Jump to content

தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரம்: ஒன்ராறியோ மாகாணத்தில் சட்டமாக ஏற்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரம்: ஒன்ராறியோ மாகாணத்தில் சட்டமாக ஏற்பு

 
vijay4-1-696x336.jpg
 15 Views

கனடா – ஒன்ராறியோ மாகாணத்தில் தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரம் ஆளுநரின் ஒப்புதலுடன் உத்தியோகபூர்வ சட்டமாக ஏற்று அங்கீகரிக்கப்பட்டது.

இதன்மூலம் மே-18 ஆம் திகதியுடன் முடிவடையும் 7 நாட்கள் ஒன்ராறியோவில் ஆண்டுதோரும் தமிழர் இனப்படுகொலை அறிவூட்டல் வாரமாக கடைப்பிடிப்பதற்கான சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அத்துடன், தமிழினப் படுகொலை குற்றச்சாட்டை வெளிநாடொன்றின் மாகாணம் சட்டரீதியாக ஏற்று அங்கீகரித்த முதல் சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரம் முன்மொழிவு (Bill 104) மூன்றாவது வாசிப்பு மே 06ஆம் திகதி ஒன்ராறியோ மாகாணச் சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

vijay4.jpg

தொடர்ந்து மாகாண ஆளுநர் ஒப்புதலுக்காக இது அனுப்பப்பட்டது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை வாரம் ஆரம்பமான முதல்நாளான நேற்று இந்த சட்டமூலத்துக்கு ஒப்புதல் அளித்து மாகாண ஆளுநர் கையெழுத்திட்டார்.

இதனையடுத்து தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச் சட்டம் ஒன்ராறியோவில் உத்தியாகபூா்வமாக நடைமுறைக்கு வந்தது. ஒன்ராறியோ சட்டமன்ற தமிழ் உறுப்பினர் விஜய் தணிகாலம் தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரம் என்ற தனிநபர் பிரேரணையை 2019ஆம் ஆண்டு சமர்பித்தார்.

இந்த தனிநபர் பிரேரணை மீதான மூன்றாம் வாசிப்பு கடந்த 6-ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. இதன் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட ஆளும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர்கள் தமிழர்கள் மீதான இனப்படுகொலை குறித்தும், தமிழர்கள் தொடர்ந்து எதிர் கொள்ளும் உரிமை மறுப்புகள் குறித்தும் பேசினர்.

தொடர்ந்து ஒளுநரின் ஒப்புதல் பெற Bill 104 என்ற இந்தத் சட்டத் திருத்தம் அனுப்பப்பட்டது. இந்நிலையிலேயே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வார ஆரம்ப நாளில் இதனை அங்கீகரித்து ஆளுநர் கையெடுத்திட்டார்.

ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘தமிழ் இனப்படுகொலைக் அறிவூட்டல் வாரம்’ (சட்டமூலம் 104) ஆளுநரின் அங்கீகாரத்தை பெற்று சட்டமாவதைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் மிகத் தீவிரமாகச் செயற்பட்டு வந்தபோதும் அந்த முயற்சி கைகூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தத் தீா்மானத்தை முன்வைத்து நிறைவேற்றியமைக்காக நான் பெருமையடைகிறேன் என விஜய் தணிகாசலம் கூறியுள்ளார்.

இந்தத் தீா்மானத்தின் மூலம் மே 12 – மே 18 வரையான காலப்பகுதி ஒன்ராறியோவில் இலங்கை தமிழர் இனப்படுகொலை அறிவூட்டல் வாரமாக பிரகடணப்படுத்தப்படுகிறது. தமிழ் இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான பிற குற்றங்கள் குறித்து பொதுமக்களை தெளிவுபடுத்த இதன்மூலம் சட்டரீதியான அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலை அறிவூட்டல் வாரம் குறித்த தீா்மானத்தை நிறைவேற்ற ஒன்ராறியோ தமிழ் சமூகத்துடன் ஒன்றிணைந்து நின்றமைக்காக மாகாண முதல்வர் டக் போர்ட், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து ஒன்ராறியர்களுக்கும் நன்றி கூறுகிறேன் எனவும் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/?p=49410

 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெல்டன் விஜய்  ...வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் தணிகாசலம் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும்..........!   🌹

எறும்பூர கல்லும் தேயும்........!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொறொன்ரோவில் சட்டமாகியது ‘தமிழின அழிப்பு அறிவியற்கிழமை’ – விஜய் தணிகாசலத்துடன் இலக்கின் சிறப்பு நேர்காணல்

