Jump to content

இரவோடு இரவாக உடைத்தெறியப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி ! பெரும் பதற்றம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புங்கையூரன் said:

அதற்கான பக்குவம், இன்னும் பலருக்கு ஏற்படவில்லை!

அதனாற்தான் எமது போராட்டம் நீண்டுகொண்டே செல்கிறது. ஆனால் எதிரி தன் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறான் என்று தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கில் சரிந்து கொண்டிருக்கும் தங்கள் அந்தஸ்த்தை தூக்கி நிறுத்த இப்படிப்பட்ட அதிரடி சாகசங்கள் தேவைப்படுகிறது இந்த முடாள்களுக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, satan said:

அதனாற்தான் எமது போராட்டம் நீண்டுகொண்டே செல்கிறது. ஆனால் எதிரி தன் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறான் என்று தோன்றுகிறது.

இந்தப் போராட்டத்தைக் கையாண்ட விதம் காரணமாக, எதிரி அதற்கான விலையைக் கொடுக்க எப்போதோ ஆரம்பித்து விட்டான் என்பது தான் எனது கருத்து!

இந்தப் போராட்டத்துக்கான சரியான தீர்வைச் சரியான நேரத்தில் வழங்கியிருந்தால், சீனாவிடம் இப்போது பல்லைக் காட்டிக்கொண்டு,நிற்க வேண்டி வந்திருக்காது!
இராணுவ ஆட்சி என்று பிரகடனப் படுத்தப் படாத ஒரு இராணுவ ஆட்சிக்குள் இலங்கை சென்றிருக்காது!
இந்தியா என்ற ஒரு தேசம், கடல் வழங்களைக் கண்ணுக்கு முன்னேயே சூறையாடும் போது, எந்த வித நடவடிக்கையும் எடுக்கவியலாது பார்த்துக் கொண்டிருக்க வேண்டியிருக்காது!
சீருடையணிந்த ராச தந்திரிகளை (?) மற்ற நாடுகள் உரசிப் பார்க்கும்நிலையும் வந்திருக்காது!

இந்து சமுத்திரத்தின் முத்து, தனது முதுகைத் தானே தட்டிக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை!
ஆனால் ஒரு வெளிநாட்டவனின் பார்வையில்....இன்னும் அது ஒரு மூன்றாம் உலகநாடு தான்!

இந்தியாவுடன் ஒப்பிடாமல், சிங்கப்பூருடன், மலேசியாவுடன், இந்தோனேசியாவுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்!
 தென் திசையை நோக்கி....வெகு வேகமாகச் சென்று கொண்டிருக்கின்றது...இந்த முத்து..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டபோது சர்வதேச ரீதியாக கண்டனங்கள் வந்தன. தமிழக கட்சிகளும் கண்டன அறிக்கைகளை விட்டன. ஆனால் இனவழிப்பு நடந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள நினைவுத் தூபியை சிங்கள இராணுவம் உடைத்தபோது அமைதிகாக்கின்றார்கள். எவரின் உத்தரவில் நடந்தது என்று தெரிந்தபடியால் பேசாமல் இருக்கின்றார்கள் போலும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றம் சேதமாக்கப்பட்டுள்ளது- நினைவுக்கல் மாயம்

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்ட சம்பவத்திற்கும் இராணுவத்துக்கு எந்தவித தொடர்பும் கிடையாது – இராணுவ ஊடகப் பேச்சாளர்!

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்ட சம்பவத்திற்கும் இராணுவத்துக்கு எந்தவித தொடர்பும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

நினைவு தூபியை உடைக்க வேண்டிய தேவை இராணுவத்துக்கு கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்வதற்காக வைக்கப்பட்டிருந்த நினைவு தூபி அடையாளம் தெரியாதவர்களினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, குறித்த நினைவு தூபி உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1215680

##############   ##############  ############

கேக்கிறவன், கேனையன் என்றால்.......... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றம் சேதமாக்கப்பட்டுள்ளது- நினைவுக்கல் மாயம்

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்ட சம்பவத்திற்கும் இராணுவத்துக்கு எந்தவித தொடர்பும் கிடையாது – இராணுவ ஊடகப் பேச்சாளர்!

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்ட சம்பவத்திற்கும் இராணுவத்துக்கு எந்தவித தொடர்பும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

நினைவு தூபியை உடைக்க வேண்டிய தேவை இராணுவத்துக்கு கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்வதற்காக வைக்கப்பட்டிருந்த நினைவு தூபி அடையாளம் தெரியாதவர்களினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, குறித்த நினைவு தூபி உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1215680

##############   ##############  ############

கேக்கிறவன், கேனையன் என்றால்.......... 

