Jump to content

தொற்றுநோய் அச்சுறுத்தலில் கர்ப்பிணித் தாய்மார்களின் பாதுகாப்பிற்கு சில ஆலோசனைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தொற்றுநோய் அச்சுறுத்தலில் கர்ப்பிணித் தாய்மார்களின் பாதுகாப்பிற்கு சில  ஆலோசனைகள்

 
%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%
 12 Views

கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள இந்த காலங்களில் கர்ப்பிணித் தாய்மார் ஏன் அதிக கவனமாக இருக்க வேண்டும்? என்பது தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகம் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

நீங்கள் கர்ப்பிணி மற்றும் உங்கள் பிறக்காத குழந்தையின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. கொரோனா பரவல் அதிகரித்துள்ள இந்த நேரத்தில் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிப்பது மற்றும் சரியான சுகாதார ஆலோசனைகள் மற்றும் சேவைகளைப் பெறுவது அவசியம் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஒரு கர்ப்பிணித் தாய் அவசர தேவையைத் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது, ஏனெனில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானால் அதிக சிக்கல்கள் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக காணப்படுகின்றது.

கர்ப்பிணிப் பெண் ஒருவர் வைத்தியசாலைக்கு அல்லது சிகிச்சையகத்திற்கு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால், கொரோகா தொற்றை தவிர்க்க பின்வரும் குறிப்புகளை கண்டிப்பாக பின்பற்றவும்.

1. காற்றோட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் இருப்பதை குறைத்தல்;
2. எப்போதும் முகக்கவசத்தை சரியாக அணிதல்
3. நபர்களுடான இடைவெளியை சரியாக பின்பற்றல்.
4. இறுதிச் சடங்குகள் போன்ற பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளாதிருத்தல்
5. சவர்க்காரம் மற்றும் தண்ணீரில் கைகளை அடிக்கடி கழுவுதல்.

கொரோனா நோயைப் பற்றிய அச்சம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்கு  தவறாமல் அணுகுவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாமதம் கர்ப்பிணி தாய் மற்றும் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

கொரோனா ஆபத்து அதிகரிக்கும் போது, வழமைப் போல் சுகாதார சேவையை வழங்குவதில் சில சிக்கல்கள் இருக்கலாம். எனவே, இன்று அந்த சேவைகளை எவ்வாறு பெறுவது என்பதை அறிய உங்கள் வைத்திய அதிகாரி அல்லது குடும்பநல சுகாதார சேவை அதிகாரியைத் தொடர்பு கொள்ளுங்கள்.

ஆபத்து அறிகுறிகள்

“கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்து அறிகுறிகள்” பற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம். அவற்றை மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்தினால், காய்ச்சல், இரத்தப்போக்கு, கடுமையான தலைவலி, மூச்சுத் திணறல், பார்ப்பதில் சிரமம், வலிப்பு, மார்பு/வயிற்று வலி, உடலின் வீக்கம், குழந்தை துள்ளுவதில் குறைவு அல்லது வேறு ஏதேனும் கடுமையான அசௌகரியங்கள் ஆகியன எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். அத்தகைய எச்சரிக்கை அறிகுறி எழுந்தால், உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்லுங்கள். இது குறித்து உங்கள் குடும்பநல சுகாதார சேவை அதிகாரிக்கு அறிவியுங்கள்.

கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க வைத்தியசாலைகளில் அவசியமான நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே, தேவையான வைத்திய சிகிச்சையைப் பெற கர்ப்பிணிகள் தயங்க வேண்டிய அவசியமில்லை.

உங்கள் குடும்ப உறுப்பினர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் அல்லது ஒரு கொரோனா என சந்தேகிக்கப்படும் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தால், உடனடியாக உங்கள் குடும்பநல சுகாதார அதிகாரியிடம் தெரிவிக்கவும். உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த, முடிந்தவரை அவளிடமிருந்து (அவரிடமிருந்து) விலகி இருங்கள்.

