Jump to content

வைகாசி 18 மறக்க முடியுமா...?


Recommended Posts

மரண ஓலம் மனதைக் கிழிக்க
மனித உடல்கள் சிதறிக் கிடக்க
மனிதம் வெட்கி மௌனித்து மரணித்து போன நாளை மறக்க முடியுமா?

மானிட வரலாற்றில் எங்கும் கண்டறியா செங்குருதியாறு
மண்ணில் பெருக்கெடுத்தோட
இருப்பிழந்த இனமொன்றின் இகத்தின் மீது
உலகமே சேர்ந்து நெருப்புமிழ்ந்த நாளை மறக்க முடியுமா?

மனித உரிமைகள் தமிழருக்கில்லை
தமிழர்களெல்லாம் மனிதர்களில்லை
தமிழர்களெல்லாம் மனித ஜாதிகளில்லை மிருக ஜாதிகளென்று
உலக வல்லரசுகளால் உணர்த்தப்பட்ட நாளை மறக்க முடியுமா?


கொட்டும் எறிகணை மழையிலும்
கொத்துக் குண்டு வீச்சிலும்
கொதிக்கும் இரசாயன குண்டுப் பொழிவிலும்
உச்ச துன்பங்களை அணைத்தபடி
உறங்கும் எலும்புக் கூடுகளைக் கடந்தபடி
உணர்வுகளெல்லாம் மரத்தபடி
உயிரைக் கையில் பிடித்தபடி
ஒற்றை வரிசையில் நின்றபடி
ஒரு குவளை கஞ்சிக்காய்
உன்னத உயிரினை இழந்த
உறவுகளை இழந்த நாளை மறக்க முடியுமா?

இத்தனையும் இன்று மறந்து நாம் இருக்க முடியுமா
எம் உள்ளம் தான் அதற்கு இடம் கொடுக்குமா
மறந்து போவதற்கு அதுவொன்றும் கனவல்ல
பல நூறு ஆண்டு கழிந்தாலும்
அணையா நெருப்பாக எரிந்து கொண்டிருக்கும் ஒரு இனத்தின் வலி
அன்று தெறித்தது எங்களின் குருதி
என்றும் தணிந்திடாது எங்களின் உறுதி.

-தமிழ்நிலா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.