ஓமடாப்பா உங்களுக்கு எதுவுமே தெரியாது. அதுசரி உங்களுக்கு எங்கடை மண்ணிலை இருக்க வேண்டிய தேவையும் தான் இல்லை பிறகேன் மினைக்கடுறியள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

நினைவு தூபியை உடைக்க வேண்டிய தேவை இராணுவத்துக்கு கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நினைவுக் கல்லை கொண்டுவந்தவர்களை கேள்வி கேட்கவும், நினைவு முற்றத்தில் யாரும் நுழையக்கூடாது என்று சுற்றி நின்று காவல் காக்கவும் தேவையென்ன வந்தது இராணுவத்துக்கு? இறந்தவர்களை நினைவு கூர தடையில்லை ஆனால் கொரோனாவால் கூட முடியாது என்று போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா என்றுமில்லாதவாறு பெருந்தன்மை வாய்ச்சவாடல் விடேக்கையே நினைச்சேன் ஏதோ விபரீதம் நடக்கபோகுதென்று. இதென்ன புதுசா இதுகளுக்கு? கடந்த காலத்தில்  மாவீரரின் கல்லறைகளை உழுவதற்கு என்ன தேவை வந்தது இராணுவத்துக்கு? அதுக்கு பித்து தலைக்கேறி நின்று சதிராடுது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிழலி said:

தமிழ் மக்களுக்கு எதிராக நிகழும் இந்த காட்டுமிராண்டித்தனங்களை தமிழர்கள் மாத்திரமே வாசிக்கும் ஒரு தளத்தில் கண்டிப்பதால் என்ன பலன் கிடைக்கும்?

மாறாக, மண்ணின் விடுதலைக்காக பல்லாயிரக்கணக்கான உயிர்களை அர்ப்பணித்தும் இன்று கல்லறை கட்ட கூட உரிமையற்ற நிலைக்கு ஏன் வந்தோம் என்றே ஆராய வேண்டும்.

உங்கள் கருத்தோடு எனக்கு முரண்பாடு இல்லை வெளியே இவை கொண்டு செல்லப்படணும் என்பதில் தான் எங்கள் எல்லோரது உழைப்பும் நேரமும் இருக்கணும்.

ஆனால் மனதில் ஒரு கேள்வி வருவது இயற்கை. 

ஒரு அநியாயமாக கொல்லப்பட்ட செத்த வீட்டில் வந்து ஆறுதல் சொல்ல முடியாதவர்கள் அல்லது இவர்களின் தவறால் இது நடந்தது என்பவர்கள் எப்படி அதை வெளியே எடுத்து செல்வர்????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

உங்கள் கருத்தோடு எனக்கு முரண்பாடு இல்லை வெளியே இவை கொண்டு செல்லப்படணும் என்பதில் தான் எங்கள் எல்லோரது உழைப்பும் நேரமும் இருக்கணும்.

ஆனால் மனதில் ஒரு கேள்வி வருவது இயற்கை. 

ஒரு அநியாயமாக கொல்லப்பட்ட செத்த வீட்டில் வந்து ஆறுதல் சொல்ல முடியாதவர்கள் அல்லது இவர்களின் தவறால் இது நடந்தது என்பவர்கள் எப்படி அதை வெளியே எடுத்து செல்வர்????

புலம்பெயர்தவர்களின் கைகளீல் எல்லாம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது அவர்கள்தான் எல்லாமே என்று சொல்பவர்கள் புலம்பெயர் நாட்டில் பல லட்சம் பேர் இருக்கிறார்கள் நீங்கள் வசிக்கும் நாடுகளில் அந்த நாட்டின் முக்கியதலைவர்களை கூட்டி ஏன் நினைவேந்தல்களை நடத்தக்கூடாது இங்கு அடக்கு முறைக்குள் இருக்கிறோம் என எத்தனை தடவை சொன்னாலும் புரியாது  வீண் பேச்சு மட்டும் பேசுவார்கள் 30 வருட போராட்டத்தையே புரிய வைக்க முடியாமல் உள்ளது உலக நாடுகளுக்கு  நாம் நமக்குள் மட்டும் குத்தி குடைஞ்சு கொண்டு இருப்போம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுத்தூபி உடைக்கப்பட்டதற்கு க.வி.விக்னேஸ்வரன் கண்டனம்

 
download-1-2.jpg
 34 Views

2009 இல் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் நடைபெற்ற போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி  கடந்த 12ம் திகதி இரவு உடைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன்,

“முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கடந்த 12 ஆம் திகதி இரவு அடித்து உடைக்கப்பட்டு, புதிதாக நடப்படுவதற்காகக் கொண்டுவரப்பட்டிருந்த நடுகைக்கல் அகற்றப்பட்டமை அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனமான, நாகரிகம் அற்ற செயற்பாடாகும்.

