Jump to content

பரீட்சை முடிவுகள்: பிள்ளைகளை குறை கூறுவதை நிறுத்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சை முடிவுகள்: பிள்ளைகளை குறை கூறுவதை நிறுத்துங்கள்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

இந்தவாரம் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளைத் தொடர்ந்த எதிர்வினைகளை, சில நாள்களாக நேரடியாகவும் சமூக வலைத்தளங்களிலும் காணக்கிடைத்தன.   

முடிவுகள் வெளியாகிவிட்டன; இதனுடன் தொடர்புடைய தரப்புகள் செய்யக் கூடியதும் செய்ய வேண்டியதும் இரண்டுதான். முதலாவது, பரீட்சை எழுதிய மாணவர்களும் அவர்தம் பெற்றோரும் செய்யவேண்டியது. அது, ‘அடுத்தது என்ன?’ என்ற வினாவைத் தொடுப்பதாகும்.  

 இரண்டாவது, கற்பித்த ஆசிரியர்களும் பாடசாலைகளும் செய்ய வேண்டியவை. இம்முறை முடிவுகளில் இருந்து கற்ற பாடங்கள் என்ன? செய்ய தவறுகள் என்ன? செய்ய வேண்டியது என்ன என்பதை, சுயவிமர்சன நோக்கில் ஆராய்வதும் முன்னேற்றுவதற்கு வழிகாண்பதும் ஆகும்.  

ஆனால், இவை இரண்டும் நடப்பதாகத் தெரியவில்லை. பரீட்சையில் தோற்ற மாணவர்கள் மீது பழியைப் போட்டுவிட்டு, எல்லோரும் தப்பித்து விடுகிறார்கள். இது தீர்வல்ல; இது வளமான எதிர்காலச் சந்ததிக்கான வழியுமல்ல.  

இலங்கையில் கல்வி, கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக, மிகுந்த நெருக்கடியை எதிர்நோக்குகின்றது. இந்நிலையில், ‘கல்வி எதற்காக’ என்ற வினாவையும், ‘கல்வி யாருக்காக’ என்ற வினாவையும் கேட்பது தவிர்க்க இயலாதது.   
நம்முடைய கல்வி முறை, கடந்த 50 வருடங்களாகப் பல மாற்றங்களைக் கண்டுள்ளது. இன்று நம்மிடையே உள்ள பாடசாலைக் கல்விமுறை, ஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப்பட்டது. கொலனியச் சூழலில், கொலனிய நிர்வாகத் தேவைகளை முதன்மைப்படுத்தி உருவான கல்வி முறை, கொலனியத்தின் கீழ் ஏற்பட்ட சமூக மாற்றங்களை உள்வாங்கியும் அதன் பின்பான மாற்றங்களுக்கு அமையவும் மாற்றங்களுக்கு உட்பட்டது.   

எனினும், கல்வி புகட்டும் முறை, பாடசாலை வகுப்பறை சார்ந்தே பேசப்பட்டாலும், கடந்த 25 வருட காலத்துக்குள் பாடசாலைகள், கல்வி முறை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள சீரழிவு காரணமாக, கல்வி முறையில் சீர்திருத்தத்தைப் புகுத்தினாலும் அது எதிர்மாறான விளைவுகளையே ஏற்படுத்தி உள்ளது.  

‘எல்லோருக்கும் இலவசக் கல்வி’ என்ற கொள்கையும் பல்கலைக்கழகம் வரையான அதன் நீடிப்பும், கல்வி வாய்ப்புகளைப் பரவலாக்கியது. இதனடிப்படையில், எழுதவும் வாசிக்கவுமான அறிவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டால், நம் கல்வி முறை, ஆசியாவில் வெற்றிகரமான ஒன்றே! ஆனால், கல்வியை அவ்வாறு மதிப்பிடல் சரியாகாது.   

