Jump to content

முள்ளிவாய்க்காலில் “நினைவுக் கல்” கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் “நினைவுக் கல்” கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம்

May 12, 2021
2-696x536.jpg

 

முள்ளிவாய்க்கால் நினைவேந்த வளாகத்தில் நாட்டுவதற்காக நினைவுக் கல் ஒன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பினரால் அங்கு கொண்டுவரப்பட்ட நிலையில் படைத்தரப்பினருக்கும் அருட் தந்தையர்கள் தலைமையிலான பொதுக்கட்டமைப்பினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

3.jpg

இதையடுத்து முள்ளிவாய்க்கால் முற்றத்தை சுற்றி காவல்துறையினரும் இராணுவமும் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

https://www.ilakku.org/?p=49358

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நாட்டுவதற்கு கொண்டுவரபட்ட பொது நினைவுக்கல் !

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நிறுவுவதற்காக பொது நினைவுக்கல் நினைவேந்தல் பொது கட்டமைப்பால் கொண்டுவரப்பட்ட நிலையில் இராணுவம் பொலிஸார் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

IMG_8415.jpg

எதிர்வரும் மே 18 அன்று நினைவேந்தல் திட்டமிட்டபடி சுகாதார விதிமுறைகளை பின்பற்றி நடைபெறும் என பொது கட்டமைப்பு அறிவித்திருந்த நிலையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாசகம் பொறிக்கப்பட்ட பொது நினைவுக்கல் திரை நீக்கம் செய்யப்படுவதற்க்காக கொண்டுவரப்பட்டது.

இன்று மாலை 6 மணியளவில் நினைவேந்தல் கட்டமைப்பினரால் 6.5 அடி உயரமான பாரிய நினைவு கல்  முள்ளிவாய்க்கால் பகுதிக்கு கொண்டுவரபட்டுள்ள நிலையில் இராணுவம் வருகை தந்து  அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்கிடம் விசாரணையில் ஈடுபட்டனர். 

பின்னர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸார் வருகை தந்து விசாரணைகளில் ஈடுபட்டதோடு பொலிஸாரிடம் அனுமதி பெற்றே முள்ளிவாய்க்காலில் எதுவாக இருந்தாலும் செய்யமுடியும் என நினைவேந்தல் பொதுக்குழுவினரிடம் தெரிவித்து இங்கு எதுவும் செய்ய முடியாது என தெரிவித்தனர்.  

முள்ளிவாய்க்கால் பொது கட்டமைப்பை சேர்ந்த 6 பேர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நின்ற நிலையில் பொலிஸ் இராணுவம் 50க்கும் மேற்பட்டவர்கள் குவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

365F7D08-AB09-442E-8888-C2661A34FA53.jpg

IMG_6993.jpg

IMG_6994.jpg

IMG_6995.jpg

IMG_7002.jpg

BD5D2908-3860-4663-8CB5-9EF8C7DADBA2.jpg

IMG_7004.jpg

IMG_8400.jpg

IMG_8401.jpg

IMG_8404.jpg

IMG_8413.jpg

 

https://www.virakesari.lk/article/105408

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கிலிருந்து பிக்குகள், இராணுவத்தினர், ஆடல் பாடல் குழுவினர் வடக்கிற்கு படையெடுத்து, புத்தர் சிலை நிறுவலாம், விகாரை அமைக்கலாம். ஆனால் நாங்கள் எங்கள் மண்ணில், எங்களுக்காக இறந்த எங்கள் உறவுகளை நினைவு கூர்ந்து  கண்ணீர் விட்டு, ஆறுதலைடைய தடை. கொரோனா சொல்லிச்சா இல்லை புத்தர்தான் சொன்னாரா நான் இங்கே இவர்களுக்குள்தான் வருவேன், இங்கேதான் குடி இருப்பேன் என்று? இது சுகாதாரமும் இல்லை, பக்தியும் இல்லை, வீம்பு. நீங்கள்  போகிற போக்கில் போய் உங்களையே அழித்துக்கொள்ளுங்கள் என்று கடவுளும் இவர்களை கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டார். சீனாவை நம்பி இவர்கள் ஆடுற ஆட்டத்தில் சீனாவும் சேர்ந்து குப்புற விழப்போகுதோ தெரியேல்லை. காலம் மாற எதுவும் மாறும். பிறருக்கு வெட்டிய குழியில் பலர் தாமே விழுந்திருக்கிறார்கள். இது கண்ட அனுபவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்ட்டவர்களுக்காக நான் கொடுக்கும் வரப்பிரசாதங்களையும் நீயே எடுத்துக்கொள், உன்னை கட்டுப்படுத்த நான் விடும் தடைகளையும் நீ தண்டிக்க விரும்புபவர்களுக்காக திருப்பி விடு. உன்  ஆட்டத்தை தொடர் ஆனால் முடிவு மட்டும் என்கையில் என்று விடுவிட்டார் கடவுள். இப்போ ஆட்டம் விதி முறைகளை கடந்து சென்று விட்டது,  இவர்களே நினைத்தாலும் இனி ஆட்டத்தை  நிறுத்தமுடியாத கட்டத்தை அடைந்து விட்டது. தன்னை மட்டுமல்ல முறைகேடான ஆட்டத்தால் இவர்களின் ஆட்டத்தை பார்த்து  ரசித்தவர்களும், துணைபோனவர்களும் சேர்ந்து  ஏமாற்றமடையப்போகிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.