Jump to content

'கும்பமேளா திருவிழா' இந்தியாவில் கொரோனாவை அதிகம் பரப்பிய சூப்பர் ஸ்பிரெட்டரா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • கீதா பாண்டே
  • பிபிசி செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மிக அதிகமாக பரவத் தொடங்கிய வேளையில், இமயமலை அடிவாரத்தில் இருக்கும் ஹரித்துவார் நகரில் லட்சக்கணக்கான இந்து பக்தர்கள் கும்பமேளா திருவிழாவுக்காக கூடினார்கள். அப்போது, அந்த திருவிழா இந்தியாவில் கொரோனா வைரஸை அதிகம் பரப்பி விடுமோ என பலரும் அச்சப்பட்டனர்.

அந்த அச்சம் தற்போது உண்மையாகிக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

கும்பமேளா திருவிழாவில் கலந்து கொண்டு திரும்ப வந்தவர்களில் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவிக் கொண்டு இருக்கலாம் எனவும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் அறிக்கைகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

கடந்த மார்ச் 15ஆம் தேதி மஹந்த் சங்கர் தாஸ் என்பவர் ஹரித்வார் நகரத்தில் கும்பமேளா பெருவிழாவில் பங்கேற்க வந்த போது, இந்தியாவின் பல பகுதிகளிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருந்தது.

கும்பமேளா திருவிழா அதிகாரபூர்வமாக தொடங்கி நான்கு நாட்களில் அதாவது, கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி 80 வயதான இந்த இந்து பூசாரி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவரை ஒரு கொட்டகையில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தி இருந்தார்கள்.

ஆனால் அந்த முதியவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதற்கு பதிலாக, தன் உடைமைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு ரயிலைப் பிடித்து சுமார் 1,000 கிலோமீட்டர் பயணித்து வாரணாசி நகரை அடைந்தார்.

அவரது மகன் நாகேந்திர பதக் அவரை ரயில் நிலையத்தில் சந்தித்தார். அவர்கள் இருவரும் ஒரு டாக்ஸியை பகிர்ந்து கொண்டு 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தங்கள் கிராமத்துக்கு சென்றனர்.

கும்பமேளா திருவிழா

பட மூலாதாரம்,REUTERS

ஹரித்வாரில் இருந்து திரும்பிய மஹந்த் தாஸ் தற்போது நல்ல உடல் நலத்தோடு இருப்பதாகவும், தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும் தொலைபேசியில் என்னிடம் கூறினார்.

தான் யாருக்கும் கொரோனா வைரஸை பரப்ப வில்லை எனவும் குறிப்பிட்டார். ஆனால் அவர் கிராமத்திற்கு சென்று சேர்ந்த சில நாட்களுக்குள்ளேயே அவரது மகன் மற்றும் அக்கிராமத்தைச் சேர்ந்த சிலருக்கு கொரோனா அறிகுறிகள் அதிகரிக்கத் தொடங்கியது.

தங்கள் கிராமத்தில் கடந்த இரண்டு வார காலத்தில் 13 பேர் காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக உயிரிழந்ததாக மஹந்த் தாஸின் மகன் நாகேந்திரா கூறுகிறார்.

அந்த கிராமத்தில் கொரோனா வைரஸ் அறிகுறிகள் அதிகமானதற்கு மஹந்த் தாஸ் காரணமாக இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம், ஆனால் அவர் ரயில் பயணம் மேற்கொண்டது டாக்ஸியில் பயணித்தது போன்றவை பொறுப்பற்ற நடவடிக்கைகள் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதோடு அவர் வழிநெடுக பலருக்கும் கொரோனா வைரஸை பரப்பி இருக்கலாம் என்கின்றனர்.

"கூட்டமாக முக கவசம் எதையும் அணியாமல் கங்கை நதிக்கரை ஓரத்தில் பக்தர்கள் அமர்ந்து கங்கையின் புகழ் பாடுவது கொரோனா வைரஸ் பரவுவதற்கான உகந்த சூழல்" என்கிறார் தொற்று நோயியல் நிபுணர் மருத்துவர் லலித் காந்த். "கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் வாயைத் திறந்து கூட்டமாக பாடுவது கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஏதுவான சூழல் என்பதை நாம் அறிவோம்"

ஹரித்வார் நகரத்தில் 12 முக்கிய இந்து மத தலைவர்கள் உட்பட 2,642 பக்தர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என அதிகாரிகள் கூறுகிறார்கள்.

உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், நேபாள முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷா, அரசி கோமல் ஷா ஆகியோர் கும்பமேளா திருவிழாவில் இருந்து திரும்பி வந்த பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். இந்தி திரைப்பட இசையமைப்பாளர் ஷ்ரவன் ரத்தோட் கும்பமேளா திருவிழாவில் இருந்து திரும்பி வந்த பிறகு மும்பை மருத்துவமனையில் உயிரிழந்தார். ஒரு குழுவைச் சேர்ந்த 9 இந்து பெரியவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கும்பமேளா திருவிழாவில் கலந்து கொண்டு திரும்பி வந்தவர்கள் தற்போது கொரோனாவை பரப்பத் தொடங்கலாம் என்கிற பயத்தில் பல மாநில அரசுகள், கும்பமேளா திருவிழாவில் கலந்து கொண்டு திரும்ப வந்தவர்கள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டு இருக்கின்றன. அதோடு தங்களின் பயண விவரங்களை மறைப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரித்து இருக்கின்றன.

சில மாநில அரசுகள் கும்பமேளா திருவிழாவில் கலந்து கொண்டு திரும்ப வந்தவர்களுக்கு ஆர் டி பி சி ஆர் பரிசோதனை கட்டாயமாக்கி இருக்கின்றன. வேறுசில மாநிலங்களோ பயணம் மேற்கொண்டவர்களின் விவரங்களை கையில் வைத்திருக்கின்றன. ஒட்டுமொத்தத்தில் எந்த ஒரு மாநில அரசிடமும் தங்கள் மாநில எல்லைகளுக்குள் நுழையும் மக்களை பரிசோதனை செய்வது மற்றும் தடம் அறிதல் தொடர்பாக ஒரு வலுவான திட்டம் இல்லை.

கடந்த இரண்டு வாரங்களில் கும்பமேளா திருவிழாவில் இருந்து திரும்ப வந்தவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கான அறிக்கைகள் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வந்து கொண்டிருக்கின்றன.

1. ராஜஸ்தான் மாநிலத்தில் குறிப்பாக அதன் கிராமப்புறங்களில் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரிப்பதற்கு, கும்பமேளா விழாவில் கலந்து கொண்டு திரும்ப வந்த பக்தர்களே காரணம் என அம்மாநில அரசு அதிகாரிகள் குறை கூறுகிறார்கள்.

2. ஒடிசா மாநிலத்தில் கும்பமேளா திருவிழாவில் கலந்துகொண்டு திரும்ப வந்த பக்தர்களில் 24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

3. குஜராத் மாநிலத்தில் ஒரே அறையில் கும்பமேளா திருவிழாவில் கலந்துகொண்டு திரும்ப வந்த 313 பயணிகளில் குறைந்தபட்சம் 34 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

4. மத்திய பிரதேசத்தில் கும்பமேளா திருவிழாவில் கலந்து கொண்டு திரும்ப வந்த 61 பேரில் 60 பேர் அதாவது 99 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

"இது பேரழிவை தரக்கூடியது" என்கிறார் மருத்துவர் காந்த். "இந்த எண்ணிக்கைகள் எல்லாம் உண்மையான எண்ணிக்கையில் ஒரு சிறு பகுதிதான். நெரிசலான ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணித்த பக்தர்கள் கூட்டம் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கையில் ஒரு பெருக்கல் விளைவை ஏற்படுத்தி இருக்கலாம். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு கும்பமேளா ஒரு மிக முக்கிய காரணம் என எந்தவித தயக்கமுமின்றி என்னால் கூற முடியும்" என்கிறார் மருத்துவர் லலித் காந்த்.

இந்தியாவில் மிகக் கடுமையாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும்போது, நோயாளிகளுக்கு போதுமான மருத்துவமனை படுக்கைகள், மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் வசதிகள் கிடைக்காதபோது கும்பமேளா திருவிழாவை ரத்து செய்திருக்கலாமே என மஹந்த் தாஸிடம் கேட்டபோது கடுமையாக பதிலளிக்கிறார்.

"அப்படி என்றால் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் மேற்கு வங்கத்தில் அரசு தேர்தல் நடத்துவது, தேர்தல் பேரணிகளை நடத்துவது மட்டும் சரியா? ஏன் இந்து பக்தர்களாகிய நாங்கள் மட்டும் கூடுவது தவறு என கூறப்படுகிறது? என கேள்வி எழுப்புகிறார்.

