Jump to content

ஜேர்மனியில்.... கொவிட்-19 தொற்றினால், 86ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் 86ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஜேர்மனியில்... கொவிட்-19 தொற்றினால்,  86ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் மொத்தமாக 86ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றினால் 86ஆயிரத்து 9பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 10ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில், இதுவரை 35இலட்சத்து 58ஆயிரத்து 148பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 13ஆயிரத்து 833பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 252பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சத்து 51ஆயிரத்து 839பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஐந்தாயிரத்து 49பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை 32இலட்சத்து 20ஆயிரத்து 300பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

https://athavannews.com/2021/1215514

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் தடுப்பூசி போட முதலே பரசிற்ரமோலை முற்காப்பு ரீதியாக எடுத்துக் கொள்ள கொடுக்கின்ற ஒரு மருத்துவ பாதுகாப்பு கொண்ட நாட்டில் இந்த இறப்பு தொகை அதிகமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியான சட்டங்களை   போட்டாலும்
கொரோனாத் தாக்கத்தின் விளைவுகளை ஜெர்மன் நாட்டில் வாழும் மக்கள் இப்போதும் உணரவில்லை என்று தான் தென்படுகின்றது
இன்னுமொரு அலை வந்தாலும் வரலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, வாத்தியார் said:

எப்படியான சட்டங்களை   போட்டாலும்
கொரோனாத் தாக்கத்தின் விளைவுகளை ஜெர்மன் நாட்டில் வாழும் மக்கள் இப்போதும் உணரவில்லை என்று தான் தென்படுகின்றது
இன்னுமொரு அலை வந்தாலும் வரலாம்

இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்

நான் நினைக்கிறேன் காலம் அதிகமானதும் ஒரு காரணமாக இருக்கலாம் ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

கொரோனா வைரஸ் தடுப்பூசி போட முதலே பரசிற்ரமோலை முற்காப்பு ரீதியாக எடுத்துக் கொள்ள கொடுக்கின்ற ஒரு மருத்துவ பாதுகாப்பு கொண்ட நாட்டில் இந்த இறப்பு தொகை அதிகமே.

பரசிட்டமோல் ஒட்டுமொத்த ஜேர்மனியும் எடுக்கேல்லை கண்டியளோ. நான் போன டாக்குத்தரும் இன்னும் ஒரு சில டாக்குத்தர்மாரும்தான் பரசிட்டமோளை பரிந்துரை செய்தவையள் :cool:

கொஞ்சம் விட்டால் இன்னும் என்னவோவெல்லாம்  சொல்லி கதை கட்டுவியள் போல கிடக்கு.😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, விசுகு said:

இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்

நான் நினைக்கிறேன் காலம் அதிகமானதும் ஒரு காரணமாக இருக்கலாம் ☹️

காலம் நீண்டு கொண்டு போவது தான் விரக்தி நிலையை உண்டாக்குகிறது.☹️

Link to comment
Share on other sites

On 13/5/2021 at 23:20, வாத்தியார் said:

எப்படியான சட்டங்களை   போட்டாலும்
கொரோனாத் தாக்கத்தின் விளைவுகளை ஜெர்மன் நாட்டில் வாழும் மக்கள் இப்போதும் உணரவில்லை என்று தான் தென்படுகின்றது
இன்னுமொரு அலை வந்தாலும் வரலாம்

திமிரெடுத்து விதிமுறைகளை பின்பற்றாமல் திரியிறவைக்கு கோதாரியில போன கொரோனா தாக்குதில்ல. எல்லா விதிகளையும் பின்பற்றிய எங்களிட்ட கொரோனாப் பிள்ளை ஏன் தேடி வந்திச்சோ தெரியேல்ல. 😭

On 14/5/2021 at 01:54, குமாரசாமி said:

பரசிட்டமோல் ஒட்டுமொத்த ஜேர்மனியும் எடுக்கேல்லை கண்டியளோ. நான் போன டாக்குத்தரும் இன்னும் ஒரு சில டாக்குத்தர்மாரும்தான் பரசிட்டமோளை பரிந்துரை செய்தவையள் :cool:

 

கொரோனாவுக்கு இதைத்தான் போடச்சொல்லுகினம். வீட்டுக்கு 4 அஸ்மா ஸ்பிறேயும் மூச்சுத்திணறலுக்கு தருகினம். இதைவிட வேற மருந்து இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெர்மனியில் கொரோனாத் தாக்கம் திடீரென்று குறைவதாக சுகாதார அமைச்சுத் தெரிவிக்கின்றது
அதன் அர்த்தம் அடுத்த அலையின் ஆரம்பமோ என்று யோசிக்கத் தூண்டுகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, வாத்தியார் said:

ஜெர்மனியில் கொரோனாத் தாக்கம் திடீரென்று குறைவதாக சுகாதார அமைச்சுத் தெரிவிக்கின்றது
அதன் அர்த்தம் அடுத்த அலையின் ஆரம்பமோ என்று யோசிக்கத் தூண்டுகின்றது

பிரான்சிலும் அதே நிலைதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன் கொரோனா, நாலாம் அலை அது இது எண்டு வாய்க்கு வந்தபடி கதைக்க வெளிக்கிட்டினம். என்ன கோதாரியோ ஆருக்குத்தெரியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.