Jump to content

அண்மையில் மறைந்த திரைப் பிரபலங்கள்


Recommended Posts

அண்மையில் மறைந்த திரைப் பிரபலங்கள்

 

 

அண்மைக்காலமாக தமிழ் திரையுலகச் சேர்ந்த கலைஞர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில்  2021 ஆம் ஆண்டு  நாம் இழந்த திரையுலக நட்சத்திரங்களின் பட்டியலை இங்கு காணலாம்.

இயக்குனர் எஸ்பி.ஜனநாதன் 

http://static2.tamilmirror.lk/assets/uploads/image_fe3a3d52e0.jpg

தமிழ் திரையுலகில் "இயற்கை" படத்தில் அடியெடுத்து வைத்து, பேராண்மை, பொதுவுடைமை என சமூக கருத்துகளை வலுவாக பேசியவர் இயக்குனர் எஸ்பி.ஜனநாதன். இவர் கடந்த மார்ச் மாதம் 14ஆம் திகதி மூளையில் ஏற்பட்ட கசிவினால்  உயிரிழந்தார்.

நடிகர் விவேக்

http://static2.tamilmirror.lk/assets/uploads/image_84d4314cb5.jpg

சின்னக்கலைவாணர் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட 59 வயதான நடிகர்  விவேக்கின் மறைவு திரைத்துறையினரை மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் கலக்கத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. 

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட அடுத்தநாளான ஏப்ரல் 17ஆம் திகதி விவேக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் தாமிரா

http://static2.tamilmirror.lk/assets/uploads/image_7801b6444e.jpg

இரட்டைசுழி திரைப்படத்தில் அறிமுகமான எழுத்தாளர் தாமிரா கொரோனாவின் கோரப்பசிக்கு இரையானார். 52 வயதே ஆன தாமிரா ஏப்ரல் 27ஆம் திகதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

நடிகர் பாண்டு 

http://static2.tamilmirror.lk/assets/uploads/image_0c6ccfec51.jpg

ஜெய்,கம்பீரம்,கில்லி உள்ளிட்ட ஏராளமான தமிழ்த்திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் பாண்டு கடந்த மே மாதம் 6 ஆம் திகதி   காலமானர்.

74 வயதான அவர் கொரோனா பாதிப்பின் காரணமாக சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கே.வி.ஆனந்த்

http://static2.tamilmirror.lk/assets/uploads/image_0876bbc5d7.jpg

பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் ஏப்ரல் 30ம் திகதி மறைந்தார். பத்திரிகையாளராக பயணத்தைத் தொடங்கிய அவர், முதல்வன், சிவாஜி உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார்.

உடல்நலக்குறைவால் மருத்துவமனை சென்ற அவருக்கு பின்னர் கொரோனா உறுதியானதால் அவரின் உடலை கடைசியில் யாரும் பார்க்கக்கூட அனுமதிக்கப்படவில்லை என்பது கொரோனாவின் கோரமுகத்தின் உச்சம்.

குணச்சித்திர நடிகர் செல்லத்துரை ஐயா

http://static2.tamilmirror.lk/assets/uploads/image_1c08fb3761.jpg

தமிழில் ’தெறி’, ’மாரி’, ’கத்தி’, ’நட்பே துணை’ போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர் குணச்சித்திர நடிகர் செல்லதுரை. 84 வயதான இவர் கடந்த 30 ஆம் திகதி   மாரடைப்பால் உயிரிழந்தார். 


தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன்

http://static2.tamilmirror.lk/assets/uploads/image_b199a7a5f6.jpg

கஜினி, சுள்ளான் உள்ளிட்ட பிரபல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன் மே 10ம் திகதி கொரோனாவால் உயிரிழந்தார். சூர்யா, தனுஷ் ஆகியோரின் திரைவாழ்க்கையில் முக்கிய பங்காற்றியவர் சந்திரசேகர், இவரின் மறைவு தமிழ் சினிமாவை ஆட்டம் காண வைத்தது.


நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா

http://static2.tamilmirror.lk/assets/uploads/image_cd507d2691.jpg

தமிழ் சினிமாவில் 500 படங்களுக்கு மேல் நடித்த நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மாரடைப்பு காரணமாக மே 11ம் திகதி நெல்லையில் உயிரிழந்தார். சிவாவின் மறைவு, திரைத்துறையில் பலருக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது.
 

நடிகர் மாறன்

http://static2.tamilmirror.lk/assets/uploads/image_45bbd79ab4.jpg

கில்லி, டிஷ்யூம், பட்டாசு, தலைநகரம், வேட்டைக்காரன், கேஜிஎஃப் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் மாறன் கொரோனாத் தொற்றினால் கடந்த 11 ஆம் திகதி  காலமானார்.

