Jump to content

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 1 | ஓலமிட் டழுதோம் ஓடினோம் ஒடுங்கினோம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 1

தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள்.

ஓலமிட் டழுதோம் ஓடினோம் ஒடுங்கினோம்…

 

 

ஓலமிட் டழுதோம் ஓடினோம் ஒடுங்கினோம்
ஒவ்வோ ரணுவாய்ச் சிதைந்தோம்!
காலத் தலைவன் காத்தெமைப் புரந்த
கனித்தமி ழீழத்தில் புதைந்தோம்!
ஞாலத் தெவரும் நாடினா ரில்லை
நாங்கள்ஏன் செத்து மடிந்தோம்!
மூலத் தாயக முள்ளி வாய்க்காலில்
முடைநாற் றத்திலே கிடந்தோம்!

 

https://www.ilakku.org/?p=49372

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 2 | முள்ளி வாய்க்காலில் மூண்டவெம் போரில்…

 

 

முள்ளி வாய்க்காலில் மூண்டவெம் போரில்
முடுக்கினார் பகைவர்யாம் உருண்டோம்!
கொள்ளிவைத் தழித்தார் குதறினார் கொன்றார்
குமுறிக் குமுறிவுடல் புரண்டோம்!
அள்ளி அணைத்திட யாருமில் லாமலே
அழுது அழுதுவுயிர் கரிந்தோம்!
வெள்ளி முளைக்கவோ விடுதலை பூக்கவோ
வியன்தமிழ் ஈழத்தில் எரிந்தோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 3 | கட்டுமரம் ஏறிவந்து கரையொதுங்கி….

 

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 3

தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள்

 

 

 

கட்டுமரம் ஏறிவந்து கரையொதுங்கி நின்றவுன்னைக் கைபிடித்து வைத்ததற்கோ பாவி சுட்டகுண்டு பேய்நெருப்புச் சூறையிலே சுற்றமெல்லாம் சொந்தமின்றி விட்டதடா ஆவி! நட்டநடுக் காட்டினிலே நாய்நரிகள் ஊளையிலே நாற்புறமும் கிடக்குதடா சொந்தம்! கெட்டழிந்து விட்டோமே கிள்ளியெறி யாமையினால் கீழ்மையனே சிங்களவ புத்தா!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 4 | கண்கள் சூன்றார் கைகள் பிணித்தார்….

 

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 4

தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள்.

 

 

கண்கள் சூன்றார் கைகள் பிணித்தார் கழுத்துகள் நெரித்தார் சிரித்தார்! பண்கள் மிழற்றும் பைந்தமிழ் ஈழத்தில் பாவிகள் ஏன்எமைப் பிரித்தார்! பெண்கள் தொட்டார் பிள்ளைகள் சுட்டார் பெரும்பழி செய்து நட்டார்! மண்ணில் அறம்புகல் மாந்தரெல் லாரும் மறந்தெமை ஏன்கை விட்டார்!

 

https://www.ilakku.org/?p=49571

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 5 | இந்தியர் சிங்களர் இணைந்து கொன்றெமை….

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 5
தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள்.

 

 

இந்தியர் சிங்களர் இணைந்து கொன்றெமை
எரித்துக் கரித்துப் பொரித்தாரே!
மந்திகள் கைப்பூ மாலைகள் என்னஎம்
மக்கள் சிதைந்து மரித்தாரே!
அந்திச் செவ் வானமாய் நந்திப் பெருங்கடல்
அருந்தமிழ்க் குருதியில் ஆனதுவே!
சிந்திய கண்ணீர் ஆறுகள் பெருகிச்
செங்கடல் நந்தியில் போயினவே!

https://www.ilakku.org/?p=49634

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 6 | குயில் கூவும் காட்டினிலே குள்ளநரிக் கூட்டமம்மா….

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 6

தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள்.

 

குயில் கூவும் காட்டினிலே குள்ளநரிக் கூட்டமம்மா
குரல்வளையைக் கடித்துக் குதறுதம்மா!
மயிலாடிக் களித்தவன்னி மாகுண்டால் எரிந்ததம்மா
மண்மேடாய்த் தமிழீழம் ஆனதம்மா!
மைம்மா முகில்தடவிச் சிரித்தமுல்லை மாடமெல்லாம்
மகிந்தப்பேய் கால்குதித்து ஓடுதம்மா!
செய்யபுகழ்க் கதிர்விரிந்த செந்தமிழ்மா ஈழமெல்லாம்
சேர்ந்த இருள் கார்பரவிக் கவிந்ததம்மா!

 

https://www.ilakku.org/?p=49749

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 7 | கொற்ற மன்னன் கொள்கைத் தலைவன்….

 

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 7

தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள்.

 

 

கொற்ற மன்னன் கொள்கைத் தலைவன்
கோமான் எங்கள் பிரபாகரன்
முற்றம் முளைத்தயெம் விடுதலை வாழ்வு
முள்ளி வாய்க்காலில் முடிந்ததுவோ!
சுற்றும் பிணமலை சுடுபிணக் காடுகள்
சோகம் சொல்லியழ உறவில்லையோ!
ஏற்றுக் கிறந்தோம் எவர்க்கிடர் புரிந்தோம்
ஏன்எம் மண்ணில் எரிந்தோம்!

 

https://www.ilakku.org/?p=49924

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 8 | கொற்ற மன்னன் கொள்கைத் தலைவன்….

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 8
தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள்.

 

 

அன்னையென் தமிழே ஆருயிர்த் தேவிவுன் அடியினில் சிதறிச் சாய்கின்றோம்! முன்னவர் வாழ்ந்த முள்ளிவாய்க் காலில் மூட்டிய கணைகளில் தீய்கின்றோம்! சின்னவன் சிறியவன் சிங்களன் விரட்டிச் செந்தமிழ் ஈழம் காக்கின்றோம்! மன்னவன் நாளை மணிமுடி புனைகையில் மலர்களாய் மாறிப் பூக்கின்றோம்!

 

 

https://www.ilakku.org/?p=50103

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 9 | வானில்வரும் மண்ணில்வரும் வண்கடலைக் கலக்கிவரும்….

 

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 9
தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள்.

 

 

வானில்வரும் மண்ணில்வரும் வண்கடலைக் கலக்கிவரும்
வல்லவன்எம் மன்னன்படை பாரடா!
கானில்வரும் கடுகிவரும் கரும்புலியாய்ப் பெருகிவரும்
காடையனே நீயழிந்தாய் போரடா!
ஊனில்வரும் உயிரில்வரும் ஒண்டமிழ்த்தாய் தேரும்வரும்
உத்தமர்நாம் சொல்லுகிறோம் கேளடா!
தேனில்வரும் சேதிவரும் தீந்தமிழ்மா ஈழம்வரும்
தேம்பியவர் குறித்துவைத்தோம் நாளாடா!

 

https://www.ilakku.org/?p=50109

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.