Jump to content

கோதாபய ஒரு உணர்ச்சியற்ற, இரக்கமற்ற, ஒரு வெற்றுடல்” – அனுரகுமார திசநாயக்கா கடும் சாடல்


Recommended Posts

கோதாபய ஒரு உணர்ச்சியற்ற, இரக்கமற்ற, ஒரு வெற்றுடல்” – அனுரகுமார திசநாயக்கா கடும் சாடல்

 

Screen-Shot-2021-05-14-at-2.40.12-AM.png

225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகளை நான் எடுத்துக்கொள்ளவில்லை. தடுப்பூசியைப் போட்டுகொள்ளும் உரிமை இந்நாட்டின் ஒவ்வொரு மக்களினதும் உரிமை. பாராளுமன்ற உறுப்பினர் என்ற சலுகைகயைக்கொண்டு தடுப்பூசி பெற்றுக்கொள்வதை நான் விரும்பவில்லை

அனுர குமார திசநாயக்கா

 

“கோதாபய ராஜபக்சவின் ஆணவத்தினால்தான் இந்நாட்டு மக்கள் மரணித்துக்கொண்டிருக்கிறார்கள்” என, ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக ஆற்றிய தனது உரையின்போது, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அனுர குமார திசநாயக்கா சாடியிருக்கிறார்.

 

“நந்தசேன கோதாபய ராஜபக்ச ஒரு கருணையற்ற, நாட்டு மக்கள் மீது எந்தவித பொறுப்புணர்வும் கொண்டிராத ஒரு வெறும் உலர்ந்துபோன கோது” என ஊடகவியாளர் மத்தியில் திசநாயக்கா தெரிவித்தார்.

 

“மருத்துவ அதிகாரிகள் தமது உண்மையான அனுபவங்களையும், கருத்துக்களையும், புத்திமதிகளையும் ஜனாதிபதிக்கு முன்னால் கூறுவதற்கு அஞ்சுகிறார்கள். தமது கருத்துக்களைத் தெரிவிப்பதன் மூலம் தாம் வேறு பிரச்சினைகளுக்குள் மாட்டுப்பட்டுவிடுவோம் எனநினைத்து அவர்கள் வாய்மூடி மெளனிகளாக இருக்கிறார்கள். உயிராபத்தை விளைவிக்கக்கூடிய திரிபுகளை நாட்டுக்குள் கொண்டுவர அனுமதித்தது முதல், மோசமான தடுப்பூசி வழங்கல் திட்டம் வரை அரசாங்கம் எதையும் சரியாக நிர்வகிக்கவில்லை.

 

“சுகாதார அமைச்சர் பாத்திரங்களை ஆற்றில் எறிகிறார் அல்லது சூனியக்காரரின் பொய்யான மருந்துகளுக்காகப் பரப்புரை செய்கிறார். டாக்டர் அனில் ஜசிங்கா போன்ற மூத்த பொதுச் சுகாதார அதிகாரிகளை ஓரங்கட்டி சம்பந்தமில்லாத சூழல் அமைச்சிற்கு மாற்றப்பட்டார். அவரைப் போலவே வேறு திறமையுள்ள பலருக்கு வெளிநாட்டு தூதுவராலய பதவிகளைக் கொடுத்து அனுப்பிவிட்டார்.

 

“ஜனாதிபதி ராஜபக்ச ஆணவம் நிரம்பப்பெற்ற, கருணையற்ற, அரசியல் முதிர்ச்சியற்ற ஒருவர். அவரது குறும்பார்வையுடனான கொள்கைகள் நாட்டை வைரஸின் அழிவுப்பாதைக்கு இழுத்துச் சென்றுள்ளன. கடவுளின் பேரினால் இப்போதாவது அவர் மனம் மாறி மக்களைக் காப்பாற்ற வேண்டும்.

 

“கருணையற்ற, உணர்வுகளேயில்லாத, ஈவிரக்கமற்ற, வெறும் கோது போன்ற ஒரு மனிதனிடம் எவர்தான் ஆளும் பொறுப்பைக் கொடுப்பார்? மக்களுக்காக இரங்க முடியாத ஒருவர் எப்படிச் செயற்திறனுள்ள ஒருவராக இருப்பார்? இதுவே தான் எம் முன்னாலிருக்கும் எமது தோல்வி கண்ட பரிசோதனையின் முடிவு.

 

“நிபுணர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் ஜனாதிபதி அவர்களே. உங்கள் கருத்துக்களுக்கு மாறான பார்வைகளைக் கொண்டவர்களையும் ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள்.

 

“225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகளை நான் எடுத்துக்கொள்ளவில்லை. தடுப்பூசியைப் போட்டுகொள்ளும் உரிமை இந்நாட்டின் ஒவ்வொரு மக்களினதும் உரிமை. பாராளுமன்ற உறுப்பினர் என்ற சலுகையைக் கொண்டு தடுப்பூசி பெற்றுக்கொள்வதை நான் விரும்பவில்லை. இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அது கிடைக்கவேண்டும்; அது அவனது உரிமை. அரசாங்கத்தின் செயற்திறனின்மையால் தான் மக்களுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை.

 

ஜனாதிபதி கோதாபயவின் அரசாங்கம், கோவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் என்ற பெயரில் மக்களைக் கைவிட்டு விட்டது. நோயிலிருந்து எம்மைப் பாதுகாக்க அதனிடம் வழிகளோ, விருப்பமோ இல்லை. எம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளும்படி அது கூறிவிட்டது. எனவே, நான் மக்களிடம் கேட்டுக்கொள்வது, “உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களைப் பாதுகாக்க அரசாங்கம் என்று எதுவும் இல்லை. அந்தப் பொறுப்பு இப்போது எங்கள் எல்லோரது கைகளிலும்தான் இருக்கிறது” எனத் தெரிவித்தார் அனுர குமார திசநாயக்கா.

https://www.marumoli.com/கோதாபய-ஒரு-உணர்ச்சியற்ற/?fbclid=IwAR3XnrAYCjCNE9ccNAwMyhPQJ1Y4bi2RenQlN0G371rNLFzmSVLhrZP79UE

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

நான் மக்களிடம் கேட்டுக்கொள்வது, “உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களைப் பாதுகாக்க அரசாங்கம் என்று எதுவும் இல்லை. அந்தப் பொறுப்பு இப்போது எங்கள் எல்லோரது கைகளிலும்தான் இருக்கிறது” எனத் தெரிவித்தார்

அரசியல் அனுபவமற்ற, வெறும் அடிதடி  கொள்ளைக்காரரை சுயநலத்திற்காக அரசியல் கட்டிலில்   ஏற்றியவர்களே இதற்கு முழுப்பொறுப்பு.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தி அவர்களின் தற்கொலை முடிவிற்கு அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரமே காரணம் என்ற ஒரு தகவல் வெளி வந்திருக்கின்றது. இந்த விவகாரம் வெளியில் வரவே கூடாது என்று நினைத்திருந்திக்கின்றார் போல....😌   https://minnambalam.com/political-news/mdmk-ganesh-murthy-last-days-secret-report-to-the-chief-minister/  
    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.