ஏனெனில், அனைவருக்கும் கல்வி வாய்ப்பையோ, எல்லாப் பாடசாலைகளிலும் ஒப்பிடத்தக்க கல்வித் தரத்தையோ உறுதிசெய்ய, இலவசக் கல்விமுறையால் இயலவில்லை. சாதி, வர்க்க, இன அடிப்படைகளில் மக்கள் பிரிவுகளுக்கு நெடுங்காலம் மறிபட்ட கல்வி வாய்ப்பு, மிக மெதுவாகவே வந்து சேர்ந்தது.   

எமது கல்விமுறையானது, சமூகப் பயனுள்ள மனிதர்களை உருவாக்குகின்றதா என்பது, நாம் எல்லோரும் கேட்க வேண்டிய அடிப்படையான வினா. இன்று நமது கல்வி முறை, நாட்டினதோ மக்களினதோ நலன்களை முதன்மைப்படுத்துகின்ற ஒன்றல்ல. அது எஜமானர்களது கட்டளைகளுக்கமைய இயங்கக் கூடிய, சிற்றூழியர்களை உற்பத்தி செய்யும் ஒரு கருவியாக மாறிவிட்டது.   

இன்னொருபுறம் நமது கல்வி, வணிக மயமாகிவிட்டது. பரீட்சைப் பெறுபேறுகளே கல்வித் தொழிற்சாலைகளின் உற்பத்திப் பண்டங்களாகி விட்டன. பெறுபேறுகளே அனைத்தையும் தீர்மானிக்கின்றன. வெற்றி தோல்வியின் அளவுகோல் அதுவே! இது பிள்ளைகளையே பாதிக்கின்றது.  

எமது பாடத்திட்டத்தில், விஞ்ஞானக் கற்பித்தலின் ஆய்வுகூடக்கூறு, மோசமாகக் குறைந்துள்ளது. ஆய்வுகூடங்கள் இன்மை, வளப்பற்றாக்குறை என்பன இதில் பிரதானமானவை.   

பாடத்திட்டங்கள் மிகப்பெரியதாகவும் ஏராளமான தரவுகளை உடையதாகவும் அமைந்துள்ளன. மாணவர்கள் அவற்றைப் படிப்பதை விடுத்துத் தகவல்களை மனனஞ்செய்ய முற்படுகின்றனர். இது மாணவரின் ஆய்ந்தறியும் திறனைக் கெடுத்துள்ளது.   

இணையத்தினூடு உடனடியாகத் தகவல்களைப் பெறக்கூடியமையும் கேள்வியின்றித் தகவல்களை ஏற்கும் போக்கும், பிரச்சினையை மேலும் மோசமாக்கியுள்ளது. இதன் மிகக்கேடான விளைவுகளை, பல்கலைக்கழகங்களில் கற்கின்ற மாணவர்களின் நடத்தை உறுதிசெய்கிறது.   

ஒருபுறம் உலகமும் கற்றலும் வேகமாக நவீனமாகையில், நமது வகுப்பறைக் கல்வி, பாரம்பரிய அறிவு வழங்கல் மாதிரியில் இருந்து அதிகம் விலகவில்லை. இதைச் சாத்தியமாக்க, பாடசாலை ஆசிரியர்களை மீள்பயிற்சிக்கு உட்படுத்துகிற தேவை மிகமுக்கியமானது. ஆனால், அதில் கவனம் செலுத்தப்படுவதில்லை.   

மேலும், பாடசாலைக் கல்வி முறையின் தொடர்ச்சியான உயர்கல்வியானது, எவ்வாறு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களுடன் பொருந்துகின்றது என்பது பற்றியோ, பாடசாலைக் கல்வியையும் பல்கலைக்கழகக் கல்வியையும் தொடர்ந்து, தொழிலொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு ஏதுவான, தொழில் பயிற்சிகளுக்கான திட்டங்கள் என்ன என்பது பற்றியோ, போதிய கவனம் எதுவும் இல்லாமலே, கல்விச் சீர்திருத்தங்கள் வருகின்றன.   

