Jump to content

கொரோனாவால் தடுமாறும் அரசாங்கம்: அச்சுறுத்தலுக்குள் மக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவால் தடுமாறும் அரசாங்கம்: அச்சுறுத்தலுக்குள் மக்கள்

  -புருஜோத்தமன் தங்கமயில்

கொரோனா வைரஸ் தொற்றால் முழு உலகமும் ஓர் அசாதாரண சூழ்நிலைக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்றது.   

கடந்த ஒன்றரை ஆண்டுகளில், கொரோனா வைரஸ் தொற்றின் ‘மூன்றாவது அலை’ பரவல் கட்டத்தை அடைந்திருக்கின்றது. ஒவ்வொரு கட்டமும் ஏற்கெனவே ஏற்படுத்திய பாதிப்புகளைவிட, இன்னும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.   

கொரோனா வைரஸ் என்ற கிருமியால் உருவாக்கப்படும் ‘கொவிட்-19’ என்ற பெருந்தொற்றுநோய், ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு வடிவம் எடுக்கின்றது; திரிபடைந்த வீரியமான கொரோனா வைரஸ்களாக மக்களுடன் கலக்கின்றது.  

இந்த அச்சுறுத்தல் கட்டத்தை எதிர்கொள்வதில், இலங்கை அரசாங்கம் பாரிய தோல்வியை அடைந்திருக்கின்றது. பரந்துபட்ட சுகாதாரக் கட்டமைப்பொன்று, காலங்காலமாக நாட்டில் பேணப்பட்டாலும், தீர்மானம் எடுக்கும் சக்தியாக இருக்கின்ற அரசாங்கத்தின், தூர நோக்கற்ற செயற்பாடுகளால், பாரிய பின்னடைவு ஏற்பட்டு இருக்கின்றது.   

முதல் இரண்டு அலைகளில், கொரோனா வைரஸ் பரவல் கட்டங்களில், ஒவ்வொரு நாளும் 200 பேரைத் தாண்டாத அளவிலேயே தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டார்கள். உயிரிழப்புகளும் மிகவும் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன.   

ஆனால், இன்றைக்கு ஒவ்வொரு நாளும், 2,000 பேரளவில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுகின்றனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் 20க்குக் குறையாமல் பதிவாகி வருகின்றது. 22 மில்லியன் மக்கள் வாழும் நாடொன்றில், மேற்கண்ட எண்ணிக்கைகள் அச்சுறுத்தலான அளவிலானவை.  

கொரோனா வைரஸின் இரண்டாவது அலையால், இந்தியா தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு நாளும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஆயிரங்களைத் தொடுகின்றது. உத்தரப்பிரதேசம், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சுகாதாரத்துறை கிட்டத்தட்ட செயலிழந்துவிட்டது.  

 மக்கள் வைத்தியசாலையில் இடம் கிடைக்காமல், சுவாசிப்பதற்கான ஒட்சிசன் சிலிண்டர்கள் இல்லாமல் செத்து வீழ்கிறார்கள். கண்ணுக்கு முன்னாலேயே உறவுகளின் மரணங்களைக் கண்டு மக்கள் வெதும்புகிறார்கள். மயானங்களில் சடலங்களை எரிப்பதற்கே இடம் போதாமல் ‘டோக்கன்’ முறை நடைமுறைப்படுத்தப்படுகின்றது.   

மத்திய அரசும் மாநில அரசுகளும், பாதிப்பை எவ்வாறு கையாள்வது என்று தெரியாமல் திணறுகின்றன. இவ்வாறான நிலையொன்றை நோக்கி, இலங்கையும் விரைவில் செல்லக்கூடும் என்று, சுகாதாரத் துறையினர் எச்சரிக்கின்றனர்.  

நாட்டிலுள்ள பிரதான வைத்தியசாலைகளில், நோயாளர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு நாளும் பல மடங்காக அதிகரித்து வருகின்றது. படுக்கை நெருக்கடி, ஒட்சிசன் சிலிண்டர் பற்றாக்குறை பற்றிய அறிவித்தல்கள் வெளியாகி வருகின்றன.   
ஆனால், இவற்றையெல்லாம் எவ்வாறு எதிர்கொண்டு, மக்களைப் பாதுகாப்பான கட்டத்துக்குள் வைத்துக் கொள்வது என்பதில், அரசாங்கத்துக்குள் பாரிய குழப்பம் நீடிக்கின்றது. சுகாதார அமைச்சர் ஒரு கதை கூறுகிறார்; கொவிட்-19 அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் இன்னொரு தகவல் சொல்கிறார்; கொரோனா தடுப்பு பணிப்பாளரான இராணுவத் தளபதியோ வேறொரு செய்தி சொல்கிறார்; அரசாங்கத்தின் பேச்சாளர்களோ வேறு மாதிரியாகப் பேசுகிறார்கள்.   