 
Capture-7.jpg
 85 Views

கடந்த  6.5.2021 அன்று, ரொறொன்ரோ சட்டசபையில் ‘தமிழின அழிப்பு அறிவியற் கிழமை’ மூன்றாம் வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டு, 12.05.2021 அன்று ஒரு சட்டமாக இயற்றப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் எமது உறவுகள் சந்தித்த இனவழிப்பின் 12ஆவது ஆண்டை உலகத் தமிழினம் நினைவுகூரத் தயாராகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், எமது மக்களுக்காக இந்த அரிய முயற்சியை முன்னெடுத்த NDP கட்சியைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்களுக்கும், அவருக்குத் துணை நின்ற அனைவருக்கும் ‘இலக்கு’ நிர்வாகம் மற்றும் வாசகர்கள் சார்பாக எமது உளப்பூர்வமான வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றோம்.

vijay-thirukural-300x200.jpeg

மிகக் கடுமையான வேலைப் பழுவின் மத்தியிலும் இந்த நேர்காணலை ‘இலக்கு’ மின்னிதழுக்கு மனமுவந்தளித்த விஜய் தணிகாசலம் அவர்களுக்கு ‘இலக்கு’ தனது மனமார்ந்த நன்றியை வெளிப்படுத்துகிறது.

கேள்வி – ‘தமிழின அழிப்பு அறிவியற் கிழமை’ என்ற இந்த விடயத்தை ஒன்ராறியோ நாடாளுமன்றம் மூலம் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் உங்கள் உள்ளத்தில் எப்படி உதித்தது? 

பதில் – நான் 14 வயசில ரொறொன்ரோ கனடாவுக்கு வந்தனான். நானும் தமிழ் ஈழத்தில இருந்து அந்த இனவழிப்பை பாத்திருக்கிறன். எங்கட ஒழுங்கையிலும் கூட நிறையப் பேர் சிறீலங்கா ஆமியின் செல் அடித்து இறந்த ஆக்கள் இருக்கினம். நாங்களும் இடம்பெயர்ந்து போய் ஒவ்வொரு இடமாய்ப் போய் அகதிகளாக வந்தது. அந்த ஒரு அனுபவம் இருக்கு. பிறகு 2009 நடக்கேக்க நான் இங்க யூனிவேசிட்டியில படிச்சுக் கொண்டிருந்தனான். 2009 என்பது உங்களுக்குத் தெரியும் உலகத்தில, தாயகமாய் இருக்கலாம் அல்லது புலத்திலயாய் இருக்கலாம். எல்லா இடத்திலயும் மக்களுக்கு அது ஒரு திருப்புமுனையாய்  இருந்தது. எல்லாப் பாளிமென்ருக்கு முன்னால போயும் நாங்கள் மன்றாடிக் கேட்டுக் கொண்டு நிண்டனாங்கள். எங்கட மக்களுக்கு நடக்கிறது இனவழிப்பு. அதை உலக நாடுகள் எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் எண்டு. நாங்கள் அப்படி மன்றாடிக் கேட்டும் உலக நாடுகள் செவி சாய்க்காமல் கொத்துக் கொத்தாய் கொன்று அழிச்சிருக்கினம். அப்ப இங்க இருக்கிற எல்லா இளையோருக்கும் ஒரு உணர்வு வந்திருக்கும். எங்கட மக்களுக்கு நடக்கிற இனவழிப்பை நிற்பாட்ட வேண்டும். மற்றது இனவழிப்பு என்றதை அங்கீகரிச்சால் தான் நீதிக்கான பயணத்தில் நாங்கள் அடுத்த கட்டத்துக்குப் போகலாம் எண்டு தெரியும். நான் வந்ததில இருந்து இங்க இருக்கிற இளையோர் அமைப்புக்களோட இணைஞ்சு வேலை செய்துகொண்டு இருந்தனான். அதற்குப் பிறகு, 2009க்குப் பிறகு யுனிவேசிட்டியில படிச்சுக் கொண்டிருக்கும் போதும் இதற்குப் பிறகு படிச்சு முடிச்சாப் பிறகும் சமூகத்தோடு இருந்து செயற்றிட்டங்களில் இருக்க வேண்டும் என்பது – உலகத்திலேயே இளையோர் எல்லோருக்குமே அப்படி இருக்கும் எண்டு நினைக்கிறன். அந்த ரீதியில தான் போய்க் கொண்டிருந்தது. பிறகு நான் finance துறையில இருக்கிறதால கனடாவிலுள்ள prime ministerக்கு ஒரு fund raising செய்ய வேணும். ஒரு fund raiser ஆய் வரவேணும். ஏனெண்டால் நான் business படிச்சு financeக்குள்ள இருக்கிறன். ஆனால் அரசியல் மட்டத்துத்துக்குள்ள போறதுக்கு நாங்கள் எப்பவும் பின்னால நிண்டு வேலை செய்யிறதுக்குத் தான் interest காட்டிக் கொண்டிருந்தது. பிறகு இரண்டு மூண்டு தரம் ரொறொன்ரோவில இருக்கிற அண்ணாமார், அக்காமார் தான் கேட்டவையள்.  so நான் இரண்டு வாட்டி இல்லையெண்டு சொல்லி மூண்டாவது தடவை ஒரு challenge ஆக எடுத்துச் செய்வம் எண்டு தான் தொடங்கியது.

