Jump to content

வியட்நாம் நச்சுக் குண்டு வீச்சு: அமெரிக்க யுத்தம் குறித்த வழக்கு பிரான்ஸ் நீதி மன்றம் நிராகரிப்பு


Recommended Posts

வியட்நாம் நச்சுக் குண்டு வீச்சு:
அமெரிக்க யுத்தம் குறித்த வழக்கு
பிரான்ஸ் நீதி மன்றம் நிராகரிப்பு

 

184308249_10226843800064243_274878001507

 

வியட்நாம் போரின் போது அமெரிக் காவுக்கு இரசாயனப் பொருள்களை
விநியோகித்த நிறுவனங்களுக்கு
எதிராகத் தொடரப்பட்ட ஒரு வழக்கை பிரான்ஸின் நீதிமன்றம் ஒன்று நிராகரித்திருக்கிறது.
'அமெரிக்காவின் யுத்தகாலச் செயற்பாடு
களுடன் தொடர்புபட்ட ஒரு வழக்கை விசாரிப்பதற்கு நியாயாதிக்கம் கிடை யாது' என்று நீதிமன்றம் அதன் தீர்ப்பில்
தெரிவித்திருக்கிறது.
பிரான்ஸில் வசிக்கின்ற வியட்நாமியப் பத்திரிகையாளரான 79 வயது ட்ரான் தோ என்கா(Tran To Nga)என்ற பெண்ணே நீண்ட காலச் சட்டப் போராட்டங்களுக்கு
பிறகு இந்த வழக்கை பிரான்ஸின் நீதி மன்றம் ஒன்றில் தாக்கல் செய்திருந்தார்.
அழிவுகளுக்குப் பொறுப்புக் கூறல், நஷ்டஈடு வழங்குதல் ஆகியவற்றை முன்
வைத்துக் கம்பனிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட இந்த வழக்கில் அவற்றுக் குச் சார்பாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது
குறித்து ட்ரான் தோ என்கா அதிர்ச்சியும் கவலையும் வெளியிட்டிருக்கிறார்.
தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்
யப்போவதாகவும் கூறியிருக்கிறார்
அன்றைய அமெரிக்காவின் சட்டங்க ளுக்கு அமைய அதற்குக் கட்டுப்பட்டே செயற்பட்டதாக கம்பனிகளின் சார்பில் வாதாடிய சட்டவாளர் குறிப்பிட்டிருந்தார். Bayer-Monsanto நிறுவனத்தின் சட்டவாளர், "இறைமையுள்ள ஒரு நாட்டின் போர்க் காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்துத் தீர்ப்பளிப்பதற்கு பிரெஞ்சு நீதிமன்றம்
ஒன்றுக்கு நியாயாதிக்கம் கிடையாது"
என்று வாதிட்டார்.
பாரிஸ் நகருக்கு வெளியே எவ்றி என்னும் நகரில் உள்ளூர் நீதிமன்றம்
ஒன்றில்( Le tribunal d'Évry) இந்த வழக்கு கடந்த 2014 இல் தாக்கல் செய்யப் பட்டிருந்தது. அது கடந்த ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
யுத்தத்தின் போது வியட்நாம் காடுகள் மீது அமெரிக்கா பெருவாரியான நச்சுக் குண்டுகளை வீசியது. அடர்ந்த காடு களில் இருந்த கம்யூனிஸ்ட் கெரில்லாக் களின் மறைவிடங்களை அழிப்பதற்காக
வீசப்பட்ட இரசாயனக் குண்டுகள் ஏற்படு
த்திய சூழல் தாக்கம் பல தசாப்தங்கள்
கடந்து இன்னமும் நீடிக்கிறது.
வியட்நாமில் இன்றைக்கும் உடல்குறை பாடுகளுடன் ஏராளமான குழந்தைகள்
பிறப்பதற்கு நச்சுக்குண்டுகளின் தாக்
கமே காரணம் என்று சொல்லப்படுகிறது.
1962 - 1971 காலப்பகுதியில் நிகழ்ந்த அமெரிக்காவின் அந்த இராணுவ நடவடிக்கை "ஏஜென்ட் ஒரேஞ்" (Agent Orange) என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்கப் படைகள் அதி உயர் நச்சுத்
தன்மை கொண்ட விவசாயக் களை கொல்லி இரசாயன மருந்துகளை (ultra-toxic herbicide) செறிவு கூடிய அளவில் வீசிக் காடுகளைக் கருக்கி அழிந்தன. போராளிகளின் முன்னேற்
றத்தைத் தடுக்கவும் அவர்களது உணவு
மூலங்களை அழிக்கவும் பல மில்லியன்
கலன்கள் இரசாயன நச்சுக் களை
நாசனி வான்வழியே விசிறப்பட்டது.
வியட்நாம் யுத்தத்தில் நிகழ்ந்த போர்க் குற்றமாகவும் இயற்கை அழிப்புக்
குற்றமாகவும்("ecocide") கருதப்படுகின்ற
இரசாயனக் குண்டு வீச்சில் பாவிக்கப்
பட்ட நச்சுக் களை கொல்லிகளை உற்பத்தி செய்த, விநியோகித்த முக்கிய
14 கம்பனிகளுக்கு எதிராகவே பிரான்
ஸில் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஜேர்மன் - அமெரிக்க களை கொல்லித்
தயாரிப்பு நிறுவனமாகிய Bayer-Monsanto
மற்றும் அமெரிக்கப் பல் தேசியக் கம்பனி யான Dow Chemical ஆகியனவும் அவற்
றில் அடங்கும்.
ட்ரான் தோ என்கா தனது இருபதாவது வயதில் வியட்நாம் கம்யூனிஸ்ட் போராளி யாக இருந்தவர். பத்திரிகையாளராகவும் பணியாற்றியவர். தற்போது பிரான்ஸில் வசிக்கும் அவர் வியட்நாம் போரினதும் அமெரிக்க நச்சுக் குண்டு வீச்சுக்களின தும் வாழும் சாட்சியாகத் தன்னை
முன்னிறுத்தி நீண்ட காலமாக நீதி கோரி
போராடி வருகிறார்.
தனது முதுமையில் புற்றுநோய், காசநோய் என்பவற்றால் பீடிக்கப்பட்ட நிலையில் வாழும் அவர், அமெரிக்க
நச்சுக் குண்டுகளின் காரணமாகப் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவித்து வருகிறார். அவரது மகள் ஒருவர் இருதய நோயினால் உயிரிழந்துள்ளார். பேரக் குழந்தைகள் பலரும் கூட நோய்களுக்கு
இலக்காகி உள்ளனர்.
(படத்தில் ட்ரான் தோ என்காவின் இளவயதுத் தோற்றம்)
-----------------------------------------------------------------
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.