Jump to content

பரீட்சை முடிவுகள்: பிள்ளைகளை குறை கூறுவதை நிறுத்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சை முடிவுகள்: பிள்ளைகளை குறை கூறுவதை நிறுத்துங்கள்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

இந்தவாரம் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளைத் தொடர்ந்த எதிர்வினைகளை, சில நாள்களாக நேரடியாகவும் சமூக வலைத்தளங்களிலும் காணக்கிடைத்தன.   

முடிவுகள் வெளியாகிவிட்டன; இதனுடன் தொடர்புடைய தரப்புகள் செய்யக் கூடியதும் செய்ய வேண்டியதும் இரண்டுதான். முதலாவது, பரீட்சை எழுதிய மாணவர்களும் அவர்தம் பெற்றோரும் செய்யவேண்டியது. அது, ‘அடுத்தது என்ன?’ என்ற வினாவைத் தொடுப்பதாகும்.  

 இரண்டாவது, கற்பித்த ஆசிரியர்களும் பாடசாலைகளும் செய்ய வேண்டியவை. இம்முறை முடிவுகளில் இருந்து கற்ற பாடங்கள் என்ன? செய்ய தவறுகள் என்ன? செய்ய வேண்டியது என்ன என்பதை, சுயவிமர்சன நோக்கில் ஆராய்வதும் முன்னேற்றுவதற்கு வழிகாண்பதும் ஆகும்.  

ஆனால், இவை இரண்டும் நடப்பதாகத் தெரியவில்லை. பரீட்சையில் தோற்ற மாணவர்கள் மீது பழியைப் போட்டுவிட்டு, எல்லோரும் தப்பித்து விடுகிறார்கள். இது தீர்வல்ல; இது வளமான எதிர்காலச் சந்ததிக்கான வழியுமல்ல.  

இலங்கையில் கல்வி, கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக, மிகுந்த நெருக்கடியை எதிர்நோக்குகின்றது. இந்நிலையில், ‘கல்வி எதற்காக’ என்ற வினாவையும், ‘கல்வி யாருக்காக’ என்ற வினாவையும் கேட்பது தவிர்க்க இயலாதது.   
நம்முடைய கல்வி முறை, கடந்த 50 வருடங்களாகப் பல மாற்றங்களைக் கண்டுள்ளது. இன்று நம்மிடையே உள்ள பாடசாலைக் கல்விமுறை, ஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப்பட்டது. கொலனியச் சூழலில், கொலனிய நிர்வாகத் தேவைகளை முதன்மைப்படுத்தி உருவான கல்வி முறை, கொலனியத்தின் கீழ் ஏற்பட்ட சமூக மாற்றங்களை உள்வாங்கியும் அதன் பின்பான மாற்றங்களுக்கு அமையவும் மாற்றங்களுக்கு உட்பட்டது.   

எனினும், கல்வி புகட்டும் முறை, பாடசாலை வகுப்பறை சார்ந்தே பேசப்பட்டாலும், கடந்த 25 வருட காலத்துக்குள் பாடசாலைகள், கல்வி முறை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள சீரழிவு காரணமாக, கல்வி முறையில் சீர்திருத்தத்தைப் புகுத்தினாலும் அது எதிர்மாறான விளைவுகளையே ஏற்படுத்தி உள்ளது.  

‘எல்லோருக்கும் இலவசக் கல்வி’ என்ற கொள்கையும் பல்கலைக்கழகம் வரையான அதன் நீடிப்பும், கல்வி வாய்ப்புகளைப் பரவலாக்கியது. இதனடிப்படையில், எழுதவும் வாசிக்கவுமான அறிவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டால், நம் கல்வி முறை, ஆசியாவில் வெற்றிகரமான ஒன்றே! ஆனால், கல்வியை அவ்வாறு மதிப்பிடல் சரியாகாது.   