எப்படியிருந்தாலும், உங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக உங்கள் குடும்பநல சுகாதார அதிகாரியிடம் தெரிவிக்கவும். தேவைக்கேற்ப உடனடி சிகிச்சையை நாடுங்கள். வைத்தியசாலை அமைப்பு உங்களுக்காக தயாராக வைக்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து நிகழ்வுகளிலும் நீங்கள் சிறிது மன அழுத்தத்தை உணரலாம். அதைத் தவிர்க்க, எப்போதும் நிதானமாகவும் தெளிவாகவும் இருக்க முயற்சி செய்யுங்கள்.

எந்த நேரத்திலும் உங்கள் குடும்பநல சுகாதார அதிகாரியையோ அல்லது 1999 என்ற சுவசெரிய சுகாதார சேவைக்கோ அழைத்து வைத்தியர் ஒருவருடம் உங்கள் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடலாம்

 

https://www.ilakku.org/?p=49287.

 

 

 
 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://www.facebook.com/SooriyanFMSriLanka/videos/1464846094416796/?mibextid=rS40aB7S9Ucbxw6v ஏன்னா நாங்க வெளிநாடு👆🏼🤣 #லண்டன் #அஜினமோட்டோ
    • சுவிசுக்கு..கொண்டுபோய் திரும்பி வந்தபின்னர்...உடுப்புத்தோய்க்கிற  கல்லாகப் பாவிக்கினம்..😃
    • இன்னொரு திரியில் எழுதினேனே முன்னர் “ஓமான்” என அழைக்கப்பட்டு இப்போ “இலண்டன்” என அழைக்கப்படுவோர் பற்றி?  அவர்களின் அச்சொட்டிய பிஹேவியர்களில் இதுவும் ஒன்று. முப்பது வருடம் முன் காலையில் எழும்பி பனங் குத்தியில் குந்தியவர்கள், இப்போ போய் அட்டாச் பாத் ரூம் இல்லையா என முகம் சுழிப்பர்🤣. அதே போல், இலண்டலில் BBC Panorama எலிப்புழுக்கையை படம் பிடித்து போட்ட தமிழ் கடைகளில் சப்பு கொட்டி உண்டு விட்டு, சம்பாந்துறையில் அஜினமோட்ட்டோ கூடீட்டு என்பார்கள். உண்மையில் இன, மத பேதமின்றி ஊரில் எல்லா மக்களும் இப்படியானவர்களை காமெடி பீசுகளா நடத்துகிறனர் என்பதே உண்மை🤣. 🤣 சோசல் காசு தரும் அரசாங்கம் என்னிடம் வாங்காத வேலையை - யாழ்களம் வாங்கி விடுகிறதப்பா🤣. துரையப்பா - இவர் ஊருக்கு போன சமயமே என் நிலைபாட்டை அந்த திரியில் எழுதிவிட்டேன். அப்போ நான் எழுதியதை இப்போ லேட் ரியாக்சன் போல கொடுக்கிறார் ராதிகா சிற்சபேசன். Better late than never.
    • @goshan_che க்கு இண்டைக்கு நித்திரை முழித்து “ஓவர் ரைம்” செய்ய வேண்டி வந்திட்டுது. 😂 அங்காலை ஒரு கனடா துரையப்பா திரியும்… அவருக்காக “வெயிட்டிங்” 🤣
    • திராவிடத்தை கடுமையாக எதிர்க்கும் நா.க வில் இருந்து விலகிச் சென்ற சிலர், திமுக வில் இணைந்து, திராவிட சிந்தாந்தத்தை போற்றி வருவது போன்றது தான் மன்சூர் அலிகானும் ஈழத் தமிழர்களை நாசம் செய்த செய்த காங்கிரஸை நா.க வில் இருக்கும் வரைக்கும் எதிர்த்து விட்டு, இன்று அதே காங்கிரசில் சேர்ந்து அவர்களைப் போற்றுகின்றார்... அதுவும் சோனியாவின் மகள் பிரதமராக வேண்டும் என்று விரும்புகின்றார். இந்திய, தமிழக அரசியல் கட்சிகளும் இலங்கையில் இன்றிருக்கும் தமிழ் கட்சிகளும் ஒரே குட்டைக்குள் ஊறிக்  கிடக்கும் கட்சிகள். இவற்றில் இது நல்லது, அது நல்லது என்ற வித்தியாசம் எதுவும் இல்லை.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.