09-300x200.jpg

அதற்குப் பிறகு தமிழ் மக்கள், அவர்களது ஆதரவால தான் உள்ளே வந்தது. உள்ளே வந்தாப்பிறகு நாங்கள் 2009இல நடந்ததுக்கு நான் இருக்கிற ஒன்ராறியோ சட்ட சபையில எப்படியாவது அங்கீகாரம் கொண்டு வரவேண்டும் எண்டு, நாங்கள் எங்க போறோமோ அங்க எங்கட கதைகளைச் சொல்வது தான் எங்கட வேலைத் திட்டமாய் இருக்கும். அப்படி வரக்கேக்க ஒன்ராறியோ மாகாணம் என்பது தேசிய மட்டமில்லாமல் மாகாணம் எண்டு இருக்கிற படியால் அதில் வெளியுறவு அமைச்சு Foreign Affairs Ministry ஒன்ராறியோ மாகாணத்தில இல்லை.  கனடாவில அது தேசிய அளவில தான் இருக்குது. Tamil Remembrance Day  அதுக்கான அங்கீகாரத்தைக்  கொண்டு வரும் போது இங்க சுகாதாரமும் கல்வியும் தான் முதல் இரண்டு அமைச்சுகளாய் இங்க ஒன்ராறியோ மாகாண சட்ட சபையில இருந்தது. அப்ப நாங்கள் இந்தக் கல்வி இருக்கும் போது தான் தமிழின அழிப்பு, ஒரு அறிவியற் கிழமை, அறிவூட்டல் வாரம் மாதிரிச் செய்ய வேணும் எண்ட ரீதியில நாங்கள் இதைக் கொண்டு போனது. அது வேலை தொடங்கி இரண்டு வருசத்துக்கு மேல ஆயிற்றுது. அப்படித் தான் இந்தTamil Genocide Education Week உருப்பட்டது.

கேள்வி – நன்றி. இளையோர் இச்செயற்பாட்டில் அதிகமாக ஈடுபட்டதாக அறிகிறோம். அதைப்பற்றி என்ன சொல்ல விரும்புறீங்க?

பதில் – நிச்சயமாய் இது நாங்கள் முதல் இந்த சட்ட சபை உறுப்பினர்களுக்குக் கொண்டு வந்து அறிமுகப்படுத்துவதற்கு முதலே இங்க ஒன்ராறியோ கனடாவில் இருக்கிற தமிழ் இளையோர் அமைப்பாக இருக்கலாம் தமிழ் இளையோர் ஒன்றியமாக இருக்கலாம் பிறகு இங்க இருக்கிற National Council of Canadian Tamils என்கின்ற மக்களவையாக இருக்கலாம். எல்லாரும் ஒரு குழுவாய்ப் போய், தமிழ் சமூகத்தின்ர ஒரு குழவாய்ப் போய், எல்லாக் கட்சி மட்டத்தையும் அவையள் சந்திச்சவையள். இங்க மூண்டு கட்சி பிரதானமாய் இருக்கினம் அதாவது Progressive Conservative கட்சி, Liberal கட்சி NDP கட்சி எண்டு இருக்கினம். பிறகு Green Party யும் இருக்குது. so கட்சி வேறுபாடு இல்லாமல் எப்பவுமே எங்கட பிரச்சினையைக் கொண்டு போகும் போது, தமிழ் மக்களுடைய பிரச்சினையைக் கொண்டு போகும் போது, கட்சி வேறுபாடு இல்லாமல் அந்த அறிவூட்டலைச் செய்ய வேணும் எண்ட ரீதியில இளையோர்கள்  அதை ஒரு தலைமைத்துவப் பதவியை எடுத்து எல்லா இடத்திலயும் போய்ச் சந்திச்சாப் பிறகு தான் நாங்கள் இதனை அறிமுகப்படுத்தினது சட்டசபையில. அப்ப சட்டசபையில அறிமுகப்படுத்தும் போதே எல்லாக் கட்சியிலயும் இதுக்கான ஒரு ஆதரவுக் குரலைக் கொண்டு வந்திற்றோம். அதுக்குப் பிறகு அறிமுகப்படுத்தும் போது முதலாவது வாசிப்பு இரண்டாவது வாசிப்பு ஏகமனதாய் எல்லாராலயும் வாக்களிக்கப்பட்டு அது நிறைவேறுது. அதுக்குப் பிறகு தொடர்ந்தும் அந்த மின்னஞ்சல் சட்டசபை உறுப்பினர்களுக்கு எழுதிறதாய் இருக்கலாம் social media வாய் இருக்கலாம் இணையத் தளங்களில் தமிழின அழிப்பின்ர விழிப்புணர்ச்சியை எடுக்கிற campaign ஆய் இருக்கலாம் என்று இதில இளையோரும் தமிழ் மக்களும் தான் காரணம். இது நிறைவேறுவதற்கு சட்டமூலம் நிறைவேறி இப்ப சட்டமாய் ஆயிருக்கு. அதுக்குத் தமிழ் மக்கள் காரணம். குறிப்பாய் இளையோர்கள் காரணம்.

