Jump to content

தமிழ்தேசியம் பற்றிய பாரிசாலனின் பார்வை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நுணுக்கமான சில கருத்துகள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 14/5/2021 at 17:01, ஏராளன் said:

நுணுக்கமான சில கருத்துகள்.

மன்னிக்க வேண்டும் ஏராளன். பல காலம் தாழ்தி வந்தால் குறிகள் இட முடியவில்லை.  குறி-உரிமை திரும்பியதும், முதல் சிரிப்பு குறி இந்த நுட்பமான வீடியோவுக்குத்தான்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

மன்னிக்க வேண்டும் ஏராளன். பல காலம் தாழ்தி வந்தால் குறிகள் இட முடியவில்லை.  குறி-உரிமை திரும்பியதும், முதல் சிரிப்பு குறி இந்த நுட்பமான வீடியோவுக்குத்தான்🤣.

நன்றி அண்ணை. நான் நொஸ்ரடாமஸ் இல்லை, உங்களைப்போல எதிர்காலம் கணிக்க!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஏராளன் said:

நன்றி அண்ணை. நான் நொஸ்ரடாமஸ் இல்லை, உங்களைப்போல எதிர்காலம் கணிக்க!

நோ..நோ.. நாட் நாஸ்ரடாமஸ்…ஐயாம் குடு குடுப்பை காரன் ஓன்லி 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

நோ..நோ.. நாட் நாஸ்ரடாமஸ்…ஐயாம் குடு குடுப்பை காரன் ஓன்லி 🤣

குடுகுடுப்பை என்று ஏன் அண்ணை சிறுமைப்படுத்துறிங்க.
இல்லை குடுகுடுப்பை போல சும்மா அடிச்சு விடுறது என்று சொல்ல வாறியளோ?!🤔
உங்கட மீள்வருகை யாழை கலகலப்பாக்கியிருக்கு என்பது உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

குடுகுடுப்பை என்று ஏன் அண்ணை சிறுமைப்படுத்துறிங்க.
இல்லை குடுகுடுப்பை போல சும்மா அடிச்சு விடுறது என்று சொல்ல வாறியளோ?!🤔
உங்கட மீள்வருகை யாழை கலகலப்பாக்கியிருக்கு என்பது உண்மை.

நன்றி.

சில நேரம் குடுகுடுப்பைகாரன் சொன்னதுதான் நடக்குதோ என நாம் நினைக்கும் நிலை வரும்தானே அதைதான் சொன்னேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாரிசாலன் தானே நடிகர் ராதாரவியை வந்தேறி என்று திட்டியது? இந்த "ட்ரம்ப்" வகையறாக்களிடமிருந்து நம் ஆட்கள் தமிழ் தேசியம் பற்றிக் கருத்தறிய வேண்டியிருப்பது காலக் கொடுமை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

இந்தப் பாரிசாலன் தானே நடிகர் ராதாரவியை வந்தேறி என்று திட்டியது? இந்த "ட்ரம்ப்" வகையறாக்களிடமிருந்து நம் ஆட்கள் தமிழ் தேசியம் பற்றிக் கருத்தறிய வேண்டியிருப்பது காலக் கொடுமை!

திணேஸ்குமார் ….மன்னிக்கவும் பாரிசாலான் ரொம்ப ரசித்து பார்க்க கூடிய ஒரு தம்பி.

எந்தளவுக்கு என்றால்…சீமானே “என்னையா இவன் இவ்வளவு அபத்தமா பேசுறான்” எண்டு வீரத்தமிழர் முண்ணனியில் இருந்து துரத்தி விடும் அளவுக்கு🤣.

சாட்டை துரை என்று சீமானால் இரெண்டு தடவை நாத வை விட்டு விரட்டி விடப்பட்டு, சீமானை வெளியில் இருந்து ஆதரிக்கும் இன்னொரு தூஷண தம்பியும் இவரும் மாறி மாறி சண்டை போடும் காட்சிகள் ஊரில் சேவல் சண்டை பார்ப்பதை போல எண்டெயின்மெண்ட் வால்யூ உள்ள விசயங்கள்.

பாரி தமிழ் தேசியத்தின் அடிப்படை சாதி என்பவர். ஆனால் அதுக்கும் மேலாக வக்சீன் எதிர்ப்பு, இலுமினாட்டி நம்பிக்கை என்று பல விதவிதமான நகைச்சுவை கொள்கைகளை முந்தள்ள கூடியவர்.