ஏட்டுப்படிப்பைவிட, நடைமுறை சார்ந்த விடயங்களுக்கு அழுத்தம் தரவேண்டும் என்பது, இன்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால், அதைச் செயற்படுத்துவதாகக் கல்விமுறையோ, பாடசாலைகளோ இல்லை. கற்றலுக்கு புறம்பான செயற்பாடுகளைப் பயனற்றதாக நோக்கும் போக்கு, ஆசிரியர்களிடமும் பெற்றோரிடமும் அதிகரித்துள்ளது.   

இந்தக் கல்வி முறைமை, மாணவர்களது தனிப்பட்ட மேம்பாட்டுக்கோ, சமூக மேம்பாட்டுக்கோ போதியதுமல்ல; உகந்ததுமல்ல. இன்றைய பாடசாலைகள், சமூக மேம்பாட்டுக்கும் சமூக உணர்வுக்கும் ஆற்றும் பங்கு மிகவும் குறுகி விட்டது. பல்கலைக்கழகக் கல்வியும் அதே விதமாகச் சீர்குலைந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.  

மாணவரின் பாடசாலை வேலைச் சுமை, முன்பை விட அதிகரித்துள்ளது. தனியார் கற்றலுக்கு (டியூசன்) போகுமாறு பெற்றோரும் ஆசிரியர்களும் மாணவர்களை உந்துவது, சுமையை மோசமாக்குகின்றது. பரீட்சையை நோக்காகக் கொண்ட கல்வி அணுகுமுறை, கல்வித் தரத்தின் சரிவுக்கு ஒருபுறம் பங்களிக்க, மறுபுறம் மாணவர்கள் மீதான மிகையான சுமையும் காரணியானது. எமது கல்விமுறைச் சீரழிவுக்கு, மிகவும் பங்களித்த விடயங்களில் ஒன்று, தனியார் கல்வி நிலையங்களின் வருகையும் தனியார் கற்பித்தலும் ஆகும்.  

பாடசாலைகளோடு ஒப்பிடக்கூடியளவு கல்வியில் ஈடுபடும் கட்டத்தை, தனியார் கல்வி நிலையங்கள் எட்டியுள்ளன. முழுமையாகப் பரீட்சையை மட்டுமே நோக்காகக் கொண்ட தனியார் கல்வி நிலையங்கள், மாணவர்களைப் பரீட்சைக்கு தயார்படுத்தும் தொழிற்சாலைகளாகி விட்டன. இது மாணவர்களின் சுயகற்றலையும் அறிவுத்தேடலையும் சிதைக்கின்றது; கற்றலைப் பரீட்சைக்குரியதாக மட்டும் சுருக்குகிறது.  

தனியார் கற்பித்தல் என்பது, முறையான பாடசாலைக் கல்விக்கு மட்டுமன்றி, அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற இலக்குக்கும் குழிபறித்துள்ளது. பாடசாலை ஆசிரியர்கள், தனியார் கல்வி நிலையங்களையே நம்பி இருக்கிறார்கள். பாடசாலை மாணவர்கள், தனியார் கற்றலை மேற்கொள்வதால் பாடசாலையில் ஆசிரியர்கள் கற்பிக்காமல் இருப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது.   

மறுபுறம், இதே ஆசிரியர்கள் இக்கல்வி நிலையங்களில் கற்பிப்பதன் மூலம் பணமீட்டுகிறார்கள். காலையில் பாடசாலையில் வெண்கட்டியைக் கையால் தொடாதவர்கள், மாலையில் தொண்டை கிழிய, ஆடையெல்லாம் வெண்கட்டித் துகள்கள் நிறைய, கற்பிக்கும் எத்தனையோ பேரை நாமறிவோமல்லவா? முதலில் பிள்ளைகளிடத்தில் குற்றம் காண்பதை நிறுத்துவோம்.   