கும்பமேளா திருவிழா

பட மூலாதாரம்,REUTERS

பிரதமர் நரேந்திர மோதி, கும்பமேளா திருவிழாவில் மக்கள் கூடுவதை ரத்து செய்ய தயக்கம் காட்டியதற்கு, மஹந்த் தாஸ் போன்ற இந்து தலைவர்களிடமிருந்து எதிர்வினைகள் கிளம்பலாம் என்பதே காரணம் என விமர்சகர்கள் கூறுகிறார்கள். கோவில் பூசாரிகள், மதப் பெரியவர்கள், சந்நியாசிகள் போன்றவர்கள்தான் பாரதிய ஜனதா கட்சியின் மிகப்பெரிய ஆதரவாளர்கள். தேர்தலின்போது இந்து மக்கள் ஒட்டுக்களை பாஜகவின் பக்கம் திரும்புவதற்கு இவர்கள் மிகவும் முக்கியப் பங்காற்றுகிறார்கள்.

கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி கிட்டத்தட்ட 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், தங்கள் பாவங்கள் கழுவப்பட்டு முக்தி கிடைக்கும் என்கிற நம்பிக்கையில், கங்கையில் புனித நீராடினார்கள். இந்தியாவில் ஒரே நாளில் 1.68 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். பிரேசில் நாட்டை பின்னுக்குத்தள்ளி உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நாடுகள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தது இந்தியா.

கும்பமேளா திருவிழாவை முன்னெடுக்கும் முக்கியமான தலைமை சந்நியாசிகளில் ஒருவர் இறந்த பிறகு திருவிழா நாட்கள் குறைக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி கும்பமேளா திருவிழாவை ஒரு குறியீட்டு நிகழ்ச்சியாக நடத்துமாறு இந்துமத பெரியவர்களிடம் கோரிக்கை வைத்தார்.

ஆனால் அதற்குள் கும்பமேளா திருவிழாவால் ஏற்பட வேண்டிய அனைத்து சேதாரங்களும் ஏற்பட்டு விட்டன.

கும்பமேளா திருவிழா நிகழ்வு ஏற்பாடு செய்தவர்கள் திருவிழாவில் சுமார் 9 கோடியே 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டதாக, அதாவது ஹரித்துவார் நகரத்திற்கு வந்ததாக கடந்த வாரம் குறிப்பிட்டார்கள். அதிகரித்து வரும் பெரும் தொற்று நோய்க்கு மத்தியில் கும்பமேளா திருவிழாவிற்கு அனுமதி கொடுத்து, உத்தராகண்ட் மாநிலத்தைப் பார்த்து மற்றவர்கள் எள்ளி நகையாடும் இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது என அம்மாநிலத்தின் உயர் நீதிமன்றம் கூறியது.

கும்பமேளா திருவிழா தொடங்கப்படுவதற்கு முன்பிலிருந்தே அது தொடர்பான பிரச்சனைகள் நிலவிக் கொண்டிருந்தன.

"இந்தியாவில் புதிய மற்றும் அதிவேகமாக பரவக்கூடிய கொரோனா வைரஸின் புதிய தீரிபு" பரவி வருவதாக கடந்த மார்ச் மாத தொடக்கத்திலேயே சுகாதார நிபுணர்கள் அரசை எச்சரித்தார்கள். அப்படிப்பட்ட சூழலில் லட்சக்கணக்கான முகக்கவசம் ஏதும் அணியாத பக்தர்கள் திருவிழா என்கிற பெயரில் ஒன்று கூடுவது அத்தனை நல்லதல்ல என சுகாதார நிபுணர்கள் எச்சரித்தார்கள்.

"கும்பமேளா திருவிழா சிலருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு ஒரு குறியீட்டு நிகழ்ச்சியாகவே நடத்தப்படும்" என உத்தராகண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் த்ரிவேந்திர சிங் ராவத் தொடக்கத்திலேயே என்னிடம் கூறினார். "கொரோனா பெருந்தொற்று இப்போதைக்கு ஒரு முடிவுக்கு வராது" என நிபுணர்கள் தன்னிடம் கூறியதாகவும் பகிர்ந்து கொண்டார்.

"இந்த திருவிழா இந்தியாவில் இருக்கும் மக்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வருவார்கள். நல்ல உடல் நலத்தோடு இருப்பவர்கள் கூட ஹரித்துவார் நகரத்திற்கு வந்து கொரோனா தொற்று ஏற்பட்டு மற்றவர்களுக்கும் தொற்றை ஏற்படுத்தி விடுவார்களோ என நான் கவலையில் இருக்கிறேன்" எனக் கூறினார்.

