Jump to content

2009 மே மாதம் போரை முடிக்க வேண்டும் என இந்தியா விரும்பியது -வலி சுமந்த மாதத்தின் 10 ம் நாள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2009 மே மாதம் போரை முடிக்க வேண்டும் என இந்தியா விரும்பியது -வலி சுமந்த மாதத்தின் 10 ம் நாள்.

2009 மே 09 சனிக்கிழமை இரவு மற்றும் 10.05.2009  ஞாயிற்றுக்கிழமை காலை சிறிலங்கா இராணுவம் கொத்துக்குண்டுகள், ஆட்லறி எறிகணைகள் மற்றும் , கனொன் பீரங்கித்தாக்குதல்களை தொய்வின்றி செறிவாக மேற்கொண்டதில் 1200 க்கு மேற்பட்ட இறந்த பொதுமக்களின் உடல்களை தாங்கள் எண்ணியிருப்பதாக வன்னியிலிருந்து தெரியவந்தது ஆனாலும் இன்னும் எண்ணி முடிக்காமல் நிறைய உடல்கள் அங்காங்கு கிடக்கலாம் என்றும் அச்சம் நிலவியது

அதேவேளை படுகாயமடைந்து 1122 பேரும் இறந்த உடல்களாக  378 பேரும்  வைத்தியசாலைக்கு கொண்டவரப்பட்டதாகவும் இறந்தவர்களில் 106 பேரும் காயமடைந்தவர்களில் 251 பேரும் குழந்தைகள் என வைத்தியசாலை ஊழியர்கள் தகவல் தெரிவித்திருந்தனர் காயமடைந்தும் இறந்தும் போனவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களாகவும், மதியவர்களாகவும் இரந்தனர்.

இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தவண்ணம் இருப்பதுடன் உண்மையான எண்ணிக்கையை கூட கணக்கிடமுடியாத அளவிற்கு  குறுகிய நாட்களுள்  பேரினவாத சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பெரும் மனித படுகொலையாகவும் அது மாறிவருவதாகவும் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

 இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் மாற்றப்படுவதற்கு முன்னர் இந்தப்“ போரை முடிக்க  வேண்டும் என இந்தியா விரும்பியதாலேயே வகை தொகையின்றி  தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள் 

 

e6Ftp8yqqRjdxNWT38qG.jpg

 

 

 

qg45A4QVwx5AYB2jNDDA.jpg

 

 

orQgqiXU3Xn8dfy8CKtu.jpg

https://www.thaarakam.com/news/458f6bc5-da0e-4c50-a8e3-09da7b429def

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, கிருபன் said:

2009 மே மாதம் போரை முடிக்க வேண்டும் என இந்தியா விரும்பியது -வலி சுமந்த மாதத்தின் 10 ம் நாள்.

இந்தியா மட்டுமல்ல எமது மாற்றுக்கருத்து மாணிக்கங்களும் விரும்பினார்கள்.
ஆனால்.....இன்று
தீயில் காலை வைத்தது போல் துவண்டு போய்விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/5/2021 at 07:50, கிருபன் said:

2009 மே மாதம் போரை முடிக்க வேண்டும் என இந்தியா விரும்பியது

இது முற்றிலும் தவறான ஒரு கருத்து. தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு புலிகளே முற்றான காரணம். எமது இயலாமையினால் நாம் எமது தவறுகளை மற்றையவர்கள்மேல் போட்டுவிட்டுத் தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறோம்.

இந்தியாவோ இலங்கையோ தமிழ் மக்களை அழிக்கவில்லை. அவர்களை அழிக்கவேண்டிய தேவை எள்ளளவும் இந்தநாடுகளுக்கு இருக்கவில்லை.