ஏனெனில், அனைவருக்கும் கல்வி வாய்ப்பையோ, எல்லாப் பாடசாலைகளிலும் ஒப்பிடத்தக்க கல்வித் தரத்தையோ உறுதிசெய்ய, இலவசக் கல்விமுறையால் இயலவில்லை. சாதி, வர்க்க, இன அடிப்படைகளில் மக்கள் பிரிவுகளுக்கு நெடுங்காலம் மறிபட்ட கல்வி வாய்ப்பு, மிக மெதுவாகவே வந்து சேர்ந்தது.   

எமது கல்விமுறையானது, சமூகப் பயனுள்ள மனிதர்களை உருவாக்குகின்றதா என்பது, நாம் எல்லோரும் கேட்க வேண்டிய அடிப்படையான வினா. இன்று நமது கல்வி முறை, நாட்டினதோ மக்களினதோ நலன்களை முதன்மைப்படுத்துகின்ற ஒன்றல்ல. அது எஜமானர்களது கட்டளைகளுக்கமைய இயங்கக் கூடிய, சிற்றூழியர்களை உற்பத்தி செய்யும் ஒரு கருவியாக மாறிவிட்டது.   

இன்னொருபுறம் நமது கல்வி, வணிக மயமாகிவிட்டது. பரீட்சைப் பெறுபேறுகளே கல்வித் தொழிற்சாலைகளின் உற்பத்திப் பண்டங்களாகி விட்டன. பெறுபேறுகளே அனைத்தையும் தீர்மானிக்கின்றன. வெற்றி தோல்வியின் அளவுகோல் அதுவே! இது பிள்ளைகளையே பாதிக்கின்றது.  

எமது பாடத்திட்டத்தில், விஞ்ஞானக் கற்பித்தலின் ஆய்வுகூடக்கூறு, மோசமாகக் குறைந்துள்ளது. ஆய்வுகூடங்கள் இன்மை, வளப்பற்றாக்குறை என்பன இதில் பிரதானமானவை.   

பாடத்திட்டங்கள் மிகப்பெரியதாகவும் ஏராளமான தரவுகளை உடையதாகவும் அமைந்துள்ளன. மாணவர்கள் அவற்றைப் படிப்பதை விடுத்துத் தகவல்களை மனனஞ்செய்ய முற்படுகின்றனர். இது மாணவரின் ஆய்ந்தறியும் திறனைக் கெடுத்துள்ளது.   

இணையத்தினூடு உடனடியாகத் தகவல்களைப் பெறக்கூடியமையும் கேள்வியின்றித் தகவல்களை ஏற்கும் போக்கும், பிரச்சினையை மேலும் மோசமாக்கியுள்ளது. இதன் மிகக்கேடான விளைவுகளை, பல்கலைக்கழகங்களில் கற்கின்ற மாணவர்களின் நடத்தை உறுதிசெய்கிறது.   

ஒருபுறம் உலகமும் கற்றலும் வேகமாக நவீனமாகையில், நமது வகுப்பறைக் கல்வி, பாரம்பரிய அறிவு வழங்கல் மாதிரியில் இருந்து அதிகம் விலகவில்லை. இதைச் சாத்தியமாக்க, பாடசாலை ஆசிரியர்களை மீள்பயிற்சிக்கு உட்படுத்துகிற தேவை மிகமுக்கியமானது. ஆனால், அதில் கவனம் செலுத்தப்படுவதில்லை.   

மேலும், பாடசாலைக் கல்வி முறையின் தொடர்ச்சியான உயர்கல்வியானது, எவ்வாறு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களுடன் பொருந்துகின்றது என்பது பற்றியோ, பாடசாலைக் கல்வியையும் பல்கலைக்கழகக் கல்வியையும் தொடர்ந்து, தொழிலொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு ஏதுவான, தொழில் பயிற்சிகளுக்கான திட்டங்கள் என்ன என்பது பற்றியோ, போதிய கவனம் எதுவும் இல்லாமலே, கல்விச் சீர்திருத்தங்கள் வருகின்றன.   