கேள்வி – இப்ப நீங்க அதைச் செய்து ஒரு மூன்றாவது வாசிப்பை முடிச்சு ஒரு சட்டமாக அது மாற்றப்பட்டிருக்குது. ஆனால் இந்த இரண்டு வருசம், இதை நோக்கிய ஒரு பயணம் ஒரு சவால் நிறைந்த ஒரு பயணமாய்த் தான் இருந்திருக்கும். நிறையச் சவால் இருந்திருக்கும். ஆனால் இதில நீங்கள் சந்திச்ச முக்கியமான அல்லது பெரிய சவால் என்று நீங்கள் எதை நினைக்கிறீங்க?

maxresdefault-1.jpg

பதில் – முக்கியமான சவால் எண்டு சொல்லும் போது சிறீலங்கா அரசு இந்த Bill ஐ எப்படியாவது நிப்பாட்ட வேணும் எண்ட வேலையில அவர்கள் குறிப்பாக இறங்கி இருந்தவை. அதுக்கு அவங்கள் செய்த வேலை என்னெண்டால் இங்க சட்டசபை உறுப்பினர்களாய் இருக்கிற எல்லாரையும் இங்க இருக்கிற முதல்வராய் இருக்கலாம். இல்லாவிட்டால் அமைச்சர்களாய் இருக்கலாம். இல்லாட்டி உறுப்பினர்களாய் இருக்கலாம் எல்லாரையும் சந்திச்சு, கொரோனா தொற்றுக்கு முதல் நேராகவும் கொரோனா தொற்றுக்குப் பிறகு மெய்நிகர் மூலமாகவும் சந்திச்சு இந்தவொரு பொய்ப் பிரச்சாரத்தைச் செய்து கொண்டே இருந்தவை. பொய்ப் பிரச்சாரம் எப்படியெண்டால் – இப்படியொரு விடயமே நடக்கேல்ல – எங்கட மக்கள் அங்க கொல்லப்படவே இல்லை – அங்க safe zone க்குள்ள கொண்ணந்தும் cluster bomb போட்டுக் கொல்லேல்ல எண்டும் hospitalக்கு செல் அடிக்கேல்ல எண்டும் எல்லாத்தையும் ஒரு பொய்ப் பிரச்சாரமாக… ஆனால் எங்கட இனவழிப்பு நடந்தேறிய காலகட்டம் என்பது ஒரு டிஜிட்டல் காலகட்டம். அதில நிறையப் படங்கள் இருக்குது ஆதாரமாய். வீடியோ satellite images, documentaries எண்டு நிறைய விடயம் இருக்குது. அந்தப் பொய்ப் பிரச்சாரம் எண்டது இங்க நிறைய தங்கட  resource எல்லாத்தையும் வைச்சு ஒரு பெரியதொரு முயற்சி எடுத்தவையள். எங்களுக்குத் தெரியும் அவை இதை நிப்பாட்டப் பாக்கினம். ஏனெண்டால் உலகத்தில ஒரு மூலையிலயும் தமிழின அழிப்பின்ர உண்மையான அங்கீகாரம் ஆருக்கும் கிடைக்கக் கூடாது.  ஏனெண்டால் ஒரு இடத்தில கிடைச்சுது எண்டால் எங்கட தமிழ் மக்கள் அதை எல்லா நாடுகளுக்கும் கொண்டு போய்ச் சேர்த்து எல்லா நாடுகளிலயும் அங்கீகாரத்தைக் கொண்டு வந்திடுவினம் எண்ட ஒரு அச்சத்தில அவர்கள் நிறைய எதிர்ப்பை அவர்களுக்குத் தெரிவிச்சுக் கொண்டிருந்தவையள். அது மூண்டாவது வாசிப்பு முடிஞ்சு இந்த Ontario Governor General இன்ர கையெழுத்துப் போடுற வரைக்கும் கூட இருந்தது. இங்க இருக்கிற தேசிய மட்டத்தில இருந்தும் அழுத்தங்கள் வந்தது. இலங்கையில இருந்தும் அந்த அழுத்தங்கள் வந்து கொண்டிருந்தது. அதைத் தான் ஒரு முக்கியமான ஒரு சவாலாய் நான் பார்க்கிறன்.