அரசாங்கத்தின் இந்த செயற்பாடு தமிழ் மக்களின் இதயங்களை மிகவும் இரணப்படுத்தி இருந்தாலும், எமக்கு இது ஆச்சரியத்தை அளிக்கவில்லை. ஏனென்றால், கடந்த காலங்களில் இத்தகைய பல மிலேச்சத்தனமான நடவடிவக்கைகளை தமிழ் மக்களுக்கு எதிராக இந்த அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை முள்ளிவாய்க்காலில் கொன்று குவித்ததுடன் மட்டும் நின்றுவிடாமல், துயிலும் இல்லங்களை உழவு இயந்திரம் கொண்டு உழுது அழித்திருந்தார்கள். அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு எத்தகைய கேவலமான செயற்பாடுகளையும் செய்யலாம் என்ற சிந்தனையில் செயற்படும் இந்த அரசாங்கம் தனது தலையில் தானே மண்ணை அள்ளி வாரிக்கொட்டிக் கொண்டிருக்கின்றது.

முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை உலகம் வெகு விரைவில் ஏற்றுக்கொள்ளத்தான் போகின்றது. அரசாங்கத்தின் இத்தகைய முட்டாள்த்தனமான செயற்பாடுகளினால் இந்த உண்மையை இப்போதும் மறைக்க முடியாது. ஆர்மேனியாவில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை இத்தனை காலம் கடந்தபின்னர் அமெரிக்கா இப்போது தான் ஏற்றுக்கொண்டிருக்கின்றது.
அரச படைகள் இதனைச் செய்யவில்லை என்று அறிக்கை விட்டிருக்கின்றார்கள். அப்படியானால் குறித்த நினைவுத்தூபி முள்ளிவாய்க்காலில் தொடர்ந்து நிரந்தரமாக இருப்பதில் தமக்கு ஆட்சேபணை இல்லை என்று அவர்கள் கூறுகின்றார்கள் போல் தெரிகின்றது.

விரைவில் எமது மக்கள் புதிய நினைவுத்தூபியை அதே இடத்தில் தாபிக்க அரசாங்கமும் படைகளும் இடமளிப்பார்கள் என்பதா இதன் அர்த்தம்?
அரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி கோவிட் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை உணர்வுபூர்வமாக நினைவுகூர இப்பொழுதே தயாராகுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

https://www.ilakku.org/?p=49567

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த எம் உறவுகளை  கல்லறைகளில்கூட  அமைதியாக உறங்க அனுமதிக்காத மிருகங்களோடு நாம் எப்படி சேர்ந்து வாழ்வது என்பதை எல்லாவற்றுக்குள்ளும் மூக்கை நுழைக்கும் சர்வதேசமே நமக்கு விளக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு தூபியை உடைப்பதென்பது அநாகரிகத்தின் உச்சம் -எம்.ஏ. சுமந்திரன்

 
MA-Sumanthiran--696x363.jpg
 37 Views

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்டதை தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இச் செயலானது வெறுமனே கல்லிலான ஒரு தூபியை மட்டும் உடைக்கவில்லை, இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் இதயங்களையும் தகர்த்திருக்கிறது.

மரணித்தவர்களின் நினைவு தூபியை உடைப்பதென்பது அநாகரிகத்தின் உச்ச கட்டம். இராணுவமும்  காவல்துறையினரும்  அந்த இடத்திற்கு  சென்று  பார்வையிட்ட பின்னர் தான் இது செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் போரில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு எவரும் தடை விதிக்க முடியாது.

அந்த நினைவுகளை எந்த உத்தரவும் மழுங்கடிக்கவும் முடியாது. நாம் முள்ளிவாய்கால் நினைவேந்தலை செய்வோம் – எவராலும் தடுக்க முடியாதபடி செய்வோம்” என்றார்.

 

 

https://www.ilakku.org/?p=49563

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.