ஆனால், தமிழர்களை எந்த விதத்திலாவது கொல்லவேண்டும் என்கிற தேவையும், விருப்பும் புலிகளுக்கு இருந்தது. அதனாலேயே 2006 இல் சமாதானப் பேச்சுவார்த்தைகளை முறித்துக்கொண்டு, சர்வதேசத்தின் உதவியுடன் இலங்கையை பேச்சுவார்த்தை மேசையிலிருந்து தள்ளி வெளியேற்றிவிட்டு, வன்னியில் இருந்த சர்வதேச அமைப்புக்களையும், தொண்டர் நிறுவனங்களையும் துரத்திவிட்டு, சாட்சிகள் அற்ற முற்றான இனக்கொலைக்கு ஆயத்தப்படுத்தினார்கள். மக்களைக் காக்க மனிதாபிமானப் போர் நடத்திய சிங்கள அரசையும், மீட்புப் பணிகளுக்கு உதவ வந்த இந்தியாவையும் சர்வதேசத்தில் அவமானப்படுத்த தாமே கொத்துக்குண்டுகளையும், ஆட்டிலெறி எறிகணைகளையும், மிகையொலி வான்குண்டு வீச்சுக்களையும் மழைபோலப் பொலிந்துதள்ளி, சூனியப் பிரதேசங்கள், வைத்தியசாலைகள், அகதிமுகாம்கள் மீதும் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்திடமிருந்து தாம் மிரட்டிப் பெற்றுக்கொண்ட அமைவிட புள்ளிகளைத் துல்லியமாகத் தாக்கி ஆயிரக்கணக்கில் மக்களைக் கொன்றுதள்ளி, கொல்லப்பட்ட தமிழ்ப் பெண்கள் மீதுகூட பாலியல் வன்புணர்வைக் கட்டவிழ்த்துவிட்டு, வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த இலங்கை ராணுவத்தினரை சுட்டுக்கொன்று, சரணடைந்த ராணுவ வீரர் ஒருவரின் மகனுக்கு சிற்றுண்டி கொடுத்த கையோடே அருகிலிருந்து மார்பில் சுட்டுக்கொன்றும் இந்த உலகம் பார்த்திராத இனக்கொலையினை அரங்கேற்றிவிட்டு முழுப்பழியினையும்  இலங்கையரசு மீதும் , இந்தியாவின்மீதும் போட்டுவிட்டுத் தப்பித்துக்கொண்டவர்கள். 

இன்னும் சொல்லப்போனால், இந்தியாவும் இலங்கையும் சரியான நேரத்தில் முள்ளிவாய்க்காலுக்குப் போயிருக்காவிட்டால் மீதமிருந்த 288,000 தமிழர்களையும் கடற்கரையிலேயே கொன்றுதள்ளி தமது வெறியைத் தீர்த்திருப்பார்கள்.

தமிழர்களைக் காத்து, புலிகளை அழித்த மகிந்தவின் மனிதாபிமான அரசுக்கும், காந்தியின் அகிம்சா தேசத்திற்கும் ஈழத்தமிழினம் வாழ்நாள்வரையில் நன்றிக்கடன் பட்டிருக்கிறது !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

தமிழர்களைக் காத்து, புலிகளை அழித்த மகிந்தவின் மனிதாபிமான அரசுக்கும், காந்தியின் அகிம்சா தேசத்திற்கும் ஈழத்தமிழினம் வாழ்நாள்வரையில் நன்றிக்கடன் பட்டிருக்கிறது !

வரலாற்றை கூட்டவோ குறைக்கவோ வேண்டியதில்லை. மாற்றவோ விளக்கவோ வேண்டியதில்லை. உள்ளது உள்ளபடி பதிவுசெய்து வைக்கவேண்டும். நேற்றைய வரலாற்றை திருத்துவதும், திரிப்பதும் அத்தருணத்தில் வாழ்ந்து, வலிகளை சுமந்து மாண்டவர்களையும், வலிகளுடன் இன்றும் வாழ்பவர்களையும் ஒரு பொருட்டாக மதிக்காத செயல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, கிருபன் said:

வரலாற்றை கூட்டவோ குறைக்கவோ வேண்டியதில்லை. மாற்றவோ விளக்கவோ வேண்டியதில்லை. உள்ளது உள்ளபடி பதிவுசெய்து வைக்கவேண்டும். நேற்றைய வரலாற்றை திருத்துவதும், திரிப்பதும் அத்தருணத்தில் வாழ்ந்து, வலிகளை சுமந்து மாண்டவர்களையும், வலிகளுடன் இன்றும் வாழ்பவர்களையும் ஒரு பொருட்டாக மதிக்காத செயல்.

நான் வரலாற்றை எங்கே திரித்திருக்கிறேன் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

நான் மேலே எழுதியது புலிகளாலேயே  தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், ஆகவே வெளியில் காரணங்களைத் தேடவேண்டாம் என்று அறிவுரை கூறும் கனவான்களின் கருத்துக்களைத்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரஞ்சித் said:

நான் வரலாற்றை எங்கே திரித்திருக்கிறேன் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

நான் மேலே எழுதியது புலிகளாலேயே  தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், ஆகவே வெளியில் காரணங்களைத் தேடவேண்டாம் என்று அறிவுரை கூறும் கனவான்களின் கருத்துக்களைத்தான். 

ரஞ்சித், நீங்கள் எழுதியது பிண அரசியல் கருத்து. அதை எழுதி உங்களை நீங்களே கேவலப்படுத்தியுள்ளீர்கள். இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

ரஞ்சித், நீங்கள் எழுதியது பிண அரசியல் கருத்து. அதை எழுதி உங்களை நீங்களே கேவலப்படுத்தியுள்ளீர்கள். இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை.

பிண அரசியல் கருத்தா? அப்படியென்றால் என்னவென்று சிறிது விளக்குங்கள்.