ஏட்டுப்படிப்பைவிட, நடைமுறை சார்ந்த விடயங்களுக்கு அழுத்தம் தரவேண்டும் என்பது, இன்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால், அதைச் செயற்படுத்துவதாகக் கல்விமுறையோ, பாடசாலைகளோ இல்லை. கற்றலுக்கு புறம்பான செயற்பாடுகளைப் பயனற்றதாக நோக்கும் போக்கு, ஆசிரியர்களிடமும் பெற்றோரிடமும் அதிகரித்துள்ளது.   

இந்தக் கல்வி முறைமை, மாணவர்களது தனிப்பட்ட மேம்பாட்டுக்கோ, சமூக மேம்பாட்டுக்கோ போதியதுமல்ல; உகந்ததுமல்ல. இன்றைய பாடசாலைகள், சமூக மேம்பாட்டுக்கும் சமூக உணர்வுக்கும் ஆற்றும் பங்கு மிகவும் குறுகி விட்டது. பல்கலைக்கழகக் கல்வியும் அதே விதமாகச் சீர்குலைந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.  

மாணவரின் பாடசாலை வேலைச் சுமை, முன்பை விட அதிகரித்துள்ளது. தனியார் கற்றலுக்கு (டியூசன்) போகுமாறு பெற்றோரும் ஆசிரியர்களும் மாணவர்களை உந்துவது, சுமையை மோசமாக்குகின்றது. பரீட்சையை நோக்காகக் கொண்ட கல்வி அணுகுமுறை, கல்வித் தரத்தின் சரிவுக்கு ஒருபுறம் பங்களிக்க, மறுபுறம் மாணவர்கள் மீதான மிகையான சுமையும் காரணியானது. எமது கல்விமுறைச் சீரழிவுக்கு, மிகவும் பங்களித்த விடயங்களில் ஒன்று, தனியார் கல்வி நிலையங்களின் வருகையும் தனியார் கற்பித்தலும் ஆகும்.  

பாடசாலைகளோடு ஒப்பிடக்கூடியளவு கல்வியில் ஈடுபடும் கட்டத்தை, தனியார் கல்வி நிலையங்கள் எட்டியுள்ளன. முழுமையாகப் பரீட்சையை மட்டுமே நோக்காகக் கொண்ட தனியார் கல்வி நிலையங்கள், மாணவர்களைப் பரீட்சைக்கு தயார்படுத்தும் தொழிற்சாலைகளாகி விட்டன. இது மாணவர்களின் சுயகற்றலையும் அறிவுத்தேடலையும் சிதைக்கின்றது; கற்றலைப் பரீட்சைக்குரியதாக மட்டும் சுருக்குகிறது.  

தனியார் கற்பித்தல் என்பது, முறையான பாடசாலைக் கல்விக்கு மட்டுமன்றி, அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற இலக்குக்கும் குழிபறித்துள்ளது. பாடசாலை ஆசிரியர்கள், தனியார் கல்வி நிலையங்களையே நம்பி இருக்கிறார்கள். பாடசாலை மாணவர்கள், தனியார் கற்றலை மேற்கொள்வதால் பாடசாலையில் ஆசிரியர்கள் கற்பிக்காமல் இருப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது.   

மறுபுறம், இதே ஆசிரியர்கள் இக்கல்வி நிலையங்களில் கற்பிப்பதன் மூலம் பணமீட்டுகிறார்கள். காலையில் பாடசாலையில் வெண்கட்டியைக் கையால் தொடாதவர்கள், மாலையில் தொண்டை கிழிய, ஆடையெல்லாம் வெண்கட்டித் துகள்கள் நிறைய, கற்பிக்கும் எத்தனையோ பேரை நாமறிவோமல்லவா? முதலில் பிள்ளைகளிடத்தில் குற்றம் காண்பதை நிறுத்துவோம்.   