Tamilmirror Online || அண்மையில் மறைந்த திரைப் பிரபலங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

‘அசுரன்’, ‘காலா’ பட நடிகர் நித்திஷ் வீரா கொரோனா தொற்றால் உயிரிழப்பு

ணி நேரங்களுக்கு முன்னர்
நித்தீஷ் வீரா, நடிகர்

பட மூலாதாரம்,NITHISHVEERA6, INSTAGRAM

கொரோனா தொற்று காரணமாக திரையுலக கலைஞர்களின் அடுத்தடுத்த மரணங்கள் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளன.

நடிகர் நித்திஷ் வீரா கொரோனா தொற்று காரணமாக இன்று காலை உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 45.

தமிழில் 'வல்லரசு' படம் மூலமாக அறிமுகமானவர் நடிகர் நித்திஷ் வீரா. கூத்துப்பட்டறை நடிகரான நித்திஷ், இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் 2006ல் வெளியான 'புதுப்பேட்டை' படம் மூலம் பரவலாக அறியப்பட்டார்.

கேட்டரிங் மாணவரான நித்திஷ் நடிப்புத்துறையில் கொண்ட ஆர்வத்தில் அவரது உறவினரான இயக்குநர் மஹாராஜன் மூலமாக 'வல்லரசு' படத்தில் அறிமுகமானார். காவல்துறை குடும்பத்தை சேர்ந்த இவர் பின்பு கூத்துப்பட்டறையில் இணைந்து நடிப்பு பயிற்சி பெற்றார்

அதன்பிறகு 'வெண்ணிலா கபடி குழு', 'காலா', 'ராட்சசி', 'அசுரன்' ஆகிய படங்களில் இவரது நடிப்பும் கதாப்பாத்திரமும் பேசப்பட்டன. கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நித்திஷ் வீரா இன்று காலை 6.30 மணியளவில் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்த நிலையில் சுவாசப்பிரச்சனை காரணமாக இறந்தார் என அவரது சகோதரர் சுரேஷ்குமார் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.

அவரது இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான மதுரையில் இன்று நடைபெற உள்ளது. இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். மறைந்த இயக்குநர் ஜனநாதன் இயக்கத்தில் வெளியாகவுள்ள 'லாபம்' படத்தில் இவர் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அருண்ராஜா காமராஜா மனைவி மரணம்

அருண் ராஜா காமராஜா, நடிகர் இயக்குநர்

பட மூலாதாரம்,@ARUNRAJAKAMARAJ, TWITTER

 
படக்குறிப்பு,

அருண் ராஜா காமராஜா, நடிகர் இயக்குநர்

மேலும், இயக்குநரும், நடிகரும், பாடலாசிரியருமான அருண்ராஜா காரமராஜின் மனைவி சிந்துஜாவும் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 38. அட்லி இயக்கத்தில் வெளியான 'ராஜா ராணி' படத்தில் நடிகராக அறிமுகமானார் அருண்ராஜா காமராஜா. அதன்பிறகு, 'மான் கராத்தே', 'ரெமோ', 'மரகத நாணயம்', 'க/பெ ரணசிங்கம்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இயக்குநராக 'கனா' படம் மூலமாக அறிமுகமானார். 'பீட்சா', 'ஜிகிர்தண்டா', 'மாஸ்டர்' உள்ளிட்ட படங்களில் பல ஹிட் பாடல்களையும் எழுதியுள்ளார். பாலிவுட் திரைப்படமான 'ஆர்டிகிள் 15' திரைப்படத்தின் ரீமேக்கை தமிழில் உதயநிதி ஸ்டாலினை வைத்து இவர் இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரது மனைவி சிந்துஜாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்திருப்பது திரைத்துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவரது இறப்பிற்கு நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ், கதிர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கல்களை சமூக வலைத் தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

இவரது இறப்பு குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது முகநூல் பத்தில், '20 வருடங்களுக்கும் மேலாக அருண்ராஜா காமராஜூம் அவரது மனைவி சிந்துவும் நல்ல நண்பர்களாக எனக்கு தெரியும். பல கடினமான சூழ்நிலைகளையும் அவர்கள் இருவரும் ஒன்றாக கடந்து வந்திருக்கிறார்கள். சிந்து இனிமேல் இல்லை என்பது வருத்தமளிக்கிறது. அருண்ராஜாவுக்கு சிந்து மிகப்பெரிய பலம். அவருடைய குறும்புத்தனம், நிபந்தனையற்ற அன்பு, செல்லப்பிராணிகள் மீதான அன்பு இதெல்லாம் இனி இல்லை எனும் போது வருத்தமளிக்கறது.

இந்த கொரோனா காலத்தில் எல்லாரும் பாதுகாப்பாக இருங்கள். இந்த சவாலான காலத்தை அனைவரும் விரைவில் கடந்து வருவோம்' என தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல், அருண்ராஜா காமராஜும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வரும் நிலையில், அவர் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், சில நாட்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ், 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் பவுன்ராஜ் ஆகியோர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.

‘அசுரன்’, ‘காலா’ பட நடிகர் நித்திஷ் வீரா கொரோனா தொற்றால் உயிரிழப்பு - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.