்கள் புள்ளிகள் எனக்கு வேண்டாம். 

வரலாற்று பதிவேடுகளை, புத்தகங்களை முறைப்படி தேடுவதன் மூலமே தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். நிச்சயமாக நேரத்தை செலவிடவேண்டி இருக்கும். 

போனகிழமை எங்களுக்கு விலாவாரியா என்ன நடந்தது எண்டு நாமளே மறந்து போனோம்.

அதுதான் சொல்கிறேன், புனைவு இல்லாத வரலாறு என்ற ஒன்றே கிடையாது.

ஆகவே உங்களுக்கு முழு புள்ளிகள் வழங்கப்படுகின்றன. வகுப்பேத்தப்பட்டுளீர் (ஆகையினால் இந்த திரியில் இருந்து வேறு புது திரிக்கு போலாம், வாங்கோ) 😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.