நல்ல பெறுபேறுகளைப் பெற்று, பல்கலைக்கழகங்களுக்குச் செல்வதால், வளமான சமூகம் உருவாகும் என்ற மாயையை நாம் முதலில் தகர்த்தெறிவோம். போட்டியும் பொறாமையும் குழிபறிப்புகளும் நிறைந்தவையாக எமது பல்கலைக்கழகங்கள் திகழ்கின்றனவே? பகடிவதை என்ற பெயரில், மனநோயாளர்கள் தங்கள் வக்கிரங்களை நிறைவேற்றுகிறார்களே? அதற்கு பல்கலைகழகமே, மறைமுகமாகத் துணை நிற்கிறதே? இவைதான் வளமான சமூகத்தின் அறிகுறிகளா?   

இதிலிருந்து நாம் விடுதலை பெறுவது எவ்வாறு என்பதே, நம்முன்னுள்ள சவால். எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்தவும் எதையும் ஆராய்ந்து அறியவும், எந்த நிபுணத்துவத்தையும் எதிர்த்து வாதாடவும் ஆற்றலும் உறுதியும் கொண்டஓர் இளம் தலைமுறை உருவாக, நாம் என்ன செய்யமுடியும்?   

நமது கல்வி நிறுவன அமைப்புகளின் வரையறைகளுக்குள் இது இயலுமானதல்ல. பழைமையில் ஊறிச் சீரழிந்த ஓர் அமைப்பால், இதைச் செய்ய இயலாது. சமூக ஈடுபாடும் சமூக நீதிக்கான வேட்கையும் அநீதிகளுக்கு எதிரான கோப உணர்வும் விமர்சன மனோபாவமும் சமூக மாற்றத்துக்கான செயலூக்கமும் வெகுசனம் சார்பான நடைமுறையும் மாணவப் பருவத்திலே பயிராக்கப்பட வேண்டும்.   
சமூக உணர்வற்ற கல்விமான்களும் தொழில் வல்லுநர்வுகளும் இயந்திரங்களைவிடக் கீழானவர்கள். இவர்களை பல்கலைக்கழகங்களிலும் சமூகத்திலும் நாம் அன்றாடம் சந்திக்கிறோம்.   

பரீட்சைகளும் பெறுபேறுகளும் முடிவல்ல. உயர்தரப் பரீட்சை முடிவுகள் ஒரு மாணவனின் அறிவையோ திறமையையோ அளவிடும் அளவுகோல்களல்ல. இப்பரீட்சையின் வெற்றி தோல்விகள், ஒருபோதும் வாழ்க்கையின் வெற்றி, தோல்விகளைத் தீர்மானிப்பதில்லை.   

பரீட்சையில் நல்ல பெறுபேறுகளைப் பெற்று, உயர்பட்டங்களைப் பெற்றோர், வாழ்க்கையில் தோற்ற கதைகள் எம்மத்தியில் நிறைந்து கிடக்கின்றன. பரீட்சைகளையும் பெறுபேறுகளையும் ஒருபக்கமாக வையுங்கள். பிள்ளைகள் வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக் கொடுப்போம். வாழ்க்கையை நேசிக்கவும் வாழவும் தெரிந்த பிள்ளைகளே, சகமனிதனையும் சமூகத்தையும் நேசிப்பார்கள்.   
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பரீட்சை-முடிவுகள்-பிள்ளைகளை-குறை-கூறுவதை-நிறுத்துங்கள்/91-271276

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

பரீட்சைகளும் பெறுபேறுகளும் முடிவல்ல. உயர்தரப் பரீட்சை முடிவுகள் ஒரு மாணவனின் அறிவையோ திறமையையோ அளவிடும் அளவுகோல்களல்ல. இப்பரீட்சையின் வெற்றி தோல்விகள், ஒருபோதும் வாழ்க்கையின் வெற்றி, தோல்விகளைத் தீர்மானிப்பதில்லை.   

பரீட்சையில் நல்ல பெறுபேறுகளைப் பெற்று, உயர்பட்டங்களைப் பெற்றோர், வாழ்க்கையில் தோற்ற கதைகள் எம்மத்தியில் நிறைந்து கிடக்கின்றன.

