Jump to content

மனம் சுமக்கு(மே)வலிகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

*.மனம் சுமக்கு’மே ‘ வலிகள். *
    (மே பதினெட்டு -  கவிதை)
*******************************************

*இருளும் -ஒளியும்
  இரவும் -பகலும் என்பதுபோல்,
  இழப்பும் -ஏற்பும் கொண்டோம்
  இதனால்  எம் வாழ்வில்
  என்பதுண்டு!      –  இதில் சில
  எண்களும் உண்டு!

“அவ் வெண் பதினெட்டு!”

*பதினெண்கீழ் கணக்கு” -
  பதினெட்டு நூல்களின் தொகுப்பு!
  தமிழுக்கு இதனால் சிறப்பு!

  *பதினெட்டு ‘மே’ என்பதிலோ
   எண்ணற்ற கணக்கு!.... - இங்குண்டு
   தமிழரின் இறப்பு!
   தமிழுக்கும் இழப்பு!....

  *வைகாசி,
   புத்தம் ஞானம் பெற்ற மாதம் !  - இருந்தும்
   சுத்தம், மொத்தமாக மதம் இழந்த மாதம் - நித்தம் 
   யுத்தம் செய்த மாதம்! …
  
 *நாமோ,..
  சுற்றம் தொலைத்த மாதம்!
  முற்றும் இழந்த மாதம்!

*ஒன்றா?... இரண்டா?.... - இல்லை
 ஓராயிரமா?...  அங்கு நாம் தொலைத்தோம்.?
 ஓர் ஆயுதம் மட்டுமா  கண்டு மலைத்தோம்?

 *பதினென்கீழ்’  வடித்த எமக்கு,
 இக்கணக்கை
 எதின்கீழ் போட்டு இருக்கு?....

*அதில், 
 அரசு தரும் 
 அநியாயக் கணக்கொன்றும் இருக்கு!..
 அறியாத கணக்கோ  -பல
 ஆயிரமாய்க் கிடக்கு!...

*மறந்து போய் விடுவதற்கும்
 துறந்து போய் விடுவதற்கும்
 இதுவொன்றும் 
 கனவோ, கற்பனையோ அல்ல!
 மன வலிகள்!.....
 மனிதப் பலிகள்!.....

*பதினெட்டுக்கென்று, 
 ஒரு தனித்தன்மை
 இருப்பதுபோல் தெரிகிறது… - நாமும் 
 இதில் அகப்பட்டதுபோலவும் 
 இருக்கிறது!.........

பாரதப் போர் - நாட்கள் 18
இராமாயணப் போர் – மாதங்கள் 18
தேவர் - அசுரர் போர் -ஆண்டுகள் 18
போர்க் கருவிகள் -வகைகள் 18
பகவத் கீதை – அத்தியாயங்கள் 18
கோவில் படிகள் – 18

சரணங்கள் விளிக்கும் முறைகள் -18 
  …..இறுதியில் -எம்மவர்…..
மரணங்கள் நிழ்ந்த நாளும்  மே -18!

நினைத்தால்,
வருமே துயரம் மனம் தொட்டு!
வாழ்வில் மறக்காது  இந்த 
‘மே’ பதினெட்டு!

இந்த நாளிலேதானே,  
உறவுகளின் உயிர்கள் போச்சு!
உற்றாரின் நிம்மதி போச்சு!
ஊர் உலகம் கெட்டுப் போச்சு!
கார்மேகம் சூழ்ந்து போச்சு!

இன்றுடன் வருடங்களோ  
பன்னிரண்டு  ஆச்சு!
இன்னுமா இருக்கிது 
நீதிக்கு மூச்சு?
நேர்மைக்குப் பேச்சு?

*கவச வாகனங்களின் அணிவகுப்புகளும் -முகக்
 கவச மூடிகளின் அணிதல்களும் 
 தெருவில் 
 எப்போது இல்லாமல் போகிறதோ
 அப்போதுதான் முழுச் சுதந்திரம்!

சும்மா
சொல்லி விட்டுப் போக முடியாது!
கொள்ளிவாய்ப் பிசாசுகளின் அசுரம்!
முள்ளி வாய்க்காலில் நிகழ்ந்த  அவலம்!

தள்ளிவிட்டுப் போகமுடியாது
நந்திக் கடலின் துயரம்.
நம் சோகங்களின் உயரம்!

“இனியுமா எம்மிடம் பிரிவுவாதம்?
 தணியுமா இனிமேலும் சகோதர கோபம்?
 கனியுமா எமது ஒற்றுமை தாகம்?
 இணையுமா கைகள்   இந்த ‘மே’ மாதம்? ‘

சிவபாலன் . New York  May 17, 2021

(படங்கள்: நன்றி இணையம்)

https://www.facebook.com/permalink.php?story_fbid=1355057001535221&id=100010928012688

 

 

குடும்ப நண்பரும் அயலவருமான கவிஞர் சிவா எழுதியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னியுங்கள்

முக்கோடி மூத்தகுடி
முத்மிழன் வாழ்ந்தகுடி
முள்ளிவாய்க்கால் பரப்பிலே
குண்டுதுளைத்துக் கிடந்தானே