கேள்வி – இலங்கை அரசாங்கம் அழுத்தத்தைப் பிரயோகித்த போது அதை நீங்கள் எப்படி வெற்றி கொண்டனீங்கள்? என்ன மூலோபாயத்தை அதுக்கு நீங்கள் பாவிச்சனீங்கள்?

பதில் -மக்கள் விட்டுக் கொடுக்காமல் திரும்பத் திரும்ப சட்டசபை உறுப்பினர்களோட முக்கியமாய் இங்க ஒன்ராறியோவில் இருக்கிற முதல்வர், Premier Doug Fordக்கு அவ்வளவு ஆதரவு தெரிவிச்சுக் கொண்டிருந்தவை. இது எங்களுக்கு முக்கியமானது. தங்கட வலிகளைப் பிள்ளைகள் அம்மா அப்பா Black July இல பட்ட  ஒரு வலியாக இருக்கலாம் அல்லது அவர்களது உறவினர் 2009 இல பட்ட அவலமாக இருக்கலாம். அந்தக் கதைகளை இணையத் தளத்தில் பகிரத் தொடங்கினவை, அது ஆவணமாக்கப்படத் தொடங்கியது ஆவணமாக்கிறது ஒரு முக்கியமான பணியெண்டு நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒரு facebookயிலயோ, instagramஇலயோ tweeter பக்கத்திலயோ அவையள் அதை ஆவணப்படுத்தத் தொடங்கினாப் பிறகு நிறையப் பேர் அதைப் பரப்பி அதைச் share பண்ணிக் கொண்டிருந்த போது அரசியல் மட்டத்தில அது நிறையப் பேரைப் போய்ச் சேர்ந்தது. அது தான் முதல் வெற்றியாக இருந்தது. அதை மக்கள் சக்தி எண்டு தான் சொல்ல வேணும்.

DYr8UfvXcAEFOSc-225x300.jpeg

இரண்டாவது Ontario Government உம் Premier Doug Ford உம் 2020 ஓகஸ்ட் மாசம் எல்லாத் தமிழ் ஊடகங்களையும் சந்திச்சவர். 13, 14 தமிழ் ஊடகங்களைச் சந்திச்ச போது தமிழ் ஊடகங்கள் கேட்டது – தமிழின அழிப்புச் சட்டமூலம் வந்திருக்குது அதைப்பற்றி நீங்கள் என்ன முடிவு எடுத்திருக்கிறீங்கள் எண்டு சொல்லும் போது அவர் அப்ப, நான் அவருக்குப் பக்கத்தில நிண்டனான். அவருக்குத் தெரியும் மக்களுக்கு இது முக்கியமான ஒரு தேவை எண்டு – அப்ப முதலே எனக்கு அவர் சொல்லேல்ல. தமிழ் ஊடகங்களுக்கு open ஆகச் சொன்னவர். Genocide is a terrible thing. It should not happen in Sri Lanka. It should not happen anywhere in the world என்ன செய்தெண்டாலும் I will take it to the third reading all the way pass பண்ணுறதுக்கு நான் help பண்ணுறன் எண்டு ஓகஸ்ட் மாதம் 2020 சொன்னவர். கொரோனாத் தொற்று உச்சகட்டத்தில இருக்கிற காலகட்டத்தில தமிழ் ஊடகங்களுக்கு வீடியோவில record பண்ணேக்க சொல்லியிருக்கிறார். அப்ப எங்களுக்கு ஒரு பூரிப்பாய் இருந்தது. எனக்கும் ஒரு பெருமையாய் இருந்தது. இப்படி வந்து தமிழ் ஊடகத்துக்கு முன்னால சொல்லறது எண்டது.