மாணவர்களை அவர்கள் செல்லும் கல்வி  வழியில் விட்டு அவர்களை நாம் பின்னின்று ஊக்குவித்தாலே காணும்.
எங்கள் ஆசைகளை பிள்ளைகளின் மீது திணிக்காமல் இருந்தாலே போதும்.
மாணவர்களே தங்கள் எதிர்காலக் கல்வியின் வழியினை முடிவு செய்ய பெற்றோர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, கிருபன் said:

பரீட்சை முடிவுகள்: பிள்ளைகளை குறை கூறுவதை நிறுத்துங்கள்

அதே போல் பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவனை மட்டும் தலையில் தூக்கி வைத்து ஆடுவதையும் நிறுத்துங்கள்.


அண்மையில் இலங்கை பாடசாலை பரீட்சை பெறுபேறுகள் சம்பந்தமாக வெற்றிபெற்ற மாணவர்களின் படங்களை பிரசுரித்து அது சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் புளகாங்கிதம் அடைந்திருந்தனர்.அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவெனில் உங்களிடம் படித்த மாணவர்கள் பலர் குறைந்த புள்ளிகளையே பெற்றுள்ளனர்.
எனவே அடக்கி வாசியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


இங்கே ஞாலசீர்த்தி மீநிலங்கோ தொடங்கி கிருபன் வாத்தியார் குமாரசாமி நல்ல கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, விளங்க நினைப்பவன் said:


இங்கே ஞாலசீர்த்தி மீநிலங்கோ தொடங்கி கிருபன் வாத்தியார் குமாரசாமி நல்ல கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள் 😎

உதிலை கிருபன் எண்டவர் எங்கை என்ன கருத்தை சொன்னவர்? வெட்டி ஒட்டினவருக்கு பேரும் புகழும் குடுக்கிற பழக்கத்தை நிப்பாட்டுங்கோ 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

உதிலை கிருபன் எண்டவர் எங்கை என்ன கருத்தை சொன்னவர்?

நான் முதலில் ஞாலசீர்த்தி மீநிலங்கோவின் கட்டுரையை படித்துவிட்டு வாத்தியார், உங்கள் கருத்துக்களை படிக்கும் போது அதில் கிருபன் said கிருபன் said என்று வந்தது தானே நான் அதை கிருபனே சொன்னதாக நினைத்துவிட்டேன் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நான் முதலில் ஞாலசீர்த்தி மீநிலங்கோவின் கட்டுரையை படித்துவிட்டு வாத்தியார், உங்கள் கருத்துக்களை படிக்கும் போது அதில் கிருபன் said கிருபன் said என்று வந்தது தானே நான் அதை கிருபனே சொன்னதாக நினைத்துவிட்டேன் 😁

இப்படி வந்தால் கிருபன் சொன்னதாகத் தானே  அர்த்தம்

உங்களில் பிழையில்லை
நல்ல கால விளக்கம் சொன்னதால் தப்பித்துவிட்டீர்கள்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:


இங்கே ஞாலசீர்த்தி மீநிலங்கோ தொடங்கி கிருபன் வாத்தியார் குமாரசாமி நல்ல கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள் 😎

படிப்பு விசயத்தில நான் யாழில் கருத்து சொல்வதில்லை🤓

57 minutes ago, குமாரசாமி said:

உதிலை கிருபன் எண்டவர் எங்கை என்ன கருத்தை சொன்னவர்? வெட்டி ஒட்டினவருக்கு பேரும் புகழும் குடுக்கிற பழக்கத்தை நிப்பாட்டுங்கோ 😁

வெட்டி ஒட்டுவதே வெட்டிவேலை என்பது உண்மைதான்🤪

33 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நான் முதலில் ஞாலசீர்த்தி மீநிலங்கோவின் கட்டுரையை படித்துவிட்டு வாத்தியார், உங்கள் கருத்துக்களை படிக்கும் போது அதில் கிருபன் said கிருபன் said என்று வந்தது தானே நான் அதை கிருபனே சொன்னதாக நினைத்துவிட்டேன் 😁

கிருபன் said என்று வராமலும் quote பண்ண வசதி இருக்கு. அவற்றை கற்பிக்க ஒரு வாத்தியார் வேணும்😃

