Jump to content

செவ்வாய் கிரகத்தை... ஆய்வு செய்வதற்காக, அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது: சீனா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது: சீனா

செவ்வாய் கிரகத்தை... ஆய்வு செய்வதற்காக, அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது: சீனா

சீனா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய தியான்வென்-1 ரோவர் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது.

செவ்வாய்கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்து இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது. செவ்வாய்கிரகம் தொடர்பான படங்களை எடுக்கவும் கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டிருக்கின்றன.

மேலும் இந்த தியான்வென்-1 ரோவர் விண்கலத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ஐந்து கருவிகள், செவ்வாய் கிரகத்தின் பாறை தன்மைகள், நீர் ஆகியவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றன.

ஏற்கனவே சீனா விண்வெளிக்கு வீரர்களை அனுப்பியுள்ளது. அதே போல நிலவை ஆய்வு செய்வதற்கும் விண்கலங்களை அனுப்பி அதில் வெற்றி கண்டுள்ளது.

இந்நிலையில் தற்போது சீன விண்கலம் ஒன்று செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியிருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாக கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 240 கிலோ எடை கொண்ட 6 சக்கரங்களைக் கொண்ட ரோவர் கருவியுடன் அனுப்பப்பட்ட இந்த விண்கலம், கடந்த கடந்த பெப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1215932

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.