vijay-thani.jpg

அந்த வீடியோ வெளியில வந்தாப் பிறகு இலங்கை அரசாங்கத்தினது அழுத்தம் எண்றது எத்தனையோ மடங்காய் அதிகரித்திருந்தது. உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும் எல்லா நாடுகளிலயும் அவர்கள் அப்படியான வேலைகளைச் செய்வார்கள். மக்களுடைய பலமும் ஒன்ராறியோ Premier Doug Ford உம் இருக்கும்போது ஏனைய வேறு இன சட்டசபை உறுப்பினர்களும் இதுக்கான ஆதரவும் கூடத் தொடங்கினது. ஆப்படியான ஆதரவுகளால தான் இப்ப இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

கேள்வி – இது சட்டமாகி அங்கீகரிக்கப்பட்டிருப்பதால், எந்த விதமான நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும்? எப்படிப்பட்ட செயற்பாடுகளில் நீங்கள் இப்போது ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்?

பதில் – சட்ட ரீதியான ஒரு பொறிமுறை ஒன்ராறியோவில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டம் எப்படியென்றால், 250 ஆண்டுகளின் பின்னர் எங்கள் தலைமுறை, தலைமுறை தாண்டிய பின்னரும் இந்தச் சட்டம் ஒன்ராறியோவில் சட்டமாகவே இருக்கப் போகின்றது. உதாரணமாக இலங்கை அரசாங்கம் எப்படி Sinhala Only Act என்ற சட்டத்தைக் கொண்டு வந்ததோ Standardization என்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வந்ததோ அவற்றைப் போல இப்போ இன அழிப்பைப் பற்றியதொரு சட்டம். இது எப்படியெனில், ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரு யூத மக்களுக்கு நடந்தது  இனவழிப்பு என்பதை ஒரு பாடமாகப் படிக்கின்றார்களோ அதே போல தமிழ் மக்களுக்கு நடந்தது ஒரு இன அழிப்புத் தான் என்பதை பாடமாகப் படிப்பதற்குரிய ஒரு வாய்ப்பு இதன் மூலமாக வந்திருக்கின்றது. இதற்குப் பின்னர் இங்கு இருக்கும் எங்கள் தமிழ் மக்கள், புத்திஜீவிகள், வழக்கறிஞர்கள், கல்வியியலாளர்கள், மனநலம் சார்ந்து வேலை செய்பவர்கள் எல்லோரும் ஒன்றாக  சேர்ந்து இங்கு இருக்கும் கல்வி சபைகளில் அவர்களுடன் இணைந்து இதற்கான ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கும் போது அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு வாரத்தில் எல்லாக் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

WhatsApp-Image-2021-05-16-at-3.22.40-PM-

ஒரு சரியான பாடத் திட்டத்தை ஒரு சமூகமாக வந்து முன்வைக்கும் போது, அவர்கள் Professionals  முன்வைக்கும் போது, கல்விச் சபை அதை ஏற்றுக் கொள்ளும். கல்விச் சபைக்கு மேலாக இருக்கும் ஒன்ராறியோ அரசாங்கம் அதை சட்டமாகக் கொண்டு வந்திருக்குது. இது முதலாவது.

இரண்டாவதாக கல்லூரிகளில university களில படிப்பை முடித்து post graduate படிப்பு படிக்கிறவர்களாக இருக்கலாம். அவர்கள் Masters அல்லது PhD படிக்கும் போது ஒரு Thesis பேப்பரில் தமிழின அழிப்பை சார்ந்த ஒரு தலைப்பை எடுத்து, அதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம். அதற்கான நிதியுதவியை இங்கு இருக்கும் தமிழ் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து கொடுத்து உதவ வேண்டும்.

எப்படி இதை மேற்கொள்ள வேண்டுமென்றால், ஒருவர் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டால், அதை வைத்து அடுத்த ஐந்து பேர் இதை மேற்கொள்ள வேண்டும். பின்னர் இது 25ஆக மாறும். ஒரு பல்கலைக்கழகம், கல்லூரிகளில் கூட இந்த ஆய்வுக்கான நிதிக் கொடுப்பனவைக் கொண்டு வரவேண்டும்.