ஆனால் பாவம் உண்மையிலேயே இவற்றை 100% நம்புகிறார். கதவை தட்டும் “யேஹோவாவின் சாட்சிகள்” போல இவரின் கண்களில் ஒரு உண்மை தொனிக்கும்.

பிகு

எங்கட நாய்யக்கர்/பண்டார நாயக்க/செல்வநாயகம் தியரி நியாபகம் இருக்கா🤣.

அதன் கண்டுபிடிப்பாளர் சாட்சாத் பாரிதான். படம் எல்லாம் எடுத்தார். சீமான் படத்தை பார்த்து கிலியாகி வெளியீட்டை அடித்து நூத்துவிட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, goshan_che said:

பாரி தமிழ் தேசியத்தின் அடிப்படை சாதி என்பவர். ஆனால் அதுக்கும் மேலாக வக்சீன் எதிர்ப்பு, இலுமினாட்டி நம்பிக்கை என்று பல விதவிதமான நகைச்சுவை கொள்கைகளை முந்தள்ள கூடியவர்.

அது தான் இந்த பாரிசாலனை, சீமானை இலங்கையில் உள்ள ஏராளன் இரசிப்பது எனக்கு ஏமாற்றமே 😟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அது தான் இந்த பாரிசாலனை, சீமானை இலங்கையில் உள்ள ஏராளன் இரசிப்பது எனக்கு ஏமாற்றமே 😟

நாலு கழுதை வயசாகிறது, ஒரு போராட்டத்தோடு கூட வளர்ந்தவன். பங்காளியாக இல்லை ஆனால் பெரிதும் பாதிக்கபட்ட பார்வையாளனாக. 

நானே ஆரம்பத்தில் திக்கற்று நின்ற போது, சீமானால் கவரபட்டு இது சரிவரும் என நம்பினேன். 

கடும் கட்டுப்பாடுகள் மத்தியில் ஊரில் வாழும் இளையோர் இதில் ஈர்க்கபடுவதில்லை ஆச்சரியம் இல்லை. 

ஏராளன் சாதி, இலுமினாட்டியை தூக்கி வீசிவிட்டு பாரியின் உள்ளார்த்த (ஆனால் தவறான) தமிழ் தேசிய கொள்கையை பரிசீலிக்கிறார் என்பதே நான் நினைப்பது.

இதே போல் இன்னொருவர் பையன்26. யாரோ ஒரு தமிழக உறவு சொல்லி யாழ் கோட்டை தாக்குதலை சிலாகித்து எழுதி இருந்தார்.

அதில் இதுவரை யாழ் கோட்டையை புலிகள் ஒரு நாளில் பிடித்தார்கள் என எண்ணி இருந்தேன் என எழுதி இருந்தார்.

பலமாதமாக, கிட்டதட்ட ஆயிரம் மாவீரர்களை (827 என நினைவு) கொடுத்து நடந்த போர் அது. இதை அவர் அறியாமல் விட்டது நமது தவறும் இல்லையா?

அப்போ ஆமை ஓட்டில் கடல் பயணம் போன, கறி இட்லி கதைகளை அடுத்த சந்ததி நம்பி கெடுவதற்கு நாமும் காரணம் இல்லையா?

இதில் யாரை நொந்தும் பயனில்லை. 

உண்மையை எடுத்து சொல்ல கல் தேயும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வீடியோ பாக்காமலே கதைக்கிறீங்க போல இருக்கு!
நான் கவனித்த விடயம் தமிழ் நாட்டில் தமிழர்களை சாதிப்பெயர் போடவிடாமால் சாதியை ஒழித்ததாக சொல்லிக்கொண்டு பிறமொழியாளர்கள்(தமிழ்நாட்டில் வாழ்வோர்) தமது சாதியை வெளிப்படையாக போட்டுக்கொண்டு சாதிச் சங்ககளை வளர்ப்பது ஏன்?

பாரி சொல்கிற இன்னொரு விடயம் சாதி(இதில் நிறைய திரிப்பு நடந்திருக்கு) தமிழ் நாட்டில் இட ஒதுக்கீட்டுக்கு பயன்படுவது போல தமிழ் நாட்டில் வாழ்வோரின் மொழியை அடையாளப்படுத்த குடி அடையாளத்தை பயன்படுத்தலாம் என்பதே. ஏற்கனவே சாதி ஒளிக்கப்பட்ட நாட்டில் சாதி வளர்க்க தான் முயலவில்லை என்கிறார்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.