தீர்மானம் எடுக்கின்ற ஒரே கட்டமைப்புக்குள் இருந்தே, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரியாகப் பேசுகிறார்கள். அவை, ஊடகங்களில் வெளியாகி, இன்னும் இன்னும் மக்களைக் குழப்புகின்றன.  

கொரோனா வைரஸ் என்பது கண்ணுக்குத் தெரியாத எதிரி. அதை எதிர்கொள்வது என்பது, நாட்டு மக்களின் சுய கட்டுப்பாட்டோடும் சம்பந்தப்பட்ட ஒன்று. ஆனால், அதை எதிர்கொள்வது சார்ந்து, அரசாங்கம் மாத்திரமல்ல, நாட்டு மக்களும் பாரிய அசமந்தமான போக்கை வெளிப்படுத்துகிறார்கள்.   

கொரோனா வைரஸின் ‘மூன்றாவது அலை’ மோசமாகத் தாக்குவதற்கு, மக்களும் பாரிய பொறுப்பை ஏற்றாக வேண்டும். கடந்த, சித்திரை வருடப் பிறப்புக் காலத்தில், அதிகளவிலான மக்களின் பங்கெடுப்போடு, கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. நகரங்களில் ஆடைக் கொள்வனவு, பொருட்கள் கொள்வனவு என்று, வழக்கத்துக்கு அதிகமான மக்கள் திரட்சி ஏற்பட்டது.   

அந்தத் திரட்சிகளின் போது, சுகாதார வழிமுறைகள் பெரியவில் பின்பற்றப்படவில்லை. அதன் இன்னொரு கட்டமாக, நுவரெலியாவில் அரசாங்க கட்டமைப்பின் ஆதரவோடு, ‘வசந்த விழா’ கொண்டாட்டங்கள் நடைபெற்றன. தற்போதும், பண்டிகைகளை முன்வைத்து மக்கள் திரட்சி, பாரியளவில் புடவைக் கடைகள், விருந்தகங்களில் நிகழ்த்தப்படுகின்றன.  

மேற்கு நாடுகள், கொரோனா வைரஸைக் குறிப்பிட்டளவு வெற்றிகரமாக எதிர்கொண்டு, இயல்பு நிலையை நோக்கி நகரத் தொடங்கி இருக்கின்றன. ஆனாலும், அந்த நாடுகளில் நிர்வாகக் கட்டமைப்பும் சுகாதாரத் துறையும் எந்தவொரு தருணத்திலும், கொரோனா வைரஸைக் குறித்து, எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிடவில்லை.   

ஆனால், இந்தியாவிலும் இலங்கையிலும், கொரோனா வைரஸ் குறித்த மதிப்பீடுகள் குறைந்திருந்தன. இந்திய அரசு, கொரோனா வைரஸை வென்றுவிட்டதாக அறிவிக்கவும் செய்தது.   

அவ்வாறான கட்டமொன்றை நோக்கி, இலங்கை அரச கடமைப்பும் சென்றிருந்தது. பொதுக் கூட்டங்கள் தொடங்கி, பாரிய மக்கள் திரட்சியுள்ள நிகழ்வுகள் இடம்பெற்று இருக்கின்றன. அத்தோடு, பாதுகாப்பு நடவடிக்கைகள், அதிக பட்சம் நகரங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டன.   

கொரோனா வைரஸ் பரவலால் மக்கள் நோய்வாய்ப்படுவதைத் தடுக்கும் வகையில், முதல் கட்டத்தில் கிடைத்த தடுப்பூசிகளைச் செலுத்துவதை, சுகாதாரத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் நிர்வாகக் கட்டமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் கொழும்பு உள்ளிட்ட நகரப் பகுதிகளில் வசிப்பவர்கள் என்றுமே அரசாங்கம் மட்டுப்படுத்தியது.   
அத்தோடு, முதல் கட்டமாகத் தடுப்பூசிக்களைக் பெற்ற பின்னர், இரண்டாம் கட்டமாக எவ்வாறு தடுப்பூசிகளைப் பெறுவது என்பது சார்ந்தும், தடுப்பூசிகளை மக்களுக்குச் செலுத்துவது தொடர்பான பொறுப்புமிக்க அதிகார மட்டம் அசமந்தமாக இருந்தது.   