வெளியில் இதைப் பார்த்தால், ஒரு சிறிய பாடசாலையில் ஒரு ஆக்கம் செய்யும் போது, யூலையில் நடந்த  ஒரு அப்பாவின் வலியை சொல்லும் போது,  அதே இடத்தில் அந்தப் பிள்ளையிடம் இதை மாற்றம் செய்யுங்கள், இது மிகைப்படுத்தப்பட்டதாக உள்ளது என அநேக இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. இனிமேல் அப்படி யாரும் சொன்னால், அவர்கள் தான் சட்டத்திற்குப் புறம்பானவர்கள் என்பார்கள். ஏனெனில், இது தற்போது ஒரு சட்டமாக வந்துள்ளது. சட்டத்திற்கு உட்பட்டதாக இது மாறி விட்டது என்று சொல்லலாம்.

வெளியில் தமிழின அழிப்பு இல்லை என்று நிராகரிப்பதால் அதிகமானவர்கள் இது பற்றிப் பேசுவதில்லை. ஒரு பொது இடமாக இருக்கலாம். மே 18இல் நாங்கள் நினைவேந்தல் செய்யும் போது யாராவது தகாத வார்த்தைகளால் சொன்னால் கூட அது ஒரு hate crime இற்குள் உட்படுத்தப்படும். அதாவது ஒரு சமூகத்திற்கு, ஒரு இனத்திற்கு எதிரான  discriminaiton ஆகப்பார்க்கக் கூடும். ஏனெனில், அது அரசாங்கத்தால் இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் என்பதை எப்படியும் எமது மக்களிடம் கொண்டு போய் சேர்க்கலாம்.

Capture.JPG-1-1-300x173.jpg

இது நடந்து முடிந்த பின்னர் கனடாவின் முக்கிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவி ஒருவர் தனது ருவிற்றர் பக்கத்தில் ஒரு ஆய்வை போட்டிருந்தார். அதற்கு அந்தப் பல்கலைக்கழகம் இது ஒரு குற்றம் சாட்டப்பட்ட இன அழிப்பு (Alleged genocide) என பதிவிட்டிருந்தது. அப்போது அவர் குறித்த பல்கலைக்கழகத்திற்கு ருவிற்றர் பக்கத்தில் பதில் அளிக்கையில், நேற்றைய தினம் இந்த சட்டம் அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் Alleged genocide எனப் போட வேண்டாம். எனது பதிவில் அவ்வாறு போடப்படவில்லை. ஆனால் பல்கலைக்கழகம் அவ்வாறு போட்டுள்ளது. இந்தச் சட்டத்தை குறியீடாக வைத்து சிபார்சு செய்யுங்கள் என்று சொல்லிய சில மணி நேரத்தில் அந்த பல்கலைக்கழகம் அந்தக் குறியீட்டைப் பார்த்து விட்டு Alleged genocide என்ற வார்த்தையில் Alleged  என்ற வார்த்தையை எடுத்து  genocide தான் இலங்கையில் நடந்திருக்கின்றது என்று கூறி ருவிற்றர் பக்கத்தில் மாற்றம் செய்துள்ளனர். இதை உதாரணமாக சொல்கிறேன். ஏனென்றால், இதற்கு முன்னர் பல்கலைக்கழகம் இதை உறுதிப்படுத்துவதற்கு ஆவணங்கள்  இல்லை என்று கூறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது அதற்கான மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தக் குறியீட்டைக் காட்டும் போது ஒரு வழக்கறிஞர் கூட வழக்கிற்கு இதை வைத்து வாதாடக்கூடிய வாய்ப்பு உள்ளது.

கேள்வி –  முதல் தடவையாக எங்கள் தாயகத்திற்கு வெளியில் எங்களின் ஈழத்தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அந்த அநீதி ஒரு இனவழிப்பு என்று சொல்லி ஒன்ராறியோ நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும்? எங்கள் ஈழத்தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளில் வசிக்கின்றார்கள். அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

Capture.JPG2_-300x241.jpg

பதில் – எங்கள் தமிழ் உறவுகள் உலகப் பந்தில் பரந்து விரிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எல்லாத் தமிழ் மக்களும் இந்த ஒரு நோக்கத்திற்காகவே பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ் மக்களுக்கான நீதியைத் தேடித்தான் பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள். கனடாவிலுள்ள ஒன்ராறியோ நாடாளுமன்றத்தில் வந்த இந்த சட்டமூலம் இந்தப் பயணத்திற்கு ஒரு வலுச் சேர்த்திருக்கின்றது என நான் நினைக்கிறேன். இந்த உத்வேகத்துடன் வேறு புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழ் மக்கள் அந்தந்த நாடுகளிலும் எமது மக்களுக்கு நிகழ்ந்த இனஅழிப்பு தான் என்பதை கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை நிச்சயமாக எனக்கு இருக்கின்றது.