நல்ல பெறுபேறுகளைப் பெற்று, பல்கலைக்கழகங்களுக்குச் செல்வதால், வளமான சமூகம் உருவாகும் என்ற மாயையை நாம் முதலில் தகர்த்தெறிவோம். போட்டியும் பொறாமையும் குழிபறிப்புகளும் நிறைந்தவையாக எமது பல்கலைக்கழகங்கள் திகழ்கின்றனவே? பகடிவதை என்ற பெயரில், மனநோயாளர்கள் தங்கள் வக்கிரங்களை நிறைவேற்றுகிறார்களே? அதற்கு பல்கலைகழகமே, மறைமுகமாகத் துணை நிற்கிறதே? இவைதான் வளமான சமூகத்தின் அறிகுறிகளா?   

இதிலிருந்து நாம் விடுதலை பெறுவது எவ்வாறு என்பதே, நம்முன்னுள்ள சவால். எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்தவும் எதையும் ஆராய்ந்து அறியவும், எந்த நிபுணத்துவத்தையும் எதிர்த்து வாதாடவும் ஆற்றலும் உறுதியும் கொண்டஓர் இளம் தலைமுறை உருவாக, நாம் என்ன செய்யமுடியும்?   

நமது கல்வி நிறுவன அமைப்புகளின் வரையறைகளுக்குள் இது இயலுமானதல்ல. பழைமையில் ஊறிச் சீரழிந்த ஓர் அமைப்பால், இதைச் செய்ய இயலாது. சமூக ஈடுபாடும் சமூக நீதிக்கான வேட்கையும் அநீதிகளுக்கு எதிரான கோப உணர்வும் விமர்சன மனோபாவமும் சமூக மாற்றத்துக்கான செயலூக்கமும் வெகுசனம் சார்பான நடைமுறையும் மாணவப் பருவத்திலே பயிராக்கப்பட வேண்டும்.   
சமூக உணர்வற்ற கல்விமான்களும் தொழில் வல்லுநர்வுகளும் இயந்திரங்களைவிடக் கீழானவர்கள். இவர்களை பல்கலைக்கழகங்களிலும் சமூகத்திலும் நாம் அன்றாடம் சந்திக்கிறோம்.   

பரீட்சைகளும் பெறுபேறுகளும் முடிவல்ல. உயர்தரப் பரீட்சை முடிவுகள் ஒரு மாணவனின் அறிவையோ திறமையையோ அளவிடும் அளவுகோல்களல்ல. இப்பரீட்சையின் வெற்றி தோல்விகள், ஒருபோதும் வாழ்க்கையின் வெற்றி, தோல்விகளைத் தீர்மானிப்பதில்லை.   

பரீட்சையில் நல்ல பெறுபேறுகளைப் பெற்று, உயர்பட்டங்களைப் பெற்றோர், வாழ்க்கையில் தோற்ற கதைகள் எம்மத்தியில் நிறைந்து கிடக்கின்றன. பரீட்சைகளையும் பெறுபேறுகளையும் ஒருபக்கமாக வையுங்கள். பிள்ளைகள் வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக் கொடுப்போம். வாழ்க்கையை நேசிக்கவும் வாழவும் தெரிந்த பிள்ளைகளே, சகமனிதனையும் சமூகத்தையும் நேசிப்பார்கள்.   
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பரீட்சை-முடிவுகள்-பிள்ளைகளை-குறை-கூறுவதை-நிறுத்துங்கள்/91-271276

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

பரீட்சைகளும் பெறுபேறுகளும் முடிவல்ல. உயர்தரப் பரீட்சை முடிவுகள் ஒரு மாணவனின் அறிவையோ திறமையையோ அளவிடும் அளவுகோல்களல்ல. இப்பரீட்சையின் வெற்றி தோல்விகள், ஒருபோதும் வாழ்க்கையின் வெற்றி, தோல்விகளைத் தீர்மானிப்பதில்லை.   

பரீட்சையில் நல்ல பெறுபேறுகளைப் பெற்று, உயர்பட்டங்களைப் பெற்றோர், வாழ்க்கையில் தோற்ற கதைகள் எம்மத்தியில் நிறைந்து கிடக்கின்றன.