அதுதான், இன்றைக்கு மூன்றாவது அலையின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், ஒவ்வொரு நாட்டிடமும் தடுப்பூசிகளுக்காகக் காத்திருக்க வேண்டிய நிலை வந்திருக்கின்றது. ஏற்கெனவே, இந்தியாவிலிருந்து கிடைக்கப்பெற்ற ‘கொவிசீல்ட்’ தடுப்பூசியைப் பெற்ற இலட்சக்கணக்கான மக்கள், அதன் இரண்டாவது தடுப்பூசிக்காக காத்திருக்கிறார்கள்.  

ஒரு தயாரிப்பு வகையான தடுப்பூசியை, ஏற்கெனவே செலுத்தினால், அதே தயாரிப்பு வகையான தடுப்பூசியையே இரண்டாவது தடவையாகவும் செலுத்த வேண்டும் என்கிற அறிவுறுத்தல் உலகம் பூராவும் காணப்படுகின்றது.   

அவ்வாறான நிலையில், அரசாங்கத்தின் பேச்சாளரான உதய கம்மன்பில, இரண்டாவது தடுப்பூசியாக, இன்னொரு தயாரிப்பு வகையான ஊசியொன்றைச் செலுத்த முடியும் என்கிறார்.  

ஆனால், அது தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் எந்தவித உத்தரவாதத்தையும் இதுவரை வழங்கவில்லை. சுகாதாரத் துறையினரின் ஆலோசனைகள் இன்றி, தான்தோன்றித்தனமாக, தீர்மானங்களை, அரசாங்கம் மக்களை நோக்கி வீசுகின்றது. இவை, தேர்தல் மேடைகளில் வழங்கப்படும் வாக்குறுதிகளுக்கு ஒப்பானவையாகவே இருக்கின்றன.   

மாறாக, தூர நோக்கும் கண்ணியமும் உள்ள மக்களின் பாதுகாப்பில் அக்கறையுள்ள ஒரு பொறுப்புமிக்க அரசாங்கத்தின் செயற்பாடுகளில் ஒன்றாகத் தெரியவில்லை.  

உலகில் வல்லரசு நாடுகள், பணக்கார நாடுகளையே கதிகலக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸூக்கு, ஏழை நாடுகள் எம்மாத்திரம்? அதிலும், பொருளாதார ரீதியில் அதிகம் பின்னடைவைச் சந்தித்துள்ள நாடான இலங்கை, பாரிய அச்சுறுத்தலுள்ள கொரோனா வைரஸை எதிர்கொள்வது அவ்வளவு இலகுவானது இல்லைத்தான்.   

அப்படியான நிலையில், கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கான திட்டமிடமும் அதற்கான திறனும் அதியுச்சத்தில் பேணப்பட வேண்டும். கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பிலும், அதியுச்ச பலனைப் பெற முயற்சிக்க வேண்டும்.   

அதற்கு, கொரோனோ வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளில், அரசியலுக்கு அப்பாற்பட்டு நின்று, திறந்த மனதோடு அரச கட்டமைப்பு பயணிக்க வேண்டும். மாறாக, நெருக்கடியான கட்டங்களில் நின்று, அரசியல் ஆதாயங்களை தேடும் கீழ்த்தரமான வேலைகளைச் செய்யக்கூடாது.   

கொரோனா வைரஸ் என்ற கொடியோனை தோற்கடிக்கவில்லை என்றால், இலங்கையை பொருளாதார பின்னடைவுகள் மாத்திரமல்ல, சமூக, சுகாதார பின்னடைவுகளும் ஆக்கிரமிக்கும். அதிலிருந்து மீள்வதென்பது, சில தசாப்தங்களுக்கு முடியாது போகலாம். 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொரோனாவால்-தடுமாறும்-அரசாங்கம்-அச்சுறுத்தலுக்குள்-மக்கள்/91-271683

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.