இது 2021 மே 12ஆம் திகதி சட்டமாக நிறைவேற்றப்பட்டது. 13ஆம் திகதி அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் இருக்கின்ற வேற்றின பாராளுமன்ற உறுப்பினரும் (Hugh McDermott) இப்படியான ஒரு தனிநபர் பிரகடன சட்ட மூலத்தைக் கொண்டு வரவேண்டும் என்று அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் எப்போதும் தமிழ் மக்களுக்கு குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர். அவரின் அந்தக் காணொளியை நாங்கள் பார்த்துள்ளோம். அது தான் தமிழ் மக்களின் வெற்றி என நினைக்கின்றேன். ஏனெனில், ஒரு இடத்தில் செய்தால், அதை எல்லா இடமும் செய்யும் ஆற்றல் வளம் எங்கள் தமிழ் மக்களிடம் இருக்கின்றது.

ஒன்ராறியோ மாகாணம் போல் Quebec மாகாணத்திலும் நிறைய தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அதேபோல் கனடாவின் தேசிய மட்டத்தில் இதை அங்கீகரிக்கக்கூடிய நடவடிக்கைகளை மக்கள் முன்னெடுப்பார்கள் என்று நிச்சயமாக எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. அது தான் எங்கள் தமிழ் மக்களின் ஒற்றுமையாக இருக்கும். எங்களின் இளையோரின் வீச்சாகவும் இருக்கும் என நான் நம்புகின்றேன்.

உங்களின் கடுமையான ஒரு வேலைப் பழுவிலும் நீங்கள் எங்களின் இலக்கு வாசகர்களுக்கு உங்கள் நேர்காணலை தந்தமைக்காக நன்றி. எங்கள் இலக்கு நிர்வாகம் சார்பாகவும், வாசகர்கள் சார்பாகவும் எங்கள் வாழ்த்தைத் தெரிவிக்கின்றோம். முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் பன்னிரெண்டாவது ஆண்டை இன்னும் இரண்டு நாட்களில் நினைவுகூரப் போகின்றோம். அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் எங்களின் மக்களுக்கு ஒரு நம்பிக்கையைத் தருகின்றதொரு விடயமாகத் தான் இது இருக்கின்றது. அதை நீங்கள் பல சவால்கள், தடைகளைக் கடந்து நீங்கள் முன்னெடுத்திருக்கின்றீர்கள். எங்கள் இலக்கு மின்னிதழ் சார்பாக எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம். உங்கள் செயற்பாடுகள், விடயங்களை எங்கள் வாசகர்களுக்கு எடுத்துச் செல்ல நாங்கள் தொடர்ந்தும் பயணிப்போம். இந்த நேரத்தை நீங்கள் ஒதுக்கித் தந்தமைக்கு மிகவும் நன்றி.

நீங்கள் என்னுடன் தொடர்பு கொண்டு இலக்கு மின்னிதழில் இந்தப் பதிவையும் பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்தமைக்கு நன்றி. நீங்கள் போட்ட பாதையில் தான் இளையோர்கள் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இந்த இடத்தில் இலக்கு வாசகர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஏனெனில், எல்லா நாடுகளிலும் இளையோர் முன்வந்து மக்களுக்கு ஒரு விடயத்தை செய்யும் போது, அதை தட்டிக் கொடுப்பதற்கு நிறைய ஊடகங்கள், அமைப்புகள் எங்களுக்கு உதவி செய்கின்றது. இலக்குப் பத்திரிகைக்க நன்றி.

நாங்கள் எவ்வளவு தடைகள் வந்தாலும், எவ்வளவு நெருக்குவாரங்கள் ஏற்படுத்தப்பட்டாலும் உலகத் தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து இந்த 18ஆம் திகதி இனஅழிப்பில் கொல்லப்பட்ட எங்கள் மக்களுக்கான  சுடரை ஏற்றுவோம். மே 18 என்பது எங்கள் மக்கள் மேல் உறுதி எடுக்கின்ற நாள். இந்த நீதிக்கான பயணத்தில் நாங்கள் அனைவரும் தொடர்ந்து பயணிப்போம் என்று சொல்லி விடைபெறுகிறேன்.

 

 

https://www.ilakku.org/?p=49718

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.