வெற்றுவயல் எங்கிலுமே
சதைசதையாய்ப் பிண்டங்கள்

பச்சப்பிள்ளை கதறலையும்
கழுகுச்சத்தம் மறைத்ததுவே

பட்டுப்பிஞ்சு உடலங்களை
நாய் நரியும் கவ்வியதே

பெற்றவளும் மற்றவரும்
உடல்சிதைந்து கிடந்தனரே

சீறிய இரத்தங்களை
பூமித்தாயே ஊறிஞ்சினாளே

சிதறிய உடலங்களை
மண்மகளே எடுத்தாளே

வெண்ணிற மேகங்களை
பிணவாடை நிரப்பியதே

தமிழனின் இதயங்களை
உயிர்வலி அழுத்தியதே

நீதிகேட்க யார்வந்தார்
நியாயம்சொல்ல எவர்போனார்

லட்சமுயிர் அழிந்ததனை
வேடிக்கைதான் பார்த்தனரே

ஞாபகங்கள் கொல்கிறதே
நஞ்சுக்கொடி சுழல்கிறதே

செத்தவரை வழிபடவும்
துரோகிக்குப் பிடிக்கலையே

மன்னியுங்கள் ஆத்மாக்களே
நாதியற்றுக் கிடக்கின்றோம்….

ரூபன் சிவா
பிரான்ஸ்
மே 18

 

https://www.eelapparavaikal.com/mullivaikkal-kavithikal-33/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இன்றோர் உறுதியேற்போம்!
முள்ளிவாய்க்கால்!


அல்லி வாய்க்கால் பரப்பெங்கும்
அழகாய்ப் பூத்து மணக்குமிடம்,
துள்ளி வாய்க்கால் நீரலையைச்
சுற்றி மீன்கள் பாயுமிடம்,
“முள்ளி வாய்க்கால்” என்னுமிடம்
முடிவில் தமிழர் இனத்துக்கே
“கொள்ளி வாய்க்கால்” ஆனதென்று
கூறிக் கூறி அழுவதென்னே!

வேரில் நீராம் விருந்தளித்து
விளையும் பசுமை தந்தவிடம்,
நீரில் குதித்து விளையாடி
நித்தம் பொழுதைக் கழித்தவிடம்,
ஊரின் மக்கள் துடிதுடித்து
உயிரைத் தொலைத்த அவ்விடத்தைப்
பாரில் வாழும் தமிழரின்று
பாடிப் பாடி அழுவதென்னே!

இரண்டு கரையை நிறைத்தபடி
எழிலை வாரி இறைத்தபடி
புரண்டு ஓடும் நீர்ப்பரப்பில்
பொழிலைக் கூட்டும் சீர்ப்பரப்பில்
மிரண்டு போகும் படியாக
மேன்மைத் தமிழர் செங்குருதி
திரண்டு ஓடும் நிலைகண்டு
தேம்பித் தேம்பி அழுவதென்னே!

கணமெங் கெங்கும் பேரெழிலைக்
காட்டி நடக்கும் அவ்விடத்தில்,
மனமெங் கெங்கும் இன்பத்தை
மலியச் செய்யும் அவ்விடத்தில்,
பிணமெங் கெங்கும் புரளுவதைப்
பிள்ளை நாமும் கண்டதினால்
இனமெங் கெங்கும் ஒப்பாரி
எடுத்து எடுத்து அழுவதென்னே!

செக்கச் சிவந்த பூக்கூட்டம்
சீறிப் பாயும் நீர்ப்பரப்பில்
திக்கி ழந்து மிதப்பதுபோல்
செம்மைத் தமிழர் மிதந்துவந்த
துக்கம் தாங்க முடியாமல்
தொல்லை ஒழிந்து விடியாமல்
விக்கி விக்கி இனஇதயம்
வெடிக்க வெடிக்க அழுவதென்னே!

போய்ச்சொல் இதுவெம் நிலமென்று
பொங்குந் துணிவில் தமிழ்மக்கள்
வாய்ச்சொல் திறந்து கேட்டதினால்
வன்மம் கொண்டுச் “சிங்கநரி”
மேய்ச்சல் நிலமாய் நம்மினத்தை
மேய்ந்த வலியைத் தாங்காமல்
கூச்சல் வானைக் கிழித்தெறியக்
கோலத் தமிழர் அழுவதென்னே!

கொன்றார்! பகைவர் அவராட்சிக்
கோலால் தமிழர் இனக்கறியைத்
தின்றார்! நம்மைத் திசையெல்லாம்
தேடித் தேடி வேட்டையாட
நின்றார் கூடி அதனாலே
நினைத்த தெல்லாம் அவரடைய
வென்றார்! நாமோ கூடாமல்
விழிநீர் கொட்டி ஆவதென்னே!

நன்றாய் உலகின் பேரறிவை
நாமும் அடைவோம்! அறிவாலே
ஒன்றாய் இணைவோம்! பொருள்செய்வோம்!
உள்ளங் கையில் கருவியேந்தி
வென்றே தீர்வோம்! எனவடியும்
விழிநீர்த் துளிமேல் ஆணைசெய்தே
இன்றோர் உறுதி நாமேற்போம்
இனிமேல் தமிழர் சிரிப்பதற்கே!

ஏறன் சிவா
விடை(வைகாசி)04, 2052

இலக்கியத்துறை
வள்ளுவப்_பண்பாட்டு_நடுவம்!

 

https://www.eelapparavaikal.com/mullivaikkal-kavithikal-31/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.