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

வெட்டி ஒட்டுவதே வெட்டிவேலை என்பது உண்மைதான்🤪

நான் நீங்கள் நினைக்கிற மாதிரி அந்த  கூடாத மீனிங்கிலை  எல்லாம் சொல்லேல்லை. 
நீங்கள் இணைக்கிற செய்திகள் எல்லாம் உங்கடை கருத்தாய் இருக்கக்கூடாது/இருக்காது எண்ட நல்லெண்ணத்திலைதான் சொன்னனான்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

படிப்பு விசயத்தில நான் யாழில் கருத்து சொல்வதில்லை🤓

இது கிருபனில் எனக்கு பிடித்திருந்தது.

நேருக்கு நேர்

ஒளிவு மறைவு இல்லாமல் தான் நினைப்பதை

சொல்லக்கூடியவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

படிப்பு விசயத்தில நான் யாழில் கருத்து சொல்வதில்லை🤓

வெட்டி ஒட்டுவதே வெட்டிவேலை என்பது உண்மைதான்🤪

கிருபன் said என்று வராமலும் quote பண்ண வசதி இருக்கு. அவற்றை கற்பிக்க ஒரு வாத்தியார் வேணும்

 

அப்படியெல்லாம் சொல்லலாமா கிருபரே😃
உங்கள் சேவை எங்களுக்குத் தேவை 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகநூலில் நண்பர் ஒருவர் எழுதியது..

 

 

எனது நண்பனின் தமையன் (அவரும் நல்ல நண்பர்தான்) O/L பரீட்சையில் ஆறேழு டிஸ்ரிங்ஷன்ஸ் எடுத்தார். ஆனால் A/L இல் all F வந்தது. அப்படித்தான் வரும் என்று ரிசல்ட்ஸ் வரமுன்னரே எனக்குச் சொன்னதும் நல்ல நினைவில் இருக்கின்றது. பின்னர் கொழும்பிற்கு வந்து பல்வேறு துறைகளில் படிக்க ஆரம்பித்து, IT துறையில் நுழைந்து பல கடினமான பரீட்சைகளை எல்லாம் தாண்டி கொழும்பில் வேலை செய்து, இப்போது மத்திய கிழக்கில் ஒரு பெரிய கம்பனி ஒன்றின் IT department இன் Head ஆக இருக்கின்றார்.

என்ன துறையாக இருந்தாலும் ஆர்வமும், உழைப்பும், விடாமுயற்சியும், விழுந்தாலும் துவளாமல் எழுவேண்டும் என்ற மனமும் இருந்தால் வாழ்வில் முன்னேறலாம்.

15 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் இணைக்கிற செய்திகள் எல்லாம் உங்கடை கருத்தாய் இருக்கக்கூடாது/இருக்காது எண்ட நல்லெண்ணத்திலைதான் சொன்னனான்.

நான் வாசிப்பதில் அரைவாசியைத்தான் யாழில் ஒட்டுவது. மிச்சத்தையும் ஒட்டினால் கனபேர் பிரசர் குளிசையை இரட்டிப்பாக்க எடுக்கவேண்டிவரும்😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

என்ன துறையாக இருந்தாலும் ஆர்வமும், உழைப்பும், விடாமுயற்சியும், விழுந்தாலும் துவளாமல் எழுவேண்டும் என்ற மனமும் இருந்தால் வாழ்வில் முன்னேறலாம்

இதுவே வாழ்க்கையின் தத்துவம்

12 minutes ago, கிருபன் said:

O/L பரீட்சையில் ஆறேழு டிஸ்ரிங்ஷன்ஸ் எடுத்தார். ஆனால் A/L இல் all F வந்தது.

எனது சகோதரர்களும் இதற்கு எடுத்துக் காட்டு
பல தோல்விகளின் பின்னரும் இலக்கை நோக்கி சென்றதால்  வடக்கு மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் ஒரே காலத்தில் ஆங்கில விரிவுரையாளர்களாக, பேராசிரியர்களாக  இருந்தார்கள்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.