கும்பமேளா திருவிழா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கும்பமேளா திருவிழா தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன், தீரத் சிங் ராவத் உத்தராகண்ட் மாநிலத்தின் முதல்வராக அமர்த்தப்பட்டார்.

"கங்கை நதியின் ஆசீர்வாதத்தில் கொரோனா வைரஸ் இருக்காது" என கூறியவர் இந்த முதல்வர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

"யாரும் தடுத்து நிறுத்தப்பட மாட்டார்கள்". கும்பமேளா திருவிழாவில் கலந்துகள்ள கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் இல்லை. கொரோனா பாதுகாப்பு விதி முறைகளை பின்பற்றினாலே போதுமானது என கூறினார் உத்தராகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வர்.

பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஹரித்வார் நகரத்திற்கு வந்தபோது, கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்த அதிகாரிகள் திணறினர்.

கும்பமேளா திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வந்த பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை எடுத்து வரவில்லை என்பதால், கூட்டத்தை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருந்தது. நம்பிக்கையில் அத்தனை தூரம் பயணித்து வந்தவர்களை திருப்பி அனுப்பவும் முடியவில்லை என என்னிடம் கூறினார் ஹரித்வார் நகரத்தின் முதன்மை மருத்துவ அலுவலர் மருத்துவர் ஷம்பு குமார் ஜா.

"ஒரு மதம் சார்ந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக விரும்பும் மக்களை உங்களால் திருப்பி அனுப்ப முடியுமா என்ன? என கேள்வி எழுப்புகிறார்.

"மத்திய அரசு மற்றும் உயர் நீதிமன்றத்தின் நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் இருந்தன. எங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பாதுகாப்பு விதிமுறைகளை செயல்படுத்தினோம்" என்கிறார்.

"பல லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டத்திற்கு மத்தியில் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை பின்பற்றுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது ஆகிவிட்டது. அவைகள் காகிதங்களில் பார்ப்பதற்கு மிக நன்றாக இருந்தன, ஆனால் எதார்த்தத்தில் அவைகளை செயல்படுத்த முடியவில்லை" என உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனுப் நாடியால் பிபிசியிடம் கூறினார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் முதன் முதலாக கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டதிலிருந்து, (கடந்த 15 மார்ச் 2020 முதல்) சுகாதார அமைச்சகத்தின் தரவுகளை சேகரித்து வருகிறார் அனுப். கடந்த மார்ச் 14 முதல் மார்ச் 20 வரை உத்தராகண்ட் மாநிலத்தில் 557 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். இது கும்பமேளா திருவிழாவில் பங்கேற்பதற்காக பக்தர்கள் வரத் தொடங்கிய காலம். கடந்த ஏப்ரல் 25 முதல் மே 1ஆம் வரையிலான வாரத்தில் உத்தராகண்ட் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,581 பேராக அதிகரித்திருக்கிறது. இது கும்பமேளா திருவிழாவின் கடைசி வார காலம் என்கிறார் அனுப்.

"கும்பமேளா திருவிழாவால்தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது எனக் கூறுவது தவறு. கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் கும்பமேளா திருவிழாவின் காலகட்டமும் எதேர்ச்சையாக ஒரே காலகட்டத்தில் ஒத்துப்போகிறது" என கூறுகிறார் அனுப்.

கும்பமேளா திருவிழாவில் மக்கள் ஒன்றுகூட அனுமதித்ததால் ஏற்பட்ட பிரச்சனைகளை சரி சய்ய இந்தியா வேறு ஏதாவது செய்யமுடியுமா? என மருத்துவர் காந்திடம் நான் கேட்டேன்.

"கும்பமேளா திருவிழாவில் பங்கெடுத்த பக்தர்கள் கொரோனா வைரஸை பிரசாதம் போல் எடுத்துக்கொண்டு அனைவருக்கும் பரப்பி விடுவார்கள் என யாரோ கூறினார்கள். பக்தர்கள் கொரோனா வைரஸ் எல்லா இடங்களிலும் எடுத்துச் சென்றது மிகவும் வருத்தத்துக்குரியது" எனக் கூறுகிறார் மருத்துவர் காந்த்.