4 minutes ago, கிருபன் said:

ரஞ்சித், நீங்கள் எழுதியது பிண அரசியல் கருத்து. அதை எழுதி உங்களை நீங்களே கேவலப்படுத்தியுள்ளீர்கள். இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை.

இந்தக் கனவான்கள் கூறும்போது அமைதியாகக் கேட்டுக்கொண்டு நிற்கும் உங்களுக்கு, நான் அவர்கள் கூறுவதைக் கூறும்போது கேவலமாகத் தெரிகிறதா? அடுத்தது உங்களுக்குக் கேவலமாகத் தெரிவதால் மட்டும் எனது கருத்துக் கேவலமாகிவிடாது. எனது கருத்துக்கள் பற்றிய உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, கிருபன் said:

ரஞ்சித், நீங்கள் எழுதியது பிண அரசியல் கருத்து. அதை எழுதி உங்களை நீங்களே கேவலப்படுத்தியுள்ளீர்கள். இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை.

ரஞ்சித் கூறியது பிண அரசியல் என்றால் உங்கள் நிலைப்பாடு விபச்சார அரசியல் என்றாகிவிடும். 

இதில் எது சரியான அரசியல்..🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

ரஞ்சித் கூறியது பிண அரசியல் என்றால் உங்கள் நிலைப்பாடு விபச்சார அரசியல் என்றாகிவிடும். 

இதில் எது சரியான அரசியல்..🤥

என்னுடைய நிலைப்பாடு என்ன என்று நீங்கள் புரிந்துவைக்கும் அரசியல்தான் சரியான அரசியல்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

என்னுடைய நிலைப்பாடு என்ன என்று நீங்கள் புரிந்துவைக்கும் அரசியல்தான் சரியான அரசியல்.

 

 

அப்படியென்றால் எனது யூகம் தவறல்ல என்றாகிவிடுகிறது.. 🤥

Link to comment
Share on other sites

புலிகள்தான் தமிழருக்கான தீர்வுக்கு தடை என்றார்கள், ஆனால் இன்று புலிகளும் இல்லை, தீர்வும் இல்லை…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பழுவூர்கிழான் said:

புலிகள்தான் தமிழருக்கான தீர்வுக்கு தடை என்றார்கள், ஆனால் இன்று புலிகளும் இல்லை, தீர்வும் இல்லை…

புலிகளுக்கு முன்னரும் அது இருக்கவில்லை என்பதைத்தான் 
அவர்கள் உங்களுக்கு மறைத்தது 

யார் அடிக்கிறான் என்பதில் என்றாலும் கொஞ்சம் தெளிவு இருந்தால்தான் 
ஏன் அடிக்கிறார்கள் என்பதிலும் இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Kapithan said:

அப்படியென்றால் எனது யூகம் தவறல்ல என்றாகிவிடுகிறது.. 🤥

கருத்தை எவர் வேண்டுமென்றாலும் சொல்லலாம். சொல்பவருக்கு இருக்கும் தகுதி என்ன என்பதே கருத்துக்கு மதிப்பை அளிக்கிறது. நீங்கள் அதிகம் தகுதி உள்ளவராக இருப்பதால் தரமும் அதிகமாகத்தான் இருக்கின்றது.😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, பழுவூர்கிழான் said:

புலிகள்தான் தமிழருக்கான தீர்வுக்கு தடை என்றார்கள், ஆனால் இன்று புலிகளும் இல்லை, தீர்வும் இல்லை…

சொன்னவர்களும் தமிழர்களுடன் இல்லை.☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, கிருபன் said:

கருத்தை எவர் வேண்டுமென்றாலும் சொல்லலாம். சொல்பவருக்கு இருக்கும் தகுதி என்ன என்பதே கருத்துக்கு மதிப்பை அளிக்கிறது. நீங்கள் அதிகம் தகுதி உள்ளவராக இருப்பதால் தரமும் அதிகமாகத்தான் இருக்கின்றது.😎

 

நன்றி.

🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Veeravanakkam

 

சிலருக்கு...  அப்பவும், இப்பவும்...   "புலி"  என்றாலே, 
"பயப் பிராந்தி" ... வந்து விடுகின்றது.

புலிகளின்.... போராட்டம், நேர்மையானது.
அவர்கள்... ஆயுதத்தை, மௌனித்த பின்...
பல வருடங்கள், கடந்தும்....

அதனை... இங்கு, விமர்சிக்க.. 
எவருக்கும்... எள்ளளவும், தகுதி இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

நான் வரலாற்றை எங்கே திரித்திருக்கிறேன் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

நான் மேலே எழுதியது புலிகளாலேயே  தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், ஆகவே வெளியில் காரணங்களைத் தேடவேண்டாம் என்று அறிவுரை கூறும் கனவான்களின் கருத்துக்களைத்தான். 