மாணவர்களை அவர்கள் செல்லும் கல்வி  வழியில் விட்டு அவர்களை நாம் பின்னின்று ஊக்குவித்தாலே காணும்.
எங்கள் ஆசைகளை பிள்ளைகளின் மீது திணிக்காமல் இருந்தாலே போதும்.
மாணவர்களே தங்கள் எதிர்காலக் கல்வியின் வழியினை முடிவு செய்ய பெற்றோர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, கிருபன் said:

பரீட்சை முடிவுகள்: பிள்ளைகளை குறை கூறுவதை நிறுத்துங்கள்

அதே போல் பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவனை மட்டும் தலையில் தூக்கி வைத்து ஆடுவதையும் நிறுத்துங்கள்.


அண்மையில் இலங்கை பாடசாலை பரீட்சை பெறுபேறுகள் சம்பந்தமாக வெற்றிபெற்ற மாணவர்களின் படங்களை பிரசுரித்து அது சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் புளகாங்கிதம் அடைந்திருந்தனர்.அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவெனில் உங்களிடம் படித்த மாணவர்கள் பலர் குறைந்த புள்ளிகளையே பெற்றுள்ளனர்.
எனவே அடக்கி வாசியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


இங்கே ஞாலசீர்த்தி மீநிலங்கோ தொடங்கி கிருபன் வாத்தியார் குமாரசாமி நல்ல கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, விளங்க நினைப்பவன் said:


இங்கே ஞாலசீர்த்தி மீநிலங்கோ தொடங்கி கிருபன் வாத்தியார் குமாரசாமி நல்ல கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள் 😎

உதிலை கிருபன் எண்டவர் எங்கை என்ன கருத்தை சொன்னவர்? வெட்டி ஒட்டினவருக்கு பேரும் புகழும் குடுக்கிற பழக்கத்தை நிப்பாட்டுங்கோ 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

உதிலை கிருபன் எண்டவர் எங்கை என்ன கருத்தை சொன்னவர்?

நான் முதலில் ஞாலசீர்த்தி மீநிலங்கோவின் கட்டுரையை படித்துவிட்டு வாத்தியார், உங்கள் கருத்துக்களை படிக்கும் போது அதில் கிருபன் said கிருபன் said என்று வந்தது தானே நான் அதை கிருபனே சொன்னதாக நினைத்துவிட்டேன் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நான் முதலில் ஞாலசீர்த்தி மீநிலங்கோவின் கட்டுரையை படித்துவிட்டு வாத்தியார், உங்கள் கருத்துக்களை படிக்கும் போது அதில் கிருபன் said கிருபன் said என்று வந்தது தானே நான் அதை கிருபனே சொன்னதாக நினைத்துவிட்டேன் 😁

இப்படி வந்தால் கிருபன் சொன்னதாகத் தானே  அர்த்தம்

உங்களில் பிழையில்லை
நல்ல கால விளக்கம் சொன்னதால் தப்பித்துவிட்டீர்கள்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:


இங்கே ஞாலசீர்த்தி மீநிலங்கோ தொடங்கி கிருபன் வாத்தியார் குமாரசாமி நல்ல கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள் 😎

படிப்பு விசயத்தில நான் யாழில் கருத்து சொல்வதில்லை🤓

57 minutes ago, குமாரசாமி said:

உதிலை கிருபன் எண்டவர் எங்கை என்ன கருத்தை சொன்னவர்? வெட்டி ஒட்டினவருக்கு பேரும் புகழும் குடுக்கிற பழக்கத்தை நிப்பாட்டுங்கோ 😁

வெட்டி ஒட்டுவதே வெட்டிவேலை என்பது உண்மைதான்🤪

33 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நான் முதலில் ஞாலசீர்த்தி மீநிலங்கோவின் கட்டுரையை படித்துவிட்டு வாத்தியார், உங்கள் கருத்துக்களை படிக்கும் போது அதில் கிருபன் said கிருபன் said என்று வந்தது தானே நான் அதை கிருபனே சொன்னதாக நினைத்துவிட்டேன் 😁

கிருபன் said என்று வராமலும் quote பண்ண வசதி இருக்கு. அவற்றை கற்பிக்க ஒரு வாத்தியார் வேணும்😃