"தற்போதைய சூழலை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என எனக்கு எதுவும் தோன்றவில்லை. நாம் அதிக தூரம் கடந்து விட்டோம். நாம் மீண்டும் பழைய நிலைக்குச் செல்ல முடியாது. இது மிகவும் வருத்தத்துக்குரியது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் கடுமையாக பாதிக்கப்படாமல் அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என பிரார்த்திக்க மட்டுமே முடியும்" என்கிறார் மருத்துவர் லலித் காந்த்.

'கும்பமேளா திருவிழா' இந்தியாவில் கொரோனாவை அதிகம் பரப்பிய சூப்பர் ஸ்பிரெட்டரா? - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமய நடவடிக்கைகள் மட்டுமல்ல அரசியல் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் தொற்று பரவலுக்கு முக்கிய காரணமாகும். 

இந்திய வல்லரசுக் கனவு கனவாகவே முடியும் பொல ....😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

சமய நடவடிக்கைகள் மட்டுமல்ல அரசியல் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் தொற்று பரவலுக்கு முக்கிய காரணமாகும். 

இந்திய வல்லரசுக் கனவு கனவாகவே முடியும் பொல ....😂

மேலைத்தேயவர்கள் அரசியல் இனம் மதம் பொருளாதாரம் என்பவற்றை ஒரே கோட்பாட்டில் வைத்து திறம்பட கையாண்டு வெற்றி பெறுகின்றார்கள். இந்தியா இலங்கை பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு அந்த திறமை அறவே இல்லை. வெள்ளையனே வெளியேறு என்று விட்டு கேடுகெட்ட அரசியல் சாக்கடையில் நீந்துகின்றார்கள்:)

ஆங்கிலேயர் மீண்டும்  படையெடுத்தால் சில அற்புதங்கள் நிகழலாம்.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

சமய நடவடிக்கைகள் மட்டுமல்ல அரசியல் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் தொற்று பரவலுக்கு முக்கிய காரணமாகும். 

இந்திய வல்லரசுக் கனவு கனவாகவே முடியும் பொல ....😂

கும்ப மேளாவும் மாநிலங்களில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களும் தான் இந்தியாவில் கொரோனா எகிறியதன் அடிப்படைக் காரணங்கள். மோடி அரசு மக்களின் நலனைவிடக் கட்சியின் நலனையே இந்தக் கொரோனாக் காலத்திலும் முன்னிறுத்துகின்றது

 

45 minutes ago, குமாரசாமி said:

இந்தியா இலங்கை பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு அந்த திறமை அறவே இல்லை

இலங்கை அரசு இந்த விடயத்தில் மிகவும் சிறப்பாக செயற்படுவது கண்கூடாகத் தெரிகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வாத்தியார் said:

இலங்கை அரசு இந்த விடயத்தில் மிகவும் சிறப்பாக செயற்படுவது கண்கூடாகத் தெரிகின்றது

வாத்தியார்! எதை வைத்து சொல்கின்றீர்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

வாத்தியார்! எதை வைத்து சொல்கின்றீர்கள்? 

இறப்பு  என்பது தான் கொரோனாவின் எல்லை.
 கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது
இறப்பு விகிதம் இலங்கையில் குறைவாக உள்ளது

(அதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம்
இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்தி
என நான் நினைக்கின்றேன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

மேலைத்தேயவர்கள் அரசியல் இனம் மதம் பொருளாதாரம் என்பவற்றை ஒரே கோட்பாட்டில் வைத்து திறம்பட கையாண்டு வெற்றி பெறுகின்றார்கள். இந்தியா இலங்கை பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு அந்த திறமை அறவே இல்லை. வெள்ளையனே வெளியேறு என்று விட்டு கேடுகெட்ட அரசியல் சாக்கடையில் நீந்துகின்றார்கள்:)

ஆங்கிலேயர் மீண்டும்  படையெடுத்தால் சில அற்புதங்கள் நிகழலாம்.  🤣

தற்போது கோவிற்-19 ஆல் இறந்தவர்களின் உடலங்கள் கங்கை ஆற்றில் பரவலாக எறியப்பட்டு மிதந்து வருகின்றன. 

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

தற்போது கோவிற்-19 ஆல் இறந்தவர்களின் உடலங்கள் கங்கை ஆற்றில் பரவலாக எறியப்பட்டு மிதந்து வருகின்றன. 

☹️

சுத்தம்.
இனித்தான் இந்தியா வல்லரசு கண்டியளோ:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.