ரஞ்சித் , 

இது பொது வெளி கருத்தாடல்களில் நானும்  அடிக்கடி சந்திக்கும் நிலைமைகளில் ஒன்று.

மற்றயவர்களும் ஒரு குறிப்பிட்ட ஒரு  தராதரத்திற்கு மேல் கருத்தாடப்படும் விடயத்தைப் பற்றி அறிந்து வைத்திருப்பர் எனும் அனுமாணமும் ஆக குறைந்தது பதில்  கருத்து இடுவதற்கு முன் முதல் பதிவை முழுமையாக வாசித்து விளங்கிக் கொண்டிருப்பர் என்ற எண்ணமுமே இந்நிலைக்கு இட்டுச் செல்கிறது..🤔 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமானியன், ரஞ்சித்.. 
ஒரு, இலக்கை,  நோக்கி... பயணிப்பவர்கள்....
பொது... வெளியில்,  கருத்து முரண்பாடு.. வேண்டாம் என்பதே என் ஆசை.

இப்படி, உள்ளடி.... வேலைகளை  செய்ததால்...
எம்... தலைவனையும், போராளிகளையும், நாட்டையும்...  இழந்து நிற்கின்றோம்.
அது.. வேதனையின்... உச்சம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேறொரு குழுமத்தில் பதிவிட்டது இது.
 தி. மு. க.  பற்றி இப்படியெல்லாம் மனச்சாட்சியில்லாமால் எப்படி கதைக்கப் போயிற்று என்று நான் இப்ப முள்ளிவாய்க்காலின் நடுவில் சொல்லடிகளுக்கு மத்தியில்.
 பதிவில் உள்ளடங்கிய வேறு எது பற்றியும் அவர்களுக்கு கருத்து இல்லை என்பது ஒரு மனப்பாரத்துடன் கவனிக்காக கூடிய விடயம்……

மனித நேயங்களை பற்றி கதைக்கும் போது து மனதின் அடித்த தளத்தில் நீண்ட நாட்களாக கனன்று கொண்டிருக்கும் ஒரு சம்பவத்தை பகிரலாமோ என்று தோன்றுகிறது ..
எனது நெருங்கிய நண்பர் / உறவினரொருவர் இ பதின்ம வயதில் பிள்ளைகள் மூவர்-  இரு பெண்கள் ஒரு ஆண்.. மிகவும் வசதியாக வாழ்ந்த குடும்பம். 
பல நாட்களாக சாப்பாடில்லை இ மயக்கம் வரும்போது உணவு உதவி செய்ய கோயிலும் இல்லை. அருகிருந்த ஒருவருக்கும் உணவில்லை. இருந்த இடத்திலும் தொடர்ந்து இருக்க முடியாது.  
வீட்டிலிருந்து புறப்பட்டு நடக்கத் தொடங்குகிறார்கள்.
 ஒன்றாக நடப்பதில்லை உடம்பில் எஞ்சியிருந்த சக்தியை பொறுத்து சிலர் முன்னே பலர் துவண்டும் தவழ்ந்தும் பின்னே ..
இருந்தால்  போல் ஒரு பெரிய சத்தம் ..
பின்னால் வந்து கொண்டிருந்த தந்தை - எனது உறவினர் சதைக் குவியலாகினார் .
அப்பா என்று அலறிக் கொண்டு திரும்பி ஓடிச் சென்ற பதின்ம  வயது மகள் அப்பாவின்  குவியலை எட்டு முன்னரேஇ  தானும் ஒரு சதைக் குவியலாகிறாள். 
இதே நேரம் பல காத தொலைவு தள்ளி நாடகம் ஒன்று அரங்கேறுகிறது .
வயோதிபர்  ஒருவர் -  நடை பயில சென்றவர் -  இருந்தால் போல் மணலில் உட்கார-  குளிர் சாதனமும் சொகுசுக் காட்டிலும் அருகே வர-   நாடகம் தொடர்கிறது சில மணித் துளிகள்.. 
எனது  நண்பனினதும் மகளினதும் சதைக் குவியலை அப்படியே கைவிட்டு விட்டு தாயும் எஞ்சிய இருவரும் - அவர்களும் இப்போது சதைக் குவியலின் நிலை தான் - நடந்தார்களோ தவண்டார்களோ … 
மறு பக்கம் நாடகம் முடிகிறது பழ  ரசத்துடன் ..
ஆளுமை என்போருக்கு ஒன்று சொல்வேன்-  
மனிதனாக முதலில் இருப்பவர்களே பின்னர் ஆளுமை கொள்வர் .
நான் இங்கே அகரத்தை கரைத்துக் குடித்ததைப் பற்றி சொல்லவில்லை  உயிர்களை எள்ளி நகையாடியதையே மனப் பாரத்துடன்…..

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.