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

வெட்டி ஒட்டுவதே வெட்டிவேலை என்பது உண்மைதான்🤪

நான் நீங்கள் நினைக்கிற மாதிரி அந்த  கூடாத மீனிங்கிலை  எல்லாம் சொல்லேல்லை. 
நீங்கள் இணைக்கிற செய்திகள் எல்லாம் உங்கடை கருத்தாய் இருக்கக்கூடாது/இருக்காது எண்ட நல்லெண்ணத்திலைதான் சொன்னனான்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

படிப்பு விசயத்தில நான் யாழில் கருத்து சொல்வதில்லை🤓

இது கிருபனில் எனக்கு பிடித்திருந்தது.

நேருக்கு நேர்

ஒளிவு மறைவு இல்லாமல் தான் நினைப்பதை

சொல்லக்கூடியவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

படிப்பு விசயத்தில நான் யாழில் கருத்து சொல்வதில்லை🤓

வெட்டி ஒட்டுவதே வெட்டிவேலை என்பது உண்மைதான்🤪

கிருபன் said என்று வராமலும் quote பண்ண வசதி இருக்கு. அவற்றை கற்பிக்க ஒரு வாத்தியார் வேணும்

 

அப்படியெல்லாம் சொல்லலாமா கிருபரே😃
உங்கள் சேவை எங்களுக்குத் தேவை 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகநூலில் நண்பர் ஒருவர் எழுதியது..

 

 

எனது நண்பனின் தமையன் (அவரும் நல்ல நண்பர்தான்) O/L பரீட்சையில் ஆறேழு டிஸ்ரிங்ஷன்ஸ் எடுத்தார். ஆனால் A/L இல் all F வந்தது. அப்படித்தான் வரும் என்று ரிசல்ட்ஸ் வரமுன்னரே எனக்குச் சொன்னதும் நல்ல நினைவில் இருக்கின்றது. பின்னர் கொழும்பிற்கு வந்து பல்வேறு துறைகளில் படிக்க ஆரம்பித்து, IT துறையில் நுழைந்து பல கடினமான பரீட்சைகளை எல்லாம் தாண்டி கொழும்பில் வேலை செய்து, இப்போது மத்திய கிழக்கில் ஒரு பெரிய கம்பனி ஒன்றின் IT department இன் Head ஆக இருக்கின்றார்.

என்ன துறையாக இருந்தாலும் ஆர்வமும், உழைப்பும், விடாமுயற்சியும், விழுந்தாலும் துவளாமல் எழுவேண்டும் என்ற மனமும் இருந்தால் வாழ்வில் முன்னேறலாம்.

15 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் இணைக்கிற செய்திகள் எல்லாம் உங்கடை கருத்தாய் இருக்கக்கூடாது/இருக்காது எண்ட நல்லெண்ணத்திலைதான் சொன்னனான்.

நான் வாசிப்பதில் அரைவாசியைத்தான் யாழில் ஒட்டுவது. மிச்சத்தையும் ஒட்டினால் கனபேர் பிரசர் குளிசையை இரட்டிப்பாக்க எடுக்கவேண்டிவரும்😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

என்ன துறையாக இருந்தாலும் ஆர்வமும், உழைப்பும், விடாமுயற்சியும், விழுந்தாலும் துவளாமல் எழுவேண்டும் என்ற மனமும் இருந்தால் வாழ்வில் முன்னேறலாம்

இதுவே வாழ்க்கையின் தத்துவம்

12 minutes ago, கிருபன் said:

O/L பரீட்சையில் ஆறேழு டிஸ்ரிங்ஷன்ஸ் எடுத்தார். ஆனால் A/L இல் all F வந்தது.

எனது சகோதரர்களும் இதற்கு எடுத்துக் காட்டு
பல தோல்விகளின் பின்னரும் இலக்கை நோக்கி சென்றதால்  வடக்கு மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் ஒரே காலத்தில் ஆங்கில விரிவுரையாளர்களாக, பேராசிரியர்களாக  இருந்தார்கள்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.